Jump to content

டி20 உலகக் கோப்பைச் செய்திகள்


Recommended Posts

T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Fixtures revealed for ICC Men’s T20 World Cup 2024

 
  

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

T20 உலகக்கிண்ணத்தின் போட்டி அட்டவணையின்படி அமெரிக்காவின் 3 மைதானங்களிலும், மேற்கிந்திய தீவுகளின் 6 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

 

அதன்படி இலங்கை அணி D குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஜூன் 3ம் திகதி நியூ யோர்க்கில் எதிர்கொள்கின்றது. 

அதனைத்தொடர்ந்து ஜூன் 7ம் திகதி பங்களாதேஷ் அணியையும், ஜூன் 11ம் திகதி நேபாளம் அணியையும், ஜூன் 16ம் திகதி நெதர்லாந்து அணியையும் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது. 

மொத்தமாக விளையாடவுள்ள 20 அணிகளில் 10 அணிகள் முதல் 29 நாட்கள் அமெரிக்காவில் போட்டியிடுகின்றன. அதன் அடிப்படையில் 16 போட்டிகள் டளாஸ், லவுடர்ஹில் மற்றும் நியூ யோர்க் மைதானங்களில் நடைபெறவுள்ளன. இதில் இந்தியா  பாகிஸ்தான் போட்டி நியூ யோர்க்கில் ஜூன் 9ம் திகதி நடைபெறவுள்ளது. 

அதேநேரம் மேற்கிந்திய தீவுகளின் ஆறு வெவ்வேறு மைதானங்களில் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் அரையிறுதிப்போட்டிகள் ட்ரினிடட் மற்றும் டொபேகோ மற்றும் கயானாவில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப்போட்டி ஜூன் 29ம் திகதி பார்படோஸில் நடைபெறவுள்ளது. 

போட்டி அட்டவணை 

  • ஜூன் 1 அமெரிக்கா எதிர் கனடா (டளாஸ்) 
  • ஜூன் 2  மே.தீவுகள் எதிர் பப்புவா நியூ கினியா (கயானா) 
  • ஜூன் 2  நமீபியா எதிர் ஓமான் (பார்படோஸ்) 
  • ஜூன் 3  இலங்கை எதிர் தென்னாபிரிக்கா (நியூ யோர்க்) 
  • ஜூன் 3 ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா (கயானா) 
  • ஜூன் 4  இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து (பார்படோஸ்) 
  • ஜூன் 4  நெதர்லாந்து எதிர் நேபாளம் (டளாஸ்) 
  • ஜூன் 5  இந்தியா எதிர் அயர்லாந்து (நியூ யோர்க்) 
  • ஜூன் 5  பப்புவா நியூ கினியா எதிர் உகண்டா (கயானா) 
  • ஜூன் 5  அவுஸ்திரேலியா எதிர் ஓமான் (பார்படோஸ்) 
  • ஜூன் 6  அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் (டளாஸ்) 
  • ஜூன் 6  நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து (டளாஸ்) 
  • ஜூன் 7  கனடா எதிர் அயர்லாந்து (நியூ யோர்க்) 
  • ஜூன் 7 நியூசிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் (கயானா) 
  • ஜூன் 7  இலங்கை எதிர் பங்களாதேஷ் (டளாஸ்) 
  • ஜூன் 8  நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா (நியூ யோர்க்) 
  • ஜூன் 8  அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து (பார்படோஸ்) 
  • ஜூன் 8  மே.தீவுகள் எதிர் உகண்டா (கயானா) 
  • ஜூன் 9  இந்தியா எதிர் பாகிஸ்தான் (நியூ யோர்க்) 
  • ஜூன் 9  ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து (ஆண்டிகா) 
  • ஜூன் 10  தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் (நியூ யோர்க்) 
  • ஜூன் 11  பாகிஸ்தான் எதிர் கனடா (நியூ யோர்க்) 
  • ஜூன் 11  இலங்கை எதிர் நேபாளம் (ப்ளோரிடா) 
  • ஜூன் 11  அவுஸ்திரேலியா எதிர் நமீபியா (ஆண்டிகா) 
  • ஜூன் 12  அமெரிக்கா எதிர் இந்தியா (நியூ யோர்க்) 
  • ஜூன் 12  மே.தீவுகள் எதிர் நியூசிலாந்து (ட்ரினிடட்) 
  • ஜூன் 13  இங்கிலாந்து எதிர் ஓமான் (ஆண்டிகா) 
  • ஜூன் 13  பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து (சென். வின்செண்ட்) 
  • ஜூன் 13  ஆப்கானிஸ்தான் எதிர் பப்புவா நியூ கினியா (ட்ரினிடட்) 
  • ஜூன் 14  அமெரிக்கா எதிர் அயர்லாந்து (ப்ளோரிடா) 
  • ஜூன் 14  தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் (சென். வின்செண்ட்) 
  • ஜூன் 14  நியூசிலாந்து எதிர் உகண்டா (ட்ரினிடட்) 
  • ஜூன் 15  இந்தியா எதிர் கனடா (ப்ளோரிடா) 
  • ஜூன் 15  நமீபியா எதிர் இங்கிலாந்து (ஆண்டிகா) 
  • ஜூன் 15  அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து (சென்.லூசியா) 
  • ஜூன் 16  பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து (ப்ளோரிடா) 
  • ஜூன் 16  பங்களாதேஷ் எதிர் நேபாளம் (சென்.வின்செண்ட்) 
  • ஜூன் 16  இலங்கை எதிர் நெதர்லாந்து (சென்.லூசியா) 
  • ஜூன் 17  நியூசிலாந்து எதிர் பப்புவா நியூ கினியா (ட்ரினிடட்) 
  • ஜூன் 17  மே.தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் (சென்.லூசியா) 
  • ஜூன் 19 – A2 v D1, ஆண்டிகா 
  • ஜூன் 19– B1 v C2, சென். லூசியா 
  • ஜூன் 20 – C1 v A1, பார்படோஸ் 
  • ஜூன் 20 – B2 v D2, ஆண்டிகா 
  • ஜூன் 21 – B1 v D1, சென். லூசியா 
  • ஜூன் 21 – A2 v C2, பார்படோஸ் 
  • ஜூன் 22 – A1 v D2, ஆண்டிகா 
  • ஜூன் 22 – C1 v B2, சென்.வின்செண்ட் 
  • ஜூன் 23 – A2 v B1, பார்படோஸ் 
  • ஜூன் 23 – C2 v D1, ஆண்டிகா 
  • ஜூன் 24 – B2 v A1, சென். லூசியா 
  • ஜூன் 24– C1 v D2, சென். வின்செண்ட் 
  • ஜூன் 26 – Semi-Final 1, கயானா 
  • ஜூன் 27 – Semi-Final 2, ட்ரினிடட் 
  • ஜூன் 29 – Final, பார்படோஸ் 
  • https://www.thepapare.com/fixtures-revealed-for-icc-mens-t20-world-cup-2024-tamil/
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது.

வணக்கம் @கிருபன்

அப்புறம் என்ன .

போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள்.

முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள்.

போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது.

வணக்கம் @கிருபன்

அப்புறம் என்ன .

போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள்.

முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள்.

போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.

விடுங்க பாஸ் ....."காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளட்டும்".......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2024 at 16:41, ஈழப்பிரியன் said:

இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது.

வணக்கம் @கிருபன்

அப்புறம் என்ன .

போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள்.

முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள்.

போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இந்த‌ முறை ப‌ல‌ நாடுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுகின‌ம்............க‌ர்விய‌ன் தீவில் உல‌க‌ கோப்பை ந‌ட‌ந்தால் ப‌ல‌ சின்ன‌ அணிக‌ளும் க‌ல‌ந்து கொள்ள‌ வாய்ப்பு கொடுப்பின‌ம்🤲🙏...............

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி ஆடுவதில் என்ன சிக்கல்?

விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 23 நிமிடங்களுக்கு முன்னர்

விராட் கோலி தான் ஆடும் ஆட்டங்களின் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் ஆடுவது அவரது பலம் என்று பலராலும் பாராட்டப்படுகிறார். ஆனால் இப்போது அவர் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்பது ஒரு பெரும் கேள்வியாகியிருக்கிறது. விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன?

“விராட் கோலியின் பலமே சூழலுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்துக் கொள்வதுதான். போட்டி குறித்த அவரது விழிப்புணர்வு அற்புதமானது. 4 ஓவர்களுக்குப்பின், 6 ஓவர்களுக்குப்பின் ஆட்டத்தை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் அவரது பார்வை மகத்தானது. சேஸிங்கின்போது, தேவைப்படும் ரன்ரேட்டை கணக்கிட்டு பேட்டிங் செய்வதில் வல்லவர்”

இந்த வார்த்தைகள் விராட் கோலி குறித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய வீரர்களுள் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் கூறியது. ஆனால், கோலி வரும் ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் வலம் வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில நாளேடுகள், இணையதளங்கள் வெளியிட்ட செய்தியில் “2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை,” என்று தெரிவித்திருந்தன. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, விராட் கோலியின் பெயர் ட்ரெண்டாகியது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 போட்டியில் 14 மாதங்களாக விளையாடவில்லை. அதன்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், விராட் கோலி சொந்தப் பணி காரணமாக அந்தத் தொடரிலிருந்து விலகினார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் கோலி விலகிக் கொண்டார்.

 
விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கோலி ஆடுவாரா?

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சமீபத்தில் கூறுகையில் “வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் நடக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு ரோகித் சர்மாதான் இந்திய அணியை வழி நடத்துவார்,” என்று உறுதி செய்தார். ஆனால் விராட் கோலி குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை, அவர் உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதும் தெரியாது.

இந்நிலையில், ஆங்கில இணையதளங்கள், நாளேடுகள் ஆகியவை ‘பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக’ வெளியிட்ட செய்தியில் “மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் ‘ஸ்லோ விக்கெட்டைக்’ கொண்டவை. இங்கு பந்து மெதுவாக, தாழ்வாக பேட்ஸ்மேனை நோக்கி வரும், அதனால் பொறுமையாக பேட் செய்ய வேண்டும். பவர் ஹிட்டராக இருக்க வேண்டும். இதுபோன்ற ஆடுகளங்கள் விராட் கோலி பேட்டிங் ஸ்டைலுக்கு உகந்ததாக இருக்காது. பவர் ஹிட்டர் வீரர்களுக்குத்தான் இந்த ஆடுகளம் பொருந்தும். ஆதலால், இந்திய அணியிலிருந்து கோலி நீக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்திருந்தன.

மேலும், “விராட் கோலியை உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்காமல் அவரை நீக்குவது தேர்வாளர்களுக்கு கடினமான முடிவாகத்தான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை. எதிர்காலத்தில் அணியை வழிநடத்திச் செல்லவும், இளம் வீரர்களை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தர வேண்டும். சர்வதேச அரங்கில் இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினால்தான் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். ஆதலால் விராட் கோலி அணியிலிருந்து நீக்கப்படலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடினமான செய்தியை தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்தான், விராட் கோலிக்கு தெரிவித்து அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

டி20 உலகக் கோப்பை போட்டிகள் எப்போது நடக்கின்றன?

மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை நடக்கவுள்ளது. 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 20 அணிகள் போட்டியிடுகின்றன.

மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை மேற்கிந்தியத் தீவுகளும், அமெரிக்காவும் சேர்ந்து நடத்துகின்றன. மேற்கிந்தியத் தீவுகள் தவிர, நியூயார்க், டெக்ஸாஸ், புளோரிடா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி உள்ளிட்ட தரவரிசையில் உள்ள 8 அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன. முதல் முறையாக கனடா, உகாண்டா, போட்டியை நடத்தும் அமெரிக்கா ஆகிய அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன.

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,TWITTER/ SURYA KUMAR YADAV

படக்குறிப்பு,

விராட் கோலி இல்லாவிட்டால் அவரின் இடத்துக்கு சூர்யகுமார் யாதவ், போன்ற இளம் வீரர்கள் பட்டியல் நீள்கிறது.

விராட் கோலிக்கு பதிலாக யார்?

விராட் கோலி இல்லாவிட்டால் அவரின் இடத்துக்கு யாரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது?

சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரவீந்திர ஜடேஜா,திலக் வர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் அய்யர், போன்ற இளம் வீரர்கள் பட்டியல் நீள்கிறது.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சரிந்து வீழ்ந்தபோது, விராட் கோலி என்ற ஒற்றை பேட்டர்தான் இந்திய அணியைத் தூக்கி நிறுத்தினார். அவரை நீக்குவது எந்த விதத்தில் நியாயம், கோலி போன்ற அனுபவமான பேட்டர் அணிக்கு அவசியம் என்று சமூக வலைத்தளத்தில் கோலியின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், டி20 போட்டியில் விராட் கோலியின் புள்ளிவிவரங்கள், அவரது பேட்டிங் ஸ்டைல் போன்றவை அவருக்கே தெரியாமல் அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டன என்றும் விமர்சனங்கள் இருக்கின்றன.

