Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுய கட்டுப்பாடு

Featured Replies

சுய கட்டுப்பாடு

யாழ் இணையத்தில் சுய ஆக்கங்கள் இணைப்பதில் இருந்து நான் விலகிக்கொள்கின்றேன். இனிவரும் காலங்களில் (முற்றுமுழுதாக விலகவில்லை. தற்காலிக விலகல்) யாழ் இணையத்தில் எனது சுய ஆக்கங்கள் இடம்பெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றேன். மற்றவர்களின் ஆக்கங்களிற்கு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் பதில் அளிப்பேன்.

நட்புடன் என்.பரணீதரன்

பரணீ,

ஏனிந்த சோகமான முடிவை எடுத்துள்ளீர்கள் ? சுய ஆக்கங்களை இணைப்பது எப்படி சுய கட்டுப்பாடு ஆகும் ?

யாழில் உங்கள் ஆக்கங்களுக்கு ஆதரவில்லையா ?

தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

  • தொடங்கியவர்

வணக்கம் இணையவன்.

எனது ஆக்கங்களிற்கு ஆதரவே இந்த யாழ்களம்தான். 5வருடங்களிற்கு மேலாக யாழ் இணையத்தில் வாழ்கின்றேன். நான் வேறு எங்கும் எழுதுவதில்லை. ஒரு சில கவிதைகள் வரைந்துள்ளேன். மற்றும்படி முழுக்க முழுக்க இந்த யாழ் இணையத்தினுள்தான் வாழ்கின்றேன். இங்கு எந்தவித மனவேதனைகளோ எந்தவித சோகமான சம்பவங்களோ இடம்பெறவில்லை. களத்திற்கு வெளியே சில சம்பவங்களால் சிலருடைய ஏளனப்பேச்சுகளால் இந்த முடிவு. எனது ஆக்கங்களை இணைக்காமல் எனக்கு நானே போடும் கட்டுப்பாடு.

நன்றி இணையவன்

நட்புடன் என்.பரணீதரன்

களத்திற்கு வெளியே சில சம்பவங்களால் சிலருடைய ஏளனப்பேச்சுகளால் இந்த முடிவு.

இதற்காகவா பரணியண்ணா?

தூற்றுபவன் தூற்றட்டும் போற்றுபவன் போற்றட்டும் என்று நினைச்சிட்டு வந்து உங்கள் ஆக்கங்களை நம்மோடு பகிருங்கள்.

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ தப்பி தவறி உங்கள் வாழ்க்கையை யாரும் கிண்டல் செய்தால் தற்கொலை பண்ணிப் போடாதேங்கோ

உங்களது தனிப்பட்ட பிரச்சனைகளை பற்றி விமர்சிக்கப் போவதில்லை. மனதைத் தளர விடாதீர்கள். உங்கள் ஆக்கங்களை இணைக்க மாட்டேன் என்றுதான் கூறியிருக்கிறீர்கள். உங்கள் திறமையை முடக்கவில்லைதானே.

யாழில் உங்கள் ஆக்கங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து எழுதுங்கள். காலம் மாற்றங்களை ஏற்படுத்தலாம், காத்திருப்போம்.

  • தொடங்கியவர்

தற்கொலை செய்யும் அளவிற்கு நான் கோழை அல்ல.

தூற்றுபவர்கள் தூற்றட்டும் என்று சொல்லலாம் வெண்ணிலா அது சில விசவார்த்தைகள் என்பதால் சற்று அவையடக்கம்.

தற்கொலை செய்யும் அளவிற்கு நான் கோழை அல்ல.

தூற்றுபவர்கள் தூற்றட்டும் என்று சொல்லலாம் வெண்ணிலா அது சில விசவார்த்தைகள் என்பதால் சற்று அவையடக்கம்.

அப்போ பரணி அண்ணா ஒரு ஐடியா. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கோ. எழுதி வைச்சுட்டு அவையடக்கம் முடிந்த பின்னர்(சீக்கிரம் முடியட்டும்) தினம் ஒரு கவிதையில் பஞ்சம் இல்லாமல் பேஸ்ட் பண்ணிடுங்கோ :P சரியோ பரணி அண்ணா

எனது ஆக்கங்களிற்கு ஆதரவே இந்த யாழ்களம்தான். 5வருடங்களிற்கு மேலாக யாழ் இணையத்தில் வாழ்கின்றேன். நான் வேறு எங்கும் எழுதுவதில்லை. ஒரு சில கவிதைகள் வரைந்துள்ளேன். மற்றும்படி முழுக்க முழுக்க இந்த யாழ் இணையத்தினுள்தான் வாழ்கின்றேன். இங்கு எந்தவித மனவேதனைகளோ எந்தவித சோகமான சம்பவங்களோ இடம்பெறவில்லை. களத்திற்கு வெளியே சில சம்பவங்களால் சிலருடைய ஏளனப்பேச்சுகளால் இந்த முடிவு. எனது ஆக்கங்களை இணைக்காமல் எனக்கு நானே போடும் கட்டுப்பாடு.

