Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையிலுள்ள பிள்ளைகள் எதிர்காலத்தில் இந்தி மற்றும் சீன மொழிகளை கற்க வேண்டும் ; ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

17 AUG, 2023 | 09:43 AM
image
 

மாறிவரும் உலகிற்கு ஏற்ப எதிர்காலத்தில் இலங்கையில் பிள்ளைகள் இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (16) நுகேகொடையில் உள்ள அனுல வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையின் கல்வியானது எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பாரியளவில் மாற்றமடைய வேண்டும். நாம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு நமது பிள்ளைகள் ஆங்கிலத்துடன் கூடுதலாக சீன மற்றும் இந்தியையும் கற்க வேண்டும்.

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஜெனரேஷன் ஆல்பாவிற்கு (Gen Alpha) பொருந்தும் வகையில் புதிய பாடங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் செல்போன்கள் மற்றும் போட்காஸ்ட்கள் மூலம் தங்கள் கல்வியைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மரபணு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கியல் (ரோபோடிக்ஸ்) ஆகியவற்றை கற்பிக்க வேண்டும்

புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒன்றரை டிரில்லியன் டொலர்களை உலகளாவிய வருவாயைக் கொண்டுவரும். அதில் ஒரு அங்கமாக இருப்பதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை,'' என்றார்.

காலநிலை மாற்றம் குறித்துக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் 20 வருடங்களுக்குள் இலங்கை நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் எனத் தெரிவித்தார். " ஐ.நா தலைவர் கூறியது போல நாங்கள் காலநிலை மாற்றத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் காலநிலை மாற்றத்தை கையாளும் போது உலகத்துடன் இணைந்து செல்ல வேண்டும், "  எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/162537

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மாறிவரும் உலகிற்கு ஏற்ப எதிர்காலத்தில் இலங்கையில் பிள்ளைகள் இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சரிதானே இனி அவங்க நாடு தானே வடகிழக்கு இந்தியா ,  மற்ற பகுதி சைனா  பிறகென்ன 

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல, சிங்களவனுக்கு தமிழும், தமிழனுக்கு சிங்களமும் படிப்பியுங்கோ பார்ப்போம்.... போட்டார்... சீனத்துக்கும், ஹிந்திக்கும்.... க்..கும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்கள் எனது தாய் மொழியை கற்கின்றார்களோ படிக்கின்றார்களோ என கவனிப்பது எனது நோக்கமல்ல. எனக்கு பல மொழிகள் தெரிந்திருந்தால் அது  பல வழிகளில் பிரயோசனப்படும்.
எனக்கு சிங்களம் தெரிந்திருந்தல் சிங்கள இணையங்களில் வரும் செய்திகளை படித்து அவர்கள் மனோநிலையையும் நேரடியாக அறியக்கூடியதாக இருந்திருக்கும்  என ஆதங்கப்படுவேன்.

மொழிகள் வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. இனப்பற்றுக்கும் பிற மொழி படிப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

இலங்கைக் குழந்தைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஜனாதிபதி கூறிய கதையை பத்திரிகைகளில் பார்க்கும்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்கப் பார்க்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்

முன்பெல்லாம் வெவ்வேறு முதலீட்டாளர்கள் எங்களிடம் வந்து மூதலீடு குறித்து பேசி செயற்படுவர், இப்போது அப்படி இல்லை, இந்தியாவுக்குச் சென்று விற்றுவிட்டதை நாம் அறியோம். 

அதானியிடம் என்ன பேசினார்கள் என்றும் இந்தியா சென்ற போது என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.அதானிக்கு என்ன விற்றார்கள் என்றும் தெரியவில்லை. இவற்றுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சி கப்பல் விவகாரத்தால் இந்தியா மீண்டும் குழப்பமடைந்துள்ளது.

இன்னொரு பக்கம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னொரு பக்கம் இலங்கைப் பிள்ளைகள் சீன ஹிந்தி என்று கற்க வேண்டும் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முதல் பாடசாலை கல்வியை கற்பதற்குரிய ஏற்பாடுகளை முறையாக வழங்க வேண்டும்.

பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் எகிறியிருப்பதாலும், தரம் குறைந்த மருந்தாலும், மருந்தின் விலையும் மிக அதிகமாக உயர்ந்ததாலும் மருத்துவமனைகளுக்குச் சென்று சாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் பெற்றோர்கள் தவிக்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது இன்று நாட்டின் பிள்ளைகள் சீன ஹிந்தி மொழிகளை கற்கச் சொல்கிறார்கள்.எனக்குத் தெரியாது.இதற்கு என்ன சொல்வது?

13 ஆவது திருத்தம் குறித்து பொய்க் கதையை கட்டமைத்ததால் ஜனாதிபதிக்கு அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தும் இல்லாமல் போகும் நிலையே காணப்படுகிறது. சாகர காரியவசத்தின் பேச்சுக்கள் அதை உணர்த்துகின்றன.

