Jump to content

பைத்தியம் - U mad bro - குறுங்கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

வேறை...எங்கை நேர மூளாய் தான்....:406:

🤣 மூளாயோ? மந்திகையோ?

14 hours ago, nunavilan said:

தொடருங்கள் கோசான். மிகுதியையும் வாசிக்கும் ஆவலுடன் உள்ளேன்.

நன்றி நுணா.

9 hours ago, புங்கையூரன் said:

த்யவு செய்து தொடரும் என்பதைப் பொறித்த இடங்களில் போடாதீர்கள் எண்டு நான் சொன்னால் கேட்கவா போகின்றீர்கள்? தொடருங்கள்…!

நன்றி அண்ணா. இந்த டெக்னிக்கை வைத்துத்தானே மாதர் குலத்தையே மடக்கி வைத்துள்ளார்கள் டெலி டிராமா காரர்கள்🤣

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். ச

goshan_che

முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நி

goshan_che

பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் III

அவனின் காருக்குள் மூச்சுக்காற்று புகாராகி, கண்ணாடியிலும் பதிந்து ஒரு திரைச்சீலை போல் ஆகி இருந்தது.

அநேகமாக மூன்று அல்லது மூன்றரை மணி நேரம்  அவன் இப்படி காரில் இருந்தபடியே பேசி கொண்டிருந்திருக்க வேண்டும்.

எஞ்சினை ஆன்பண்ணி புகார் நீக்கியை தட்டி விடவோ, அல்லது கண்ணாடியை இறக்கி விடவோ கூட அவனுக்குத் தோணவில்லை. பேச்சின் பொருள் அத்தகையது.

காரினை ஸ்டார் செய்தபோது வெளியே வெப்பநிலை -2 எனக்காட்டியது டாஷ்போர்ட். ஆனால் அவனின் உடலோ தெப்பமாக வியர்வையில் நனைந்திருந்தது.

இவனுடன் போனில் கதைத்து கொண்டே வேலைக்கு இன்று அவசர லீவு என ஒரு இமெயிலை தட்டிவிட்டிருந்தான் அவன். இனி இந்த நாள் முழுவதும் அவனுக்கு ஓய்வுதான். வேலையில் இருந்து போனிலும், இமெயிலிலும் நொய் நொய் என்று யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

இவன் போனில் சொன்னதை முதல் ஐந்து நிமிடம் வரை கூட அவன் பகிடி என்றே நினைத்தான்.

தன்னை ஏலியன்கள் பிந்தொடர்வதாயும். பெப்ரவரி 2023 இல் தன்னை கடத்திப் போக அவர்கள் திட்டமிட்டிருப்பதாயும். தனது மனைவியை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் காதலிப்பதாயும். அவளை கவர திட்டமிடுவதாயும். பொரிசும் ஒரு ஏலியன் என்றும் இவன் சொல்ல, சொல்லத்தான், அவனுக்கு கொஞ்சம், கொஞ்சமாக இது வழமையான பிராங்க் இல்லை என்பது புரிய தொடங்கி இருந்தது.

படி… பொரிஸ் வாண்ட்ஸ் டு டேக் ஹேர் ப்ரொம் மீ படி…

பிளீஸ் ஹெல்ப் மீ… ஐ ஒன்லி ஹாவ் யூ…

என தன் ஆருயிர் நண்பன் உடைந்து அழுத போது…..அவனுக்கு முள்ளம் தண்டில் உள்ளிருக்கும் முன்ணானின் அடியில் இருந்து, மூளை வரை, சில்லிட்டது போல ஒரு உணர்வு பரவியது.

ஒரு வழியாக இவனை சமாதானப்படுத்தி போனை வைத்து விட்டு, கொழும்பில் பெயர் போன இன்னொரு மன நல வைத்தியர் நண்பனுக்கு போன் பண்ணி, விபரம் சொல்லி, அவனை உடனடியாக இவன் வீட்டுக்கே போய் வைத்தியம் பார்க்கும் ஏற்பாட்டை செய்து விட்டு அதை இவனின் மனைவிக்கும் எடுத்து சொல்லி ஒருவழியாக இந்த பிரச்சனையின் தீர்வை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்தபோதுதான்….

சுகர் வருத்தகாரனான அவன் நேற்று முன்னிரவில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்பதும்….ஹைபோ கிளைசீமியா எனும் ரத்தத்தில் குளுகோசின் அளவு குறையும் நிலைக்கான அறிகுறிகள் அவனில் தோன்ற ஆரம்பித்துள்ளமையையும் அவன் அவதானித்தான்.

ஆன் செய்த வாகனத்தை அப்படியே ஆப் செய்து விட்டு…டெஸ்கோவில் இருக்கும் கோஸ்டா கோப்பிக்கடை நோக்கி நடக்கத்தொடங்கினான் அவன்.

தொடரும்….

(யாவும் கற்பனை)

Edited by goshan_che
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

🤣 மூளாயோ? மந்திகையோ?

என்ன கோதாரியோ.....ஆனால் நான் சொல்ல வந்த விசயம் உங்களுக்கு விளங்கியதையிட்டு  எனக்கு மகா சந்தோசம். நான் பெற்ற பாக்கியமாக கருதுகின்றேன் :face_with_tears_of_joy:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை வலு சீரியசாகப் போகத் தொடங்குது போல கிடக்குது..! கோப்பியைக் குடிச்சிட்டு வந்து தொடருங்கோ..! இண்டைக்கு லீவு தானே…!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தொடரும்….