----------------------------------------------------------------------------------------------------------------

இது உங்களுக்கும் உங்கள் படைப்புகளை வாசிப்பவர்களுக்கும் வேதனை தரும் கட்டுப்பாடு என்றே நான் நினைக்கின்றேன். களத்துக்கு வெளியே ஏளனம் செய்பவர் சிலர் என்றால் உங்கள் எழுத்துக்களைப் பார்து வாழ்துபவர் பலராக இருக்கின்றார்கள் என்பது உண்மை. ஏளனம் என்பதுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அது உங்களை கீழ்நோக்கி தள்ளும். அதனோடு போராடுங்கள் அது தான் வாழ்கை. உங்கள் ஆக்கங்களை எதிர்பார்பவர்களுக்கும் அதிலிருந்து விடயங்களை கற்றுக்கொள்பவர்களுக்கும் வாழ்த்துபவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து எழுதுங்கள். ஏளனம் செய்கின்றார்கள் என்றால் நீங்கள் அதிகமாக எழுதவேண்டும் என்று சொல்கின்றார்கள் என்று அர்த்தம்.

தயவு செய்து இப்படியான முடிவு வேண்டாம் என்பது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆக்கங்களிற்கு ஆதரவே இந்த யாழ்களம்தான். 5வருடங்களிற்கு மேலாக யாழ் இணையத்தில் வாழ்கின்றேன். நான் வேறு எங்கும் எழுதுவதில்லை. ஒரு சில கவிதைகள் வரைந்துள்ளேன். மற்றும்படி முழுக்க முழுக்க இந்த யாழ் இணையத்தினுள்தான் வாழ்கின்றேன்.

இப்படி எழுதிவிட்டு யாழ் இணையத்தில் ஆக்கங்களை இணைக்காமல் விடலாமா பரணி .

உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.

களத்துடன் இணைந்து இருங்கள்.

பரணி மாஸ்டருக்கு என்ன நடந்தது?

நானாவது ரெண்டு கிழமைக்கு முன்னம் சுய பரிசோதனை செய்து மற்றவர்களின் ஆலோசனைகளை வைத்து இறுதி முடிவு எடுத்தன். நீங்கள் என்ன ஒருதலைப் பட்சமா யுத்த நிறுத்தம் எண்டு அறிவிக்கிறீங்கள்?

ஒவ்வொருவரும் ஒவ்வொண்டு சொல்லுவீனம், அதுக்காக நாங்கள் அவர்களிற்காக வாழமுடியுமா?

இப்ப பாருங்கோ, என்னை கொஞ்ச காலத்துக்கு முன்னம் ஒருவர் சைக்கோ எண்டு சொன்னார். அவர் அப்பிடி சொல்லிப்போட்டார் என்பதற்காக நான் யாழை விட்டு ஓடிவிட முடியுமா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிலையில இருந்து ஏதாவது சொல்லுவீனம். அவர்கள் சொன்னது என்னவெண்டு அவர்களுக்கே சிறிது நேரத்தின் பின் மறந்துவிடும். இப்படியான விசுக்கோத்துகளிற்காக நாம் கவலைப்படமுடியுமா? இவர்கள் இப்படி சொல்லிவிட்டார்கள் என்பதற்காக நாம் கண்ணீர் வடிக்கமுடியுமா?

மேலும், நீங்கள் கவிதை தவிர பெரிதாக ஒன்றும் எழுதுவதில்லையே? நன்றாக கவிதை எழுதுவீங்கள். உங்கள் கவிதையை படிக்கும்போது யாருக்காவது வயிற்றுப்போக்கு வருகின்றதாமா?

  • கருத்துக்கள உறவுகள்

சுய தணிக்கை, சுய வாக்கெடுப்பு, சுய கட்டுப்பாடு, சுய சோதனை .... என்று எல்லாம் சுயமயம்.... :o:)

என்ன கிருபன் அண்ணை இது கூட தெரியாதா? அப்ப தானே நாம சுதந்திரம் பெறமுடியும்?? :P எம்மைப்போன்ற தியாகிகள் இப்படி அடிக்கடி சுய பரிசோதனைகள் செய்வோம். நீங்கள் குழம்பக்கூடாது.

