Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

R.Sanakkiyan-4-1.jpg?resize=698,375&ssl=

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!

விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களையும் தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் தாம் தமிழக முதல்வரிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் மேற்படி கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியா மற்றும் தமிழகத்தின் சிறந்த ஆயுதமான பொருளாதரத்தை வைத்துக்கொண்டு ஈழத் தமிழர்களான எங்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்காலத்தையும் தமது மக்களின் அபிலாசைகள் மற்றும் உரிமைகளைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதாரம் என்னும் ஆயுதம் எதிர்காலத்தில் தமிழர்களின் இருப்பினை வலுப்பெறச்செய்வதற்கான வழியமைத்துக்கொடுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1365851

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கொலைக்களம் முடிவடைந்ததும் அதைத் "தமிழர்விரோத தேசமாம்" இந்தியாவுக்காக முன்னின்று நடாத்திய கொலையாளிகளான இராஜபக்ஸ்ச பரிவாரங்களுடன் கைகுலுக்கி, அதனால்  தனது கைகளில் ஒட்டிக்கொண்ட உள்ள தமிழர்களது குருதியின் மணம் இதுவரை மாறாது  எந்தச் சவர்க்காரம் போட்டால் இந்த மணம் போகும் என அங்கலாய்த்து அது, தான் ஒரு சிங்களத்தாயாருக்குப் பிறந்ததுக்கு நன்றிகடனாக இருக்கட்டும் என உள்மனதில் பெருமைகொண்டு, அடுத்துவரும் தனது சிங்களக்காதலிக்குத் தனது திருமணப்பரிசாக அந்தத் "தமிழரின் இரத்த வாடைய" ப் பரிசளிப்பதற்காகக் காத்திருக்கும் சாணாக்கியன் எனும் முன்னாள் பிள்ளையான் குழுவின் முக்கிய தொண்டரை நம்பித் தமிழினம் ஏமாந்து போவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கிதில்லை.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

R.Sanakkiyan-4-1.jpg?resize=698,375&ssl=

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!

விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களையும் தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் தாம் தமிழக முதல்வரிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் மேற்படி கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியா மற்றும் தமிழகத்தின் சிறந்த ஆயுதமான பொருளாதரத்தை வைத்துக்கொண்டு ஈழத் தமிழர்களான எங்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்காலத்தையும் தமது மக்களின் அபிலாசைகள் மற்றும் உரிமைகளைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதாரம் என்னும் ஆயுதம் எதிர்காலத்தில் தமிழர்களின் இருப்பினை வலுப்பெறச்செய்வதற்கான வழியமைத்துக்கொடுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1365851

இலங்கையில் தமிழர்களின் பிரச்சனையை தீர்க்கும் ஆற்றல் தமிழ்நாட்டிடமில்லை   இந்தியா மத்திய அரசிடம் தான் உண்டு  எனவே எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசிடம் முன் வைக்க வேண்டும் ..  இந்த சாணக்கியன் இதை முதலில் கற்று தெரிந்து கொள்ளட்டும்.  மேலும் 

இந்தியாவில்  ஒரு மாநில அரசின் விருப்பமும் மத்திய  அரசின் விருப்பமும் ஒன்றாக இருந்தால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது   வெவ்வேறுறாக இருப்பின்  மத்திய அரசின் விருப்பம் நடைமுறைப்படுத்தப்படும்    ஆகவே மாநில அரசுக்கு கோரிக்கை வைப்பதை விட மத்திய அரசுக்கு வையுங்கள்  பலமுறை வையுங்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் சுப்பரோ சுப்பர். 

😏

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

தலையங்கம் சுப்பரோ சுப்பர். 