சரிசரி தொடருங்கோ எங்க போகுதென்று பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாவும் கற்பனை அல்ல தானே?!
தொடருங்கள் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக்கதை போல கிடக்கு...:beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

கதை வலு சீரியசாகப் போகத் தொடங்குது போல கிடக்குது..! கோப்பியைக் குடிச்சிட்டு வந்து தொடருங்கோ..! இண்டைக்கு லீவு தானே…!😀

நன்றி அண்ணாக்கள்.

17 hours ago, ஈழப்பிரியன் said:

சரிசரி தொடருங்கோ எங்க போகுதென்று பாப்பம்.

 

15 hours ago, ஏராளன் said:

யாவும் கற்பனை அல்ல தானே?!
தொடருங்கள் அண்ணை.

மூன்றாம் பாகமும் அடுத்தனவவும் யாவும் கற்பனைதான்.

9 hours ago, குமாரசாமி said:

சொந்தக்கதை போல கிடக்கு...:beaming_face_with_smiling_eyes:

🤣

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன் குறிப்பு

பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்).

————————————————

பாகம் IV

இன்று ஒரு மிக முக்கியமான நாள்.

அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நிகழ்ந்து கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டிருந்தன.

அதன் பின் வைத்திய நண்பனின் ஆலோசனையின் பெயரில் அவன் இவனுடன் தொடர்பு ஏற்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டிருந்தான். 

பதின்மூன்று மாதங்கள் முன்னதாக நடந்த அன்றைய சம்பாசணையின் போது இவனுக்கு…

நீ கட்டாயம் ஒரு சைக்கியாடிரிஸ்டை பார்க்க வேண்டும் மச்சான்…. உடல் காயம் போலத்தான், மனக்காயமும். இரெண்டுக்கும் ஒரு அளவுக்கு மேல் மருந்து அவசியம்…..

என தயங்கி, தயங்கி அவன் சொல்லி இருந்தான். 

இவனும் கூட சற்றே மனம் நிதானப்பட்ட ஒரு நிமிடத்தில்…

நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்…

என சொல்லியும் இருந்தான்.

ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது.

இதை எல்லாம் கருத்தில் எடுத்த வைத்திய நண்பன் அவனுக்கும், இவனுக்கும் மட்டுமான உறவை மட்டும் அல்ல, இத்தனை மாதகாலமும் இவனுக்கும் அவனின் வட்டத்தில் மனைவியை தவிர மிகுதி அனைவருக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தே சிகிச்சையை தொடர்ந்தான்.

இந்த ஏற்பாட்டின் பலனாக, தன்னையும், மனைவியையும், வைத்தியரையும் தவிர வேறு எவருக்கும் இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாது என்ற நம்பிக்கையோடு இத்தனை மாதகாலமாக இவனும் தொடர்ந்து சிகிச்சையை எடுத்து வந்தான்.

இவனோடு தொடர்பில் இல்லாதபோதும் வைத்திய நண்பனோடும், திருமதி இவனோடும் அவன் தொடர்பில் இருந்து, இவனுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி முழுவதுமாக அறிந்தே இருந்தான்.

நேற்று வைத்திய நண்பன் பேசும் போது இவன் கிட்டதட்ட முழுவதுமாக தேறி விட்டான் எனவும். அன்றைய சம்பாசணையை பற்றி இவனுக்கு அதிகம் நியாபகம் இல்லை எனவும். அதை பற்றி கதைப்பதை தவிர்த்து, வழமை போல் உரையாடலை தொடரும் படியும் அவனுக்கு கூறி இருந்தான்.

இதோ…நெஞ்சம் நிறைந்த படபடப்போடு அவன் மொபலை எடுத்து இவனின் வாட்சப் நம்பரை அழுத்த தயாராகி விட்டான்…….

அழைப்பை எடுக்க முதல், வைத்திய நண்பன் கடைசியாக சொன்னதை மீண்டும் ஒரு முறை அவன்  நினைவு படுத்தி கொண்டான்.

மச்சான்…மறந்தும் வாயை விட்டுடாதயடா…இவனுக்கு தனக்கு வந்த பிரச்சனை எவ்வளவு பெரிசு…தான் என்ன குழிசையள் எடுத்தது…இனியும் என்ன குழிசையள் எடுக்க வேணும்…எல்லாம் வடிவா தெரியுமடா.

ஆனால் இவனை பொறுத்தவரை…இது எதுவும் உனக்கு தெரியாது…அதை நீ மறந்துடாத…

———————————

இவனுடனான தொலைபேசி அழைப்பு நினைத்தததை விட சகஜமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் உறவு முன்னர் போல் அந்நியோனியமாக இல்லை என்பதாக அவனுக்கு தோன்றியது.

தொடர்பு விட்டு போனமைக்கு பரஸ்பரம் மன்னிப்புகள், குடும்பத்தினர் நலம் விசாரிப்புகள் என வழமையான விடயங்கள் பேசித்தீர்ந்த பின் உருவான அந்த அசெளகரியமான நிசப்தத்தை கலைத்து கொண்டு…இவன் தானாகவே பேசினான்.

