Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை

 

இலங்கையில் இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 

மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும்  இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜரமன-வடததளள-எசசரகக/175-312593

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி , குமாரசாமி கவனம் உங்கள் நிறுவனங்களையும் தான் யேர்மனி அரசு சொல்கிறது😃

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, shanthy said:

தமிழ் சிறி , குமாரசாமி கவனம் உங்கள் நிறுவனங்களையும் தான் யேர்மனி அரசு சொல்கிறது

புதுக்கடைக்கு போகின்றீர்களா? வீதியோர கடைகளில் சாப்பிட மறக்காதீர்கள்! -  Lifie.lk Tamil | வாழ்க்கைக்கு....

ஆட்டோ!.. ஐயோ!!! | Is Auto a comfort or irritation? - Tamil Oneindia

சாந்தி... எனக்கு அங்கை ஒரு கொத்து ரொட்டி போடும்   நிறுவனம் ஒன்று தான் இருக்கு. 
அதிலை நாலு மேசையும், பத்து கதிரையும், கொத்து ரொட்டி வெட்டுற கத்தியும் தானே...
ஜேர்மன் அரசு ஒரு சொல்லு சொன்னவுடன், எல்லாத்தையும் 
ஒரு ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு... இங்கை வந்து 
"டோனர்"  கடைக்குப் பக்கத்திலை ஒரு இடத்தை பிடிக்க வேண்டியதுதான்.  😂  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து – ஜேர்மன் தூதுவர்

Published By: RAJEEBAN

18 FEB, 2023 | 05:29 PM
image

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றாததன் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என   இலங்கைக்கான ஜேர்மனியின்  தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட் தெரிவித்துள்ளார்.

 பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இந்த கட்டம் முடிவிற்கு வருகின்றது இதன் காரணமாக இலங்கை அதனை இழக்கும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் இலங்கையால் அதனை இழக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/148531

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து – ஜேர்மன் தூதுவர்

Published By: RAJEEBAN

18 FEB, 2023 | 05:29 PM
image

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றாததன் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என   இலங்கைக்கான ஜேர்மனியின்  தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட் தெரிவித்துள்ளார்.

 பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இந்த கட்டம் முடிவிற்கு வருகின்றது இதன் காரணமாக இலங்கை அதனை இழக்கும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் இலங்கையால் அதனை இழக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/148531

 

சிறீலங்காவுக்கு  வரிச்சலகையைவிட

தமிழரை  ஒடுக்கும்  சட்டங்கள் பெரிது  என்று  இவருக்கு எப்ப  புரியப்போகிறது

  • கருத்துக்கள உறவுகள்

அதொன்றுமில்லை விசுகர்! வெளிநாடுகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, கடனுக்காக கையேந்திக்கொண்டு நாட்டு மக்களுக்கு; தாங்கள் ஒருபோதும் சர்வதேசத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கப்போவதில்லை, இது இறைமையுள்ள நாடு, இதில் வெளிநாடுகள்  தலையிடவோ, அவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கவோ மாட்டோம் என்று சண்டித்தனம் பேசி அவர்களை ஏமாற்றும் இவர்களின் தந்திரத்தை சர்வதேச நாடுகள் அறிந்து பலகாலமாயிற்று, அது இவர்களுக்கு இன்னும் புரியவில்லை. அதனாலேயே ஒருபக்கம் பிச்சைப்பாத்திரம் மறுபக்கம் தாங்களே ஒத்துக்கொண்ட அரசியலமைப்பை தீயிட்டுக்கொழுத்தல். ஒருதடவை மஹிந்த வெளிநாடொன்றில் தான் ஏதோ நல்லது செய்யப்போவதாக உறுதியளித்தபோது ஒரு தூதுவர் சொன்னார். "அதை முதலில் நாட்டிலுள்ள உங்கள் மக்களுக்கு அறிவியுங்கள்." எப்படி இருந்திருக்கும் மாத்தையாவுக்கு? இன்றுவரை அங்கொன்று, இங்கொன்று, வெளிநாட்டில் வேறொன்று அதை தவிர்ப்பதற்காக உண்மையை பகிரங்கமாக மக்களுக்கு அறிவித்திருகிறார் ஜேர்மன் தூதுவர். மற்றபடி அவர்களுக்கு புரியாதது என்றில்லை, பயங்கரவாதச்சட்டம் தமிழருக்கு எதிரானது அதனாலேயே சிங்களம் அதை மாற்றவோ, மறுபரிசீலனை செய்யவோ மறுக்கிறது என்பதை நன்றாகவே புரிந்தே இந்தச்சந்தர்ப்பதை சர்வதேசம் பயன்படுத்துகிறது. இதையும் மக்களின் வறுமையை  வைத்து  கடந்துவிடுவோமென சிங்களம் கனவு காண்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

