Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துவாரகா - காசி ஆனந்தன், You too?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போன்று, காசி ஆனந்தனும் கூவுகின்றார் கொடுத்த கூலிக்கு?

காசி கூவுவதன் மூலம், இந்த சதித்திட்டங்களின் பின்னால் இந்திய உளவு அமைப்புகள் உள்ளன என்பது தெளிவாகின்றது.

Edited by வைரவன்

  • வைரவன் changed the title to துவாரகா - காசி ஆனந்தன், You too?
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடுதலைப் போராட்டம் முழுவதும் உணர்ச்சிக் கவிஞராக வலம் வந்து.. பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்த.. காசிஆனந்தன் ஐயாவுக்கும்.. விரைவில்.. பிரபாகரனை உயிர்ப்பிக்கிறார் துவாரகாவை துயில் எழுப்புகிறார்.. என்று..  துரோகிப்பட்டம் சூட்டப்படும் போல இருக்கே. 

யாழ் களம் எங்கே நோக்கிப் போகிறது.. 'சரிநிகர்' காலம் தான் நினைவுக்கு வந்து போகிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

ஒரு விடுதலைப் போராட்டம் முழுவதும் உணர்ச்சிக் கவிஞராக வலம் வந்து.. பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்த.. காசிஆனந்தன் ஐயாவுக்கும்.. விரைவில்.. பிரபாகரனை உயிர்ப்பிக்கிறார் துவாரகாவை துயில் எழுப்புகிறார்.. என்று..  துரோகிப்பட்டம் சூட்டப்படும் போல இருக்கே. 

யாழ் களம் எங்கே நோக்கிப் போகிறது.. 'சரிநிகர்' காலம் தான் நினைவுக்கு வந்து போகிறது. 

தலைவர் மகள் உயிருடன் இருக்கின்றாரா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

தலைவர் மகள் உயிருடன் இருக்கின்றாரா?

இருக்க வேண்டும்.. என்பது தான் விருப்பம். ஏனெனில்.. ஒரு நன்றிகெட்ட இனத்தின் விடுதலைக்காக போராடி ஏன் அவர்கள் சாகனும்..??!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

ஒரு விடுதலைப் போராட்டம் முழுவதும் உணர்ச்சிக் கவிஞராக வலம் வந்து.. பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்த.. காசிஆனந்தன் ஐயாவுக்கும்.. விரைவில்.. பிரபாகரனை உயிர்ப்பிக்கிறார் துவாரகாவை துயில் எழுப்புகிறார்.. என்று..  துரோகிப்பட்டம் சூட்டப்படும் போல இருக்கே. 

காசி ஆனந்தன் ஒரு சில ஆண்டுகளைத் தவிர்த்து இந்தியாவில்தான் குடியிருக்கின்றார். 91 இல் ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் ராஜீவைச் சந்தித்திருந்தார். அதுதான் அவரது இறுதிப் பங்களிப்பு!

தமிழ் மக்களை, குறிப்பாக முள்ளிவாய்க்காலில் இருந்து உயிர் தப்பி இன்னும் வாழ்பவர்களை, வெறும் அடிமுட்டாள்கள் என்றுதான் இவரது அறிக்கை சொல்கின்றது.

தலைவரையும், அவர் குடும்பத்தினரையும் இதுக்கு மேல் காசி ஆனந்தனால் கொச்சைப்படுத்தவும் முடியக்கூடும்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள, இந்திய புலனாய்வாளருக்கு தமிழரால் ஏதோ ஒன்று அவசரமாக ஆகவேண்டியதொன்று இருக்கிறது போல் தெரிகிறது, அதற்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் முடுக்கி விட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

காசி ஆனந்தன் ஒரு சில ஆண்டுகளைத் தவிர்த்து இந்தியாவில்தான் குடியிருக்கின்றார். 91 இல் ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் ராஜீவைச் சந்தித்திருந்தார். அதுதான் அவரது இறுதிப் பங்களிப்பு!

சரி.. உங்கள் வாதப்படியே.. 91 க்குப் பின் அவர் ஒன்றுமே செய்யவில்லை.. என்று வைச்சுக் கொண்டாலும்.. 2009 வரை புலிகள் அவரை நிந்திக்கவில்லையே..???! வெறுத்து ஒதுக்கவில்லையே. துரோகின்னு சொல்லேல்லையே.