மச்சான்…அண்டைக்கு நான் கதைக்கேக்க கொஞ்சம் அப்செட்டா இருந்தனாண்டா… ஒரு சின்ன ஸ்டிரெஸ்…நித்திரை கொண்டு எழும்பினதும் அது சரியாப் போச்சு….

என்ன சொல்வது என தெரியாத அவன்…ம்ம்…என்று சொல்லி விட்டு இதை எப்படி கையாள்வது என யோசித்து கொண்டிருக்கும் போதே…இவன் தொடர்ந்தான்….

நல்ல காலம் மச்சான்…. உண்ட பேய் கதையை கேட்டு நான் டொக்டரிட்ட போய் இருந்தா என்னை பைத்தியம் எண்டே முடிவு கட்டி இருப்பாங்கள்….

இனிமேலாவது கண்டதையிம் வாசிச்சு போட்டு…அட்வைஸ் பண்ணுறன் பேர்வழி எண்டு மற்றவனுக்கு விசர்பட்டம் கட்டாத மச்சான்…….

அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத அவன்…கதையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக……

ம்……ம்…ம் கொட்டினான்.

#stigma #கேடிசூழ் #கறை #வடு

(யாவும் கற்பனை)

பாகம் IV முற்றும்.

 

Edited by goshan_che
  • Like 10
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் எதிர்பாராத முடிவு …!

ஆல கால விஷத்தையும் நம்பலாம்…!!!!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.......உங்களைப் புரிந்து கொள்ளுமளவுக்கு அவன் புத்திசாலியாகி விட்டான். மிச்சத்தையும் எழுதவும்.அவர்களையும் பார்க்க ஆவல்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் கூறப்படும் கொழும்பு நண்பருக்கு குடிபழக்கம் காணப்படக்கூடும்? 

போதைப்பொருள் பயன்பாடு, அதிக குடி பிதற்றலுக்கு காரணம் ஆகலாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மன அழுத்தம் கண்ட சிலருக்கு சரியான வைத்தியத்தின் பின்  ஒரு குறிப்பிட்ட் காலத்தை மறந்தவர்காளக இருப்பார்களாம். நேற்று நடத்து ஞாபகம்  இராது . பல வருடங்களுக்கு முன் நடந்தது ஞாபகம் இருக்கும். உலக நடைமுறையில் இவாறு   பாதிக்க படுவோர் சதவீதம் அதிகம் . முறையான சிகிச்சை மேற்கொண்டால்  குணமாகி விடுவார்கள். 

கதையில் வரும் நண்பருக்கு இனம் கண்டு வைத்திய உதவி செய்த்தையிட்டு கதா சிரியருக்குபராட்டுக் கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 22:09, goshan_che said:

முன் குறிப்பு

பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்).

————————————————

பாகம் IV

இன்று ஒரு மிக முக்கியமான நாள்.

அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நிகழ்ந்து கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டிருந்தன.

அதன் பின் வைத்திய நண்பனின் ஆலோசனையின் பெயரில் அவன் இவனுடன் தொடர்பு ஏற்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டிருந்தான். 

பதின்மூன்று மாதங்கள் முன்னதாக நடந்த அன்றைய சம்பாசணையின் போது இவனுக்கு…

நீ கட்டாயம் ஒரு சைக்கியாடிரிஸ்டை பார்க்க வேண்டும் மச்சான்…. உடல் காயம் போலத்தான், மனக்காயமும். இரெண்டுக்கும் ஒரு அளவுக்கு மேல் மருந்து அவசியம்…..

என தயங்கி, தயங்கி அவன் சொல்லி இருந்தான். 

இவனும் கூட சற்றே மனம் நிதானப்பட்ட ஒரு நிமிடத்தில்…

நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்…

என சொல்லியும் இருந்தான்.

ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது.

இதை எல்லாம் கருத்தில் எடுத்த வைத்திய நண்பன் அவனுக்கும், இவனுக்கும் மட்டுமான உறவை மட்டும் அல்ல, இத்தனை மாதகாலமும் இவனுக்கும் அவனின் வட்டத்தில் மனைவியை தவிர மிகுதி அனைவருக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தே சிகிச்சையை தொடர்ந்தான்.

இந்த ஏற்பாட்டின் பலனாக, தன்னையும், மனைவியையும், வைத்தியரையும் தவிர வேறு எவருக்கும் இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாது என்ற நம்பிக்கையோடு இத்தனை மாதகாலமாக இவனும் தொடர்ந்து சிகிச்சையை எடுத்து வந்தான்.

இவனோடு தொடர்பில் இல்லாதபோதும் வைத்திய நண்பனோடும், திருமதி இவனோடும் அவன் தொடர்பில் இருந்து, இவனுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி முழுவதுமாக அறிந்தே இருந்தான்.

நேற்று வைத்திய நண்பன் பேசும் போது இவன் கிட்டதட்ட முழுவதுமாக தேறி விட்டான் எனவும். அன்றைய சம்பாசணையை பற்றி இவனுக்கு அதிகம் நியாபகம் இல்லை எனவும். அதை பற்றி கதைப்பதை தவிர்த்து, வழமை போல் உரையாடலை தொடரும் படியும் அவனுக்கு கூறி இருந்தான்.

இதோ…நெஞ்சம் நிறைந்த படபடப்போடு அவன் மொபலை எடுத்து இவனின் வாட்சப் நம்பரை அழுத்த தயாராகி விட்டான்…….

