Jump to content

விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இது விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி

நான் இதை முழுமையாக பார்த்தபோது வடிவேல் ஓரு காமெடியன். ஆனால் இதை பார்த்து கேட்டு ரசித்து சிரித்து மகிழ்பவர்கள்???

ராமதாஸ்

விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன்

திருநாவுக்கரசு

உட்பட...😭

https://www.facebook.com/purush.piramu/videos/392695573178390/

Edited by விசுகு
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த காணொளியை மிக நீண்டகாலம் முன் பார்த்தேன். இது எத்தனையாம் ஆண்டு? ஸ்டாலினும் உட்கார்ந்து வடிவேல் அவர்களின் பேச்சை கேட்கின்றார். கடைசியில் தமிழ்நாடு அரச மரியாதையுடன் விஜயகாந்த் இறுதி நிகழ்வு நடந்துள்ளது.  காலம் எவ்வளவு விந்தையானது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நியாயம் said:

நானும் இந்த காணொளியை மிக நீண்டகாலம் முன் பார்த்தேன். இது எத்தனையாம் ஆண்டு? ஸ்டாலினும் உட்கார்ந்து வடிவேல் அவர்களின் பேச்சை கேட்கின்றார். கடைசியில் தமிழ்நாடு அரச மரியாதையுடன் விஜயகாந்த் இறுதி நிகழ்வு நடந்துள்ளது.  காலம் எவ்வளவு விந்தையானது.

2011ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது பேசின‌ காணொளி...............

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நியாயம் said:

நானும் இந்த காணொளியை மிக நீண்டகாலம் முன் பார்த்தேன். இது எத்தனையாம் ஆண்டு? ஸ்டாலினும் உட்கார்ந்து வடிவேல் அவர்களின் பேச்சை கேட்கின்றார். கடைசியில் தமிழ்நாடு அரச மரியாதையுடன் விஜயகாந்த் இறுதி நிகழ்வு நடந்துள்ளது.  காலம் எவ்வளவு விந்தையானது.

தொடர்புடைய காணொளி ஒன்று

https://fb.watch/pmr9zNl7kG/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நியாயம் said:

நானும் இந்த காணொளியை மிக நீண்டகாலம் முன் பார்த்தேன். இது எத்தனையாம் ஆண்டு? ஸ்டாலினும் உட்கார்ந்து வடிவேல் அவர்களின் பேச்சை கேட்கின்றார். கடைசியில் தமிழ்நாடு அரச மரியாதையுடன் விஜயகாந்த் இறுதி நிகழ்வு நடந்துள்ளது.  காலம் எவ்வளவு விந்தையானது.

திராவிடம் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்குது அந்த கூட்டத்தில் வடிவேலின் கதையை கேட்டு சிரித்தவர்கள் விஜயகாந்தின் செத்த வீட்டுக்கு போய் வந்து விட்டார்கள் வடிவேலால் போகமுடியவில்லை வடிவேலின் சினிமா உலகமும் அந்த கதைக்கு பின் முடிந்தே போனது .

Link to comment
Share on other sites

#விஜயகாந்த், #வடிவேலு அரசியல் நமக்கு அப்பாற்பட்டது. இருவரையும் வெவ்வேறு காரணங்களால் எமக்கு பிடிக்கிறது.
வடிவேலு, மரணசடங்கில் கலந்து கலந்துகொள்ளாமைக்கு, எனது நண்பர் #இளவரசு சொல்லும் கோணம் சரியாக படுகிறது.
வாழ்வில் வடிவேலு எப்படியோ, திரையில் அவர் காமடிகிங். விஜயகாந்தே ரசிக்கும் போது நாம் ரசித்து கடப்போம்.

 

https://www.facebook.com/watch?v=1105562143953252

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜகாந்த் கூட வடிவேல் சம்பந்தப்பட்ட எந்தவொரு அறிக்கையோ மேடைப்பேச்சுக்களோ இடவில்லை எனும் போது நாங்கள் அவர்கள் இருவர் சம்பந்தமாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என்பது என் கருத்து.

