Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வேங்கையன் பூங்கொடி" விமர்சனப்பகுதி

Featured Replies

பல நாட்களின் பின் சகரா அக்காவின் "வேங்கையன் பூங்கோடி" காவியத்தை சுவைக்க முடிந்தது நன்றாக இரசித்தேன் :unsure: "உரியவன்" என்ற எட்டாவது அங்கத்தை.உங்களுடைய கவிதை வரிகள் தனித்துவமானை வாழ்த்துகள் அக்கா!! :unsure:

இந்த நாடகம்

இருவருக்குள்ளா?

இன்னிரு சோடிக் கண்கள் மறுத்தன.

அப்ப நான் வரட்டா!!

  • Replies 70
  • Views 11.5k
  • Created
  • Last Reply

சாத்து! சகீராவுக்கு வயிறு பூர்வமான நீங்க சொன்ன வாழ்த்து பொல்லைக் குடுத்து அடி வாங்கின மாதிரி இருக்கு.... :o:lol::):lol::lol::lol:

நன்றி சாத்திரியார்,

'தாய்மை மனதிற்குள் தவிப்பு

நஞ்சணிந்த நெஞ்சம் காணக் காண

கருவறை கலங்கியது"

உங்களின் வயிறுபூர்வமாக வாழ்த்து தாய்மாரை நினைவூட்டுகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry355516

ஆதி சொல்றது ஆருக்காவது விளங்குதா?????????

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேங்கையன் பூங்கொடி பாகம் 1

அங்கம் 9

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry364418

கௌரிபாலன், யமுனா எனது மனமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்து! சகீராவுக்கு வயிறு பூர்வமான நீங்க சொன்ன வாழ்த்து பொல்லைக் குடுத்து அடி வாங்கின மாதிரி இருக்கு.... :wub::lol::lol::lol::lol::D

ஆதி சொல்றது ஆருக்காவது விளங்குதா?????????

யோ ஆதிவாசி நான் பொல்லு குடுத்து அடிவாங்கினமாதிரியா தெரியிது நான் அடிவாங்கிறதெண்டால் என்னசந்தோசம். ஆனால் எனக்கென்னமோ சகீரா அக்காட்டை தீபத்தை கொடுத்து ஆரத்தி வாங்கினமாதிரி தெரியிது இது எப்பிடியிருக்கு ^_^:(:D

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேங்கையன் பூங்கொடி

பாகம் 1

அங்கம் 12

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry369916

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஞ்ச மொட்டுகள்

கட்டவிழ்க்கும் - பார்த்து

தாழை முகைகள்

தமைத் திறக்கும்.

கமுகுகள் உதிர்த்த

ஆடையின் இடத்தில்

புதிதாய் பிறந்த

பாளைகள் மிளிரும்.

பாரம் தாக்கிய

கூந்தலில் விரிந்த

தென்னம் பூக்களை

அணில்கள் மேயும்.

சகாரா உங்களின் தமிழ் அறிவு எம்மை போன்ற புலம் பெயர்ந்தவர்களை புளகாங்கிதம் அடைய செய்கிறது.ஒவ்வொரு பகுதியையும் தருணம் கிடைக்கும் போது ஆவலுடன் வாசிக்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.மேலுள்ள வரிகள் என்னால் ரசித்து புசிக்கப்பட்டுள்ளது.மேலும் சகாரா தொடர வாழ்த்துக்கள் பல.

நன்றி நுணாவிலான், வேங்கையன் பூங்கொடிக்கான உங்கள் பாராட்டல் என்னை உற்சாகப்படுத்துகிறது. பாராட்டுவதோடு மட்டும் நிற்காமல் குறைகள் தெளிவில்லாத் தன்மைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விடிவெள்ளி முளைக்க விடுதலைப் புலிகளின்

பிக்கப் ஓரிரண்டு வீதி வழியே பீறிட்டோடி

மேலே சிவப்புக்குறிப்பில் இட்ட சொல் யோசித்துப்பார்த்தும் அகராதிகளில் யாசித்துப்பார்த்தும் புரியவில்லை புரிய வைப்பீர்களா அல்லது பொரிய வைப்பீர்களா????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்யா சாத்திரி,

பிக்கப் வாகனத்தை தமிழில் எவ்வாறு அழைப்பது என்று அறிகிலேன் ஆதலால் பிக்கப் என்று எழுதிவிட்டேன்.

சைக்கிள் - ஈருருளி

கார் - மகிழுந்து

பஸ் - பேருந்து

மோட்டார் பைக் - ஈருந்தி

பிக்கப் வாகனம் ??????????

யாரேனும் தமிழ் ஆய்ந்தவர்கள் அறியத்தருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கப் வாகனத்தை சிறு பாரவூர்தியென அழைக்கலாமென நினைக்கின்றேன்.