காசி ஆனந்தன்.. ஹிந்தியாவில் வாழ்ந்தாலும் இறுதிவரை யாருக்கும் விலைபோகாமல்.. கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த ஒருவர். சந்திரகாந்தன் போன்றவர்கள் போலல்ல. தலைவர் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அவர் தலைவர் குறித்து தானறிந்ததை சொல்வதற்கு உரிமை இருக்குது. அதனை நம்புவதும் விடுவதும் காசி ஆனந்தனை அவதானிப்பவர்களின் பொறுப்பு. 

அதற்காக அவரை திட்டித் தீர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.

1 hour ago, கிருபன் said:

தமிழ் மக்களை, குறிப்பாக முள்ளிவாய்க்காலில் இருந்து உயிர் தப்பி இன்னும் வாழ்பவர்களை, வெறும் அடிமுட்டாள்கள் என்றுதான் இவரது அறிக்கை சொல்கின்றது.

இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவதென்ன.. முள்ளிவாய்க்காலில் இறுதி வரை இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதுவா..?! அப்படி என்றால்.. அது முற்றிலும் உண்மையல்ல. ஏனெனில்.. நமக்கு தெரிந்த உறவுகளும் இறுதிவரை இருந்திட்டு வந்திருக்கினம்.. இப்பவும் அவர்களின் சொந்தங்களை தேடிக் கொண்டிருக்கினம். அவைக்குக் கூட.. யார் எங்கே போனதென்பதே தெரியாது..!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4675.jpg

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

காசி ஆனந்தன் ஒரு சில ஆண்டுகளைத் தவிர்த்து இந்தியாவில்தான் குடியிருக்கின்றார். 91 இல் ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் ராஜீவைச் சந்தித்திருந்தார். அதுதான் அவரது இறுதிப் பங்களிப்பு!

தமிழ் மக்களை, குறிப்பாக முள்ளிவாய்க்காலில் இருந்து உயிர் தப்பி இன்னும் வாழ்பவர்களை, வெறும் அடிமுட்டாள்கள் என்றுதான் இவரது அறிக்கை சொல்கின்றது.

தலைவரையும், அவர் குடும்பத்தினரையும் இதுக்கு மேல் காசி ஆனந்தனால் கொச்சைப்படுத்தவும் முடியக்கூடும்!

இது தவறான செய்தி.

1991 க்கு பின் காசி ஐயா, இலங்கை அகதிகள் கோட்டாவில் இரெண்டு சீட் வாங்கி - தனது இரு மகள்களையும் இந்தியாவில் இலவசமாக டாக்டருக்கு படிப்பித்துள்ளார்.

பின்னர் அவர்களை இலண்டன் அனுப்பி - plab எக்ஸாம் பாஸ் பண்ண வைத்துள்ளார்.

தொடர்ச்சியாக அவர்களை இலண்டனில் டாக்டர் ஆக்கியுள்ளார்.

அவர்களுக்கு கல்யாணம் கட்டி கொடுத்து நல்வாழ்வில் விட்டுள்ளார்.

இத்தனை இடையறா இனப்பணிக்கு மத்தியிலும்…..

பத்து தடவை பாடை வராது, பாயும் புலியே தமிழா, சிரித்துகொண்டே செருக்களம் வாடா என ஊரான் வீட்டு பிள்ளைகளை உசுப்பும் ஏத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இது தவறான செய்தி.

1991 க்கு பின் காசி ஐயா, இலங்கை அகதிகள் கோட்டாவில் இரெண்டு சீட் வாங்கி - தனது இரு மகள்களையும் இந்தியாவில் இலவசமாக டாக்டருக்கு படிப்பித்துள்ளார்.

பின்னர் அவர்களை இலண்டன் அனுப்பி - plab எக்ஸாம் பாஸ் பண்ண வைத்துள்ளார்.

தொடர்ச்சியாக அவர்களை இலண்டனில் டாக்டர் ஆக்கியுள்ளார்.

அவர்களுக்கு கல்யாணம் கட்டி கொடுத்து நல்வாழ்வில் விட்டுள்ளார்.

இத்தனை இடையறா இனப்பணிக்கு மத்தியிலும்…..

பத்து தடவை பாடை வராது, பாயும் புலியே தமிழா, சிரித்துகொண்டே செருக்களம் வாடா என ஊரான் வீட்டு பிள்ளைகளை உசுப்பும் ஏத்தியுள்ளார்.