அழைப்பை எடுக்க முதல், வைத்திய நண்பன் கடைசியாக சொன்னதை மீண்டும் ஒரு முறை அவன்  நினைவு படுத்தி கொண்டான்.

மச்சான்…மறந்தும் வாயை விட்டுடாதயடா…இவனுக்கு தனக்கு வந்த பிரச்சனை எவ்வளவு பெரிசு…தான் என்ன குழிசையள் எடுத்தது…இனியும் என்ன குழிசையள் எடுக்க வேணும்…எல்லாம் வடிவா தெரியுமடா.

ஆனால் இவனை பொறுத்தவரை…இது எதுவும் உனக்கு தெரியாது…அதை நீ மறந்துடாத…

———————————

இவனுடனான தொலைபேசி அழைப்பு நினைத்தததை விட சகஜமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் உறவு முன்னர் போல் அந்நியோனியமாக இல்லை என்பதாக அவனுக்கு தோன்றியது.

தொடர்பு விட்டு போனமைக்கு பரஸ்பரம் மன்னிப்புகள், குடும்பத்தினர் நலம் விசாரிப்புகள் என வழமையான விடயங்கள் பேசித்தீர்ந்த பின் உருவான அந்த அசெளகரியமான நிசப்தத்தை கலைத்து கொண்டு…இவன் தானாகவே பேசினான்.

மச்சான்…அண்டைக்கு நான் கதைக்கேக்க கொஞ்சம் அப்செட்டா இருந்தனாண்டா… ஒரு சின்ன ஸ்டிரெஸ்…நித்திரை கொண்டு எழும்பினதும் அது சரியாப் போச்சு….

என்ன சொல்வது என தெரியாத அவன்…ம்ம்…என்று சொல்லி விட்டு இதை எப்படி கையாள்வது என யோசித்து கொண்டிருக்கும் போதே…இவன் தொடர்ந்தான்….

நல்ல காலம் மச்சான்…. உண்ட பேய் கதையை கேட்டு நான் டொக்டரிட்ட போய் இருந்தா என்னை பைத்தியம் எண்டே முடிவு கட்டி இருப்பாங்கள்….

இனிமேலாவது கண்டதையிம் வாசிச்சு போட்டு…அட்வைஸ் பண்ணுறன் பேர்வழி எண்டு மற்றவனுக்கு விசர்பட்டம் கட்டாத மச்சான்…….

அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத அவன்…கதையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக……

ம்……ம்…ம் கொட்டினான்.

#stigma #கேடிசூழ் #கறை #வடு

(யாவும் கற்பனை)

பாகம் IV முற்றும்.

 

பாகம் IV  மகிழ்ச்சியாக,  இனிய முடிவாக அமைந்ததை இட்டு எமக்கும் சந்தோசம். 👍
பாகம்  V´ல்... என்ன முடிவு வர இருக்கின்றது அறிய ஆவலாக உள்ளோம். 😋

பாகம் IV இளகிய மனம் கொண்டவர்களுக்கும், 😂
பாகம்  V முரட்டு மனம் கொண்டவர்களுக்கும் என்று இரு முடிவுகளை தெரிவு செய்ததன் மூலம் 
கதாசிரியர் ✍️ @goshan_che  இருபாலருக்கும் திருப்தியை கொடுக்க முயலுகின்றார் என ஊகிக்கின்றோம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 22:47, புங்கையூரன் said:

யாரும் எதிர்பாராத முடிவு …!

ஆல கால விஷத்தையும் நம்பலாம்…!!!!?

நன்றி அண்ணா.

இது நோயின் அறிகுறியா?

தனக்கு நோய் இல்லை என்று நிறுவிவிட வேண்டும் என்ற அந்தரிப்பா?

பச்சை நன்றியீனமா?

முடிவு வாசகர் மனதில்.

On 16/2/2023 at 08:49, suvy said:

ஆஹா.......உங்களைப் புரிந்து கொள்ளுமளவுக்கு அவன் புத்திசாலியாகி விட்டான். மிச்சத்தையும் எழுதவும்.அவர்களையும் பார்க்க ஆவல்......!  😂

நன்றி அண்ணா. கெத்தா இரெண்டு கிளைமாக்ஸ் என அறிவித்து விட்டேன். இப்ப இரெண்டாவது கொஞ்சம் சின்னபிள்ளைதனமான முடிவாக தெரியுது. பாப்பம்.

On 16/2/2023 at 23:40, நியாயத்தை கதைப்போம் said:

கதையில் கூறப்படும் கொழும்பு நண்பருக்கு குடிபழக்கம் காணப்படக்கூடும்? 

போதைப்பொருள் பயன்பாடு, அதிக குடி பிதற்றலுக்கு காரணம் ஆகலாம். 

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இருக்கலாம். 3ம் பாகத்தில் இருந்து கற்பனையே என்பதை கவனத்தில் கொள்க. 

On 17/2/2023 at 00:47, நிலாமதி said:

 மன அழுத்தம் கண்ட சிலருக்கு சரியான வைத்தியத்தின் பின்  ஒரு குறிப்பிட்ட் காலத்தை மறந்தவர்காளக இருப்பார்களாம். நேற்று நடத்து ஞாபகம்  இராது . பல வருடங்களுக்கு முன் நடந்தது ஞாபகம் இருக்கும். உலக நடைமுறையில் இவாறு   பாதிக்க படுவோர் சதவீதம் அதிகம் . முறையான சிகிச்சை மேற்கொண்டால்  குணமாகி விடுவார்கள். 