சுய சிந்தனை, சுய ஆக்கம் என்றதுகளையும் விட்டிட்டீங்கள் கிருபன் :)

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" பரணி. நாம் எடுக்கிற ஒவ்வொரு முடிவுக்கும் நாமே காரணம். சுற்றம், சூழல், காலம் எல்லாம் எமது முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும். ஆனாலும் இறுதி முடிவை எடுப்பது நாமே. நாம் மட்டுமே. அதனால் அவர் ஏளனம் செய்தார்... இவர் என்னைத் துரத்தினார்... சதி செய்தார்கள்... பழி தீர்த்தார்கள் என்று சொல்வதெல்லாம் எம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளவும், எம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்ளவும் தான். ஆதலால், நான் சொல்லவருவது என்னவென்றால் தொடர்ந்து எழுதுங்கள் :o

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ போங்கோப்பா ????ஏதோ உங்களை நிர்வாகம் வெத்திலை பாக்கு வைச்சு இஞ்சை வாருங்கோ கருத்துக்களை தாருங்கோ எண்டமாதிரியெல்லோ இருக்கு ;) வாறியள் கருத்துக்கள் எழுதுறியள் இல்லாட்டி வாசிக்கிறியள் :huh: அதை விட்டுட்டு சும்மாய் சுயபரிசோதனை சுயகட்டுப்பாடு இதென்னப்பா இஞ்சையென்ன ஆய்வுகூடமே கிடக்கு. :o இப்ப மூலக்கொதியெண்டால் அடங்கவிட்டு பிறகு ஆறுதலாய் வாறதுதானே :)

கு.சா அண்ணா வேணுமென்றால் நீங்களும் ஒரு பரிசோதனை செய்து பார்க்கலாமே? உங்களுக்கு வெட்கம் என்றால் உங்கள் சார்பில் நான் ஒன்றை ஆரம்பிக்கவா?

  • கருத்துக்கள உறவுகள்

சுய தணிக்கை, சுய வாக்கெடுப்பு, சுய கட்டுப்பாடு, சுய சோதனை .... என்று எல்லாம் சுயமயம்.... :huh::)

சுய தடையும் போட்டிருந்ததா பழைய களத்தில படிச்ச ஞாபகம்.

பரணி சார்.. களத்துக்கு வெளில நடக்கிறதுக்கு.. களத்தோட ஏன் சார் கோவிக்கிறீங்கள்.

அடுத்தவன் ஆயிரம் சொல்வான் சார். நீங்கள் உங்களளவில உறுதியா இருந்தா எழுதுங்க. இல்ல களத்துக்கு சொல்லாமலே கவிதை போடிறதை விட்டிருக்கனும். ஏனென்னா நீங்களே சொல்லுறீங்க.. இந்த முடிவுக்கும் களத்துக்கும் தொடர்பில்லை என்று.

ஏதேனும் விளம்பர நோக்கம் ( வெளில உள்ளவங்களுக்கு காட்ட) இருந்தா சொல்லிடுங்க சார். ஏனென்னா.. இங்க முன்னர் ஒரு உறவு சுய தடை போடேக்க.. விளம்பரம் தேடினம் என்று கருத்துக்கள் வைக்கப்பட்டன. பழைய களத்தில பார்த்திங்கன்னா தெரியும். தேவையில்லாம.. இந்தத் தலைப்பைப் போட்டு.. நீங்கள் இங்கையும் ஏச்சு வாங்கப் போறீங்க. :o:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா அண்ணா வேணுமென்றால் நீங்களும் ஒரு பரிசோதனை செய்து பார்க்கலாமே? உங்களுக்கு வெட்கம் என்றால் உங்கள் சார்பில் நான் ஒன்றை ஆரம்பிக்கவா?

தம்பி மாப்பு எதற்காக சுயபரிசோதனை??? என்னில் எனக்கு நம்பிக்கையிருக்கின்றது. ;) சுய சிந்தனையுமிருக்கின்றது.

வெட்கமா :) ???? எதற்கு :o ?????? B)

Edited by குமாரசாமி

களத்திற்கு வெளியே சில சம்பவங்களால் சிலருடைய ஏளனப்பேச்சுகளால் இந்த முடிவு. எனது ஆக்கங்களை இணைக்காமல் எனக்கு நானே போடும் கட்டுப்பாடு.

நன்றி இணையவன்

நட்புடன் என்.பரணீதரன்

நல்ல பழங்களை காய்த்த மரம்மீது கல்லடி படாமலா இருக்கும் என்கிறீர்கள்.... ???? கல்லடி படுவதால் அந்த மரம் கெட்ட மரமும் இல்லை யாரும் வெறுப்பதும் இல்லை... மரம் காய்க்காமல் விடுவதும் இல்லை...!