😏

நானும் தலைப்பைப் பார்த்து ஏமாந்துட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

முள்ளிவாய்க்கால் கொலைக்களம் முடிவடைந்ததும் அதைத் "தமிழர்விரோத தேசமாம்" இந்தியாவுக்காக முன்னின்று நடாத்திய கொலையாளிகளான இராஜபக்ஸ்ச பரிவாரங்களுடன் கைகுலுக்கி, அதனால்  தனது கைகளில் ஒட்டிக்கொண்ட உள்ள தமிழர்களது குருதியின் மணம் இதுவரை மாறாது  எந்தச் சவர்க்காரம் போட்டால் இந்த மணம் போகும் என அங்கலாய்த்து அது, தான் ஒரு சிங்களத்தாயாருக்குப் பிறந்ததுக்கு நன்றிகடனாக இருக்கட்டும் என உள்மனதில் பெருமைகொண்டு, அடுத்துவரும் தனது சிங்களக்காதலிக்குத் தனது திருமணப்பரிசாக அந்தத் "தமிழரின் இரத்த வாடைய" ப் பரிசளிப்பதற்காகக் காத்திருக்கும் சாணாக்கியன் எனும் முன்னாள் பிள்ளையான் குழுவின் முக்கிய தொண்டரை நம்பித் தமிழினம் ஏமாந்து போவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கிதில்லை.

எழுஞாயிறு, ஒரு பேட்டியில் சாணக்கியன் தனக்குக் காதலி எவரும் இல்லை என மறுத்ததைக் கேட்டேன். உங்கள் கருத்துகளுக்கு ஆதாரம் என்ன?

மேலும், சிங்கள மனைவியைக் கொண்ட புலிகளின் நடேசனையும் இப்படித் தான் திட்டிக் கொண்டிருந்தீர்களா?

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் தலைப்பைப் பார்த்து ஏமாந்துட்டேன்.

இது அரசியல், சமூகவியல், வரலாறு, மானிடவியல் போன்ற   எல்லா துறைகளிலும் உள்ள  பஞ்சத்தைப்போல தற்போது திறமை மிக்க  ஊடகவியலாளர்களுக்கும் எமது  சமூகத்தில்  தற்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 

சாணக்கியன் தனக்குத் துணையாக ஒரு சிங்களப் பெண்ணை தெரிவு செய்துள்ள விடயம் உண்மை. ஆனால் அது அவரவர் தனிப்பட்ட தெரிவு.  அதை யாரும் குறை சொல்ல முடியாது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இது அரசியல், சமூகவியல், வரலாறு, மானிடவியல் போன்ற   எல்லா துறைகளிலும் உள்ள  பஞ்சத்தைப்போல தற்போது திறமை மிக்க  ஊடகவியலாளர்களுக்கும் எமது  சமூகத்தில்  தற்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 

சாணக்கியன் தனக்குத் துணையாக ஒரு சிங்களப் பெண்ணை தெரிவு செய்துள்ள விடயம் உண்மை. ஆனால் அது அவரவர் தனிப்பட்ட தெரிவு.  அதை யாரும் குறை சொல்ல முடியாது. 

ஊடகவியலாளர்களுக்கு பஞ்சம் இல்லை. அவர்கள் தெரிந்து கொண்டுதான் அப்படி போடுகிறார்கள். இதெல்லாம் வியாபார  தந்திரம். 

அவர் சிங்கள பெண்ணை துணையாக தெரிவு செய்தார் என்பதட்கு ஆதாரம் உண்டா?😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியவாதம் இப்போது தமிழ் இனவெறி அடிப்படை வாதமாக மாறிக்கொண்டு வருவதை எழுஞாயிறு அவர்களுன் கருத்து காட்டுகிறது. சிங்கள் தாயாருக்கு பிறப்பதோ, சிங்கள் காதலி இருப்பதோ குற்றமாக கருதும் அளவுக்கு  இனவெறி.   நாட்டுக்காக போராடும்போதே இந்த இனவாதம் என்றால் நாடும் அதிகாரமும்  கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்கிறேன். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Cruso said:

ஊடகவியலாளர்களுக்கு பஞ்சம் இல்லை. அவர்கள் தெரிந்து கொண்டுதான் அப்படி போடுகிறார்கள். இதெல்லாம் வியாபார  தந்திரம். 

அவர் சிங்கள பெண்ணை துணையாக தெரிவு செய்தார் என்பதட்கு ஆதாரம் உண்டா?😜

மிகவும் நம்பரமான தகவல்.

அவர் பொது வெளியில் வந்த காரணத்தால் மட்டுமே இதனை இங்கே குறிப்பிடுகிறேன்.

