Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

12 AUG, 2023 | 08:29 PM
image
 

இலங்கையின் கிழக்கு  மாகாணத்திலுள்ள  அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப்  பிரிவில் அமைந்துள்ள வீரமுனை கிராமத்தில் உள்ள  ஆலயங்களிலும்  பாடசாலைகளிலும் யுத்த அனர்த்தம்  காரணமாக இடம்பெயர்ந்திருந்து தஞ்சமடைந்திருந்த  வீரமுனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களைச்  சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக  55  பேர் 1990.08.12 அன்று இலங்கை இராணுவத்துடன் அந்தக்  காலப்பகுதிகளில் சேர்ந்து இயங்கி வந்த ஊர்காவல் படையினரால்  வெட்டியும், குறிப்பாக சிறுவர்கள் சுவற்றில் அடித்தும்  கொல்லப்பட்டதாக கண்காளால் கண்ட   கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், காயப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாட்சியங்களை அழிக்கும் நோக்குடன் காணாமலும் ஆக்கப்பபட்டதாகவும் உயிர் தப்பியவர்களால் கூறப்படுகின்றது.

இன்றுடன் இந்த மக்கள் கொல்லப்பட்டு 33 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் இப்படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படாமல் இருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான  நீதியும் மறுக்கப்பட்ட நிலையே  காணப்படுகின்றது.

இதன்  காரணமாக  உரிய பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நலன்விரும்பிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறவேண்டும் என வலியுறுத்தி இன்றைய  நாளில் (ஆவணி 12) வருடா  வருடம்  இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்திய  வகையில் நினைவேந்தல்களை பல வகையான  சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மேற்கொண்டு  வருகின்றோம்.

எனவே, இலங்கை அரசாங்கமானது இவ்வாறான சம்பவங்களுக்கு முழுமையாக பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருக்கின்று  என்பதனை இந்த  இடத்தில் ஞாபகப்படுத்த  விரும்புகின்றோம்.

குறிப்பாக இலங்கையின் வடக்கு  கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த காலப்பகுதிகளில் இது போன்ற படுகொலைகள் தழிழர்  பகுதிகளில் பல  இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலை மற்றும்  திருகோணமலை குமாரபுரம் படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கை நீதி மன்றங்களில் கண்கண்ட சாட்சியங்களுடன் வழக்கு தாக்கல்கள் மேற்கொண்ட போதும்  உரிய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறாமல் மறுக்கப்பட்ட வேதனையான சம்பவத்தினையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.

அதே போன்றே இன்றைய தினம் இம்மக்கள்  படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆண்டு நினைவேந்தலினை மேற்கொள்ளப்பட்டது.

எனவே, வீரமுனை  படுகொலை நடந்து இன்று 33ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மீளவும் நீதிக்காக தங்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

01. இப்படுகொலை தொடர்பான வழக்கினை இலங்கை அரசாங்கமானது முன்னெடுக்க வேண்டும்

02. பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கப் பெற வேண்டும்

03. குற்றம் இழைத்தவர்களை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்

04. இம்மக்களின் தொடர் நினைவேந்தல்களை அனுஸ்டிப்பதற்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்

05. மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரச தரப்பு முன்னெடுப்புகளை அறிவித்தல் வேண்டும்.

https://www.virakesari.lk/article/162218

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் ஊர்காவல் படை என்று அழைக்கப்படும் காடையர்களால் செய்யப்படட அநியாயங்களில் இதுவும் ஒன்று. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

முஸ்லீம் ஊர்காவல் படை என்று அழைக்கப்படும் காடையர்களால் செய்யப்படட அநியாயங்களில் இதுவும் ஒன்று. 

இந்த திரியை வாசித்தோர் குறைவு.
ஆனால் பலருக்கும் சென்றடைய வேண்டிய திரி.

  • கருத்துக்கள உறவுகள்+

முஸ்லீம் ஊர்காவல் படையினரும் சாதாரண ஊர்மக்களுமாகச் சேர்ந்து வீரமுனையில் 400 வரையான தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தனர். இவர்களில் 290 சொச்சம் பேரினது பெயர் விரிப்புகளே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன்.

