Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை - தேசிய கணக்காய்வு அலுவலகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 JUN, 2023 | 11:15 AM
image
 

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு இறுதி வரை ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த வாகனங்களின் பெறுமதியையும் நிர்ணயிக்க முடியாதுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்கள், விஹாரைகள், சமயத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 2022ஆம் ஆண்டு 27 வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுக்காக அலுவலகம் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/158468

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:
ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்கள், விஹாரைகள், சமயத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 2022ஆம் ஆண்டு 27 வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுக்காக அலுவலகம் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

எந்த ஒரு நாட்டிலாவது... அலுவலக வாகனங்களை சமயத் தலைவர்களுக்கு கொடுப்பார்களா?
பிச்சை  எடுக்கும் நாடு... செய்யும் வேலையா இது?
மக்களை பைத்தியக்காரர்கள் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

@குமாரசாமி,  @satan, @Kapithan , @alvayan , @ஈழப்பிரியன்@Nathamuni

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்!

வேறு என்ன சொல்ல? 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சமயத்தலைவர்கள்தான் நாடை நிர்வகிக்கிறார்கள் அவர்களை மீறி நாட்டில் ஒன்றும் நடைபெறாது. 

2 hours ago, ஏராளன் said:

2022ஆம் ஆண்டு இறுதி வரை ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.

அண்மையில் ஒரு செய்தி வந்ததே ஒரு விகாரையின் பிரதம பிக்குவை கொலைசெய்த இளம் பிக்கு ஒருவர் அவருக்கு சொந்தமான வாகனத்தை அதிகளவு பணத்துக்கு விற்று வெளிநாடு செல்ல முயற்சித்ததாக. எல்லாம் அந்த புத்தருகே வெளிச்சம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

எந்த ஒரு நாட்டிலாவது... அலுவலக வாகனங்களை சமயத் தலைவர்களுக்கு கொடுப்பார்களா?
பிச்சை  எடுக்கும் நாடு... செய்யும் வேலையா இது?
மக்களை பைத்தியக்காரர்கள் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

காசு,கடன்,இலவச உதவிகள்,நிவாரணங்கள் குடுக்க சர்வதேசம் இருக்கு. பிறகேன் கவலைப்படுவான்.....:beaming_face_with_smiling_eyes:

இஞ்சத்தையான் சோசல் காசுமாதிரி சிங்களவனுக்கும் போய்க்கொண்டிருக்கு....:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எந்த ஒரு நாட்டிலாவது... அலுவலக வாகனங்களை சமயத் தலைவர்களுக்கு கொடுப்பார்களா?
பிச்சை  எடுக்கும் நாடு... செய்யும் வேலையா இது?
மக்களை பைத்தியக்காரர்கள் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

@குமாரசாமி,  @satan, @Kapithan , @alvayan , @ஈழப்பிரியன்@Nathamuni

தமிழர்களை விடுங்கள். பிரேமதாசா காலத்தில் ஜேவிபியினர் என்று அப்பாவிகள், மகிந்தா காலத்தில் லசந்த போன்ற சிங்களவர்களை கொன்றொழித்த கோத்தா என்ற கொடியவனை, 69% வாக்குகளுடன் தேர்ந்தெடுத்தால், தனது பாவத்தினை போக்க, விகாரைகளுக்கும், விகாரை ஹெட் மொட்டைகளுக்கும் தனது மாளிகையில் இருந்ததை இலவசமாக அனுப்பி வைத்திருக்கிறார்.

அவர், இப்ப அமைதியாக இருப்பதன் காரணம், வாயை திறந்தால், அமேரிக்கா கொண்டு போய் வில்லங்கத்தில் மாட்டி விடும் அளவுக்கு, அந்தாள் சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்து வைத்திருப்பதை அவருக்கு புரிய வைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

எந்த ஒரு நாட்டிலாவது... அலுவலக வாகனங்களை சமயத் தலைவர்களுக்கு கொடுப்பார்களா?
பிச்சை  எடுக்கும் நாடு... செய்யும் வேலையா இது?
மக்களை பைத்தியக்காரர்கள் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

@குமாரசாமி,  @satan, @Kapithan , @alvayan , @ஈழப்பிரியன்@Nathamuni

ஒவ்வொன்றா அவிழ்த்து போட போட பணம் கொட்டிக் கொண்டே இருக்கிறது.

பிறகேன் கவலை?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

எந்த ஒரு நாட்டிலாவது... அலுவலக வாகனங்களை சமயத் தலைவர்களுக்கு கொடுப்பார்களா?
பிச்சை  எடுக்கும் நாடு... செய்யும் வேலையா இது?
மக்களை பைத்தியக்காரர்கள் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

@குமாரசாமி,  @satan, @Kapithan , @alvayan , @ஈழப்பிரியன்@Nathamuni

வடக்கு கிழக்கில் பிடிக்கிற காணிகளைப் பார்க்கப்போறதிற்கு வாகனம் வேணுமில்லே....போறவை சொகூசாகப்போய் தங்கடை அலுவலை முடிக்க ..இங்கை கொடுத்தவை தங்கடை பாட்டிலை அரசியல் செய்யலாம்...ஒன்றுக்கொன்று கனக்சன் இருக்கு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல்போயுள்ளன - கோபா குழுவின் தலைவர் தகவல்

Published By: DIGITAL DESK 3

28 JUN, 2023 | 10:52 AM
image
 

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பொது கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோபா குழு) தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளதாக சிங்கள நாளேடொன்ற செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் 259 வாகனங்கள் வெளி தரப்பினருக்கு  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த கோபா குழு தலைவர், வாகன நிர்வாகம் தொடர்பான தரவுப் பட்டியலில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில்,  கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இந்த 1794 வாகனங்களில், 679 மோட்டார் வாகனங்களும், 1115 மோட்டார் சைக்கிள்களும் அடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், அவற்றில் பெரும்பாலான கார்கள் தற்போது சுகாதார அமைச்சின் வசம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால், குறித்த வாகனங்களுக்கான வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதை நிறுத்துமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதன்படி, குறித்த  வாகனங்களுக்கான வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சுகாதார அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டிருந்தார். 

இந்த வேலைத்திட்டத்தின் மூலமாக 425 வாகனங்கள் தொடர்பான தகவல்களை வெளிக்கொணர முடிந்திருந்த போதிலும், அவை ஏலத்தில் விடப்பட்டு முறைக்கேடு நடந்துள்ளதா என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1115 மோட்டார் சைக்கிள்களில் 11 மோட்டார் சைக்கிள்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், இவற்றில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். 

இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் கள அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதாகவும், ஓய்வு பெற்றதன் பின்னர் தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான மேலதிக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களில் பெரும்பாலானவை 1950 முதல் 1996 வரையான காலப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டவை என்றும், வாகனங்கள் காணாமல் ‍போவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழு தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/158736

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.