பரணி மாஸ்டர்,

என்ன நடந்தது மாஸ்டருக்கு இந்த பக்கம் நான் வராம இருந்த போது யாரும் கல்லு எறிந்தவையோ மாஸ்டர் அது தான் நான் வந்துட்டேன் பிறகு ஏன் மாஸ்டர் இப்படி ஒரு முடிவு :D .......தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை சுவைக்க நான் காத்திருகிறேன்,வெளியில ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவார்கள் அதை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் மாஸ்டர்,உங்களுக்காவது வெளியில எனக்கு உள்ளுகுள்ளேயே ஆனா நான் கண்டு கொள்கிறதில்லை :P ,இன்றைக்கு அவர்களை காணவில்ல நான் நிற்கிறேன் மாஸ்டர் ஆகவே இந்த முடிவை பரிசீலனை பண்ணுங்கோ :D .........இப்படி அரைவாசியில விட்டா மாணவர்களின்ட படிப்பு எல்லாம் என்னாகிறது :D ....தொடர்ந்தும் உங்கள் கவிதைகளுடனும் படைப்புகளுடனும் வாங்கோ மாஸ்டர் எல்லாரும் பழமொழி சொல்லுற படியா நானும் ஒன்று சொல்லுறன் அது தான்"காக்கா திட்டி மாடு சாகுமா" என்று ஆகவே நீங்கள் மாடு போல்(பிறகு மாஸ்டரை தப்பா ஏசிட்டன் என்று நினைக்க கூடாது ஒரு உவமைக்கு). :P

சரி மாஸ்டர் நான் அப்ப வரட்டா நல்ல முடிவுடன் உங்களை பள்ளிகூடத்தில் சந்திகிறேன்........ :P

ஜம்முபேபி பஞ்-

வெளியில இருந்து ஏசுறவன் கோழை உள்ளுகுள்ள இருந்து பிழையோ சரியோ எழுதுறவன் வீரன்........

  • தொடங்கியவர்

முகத்துக்கு நேராக தாக்குதல் செய்தால் அதை எதிர்த்து வாதாடலாம். கோழைகள் சிலர் எனது மனைவியிடம் என்னைப்பற்றி கதைத்துள்ளார்கள். அதனால் ஏன் எமக்குள் சண்டை. கொஞ்ச நாளைக்கு நான் எழுதாமல் விடுவம் என்று நினைக்கின்றேன். ஆதரவு தரும் அனைத்து உள்ளங்களிற்கும் நன்றி.

முகத்துக்கு நேராக தாக்குதல் செய்தால் அதை எதிர்த்து வாதாடலாம். கோழைகள் சிலர் எனது மனைவியிடம் என்னைப்பற்றி கதைத்துள்ளார்கள். அதனால் ஏன் எமக்குள் சண்டை. கொஞ்ச நாளைக்கு நான் எழுதாமல் விடுவம் என்று நினைக்கின்றேன். ஆதரவு தரும் அனைத்து உள்ளங்களிற்கும் நன்றி.

மாஸ்டர் என்னோட எல்லாம் கோபம் இல்லை தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

முகத்துக்கு நேராக தாக்குதல் செய்தால் அதை எதிர்த்து வாதாடலாம். கோழைகள் சிலர் எனது மனைவியிடம் என்னைப்பற்றி கதைத்துள்ளார்கள். அதனால் ஏன் எமக்குள் சண்டை. கொஞ்ச நாளைக்கு நான் எழுதாமல் விடுவம் என்று நினைக்கின்றேன். ஆதரவு தரும் அனைத்து உள்ளங்களிற்கும் நன்றி.

என்ன அம்மா அப்பா போல மனைவிக்கும் பயப்படுறீங்க போல. நிலைமையை எடுத்துச் சொன்னா அவங்க புரிஞ்சுக்குவாங்க தானே. மனைவி என்பது மாஸ்ரர் இல்லையே. தோழி தானே..! :D

நெடுக் அண்ணா சொல்வது போல மனைவியை புரிய வைக்க முயலுங்கள்.

ஆஹா அதுதான் பரணி அண்ணா எழுதுவதை குறைத்துவிட்டாரா ? நானும் தினம் ஒரு கவிதை தலைப்பை அடிக்கடி பாக்குறனான்.பரணி அண்ணாவின் கவிதைகளை இப்ப காணவில்லை..... ஹும் கவலைப்படவேண்டாம் இப்படியான வேலைகள் செய்யவே சிலர் இருக்குறார்கள் போல....அவர்களும் முன்னுக்கு வரமாட்டினம் வாறவர்களையும் விடாயினம்..... :angry:

உங்க மனைவிக்கு ஏற்கனவே யாழைப்பற்றி தெரியும் தானே .... நெடுக்ஸ் அண்ணா சொன்னதுபோல் நிலமையை எடுத்துச் சொல்லி புரியவைக்கலாம்.அவங்க புரிந்து கொள்ளுவாங்க...... :D

நீங்கள் ஆக்கங்களை இணைக்காமல் விட்டால்.... உங்களை யாழில் ஆக்கங்களை இணைக்கவிடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியவர் வென்றதுபோல் ஆகிடும்..சோ நீங்க தொடந்து இணையுங்கள்..... !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.