Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க Ex அதிபர் டிரம்பை கொல்வோம்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க Ex அதிபர் டிரம்பை கொல்வோம்.." ஓப்பனாக சொன்ன டாப் ஈரான் அதிகாரி.. பரபரக்கும் அமெரிக்கா

அமெரிக்காவுக்கு தங்கள் ஏவுகணை மூலம் ஈரான் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
 

தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் இப்போது அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

 

உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் அத்துமீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பல புகார்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன.


 
 

இதற்குப் பல நாடுகளை நம்மால் உதாரணமாகச் சொல்ல முடியும். கடந்த காலங்களில் பல நாடுகளில் அமெரிக்கா அத்துமீறி நுழைந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், அமெரிக்கா இதையெல்லாம் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

 
 காசிம் சுலைமானி

காசிம் சுலைமானி

அதேபோலத் தான் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கே நிலவி வந்தது. இது கடந்த 2020இல் மிக மோசமானதாக மாறியது. அப்போது ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி ஈராக் சென்றிருந்தார். அங்கிருந்து மீண்டும் ஈரான் திரும்ப காரில் அவர் பாக்தாத்தில் பயணித்துக் கொண்டிருக்க, அமெரிக்கப் படைகள் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி அவர் கொன்றது. அமெரிக்க நலனுக்கு எதிராக அவர் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாகவும் இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

 
 அதிநவீன ஏவுகணை

அதிநவீன ஏவுகணை

வெளிநாட்டிற்குச் சென்ற தங்கள் ராணுவ தளபதியை அமெரிக்கா அத்துமீறிக் கொன்றது ஈரானுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்நாட்டு மக்கள் சுலைமானிக்கு ஆதரவாகத் திரண்டு, அமெரிக்கா மீது பதிலடி கொடுக்க வேண்டும் என்று வாதிட்டனர். பல ஈரான் தலைவர்கள் இதை வெளிப்படையாகவே அறிவித்தனர். இந்தச் சூழலில், ஈரான் இப்போது அதிநவீன கப்பல் ஏவுகணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இதனால் 1,650 கிமீ (1,025 மைல்) தூரம் வரை செல்ல முடியும் என்று அந்நாட்டின் உயர்மட்ட தளபதி தெரிவித்தார்.

 
 நிச்சயம் பழிவாங்குவோம்

நிச்சயம் பழிவாங்குவோம்

உக்ரைன் போரில் ஈரான் நாட்டின் ஆளில்லா விமானங்களை ரஷ்யா பயன்படுத்தியதே சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், இப்போது இந்த அதிநவீன கப்பல் ஏவுகணை பேசுபொருளாகியுள்ளது. அதேபோல மற்றொரு நிகழ்வில், ஈரான் ராணுவத்தின் அமிராலி ஹாஜிசாதே, "ஈரானின் உயர்மட்ட தளபதியை அமெரிக்கா கொன்றதை அப்படியே விட்டுவிட மாட்டோம்.. நிச்சயம் பழிவாங்குவோம்.. நாங்கள் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொலை செய்யப் பார்க்கிறோம்.

 
 புதிய ஏவுகணை

புதிய ஏவுகணை

இப்போது புதிய அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் 1,650 கிமீ தூரம் வரை சென்று தாக்க முடியும். இந்த புதிய ஏவுகணையை ராணுவத்தில் சேர்த்துள்ளோம். எங்களுக்கு அமெரிக்காவின் பாவப்பட்ட வீரர்களைக் கொல்லும் திட்டம் எல்லாம் இல்லை. இப்போது ஈராக்கில் அமெரிக்கப் படைகள் இருக்கிறார்கள். அவர்களை நோக்கி இந்த ஏவுகணையைச் செலுத்தி அந்த வீரர்களை நிச்சயம் கொல்ல மாட்டோம். எங்கள் இலக்கு வேறு.

 
 எங்கள் இலக்கு
 

எங்கள் இலக்கு

எங்கள் தளபதியைக் கொன்றவரைப் பழிவாங்குவோம்.. உண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பைக் கொல்லப் பார்க்கிறோம். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் சுலைமானியைக் கொல்ல உத்தரவிட்ட ராணுவத் தளபதிகளும் கொல்லப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், ஈரான் உருவாக்கியுள்ள அந்த அதிவீன ஏவுகணையும் அங்கே மக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிரான ஈரான் தலைவர்களின் எச்சரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
 ஏவுகணை சோதனை

ஏவுகணை சோதனை

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை விரிவுபடுத்தியுள்ளது. கடந்த நவ. மாதம் தான் ஈரான் இப்படியொரு ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கா சந்தேகம் தெரிவித்திருந்தது. இப்போது ஈரானே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளும் இந்த விவகாரத்தில் கவலை தெரிவித்துள்ள நிலையில், தற்காப்பிற்காகவே இதை உருவாக்கியுள்ளதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

கவலை ஏன்

 கவலை ஏன்

மேலும், உக்ரைனில் போர் தொடங்கும் முன்பு, ரஷ்யாவுக்கும் ஈரான் தனது ட்ரோன்களை வழங்கியிருந்தது. இந்த டிரோன்களை வைத்தே உக்ரைனில் முக்கிய உள்கட்டமைப்புகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவும் ஒரு முக்கிய கவலையாக மாறியுள்ளது. ஈரான் டிரோன்களை போல இந்த ஏவுகணைகளையும் மற்ற நாடுகளுக்கு வழங்கலாம் என்றும் அவை அப்பாவி நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

https://tamil.oneindia.com/news/international/iran-top-commander-says-they-are-looking-to-kill-donald-trump-500312.html

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லி கொண்டிருக்காமல் செய்து காட்டவேண்டும் ஈரான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

சும்மா சொல்லி கொண்டிருக்காமல் செய்து காட்டவேண்டும் ஈரான்.