1990 சூன் நடுப்பகுதி முதல் 1990 பன்னிரண்டாம் மாதம் வரையில் 2000 வரையிலான தமிழர்கள் முஸ்லீம்களால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சாதாரண முஸ்லீம் மக்களாலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 98 (1990,1991,1992,1993) நிகழ்வுகளை இதுவரை செய்திகளாக தேடி சேகரித்துள்ளேன். இதில் 46 நிகழ்வுகள் 1990/06 - 1990/12 இடைப்பட்ட காலத்தில் நிகழ்நதவை ஆகும்.

இவனுகள் செஞ்ச கொடூரங்கள் கொஞ்சநஞ்சமன்று.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, ஏராளன் said:

இந்த திரியை வாசித்தோர் குறைவு.
ஆனால் பலருக்கும் சென்றடைய வேண்டிய திரி.

தலைப்பு செய்தியை சரியாக விவரிக்கவில்லை. அதனால் தான் என்பது என்னுடைய எண்ணம். தலைப்பை பொருத்தமானதாக மாற்றுங்கள்... படுகொலை என்ற சொல்லைச் சேருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இந்த திரியை வாசித்தோர் குறைவு.
ஆனால் பலருக்கும் சென்றடைய வேண்டிய திரி.

யாரோ ஒரு தெய்வாத்மா சிரிப்பு குறி வேற போட்டிருக்கு.

 

குமுதினி படகுக்கு நிகரான படுகொலை. தலைவரின் படத்தை ஒட்டி நியாயம் கேட்பவர்களுக்கு, இது கண்ணுக்கும் புலப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் .......!

  • கருத்துக்கள உறவுகள்+
54 minutes ago, goshan_che said:

யாரோ ஒரு தெய்வாத்மா சிரிப்பு குறி வேற போட்டிருக்கு.

ஐயோ, அதைப் போட்டது நானப்பா....
கை மாறி தட்டுப்பட்டுவிட்டது... எல்லோரும் மன்னியுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

யாரோ ஒரு தெய்வாத்மா சிரிப்பு குறி வேற போட்டிருக்கு.

அவ்வளவு மோசமான மனநிலையுள்ள மனிதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் அண்ணை.

5 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயோ, அதைப் போட்டது நானப்பா....
கை மாறி தட்டுப்பட்டுவிட்டது... எல்லோரும் மன்னியுங்கோ.

சரிப்படுத்தியாச்சு தானே. 

  • கருத்துக்கள உறவுகள்+
7 minutes ago, ஏராளன் said:

சரிப்படுத்தியாச்சு தானே. 

ஓமோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

முஸ்லீம் தலைவர்களுக்கு இந்த படுகோலைகளைப் பற்றி எதுவுமே தெரியாது.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

குமுதினி படகுக்கு நிகரான படுகொலை. தலைவரின் படத்தை ஒட்டி நியாயம் கேட்பவர்களுக்கு, இது கண்ணுக்கும் புலப்படாது.

குமுதினி கொலை கடற்படை வேலை.

இது அல்லாட காவலோட நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

ஐயோ, அதைப் போட்டது நானப்பா....
கை மாறி தட்டுப்பட்டுவிட்டது... எல்லோரும் மன்னியுங்கோ.

ஓ.. எனக்கும் இப்படி நடப்பது உண்டு🙏.

10 minutes ago, Nathamuni said:

குமுதினி கொலை கடற்படை வேலை.

இது அல்லாட காவலோட நடந்தது.

ஓம்…நான் ஒப்பிட்டது குரூரத்தின் அளவை.

குறிப்பாக குழந்தைகள் இங்கே சுவரில் அடித்தும், குமுதினியில் கால்களில் பிடித்து இழுத்து கிழித்தும் கொல்லப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

முஸ்லீம் தலைவர்களுக்கு இந்த படுகோலைகளைப் பற்றி எதுவுமே தெரியாது.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

அவங்கட ஆசீர்வாத்தோடதான் நடந்தது.

எல்லாருக்கும் இது தெரியும். ஆனால் தமிழர் அழிய வேணும் என்டதால சோனக தலைவர்கள் அமைதியா இருந்தவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

முஸ்லீம் ஊர்காவல் படையினரும் சாதாரண ஊர்மக்களுமாகச் சேர்ந்து வீரமுனையில் 400 வரையான தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தனர். இவர்களில் 290 சொச்சம் பேரினது பெயர் விரிப்புகளே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன்.