கதையில் வரும் நண்பருக்கு இனம் கண்டு வைத்திய உதவி செய்த்தையிட்டு கதா சிரியருக்குபராட்டுக் கள் 

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

ஓம்…இவ்வாறானதொரு மறதி பிரச்சனையாகவும் இருக்கலாம். கதையின் எல்லா சம்பவங்களும் நிஜம் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பாகம் IV  மகிழ்ச்சியாக,  இனிய முடிவாக அமைந்ததை இட்டு எமக்கும் சந்தோசம். 👍
பாகம்  V´ல்... என்ன முடிவு வர இருக்கின்றது அறிய ஆவலாக உள்ளோம். 😋

பாகம் IV இளகிய மனம் கொண்டவர்களுக்கும், 😂
பாகம்  V முரட்டு மனம் கொண்டவர்களுக்கும் என்று இரு முடிவுகளை தெரிவு செய்ததன் மூலம் 
கதாசிரியர் ✍️ @goshan_che  இருபாலருக்கும் திருப்தியை கொடுக்க முயலுகின்றார் என ஊகிக்கின்றோம். 🤣

நன்றி அண்ணா. பாகம் V இன் முடிவு எப்படி இருக்கும் என அறிய நானும் ஆவலலாய்த்தான் உள்ளேன்🤣. நான் எட்டியதும் எழுதி விடுகிறேன்.

உங்கள் கருத்தை பார்த்த பின் ஒரு முரட்டு முடிவாககவே வைக்கலாம் என நினைக்கிறேன். ஐடியாவுக்கு நன்றி.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 16:09, goshan_che said:

நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்…

என சொல்லியும் இருந்தான்.

ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது.

மனநோயாளர்கள் எவருமே தானாகவே வைத்தியரை நாடமாட்டார்கள்.

கட்டாயம் இன்னொருவரின் துணை தேவை.

ஆனால் அந்த துணை யார் என்பதே பிரச்சனை.

கோசான் நீங்க நம்புகிறீர்களோ இல்லையோ இந்த கதை மாதிரியே எனது நெருங்கிய உறவு ஒருவருக்கும் நடந்தது.

இன்னமும் கனடாவில் இருக்கிறார்கள்.நாளாந்தம் கதைத்த நாம் இப்போ 1 1/2 -2 வருடங்களாக தொடர்பேதும் இல்லை.

அவரது பிள்ளைகள் கூட இப்போது தொடர்பைக் குறைத்துக் கொண்டார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

மனநோயாளர்கள் எவருமே தானாகவே வைத்தியரை நாடமாட்டார்கள்.

கட்டாயம் இன்னொருவரின் துணை தேவை.

ஆனால் அந்த துணை யார் என்பதே பிரச்சனை.

கோசான் நீங்க நம்புகிறீர்களோ இல்லையோ இந்த கதை மாதிரியே எனது நெருங்கிய உறவு ஒருவருக்கும் நடந்தது.

இன்னமும் கனடாவில் இருக்கிறார்கள்.நாளாந்தம் கதைத்த நாம் இப்போ 1 1/2 -2 வருடங்களாக தொடர்பேதும் இல்லை.

அவரது பிள்ளைகள் கூட இப்போது தொடர்பைக் குறைத்துக் கொண்டார்கள்.

நான் நம்புகிறேன். Stigma வை தவிர்ப்பதே அடிப்படைகாரணம் அதனால் அதை தெரிந்தோரை விலத்துகிறனர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2023 at 00:03, ஈழப்பிரியன் said:

மனநோயாளர்கள் எவருமே தானாகவே வைத்தியரை நாடமாட்டார்கள்.

கட்டாயம் இன்னொருவரின் துணை தேவை.

ஆனால் அந்த துணை யார் என்பதே பிரச்சனை.

கோசான் நீங்க நம்புகிறீர்களோ இல்லையோ இந்த கதை மாதிரியே எனது நெருங்கிய உறவு ஒருவருக்கும் நடந்தது.

இன்னமும் கனடாவில் இருக்கிறார்கள்.நாளாந்தம் கதைத்த நாம் இப்போ 1 1/2 -2 வருடங்களாக தொடர்பேதும் இல்லை.

அவரது பிள்ளைகள் கூட இப்போது தொடர்பைக் குறைத்துக் கொண்டார்கள்.

இதற்கு சமூகமும் ஒரு காரணம் என நினைக்கிறேன் அங்கிள்.. 

 

@goshan_che பாகம் IVல் உங்களது கற்பனை மனோத்துவ வைத்திய நண்பர் உபயோகித்த technique எல்லோருக்கும் சரிவாரது என நினைக்கிறேன்..  இவனுக்கு உதவப் போய் அவனுக்கு வாழ்க்கை குழம்பாமல் விட்டால் சரி… 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட எல்லாரும் பின்னுகறீர்கள்.பாராட்டுகள் கோசான்.மிகுதியையும் சுபமாக முயுங்ஙகள்.முன்றாம் பிறை கமல் ஏதோ ஞாபகம் வாறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 21:09, goshan_che said:

முன் குறிப்பு

பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்).

————————————————

 

பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும்.