 

 

குலைக்கிற நாய்  கடிக்காது  ராசா

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் இதனை நிச்சயம் செய்யவேண்டும். அமெரிக்காவுக்குப் பாடம் புகட்டவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/2/2023 at 19:17, goshan_che said:

சும்மா சொல்லி கொண்டிருக்காமல் செய்து காட்டவேண்டும் ஈரான்.

On 25/2/2023 at 19:51, விசுகு said:

குலைக்கிற நாய்  கடிக்காது  ராசா

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பொய்யென நான் நினைக்கவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பொய்யென நான் நினைக்கவில்லை.

 

இல்லை உண்மையிலே இதை ஈரான் செய்ய வேண்டும்.

அதன் பின் விழைவாக ஈரான் மொக்கு முல்லாகளிடம் இருந்து விடுபடும். அமெரிக்காவும் டிரம்பின் populism த்திலிருந்து விடுபடும்.

என் போன்றோருக்கு இது ஒரு win-win situation. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இல்லை உண்மையிலே இதை ஈரான் செய்ய வேண்டும்.

அதன் பின் விழைவாக ஈரான் மொக்கு முல்லாகளிடம் இருந்து விடுபடும். அமெரிக்காவும் டிரம்பின் populism த்திலிருந்து விடுபடும்.

என் போன்றோருக்கு இது ஒரு win-win situation. 

இதைத்தான் நானும் யோசித்தேன்

அத்துடன் ஈரானை நொருக்கப்போவது வேறு யாரும் இல்லை அல்ல அவர்களது அக்க பக்க சொந்தங்களே.

28 minutes ago, குமாரசாமி said:

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பொய்யென நான் நினைக்கவில்லை.

அதைத் தானே காட்டச்சொல்கிறோம் அண்ணா. 

ரசியாக்காறன் மாதிரி செக்கிழுக்காமல் உடனே முடித்தால் நாங்களும் வெட்ட வேண்டியதை வெட்டி விட்டு இரண்டு நேர தொழுகைக்கு பழகணும் இல்லையா?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ஈரான் இதனை நிச்சயம் செய்யவேண்டும். அமெரிக்காவுக்குப் பாடம் புகட்டவேண்டும். 

உண்மை தான்

இதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அமெரிக்காவுக்கு.

தேவையில்லாத ஆணியை புடுங்கினதும் 😂 புடுங்கினவனை இதை வைத்து போட்டு முடித்ததும் ஆக.....😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அத்துடன் ஈரானை நொருக்கப்போவது வேறு யாரும் இல்லை அல்ல அவர்களது அக்க பக்க சொந்தங்களே.

இஸ்ரேலும் சவுதியும் சேர்ந்தே சோலியை முடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, goshan_che said:

இஸ்ரேலும் சவுதியும் சேர்ந்தே சோலியை முடிப்பார்கள்.

சோலியை முடிக்க ஈரான் ஒன்றும் ஈராக்கை மாதிரி கறுப்பு படத்தை காட்டி கெமிக்கல் ஆயுத பேப்பட்டம் காட்டேலாது கண்டியளோ. ஈரான் அளவுக்கு அதிகமாய் செறிவாக்கி விட்டுதாம்.
கை வைச்சால் கதை கந்தல் எண்டது உங்கடை  பெரிய  கொண்ணருக்கு நல்லவடிவாய் தெரியும்.

பனிப்போர் முடிஞ்சு சுமுகமாய் போய்க்கொண்டிருந்த உலகத்தை கொடூரமாக்கின பெருமை கொண்ணரையே சாரும்.:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சோலியை முடிக்க ஈரான் ஒன்றும் ஈராக்கை மாதிரி கறுப்பு படத்தை காட்டி கெமிக்கல் ஆயுத பேப்பட்டம் காட்டேலாது கண்டியளோ. ஈரான் அளவுக்கு அதிகமாய் செறிவாக்கி விட்டுதாம்.
கை வைச்சால் கதை கந்தல் எண்டது உங்கடை  பெரிய  கொண்ணருக்கு நல்லவடிவாய் தெரியும்.

பனிப்போர் முடிஞ்சு சுமுகமாய் போய்க்கொண்டிருந்த உலகத்தை கொடூரமாக்கின பெருமை கொண்ணரையே சாரும்.:beaming_face_with_smiling_eyes:

இஸ்ரேலிடம் அமெரிக்காவின் பப்பே வேகாது. ஈரான் எல்லாம் ஜூஜூப்பி🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

புரிந்தவன்... பிஸ்தா. 😂

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா, வடகொரியா, முல்லாக்களின் ஈரான் நல்லதொரு கூட்டு
ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை பெண்கள் என்பதால் தடுப்பதற்காக மதஅடிப்படைவாதிகள்  அவர்களுக்கு விஷம் கொடுத்த கொடுமைகளும் நடந்துள்ளது. கிம் ஜோங் உன்னின் சர்வாதிகார ஆட்சியினால் வட கெரியாவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சத்தில் மக்களை பேய்காட்டுவதற்காக தான் ரொக்கட் விட்டு காட்டுவது.வெளிநாடுகளிலிருந்து  உதவிகள் பெறுவது என்பது விஷம் தடவிய இனிப்பு வகைகள் என்று மக்களுக்கு பயம் காட்டபட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இரானுக்கு இன்னும் சரியான மருந்து தரப்படவில்லை. இரானுக்கும் புட்டினுக்கும் தேவையான அவசியமான மருந்து இஸ்ரேலிடம்தான் உண்டு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.