புதுக்கடைக்கு போகின்றீர்களா? வீதியோர கடைகளில் சாப்பிட மறக்காதீர்கள்! -  Lifie.lk Tamil | வாழ்க்கைக்கு....

ஆட்டோ!.. ஐயோ!!! | Is Auto a comfort or irritation? - Tamil Oneindia

சாந்தி... எனக்கு அங்கை ஒரு கொத்து ரொட்டி போடும்   நிறுவனம் ஒன்று தான் இருக்கு. 
அதிலை நாலு மேசையும், பத்து கதிரையும், கொத்து ரொட்டி வெட்டுற கத்தியும் தானே...
ஜேர்மன் அரசு ஒரு சொல்லு சொன்னவுடன், எல்லாத்தையும் 
ஒரு ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு... இங்கை வந்து 
"டோனர்"  கடைக்குப் பக்கத்திலை ஒரு இடத்தை பிடிக்க வேண்டியதுதான்.  😂  🤣

நானும் தங்கநகை மாளிகை என்று நம்பீட்டேன். 😊

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, shanthy said:

தமிழ் சிறி , குமாரசாமி கவனம் உங்கள் நிறுவனங்களையும் தான் யேர்மனி அரசு சொல்கிறது😃

 

எது அந்த பெரியவர் & சின்னவர் அடாவடி கம்பெனி (பிரைவேட்) (ரஸ்யா) லிமிடெட் அதுவா?🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் நிறுவனங்கள் சில அவற்றின் செயற்பாடுகளை முடிவுறுத்தும் - இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர்

Published By: VISHNU

20 FEB, 2023 | 08:02 PM
image

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடரும் பட்சத்தில் இந்நாட்டில் தாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை முடிவிற்குக்கொண்டுவரவேண்டியேற்படுமென இலங்கையில் இயங்கும் ஜேர்மன் நிறுவனங்கள் எச்சரித்திருப்பதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டுக்கையிருப்பு பற்றாக்குறையின் காரணமாக இலங்கை சில பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடைவிதித்திருக்கின்றது. இருப்பினும் அந்த இறக்குமதித்தடைகளைத் தளர்த்துமாறு அரசாங்கத்திடம் ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது. 


இலங்கையில் இயங்கும் சில ஜேர்மனிய கம்பனிகள் இறக்குமதித்தடை தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியிருப்பதாக இலங்கைக்கான ஜேர்மனியத்தூதுவர் ஹொல்கர் சீபேர்ற் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாக அந்த நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதுமாத்திரமன்றி இந்த இறக்குமதித்தடை மேலும் இருவருடங்களுக்குத் தொடரும் பட்சத்தில் சில நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை முடிவிற்குக்கொண்டுவந்துவிடும் என்றும் ஜேர்மனியத்தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதுகுறித்து இலங்கை முதலீட்டுச்சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/148698

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/2/2023 at 16:58, shanthy said:

தமிழ் சிறி , குமாரசாமி கவனம் உங்கள் நிறுவனங்களையும் தான் யேர்மனி அரசு சொல்கிறது😃

 

முந்தியிருந்த ஜேர்மனி இப்ப இல்லை எண்டது விளங்கிச்சோ சாந்தியக்கா? :383:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.