சில வேளைகளில் தோட்டம் துரவுகளில் வைத்து  விஜயகாந்த் அவர்கள் வடிவேலுவுக்கு பச்சை மட்டையடி திருவிழா நடத்தியிருக்காலாம் என்ற ஊகம் எனக்குண்டு. ஏனென்றால் விஜயகாந்த் கறுப்பு எம்ஜிஆர். வடிவேல் வாய் திறக்க ஏலாத அளவுக்கு ஏதோ நடந்திருக்கு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

வடிவேலு, மரணசடங்கில் கலந்து கலந்துகொள்ளாமைக்கு

இப்படியும் ஒரு பிரச்சனை நடைபெறுகிறதோ 🙄  மரணசடங்கில் கலந்து கொள்வது அல்லது கலந்து கொள்ளாமல் விடுவது அவர்களது விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2024 at 08:25, விசுகு said:

 

இது விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி

நான் இதை முழுமையாக பார்த்தபோது வடிவேல் ஓரு காமெடியன். ஆனால் இதை பார்த்து கேட்டு ரசித்து சிரித்து மகிழ்பவர்கள்???

ராமதாஸ்

விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன்

திருநாவுக்கரசு

உட்பட...😭

https://www.facebook.com/purush.piramu/videos/392695573178390/

வடிவேலுவின் பெருந்தன்மை பேச்சு, உண்மை முகம், கொஞ்சம் கூட சபை நாகரிகம் இல்லாமல் அரசியல் மேடையை நகைச்சுவை மேடையாக பாவித்து கைதட்டல் வாங்கியிருக்கிறார். நாளைக்கு நமக்கும் இதுதான் என்று உணராதவர்களும், தான் வெளியே தனித்து நிற்பேன் என்று அப்போ உணராத வடிவேலுவும். நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலுங் கூட மிதிக்கும் என்பார்கள். ஆனால் வடிவேலுவை பற்றி விஜய காந்த் பேசியதாக எங்கேயும் காண்பிக்கப்படவில்லை. பல தடவை விஜயகாந்த் சொல்லியதை கேட்டிருக்கிறேன், "என்னைப்பற்றி யார் எது வேண்டுமானாலும்  பேசினால் பேசிற்று போகட்டும், அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன், நான் செய்ய வேண்டியதை செய்து போட்டுபோவேன்." என்பார். சொன்னார், செய்தார். அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கடைசியில் நிரூபித்தார்கள், மக்களின் மனதை வென்றார். கள்ள வோட்டு வாங்காதவர்.                             

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

மரணசடங்கில் கலந்து கலந்துகொள்ளாமைக்கு, எனது நண்பர் #இளவரசு சொல்லும் கோணம் சரியாக படுகிறது.

சில ரசிகர்களின், தொண்டர்களின்  கேள்வியும், வருத்தமும், கோபமும்  இதுவே.  விஜயகாந்த் நோயுற்றிருக்கும்போதும் வடிவேலு அவரை  சந்தித்து வருத்தத்தை தெரிவிக்கவில்லை, அவர் இறந்த போதும்  காணொளியிலோ பத்திரிகை வாயிலாகவோ இரங்கலையும் தெரிவிக்கவில்லை என்பதே. அது வடிவேலுவுக்கும் வடிவாக தெரியும் அதனாலேயே தவிர்த்துக்கொண்டார். வடிவேலுவை எல்லோரும் ரசிக்க வேண்டும், எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே அவரது பேச்சு தெளிவாக விளக்குகிறது. விஜயகாந்தின் வாழ்வு துதிப்பதற்கு உரியதென மக்கள் காண்பித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2024 at 09:09, பெருமாள் said:

திராவிடம் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்குது அந்த கூட்டத்தில் வடிவேலின் கதையை கேட்டு சிரித்தவர்கள் விஜயகாந்தின் செத்த வீட்டுக்கு போய் வந்து விட்டார்கள் வடிவேலால் போகமுடியவில்லை வடிவேலின் சினிமா உலகமும் அந்த கதைக்கு பின் முடிந்தே போனது .

 

நான் தற்செயலாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வடிவேலு ஐயா பாடிய ஓர் பாடல் கேட்டேன். பாடல் சக்கை போடுபோடுகின்றது. தொலைக்காட்சியை பார்த்தால் அவரது புகழ்/பெருமை மங்கியமாதிரி தெரியவில்லை. யூரியூப், இதர சமூக ஊடகங்களில் சிலர் எழுதும் பின்னூட்டங்களை வைத்துக்கொண்டு நாம் என்னதான் ஊகிக்கலாம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழைய இணைப்பு, வடிவேலு இதனால் நன்றாக அனுபவித்துவிட்டார், மனிசன் திருந்தி இப்ப மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார், நடிகனாக பலரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கின்றார் இன்றுவரை👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயம் said:

 

நான் தற்செயலாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வடிவேலு ஐயா பாடிய ஓர் பாடல் கேட்டேன். பாடல் சக்கை போடுபோடுகின்றது. தொலைக்காட்சியை பார்த்தால் அவரது புகழ்/பெருமை மங்கியமாதிரி தெரியவில்லை. யூரியூப், இதர சமூக ஊடகங்களில் சிலர் எழுதும் பின்னூட்டங்களை வைத்துக்கொண்டு நாம் என்னதான் ஊகிக்கலாம்?