விராட் கோலியின் பேட்டிங் சராசரி, ஸ்ட்ரைக் ரேட் போன்றவை இன்றுள்ள அதிவேக டி20 போட்டிக்கு எதிர்பார்ப்பைவிட குறைவாக இருக்கிறது என்று கிரிக்கெட் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

 
விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி பவுண்டரிகள், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் ஹிட்டராக மாறத் தயங்குகிறார்

கோலியின் பலவீனங்கள் என்ன?

விராட் கோலி 117 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,037 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 37 அரைச் சதங்கள் ஆகியவையும் அடங்கும். சராசரி 51.75, ஸ்ட்ரைக் ரேட் 138 என்று வைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் விராட் கோலி 361 பவுண்டரிகள், 117 சிக்ஸர்கள் அடித்துள்ளார். பவுண்டரி எடுத்துக் கொண்டால் விராட் கோலி இன்னிங்ஸ் ஒன்றுக்கு 3.30 பவுண்டரியும், சிக்ஸராக 1.07 மட்டுமே அடிக்கிறார். ரன்கள் வீதம் கணக்கிட்டால், பவுண்டரிகள் வாயிலாக 19 முதல் 20 ரன்கள் வரை சராசரியாக கோலி சேர்க்கிறார்.

விராட் கோலி டி20 போட்டியில்கூட விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன்கள் எடுப்பதற்குதான் முன்னுரிமை அளிக்கிறாரே தவிர, பவுண்டரிகள், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் ஹிட்டராக மாறத் தயங்குகிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்.

விராட் கோலியின் டி20 போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றுக்கு பேட்டிங் சராசரி 27.1 பந்துகளில் அவர் 37.5 ரன்களை அணிக்காக எடுக்கிறார்.

 
விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி 117 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,037 ரன்கள் குவித்துள்ளார்

டி20 ஆட்டத்துக்கு தேவை என்ன?

கசப்பான உண்மை என்னவென்றால், ‘டி20 கிரிக்கெட் போட்டி என்பது நிதானமான ஸ்ட்ரைக்ரேட்டுடன், சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்யும் போட்டி அல்ல, அதிரடியாக, பேய்த்தனமாக பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் ஆட்டம் என்பதை உணர வேண்டும்,’ என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

டி20 போட்டியில் மொத்தம் 10 பேட்டர்களும் சந்திக்கப் போவது 120 பந்துகளைத்தான். சராசரியாக ஒரு விக்கெட் 12 பந்துகளை மட்டுமே சந்திக்க முடியும். இது ஒரு நாள் போட்டியில் 30 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்றால், டெஸ்ட் போட்டியில் 62 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என எடுக்கலாம்.

ஆதலால், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட் அல்லது பேட்டர் களத்தில் இருக்கும் நேரம், சந்திக்கும் பந்துகள் குறைவு. இந்த முதல் 12 பந்துகளுக்குள் ஒரு விக்கெட் அல்லது பேட்டர் தனது விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. அதற்காக களத்தில் நிற்க வேண்டுமே என்பதற்காக பந்துகளை வீணடித்து ஸ்ட்ரைக் ரேட்டையும், ரன்ரேட்டையும் குறைத்துவிடக்கூடாது.

அதனால்தான் டி20 போட்டியில் ஒரு பேட்டர் களமிறங்கும்போது சந்திக்கும் ஒவ்வொரு பந்துக்கும் எதிர்பார்க்கும் ரன் என்ற கணக்கீடு வைக்கப்பட்டுள்ளது. இதை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். தோல்வி(ஃபெய்லியர்), கேமியோஸ், சக்சஸ்(வெற்றி), அன்டர் பார்(சராசரிக்கும் கீழ்)

தோல்வி: டி20 இன்னிங்ஸில் ஒரு பேட்டர் 12 பந்துகளுக்குள் ஆட்டமிழந்து, சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாக எடுத்தால் அது தோல்வியாகும்.

கேமியோஸ்: ஒரு பேட்டர் 12 பந்துகளுக்குள் ஆட்டமிழந்தாலும், சந்தித்த பந்துகளில் இருந்த எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்த்தால்அது கேமியோஸ்.

வெற்றி: ஒரு பேட்டர் 12 பந்துகளைச் சந்தித்து, சந்தித்த பந்துகளில் எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்ப்பது.

சரிசரிக்கும் குறைவு: ஒரு பேட்டர் குறைந்தபட்சம் 12 பந்துகளைச் சந்தித்து, சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்ப்பதாகும்.

 
விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,TREVOR COLLENS

படக்குறிப்பு,

கோலி சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்த்துள்ளார்

கோலி ‘அன்டர் பார்’ பேட்டரா?

இந்த வகையில் பார்த்தால், டி20 போட்டிகளில் இந்திய அணியில் இப்போதுள்ள இளம் வீரர்களுடன் ஒப்பிடும்போது, விராட் கோலி சராசரிக்கும் குறைவான ‘அன்டர் பார்’ ஆட்டங்களைத்தான் அதிகமாக விளையாடியுள்ளார்.

அதாவது கோலி சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்த்துள்ளார். அதேபோல கேமியோஸ் எனப்படும் அதிரடியான ஆட்டங்கள் வரிசையில் கோலி தனது 107இன்னிங்ஸ்களில் வெறும் 8.7% மட்டுமே ஆடியுள்ளார்.

ஆனால், சந்தித்த பந்துகளில் எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்க்கும் வெற்றியாளர் பேட்டர்கள் சராசரியில் 30.8% வைத்துள்ளார். இது சிறப்பானது என்றாலும் டி20 போன்ற வேகமான ஆட்டத்துக்கு இது பொருந்தாது.

விராட் கோலியின் ரன்சேர்க்கும் வேகம், ரோகித் சர்மாவுடன் ஒப்பிடும்போது 5.7% மெதுவாகவும், கே.எல்.ராகுலுடன் ஒப்பிடும்போது 5.2% மெதுவாகவும், சூர்யகுமாருடன் ஒப்பிடும்போது 27% சதவீதம் மெதுவாகவும் இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி தான்சந்திக்கும் முதல் 100 பந்துகளில் 128 ரன்களைச் சேர்க்கிறார். ரோகித் சர்மா 139 ரன்களாகவும், கே.எல்.ராகுல் 134 ரன்களாக சேர்க்கிறார்கள். ஆனால், முதல் 20 பந்துகளைச் சந்திக்கும் வகையில் ரோகித் சர்மா 127 ரன்கள் என கோலியைவிடப் பின்தங்கினாலும், போட்டியில் ரன்ரேட்டை வேகப்படுத்துவதில் கோலியைவிட சிறந்தவராக திகழ்கிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டி20 போட்டியில் விராட் கோலி மெதுவாக ரன்சேர்க்கும் வீரர்

கோலியைப் போன்ற பிற வீரர்கள் யார்?

இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டி20 போட்டியில் விராட் கோலி மெதுவாக ரன்சேர்க்கும் வீரர். இதனால் 120 பந்துகளைக் கொண்ட போட்டியில் கோலியின் ஆங்கர் ஆட்டத்தால் அடுத்தார்போல் காத்திருக்கும் பேட்டர்கள் பல போட்டிகளில் பேட் செய்யாமல்கூட போகலாம்.

பாகிஸ்தானின் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் போன்றோரில் ஆட்டம் கூட கூட கோலி போன்றதுதான். இதே சிக்கல்தான் நியூசிலாந்தில் கேன் வில்லியம்ஸனிடமும் இருக்கிறது. இதனால்தான் அதிவேகமான ஆட்டத்தைக் கொண்ட டி20 போட்டிகளில் வில்லியம்ஸனால் ஈடுகொடுக்க முடியவில்லை.

கரீபியனில் கோலியின் பேட்டிங் எப்படி?

கரீபியன் ஆடுகளங்களில் கோலி 7 இன்னிங்ஸ்களில் 229 ரன்களும், அமெரிக்காவில் 3 போட்டிகளில் 63 ரன்களும் சேர்த்துள்ளார்.

கோலியின் சராசரி இந்த மைதானங்களில் 29 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 120.66 என இருக்கிறது. இங்கு கோலி 30 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவரின் ஒட்டுமொத்த ரன்களில் 49% பவுண்டரி அடங்கும். 100 டி20 போட்டிகளுக்கு மேல் அனுபவம் கொண்டவராக இருந்தாலும் கரீபியன், அமெரிக்க ஆடுகளங்களில் அவருக்கு பெரிதாக அனுபவம் இல்லை, அங்கு அவர் பவர்ஹிட்டராக இல்லை, அன்டர்பார் பேட்டராகவே இருக்கிறார் என்பது தெரிகிறது.

 
விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,BCCI/IPL

படக்குறிப்பு,

கோலி டி20 ஏற்றார்போல் பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது

ஐபிஎல் தொடரில் கோலிக்கு என்ன வாய்ப்பு?

விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கோலி விளையாடவில்லை.

வரும் 22-ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் டி20 தொடரில் 3 மாதங்களுக்குப்பின் கோலி கிரிக்கெட் விளையாட உள்ளார். முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து விராட் கோலி இருக்கும் ஆர்சிபி அணி மோதுகிறது. இந்தத் தொடரின் முதல் பாதியில் விராட் கோலியின் பேட்டிங் திறமை சிறப்பாக இருந்தால், கடைசி நேரத்தில்கூட தேர்வாளர்கள் இந்திய அணிக்குள் கோலியைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது பாராமுகமாகவும் இருக்கலாம்.

கோலியின் மனநிலை என்ன?

விராட் கோலி உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாமல் இருக்க 3 காரணங்கள் இருக்கலாம் என்று மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி செய்திகளிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில் “ஐபிஎல் மூலம் புதிய இளம் வீரர்கள் அறிமுகமாகிறார்கள் இந்திய அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக கோலி நீக்கப்படலாம். அடுத்ததாக கோலியின் மனநிலை. எந்தெந்த போட்டியில் தான் விளையாட வேண்டும் என்பதை கோலிதான் முடிவு செய்கிறாரே தவிர, தேர்வுக்குழுவினர் அல்ல. தான் விரும்பினால், டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார், பிடிக்கவில்லையென்றால், டி20 தொடரில்கூட விளையாடுவதில்லை. இதுபோன்ற கோலியின் மனநிலை, இப்போதுள்ள தேர்வாளர்கள் சகிக்கமாட்டார்கள்,” என்றார்.

அவர் மேலும் பேசுகையில், “14 மாதங்களாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத கோலியை, திடீரென டி20 உலகக் கோப்பைக்கு மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது மற்ற வீரர்களின் திறமையை, மனநிலையை பாதிக்கும். அணியின் ஓய்வு அறையில் ஒற்றுமையைப் பாதிக்கும். அது மட்டுமல்லாமல் இளம் வீரர்கள் பலர் புதிதாக அணிக்குள் வரும்போது, கோலியால் அவர்களுடன் உடனடியாக ஒத்துப்போவது கடினம். அணிக்குள் தொடர்ந்து இருக்கும்போதுதான் சகவீரர்களுடன் புரிதல், ஒற்றுமை, உத்வேகம், ஸ்பிரிட் போன்றவை உருவாகும்,” என்றார்.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘மாற்றுவீரர் இல்லாமல் கோலியை நீக்குவது தவறு’

முத்துக்குமார் மேலும் பேசுகையில், “கோலிக்குப் பதிலாக வலிமையான பேட்டரை உருவாக்கிவிட்டுத்தான் அவரை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் கோலி இல்லாதது எதிரணிக்கு மனரீதியாக வலிமையைக் கொடுத்துவிடும். ஆதலால், கோலியும் அணியில் இருக்க வேண்டும், அவரை முக்கியமான ஆட்டங்களுக்குப் பயன்படுத்திவிட்டு, முக்கியமற்ற ஆட்டங்களில் அவருக்குப்பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்,” எனத் தெரிவித்தார்.

கோலி டி20 போட்டிகளுக்கு ஏற்றாற்போல் பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து முத்துக்குமார் பதில் அளிக்கையில் “ஒரு நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் புஜாரா மெதுவாக விளையாடுகிறார் என்று குற்றம்சாட்டிய விராட் கோலி மீது, இப்போது டி20 போட்டியில் மெதுவாக ஆடுகிறார் என்று குற்றச்சாட்டு வந்துள்ளது. இது ஏறக்குறைய உண்மைதான் என்றாலும், ஆங்கர் ரோல் எடுத்து கோலி விளையாடும்போது இதுபோன்றுதான் விளையாட முடியும்,” என்றார்.

மேலும், “மற்றவகையில், 190 ரன்கள் அடிக்க வேண்டிய ஆட்டத்தில் கோலி கடைசிவரை நிலைத்து நின்றால் 170 ரன்கள்தான் வந்தது என்ற குற்றச்சாட்டு ஏற்கக்கூடியதுதான். தொடக்கத்தில் நிதானமாக, மெதுவாக பேட் செய்தாலும், ஸ்ட்ரைக் ரேட்டை பராமரித்து கோலி கொண்டு செல்கிறார், கடைசி நேரத்தில் கேமியோ ஆடுகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் இருந்தது. வரும் ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cn0e4e16llwo

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2024 at 16:41, ஈழப்பிரியன் said:

இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது.