1990 சூன் நடுப்பகுதி முதல் 1990 பன்னிரண்டாம் மாதம் வரையில் 2000 வரையிலான தமிழர்கள் முஸ்லீம்களால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சாதாரண முஸ்லீம் மக்களாலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 98 (1990,1991,1992,1993) நிகழ்வுகளை இதுவரை செய்திகளாக தேடி சேகரித்துள்ளேன். இதில் 46 நிகழ்வுகள் 1990/06 - 1990/12 இடைப்பட்ட காலத்தில் நிகழ்நதவை ஆகும்.

இவனுகள் செஞ்ச கொடூரங்கள் கொஞ்சநஞ்சமன்று.

வீரமுனையிலே இனப்படுகொலைக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அகவணக்கம்.

இலங்கைச் சோனகர்களது வாக்குகளுக்காக யாழ் குடா வெளியேற்றத்தை மனிதஉரிமை மீறல் எனக் கதறியழும் தமிழ் அரசியல்வாதிகள் யாரையும் வீரமுனைப்படுகொலை நினைவிடத்திலே காணமுடியவில்லை. தாமே சுத்தத் தமிழ்த் தேசியக் காப்பர்களென மார்தட்டும் கஜன்,விக்கியையா போன்றவர்களையும் காணவில்லையே.

சோனகர்கள் முதலில் இவற்றிற்குப்பொறுப்ப கூற நிர்பந்திக்கப்பட வேண்டும். நீங்கள் தேடிய வீரமுனை இனப்படுகொலை என்று ஒரு தலைப்பில் விவரங்களை ஆவணமாக்கி வெளியிட வேண்டும். அப்போதாவது இந்தச் சோனகருக்குத் தாம் செய்தது புரிகிறதா எனப்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்+
59 minutes ago, nochchi said:

வீரமுனையிலே இனப்படுகொலைக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அகவணக்கம்.

இலங்கைச் சோனகர்களது வாக்குகளுக்காக யாழ் குடா வெளியேற்றத்தை மனிதஉரிமை மீறல் எனக் கதறியழும் தமிழ் அரசியல்வாதிகள் யாரையும் வீரமுனைப்படுகொலை நினைவிடத்திலே காணமுடியவில்லை. தாமே சுத்தத் தமிழ்த் தேசியக் காப்பர்களென மார்தட்டும் கஜன், விக்கியையா போன்றவர்களையும் காணவில்லையே.

சோனகர்கள் முதலில் இவற்றிற்குப்பொறுப்ப கூற நிர்பந்திக்கப்பட வேண்டும். நீங்கள் தேடிய வீரமுனை இனப்படுகொலை என்று ஒரு தலைப்பில் விவரங்களை ஆவணமாக்கி வெளியிட வேண்டும். அப்போதாவது இந்தச் சோனகருக்குத் தாம் செய்தது புரிகிறதா எனப்பார்க்கலாம்.

கஜன், விக்கி போன்றோரிடமும் பிரதேசவாதம் இருக்கலாம். எனவே செல்லாமல் இருந்திருக்கலாம். 

இன்றுவரை இவற்றிற்கு யாரும் சோனகர்களை நிர்ப்பந்தித்ததில்லை. இன்றுள்ள அரசியல்வியாதிகள் எதுவும் எதிர்காலத்திலும் செய்யப்போவதில்லை என்றே நினைக்கிறேன். செய்வதற்கு வக்குமில்லை. அப்படி இருந்திருந்தால் ஏற்கனவே செய்திருப்பாங்கள்!

ஆவணப்படுத்த கண்டிப்பாக முயற்சிக்கிறேன். எல்லாம் PDF இலேயே உள்ளது. அதை OCR மூலம் எழுத்துருவிற்கு மாற்றத்தான் நேரமெடுக்கும். (ஆங்கிலத்திற்கு இலகு, ஆனால் தமிழிற்கு கடினம்)

 

 

------------------------------------------------------

யாழ்களத்திலையும் ஒராள் இருக்கிறார். அவர் சோனகர்🤡 என்றே எண்ணுகிறேன். கொஞ்ச மாதங்களுக்கு முன்னாலை அல்லா பற்றி பத்தியெரிஞ்ச திரியிலை வந்து குரானை நியாயப்படுத்தி வேண்டிக் கட்டிக்கொண்டு போனவர். 🤪

Edited by நன்னிச் சோழன்
added a sentence

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

அப்போதாவது இந்தச் சோனகருக்குத் தாம் செய்தது புரிகிறதா எனப்பார்க்கலாம்.