பாகம் V

ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும்.

உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும்.

இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான்.  ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு.

பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன்.

கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை.

….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது…..

நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன்.

கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும்.  இப்போ?…பச்….  

அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது.

கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை.

“ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”?

கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன்.

ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான்.

திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது……..

”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்”

என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்…….

மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது.

 உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன்.

——————————————

அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும்  சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார்.

தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது.

கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி.

மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர்,

”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”……..

என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில்  பேச தொடங்கினார்.

சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை.

பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்…..

அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்….

ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு….

அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்….. 

ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை.

எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது….

இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்….

அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்….

செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி.

செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன்.

அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன்.

என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்….

எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்….

கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி.

அப்ப கூட்டத்தை முடிக்கலாம்……

என்ற தோரணையில்……. கையை திருப்பி…..

மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ்.

(யாவும் கற்பனை)

முற்றும்.

On 19/2/2023 at 23:10, பிரபா சிதம்பரநாதன் said:

இதற்கு சமூகமும் ஒரு காரணம் என நினைக்கிறேன் அங்கிள்.. 

 

@goshan_che பாகம் IVல் உங்களது கற்பனை மனோத்துவ வைத்திய நண்பர் உபயோகித்த technique எல்லோருக்கும் சரிவாரது என நினைக்கிறேன்..  இவனுக்கு உதவப் போய் அவனுக்கு வாழ்க்கை குழம்பாமல் விட்டால் சரி… 😊

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா.

ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾

1 hour ago, சுவைப்பிரியன் said:

அட எல்லாரும் பின்னுகறீர்கள்.பாராட்டுகள் கோசான்.மிகுதியையும் சுபமாக முயுங்ஙகள்.முன்றாம் பிறை கமல் ஏதோ ஞாபகம் வாறார்.

நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀

Edited by goshan_che
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, எதிர்பார்க்காத மாதிரியான முடிவு! நைற் ஷியாமளனின் The Sixth Sense படம் நினைவிற்கு வந்தது!

பி.கு:  "முருகர்சாமி" வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு சைட் கேசையும் பிலிப்ஸ் முன்னெடுக்க வைக்கலாமோ? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

abayam.jpg

மருத்துவமனையில் நேற்று பார்த்தது, யாருக்காவது பயன்படும் என படம் எடுத்து வந்தேன். திரிக்கும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என கோபிக்க வேணாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

abayam.jpg

மருத்துவமனையில் நேற்று பார்த்தது, யாருக்காவது பயன்படும் என படம் எடுத்து வந்தேன். திரிக்கும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என கோபிக்க வேணாம்.

இதை விட வேறு என்ன அதிகமாக சொல்ல முடியும். கதையை வாசித்து இதை பகிர வேண்டும் என நினைத்ததையே கதையின் வெற்றியாக கொள்கிறேன்🙏🏾.

2 hours ago, Justin said:

அட, எதிர்பார்க்காத மாதிரியான முடிவு! நைற் ஷியாமளனின் The Sixth Sense படம் நினைவிற்கு வந்தது!

பி.கு:  "முருகர்சாமி" வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு சைட் கேசையும் பிலிப்ஸ் முன்னெடுக்க வைக்கலாமோ? 😂

நன்றி. சியாமளனின் இந்த படத்தை பார்த்துப்போட்டு இரெண்டு நாள் பேயறைந்தது போல் இருந்திருக்கிறேன்.

என்னை ஊக்க்கப்படுத்த சொல்லுகிறீர்கள் என புரிந்தாலும், மூன்றாம் பிறை, Sixth Sense என வித்யாசமான படக்கதைகளை இணைத்து கதைப்பதே சந்தோசமாக உள்ளது🙏🏾.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு அத்துடன் யதார்த்தமான முடிவும் அதுதான்.......!  👍

இது நடந்து இரு வருடங்களுக்கு முன் இருக்கும்.......பின்னடி காலத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் ஒருநாள் பிரச்சினை கூட யாரோ போன் செய்து போலீஸ் மற்றும் அவசர வண்டியும் வந்து கொண்டு போனது. பின்பு அவரை தனியான ஒரு ஆஸ்பத்திரியில் சில நாட்கள் வைத்திருந்து பின் விட்டு விட்டார்கள் .......பிறகு அவர் சரியான அமைதியாகி விட்டார்.....இப்ப நன்றாக இருக்கிறார்கள்........!

டயபிட்டீஸ் மெல்லெனக் கொல்லும் ஒரு வருத்தம்தான்......கொஞ்சம் கவனித்து உணவுகளை எடுத்து வந்தால் வருத்தம் இருந்த போதிலும் நலமாக வாழலாம்.......மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம்.......!  😁