வணக்கம் @கிருபன்

அப்புறம் என்ன .

போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள்.

முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள்.

போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.

அந்த‌க் கால‌ம் ம‌லை ஏறி போய் விட்ட‌து...........சின்ன‌ நாட்டு அணி வீர‌ர்க‌ள் எல்லாம் ப‌ண‌ ம‌ழையில் மித‌க்கின‌ம்...............திற‌மை இருந்தா விளையாட்டில் எந்த‌ உச்சிக்கும் போக‌லாம்................

Link to comment
Share on other sites

  • இணையவன் changed the title to டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
  • கருத்துக்கள உறவுகள்

2024 ரி - 20 உலகக் கிண்ணத்திலிருந்து சர்வதேச வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிறுத்தக் கடிகார முறைமை நிரந்தரம்

15 MAR, 2024 | 05:39 PM
image

(நெவில் அன்தனி)

இந்த வருடம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து வெள்ளைப் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நிறுத்தக் கடிகாரம் (Stop clock) முறைமை நிரந்தரமாக்கப்படவுள்ளது.

இந்த முடிவு வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) வருடாந்த சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஜூன் மாதம் தொடங்கவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியிலிருந்து அனைத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ரி20 சர்வதேச போட்டிகளிலும் நிறுத்தக் கடிகாரம் நிரந்தரமாக்கப்படும்.

ஆடவருக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் சர்வதேச போட்டிகளில் 2023 டிசம்பரில் பரீட்சார்த்த அடிப்படையில் நிறுத்தக் கடிகாரத்தை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த பரீட்சார்த்த செயற்பாடு 2024 ஏப்ரல் வரை தொடர்வதாக இருந்தது. ஆனால், இந்த பரீச்சார்த்த செயற்பாடானது போட்டிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவு செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த பரீட்சார்த்த செயற்பாட்டின் மூலம் ஒவ்வொரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் 20 நிமிடங்களை மீதப்படுத்தலாம் என பிரதம நிறைவேற்று அதிகாரிகள் குழுவிடம் எடுத்துக்கூறப்பட்டது.

இதற்கு அமைய சகல முழு அந்தஸ்துடைய நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்த முறைமை 2024 ஜூன் 1ஆம் திகதயிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்திலிருந்துதான் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

நிறுத்தக் கடிகார விதிக்கு அமைய வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் களத்தடுப்பில் ஈடுபடும் அணியினர் ஒரு ஓவர் முடிவடைந்து 60 செக்கன்களுக்குள் அடுத்த ஓவரை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 செக்கன்களிலிருந்து பூஜ்ஜியம் வரை பின்னோக்கி நகரும் மின்னியல் கடிகாரம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்படும். கடிகாரத்தின் தொடக்கத்தை தீர்மானிப்பது மூன்றாவது மத்தியஸ்தரின் பொறுப்பில் இருக்கும்.

களத்தடுப்பில் ஈடுபடும் அணி முந்தைய ஓவர் முடிவடைந்து குறிப்பிட்ட 60 செக்கன்களுக்குள் அடுத்த ஓவரின் முதலாவது பந்தை வீச தவறினால் 2 எச்சரிக்கைகளுக்கு உள்ளாகும். தொடர்ச்சியாக மீறல்கள் இடம்பெற்றால் ஒவ்வொரு மீறல்களுக்கும் 5 ஓட்டங்கள் வீதம் அபாராதம் விதிக்கப்படும். அதாவது மற்றைய அணியின் மொத்த எண்ணிக்கைக்கு 5 ஓட்டங்கள் வீதம் சேரும்.

இந்த விதியில் சில விதிவிலக்குகள் உள்ளன, மேலும் கடிகாரம் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அது ரத்து செய்யப்படலாம்.

ஓவர்களுக்கு இடையில் ஒரு புதிய துடுப்பாட்ட வீரர் களம் நுழையும்போது,

உத்தியோகபூர்வ தாகசாந்தி இடைவெளி அறிவிக்கப்படும்போது,

துடுபாட்ட வீரர் அல்லது களத்தடுப்பாளருக்கு உபாதை ஏற்பட்டு சிகிச்சைக்கு கள மத்தியஸ்தர் ஒப்புதல் வழங்கும்போது,

களத்தடுப்பில் ஈடுபடும் அணியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட எந்த சூழ்நிலையிலும் நேரம் இழக்கப்படும்போது இந்த விதியில் விதிவிலக்களிக்கப்படும்.

https://www.virakesari.lk/article/178815

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, இலங்கையில் கூட்டாக 2026 ரி20 உலகக் கிண்ணம்; 2024 ரி20 உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு இருப்பு நாட்கள்

Published By: VISHNU   15 MAR, 2024 | 08:15 PM

image
 

(நெவில் அன்தனி)

ஐசிசியினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு 2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடத்தும் என்பதை ஐசிசி மீண்டும் உறுதிசெய்துள்ளது.

2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 20 அணிகள் பங்குபற்றும்.

2026 ரி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான முறைமையையும் ஐசிசி அங்கீகரித்துள்ளது.

இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் கூட்டாக நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பெறும் நாடுகள், வரவேற்பு நாடுகளான இந்தியாவுடனும் இலங்கையுடனும் இயல்பாகவே 2026 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறும்.

வரவேற்பு நாடுகளின் நிரல்படுத்தல்களைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு வரையான மற்றைய அணிகள் தீர்மானிக்கப்படும்.

எஞ்சிய 8 நாடுகள் பிராந்திய தகுதிகாண் சுற்றுகள் மூலம் ரி20 உலகக் கிண்ணத்தில் இணையும்.

இது இவ்வாறிருக்க, இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு இருப்பு (ரிசேர்வ்) நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்றைய ஐசிசி சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் குழு நிலைப் போட்டிகள் (லீக் சுற்று) மற்றும் சுப்பர் 8 சுற்று  போட்டிகளின்போது ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும அணிக்கு குறைந்தது ஐந்து ஓவர்கள் வீசப்பட வேண்டும் என  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் நொக் அவுட் போட்டிகளில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி மேலும் அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/178827

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ன் மிசின் கோலிய‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவு செய்ய‌ மாட்டோம் என்று தேர்வுக் குழுவின‌ர் அட‌ம் பிடிக்கின‌ம்.............ந‌ட‌ந்து முடிந்த‌ 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை ம‌ற்றும் 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் கோலி ந‌ல்லா விளையாடி அணிக்கு ப‌ல‌ம் சேர்த்தார்...........கோலி அடிச்சு ஆட‌ வில்லை என்று பொய் குற்ற‌ சாட்டு சொல்லுவ‌து ஏற்க்க‌ முடியாது..............ரோகித் ச‌ர்மா த‌ல‌மையில் இந்தியா இர‌ண்டு வ‌கையான‌ உல‌க‌ கோப்பையும் தூக்க‌ வில்லை..............டோனி க‌ப்ட‌னாய் இருந்த‌ போது எல்லா கோப்பையும் இந்தியா தூக்கி விட்ட‌து..........ம‌ற்ற‌ க‌ப்ட‌ன் மாருக்கும் கோப்பைக்கும் ராசி இல்லை............ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருந்தும் முக்கிய‌மான‌ ம‌ச்சின் கோட்ட‌ விடுகின‌ம்...............இந்திய‌ர்க‌ளுக்கு தேசிய‌ விளையாட்டை விட‌ ஜ‌பிஎல் தான் அவைக்கு முக்கிய‌ம் ஹா ஹா..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ரோகித், கோலி இடம் பெறுவதில் என்ன பிரச்னை? கோலியால் பிசிசிஐ-க்கு என்ன சவால்?

ரோகித், கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விமல் குமார்
  • பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி
  • 26 மார்ச் 2024

“டி20 கிரிக்கெட் என்று வரும்போது, அதனை பிரபலப்படுத்த என் பெயர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். என்னுள் இன்னும் கிரிக்கெட் (டி20) இருப்பதாக உணர்கிறேன்.”

விராட் கோலியின் இந்த கருத்து எதிர்பார்த்தது போலவே, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக கோலி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கூட அவர் விளையாடவில்லை.

இதற்கிடையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலி தேர்வு செய்யப்படுவது கடினம் என்பது போன்ற ஊகங்கள் தொடர்ந்து எழுந்தன.

மனம் திறந்து பேசிய விராட் கோலி

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா இருப்பார் என்பதை சில வாரங்களுக்கு முன்பு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார். அதே நேரம், உலகக் கோப்பை தொடரில் கோலி விளையாடுவது குறித்த கேள்வியை அவர் தவிர்த்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள், உலகக் கோப்பை தொடருக்கான அணியில் கோலி இடம்பெற மாட்டார் என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக செய்திகளை வெளியிட்டன.

இதற்கெல்லாம் மேலாக, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கோலிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுபவருமான ரவி சாஸ்திரியும், குஜராத் டைட்டன்ஸ் மும்பை இந்தியன்ஸ் இடையேனான ஐபிஎல் போட்டியின் வர்ணனையின்போது, வரவிருக்கும் உலகக் கோப்பையில், இளம் வீரர்கள் மற்றும் ஃபார்முக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

கோலியின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், கோலி குறித்துதான் அவர் கூறினார் என்பது தெளிவானது. காரணம், இதே போட்டியில் சக வர்ணனையாளராக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், "சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டின் பரவலை விரிவுபடுத்துவதற்காக கிரிக்கெட்டின் உச்ச அமைப்பான ஐசிசி, கோலி போன்ற ஜாம்பவான்களையும் அவரது பிராண்டையும் பயன்படுத்துகிறது. அப்படியிருக்கும் போது, உலகக் கோப்பையில் கோலி இல்லாத இந்திய அணியை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்" என்று பேசியிருந்தார்.

கோலி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

கோலி

 

மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்த கோலி அணியின் வெற்றிக்கு உதவியதோடு ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்கு பின்னர், ஹர்ஷா போக்லேவுக்கு விராட் கோலி அளித்த பேட்டியில் மனம் திறந்துபேசினார்.

அவரது இந்த பேச்சு ரசிகர்களுக்கு சென்றடைய பேசப்பட்டவை அல்ல, மாறாக பிசிசிஐ தேர்வாளர்களை சென்றடைவதற்காக பேசப்பட்டவை.

இந்த பேட்டிக்கு பின்னர், இந்திய அணியின் தேர்வாளரான அஜித் அகர்கர் மற்றும் அவரது குழுவினர் பக்கம் பந்தை கோலி திருப்பிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடர்பான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் திட்டங்களுடன் தான் தற்போதும் பொருந்தி போவதை கோலி நன்கு அறிந்துள்ளார். ஆனால், இதில் தேர்வாளர்களுக்கு சில தயக்கங்கள் உள்ளன.

டிராவிட்- அஜித் அகத்கர்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

டிராவிட்- அஜித் அகத்கர்

ரோகித், கோலி இருவரும் ஒருசேர இடம் பெறுவதில் என்ன பிரச்னை?

2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தோல்விக்கு இந்தியாவின் டாப் ஆர்டர் மூவரும்தான் (ரோகித்-கே.எல். ராகுல்-கோலி) காரணம் என்பதில் சந்தேகமில்லை.

ஆங்கர் ரோலில் மூவரும் ஒரே மாதிரி பேட் செய்கிறார்கள். ஒருநாள் உலகக் கோப்பையின் போது, கேப்டன் ரோஹித் முற்றிலும் ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். 50 ஓவர் கிரிக்கெட்டில் டி20 போட்டி போன்ற அதிரடியை வெளிப்படுத்தினார்.

கே.எல். ராகுலை விட இடது கை ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த தேர்வாகத் தெரிகிறார். இப்போது தேர்வாளர்கள் முன் இருக்கும் கேள்வி மூன்றாவது இடத்துக்கு கோலியை தேர்வு செய்வதா அல்லது சுப்மன் கில்லை தேர்வு செய்வதா என்பதுதான்.

ஏனெனில் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் இடம் உறுதியாகி இருக்கிறது.

கோலி அல்லது கில் விளையாடினால், ரிங்கு சிங்கை ஆறாவது இடத்தில் பினிஷராக பயன்படுத்த முடியாது.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி - ரோகித் சர்மா

அத்தகைய சூழ்நிலையில், தேவைப்பட்டால், விளையாடும் 11 பேர் பேர் கொண்ட அணியில் கில்லை தேர்வு செய்யாமல் இருக்கலாம். ஆனால், விராட் கோலியை அப்படி செய்ய முடியாது. கோலி அணியில் நீடிக்கலாமா என்ற விவாதம் இங்கிருந்து தொடங்கியது.

அனுபவம் மிக்க தற்போதைய கேப்டனை மேட்ச் வின்னராக கருதும்போது, முன்னாள் கேப்டனிடம் ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை என்று கோலியின் ஆதரவாளர்களும் ரோகித் சர்மாவின் விமர்சகர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் இரண்டிலும் ரோகித்தை விட கோலி சிறப்பான நிலையில் இருக்கிறார்.