அத்துடன் யார்  யாரைக்  காதலிக்கின்றனர், திருமணம்  செய்துகொள்கின்றனர் என்பது  எனது உமது  கரிசனைக்குரிய விடயம்  அல்ல. 

😉

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

மிகவும் நம்பரமான தகவல்.

அவர் பொது வெளியில் வந்த காரணத்தால் மட்டுமே இதனை இங்கே குறிப்பிடுகிறேன்.

அத்துடன் யார்  யாரைக்  காதலிக்கின்றனர், திருமணம்  செய்துகொள்கின்றனர் என்பது  எனது உமது  கரிசனைக்குரிய விடயம்  அல்ல. 

😉

அரசியல்வாதிகள் என்னும்போது நாங்கள் அதனை கரிசனையில் எடுத்து கொள்ளுவோம். பொது வாழக்கைக்கு வரும்போது அவர்கள் உற்று நோக்கப்படுவார்கள். குடு காரி, கஞ்சாகாரி, ஊழல்செய்பவர்களாக இருந்தால் அதட்கு அவர்கள் விலை கொடுக்கவேண்டும்.

உம்மைப்போன்ற தனி நபர்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

அரசியல்வாதிகள் என்னும்போது நாங்கள் அதனை கரிசனையில் எடுத்து கொள்ளுவோம். பொது வாழக்கைக்கு வரும்போது அவர்கள் உற்று நோக்கப்படுவார்கள். குடு காரி, கஞ்சாகாரி, ஊழல்செய்பவர்களாக இருந்தால் அதட்கு அவர்கள் விலை கொடுக்கவேண்டும்.

உம்மைப்போன்ற தனி நபர்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை.😜

குடு, கஞ்சா, ஊழல் என்று வரும்போது  அவர்கள்  தனிநபர் என்கிற வட்டத்தில் இருந்து வெளியே வந்துவிடுகின்றனர். 

அதுவரைப் பொது வாழ்க்கையில் உள்ளவர்களது Private life தொடர்பாக கருத்துச் சொல்லும் உரிமை எனக்கோ அல்லது உமக்கோ  அல்லது வேறு எவருக்குமே இல்லை. அது எதிரியாக இருந்தாலும் ஒன்றுதான்.

இதுதான்  அறம், ஒழுக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

குடு, கஞ்சா, ஊழல் என்று வரும்போது  அவர்கள்  தனிநபர் என்கிற வட்டத்தில் இருந்து வெளியே வந்துவிடுகின்றனர். 

அதுவரைப் பொது வாழ்க்கையில் உள்ளவர்களது Private life தொடர்பாக கருத்துச் சொல்லும் உரிமை எனக்கோ அல்லது உமக்கோ  அல்லது வேறு எவருக்குமே இல்லை. அது எதிரியாக இருந்தாலும் ஒன்றுதான்.

இதுதான்  அறம், ஒழுக்கம். 

பொது வாழக்கை எனும் பொழுது அவரது குடும்பமும் சமபந்தப்பட்ட்து. எனவே அவர்கள் யாவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாங்கள் அதை கவனிப்போம்.

நீரும் உமது நாட்டிலுள்ளவர்களுக்கும் அது இல்லாமல் இருக்கலாம். எமக்கு அது பிரச்சினை இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Cruso said:

பொது வாழக்கை எனும் பொழுது அவரது குடும்பமும் சமபந்தப்பட்ட்து. எனவே அவர்கள் யாவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாங்கள் அதை கவனிப்போம்.

நீரும் உமது நாட்டிலுள்ளவர்களுக்கும் அது இல்லாமல் இருக்கலாம். எமக்கு அது பிரச்சினை இல்லை.  

எமக்கு அது பிரச்சனை இல்லை என்று கூறாதீர்கள். எனக்கு அது பிரச்சனை இல்லை   என்று கூறுங்கள். அதுவே நியாயம்,   அதுவே நீதி,.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

எமக்கு அது பிரச்சனை இல்லை என்று கூறாதீர்கள். எனக்கு அது பிரச்சனை இல்லை   என்று கூறுங்கள். அதுவே நியாயம்,   அதுவே நீதி,.....🤣

எமக்கு என்றால் இலங்கையர்கள். விளங்கினால் சரிதான். நீதி, நியாயம், வேற ஏதும் இருக்கா? ஹா ஹா ஹா 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

