Jump to content

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

 

2015 இன் பின் கோடை விடுமுறைகளுக்கு வீட்டில் நிற்பது இல்லை என்றே சொல்லலாம்.

தற்சமயம் கோடையிலும் நிற்பதில்லை குளிர் காலங்களிலும் நிற்பதில்லை.

அப்படி என்றால் நன்றாக உலகம் சுற்றுகிறீர்கள் போல தெரியுது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Cruso said:

அப்படி என்றால் நன்றாக உலகம் சுற்றுகிறீர்கள் போல தெரியுது. 

முடிந்தவரை கஸ்டப்பட்டு வேலை செய்தேன்.
இப்போ ஓவ்வூதியம் எடுக்கிறேன்.
பிள்ளைகள் மூவர் வேறு வேறு மாநிலங்களில் குழந்தைகளுடன் இருக்கிறார்கள்.
மாறிமாறி அவர்களிடம் போய் வருகிறோம்.
நியூயோர்க் வீட்டை விற்றுவிட்டு தங்களுக்கருகில் வருமாறு அழைக்கிறார்கள்.
இன்னமும் முடிவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

முடிந்தவரை கஸ்டப்பட்டு வேலை செய்தேன்.
இப்போ ஓவ்வூதியம் எடுக்கிறேன்.
பிள்ளைகள் மூவர் வேறு வேறு மாநிலங்களில் குழந்தைகளுடன் இருக்கிறார்கள்.
மாறிமாறி அவர்களிடம் போய் வருகிறோம்.
நியூயோர்க் வீட்டை விற்றுவிட்டு தங்களுக்கருகில் வருமாறு அழைக்கிறார்கள்.
இன்னமும் முடிவில்லை.

அப்போ இலங்கைக்கு வாற எண்ணமில்லை போல? எப்படியோ குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Cruso said:

அப்போ இலங்கைக்கு வாற எண்ணமில்லை போல? எப்படியோ குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள். 

கடந்த வருடம் பிள்ளைகளுடன் வந்து போனேன்.

கூடிய நாட்கள் சுகயீனமாக இருந்தேன்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதனார் மடம் விலை நிலவரம்கள்..

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறி விலையில் வீழ்ச்சி

veg.jpg

அண்மைக்கால மரக்கறி விலைகளுடன் ஒப்பிடுகையில், இன்று பேலியகொட புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை 700 ரூபா , போஞ்சி 500 ரூபாவாக உள்ள நிலையில், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் விலை முறையே 1,000 ரூபா மற்றும் 1,100 ரூபாவாக உள்ளது.

https://thinakkural.lk/article/291010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை 2 ஆயிரம் ரூபா !!

09 FEB, 2024 | 11:04 AM
image

நாட்டில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (8) ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை  2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் முருங்கைக்காயின் மொத்தவிலை 1980 ரூபாவாக காணப்பட்டது.

மீகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கறிமிளகாய் 1,200 ரூபாவாகவும்  ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,100 ருபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவாக அதிகரித்து வந்த ஒரு கிலோ கரட்டின் விலை நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (8) 650 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/175954

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்காய் மலிவு

மரவள்ளிக்கிழங்கு மலிவு

உள்ளூர் கத்தரிக்காய் (புழுக்கடிச்சது) மலிவு

கீரை மலிவு

வல்லாரை பிடி 80 ரூபா தான்.

வாழைப் பூ மலிவு.

போஞ்சி மலிவு.

தங்காளி வாங்கக் கூடிய விலை தான்.

இதரை வாழைப்பழம் மலிவு.

ரம்புட்டான் (6) 100 ரூபா. கொழும்பில் 10 (100 ரூபா)

பப்பாளிப் பழம்- 200 ரூபா.

இவை எல்லாம் ஒப்பீட்டளவில்.. மலிவாக இருக்கும் போது..

எதுக்கு சந்தையில் வரவு குறைந்த விலை கூடிய மரக்கறிகளை நாடினம்..???!

மக்கள் விலை கூடியதை வாங்காமல் விட தன்பாட்டில் விலை குறைக்கப்படும்.

 

(இது யாழ்ப்பாணம்... மற்றும் திருநெல்வேலி சந்தைகளின் விலை அடிப்படையில்.)

யாழ்ப்பாணத்தில் இல்லாத முருங்கை இலை.. கொழும்பில் கிடைக்கிறது. கொழும்பில்... பெட்டாவில்.. ஓரளவு மரக்கறி மலிவு.. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி.. தெகிவளை பகுதிகளை காட்டிலும். 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

குறைவடைந்த மரக்கறிகளின் விலைகள்!

12 MAR, 2024 | 04:04 PM
image
 

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலைகள் வார நாட்களை விட இன்று (12) குறைவடைந்துள்ளது.

இதன்படி , சந்தைகளில் ஒரு கிலோ கரட் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீன்ஸ் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 450 ரூபாவாகவும் , ஒரு கிலோ  தக்காளி 320 ரூபாவாகவும், ஒரு கிலோ  லீக்ஸ் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ கறி மிளகாய் 600 ரூபாவாகவும் ,ஒரு கிலோ கத்தரிக்காய் 250 ரூபாவாகவும், ஒரு கிலோ  பீட்ரூட் 500 ரூபாவாகவும் ,ஒரு கிலோ புடலங்காய் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ பாவற.காய் 450 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டிக்காய் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ  பச்சை மிளகாய்  600 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 200 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.