ஆனால், ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியா காயமடையாமல் இருந்திருந்தால் ரோகித் இந்த அணியில் இருந்திருக்க மாட்டார் என்றும், ரோகித் தனது ஆட்டத்தில் திடீரென்று இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்க மாட்டார் என்றும் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் கருதுகின்றனர்.

ரோகித், கோலி ஆகிய இரண்டு ஜாம்பவான்களையும் ஆடும் லெவனில் ஒருசேர வைத்திருப்பது அணியின் சமநிலையை பாதிக்கக் கூடும் என்ற சிக்கலும் உள்ளது.

 

கோலியால் பிசிசிஐ-க்கு புதிய சவால்

ரோகித் உலகக் கோப்பையின் ஒரு அங்கமாக இருந்தால், அவரை யாரும் அணியில் இருந்து நீக்க முடியாது என்பது கோலிக்கு தெரியும்.

காரணம், ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் மற்ற எந்த வீரரையும் விட மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை அவர் அதிகம் விளையாடியுள்ளார் என்பதற்கு வரலாறு சாட்சி.

எல்லாவற்றிற்கும் மேலாக, மெல்போர்னில் 2022 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தானுக்கு எதிரான அவரது வரலாற்று இன்னிங்ஸை ஒருவரால் எப்படி மறக்க முடியும்?

ஒட்டுமொத்தமாக, தற்போது சிறப்பான இன்னிங்ஸை விளையாடியதன் மூலம் அணி தேர்வாளர்களுக்கு கோலி சவால் விடுத்துள்ளார்.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக கோலி விளையாடி வருவதால், ரோகித்துடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என்பதும் அவரது வாதமாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த இரண்டு வீரர்களும் தொடக்க ஜோடியாக இணைந்து சில போட்டிகளில் மட்டுமே விளையாடியிருப்பது தேர்வாளர்களுக்குப் பிரச்னையாக இருக்கும்.

வரும் வாரங்களில் கோலி மீண்டும் சிறப்பான ஸ்கோர்களை குவித்தால், தேர்வாளர்களின் வாதம் முறியடிக்கப்படலாம்.

ரோஹித் சர்மா - டிராவிட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரோகித் சர்மா - டிராவிட்

ஐபிஎல்லில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதால்தான் கோலி ரன்களை குவிக்கிறார், ஃபார்மில் இருக்கிறார். மாறாக, இந்திய அணியில் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்குகிறார் என்றும் தேர்வாளர்கள் கூறக் கூடும்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கோலியின் தேர்வு தொடர்பான விசயத்தில் பிரச்னை தீர்க்கப்படுவதற்கு பதிலாக தற்போது தேர்வாளர்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

கோலியின் சமீபத்திய கருத்துகளால் தேர்வாளர்களின் பிரச்னை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், டி-20 போட்டிகளுக்கு கோலிக்கு பதிலாக இளம் வீரரை தேர்வு செய்யுமாறு பிசிசிஐ, அணி தேர்வாளர்களுக்கு (மறைமுகமாக) செய்தி கொடுத்திருந்தால், இந்த கடினமான முடிவை எடுப்பதில் அகர்கர் சற்று ஆறுதல் அடையக் கூடும்.

ஆனால், பதினோரு பேர் கொண்ட அணியில் கோலிக்கு இடம் இல்லை என்பதை பயிற்சியாளர் டிராவிட்டும் கேப்டன் ரோகித் சர்மாவும் ரசிகர்கள் முன் எப்படி நியாயப்படுத்த முடியும்?

ஒட்டுமொத்தமாக, இந்த விஷயம் தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் சில வாரங்கள் கோலியின் பேட்டிங்கிற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கக் கூடும்.

https://www.bbc.com/tamil/articles/cz4z8wl831no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

434368650_744039747843092_79826386832622

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T20 உலகக்கிண்ண தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

ben-stokes.jpg

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது.

முழு உடற்தகுதி பெறுவதில் முழுமையாக கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருவதாகவும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருவதாகவும் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறை வீரராக தனது சிறப்பான பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதால், IPL மற்றும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை தியாகம் செய்வதாக அவர் கூறியுள்ளார்.

சிறப்பான சகலதுறை வீரராக எதிர்காலத்தில் விளையாட இந்த தீர்மானம் உதவும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

முழங்கால் காயம் காரணமாக நீண்ட நாட்களாக பந்துவீசாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், கடைசியாக இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 ஓவர்கள் மட்டும் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/297897

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான விளம்பரத் தூதுவராக உசேன் போல்ட்!

06-3.jpg

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான விளம்பரத் தூதுவராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது.

இதன்படி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள குறித்த தொடரானது ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் இடம்பெறவுள்ளன

அத்துடன் இதன் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/300191

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

இதன்படி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள குறித்த தொடரானது ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

   வணக்கம்   @கிருபன் இந்தப் போட்டிக்கான ஆயத்தங்கள் நடக்குதா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

   வணக்கம்   @கிருபன் இந்தப் போட்டிக்கான ஆயத்தங்கள் நடக்குதா?

அடுத்த வாரம் பார்ப்போம். ஜூன் 2 ஆரம்பம்!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

கோலிக்கு பதில் சூரியகுமார் யாதவ்? இப்பவே கண்ணை கட்டுது.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

கோலிக்கு பதில் சூரியகுமார் யாதவ்? இப்பவே கண்ணை கட்டுது.🙂

என்ன‌ அண்ணா கோலி நீக்க‌மோ இந்த‌ உல‌க‌ கோப்பையில்................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

அடுத்த வாரம் பார்ப்போம். ஜூன் 2 ஆரம்பம்!

கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு மாத‌மும் ஒரு கிழ‌மையும் இருக்கு

வீர‌ர்க‌ளுக்கு ஓய்வில்லாம‌ போட்டிய‌ தொட‌ர்ந்து ந‌ட‌த்துகின‌ம்

ஜ‌பிஎல் முடிந்த‌ கையோடு வீர‌ர்க‌ள் க‌ர்விய‌ன் தீவை நோக்கி ப‌ய‌ணிக்க‌னும்...........................

நியுசிலாந் Bரீம் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானை வென்று விட்டின‌ம் தொட‌ரையும் வென்று விட்டின‌ம்.................சென்னை அணிக்காக‌ விளையாடும் இர‌ண்டு நியுசிலாந் வீரர்க‌ள் இதுவ‌ரை அடிச்சு ஆட‌ வில்லை இவ‌ர்க‌ளுக்கு ப‌தில் பாக்கிஸ்தான் தொட‌ரில் சிற‌ப்பாக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளை நியுசிலாந் தேர்வுக்குழு தேர்வு செய்யுக் கூடும் என்று நினைக்கிறேன்.............................

 

Link to comment
Share on other sites

12 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ அண்ணா கோலி நீக்க‌மோ இந்த‌ உல‌க‌ கோப்பையில்................................................

அப்படி தான் செய்திகள் சொல்கிறது பையா. ஓட்டங்களை மெதுவாக எடுக்கிறாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2024 at 19:12, ஏராளன் said:

T20 உலகக்கிண்ண தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

ben-stokes.jpg

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது.

முழு உடற்தகுதி பெறுவதில் முழுமையாக கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருவதாகவும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருவதாகவும் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறை வீரராக தனது சிறப்பான பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதால், IPL மற்றும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை தியாகம் செய்வதாக அவர் கூறியுள்ளார்.

சிறப்பான சகலதுறை வீரராக எதிர்காலத்தில் விளையாட இந்த தீர்மானம் உதவும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

முழங்கால் காயம் காரணமாக நீண்ட நாட்களாக பந்துவீசாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், கடைசியாக இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 ஓவர்கள் மட்டும் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/297897

இவ‌ர்க‌ள் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ மாட்டின‌ம்

இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை தெரிவு செய்தாலும் க‌ர்விய‌ன் மைதான‌த்தில் இவ‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது

வெஸ்சின்டீஸ் மைதான‌ங்க‌ளில் இங்லாந் அணி அதிக‌ம் தோற்று இருக்கு போன‌ வ‌ருட‌மும் 20ஓவ‌ர் தொட‌ரை வெஸ்சின்டீஸ் அணி இவ‌ர்க‌ளை வென்றார்க‌ள்

 

நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு சுனில் ந‌ர‌னை தேர்வு செய்தால் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருக்கும்..................ஜ‌பிஎல்ல தொட‌க்க‌ வீர‌ராய் இற‌ங்கி ப‌ல‌ விளையாட்டில் அடிச்சு ஆடி அணிக்கு வெற்றிய‌ பெற்று கொடுத்த‌வ‌ர்......................................................

6 minutes ago, nunavilan said:

அப்படி தான் செய்திகள் சொல்கிறது பையா. ஓட்டங்களை மெதுவாக எடுக்கிறாராம்.

கோலி அன்மைக் கால‌மாய் அடிச்சு ஆடுகிறார் இல்லை அது உண்மை தான் 

ஆனால் மைதான‌த்தில் 10ஓவ‌ர் வ‌ரை நின்று பிடித்தால் பிற‌க்கு மின்ன‌ல் வேக‌த்தில் ர‌ன் மிசின் த‌ன‌து விளையாட்டை காட்ட‌ தொட‌ங்கிடுவார்...........................ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர் இந்தியா அணியில் சேர்க்காம‌ விடுவ‌து கோலிக்கு ம‌ன‌ உளைச்ச‌ல‌ கொடுக்க‌ கூடும்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இதுவ‌ரை அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ர்க‌ளில் கோலி தான் முத‌ல் இட‌ம் ஆனால் இவை பிலேஒவ்க்கு  போக‌ மாட்டின‌ம் ஆன‌ ப‌டியால் வேறு அணி வீர‌ர்க‌ளுக்கு கூடுத‌ல் விளையாட்டு இருக்கு அவ‌ர்க‌ள் சில‌து முத‌ல் இட‌த்தை பிடிக்க‌ முடியும்🙏🥰.............................................................. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2024 at 19:06, nunavilan said:

கோலிக்கு பதில் சூரியகுமார் யாதவ்? இப்பவே கண்ணை கட்டுது.🙂

கோலி அணியில் சேர்க்க‌ ப‌ட்டு இருக்கிறார்............................

 

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் யாரும் இட‌ம் பெற‌ வில்லை................ இந்தியா இம்முறையும் கோப்பை தூக்க‌ கூடாது...........................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.சி.சி. ஆடவர் ரி - 20 உலகக் கிண்ணத்துக்கான அணியை அறிவித்த முதல் நாடு நியூஸிலாந்து

29 APR, 2024 | 02:48 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆடவர் ரி-20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு நியூஸிலாந்து முதலாவது நாடாக தனது உலகக் கிண்ண குழாத்தை இன்று (29) அறிவித்தது.

அனுபிவம் வாய்ந்தவரும் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து குழாத்தில் அதிரடி ஆட்டக்காரர் டெவன் கொன்வேயும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியில் பங்குபற்றுவதைத் தவிர்த்த டெவன் கொன்வே முன்வரிசை வீரராக அணியில் இடம்பெறுகிறார்.

எவ்வாறாயினும், வேகப்பந்துவீச்சாளர் அடம் மில்னே அணியில் இடம்பெறவில்லை.

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சத்திர சிகிச்சைக்குள்ளானதாலேயே அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என அறிவிக்கப்படுகிறது.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கய்ல் ஜெமிசனும் உபாதை காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

பிரதான வேகப்பந்துவீச்சாளர்களும் அனுபவசாலிகளுமான டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட் ஆகிய இருவரும் குழாத்தில் இடம்பெறுவதுடன் சௌதீ தனது 7ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடவுள்ளார்.

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இதுவரை விளையாடாத இளம் அதிரடி வீரர் ரச்சின் ரவிந்த்ரா, மூத்த வீரர் மெட் ஹென்றி ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

dfgdffg.gif

https://www.virakesari.lk/article/182234

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ண இந்திய குழாத்தில் ஷிவம் டுபே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பான்ட்

Published By: VISHNU   30 APR, 2024 | 07:50 PM

image

(நெவில் அன்தனி)

ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இந்திய குழாம் செவ்வாய்க்கிழமை (30) அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மாவும், உதவித் தலைவராக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை 20 நாடுகள் பங்குபற்றும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு அஜித் அகார்கார் தலைமையிலான இந்திய அணி தேர்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (30) கூடி ஆலோசனை நடத்தி 15 வீரர்களைக் கொண்ட ரி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய குழாத்தை தெரிவு செய்தனர்.

தற்போது நடைபெற்றுவரும் இண்டியன் பீறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணித் தலைவர் சஞ்சு செம்சன், சென்னை சுப்பர் கிங்ஸின் அதிரடி நாயகன் ஷிவம் டுபே ஆகியோருக்கு இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கார் விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷாப் பான்டுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

சில கால இடைவெளிக்குப் பின்னர் யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விளையாடியிருந்தார்.

இம்முறை ஐபிஎல் இல் அசத்திவரும் ருத்துராஜ் கய்க்வாட் உட்பட இன்னும் சிலர் தெரிவாளர்களின் கண்களில் படாதது ஆச்சரியத்திற்குரியது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, ஐ பி எல் இல் பெரிதாக பிரகாசிக்காத  ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டது கிரிக்கெட் விமர்சர்களை மட்டுமல்லாமல் இரசிகர்களையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

ஆனால், தொழில்முறை கிரிக்கெட்டான ஐபிஎல் இலும் பார்க்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பாண்டியா, யாதவ் போன்றவர்கள் அசத்துவார்கள் என தெரிவாளர்கள் நம்புகின்றனர்.

