Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவன் வழியிலே..

Featured Replies

தலைவன் வழியிலே..

தலைவன் வழியிலே..

புலிகள் பாய்ந்திடும்

வேளை வந்ததே தோழா...

தரணியாண்டிட

தமிழைக் காத்திட

நேரம் வந்ததே தோழா..

நான் சொல்வதெல்லாம் நடக்கும்..

ஈழமெலாம் புலிக்கொடிகள் பறக்கும்...

வெற்றிச்சேதி வீடு தேடி வருதே..

கவலை ஏனடா கைகள் இணைய வா தோழா..

அடிக்குமேல் அடி அடித்தால்

அம்மியும் நகருமடா..

அம்மனை நகர்த்திவிட்டார்...

அங்கு புத்தர்சிலை பூக்குதடா..

திருவிழாத்தேர்கள் இழுத்திட்ட வீதியில்

எதிரிக் கவசங்கள் உறுமுதடா

குழந்தையும் தாயும் கொஞ்சிய முற்றத்தில்

முட்களின் சோலையடா..அதற்கு

தமிழ்ப்பிணங்களே உரங்களடா..

ஐயனைத்தெருவில் இராணுவம் மிதித்தால்

ஐரோப்பாவில் பிள்ளை ஐயையோ என்பார்..

துடிப்பவர் தலைவரடா..

துண்டிப்பார் அரக்கரின் தலையையடா..

தலைவன் வழியிலே..

புலிகள் பாய்ந்திடும்

வேளை வந்ததே தோழா...

தரணியாண்டிட

தமிழைக் காத்திட

நேரம் வந்ததே தோழா..

தலைவன் வழியிலே..

புலிகள் பாய்ந்திடும்

வேளை வந்ததே தோழா...

தரணியாண்டிட

தமிழைக் காத்திட

நேரம் வந்ததே தோழா..

நான் சொல்வதெல்லாம் நடக்கும்..

ஈழமெலாம் புலிக்கொடிகள் பறக்கும்...

வெற்றிச்சேதி வீடு தேடி வருதே..

விகடகவி, உங்கள் வார்த்தைகள் விரைவில் பலிக்கட்டும்! இதை பாடலாகவும் பாடி இணைக்கலாமே?

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

கலைஞன் நன்றி...

இம்முறை நீங்கள் பாடுங்களேன்..நண்பா

நல்ல கவிதை விகடகவி. நீங்கள் இதுபோன்ற கவிதைகள் நிறைய எழுத வேண்டும்

விகடன் என்று சொல்லிவிட்டு

விடுதலையை பாடுகிறாய்

விரைவில் அது வந்துவிட

நீ வீரகவி ஆகிவிடு. :P

Edited by vettri-vel

மாமாவின் வீரகவிதை மிகவும் நன்றாக இருகிறது காதல் கவி எடுத்த கையா வீரகவி எழுதுகிறது என்று ஒருகணம் வியப்பு......... மாமாவின் அவாவும் எங்கள் எல்லோரினதும் அவாவும் விரைவில் நிறைவேறும் எங்கள் தங்க தலைவரால்....நல்ல கவிதை மாமா...... :D

அடிக்குமேல் அடி அடித்தால்

அம்மியும் நகருமடா..

அம்மனை நகர்த்திவிட்டார்...

அங்கு புத்தர்சிலை பூக்குதடா..

அதிலும் இந்த வரிகள் அழகு மாமா.........உங்கள் குரலில் பாடி இசையமைத்து போடமாடீங்களா....... :D

இது பாட்டா? கவிதையா?

அவலங்களையும் கடமைகளையும் பாடும் உங்கள் கவி அருமை. தொடர்ந்து இது போன்ற கவிதைகளை எழுத வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

இது பாட்டா? கவிதையா?
சபேசன் அண்ணாக்கு எப்படித்தோணுது..நான் நினைக்கிறேன் உங்களுக்கு வசனமாத்தான் தோணுது போல :D

நன்றி வெற்றிவேல் அண்ணா..

நன்றி மருமோன்..

நன்றி சுகன்..

Edited by vikadakavi

எனக்கு பாட்டாகத்தான் தெரிகிறது.

கவிதைக்கு தேவையான ஏதோ ஒன்று குறைவது போல் உணர்கிறேன்

  • தொடங்கியவர்

எனக்கு பாட்டாகத்தான் தெரிகிறது.

கவிதைக்கு தேவையான ஏதோ ஒன்று குறைவது போல் உணர்கிறேன்

அப்பாடா தப்பித்தேன்.... :P

  • கருத்துக்கள உறவுகள்

தீர்க்கதரிசி விகடகவி வாழ்க.

உணர்வு பூர்வமான கவிதை வாழ்த்துக்கள் B)

மாமாவின் வீரகவிதை மிகவும் நன்றாக இருகிறது காதல் கவி எடுத்த கையா வீரகவி எழுதுகிறது என்று ஒருகணம் வியப்பு......... மாமாவின் அவாவும் எங்கள் எல்லோரினதும் அவாவும் விரைவில் நிறைவேறும் எங்கள் தங்க தலைவரால்....நல்ல கவிதை மாமா...... :D

அதிலும் இந்த வரிகள் அழகு மாமா.........உங்கள் குரலில் பாடி இசையமைத்து போடமாடீங்களா....... :D

தம்பி இங்கு நீங்கள் குறிப்பிட்ட அவா என்பது ஆவலைத்தானே குறிக்கும் ...... :D இல்லை அவா என்பது அவளை க் குறிக்கும் என்று யாரும் ஆராட்சி செய்தாலும்.... அதனால்தான் கேட்டேன்.... :P

  • தொடங்கியவர்

நன்றி ஈழப்பிரியன்..கௌரிபாலன்..