 

ஓம் நிங்கள் சொல்வது போல் அந்த தெனாவட்டு  கதைக்கு முன் வருடத்துக்கு இரண்டு மூன்று நடித்தவர் அந்த தென வட்டு  கதை சொல்லியபின் வருடத்துக்கு 5௦ படங்களுக்கு மேல் நடிக்கிறார் நான்தான் இந்த விசர்  யூரியூப், இதர சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தபட்டு விட்டேன் 😀

என்ன இருந்தாலும் வடி வேலின் நகைசுவை போல் வராது .

உருவாகும் மீம்ஸ் முக்கால்வாசி அவருடைய படம்கள் இல்லாமல் இல்லை .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

ஓம் நிங்கள் சொல்வது போல் அந்த தெனாவட்டு  கதைக்கு முன் வருடத்துக்கு இரண்டு மூன்று நடித்தவர் அந்த தென வட்டு  கதை சொல்லியபின் வருடத்துக்கு 5௦ படங்களுக்கு மேல் நடிக்கிறார் நான்தான் இந்த விசர்  யூரியூப், இதர சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தபட்டு விட்டேன் 😀

என்ன இருந்தாலும் வடி வேலின் நகைசுவை போல் வராது .

உருவாகும் மீம்ஸ் முக்கால்வாசி அவருடைய படம்கள் இல்லாமல் இல்லை .

 

எனக்கு வைகைப்புயல், கப்டன் இருவரிடையேயான முன்னைய பிரச்சனை சரியாக நினைவில் இப்போது இல்லை.  நான் நினைக்கின்றேன் கப்டன் வைகைபுயலுக்கு மிரட்டல் கொடுத்ததன் தொடர்ச்சியாகவே அவர் குழம்பினார் என. வீட்டுக்கு/வீட்டில்/வீடு தாக்கபடும் என்று மிரட்டல் செய்யப்பட்டதாக வாசித்து நினைவு.  

கப்டனும் கொஞ்சம் முன் கோபக்காரர் என்பதும் நாம் கவனிக்கத்தக்கது.  ஆட்களுக்கு முன்னேலேயே அவரது தொண்டர்களை அவர் அடிக்கும் காணொளிகள் முன்பு பகிரப்பட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

 

எனக்கு வைகைப்புயல், கப்டன் இருவரிடையேயான முன்னைய பிரச்சனை சரியாக நினைவில் இப்போது இல்லை.  நான் நினைக்கின்றேன் கப்டன் வைகைபுயலுக்கு மிரட்டல் கொடுத்ததன் தொடர்ச்சியாகவே அவர் குழம்பினார் என. வீட்டுக்கு/வீட்டில்/வீடு தாக்கபடும் என்று மிரட்டல் செய்யப்பட்டதாக வாசித்து நினைவு.  

கப்டனும் கொஞ்சம் முன் கோபக்காரர் என்பதும் நாம் கவனிக்கத்தக்கது.  ஆட்களுக்கு முன்னேலேயே அவரது தொண்டர்களை அவர் அடிக்கும் காணொளிகள் முன்பு பகிரப்பட்டது.  