விக்கெட் காப்பாளர் கே.எல். ராகுலுக்கும் இந்தியா குழாத்தில் இடம் வழங்கப்படவில்லை. அவர் கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவில்லை.

இந்திய குழாத்தில் ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சஞ்சு செம்சன், சூரியகுமார் யாதவ் துடுப்பாட்ட வீரர்களாகவும்,

1_india_squad.png

ஹார்திக் பாண்டியா (உதவித் தலைவர்), ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல் ஆகியோர் சகலதுறை வீரர்களாகவும்,

அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேந்த்ரா சஹால், குல்தீப் யாதவ், மொமஹத் சிராஜ் ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் இடம்பெறுகின்றனர்.

நியூஸிலாந்து குழாம் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்பட்டது.

ஏனைய குழாம்கள்

இந்தியாவுடன் செவ்வாய்க்கிழமை (30) மாலைவரை நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் தங்களது உலகக் கிண்ண கிரிக்கெட் குழாம்களை அறிவித்துள்ளன.

தென் ஆபிரிக்கா: ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர், ரெயான் ரிக்ல்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், மாக்கோ ஜென்சன், ஒட்நீல் பாட்மன், ஜெரால்ட் கொயெட்ஸீ, பிஜோன் ஃபோச்சுன், கேஷவ் மகாராஜ், அன்ரிச் நோக்யா, கெகிசோ ரபாடா, தப்ரெய்ஸ் ஷம்சி.

2_south_africa_squad.png

இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), பில் சோல்ட், ஹெரி ப்றூக், மொயீன் அலி, சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், மார்க் வூட், அலெக்ஸ் ஹேல்ஸ், டாவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், டெவிட் வில்லி, க்றிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ்.

3_england_squad.png

https://www.virakesari.lk/article/182362

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் யாரும் இட‌ம் பெற‌ வில்லை................ இந்தியா இம்முறையும் கோப்பை தூக்க‌ கூடாது...........................................

எந்த தமிழக வீரரை தெரிவு செய்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?  என்னைப் பொறுத்தவரையில் சரியான அணியைத்தான் அவர்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

எந்த தமிழக வீரரை தெரிவு செய்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?  என்னைப் பொறுத்தவரையில் சரியான அணியைத்தான் அவர்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்

ந‌ட‌ராஜ‌ன் தெரிவு செய்து இருக்க‌லாம்

2022 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில்
ந‌ட‌ராஜ‌னை தெரிவு செய்யாத‌து பிழை என்று முன்னாள் இந்திய‌ன் க‌ப்ட‌ன் சுனில் க‌காஸ்க‌ர் தெரிவித்து இருந்தார்
இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌ராஜ‌ன் ந‌ல்லா தானே ப‌ந்து போடுகிறார்..............................

உந்த‌ இந்திய‌ அணி கோப்பை தூக்க‌ போவ‌து கிடையாது

2007க்கு பிற‌க்கு எத்த‌னை 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையை நட‌த்தி விட்டின‌ம் ஆனால் இந்தியா 1முறை தான் கோப்பை தூக்கின‌து.................................