தாயின் வயிற்றில் இருந்த பிள்ளையை வயிற்றை கிழித்து எடுத்து கொன்றார்கள் எனும் புனைகதையோடு உலா வரும் சிவப்புதொப்பிக்கு பு ரியும்.  சிங்களத்துக்கும் நமக்கும் 98% உடன்பாடுள்ளது என எதைக்குறித்து சொன்னார்? மொழியால் ஒன்றுபட்ட இனத்துக்குள்  98%முரண்பாடுள்ளதாம், அந்த முரண்பாடு என்ன என்றும் விளக்கினால் திருத்திக்கொள்வோமில்ல அது உண்மையாக இ இருந்தால்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

------------------------------------------------------

யாழ்களத்திலையும் ஒராள் இருக்கிறார். அவர் சோனகர்🤡 என்றே எண்ணுகிறேன். கொஞ்ச மாதங்களுக்கு முன்னாலை அல்லா பற்றி பத்தியெரிஞ்ச திரியிலை வந்து குரானை நியாயப்படுத்தி வேண்டிக் கட்டிக்கொண்டு போனவர். 🤪

யாரப்பா  அந்த  உளவாளி ? அதுதான் நாங்கள் இந்த முணக்களைப்பற்றி எழுதினால் நிர்வாகம் அகற்றி விடுகிறதோ தெரியவில்லை. அவர்களுடைய இஸ்லாமிய இணையதளங்களில் நம்மைப்பற்றி எல்லாம் தாராளமாக எழுதுவார்கள். 

4 hours ago, நன்னிச் சோழன் said:

அவங்கட ஆசீர்வாத்தோடதான் நடந்தது.

எல்லாருக்கும் இது தெரியும். ஆனால் தமிழர் அழிய வேணும் என்டதால சோனக தலைவர்கள் அமைதியா இருந்தவங்கள்.

எல்லா அநியாயமும் செய்தவர்கள் எதோ பள்ளிவாசலில் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் எண்டு கடையடைப்பும் செய்வார்கள். கிழக்கிலே சிங்களவர்கள் செய்த அநியாயத்தை விட இவர்கள் செய்த அநியாயம் மிக பெரியது. 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, Cruso said:

யாரப்பா  அந்த  உளவாளி ? அதுதான் நாங்கள் இந்த முணக்களைப்பற்றி எழுதினால் நிர்வாகம் அகற்றி விடுகிறதோ தெரியவில்லை. அவர்களுடைய இஸ்லாமிய இணையதளங்களில் நம்மைப்பற்றி எல்லாம் தாராளமாக எழுதுவார்கள். 

எல்லா அநியாயமும் செய்தவர்கள் எதோ பள்ளிவாசலில் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் எண்டு கடையடைப்பும் செய்வார்கள். கிழக்கிலே சிங்களவர்கள் செய்த அநியாயத்தை விட இவர்கள் செய்த அநியாயம் மிக பெரியது. 

சீசீ.. அப்பிடியெல்லாம் சொல்லாதீங்கோ... சோனகரைப் பற்றி மட்டுமன்று, எதைப் பற்றியும் இல்லாதது பொல்லாதது சொன்ன கருத்தை நிர்வாகம் நீக்கும். ஏனெனில் அது கள விதி. மற்றது களவிதிகளின் படி களஉறவுகளைப் பற்றி தனிமனிதத் தாக்குதல் மற்றும் பொல்லாப்புப் பேசுடல் கூடாது என்பதாலும் நிர்வாகம் கருத்துக்களை நீக்கும்.

அவர் முஸ்லீமா இல்லையா என்பது எனக்கு உறுதிபடத் தெரியவில்லை. அதனாலை விடுங்கோ.

