Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசாங்கத்திடம் இழப்பீடு கோரும் இந்திய மீனவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

10 MAY, 2023 | 09:02 PM
image

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மே 20-ஆம் திகதிக்குள் விடுவிக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாரிய போராட்டம் வெடிக்கும் என இராமநாதபுரம் மீனவ சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என குறிப்பிட்டுள்ள சங்கத்தின்  செயலாளர் இது தொடர்பான மகஜரை இந்திய மத்திய அரசின் அதிகாரிகளிடம் கையளிப்பதற்காக தமிழக முதலமைச்சரிடம் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 65 மீனவர்களைத் தவிர, 2018 ஆம் ஆண்டு முதல்  2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 130 இந்திய மீன்பிடிக் கப்பல்கள் இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்த சங்கம் தமது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்தப் படகுகளுக்காக இலங்கை அரசிடம் இருந்து படகொன்றுக்கு 5 லட்சம் இந்திய ரூபாவினை இழப்பீடாக  பெற்று கொடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் பொது ஏலத்தில் விற்கப்படும் இந்திய மீனவர்களின் படகுகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தில் இந்திய மீனவர்களுக்கு எவ்வித பணமும் கிடைக்க பெறாதது பெரும் அநீதி என  மீனவ  சங்கத்தின் செயலாளர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/155004

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் வராது போனால் ஒரு பிரச்சினையும் இல்லையே. 

அவளைத் தொடுவானேன், கவலைப் படுவானேன். 😀

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் மீனவர்களுக்கு  இவர்கள் செய்த அநீதிக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

திமுகா பாலுவுக்கு பணத்தட்டுப்பாடு போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

திமுகா பாலுவுக்கு பணத்தட்டுப்பாடு போல் உள்ளது .

அவர்களிடம் இல்லாத பணமா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

திமுகா பாலுவுக்கு பணத்தட்டுப்பாடு போல் உள்ளது .

 

17 minutes ago, குமாரசாமி said:

அவர்களிடம் இல்லாத பணமா? 😂

சாராய ஆலை, மீன்பிடி ரோலர்கள் என்று… பெரிய சாம்ராஜ்ஜியத்தையே வைத்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நட்ட ஈட்டை  கொடுக்காமல் விட்டால் மீண்டும் எமது கடற்பரப்பில் மீன் பிடிக்க யோசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

நட்ட ஈட்டை  கொடுக்காமல் விட்டால் மீண்டும் எமது கடற்பரப்பில் மீன் பிடிக்க யோசிப்பார்கள்.

கட்டாயம் நுணா கொள்ளையர்களுக்கு நட்டஈடு தரப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விவாதத்திட்கு நடட ஈடு கொடுக்க வேண்டுமென்று வைத்தாலும், எந்த நாட்டிடம் எப்போது கேட்க வேண்டுமென்று விவஸ்தையே இல்லையா? இலங்கை ஊர் ஊராக பிச்சை கேட்டுக்கொண்டு திரியுது. இதுக்குள்ள பேர்ல் கப்பல் விவகாரத்தில் எதாவது கிடைக்குமென்று பாரளுமன்றத்தில் அடி தடியே நடடக்குது. இதுக்குள்ள போய் அத்து மீறி இலங்கை கடடபரப்புக்குள் போய் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாகிப்போட்டு நடட ஈடு கேட்க்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.