இரண்டு மகள்களில் ஒருத்தியையாவது இயக்கத்துக்கு அனுப்பியிருக்கவேண்டுமென சொல்லுகிறீர்களா? அவர் எழுதிய வரிகளை அவரது மகள்கள் படிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா?🙄

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

இரண்டு மகள்களில் ஒருத்தியையாவது இயக்கத்துக்கு அனுப்பியிருக்கவேண்டுமென சொல்லுகிறீர்களா? அவர் எழுதிய வரிகளை அவரது மகள்கள் படிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா?🙄

இருக்கலாம். இனம் உய்ய வேண்டும் என்பதற்க்காய் மாங்கு மாங்கு என மருத்துவ புத்தகங்களை வாசித்ததால்…அந்த தன்னலமற்ற தியாகத்தால்….இப்படியான உசுப்பேத்தல்களை வாசிக்க அவர்களுக்கு நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல நெடுக்ஸ் இன்னுமா இவர்களை எல்லாம் நம்பிட்டு இருக்கிறீர்கள் 🤫

  • கருத்துக்கள உறவுகள்

போராடப் போனவன் எல்லாம் குடும்பம் குடும்பமாய்.. சந்ததி சந்ததியாய் போராடனும் என்ற தத்துவார்த்தப்பித்தர்களின் கருத்துப் படி பார்த்தால்.. தமிழர்களில் மிச்சமிருக்க ஆக்களில்லை. 🙃

2 hours ago, ரதி said:

முடியல்ல நெடுக்ஸ் இன்னுமா இவர்களை எல்லாம் நம்பிட்டு இருக்கிறீர்கள் 🤫

அவர்கள் கருத்துச் சொல்வதை தடுக்க முடியாது. அது அவர்களின் சுதந்திரம். அதை ஏற்பதும் விடுவதும் நம் சுதந்திரம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

1991 க்கு பின் காசி ஐயா, இலங்கை அகதிகள் கோட்டாவில் இரெண்டு சீட் வாங்கி - தனது இரு மகள்களையும் இந்தியாவில் இலவசமாக டாக்டருக்கு படிப்பித்துள்ளார்.

பின்னர் அவர்களை இலண்டன் அனுப்பி - plab எக்ஸாம் பாஸ் பண்ண வைத்துள்ளார்.

தொடர்ச்சியாக அவர்களை இலண்டனில் டாக்டர் ஆக்கியுள்ளார்.

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்  என் கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து போனாலும் என்று கவிதை எழுதி உசுப்பேத்திய கவிஞர் தானே

  • கருத்துக்கள உறவுகள்

You too Brutus..?

(A Latin sentence meaning “Even you, Brutus?” from the play Julius Caesar, by William Shakespeare. Caesar utters these words as he is being stabbed to death, having recognized his friend Brutus among the assassins)

நீயுமா..? புரூட்டஸ்..?

ஒரு லத்தீன் வாக்கியம் "நீயும் கூடவா, புருடஸ்?" வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்திலிருந்து. கொலையாளிகளில் தனது நண்பன் புருடஸை அடையாளம் கண்டு, குத்திக் கொல்லப்படும்போது சீசர் இந்த வார்த்தைகளை உச்சரிக்கிறார்...

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

எவனாவது விடு பேயன் குடும்பம், குடும்பமாய் போய் போராடுவான்…

நாங்கள் அப்படியா? 

நாங்களும் போய் இருந்தால் தமிழர் ஒருத்தரும் மிஞ்சி இருக்க மாட்டம்…

இந்த நல் எண்ணத்தில்தான் …ஒறுத்து கொண்டு…நாங்கள் போராடாமல் வெளிநாட்டுக்கு வந்து…உழைத்து…படித்து…கார், வீடு வாங்கி…

இனத்துக்காக தியாகம் செய்தனாங்கள்.

எங்களை போல இன்னொரு தியாகிதான் காசி ஐயா.

பிகு

கேணல் சங்கர், தலைவர், இதர ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரரை உடைய குடும்பங்கள் மன்னிக்கவும்.

 

Just now, பாலபத்ர ஓணாண்டி said:

You too Brutus..?