ஒரு படத்தில்  ஒரு காட்சியில் விஜயகாந்தை பார்த்து வருங்கால முதல்வர் என  வடிவேல் சொல்லும் காட்சி அமைக்கப்பட்டதாம். அதற்கு வடிவேலு மறுக்கவே அங்கிருந்துதான் பிரச்சனை புகைய ஆரம்பித்ததாக பல வருடங்களுக்கு முன் வாசித்த ஞாபகம்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"     தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!   “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.   உதாரணமாக ,சோதிடர் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்று வைப்போம். அதனால் என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். சோதிடத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம் - இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியும். வழியில் குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம். அப்படி எல்லாத் தடங்கல் களையும் சோதிடம் மூலம் தாண்டி விடலாம் என்று. அப்படி என்றால் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது?   இதற்கு அவர்கள் பொதுவாக சொல்லும் பதில், சோதிடன் சொன்ன பரிகாரத்தை சரியாகச் செய்யவில்லை என்பதாகும். சோதிடம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கி விட முடியும் என்றால் அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?சோதிடம் சொல்லுகிறவன் உட்பட? சோதிடத்தை பிறருக்கு சொல்லி அன்றாடம் தன் வயிரையும் குடும்பத்தின் வயிரையும் நிரப்புகிறவன், அதில் இருந்து தான் மீள ஏன் தன் சோதிடத்தைப் பார்ப்பதில்லை?   இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்களை சோதிடம் ஏமாற்ற முடியாது. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்று கோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் மட்டும் இந்த ஏமாற்றுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.   தமிழன் சங்க காலத்திலேயே இதை நம்ப தொடங்கி விட்டான். சங்கத் தமிழ் நூல்களில் அக்காலத் தமிழரின் மாறு பட்ட நம்பிக்கைகள் பரவிக்கிடக்கின்றன. இடி ஓசை கேட்டால் பாம்பு நடுங்கும் அல்லது இறந்துவிடும் என்றும், மயிரை இழந்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்றும், புலி வேட்டையாடுகையில் இடப்பக்கம் விழும் இரையை உண்ணாது என்றும் சங்கத் தமிழ் நூல்களிலும் தொல்காப்பியத்திலும் இது போல எண்ணற்ற குறிப்புக்களைக் காண முடியும்.   மேலும் சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு ஆருடம் கூறினார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கண்டனர். இடது கண் துடிப்பதைக் கொண்டு சகுனம் பாரத்தனர். பெண்ணின் மனநோயைக் (உண்மையில் காதல் நோய்) குணப்படுத்த கட்டுச்சிவியைக் கொண்டு “விரிச்சி” கேட்டனர். வேலனைக் கொண்டு வெறியாடினர். நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்தனர். சில பெண் சோதிடர்கள், அவர்கள் பையிலுள்ள கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர்.   கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர்.   ”கண்ணகி கருக்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன எண்ணும் முறை இடத்திலும் வலத்திலும் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென”   என்று இளங்கோவடிகள் இந்திரவிழா நாளில் கண்ணகி கருங் கண் இடத்திலும், மாதவி செங்கண் வலத்திலும் துடித்தன என்கிறார். கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதையே இவ்விரு பெண்களின் கண்துடிப்புகளும் இங்கு குறிப்பிடுகின்றன?   எந்த பத்துப் பொருத்தங்களை பார்த்தார்கள் என்பதில் தான் திருமணத்தின் மகிமை தங்கி உள்ளது என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது.   "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த, காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திருவென முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே"   குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந் திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது.   "நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர்."   தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.   திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும். ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது. எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும். அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும்.  திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே. இதை குறுந்தொகையில் 40 இப்படி கூறுகிறது.   "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."   இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும், கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. மேலே கூறிய வாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர், பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் - தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது. கணித்துக் கூறுபவன் ஜோசியன்.  ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!!   ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந் தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய! உனது நட்சத்திரங்கள் நிலைத்து வளரட்டும்! என்று அந்த பாடல் அவனை வாழ்த்துகிறது.   "குப்பை நெல்லின், முத்தூறு தந்த கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! நின்று நிலைஇயர் நின் நாள்மீன்;"   இடைக்காட்டுச் சித்தர் வறட்சி ஏற்படப்போவதை அறிந்துகொண்டு ஆடு மாடுகளுக்கு எருக்க இலைகளைத் தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர் 60 தமிழ் ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.   மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர்.   "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி" [பட்டினப்பாலை]   இப்படியாக கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டு நம்பிக்கைகளுடனும் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்?     கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  அத்தியடி, யாழ்ப்பாணம்         
    • 🤣...... இதே போன்ற ஒரு கற்பனை என்னுடன் கூட வந்த ஒருவருக்கும் வந்திருந்தது...........😀
    • நீங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதை யாராவது படமெடுத்து போட்டு அமெரிக்காவிலிருந்து வந்தவர் விமானநிலைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்டார் என்று தொலைக்காட்சியில் உங்களைக் காட்ட இப்படி எனது கற்பனை போகுது.
    • 🤣..... படம் எதுவும், ஒரு இடத்தை தவிர, எங்கேயும் எடுக்கவில்லை. அதனால என் பயணத்தில் இரண்டு 'படமும்' இல்லை என்று சொல்ல நினைத்தேன்........நாம என்னதான் அடக்கமாக இருந்தாலும், ஆள் வெளியிலிருந்து வந்திருக்கின்றார் என்று எப்படியோ கண்டு கொள்கின்றனர்.....100 ரூபா கச்சானை 200 ரூபா என்று கோவில் வீதியில் எனக்கு விற்றும் விட்டனர்....... 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.