  • கருத்துக்கள உறவுகள்

திருவிழாத்தேர்கள் இழுத்திட்ட வீதியில்

எதிரிக் கவசங்கள் உறுமுதடா

குழந்தையும் தாயும் கொஞ்சிய முற்றத்தில்

முட்களின் சோலையடா..அதற்கு

தமிழ்ப்பிணங்களே உரங்களடா..

உணர்வினைத்தூண்டுகின்ற கவிதை விகடகவி.

  • கருத்துக்கள உறவுகள்

விகட கவி உணச்சிகரமான கவிதை. வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற கவிதைகளை எழுதுங்கள்.

தலைவன் வழியிலே..

புலிகள் பாய்ந்திடும்

வேளை வந்ததே தோழா...

தரணியாண்டிட

தமிழைக் காத்திட

நேரம் வந்ததே தோழா..

நேரம் கனிந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் என்னால் உணரமுடிகிரது.

வியப்பாக இருக்கின்றது காதல்கவி எழுதும் விகடகவியின் வீரக்கவி கண்டு.

தொடருங்கள்

நான் சொல்வதெல்லாம் நடக்கும்..

ஈழமெலாம் புலிக்கொடிகள் பறக்கும்...

வெற்றிச்சேதி வீடு தேடி வருதே..

கவலை ஏனடா கைகள் இணைய வா தோழா..

வெற்றிச்சேதி வீடு தேடி வருமே என வந்தால் நல்லா இருக்கும் என நினைக்கின்றேன் ;)

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவன் வழியிலே..

தலைவன் வழியிலே..

புலிகள் பாய்ந்திடும்

வேளை வந்ததே தோழா...

தரணியாண்டிட

தமிழைக் காத்திட

நேரம் வந்ததே தோழா..

நான் சொல்வதெல்லாம் நடக்கும்..

ஈழமெலாம் புலிக்கொடிகள் பறக்கும்...

வெற்றிச்சேதி வீடு தேடி வருதே..

கவலை ஏனடா கைகள் இணைய வா தோழா..

அடிக்குமேல் அடி அடித்தால்

அம்மியும் நகருமடா..

அம்மனை நகர்த்திவிட்டார்...

அங்கு புத்தர்சிலை பூக்குதடா..

திருவிழாத்தேர்கள் இழுத்திட்ட வீதியில்

எதிரிக் கவசங்கள் உறுமுதடா

குழந்தையும் தாயும் கொஞ்சிய முற்றத்தில்

முட்களின் சோலையடா..அதற்கு

தமிழ்ப்பிணங்களே உரங்களடா..

ஐயனைத்தெருவில் இராணுவம் மிதித்தால்

ஐரோப்பாவில் பிள்ளை ஐயையோ என்பார்..

துடிப்பவர் தலைவரடா..

துண்டிப்பார் அரக்கரின் தலையையடா..

தலைவன் வழியிலே..

புலிகள் பாய்ந்திடும்

வேளை வந்ததே தோழா...

தரணியாண்டிட

தமிழைக் காத்திட

நேரம் வந்ததே தோழா..

அட! அடடடா!!....தமிழீழ உணர்ச்சிகள் கொப்பளிக்கும் கவிதை!! சித்தம் எல்லாம் களத்தில்!! ....

அருமையாக எழுதி இருக்கீங்க தம்பி கவி!!..

ஈழத்தமிழன் ஒவ்வொருவரது இலட்சியமும் விடுதலை நோக்கியே!! விடிவினை நோக்கியே!!

தமிழரின் தாகமாய்!!...ஈழமே!! அது மலரும் காலம் இதே!!..

வாங்கிக்கொண்டே இருக்கிறானே!! பின் வாங்கிக்கொண்டே இருக்கிறானே! என்று சிங்களப்படை அங்கு கொக்கரிக்கிறதே!! அந்த கொட்டம் அடக்க!! வாங்கியது எல்லாம் திருப்பிக்கொடுக்கும் வேளை விரைவில் வரும்!!

அன்று அதிரும்!!!!!!!!!!!!!!!..விடியல் புலரும்! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி இப்ப காதலை விட வீரம் தான் தேவை என நினைத்து வீர கவிதைக்கு மாறி விட்டீர்கள்.

நல்ல கவிதை வாழ்த்துக்கள் :rolleyes:

விகடகவி, பாட முயற்சித்து பார்க்கின்றேன், நீங்களும் உங்கள் குரலில் இதை பாடி இணையுங்கள். நன்றி!

  • 4 weeks later...

விகடகவி,

நான் சொன்னபடி உங்கள் பாடலை, லைட்டான பியானோ பின்னணி இசையுடன் மெதுவாகப் பாடிப்பார்த்தேன். எப்படி இருக்கிது எண்டு கேட்டுப் பாருங்கோ... :lol:

இந்தப் பாடல் சில மணித்தியாலங்களில் செய்தது.

விகடகவியின் தலைவன் வழியிலே கவிதையை எனது பரீட்சார்த்த பாடல் வடிவில் கேட்க இங்கே அழுத்தவும்..

நன்றி!

  • தொடங்கியவர்

கலைஞன் நல்லாயிருக்கு...

Edited by vikadakavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.