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • 2020   எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல;இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது. இத்தகைய புல்லுருவிகளைச் சரியாக அடையாளம் காணாவிட்டால் வரலாற்றைத் தொலைத்தவர்களாகி விடுவோம். இந்த வரலாற்றுப் புரட்டு இணையத்தின் துணையுடன் புலம்பெயர் தேசங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. பொதுத் தேர்தலொன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தருணத்தில் கற்பனைகளை வரலாறாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்பது இரவலாக அல்லது கடனாகப் பெற்ற பெயரே. உண்மையான ரெலோவின் தலைவரின் பெயர் தம்பித்துரை முத்துக்குமாரசாமி. இவர்  , திருநெல்வேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தற்போது இவர் உயிருடன்தான் புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கிறார் . ஆயுதப் போராட்டம் என்றால் அதன் வரலாறு கிழக்கு மாகாணத்தில் இருந்தே வெளிப்பட்டது. 1958 இல் குடியேற்றவாசிகளான சிங்களவர்களுக்குச் சார்பாக தமிழர் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினர் வந்தனர். இவர்களை ஷொட்கன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியதுடன் அவர்கள் வந்த ஜீப்பையும் எரித்தனர் துறைநீலாவனை இன உணர்வாளர்கள். இவ்வாறு விரட்டியேரில் ஒருவரான கனகசூரியம் என்பவரும் அவரது துணைவியாரும் பின்னர் கல்முனை பட்டின சபையாக விளங்கியபோது அதன் உறுப்பினர்களாக விளங்கினர். இவர்களது மகன்தான் அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய மேஜர் அன்ரனி. எம்.ஜீ.ஆரை மட்டந்தட்ட கருணாநிதி பயன்படுத்துவது அவர் மலையாளி என்று. அதனால்தான் பாதிக்கப்படும் தமிழர் தொடர்பாக எம்.ஜீ.ஆர். அக்கறை காட்டுவதில்லை என்ற சாரப்படப் பேசி வந்தார். பொறுமை இழந்த எம்.ஜீ.ஆர். ஒரு கட்டத்தில் ‘குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர்தானே கருணாநிதி”, என்றார். இந்தப் பீரங்கித் தாக்குதலில் நிலைகுலைந்து விட்டார் கருணாநிதி. எப்படியோ ஓடித் திரிந்து குட்டிமணி குழுவில் எஞ்சியோரில் சிறீசபாரத்தினத்தைத் தொடர்பு கொண்டனர் தி.மு.கவினர். ‘குட்டிமணி தீவிரவாதி என்ற விடயம் கருணாநிதிக்குத் தெரியாது. வேறு வழக்கு விடயமாகக் கைதாகியிருந்தவர் என்ற அடிப்படையில்தான் இலங்கையிடம் அவரை ஒப்படைத்தார் அப்போதைய முதல்வர்” என்று ஓர் அறிக்கை விடுத்தார். அப்போதுதான் தன்னை செயலதிபர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட சிறீசபாரத்தினம். அந்த அறிக்கையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் வெளியுலகுக்குத் தெரிந்தது. இந்த அறிக்கைக்கு முன்னதாக பந்தண்ணா என்றழைக்கப்படும் ராசப்பிள்ளையே இதனை வழிநடத்தி வந்தார். இதற்கு முன்னதாக இக்குழு இயங்கிய விதம் குறித்து ஐயர் தனது புத்தகத்தின்33,34 ஆம் பக்கங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது. அவர்கள் எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறோம். இந்த முடிவின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கதுரை மற்றும் ராசப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும் நட்பு சக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகின்றது. அவர்கள் அப்போது ரெலோ (TELO) என்ற அமைப்பை உருவாக்காவிட்டாலும் தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர். பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பில் இருந்த எவருமே அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம். தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் பிரதானமாக கடத்தல் தொழிலையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவும் மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல் நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கினோம்.” இதே பெருந்தன்மை குட்டிமணி அண்ணா, தங்கண்ணா ஆகியோரிடமும் இருந்தது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிமை கோரி இலச்சினையுடனான அறிக்கையை ஊடகங்களுக்கு (வீரகேசரி உட்பட) வெளியிட்டனர் புலிகள். இதில் மொத்தம் 11 பேரின் மீதான நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ஆறாவது பெயரான தங்கராசா (முன்னாள் எம்.பி. அருளம்பலத்தின் செயலாளர்) மீதான நடவடிக்கையை குட்டிமணி குழுவினரே மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு ஒரு அறிக்கையை தாங்கள் வெளியிடப் போவதாகவும் எனவே தங்கராஜாவின் சம்பவம் குறித்து என்ன செய்வது என குட்டிமணி, தங்கத்துரையிடம் கேட்டபோது,’ நாங்கள் உங்களைப் போல கட்டுப்பாடாக இருப்பது சிரமம். எங்களின் தொழிலுடன் (கடத்தல்) உணர்வு ரீதியாக செய்யக்கூடியவற்றையே செய்யப் போகிறோம். எனவே அதனையும் புலிகளின் பேரிலேயே உரிமை கோருங்கள்”, எனக் குறிப்பிட்டதாக ஒரு சந்திப்பில் இளங்குமரன் தெரிவித்தார். இதனையே ஐயரும் தனது நூலில், ‘தங்கராஜா கொலை முயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட குட்டிமணி, தங்கதுரை சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா – இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபரத்தை மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகள் பெயரிலேயே உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராசாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.” (பக். 117) எனக் குறிப்பிடுகிறார். http://www.ilakku.org/wp-content/uploads/2020/02/WhatsApp-Image-2020-02-22-at-08.57.07.jpeg   புலிகள் – குட்டிமணி குழு ஒன்றாக இணைந்து செயற்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட’துரோகத்துக்குப் பரிசு” (சுந்தரம் மீதான சாவொறுப்புக் காரணங்கள்)நாடு கடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு (கிருஷ்ணா வைகுந்தவாசனின் 1982 தைப்பொங்கலன்று தமிழீழப் பிரகடனத்துக்கு எதிரான நிலைப்பாடு) என்ற தலைப்பிலான பிரசுரங்களும் புலிகளின் இலச்சினையுடனேயே வெளியிடப்பட்டன. சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் விளைவால் இனி தனித்தனியாக இயங்குவோம் எனப் பிரபாகரன் முடிவெடுத்தபோது இரு பகுதியினரும் இணைந்து மேற்கொண்ட நீர்வேலி மக்கள் வங்கி வாகனத் தொடரணியை மறித்துக் கையகப்படுத்திய பணத்தின் மீதியையும், வாங்கிய ஆயுதங்களையும் இவர்களிடம் ஒப்படைத்தார். இம்முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்த சீலனிடம்,’எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. இதைப் போல பல விடயங்களை உங்களால் செய்ய முடியும். குட்டிமணி அண்ணா, தங்கண்ணா இல்லாத நிலையில் அவர்களால் இது போன்ற ஒன்றைச் செய்வது சாத்தியமற்றது”, எனக் கூறினார். ஏற்கெனவே தங்கண்ணா, குட்டிமணி அண்ணா முதலானோரை தற்கொலைத் தாக்குதல் மூலமேனும் விடுவிப்போம் என்று தான் சொன்ன கருத்துத் தொடர்பாக மௌனமாக இருந்தவர்களிடம் ‘நாங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும் இவர்களின் விடுதலை தொடர்பாக நீங்கள் ஏதாவது முயற்சி மேற்கொண்டால் எமது உச்சக்கட்டப் பங்களிப்பை வழங்குவோம்”, எனத் தெரிவித்திருந்தார் பிரபாகரன். இதெல்லாம் நடந்தது இந்தியாவில். அப்போது செல்வம் இலங்கையில் இருந்தார். (அன்று அக்குழுவில் இருந்தவர்களில் இவர் மட்டுமே நாட்டில் எஞ்சியிருக்கிறார்.) 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் உருவானது. தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கமே தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவாகக் காரணமானது. தரப்படுத்தல் சட்டம் மாணவர்களுக்கு பாதகமாகக் கொண்டு வரப்பட்டபோது இந்தக் கருத்து வலுவானது. வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் ‘எண்ணிக்கை தெரியாத குற்றம்”, என்றொரு வசனத்தை சிவாஜி பேசுவார். அதுதான் செல்வத்தின் நிலையும். 1969 இல் ரெலோ உருவானதாக சொல்கிறார். பொதுவாழ்வில் ஈடுபடுவது என்பது சில வரைமுறைகளுக்கு உட்பட்டது. இதன் அடுத்த கட்டம் தமிழீழக் கோரிக்கை முன்வைத்த பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது. வரலாற்றைத் தவறாகப் பதியக்கூடாது. ஒரு சட்டவிரோத கடத்தல் தொழில் செய்பவர்களுக்கும் பொலிஸ_க்கும் இடையே முரண்பாடு ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். அதனை விடுதலைப் போராட்ட நடவடிக்கை என நிறுவ முற்படுவது வரலாற்றுத் தவறு. அடுத்த தேர்தலிலும் தனது எம்.பி. பதவியை உறுதிப்படுத்தவே 50 வருடக் கதை விடுகிறார் செல்வம். அப்போது இவருக்கு என்ன வயதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எதிர்வரும் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்றோர் தெரிவாவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கட்சியில் முதலாவது எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வம் அந்த நிலையை இழந்து விட்டார். எம்.பி. பதவியையேனும் தக்கவைக்கவே இந்த வரலாற்றுப் புரட்டு. மீண்டும் வலியுறுத்துகிறோம். தமிழரின் எதிர்ப்பு ஆயுத முனையில் முதலில் புரிய வைக்கப்பட்டது துறைநீலாவணையில். பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டமாக ஆயுதவழியில் ஆரம்பித்தது 1972 இல். அது சரி மாவைக்குமா வரலாறு தெரியாது? காசி ஆனந்தனின் ‘அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்” என்ற பாடல் ஒலிக்கும்போது யார் யாருக்கு பிரபாகரன் சுட்டுக் காட்டினார் என்று சுட்டிக் காட்ட வேண்டுமா? ஐயரின் நூலில் 56 ஆம் பக்கத்தில் ‘சேனாதிராசா, காசி ஆனந்தன், பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மெரீனா பீச்சில் சந்திக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கும்போது ரெலோவின் பொன்விழகுறித்த அழைப்பு விடுக்கும்போது வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் மௌனமாக இருந்தது ஏன்? சுதுமலை முற்றுகையின்போது கிட்டு உட்பட புலிகளுக்கு இழப்பு நேராமல் முற்றுகையை முறியடித்தது தானே என்று (இச்சமரில் மேஜர் அல்பேட் வீரச்சாவு) கதை விட்ட ஜனா இப்போதும் 50 வருடக் கதை சொல்கிறார். உண்மை இப்படி இருக்கப் புதிய வரலாற்றுப் புனை கதைகளைக் கூற செல்வம், ஜனா, போன்றோர் முற்படுகின்றனர்.வரலாற்றை மறந்தவர்களுக்கு வரலாற்றில் இடமில்லாமல் போகலாம். வல்வெட்டித்துறைக்கெனத் தனியான வரலாறு உண்டு. பெருமைக்குரிய விடயங்களில் தலையானது பிரபாகரன் பிறந்த மண் என்பது. அன்னபூரணி என்ற பாய்மரக் கப்பலினை அமெரிக்காவுக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையே ஓட்டிச் சென்ற கடலோடிகளைக் கொண்டது. இராட்சதப் புகைக்கூண்டுகளை இலங்கை மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தக் கடலோடிகள், பர்மாவுக்கான வணிகப் பயணத்தின்போது பறந்து சென்ற புகைக்கூண்டு ஒன்று இந்தப் பாய் மரக் கப்பலுக்கு அகே வந்தபோது அதனை எட்டிப் பிடித்து அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து இலங்கை மண்ணில் இதனை உருவாக்கினர். பட்டத் திருவிழா வல்வையின் தனித்துவம், யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் முன்னணியில் நின்ற இராசலட்சுமி என்ற துணிச்சல்காரி பிறந்த மண். புலிக்குப் பிறந்தது பூனையாகாது எனக் களமுனையில் நிரூபித்தவர் இவரது மகன் கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமார். முன்னுக்குப் போ என்ற வார்த்தையை விட எனக்குப் பின்னே வா என்றே போராளிகளை வழிநடத்திய தளபதி இவர். போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் இவரது படை நடத்தும் ஆற்றலையும் துணிச்சலையும் வான் வழியாக சுதுமலையில் களமிறங்கிய சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரின் முற்றுகையை முறியடித்த விதத்தை நேரடியாகக் கண்டு வியப்புற்றனர். இதன் பின்னர் சுதுமலை முகாமை விட்டுப் புலிகள் விலகத் தீர்மானித்தபோது, ‘போராளிகளே உங்களது ஆற்றலை, அர்ப்பணிப்பை, வீரத்தை நேரடியாகப் பார்த்தோம். தயவு செய்து எங்கள் ஊரை விட்டுப் போய்விடாதீர்கள்”, எனத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இத்தகைய வரலாறு தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் உதித்த 36 இயக்கங்களுள் வேறு எவற்றுக்கும் இல்லை. அத்தகைய தளபதி தனது சாவின் போதும் சரித்திரம் படைத்தான். இத்தகைய பெருமைகள் கொண்ட வல்வெட்டித்துறையின் சாதனைப் பட்டியல் மிக நீண்டது. உபசரிப்பிலும் இந்த மக்கள் தனித்துவமானவர்கள். போராளிகளோ மற்ற எவரோ சாப்பாட்டுக்காகக் காத்திருக்கையில் பார்சலிலோ, கிண்ணத்திலோ கறி வரும். இங்கோ தூக்கு வாளியில் கொண்டு வந்து தமது அன்பை வெளிப்படுத்துவர். இத்தகைய ஊருக்குப் பலம் சேர்க்கிறோம் என்றெண்ணி கற்பனைகளை வரலாறாக்கவோ, அதற்குத் துணை போகவோ தேவையில்லை. இன்று ச.ச.முத்து என்பவர் மூத்தபோராளி என்ற பெயரில் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் சக்கைப் போடுபோட்டு வருகிறார். 1980 இற்குப் பின் இயக்கத்துடன் தொடர்பு வைத்த – இணைந்து கொண்ட எவருக்குமே இந்த முகம் பரிச்சயமற்றது. தான் மட்டுமே தலைவர் மீது விசுவாசம் கொண்டவராக நடிக்கும் நடிப்புக்கு சிவாஜி, கமல் போன்றோரெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ‘ஒரு விளக்குக் கொழுத்த ஆசைப்படுகிறார்கள்”, என்று தலைவரின் இழப்பை ஒத்துக்கொள்வோரைச் சாடுகிறார். 1979 இல் சுமார் இரு வார காலம் வீரவாகு என்ற பெயரில் விபத்தாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர்தான் இந்த ச.ச.முத்து. இவர் குறித்து ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்” என்ற தலைப்பில் கணேசன் (ஐயர்) எழுதிய நூலில் பின்வருமாறு காணப்படுகின்றது. சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கற்றுக் கொண்டிருந்த சிறுவனான வீரவாகு இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்து கொள்கின்றனர். இது தெரிய வரவே குமரப்பா, மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்பு கொள்ளும் அவரது குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பி விடுமாறு கோருகின்றனர். வீரவாகும் வீட்டுக்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பி வைக்கிறார். வீட்டுக்குச் சென்ற அவர் பொலிஸில் சரணடைந்து விடுகிறார்.”இத்தகைய வரலாற்றைக் கொண்ட ச.ச.முத்து பிரான்ஸில் இருந்து வெளிவரும் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தில் இடம்பெற்றுள்ளார். எங்கள் மண்ணின் வரலாற்றை நா.