எமக்கு என்றால் இலங்கையர்கள். விளங்கினால் சரிதான். நீதி, நியாயம், வேற ஏதும் இருக்கா? ஹா ஹா ஹா 😂

 வேலியில் ஓட்டையைப் போட்டு அதற்குள்ளால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களது privacy யை மீறலாம்  என்று கூறுவது நாகரீகம் அடைந்த மக்களுக்கு அழகல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

 வேலியில் ஓட்டையைப் போட்டு அதற்குள்ளால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களது privacy யை மீறலாம்  என்று கூறுவது நாகரீகம் அடைந்த மக்களுக்கு அழகல்ல. 

அப்படியா? யார் அது , எங்கே, எப்போது? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Cruso said:

அப்படியா? யார் அது , எங்கே, எப்போது? 😂

பதற வேண்டாம். தங்கள் மீசையில் மண்படவில்லை. 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க ஆயுதம் கொடுத்ததே உங்க தீவு நசாமாக போகவென்று தான் இந்திய நாட்டு குடிமகனை விட ஆசியாவில் அதிகம் வரி கொடுக்கும் தீவை மாற்றியதே இந்தியா தான் இனி என்ன அன்று வெள்ளைக்காரன் ஆண்டான் இனி imf பெயரில் அதே இலங்கை மக்கள் பெயருக்கு சுதத்திரம் எனும் பெயரில் அதே வெள்ளைக்கு  பெல் அடிக்க கழுவி விட வரிசையில் நிற்ப்பார்கள் .

இதற்குள் பால் சோறு தின்ற மதன முத்தாக்கள் அவங்களுக்கு வக்காலத்து வாங்க நம்ம கூட்டில் ஒரு இரிருவர் .

Edited by பெருமாள்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

பதற வேண்டாம். தங்கள் மீசையில் மண்படவில்லை. 

🤣

நான் எல்லாம் மீசை வளர்ப்பதில்லை ராஜா. வேலியில் ஓடடை  போடட முதல் ஆள் நீர்தான். அது என்ன மடடை வேலியா இல்லை ஓலை வேலியா? தயவு செய்து இந்த மாதிரி உங்கள் அனுபவங்களை பொது வெளியில எழுத வேண்டாம்.   😂😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Cruso said:

நான் எல்லாம் மீசை வளர்ப்பதில்லை ராஜா. வேலியில் ஓடடை  போடட முதல் ஆள் நீர்தான். அது என்ன மடடை வேலியா இல்லை ஓலை வேலியா? தயவு செய்து இந்த மாதிரி உங்கள் அனுபவங்களை பொது வெளியில எழுத வேண்டாம்.   😂😜

சரி சரி விட்டுத்தள்ளுங்கள். இதெல்லாம் ஒரு பெரிய விடயமா என்ன? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

சரி சரி விட்டுத்தள்ளுங்கள். இதெல்லாம் ஒரு பெரிய விடயமா என்ன? 

🤣

ஹா ஹா  ஹா ஹா ...........................😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிற்போக்கு அரசகுடும்பம் புருனே நாட்டு அரசனின் மகன் தனக்கு பிடித்த அரச குடும்பத்தை சேராத பெண்ணை திருமணம் செய்திருக்கின்றார் நேற்றைய செய்தி.   அந்த உரிமை கூட ஈழ தமிழர்களுக்கு கிடையாதோ 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

எழுஞாயிறு, ஒரு பேட்டியில் சாணக்கியன் தனக்குக் காதலி எவரும் இல்லை என மறுத்ததைக் கேட்டேன். உங்கள் கருத்துகளுக்கு ஆதாரம் என்ன?

மேலும், சிங்கள மனைவியைக் கொண்ட புலிகளின் நடேசனையும் இப்படித் தான் திட்டிக் கொண்டிருந்தீர்களா?

சிறீலங்காவின் நாடாளுமன்றில் ஒரு சிங்கள உறுப்பினர் ஒரு மாதத்திற்குள் சாணாக்கியனின் காதலி ஒரு சிங்களப்பெண் அவரைத்தன் சாணாக்கியன் திருமணம் செய்யவுள்ளார் எனக்கூறும் போது சாணாக்கியன் எந்தப்பதிலும் கூறவில்லை.