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டி20 உலகக்கோப்பை: கவலை தரும் ரோஹித், ஹர்திக் - குழப்பமான சிக்னல் தரும் இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ’வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ள’ அணியாக (favourites) ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் நுழைகிறது. அடுத்த நான்கு வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி, ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளையும் தீவிர ஆய்வுகளையும் எதிர்கொள்ளும். 2007 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு முதலாவது உலகக்கோப்பையை வென்ற இந்தியாவால் அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியவில்லை. பணம், செல்வாக்கு மற்றும் திறமை இருந்த போதிலும் முக்கிய கிரிக்கெட் சாம்பியன் பட்டங்கள் இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. 2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பிறகு இந்தியா எந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர்களில் பட்டம் வென்றதில்லை. அதன் பிறகு, மூன்று சிறந்த கேப்டன்கள் - எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மற்றும் இரண்டு பிரபலமான தலைமை பயிற்சியாளர்கள் - ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மற்ற தொடர்களில் சிறந்த வெற்றிகளை பெற்ற போதிலும், ஐசிசி தொடர்களில் தோல்வியடைந்தனர். கடந்த ஆண்டு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த துரதிர்ஷ்டத்தை இந்தியா இந்த முறை முறியடிக்க முடியுமா? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல் பந்தயங்களில் அதிக ரன் குவித்த விராட் கோலி, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். இந்திய அணித் தேர்வில் குழப்பமான சிக்னல் 2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), வீரர்களின் உடல் தகுதியை மதிப்பிடுவதற்கும், இந்திய அணியின் தேர்வில் செல்வாக்கு செலுத்தும் அம்சமாகவும் இருந்துவருகிறது. டி20 போட்டிகளுக்கும், சில சமயங்களில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இது பொருந்தும். ஐபிஎல் பந்தயங்களில் நிலவும் கடுமையான போட்டியும், அழுத்தமும் வீரர்களின் திறனையும், மன உறுதியையும் சோதிக்கிறது. இருப்பினும் ஐபிஎல் 2024 இன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குழப்பமான சமிக்ஞைகளை அளிக்கிறது. ரோஹித் ஷர்மாவின் அதிரடி தொடக்க பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஒரு வீரரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடும் ரிங்கு சிங் 15 வீரர்கள் கொண்ட முக்கிய அணியில் இல்லை. ரிசர்வ் வீரர்களில் அவரும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த 'பெரிய சாதனையாளர்' என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த சுப்மன் கில், ரிசர்வ் வீரர்களில் ஒருவராக உள்ளார். விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் 2024-ல் அதிக ரன்கள் எடுத்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களில் கூட இல்லை. சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கெய்க்வாட் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, இந்தியாவின் 2022 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷல் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல்-லில் மட்டை வீச்சாளர்களை நடுநடுங்க வைத்த பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. நட்சத்திர வீரர்கள் கோலி, பும்ரா ஐபிஎல் 2024 இன் ஃபார்ம் அடிப்படையில் பல வீரர்களைச் சேர்த்தது மற்றும் குறிப்பிடத்தக்க சில புறக்கணிப்புகள், பாரம்பரிய தேர்வு முறைக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளது. விராட் கோலியும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்கள். போட்டியின் நடுப்பகுதியில் கோலியின் ஸ்டிரைக் ரேட் மீதான விமர்சனம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பிறகு அவர் அற்புதமாக பேட்டிங் செய்து சந்தேகப்பட்டவர்களை அமைதிப்படுத்தினார். முன்னணி ரன் எடுத்தவர் என்ற முறையில் அவர் கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். பும்ரா மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்காவிட்டாலும் (மூன்றாவது இடத்தைப் பிடித்தார்) அவர் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தார் என்பது உண்மை. அவரது பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் சிக்கனமாக இருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாகவே அவர் கொடுத்தார். அவர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டாலும் கூட பும்ராவின் அபாரமான திறமையும், ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அவரை ஆக்கியது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு அற்புதமான டெஸ்ட் தொடரின் மூலம் பும்ரா, சம கால வேகப்பந்து வீச்சாளர்களில் நிகரில்லாதவராக திகழ்கிறார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, குல்தீப் யாதவ் (வலது) மற்றும் ரவீந்திர ஜடேஜா (இடது) இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்கின்றனர். ரிஷப் பந்தின் வலுவான மறுபிரவேசம் இந்த அணியில் கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஒப்பாக நான் கருதும் ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே. இது ஐபிஎல் 2024 இல் அவர் செய்த சாதனைகளின் புள்ளிவிவரங்களுக்காக அல்ல. மாறாக உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து அவர் செய்த குறிப்பிடத்தக்க மற்றும் வலுவான மறுபிரவேசத்திற்காக. இந்த காயம் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு அவரை ஆட்டத்தில் இருந்து விலக்கி வைத்திருந்தது. இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்த ரிஷப் பந்தின் சுதந்திரமான, அதிரடியான மற்றும் புதுமையான பேட்டிங் மீண்டும் திரும்பியிருப்பது உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நம்பிக்கையை தருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் அதிரடி வீரர் சிவம் துபே. ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இங்கிருந்து இந்திய அணியின் பலம் குறையத் தொடங்குகிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் 2024 இல் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால் சிறப்பாக எதையும் சாதிக்கவில்லை. மற்ற வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றனர். பும்ராவின் முக்கிய ஜோடியான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பெரும்பாலான நேரங்களில் பின்தங்கியே இருந்தார்.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து ரிஷப் பந்த் ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்திய அணிக்கு கவலை தரும் ரோஹித், ஹர்திக் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிட்ச்கள் (ஆடுகளங்கள்) எப்படி இருக்கும் என்பது உலகக் கோப்பையில் எல்லா அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். ஆனால் மூன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நிலையற்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் (புதியவர்கள் கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர்) இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலின் கூர்மை குறைவாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மோசமான ஐபிஎல் ஃபார்ம்தான் முக்கிய கவலை. மும்பை இந்தியன்ஸில் கேப்டன்சி மாற்றத்தால் எழுந்த சர்ச்சை அணியின் ஒற்றுமையை பாதித்தது. தொடக்க பேட்ஸ்மேனாக ரோஹித்தின் அதிரடி பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இது ஒருநாள் உலகக் கோப்பையில் நிரூபணமானது. பினிஷர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டர் என பாண்டியாவின் ஆல்ரவுண்டர் திறமையும் முக்கியமானது. பாண்டியா தனது ஆட்டத்திறமையின் உச்சத்தில் இல்லாமல் இருப்பது அணியின் சமநிலையை சீர்குலைக்கக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி தலைமையிலான இந்திய அணி, 2007ஆம் ஆண்டு முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்றது. டி20 உலகக்கோப்பை யாருக்கு? இந்தியாவின் தேர்வாளர்கள் நெருக்கடி காலத்திட்டம் உட்பட எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பல நட்சத்திர வீரர்கள் கேள்விக்குரிய ஃபார்மில் இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டில் உள்ள திறமையின் ஆழம் இதை சாத்தியமாக்குகிறது. ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு ஒரு சோதனைக் களமாகவும், உலகெங்கிலும் உள்ள (பாகிஸ்தான் தவிர) சிறந்த டி20 வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பை உருவாக்கிய பல வீரர்கள் தங்கள் நாட்டிற்காக களம் இறங்கத் தயாராக உள்ளனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் மற்றும் கடந்த ஆண்டு முதல் வெற்றிகளைக் குவித்து வரும் ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டத்திற்கான முக்கிய போட்டியாளர்களில் அடங்குவார்கள். உலகக் கோப்பையின் முந்தைய 8 சீசன்களில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஆறு வெவ்வேறு நாடுகள் சாம்பியன் ஆயின. கிரிக்கெட்டின் இந்த வடிவத்தில் எந்த ஒரு அணியும் வெற்றிபெறக் கூடும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இந்தியாவின் பேட்டிங் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆதிக்கத்தை தக்க வைக்குமா இந்தியா? ஆப்கானிஸ்தான் போன்ற வலுவாக போராடக் கூடிய அணிகள், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்த முடியும். ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதை செய்து காட்டியது. இந்த உலகக் கோப்பை போட்டியின் வெற்றியாளரைக் கணிப்பது சிரமம் என்பது மட்டுமல்ல, முற்றிலும் முட்டாள்தனமானதும் கூட. எல்லா அணிகளும் தங்கள் உச்ச திறனுடன் விளையாட வேண்டும். லீக் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இரண்டு பரம எதிரிகளுக்கு இடையேயான போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் "முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய" போட்டியாகக் கருதப்படுகிறது. உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்தப் பந்தயம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே தோல்வியை விரும்பாது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் (ODI மற்றும் T20) பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளை குவித்துள்ள இந்தியா, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தாண்டி தங்கள் பார்வையை செலுத்த வேண்டும். பாகிஸ்தானை வீழ்த்துவது ஒரு படிக்கல் மட்டுமே. உலகக் கோப்பையை வெல்வதே முந்தைய இழப்புகளுக்கு ஈடுசெய்வதாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/ckkk69xgl6qo
    • சென்ற தலைமுறையினர் மாமிசத்தை கிழமைக்கு ஒரு முறைதான் உண்பார்கள். அதுகும் கோவில் கொடியேற்றங்கள் தொடங்கி விட்டால் மாதக் கணக்கில் மரக்கறி உணவுதான். இப்போதைய மரக்கறிகள் கூட... இரசாயனம் கலந்த விளைச்சலுடன் தான் கிடைக்கின்றது.   இன்று  கிழமையில் 6 நாளும் மாமிசம்தான். அந்த இறைச்சி தரும் மிருகங்களும், பறவைகளும் ஆரோக்கியமாகவும், சதைப்பிடிப்பாகவும் இருக்க  அதிக ஊட்ட  சத்துக்களையும், நோய் எதிர்ப்பு குளிசைகளான "அன்ரி பயோட்டிக்" போன்ற மருந்துகளை உணவில்   அளவுக்கு அதிகமாகவே கலந்து கொடுக்கும் போது... அந்த இறைச்சியை உண்ணும் மனிதனும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து ஒரு கட்டத்ததில்  நோயாளி ஆகி விடுகின்றான். எங்கும் எதிலும் வியாபாரம் முக்கியமாகி விட்ட நிலையில் மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. 
    • முதல் 8 ஓவர்களில் கனடாவின் பக்கம் இருந்த ஆட்டம் அடுத்த 5 வர்களில் அமேரிக்கா பக்கம் திரும்பியது. முதல் போட்டியில் என் கணிப்பு வென்றது🤣
    • 👍..... இப்படியே எல்லா அணிகளும், கனடா போல, அமெரிக்காவோட விளையாடினால், அமெரிக்கா உலக கோப்பையையே வென்றுவிடும்....🤣 🤣.... நான் இப்ப ஃபோன் எடுத்தால், 'கிரிக்கட்டா, அப்படின்னா என்ன?' என்று கேட்பாங்கள் நந்தன்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.