யோகேந்திரநாதன், சாந்திநேசக்கரம் போன்றோர் தத்ரூபமாக எழுதினாலும் இவர்கள் என்றும் போராளிகளாக இருந்ததில்லை. போராளி என்று பொதுவெளியில் சொல்லிக் கொண்டதுமில்லை. அவ்வாறு மற்றவர்கள் அறிவிக்கவும் அனுமதித்ததில்லை. 2016 மாவீரர் நாளன்று பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக வெளிவந்த குறிப்பில் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்தவரும் – சமர்களப் போராளியும் – பெருந் தளபதிகளின் நண்பரும் – தேசியத் தலைவருடன் ஆரம்ப காலத்திலிருந்து செயற்பட்டவரும் – வரலாற்று ஆய்வாளருமான ச.ச. முத்து அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களினதும் மாவீரர்களினதும் ஒப்பற்ற தியாகங்களை நினவு கூர்ந்ததுடன் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டு நூல் வடிவில் ஆவணமாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐயரின் குறிப்பை வாசித்தபின் சமர்க்களப் போராளி என்று குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரளி என்பது புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கிட்டுவிடம் ஒரு பத்திரிகையாளர், இயக்கத்தில் வல்வெட்டித்துறையின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டார். அதற்குக் கிட்டு, ‘புலிகள் ஒரு தலைமறைவு இயக்கம். இதற்கு இரகசியம் பேணப்பட வேண்டும். அதனைத் தலைவர் ஆரம்பிக்கும்போது தனது பாடசாலை சகாக்கள், நண்பர்கள் போல நம்பிக்கைக்குரியவர்களை இணைத்துத்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அந்த வகையில்தான் மாத்தையா, குமரப்பா, ரகு, பண்டிதர், சங்கர் போன்றோர் படிப்படியாக அவருடன் இணைந்து கொண்டோம். இன்று அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் உருவாகி வருகின்றனர். உதாரணத்திற்கு மன்னாரில் விக்ரர், இனி மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களைச் சேர்ந்தோர் பொறுப்பெடுப்பர். வன்னியிலும் மாத்தையா இனங்காணப்பட்டவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.” எனக் கூறினார். இதுதான் யதார்த்தம். கிட்டு குறிப்பிட்டவாறே வரலாறும் நடந்தது. இந்த விடயத்தில் இரு முக்கிய விடயங்களைக் குறிப்பிட வேண்டும். 1983 ஏப்ரல் 07 அன்று கந்தர்மடம் வாக்குச் சாவடியில் நிகழ்ந்த தாக்குதலில் முதன்முறையாக ரி-56 ஆயுதம் கைப்பற்றப்பட்டது. கொக்குவிலில் புலிகள் இருந்த அறையொன்றுக்குள் இது கொண்டுவரப்பட்டது. பொன்னம்மான் அதனை தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு சில நிமிடம் நடனமாடினார். அடுத்தடுத்த நாட்களில் இன்னொரு தாக்குதலை விரைவாக நடத்த வேண்டும் என தலைவரிடம் வலியுறுத்தினர் சில போராளிகள், ‘நான் இயக்கத்தை ஆரம்பித்த பின்னர் இந்தப் போராட்டத்தில் எத்தனையோ பேர் வந்து போய்விட்டார்கள். எனக்கு மிஞ்சி இருப்பது இந்த 30 பேரும்தான். ஆகவே அவசரப்படாமல் நிதானமாக நாங்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார். வந்து போனவர்களின் முகங்களில் எது எது அவரது ஞாபகத்துக்கு வந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. 1983 இல் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு பற்றியும் குறிப்பிட வேண்டும். பல்வேறு தொடர்புகள் மூலம் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள லொட்ஜ்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் இரு இளைஞர்களுக்கிடையே சிறு முரண்பாடு. அதில் ஒருவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவர் மற்றவரிடம், ‘றெயினிங் முடிச்சு வல்வெட்டித்துறைக்குள்ளாலதானை போவாய். அப்ப பார்த்துக் கொள்ளுறன்”, என்றார் மற்றவரிடம். இந்த விடயம் தலைவருக்குத் தெரிய வந்ததும் ‘அவரை அடுத்த வண்டியிலேயே (படகு) ஊருக்கு அனுப்பி வையுங்கள். இவ்வாறான சிந்தனையுள்ளவர்கள் இயக்கத்துக்குச் சரிவர மாட்டார்கள்”, என உத்தரவிட்டார். இவ்வாறு சொன்ன இளைஞனுக்கு 18 அல்லது 19 வயதுதான் இருக்கலாம், அவன் செய்த தவறுக்காக மட்டுமல்ல ; இயக்கத்தில் இனி எவருக்குமே இந்த மாதிரிச் சிந்தனைகள் வரக்கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ’30 பேர் கொண்ட இயக்கமாக இருந்த புலிகள் இயக்கம் சீலன், ஆனந்த், செல்லக்கிளி அம்மான், என மூவரை இழந்து நிற்கிறது. இந்திய அரசு 200 பேருக்கு பயிற்சி வழங்க முன் வந்துள்ளது. ஆனால், 250 பேரளவில் இப்போது வந்துவிட்டார்கள். திடீரெனப் பருத்து விட்டோம். இனித்தான் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதில் சவாலை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒரே காலகட்டத்தவர் என்றவகையில் இந்தச் சவால் சாமானியமானதல்ல” என்று பண்டிதரும் குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது விடயம் புலேந்திரன் – குமரப்பா தொடர்பானது. 1983 என்றொரு எல்லையை (திருநெல்வேலித் தாக்குதல்) தலைவர் கணிப்பிட்டிருந்தார். உண்மையில் குமரப்பா இயக்கத்தில் பிரிவு ஏற்படுவதற்கு முன்னரே அங்கம் வகித்திருந்தார். (அதிலும், புலேந்திரன் இயக்கத்துக்கு வருவதற்கு முன்னரே.) இருவருமே மாவட்டத் தளபதிகளாக விளங்கியவர்கள். எனினும் இயக்கத்தில் பிரிவு ஏற்பட்டபோது குமரப்பா, காந்தன், சாள்ஸ் போன்றோர் விலகியிருந்தனர். இவர்கள் திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர். செல்லக்கிளி அம்மான், யோகன் பாதர் போன்றோர் திருநெல்வேலித் தாக்குதலுக்கு முன்பாகவே மீண்டும் இணைந்து கொண்டனர். புலேந்திரன் மத்தியகுழு உறுப்பினர் என்று அறிவிக்கப்பட்டாலும் குமரப்பாவுக்கு இந்த நிலை வழங்கப்படவில்லை. ஒட்டுமொத்த இனத்தின் தலைவனாகத்தான் பிரபாகரன் நடந்து கொண்டார். தான் வகுத்த விதியை அவர் மீறவில்லை. இந்த விடயத்தைத் தேவர் அண்ணா போன்றோர் புரிந்து கொள்ளாமல் ச.ச. முத்து தொடர்பான விடயங்களில் நெகிழ்ச்சிப் போக்கினால் வரலாற்றைத் திரிக்க முயல்வது கவலைக்குரியது. தேங்காய், மாங்காய் வியாபாரிகள் என்ற சாக்கில் வீடெடுத்தார்கள் அப்பையா அண்ணன், சீலன் என்று கதை விடுவதும் ச.ச.முத்துவின் அழகான கற்பனை. திருநெல்வேலி தாக்குதலுக்கு முன்பாக தலைவர் சொன்னதாகவே சில விடயங்களைக் குறிப்பிட்டு தான் அந்தக் காலத்தில் இருந்ததாக நிறுவ முயல்வதும் மோசடியானது. இவற்றுக்கெல்லாம் 800 – 900 என்று Like வேறு. வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு பரவலாக்கப்படுகின்றது என்று தெரிந்தும் ஊரவன் என்ற ஒன்றுக்காக மோசடிக்கு துணைபோவது சரியானதல்ல. தேசத்தின் பாலம்”, என்ற அமைப்பு போராட்டத்தின் பங்காளர்களாக விளங்கிய மற்றும் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வருகிறது. குறிப்பாக மூதூர் மற்றும் வாகரைப் பகுதிகளில் கல்வியைத் தொடரச் சிரமப்படும் பொருளாதார நெருக்கடியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன், விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டக்களப்பு நகர் போன்ற இடங்களிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்தல், தேவையான குடும்பங்களுக்கு குழாய்க் கிணறு அமைத்தல் போன்ற பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இதனை ஒருங்கிணைத்துச் செயற்படுத்துபவர் முன்னாள் போராளியான லூக்காஸ் அம்மான். அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய பா.நடேசனின் சகோதரர் இவர். தான் பிறந்த வல்வை மண்ணுக்கும் உதவத் தவறுவதில்லை இவர். 2002 இல் தலைவரைச் சந்தித்தபோது போராட்டத்திலிருந்து விலகிய உங்களைப் போன்றோர் பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்கு இம்மாதிரி உதவலாமே என அறிவுறுத்தியதுடன் உதவி தேவைப்படுவோர் பட்டியலையும் இவரிடம் வழங்கியுள்ளார். வரலாற்றைத் திரிபுபடுத்துபவர்கள் லூக்காஸ் அம்மானைப் பின்பற்றி உருப்படியாக பணியாற்றுவதுதானே வல்வை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும். நன்றி – ஈழநாடு   https://www.ilakku.org/வரலாற்றை-திரிபுபடுத்துவ/
    • ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை)   விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் இவரும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்துகொண்டார். குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச்சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வட மாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிகேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர். இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது. 35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கம் மாஸ்டருக்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என சிறிதுகால தடுப்பின் பின் விடுதலையானார். முத்துக்குமார் மனோகர் (பசீர்காக்கா - யாழ்ப்பாணம்)   இறுதிப் போரில் இவரது மகள் சங்கீதா (அறிவிழி) 26.04.2009 அன்று வீரச்சாவெய்தியிருந்தார். முன்னதாக இவரது மகன் சங்கர் எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். (07.04.2009) இவரது சிற்றன்னை திருமதி மோட்சானந்தம் முத்துக்குமார் 10.02.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். சகோதரி முறையான கோமளா, அவரது கணவர் இராசையா தனபாலசிங்கம், மகன் பாஸ்கர் (இரு பிள்ளைகளின் தந்தை) ஆகியோர் 31.03.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். விடுதலை புலிகள் அமைப்பில் பொட்டுஅம்மானை இணைத்தவர்.1986 முதல் ஊடகவியலாளராகவும் இனங்காணப்பட்டிருந்தார். ஈழமுரசில் அரசியற் தொடரான 'குத்துக்கரணங்கள்' மாவீரரின் புகழை போராளிகளின் எண்ணத்தில் எடுத்தியம்பிய 'ஒரு போராளியின் நாட் குறிப்பிலிருந்து' என்ற தலைப்புகளில் எழுதியவர். 1990 இல் மட்டக்களப்புக்கு நடந்துபோனபோது அவதானித்து, உணர்ந்த விடயங்களை 'உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்' மற்றும் 'சிறைப்படாத சிந்தனைகள்' தொடர், மாவீரர் புகழை எடுத்தியம்பும் 'விழுதுகள்' ஆனையிறவு மீட்பு உட்பட ஓயாத அலைகள் - 3 சமர்க்களம் தொடர்பான விடயங்களை நேரில் கண்டு விபரிக்கும் தொடர் 'மீண்டும் யாழ். மண்ணில் கால் பதித்த எம் தடங்கள்' என்பனவற்றை ஈழநாதத்தில் எழுதியவர். இறுதிப் போரின் பின்னர் பூசா முதல் யாழ்ப்பாணம் வரை சுமார் 10 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் மொத்தம் நான்கு வழக்குகள் இவருக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சுமார் ஐந்து ஆண்டுகள் தடுப்பின் பின் விடுதலையானவர். https://www.pathivu.com/2018/05/blog-post_288.html -----------------------------------------------------------------------------------------------------------     யோகன் எ பாதர் (பாலிப்போடி சின்னத்துரை) தந்தை செல்வா முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்த வரலாறு பாசி என்று தமிழ் இளைஞர் பேரவை காலத்திலும் பின்னர் யோகன் பாதர் என ஆயுதப்போராட்டத்திலும் அழைக்கப்பட்ட பாலிப்போடி சின்னத்துரைக்கு உண்டு. தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த காலத்தில் காசி ஆனந்தன் அண்ணாவின் சகோதரன் சிவஜெயம் (பின்னாளில் மேஜர் சந்திரன்) கிராமம் கிராமமாக துவிச்சக்கர வண்டிகளில் சென்று தமிழ்த் தேசியத்துக்காக கடுமையாக உழைத்தவர். இவர் வடக்கிலும் சகல மாவட்டங்களுக்கும் காசி ஆனந்தன் அண்ணாவுடன் சேர்ந்து விடுதலைப் பணியாற்றியவர். தந்தை செல்வா மட்டுமல்லாது அவருக்கும் அடுத்த நிலையிலிருந்த அமிர்தலிங்கம் போன்றோருடனும் பழகியவர். மாவையும் இவருடைய பங்கை நிராகரிக்க மாட்டார். மட்டக்களப்பிலிருந்து (ஏன் கிழக்கு மாகாணத்தில் என்று கூடச் சொல்லலாம்) புலிகளில் இணைந்து கொண்ட முதற் போராளி இவர்தான். கருணா உட்பட அன்றைய போராளிகளை இயக்கத்துக்குள் உள்வாங்கியவர். இவர் போட்ட அடித்தளத்திலேயே வடக்கிலிருந்து சென்ற போராளிகளும் இணைந்து போராட்டத்தை வளர்க்க முடிந்தது.  https://thamilkural.net/thesathinkural/views/71024/
    • தோல்வியில் முடிவடைந்த முதலாம் கட்டத் திம்பு பேச்சுவார்த்தைகள்    இணைந்த அறிக்கை வெளியிடப்படுமுன்னர் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். தமிழர் தரப்பினர் முன்வைத்த வாதத்தில், தமது தொடர்ச்சியான ஆட்சேபணைகளுக்குப் பின்னர் அரசதரப்பு செய்வதாக உறுதிதந்த ஊரடங்கு உத்தரவை நீக்குதல், அரசியற் கைதிகளை விடுவித்தல் ஆகிய எந்தவிடயங்களையும் அரசு செய்யவில்லை என்று கூறினர். பதிலுக்கு தமிழர் தரப்பு மீது குற்றஞ்சுமத்திய அரசுதரப்பு, தமிழர் தரப்பால் இழைக்கப்பட்டதாகக் கூறி 73 யுத்தநிறுத்த மீறல்ச் சம்பவங்களைப் பட்டியலிட்டனர்.  அங்கு பேசிய இலங்கை அரச தரப்பின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜ‌யவர்த்தன, தான் முன்வைத்த தீர்வு யோசனையினை தமிழர் தரப்பு படித்து, சாதகமான பதிலுடன் அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை ஆவணி 12 ஆம் திகதி நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவும், இலங்கையரசும் முதலாம் கட்டப் பேச்சுக்கள் குறித்து மிகுந்த திருப்தி வெளியிட்டிருந்தன. ஆனால், தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பொறுத்தவரை பேச்சுக்கள் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தன. ஜெயவர்த்தன விரித்த வலையில் இந்தியா விழுந்துவிட்டது என்கிற பிரபாகரனின் நம்பிக்கை மென்மேலும் உறுதியடைந்தது. ஆகவே, ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்துவதென்று தீர்மானித்த அவர், தனது போராளிகளை அதற்கான தீவிர பயிற்சிகளில் ஈடுபடுத்தலானார். ஒரு பிராந்திய வல்லரசு எனும் நிலையிலிருந்து தமிழர்களின் பிரச்சினையில் மத்தியஸ்த்தம் வகிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தினால் பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியா பெருமகிழ்ச்சி அடைந்திருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களை இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்துவந்ததே இந்தியாவைப் பொறுத்தவரை பெரு வெற்றியாகக் கருதப்பட்டது. சமாதானப் பேச்சுக்களின் தரகர் எனும் நிலையிலிருந்து, பேச்சுக்களில் தீவிரத்துடன் பங்குகொண்ட இன்னொரு தரப்பு என்கிற நிலைக்கு தன்னை உயர்த்தியது குறித்தும் இந்தியா மகிழ்வடைந்திருந்தது. இதனால் இந்தியா சர்வதேச மட்டத்தில் நற்பெயரைச் சம்பாதிக்கத் தொடங்கியது. குறிப்பாக இந்தியாவின் புதிய பிரதமர் ரஜீவ் காந்திக்குப் பாராட்டுதல்கள் வந்து குவியத் தொடங்கின. தென்னாசியாவின் அமைதிக்காக இந்தியா எடுத்துவரும் செயற்பாடுகளை அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெகுவாகப் புகழ்ந்திருந்தன.    