(A Latin sentence meaning “Even you, Brutus?” from the play Julius Caesar, by William Shakespeare. Caesar utters these words as he is being stabbed to death, having recognized his friend Brutus among the assassins)

நீயுமா..? புரூட்டஸ்..?

ஒரு லத்தீன் வாக்கியம் "நீயும் கூட, புருடஸ்?" வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்திலிருந்து. கொலையாளிகளில் தனது நண்பன் புருடஸை அடையாளம் கண்டு, குத்திக் கொல்லப்படும்போது சீசர் இந்த வார்த்தைகளை உச்சரிக்கிறார்...

அட அப்படியா?

நான் அந்த யூடியூப்ல உருட்டிகிட்டு கிடக்கிற ஆளின் பெயர் எண்டெல்லோ நினைச்சுப்போட்டன்🤣

பிகு

அசல் வாசகம் Et tu, Brute?

5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்  என் கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து போனாலும் 

என் குடும்பத்தை வாழ வைப்பேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

வனாவது விடு பேயன் குடும்பம், குடும்பமாய் போய் போராடுவான்…

நாங்கள் அப்படியா? 

நாங்களும் போய் இருந்தால் தமிழர் ஒருத்தரும் மிஞ்சி இருக்க மாட்டம்…

இந்த நல் எண்ணத்தில்தான் …ஒறுத்து கொண்டு…நாங்கள் போராடாமல் வெளிநாட்டுக்கு வந்து…உழைத்து…படித்து…கார், வீடு வாங்கி…

இனத்துக்காக தியாகம் செய்தனாங்கள்.

எங்களை போல இன்னொரு தியாகிதான் காசி ஐயா.

உழைத்து படித்து  கார் வாங்கி வீடு வாங்கி  இனத்துக்கான  அர்ப்பணிப்பு வாழ்க்கை

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்  என் கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து போனாலும் என்று கவிதை எழுதி உசுப்பேத்திய கவிஞர் தானே

எட்டையபுரத்தானும் இதைத்தான் செய்தான்... காசியும் அதை தான் செய்தார். அதுதான் கவிஞனின் பங்களிப்பு. அதற்காக காசி ஆனந்தன் கலிபரோடு நிற்கவில்லை என்றும்.. மகள்களை களத்துக்கு அனுப்பவில்லையே என்று கவலைப்படுபவர்களும்.. சந்ததி சந்ததியாய் களமாடி களைத்தெல்லோ வந்திருக்கினம். 

ஊரை ஏய்க.. எத்தனை உருட்டுக்களை உருட்ட வேண்டி இருக்குது. 

போராடிய புலிகளே வீட்டுக்கொருவர் தான் கேட்டது. காசி ஆனந்தன் வீட்டில்.. காசி அந்தப் பங்களிப்பைச் செய்திருக்கிறார் இனத்துக்காக.. விலை போகாமல்..! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

உழைத்து படித்து  கார் வாங்கி வீடு வாங்கி  இனத்துக்கான  அர்ப்பணிப்பு வாழ்க்கை

இதென்ன பிரமாதம். இதை விட பெரிய டமால், டுமீல் கதைகளை எல்லாம் இந்த யாழ்களம் கண்டுள்ளது முன்னர்.

இதுவும் கடந்து போகும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இது தவறான செய்தி.

1991 க்கு பின் காசி ஐயா, இலங்கை அகதிகள் கோட்டாவில் இரெண்டு சீட் வாங்கி - தனது இரு மகள்களையும் இந்தியாவில் இலவசமாக டாக்டருக்கு படிப்பித்துள்ளார்.

பின்னர் அவர்களை இலண்டன் அனுப்பி - plab எக்ஸாம் பாஸ் பண்ண வைத்துள்ளார்.

தொடர்ச்சியாக அவர்களை இலண்டனில் டாக்டர் ஆக்கியுள்ளார்.

அவர்களுக்கு கல்யாணம் கட்டி கொடுத்து நல்வாழ்வில் விட்டுள்ளார்.

இத்தனை இடையறா இனப்பணிக்கு மத்தியிலும்…..

பத்து தடவை பாடை வராது, பாயும் புலியே தமிழா, சிரித்துகொண்டே செருக்களம் வாடா என ஊரான் வீட்டு பிள்ளைகளை உசுப்பும் ஏத்தியுள்ளார்.

 

பாராட்டப்படவேண்டிய தந்தை. 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.