அப்படி அவர் சுத்தமானவராக இருந்தால், தனது நாடாளுமன்றப் பதவியின் அடிப்படை உரிமையை சம்பந்தப்பட்ட ஊறுப்பினர் மீறுகிறார் எனக்கூறியிருக்கவேண்டும். இந்த ஆதாரம் போதுமா

10 hours ago, Kapithan said:

மிகவும் நம்பரமான தகவல்.

அவர் பொது வெளியில் வந்த காரணத்தால் மட்டுமே இதனை இங்கே குறிப்பிடுகிறேன்.

அத்துடன் யார்  யாரைக்  காதலிக்கின்றனர், திருமணம்  செய்துகொள்கின்றனர் என்பது  எனது உமது  கரிசனைக்குரிய விடயம்  அல்ல. 

😉

 

10 hours ago, island said:

தமிழ் தேசியவாதம் இப்போது தமிழ் இனவெறி அடிப்படை வாதமாக மாறிக்கொண்டு வருவதை எழுஞாயிறு அவர்களுன் கருத்து காட்டுகிறது. சிங்கள் தாயாருக்கு பிறப்பதோ, சிங்கள் காதலி இருப்பதோ குற்றமாக கருதும் அளவுக்கு  இனவெறி.   நாட்டுக்காக போராடும்போதே இந்த இனவாதம் என்றால் நாடும் அதிகாரமும்  கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்கிறேன். 

நான் வாழுவது பின்லாந்து நாட்டில் இப்போது பின்லாந்தின் அடிப்படைவாதிகளும் பணக்காரர்களுக்குமான கட்சியும் சேர்ந்தேதான் அரசை அமைத்திருக்கிறது 

குறிப்பிட்ட அளவு பல்லின மக்கள் இங்கும் வாழுகிறார்கள். அதில் அனேகமானவர்கள் வேலைசெய்தே தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்கிறார்கள்.

பின்லாந்தின் அடிப்படைவாதக்கட்சி என்ன சொல்லுது என்றால் பின்லாந்து பின்லாந்தியர்களுக்கே என, இலங்கைத் தீவிலிருந்து நான் புலம்பெயரக்காரணமானது சிங்கள அடிப்படைவாதமே ஆனால் சிங்கள் அடிப்படைவாதம் எனப்படுவது சிங்களவர்களுக்கு இருந்தே ஆக வேண்டும் அதேவேளை மாற்று இனத்தவர்களுக்கான உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என.

பின்லாந்தின் அரசமைப்பு மற்றும் சட்டதிட்டங்கள் அனைத்தும் பின்லாந்தியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது அது கனடாபோன்ற பல்லினமக்கள் வாழும் நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுடன் ஒத்துப்போகாது. ஏன் பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுடனேயே ஒத்துப்போகாது. 

பின்லாந்து மக்களது எண்ணங்களுடன் நான் ஒத்துப்போகிறேன் அந்தவகையில் சுத்த தமிழ்தேசிய அடிப்படைவாதம் எனக்கு இருந்தால் எவருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை. நான் அப்படியே இருந்துவிட்டுப்போகிறேன்.

நான் எந்தவிதமான ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எனது எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதுபோல்
நான் எந்தவிதமான சிந்தனை உடையவனாக இருக்கவேண்டும் என்பதையும் எனது எதிரிதான் தீர்மானிக்கிறான்.

சும்மா சகோதரத்துவம் தேசிய ஒருமைப்பாடு எனக்கூறிக்கொண்டிருந்தால் சுரணை கெட்டவனாக இருப்பதுபோன்றதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

பிற்போக்கு அரசகுடும்பம் புருனே நாட்டு அரசனின் மகன் தனக்கு பிடித்த அரச குடும்பத்தை சேராத பெண்ணை திருமணம் செய்திருக்கின்றார் நேற்றைய செய்தி.   அந்த உரிமை கூட ஈழ தமிழர்களுக்கு கிடையாதோ 😟

உங்களுக்கு என்ன பிரச்சனை?? நீங்கள்  விரும்பியவரை திருமணம் செயது கொள்ளலாம் எங்கள் ஆதரவு என்றும் உண்டு” 😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.