பேச்சுவார்த்தைகள் முறிவடையாது, யுத்தநிறுத்தம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுவது குறித்து இலங்கையரசாங்கம் மிகுந்த திருப்தியடைந்தது. தனது இராணுவத்தைக் கட்டியெழுப்பும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து திருப்தியடைந்த அரசாங்கம், மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான பகுதிகளில் முன்னரங்க இடைப்பகுதியினை (Buffer Zone) உருவாக்கி போராளிகளை வடக்கிற்குள் மட்டுப்படுத்தும்  காரியங்களில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கியது. நாடு திரும்பிய ஹெக்டர் ஜெயவர்த்தன,  பேச்சுவார்த்தைகள் குறித்த விடயங்களை மந்திரிசபையில் பகிர்ந்துகொண்டார். அமைச்சர்கள் முன்னிலையில் பேசிய ஹெக்டர், போராளிகள் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட இணங்கியிருப்பது சாதகமான நிலைமை என்று கூறினார். மேலும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் முன்வைக்கப்படும் தீர்வொன்றினைப் பரிசீலினைக்கு ஏற்றுக்கொள்ள போராளிகள் இணங்கியிருப்பதும் முக்கியமான திருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், ஹெக்டர் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கொண்டிருந்த நம்பிக்கைகள் அவரது சகோதரரான ஜெயவர்த்தனவிற்கு உவப்பானதாக இருக்கவில்லை. ஏனென்றால், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை இராணுவப் பலத்தின் மூலம் நசுக்கிவிடுவதே அவரது ஒரே எண்ணமாக இருந்தது. ஆகவே, தனது அரசாங்கம் நேர்மையான, சமாதானத்தை நேசிக்கின்ற அரசு என்றும், ஆனால் தமிழர்களோ  விட்டுக்கொடுப்பற்ற, பிடிவாதமான, உறுதியாக‌ முடிவெடுக்கும் திராணியற்ற தரப்பு என்றும் அரச ஊடகங்களினூடாக கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினார். பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரப் பிரிவின் தலைவருடன் பேசிய ஜெயார், இந்தியா மீதும் பிரச்சாரத்தினை முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் பாத்திரத்தைக் கேள்விகேட்டதுடன், இந்தியாவை, போராளிகளைக் கட்டுப்படுத்தி, வழிக்குக் கொண்டுவரும் திராணியற்ற "பிராந்திய வல்லரசு" என்று எள்ளிநகையாடும் பிரச்சாரத்திலும் ஈடுபடலானார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ரொமேஷ் பண்டாரி இலங்கைத் தமிழரின் பிரச்சினை தொடர்பாக ஆளமான அறிவைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் அவருக்கு இருக்கவில்லை. புதிய பிரதமரான ரஜீவ் காந்திக்கு சர்வதேசத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் மழையில் தனக்கும் சிறுதுளி கிடைக்கவேண்டும் என்பதும், ரஜீவ் காந்தியின் பார்வையில் தான் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதையும் தவிர ரொமேஷ் பண்டாரிக்கு வேறு சிந்தனைகள் இருக்கவில்லை. ஆகவே, இதனை நன்கு தெரிந்துவைத்திருந்த ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும், பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழர்களுக்கு மிகச் சொற்பமான சலுகைகளைத் தருவதன் மூலம் யுத்தநிறுத்தகாலத்தை நீட்டிக்கவும், தமது இராணுவத்தைக் கட்டியெழுப்பவும் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். ஆனால், அவர்கள் தமது திட்டத்தில் ஒரு மனிதர் குறித்து கவனமெடுக்க முற்றாகத் தவறியிருந்தனர். அந்த மனிதர்தான் பிரபாகரன். ஆனால், ஜெயவர்த்தனவின் இராணுவ பலத்தினைக் கொண்டு தமிழரின் விடுதலை யாகத்தை முற்றாக அணைத்துவிடலாம் எனும் திட்டத்திற்குச் சவாலாக இருக்கப்போகும் ஒரே மனிதர் பிரபாகரன் தான் என்பதை லலித் அதுலத் முதலி நன்றாக‌ அடையாளம் கண்டிருந்தார். 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 24 அம் திகதி அவரது பிறந்தநாளுக்கு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது வீட்டிற்குச் சென்றிருந்தவேளை அவர் என்னிடம் ஒரு விடயத்தைக் கூறினார். "சபா, உங்களுக்குத் தெரியுமா? பிரபாகரனுக்கும் இன்றைக்குத்தான் பிறந்தநாள். நாம் ஒருவரருக்கொருவர் எதிராகப் போர் புரிகிறோம், ஆனால் எம்மில் எவர் வெல்லப்போகிறோம் என்று எமக்குத் தெரியாது" என்று கூறியிருந்தார்.  லலித் அதுலத் முதலி குறித்த இன்னும் இரு விடயங்களை நான் பகிர்ந்துகொள்கிறேன். 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்து மக்களை பிரபாகரனிடத்திலிருந்து அந்நியப்படுத்தும் உளவியற்போரினை லலித் அதுலத் முதலி ஆரம்பித்தார். அதன்படி, யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்து செயற்பட்டு வரும் பயங்கரவாதிகளை இராணுவத்தினர் தேடியழிப்பதை ஏதுவாக்குவதற்காக , அப்பகுதிகளிலிருந்து தமிழர்கள் அனைவரும் சிறிதுகாலத்திற்கு வெளியேறவேண்டும் என்று அறிவித்திருந்தார்.  யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறி, ஏனைய இடங்களில் தமது நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தங்குவதன் மூலம் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் அரசுடன் நிற்பதாகவும், பயங்கரவதிகளிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியிருப்பதாகவும் காட்டமுடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால், எனது தந்தையார் யாழ்ப்பாணத்திலிருந்த எமது பூர்வீக வீட்டில் வாழ்ந்துவந்தார். எனது சகோதரியும் அவரது நான்கு குழந்தைகளும் அவ்வீட்டிலேயே வசித்து வந்தனர். எனது மாமியார், மைத்துனி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அவ்வீட்டிலேயே வாழ்ந்துவந்தனர். லலித் அதுலத் முதலியை நான் பின்னாட்களில் சந்தித்தபோது, அவரது அறிவித்தலினால் எனது தந்தையார்ர், மாமியார் போன்ற முதியவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். எனக்குப் பதிலளித்த லலித், "பிரபாகரனை சாதாரண‌ தமிழ்ப்பொதுமக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறேன்" என்று அவர் கூறினார். நான் எனது தந்தையாருடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டபோது, "நடக்கிறது நடக்கட்டும், நாங்கள் இங்கேயே பொடியங்களுடன் இருக்கப்போகிறோம்" என்று கூறினார். எந்தத் தமிழ் மக்களைப் பிரபாகரனிடமிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என்கிற எதிர்பார்ப்புடன் லலித் அதுலத் முதலி தனது அறிவித்தலினை மேற்கொண்டாரோ, அந்த அறிவிப்பு அதற்கு நேர்மறையான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. பிரபாகரனை மக்கள் இன்னும் அதிகமாக நேசிக்கும் நிலையினை அது உருவாக்கியிருந்தது. "அவங்கள் ஆருக்காகப் போராடுறாங்கள்? எங்கட உரிமைகளுக்காகத்தானே போராடுறாங்கள்? அவங்களை விட்டுட்டு எங்களால போக ஏலாது" என்று எனது தந்தை தீர்க்கமாகக் கூறினார்.  பின்னர் 1985 ஆம் ஆண்டு தை முதலாம் திகதி, ஆயிரம் மீட்டர்கள் கொண்ட, மக்கள் செல்லமுடியாத பாதுகாப்பு வலயங்களை லலித் அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களில் இருந்து ஆயிரம் மீட்டர்கள் வட்டத்திற்குள் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும். அப்படி வெளியேறாத பட்சத்தில் உங்களுக்கு நடக்கவிருக்கும் அழிவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று வானொலியூடாக‌ அறிவித்தார். ஆனால், மக்கள் அவரது அறிவித்தலை கண்டுகொள்ளவில்லை. ஆகவே, தனது விமானப்படையூடாக தமிழில் அச்சிடப்பட்ட அறிவித்தல்களை பொதுமக்கள் வாழிடங்கள் மீது அவர் கொட்டினார். அதனையும் மக்கள் உதாசீனம் செய்தனர்.ஒருவாரத்தின் பின்னர் மீண்டும் தமிழில் அச்சிடப்பட்ட எச்சரிக்கைகள் வானிலிருந்து அவரது விமானப்படையினரால் கொட்டப்பட்டன. அவ்வாறு அச்சிடப்பட்ட எச்சரிக்கை ஒன்றினை பிரச்சாரப்படுத்துவதற்காக டெயிலி நியூஸ் காரியாலயத்தின் ஆசிரியரான மணிக் டி சில்வாவுக்கும் லலித் அனுப்பி வைத்தார். அது தமிழில் அச்சிடப்பட்டிருந்தமையினால், என்னிடம் தந்து, "லலித் அனுப்பியிருக்கிறார், அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?" என்று என்னைப்பார்த்துக் கேட்டார் மணிக். அதனைப் படித்துவிட்டு நான் சிரித்துக்கொண்டேன். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று என்னிடம் வினவினால் மணிக். "அதில் ஒரு பிழை இருக்கிறது" என்று நான் பதிலளித்தேன். "என்ன பிழை?" என்று மீண்டும் அவர் கேட்டார். "இந்தத் துண்டுப்பிரசுரத்தின் அடியில் பிரபாகரன் ஒப்பமிட்டிருக்கிறார். ஆனால் தனது பெயரை பிரபாகரம் என்று தவறுதலாக எழுதியிருக்கிறார் என்பதனால்ச் சிரித்தேன்" என்று பதிலளித்தேன். "சிங்களவர்கள் மட்டுமே இவ்வாறான தவறுகளை புரியமுடியும். ஒரு தமிழரோ, முஸ்லீமோ "ன்" என்கிற எழுத்திற்குப் பதிலாக "ம்" என்கிற எழுத்தினைப் பாவிக்கும் தவற்றினை ஒருபோதும் செய்யப்போவதில்லை" என்று அவருக்கு விளங்கப்படுத்தினேன். உணர்ந்துகொண்ட சில்வாவும், அத்துண்டுப்பிரசுரத்தில் இருந்த தவற்றினை வெளியே கூற விரும்பவில்லை.  தமிழில் எழுதப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தின் செய்தி இதுதான், அரசாங்கம் தனது இராணுவ முகாம்களைச் சுற்றி ஆயிரம் மீட்டர்கள் சூனியப் பகுதியை உருவாக்குவதாக அறிவித்திருப்பதுடன், இப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுமாறும் அறிவித்திருக்கிறது.  ஆனால், அப்படி எவரும் வெளியேறக்கூடாது என்று உங்கள் அனைவரையும் நான் எச்சரிக்கிறேன். அப்படி யாராவது வெளியேறுவார்களாயின், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  இப்படிக்குப் "பிரபாகரம்" 1984 ஆம் ஆண்டு பங்குனியில் தேசிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற காலத்திலிருந்து லலித் அதுலத் முதலி பிரபகாரனை தனது முதலாவது எதிரியாகவே கருதிச் செயற்பட்டுவந்தார் என்பதைக் காட்டவும், பிரபாகரன் குறித்த அவரது கணிப்புச் சரியானது என்பதைக் காட்டவுமே இச்சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.   பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் - 80 களின் நடுப்பகுயில்  தன‌து நோக்கமான இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குதல், வடக்குக் கிழக்கில் அரச கட்டுப்பாட்டிலிருந்து தமிழர் பிரதேசங்களை விடுவித்தல் ஆகியவற்றுக்கு யுத்தநிறுத்தமும், பேச்சுக்களும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதனால் அவைகுறித்து பிரபாகரன் அதிகம் மகிழ்வடையவில்லை. ஜெயவர்த்தன தமிழர்களுக்கான தீர்வினை இராணுவத்தைக் கொண்டே வழங்குவார் என்பதனைச் சரியாகக் கணித்திருந்த பிரபாகரன், இராணுவத்தை எதிர்கொள்ள தனது போராளிகளை ஆயத்தப்படுத்திவந்தார். ஜெயவர்த்தனவின் உண்மையான நோக்கத்தினை நேர்த்தியாகக் கணித்திருந்தார் பிரபாகரன். பின்னாட்களில் அதுகுறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் சில பத்திரிக்கைகளுக்கும் அவர் பேட்டியளித்திருந்தார்.  கல்கத்தாவிலிருந்து வெளிவரும் "சண்டே" எனும் இதழுக்கு புரட்டாதி 5 ஆம் திகதி வழங்கிய நேர்காணலில் பிரபாகரன் இவ்வாறு கூறியிருந்தார்.  "பேச்சுவார்த்தை ஒரு நாடகம். இந்தப் போர்வையினைப் பயன்படுத்தி எமது மக்கள் மீது இலங்கை இராணுவம் இன்றுவரை அட்டூழியங்களை நடத்தி வருகிறது. எமது மக்கள் மீதான படுகொலைகள் தற்போதும் அரங்கேற்றப்பட்டு வருவதுடன், தமது வாழ்விடங்களில் இருந்தும் அவர்கள் துரத்தப்பட்டு வருகிறார்கள். இது உண்மையான யுத்தநிறுத்தமாக இருந்தால் எனது தளபதிகள் இதுகுறித்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு அமைவாக நாம் எமது நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், எமது மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை இலங்கை இராணுவம் நடத்திவருவதால், பதில் நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டியதாகியிருக்கிறது. ஆனால், இந்தச் சூழ்நிலையினைக் கவனமாகக் கையாளவேண்டிய தேவையினை நான் அறிவேன். இந்த யுத்தநிறுத்தம் கூட ஒரு சூழ்ச்சிதான் என்பதை எனது தளபதிகள் நன்கு அறிந்தே உள்ளனர். அவர்களை நான் கவனமாக வழிநடத்தவேண்டும். யுத்த நிறுத்தத்தினைப் போர்வையாகப் பாவித்து அரசாங்கம் தமிழின அழிப்பினை கச்சிதமாக அரங்கேற்றி வருகிறது". வீக் எனும் பத்திரிகைக்கு 1986 ஆம் ஆண்டு பங்குனியில் வழங்கிய செவ்வியில் பிரபாகரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்,  "யுத்த நிறுத்தம் என்கிற போர்வையில் ஜெயவர்த்தன பாரிய இராணுவமயமாக்கல்த் திட்டத்தினை முடுக்கிவிட்டிருக்கிறார். இராணுவ இயந்திரத்தைக் கட்டியெழுப்ப தனது வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய தொகையினை அரசு ஒதுக்கியிருக்கிறது. கடுமையான அழிவுகளை ஏற்படுத்தும் பல கனரக ஆயுதங்களைத் தொடர்ச்சியாக அரசு தருவித்து வருகிறது. தனது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை அரசு சட்டமாக்கியிருக்கிறது. மொத்தச் சிங்களத் தேசமும் போரிற்கான தயார்ப்படுத்தல்களில் இறங்கியிருக்கிறது. தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதத்திற்கெதிரான பயிற்சிகளுக்காக வெளிநாட்டுக் கூலிப்படையினர் வரவழைக்கப்பட்டிருப்பதோடு, பாக்கிஸ்த்தான் அரசும் நேரடியாகவே இலங்கை இராணுவத்திற்கு உதவி வருகிறது. இவ்வாறான இராணுவமயமாக்கலில் ஜெயவர்த்தன இறங்கியிருப்பதானது, அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, தனது இராணுவத்தின் மூலம் அவர்களை அழிக்கவே கங்கணம் கட்டியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது".    யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுக்கள் குறித்து பிரபாகரன் அதிருப்தி கொண்டிருந்தபோதும், திம்புப் பேச்சுவார்த்தையினூடாக அவருக்கு சில அனுகூலங்களும் கிடைத்திருந்தன. தமிழர் தரப்பில் மிகப்பெரும் சக்தியாக அவர் உருவெடுத்திருந்ததுடன், அவருக்கான அந்த ஸ்த்தானத்தினை வழங்குவதற்கு இந்தியாவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.  திம்புப் பேச்சுவார்த்தைகளின் முதலாம் கட்டம் தோல்வியில் முடிவடைந்த 1985 ஆம் ஆண்டு ஆடி 13 ஆம் நாள் நான் எனது வீட்டில் இருந்தேன். செய்தி ஆசிரியர் ஆரன் என்னைத் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு மறுநாள் கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்திருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் நடக்கவிருக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.