ஓமோம்... தாங்கள் செய்தவற்றை (தமிழர் மீதான படுகொலைகள், மண்பறிப்பு, காதல் மூலம் மற்றும் பிற வழிகளில் மதமாற்றம், மற்றும் இன்னபிற) மறைத்து மற்றவங்கள் அதைச் செஞ்சுபோட்டாங்கள் இதைச் செஞ்சுபோட்டாங்கள் என்டு குழறவேண்டியது... 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

முஸ்லீம் தலைவர்களுக்கு இந்த படுகோலைகளைப் பற்றி எதுவுமே தெரியாது.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

ஆனால் காத்தான் குடி படுகொலையை மட்டும் தூக்கி க்கொண்டு வருவாங்கள் 

பக்கத்து ஊரான எங்கள் ஊரில் அகதிகளாக தஞ்சமடைந்த உறவுகள்  அதிகம் . வீரமுனை வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, திராய்க்கேணி மல்வத்தை மல்லிகைத்தீவு  சம்மாந்துறை அட்டப்பள்ளம், நிந்தவூர், என ப்ல கிராமங்களில் இருந்து வந்து கோயில்களிலும் , மைதானங்களீலும் குடிசைகள் கொட்டில்கள் அமைத்து வாழ்ந்துவந்தார்கள்  அப்ப வயது எனக்கு 6  அவை யாவும் நினைவில் 

  • நியானி changed the title to வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் காத்தான் குடி படுகொலையை மட்டும் தூக்கி க்கொண்டு வருவாங்கள் 

பக்கத்து ஊரான எங்கள் ஊரில் அகதிகளாக தஞ்சமடைந்த உறவுகள்  அதிகம் . வீரமுனை வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, திராய்க்கேணி மல்வத்தை மல்லிகைத்தீவு  சம்மாந்துறை அட்டப்பள்ளம், நிந்தவூர், என ப்ல கிராமங்களில் இருந்து வந்து கோயில்களிலும் , மைதானங்களீலும் குடிசைகள் கொட்டில்கள் அமைத்து வாழ்ந்துவந்தார்கள்  அப்ப வயது எனக்கு 6  அவை யாவும் நினைவில் 

என்ன செய்யலாம் ராஜா?

இப்போதய நிலையில் வெறும் அஞ்சலி மட்டுமே செலுத்திவிட்டு போக வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன செய்யலாம் ராஜா?

இப்போதய நிலையில் வெறும் அஞ்சலி மட்டுமே செலுத்திவிட்டு போக வேண்டியது தான்.

ஆனால் அவர்களோ முகப்புத்தகத்தில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட எமது ஊர் பாதுகாப்பு படையினர் என வெள்ளையடித்து சொல்கின்றனர் அந்த ஊர்காவல் படையினரை ஏறாவூர், சம்மாந்துறை,நிந்தவூர், கல்முனை,சாய்ந்தமருது மருதமுனை 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.
 

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

13 AUG, 2025 | 11:27 AM

image

வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12)  மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தில்   35 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய வீரமுனைப் படுகொலை நினைவேந்தலானது வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார்  ஆலயத்திற்கு அருகில்  அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மங்கள விளக்கேற்றல் ஏற்றி வைக்கப்பட்டு 2 நிமிட அஞ்சலி  செலுத்தப்பட்டது.

பின்னர்  படுகொலை செய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

வீரமுனைப் படுகொலை 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  12ம் திகதி  கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

குறித்த படுகொலை செய்யப்பட்ட நாளின் 35 ஆம் ஆண்டு  நினைவு நாள் இன்றாகும். சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990   தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12 ம் நாளன்று   முஸ்லிம் ஊர்காவல்படையினர் இராணுவத்தின் துணையுடன் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக பதிவுகள் பல உள்ளன.  

இதன்போது   400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள்  குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை. இவ்வாறு படுகொலை நடந்து அதில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதும் அவர்களும் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு வீரமுனை மக்கள் முற்றாக அங்கிருந்து துரத்தப்பட்டு அக்கிராமத்தினை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தன் கருணாகரத்தின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டு வீரமுனை மக்கள் மீள குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர்  கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர்  இளையதம்பி சிறிநாத் ,ஞானமுத்து சிறிநேசன் ,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) காரைதீவு  பிரதேச சபை  தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்,   இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயலாளரும் கல்முனை தொகுதி இணைப்பாளருமான அருள். நிதான்சன், சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு செயலாளர் காந்தன் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  உட்பட ஆலய நிர்வாக குழுவினர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்  பொதுமக்கள் படுகொலையானவர்களின் உறவுகள் என பலர் கலந்துகொண்டனர்.

pl__28_.jpeg

pl__30_.jpeg

pl__32___1_.jpeg

pl__31_.jpeg

pl__33_.jpeg

pl__44_.jpeg

pl__40_.jpeg

https://www.virakesari.lk/article/222465

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.