தமிழ் வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் என்னிடம் இருப்பதாகக் காட்டிக் கொண்டு 13 ஆவது திருத்தம் குறித்து பேசி வேட்பாளர் பதவியை கோர முயல்வதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல் கதை பொய்யானது.அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஏனென்றால் ஜனாதிபதி சொன்னபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான பதிலைப் வழங்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன் மாகாண சபை நடத்துங்கள் என்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியது. இப்போது அஸ்வெசும தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது” என்றார்.

Tamilmirror Online || இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

மற்றவர்கள் எனது தாய் மொழியை கற்கின்றார்களோ படிக்கின்றார்களோ என கவனிப்பது எனது நோக்கமல்ல. எனக்கு பல மொழிகள் தெரிந்திருந்தால் அது  பல வழிகளில் பிரயோசனப்படும்.
எனக்கு சிங்களம் தெரிந்திருந்தல் சிங்கள இணையங்களில் வரும் செய்திகளை படித்து அவர்கள் மனோநிலையையும் நேரடியாக அறியக்கூடியதாக இருந்திருக்கும்  என ஆதங்கப்படுவேன்.

மொழிகள் வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. இனப்பற்றுக்கும் பிற மொழி படிப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பது என் கருத்து.

 

11 hours ago, பிழம்பு said:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

இலங்கைக் குழந்தைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஜனாதிபதி கூறிய கதையை பத்திரிகைகளில் பார்க்கும்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்கப் பார்க்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்

முன்பெல்லாம் வெவ்வேறு முதலீட்டாளர்கள் எங்களிடம் வந்து மூதலீடு குறித்து பேசி செயற்படுவர், இப்போது அப்படி இல்லை, இந்தியாவுக்குச் சென்று விற்றுவிட்டதை நாம் அறியோம். 

அதானியிடம் என்ன பேசினார்கள் என்றும் இந்தியா சென்ற போது என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.அதானிக்கு என்ன விற்றார்கள் என்றும் தெரியவில்லை. இவற்றுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சி கப்பல் விவகாரத்தால் இந்தியா மீண்டும் குழப்பமடைந்துள்ளது.

இன்னொரு பக்கம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னொரு பக்கம் இலங்கைப் பிள்ளைகள் சீன ஹிந்தி என்று கற்க வேண்டும் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முதல் பாடசாலை கல்வியை கற்பதற்குரிய ஏற்பாடுகளை முறையாக வழங்க வேண்டும்.

பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் எகிறியிருப்பதாலும், தரம் குறைந்த மருந்தாலும், மருந்தின் விலையும் மிக அதிகமாக உயர்ந்ததாலும் மருத்துவமனைகளுக்குச் சென்று சாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் பெற்றோர்கள் தவிக்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது இன்று நாட்டின் பிள்ளைகள் சீன ஹிந்தி மொழிகளை கற்கச் சொல்கிறார்கள்.எனக்குத் தெரியாது.இதற்கு என்ன சொல்வது?

13 ஆவது திருத்தம் குறித்து பொய்க் கதையை கட்டமைத்ததால் ஜனாதிபதிக்கு அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தும் இல்லாமல் போகும் நிலையே காணப்படுகிறது. சாகர காரியவசத்தின் பேச்சுக்கள் அதை உணர்த்துகின்றன.

தமிழ் வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் என்னிடம் இருப்பதாகக் காட்டிக் கொண்டு 13 ஆவது திருத்தம் குறித்து பேசி வேட்பாளர் பதவியை கோர முயல்வதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல் கதை பொய்யானது.அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஏனென்றால் ஜனாதிபதி சொன்னபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான பதிலைப் வழங்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன் மாகாண சபை நடத்துங்கள் என்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியது. இப்போது அஸ்வெசும தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது” என்றார்.

Tamilmirror Online || இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

இலங்கையில் சீன மொழியும் , இந்தி மொழியும் கட்பிக்கப்படுகின்றது. விரும்பியவர்கள்  கற்கலாம். இந்தியாவும், சீனாவும் இனி வரும் காலங்களில் வளர்ச்சியடைந்த முன்னேறிய நாடுகளாக இருப்பதால் ஜனாதிபதி அப்படி கூறி இருக்கிறார். இலங்கையில் இனி சீன இந்திய நிறுவனங்களே முதலீடு செய்யபோகின்றன என்பது வெள்ளிடை மலை. எனவே இம்மொழியை கேட்பது வேலைவாய்ய்புகளுக்கு வசதியாக இருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Cruso said:

 

இலங்கையில் சீன மொழியும் , இந்தி மொழியும் கட்பிக்கப்படுகின்றது. விரும்பியவர்கள்  கற்கலாம். இந்தியாவும், சீனாவும் இனி வரும் காலங்களில் வளர்ச்சியடைந்த முன்னேறிய நாடுகளாக இருப்பதால் ஜனாதிபதி அப்படி கூறி இருக்கிறார். இலங்கையில் இனி சீன இந்திய நிறுவனங்களே முதலீடு செய்யபோகின்றன என்பது வெள்ளிடை மலை. எனவே இம்மொழியை கேட்பது வேலைவாய்ய்புகளுக்கு வசதியாக இருக்கும். 