வாழ்த்துக்கள் சகாறா!!! :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவி, சிறு பார ஊர்தி என்றுவிட்டு ஏன் இவ்வளவு அகோரமாகச் சிரிக்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி தோறும் அள்ளிப்பருக துள்ளிவரும் இப் ப+ங்கொடியை மௌ;ள வருடிய வேளை.........

எம் வாழ்வியலில் நாம் இழந்துவிட்ட அதிகாலையை ஆழிக்கரைகளை நிலாமுற்றங்களை

எழிலான வயல்வெளியை இயற்கையின் மாற்றங்களை குண்டுமழையில் குதறிடும் தெருக்களை

பாசத்தீயில் பரிதவிக்கும் உறவுகளை துள்ளித்திரிந்திட்ட பள்ளிநினைவுகளை

தவித்துநிற்கின்ற தாய்மையின் தன்மையினை மயிலிறகாய் வருடிடும் காதல் உணர்வுதனை

கள்ளம் புகுந்திட்ட காரிகை மனத்தினை இலட்சிய நெருப்புடன் இயங்கும் மறவரை அவர்

அடிவைத்துச் செல்லும் அக்கினிச்சுவடுகளை.....இப்படி ஒவ்வொன்றையும் இயல்பான மொழிநடையில்

எடுத்துச் செல்லும் அழகு அற்புதம். வாழ்த்துக்கள் சகாரா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கண்மணி.

எங்கள் வாழ்வில் நாங்கள் இழந்தவை ஏராளம். அவற்றை நினைக்கின்ற வேளைகளில் மனம் கனக்கும். எமக்கு இயற்கை தந்த வளமான வாழ்வு இனவாதத்தினால் சிதைக்கப்பட்டுக் கொண்டே நீள்கிறது. கனவுகளையும,; எதிர்பார்ப்புகளையும் கந்தகம் கருக்கும்.. ஒரு கால நதிக்கரையில் எம்மவர் வாழ்வு நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்தகாலங்கள் மீண்டுவராது இருப்பினும் 'வரும்காலம் வாசல் திறக்கும்" நம்பிக்கையோடு நகர்வோம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேங்கையன் பூங்கொடி

பாகம் 1

அங்கம் 15

மறவன் உயிர்ப்பூ

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry375971

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேங்கையன் பூங்கொடி

பாகம் 1

அங்கம் 16

உறுமல் புலிக்கு அழகு

http://www.yarl.com/forum3/index.php?showt...t=0#entry377096

  • 2 weeks later...

'வேங்கையன் பூங்கொடி", தற்காலத் தொடர்காவியம் படங்களுடன் சிறப்பாய் மிளிர்கின்றது.

நல்வாழ்த்துக்கள் வல்வைசகரா.

மேலும் தொடருங்கள். . .

  • கருத்துக்கள உறவுகள்

"உறுமல் புலிக்கு அழகு!" வாசித்தேன்.அருமை. சகாரா தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாசறைக்குள் ஆட்சி செய்யும் பண்ணையார் போல் ஒருவன்

காயமுற்ற வேங்கையரின் கவலைகளைப் போக்கினான்.

:):)

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ....

மன்னிக்கவேணும் பண்ணை.....!!! சாத்திரி :blink:

பண்ணை என்பது ஒரு ஆதிக்க வர்க்கத்திற்குரிய சொல். சுட்டிக் காட்டியதற்கு நன்றி மாற்றம் செய்கிறேன்.

வேங்கையன் பூங்கொடி தொடர்ச்சி...

அங்கம் 21

இருதலைக் கொள்ளி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேங்கையன் பூங்கொடி

அங்கம் 22

கலைமான்

ஒவ்வொரு அங்கங்களிலும் உங்கள் சந்தம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

தமிழ் சொற்கள் அவற்றை கோர்த்த விதங்கள். அருமை.

தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே!

இதுவரை காலமும் வேங்கையன் பூங்கொடியை வாசித்தும், ஆர்வமாக ஊக்கப்படுத்தியும், இந்த இணையத்தில் பார்வையிட்டு கருத்துக்களை நேரடியாகவும் கூறி என்னை வளப்படுத்திய நெஞ்சங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைக் கூறிக்கொண்டு இன்று வேங்கையன் பூங்கொடி பாகம் ஒன்றின் 23 ஆம் அங்கமான 'வேங்கையன் பூங்கொடி" இந்த கவிதைப் பூங்காவை அலங்கரித்து இன்றுடன் இந்தப் பாகம் 1 நிறைவெய்த உள்ளது.

தொடர்ந்து, சிறிது கால இடைவெளிக்குப் பின் இதன் தொடர்ச்சியாக வேங்கையன் பூங்கொடி பாகம் 2 மீண்டும் இக்களத்தில் உங்கள் பார்வைக்காக வலம் வருவாள். அதுவரை வேங்கையன் பூங்கொடி பாகம் ஒன்றை இரசித்துக் கொண்டு காத்திருங்கள். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.