 வியாபாரம்,தொழில் நிமித்தம் எந்தமொழியையும் கற்கலாம் என்பது என் கருத்து. 
இருந்தாலும்  ஹிந்தி கற்று எதை சாதிக்கப்போகின்றோம். இந்தியர்கள் ஆங்கிலத்தில் தானே அதிகமாக உரையாடுகின்றார்கள்.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழருக்குரிய நாடு இல்லை என்பவர்கள், சீனனோடும் இந்தியனோடும் பகிர்ந்து வாழட்டும். அப்போ புரியும் தாம் விட்ட தவறு. அதன்பிற்பாடு திருத்திக்கொள்ள முடியாது, போராடவும் வலு இல்லை, விதைத்ததை மௌனமாய் அறுக்கத்தான் முடியும். இப்போ கூவுபவர்கள் குனிந்து வணங்குவார்கள். நான் பிறந்த நாடு எனக்கில்லை எனும்போது எவன் ஆண்டால் எனக்கென்ன? இல்லை எண்டவன் எப்படி ஆளப்படுகிறான் என்பதையாவது பாத்து ரசிக்க ஆயுள் வேண்டும் எனக்கு.

On 17/8/2023 at 15:42, ஏராளன் said:

இலங்கையில் பிள்ளைகள் இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும்

இலங்கைப்பிள்ளைகள் தங்கள் தாய் மொழியோடு பலமொழிகளையும் கற்பது நல்லது என்று கூறினால் வரவேற்கலாம், பொது மொழி ஆங்கிலம் இருக்கிறது, குறிப்பிட்டு சீன, இந்தி மொழி என்று கூறுவதுதான் உதைக்கிறது. இந்தியாவிலேயே எல்லா மாநிலங்களிலும் இந்தி கற்பிப்பதுமில்லை கற்பதுமில்லை. சீனாவிலேயே பல மொழிகள் வழக்கிலுள்ளன. இவர் எதை குறிப்பிடுகிறார்?  

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளிலும் மண்டரின் கற்க வேண்டி வரும் என மக்கள் நகைச்சுவையாகவும், தீவிரமாகவும் பேசுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, nunavilan said:

மேற்கு நாடுகளிலும் மண்டரின் கற்க வேண்டி வரும் என மக்கள் நகைச்சுவையாகவும், தீவிரமாகவும் பேசுகிறார்கள்.

ஜேர்மனியில் பத்து வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டு விட்டது.
ஜேர்மனி சீனாவுடன் மிக நெருக்கமான நட்பு நாடு. முன்னர் ரஷ்யாவுடன் இருந்ததை போல்.....

34 minutes ago, nunavilan said:

மேற்கு நாடுகளிலும் மண்டரின் கற்க வேண்டி வரும் என மக்கள் நகைச்சுவையாகவும், தீவிரமாகவும் பேசுகிறார்கள்.

நான் என் மகளை படிக்கச் சொல்லி உள்ளேன். சீன இலக்கியத்தையும் அறியட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

நான் என் மகளை படிக்கச் சொல்லி உள்ளேன். சீன இலக்கியத்தையும் அறியட்டும்.

முதலில் அவர்கள் தங்கள் இலக்கியங்களை அறிய ஊக்குவியுங்கள், பிறகு தன்னாலேயே அவர்ளுக்கு ஆர்வம் பிறக்கும் மற்றவைகளை அறிய.  இப்போ நீங்கள் சீன மொழியை ஊக்குவித்தால் அவர்கள் தாங்கள் யார் என்பதை அறிய மறந்துவிடுவார்கள், ஒருநாள் உங்களை மனம் நோவார்கள் தங்களை அடையாளத்தை தொலைத்துவிட்டு..

சிங்களம் எங்கடை முட்டாளுகளை பயன்படுத்தி, எங்களதை பறிக்க, அதை இந்தியா, சீன நோகாமல் கவரும். அதற்காகவே இந்த நாட்டில் முரண்பாடுகளை தீரவிடாமல் ஊக்குவிக்கும், அது தெரியாத முட்டாளுகள் கூவி கூவி அழைக்குதுகள் சண்டைக்கு. முட்டி மோதி அழிவது தமிழரென்றாலும் எங்களிடமிருந்து  பறித்ததை இழப்பது சிங்களமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.