மேலும் , கொழும்பு மெனிங்சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ முட்டைக்கோஸ் 320 ரூபாவாகவும் , ஒரு கிலோ  தக்காளி 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாவாகவும்,  ஒரு கிலோ தேசிக்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய்  300 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.

குறைவடைந்த மரக்கறிகளின் விலைகள்! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதரி பிடிச்ச சிறிலங்கா இளசுகளே 
ஆள்களை வெட்டாதீர்கள் மண்னை வெட்டுங்கோடா...
மோபைலில் கட் அன்ட் பெஸ்ட் பண்ணாமல் 
மண்னை கட் பண்ணுங்கோடா
கெக் வெட்டி யூ டியுப் படம் காட்டாமல்
மண்ணை வெட்டுங் கோடா...

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு என்னதான் விலை போடுங்க லண்டன் கனடாவுக்கு வரும் மரக்கறிகள் விலை மாற்றம் இல்லையே ? என்ன மரக்கறி என்றாலும் ஒரு தமிழ் கடை வாசலுக்கு வரும் அடக்க விலை கிலோ ஆறு பவுன்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2024 at 10:06, nedukkalapoovan said:

வாழைக்காய் மலிவு

மரவள்ளிக்கிழங்கு மலிவு

உள்ளூர் கத்தரிக்காய் (புழுக்கடிச்சது) மலிவு

கீரை மலிவு

வல்லாரை பிடி 80 ரூபா தான்.

வாழைப் பூ மலிவு.

போஞ்சி மலிவு.

தங்காளி வாங்கக் கூடிய விலை தான்.

இதரை வாழைப்பழம் மலிவு.

ரம்புட்டான் (6) 100 ரூபா. கொழும்பில் 10 (100 ரூபா)

பப்பாளிப் பழம்- 200 ரூபா.

இவை எல்லாம் ஒப்பீட்டளவில்.. மலிவாக இருக்கும் போது..

எதுக்கு சந்தையில் வரவு குறைந்த விலை கூடிய மரக்கறிகளை நாடினம்..???!

மக்கள் விலை கூடியதை வாங்காமல் விட தன்பாட்டில் விலை குறைக்கப்படும்.

 

(இது யாழ்ப்பாணம்... மற்றும் திருநெல்வேலி சந்தைகளின் விலை அடிப்படையில்.)

யாழ்ப்பாணத்தில் இல்லாத முருங்கை இலை.. கொழும்பில் கிடைக்கிறது. கொழும்பில்... பெட்டாவில்.. ஓரளவு மரக்கறி மலிவு.. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி.. தெகிவளை பகுதிகளை காட்டிலும். 

விலை குறைவோ இல்லையோ தற்போது சிங்கள இனவாத சொறிலங்கா வுக்கு டாலர் பவுன்ஸ்  ஐரோ வேணும் அதனால் சொந்த நாட்டு மக்கள் பட்டினி கிடந்தாலும் கவலையில்லை மறுபடியும் புலம்பெயர் காலை அவர்களுக்கு தெரியாமலே தொட்டு கும்பிட்டு டாலர் கறக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் விலை நிலவரம்

Published By: DIGITAL DESK 3

13 MAR, 2024 | 12:56 PM

 

நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை (13)  விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், (முட்டைகோஸ்) கோவா 425 ரூபாவாக விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை நுவரெலியா கரட் கிலோ ஒன்றின் விற்பனை விலை 395 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல லீக்ஸ் 210 ரூபா, ராபு 80 ரூபாய், பீட்ரூட் (இலையுடன்) 220 ரூபாவாகவும், இலை வெட்டப்பட்ட பீட்ரூட் 270 ரூபாவாகவும் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் உருளை கிழங்கு (வெள்ளை) 355 ரூபாவாகவும், உருளை கிழங்கு (சிவப்பு) 375 ரூபாவாகவும், நோக்கோல் 170 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் அதிக உச்ச விலை கண்ட நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர மரக்கறிகளின் விலைகளும் கணிசமாக சரிவு கண்டுள்ளது.

அந்தவகையில் தக்காளி (பச்சை) 800 ரூபாவாகவும், கறிமிளகாய் 555 ரூபாவாக மொத்த விலையில்  விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், சிவப்பு கோவா 2100 ரூபாவாகவும், காலிஃப்ளவர் (நுவரெலியா) 650 ரூபாவாகவும், புரக்கோலி 550 ரூபாவாகவும் வில்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் விலை நிலவரம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்

14 MAR, 2024 | 07:29 PM
image

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (14) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்பட்டன.

இதன்படி , ஒரு கிலோ கரட் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ பயற்றங்காய் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ  பீர்க்கங்காய் 120 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் , ஒரு கிலோ கத்தரிக்காய் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ தக்காளி 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் ,ஒரு கிலோ புடலங்காய் 160 ரூபாவாகவும் , ஒரு கிலோ பூசணிக்காய் 160 ரூபாவாகவும் , ஒரு கிலோ வாழைக்காய் 200 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 180 ரூபாவாகவும் ,ஒரு கிலோ இஞ்சி 1,800 ரூபாவாகவும் , ஒரு கிலோ  உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பாவக்காய் 180 ரூபாவாகவும்  காணப்பட்டன.

https://www.virakesari.lk/article/178746

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண விலை நிலவரம்கள்  20/3/2024

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறிகளின் விலை 10 வருடங்களின் பின்னர் குறைவடைந்தன!

06 APR, 2024 | 05:57 PM
image
 

தம்புள்ளை பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை 10 வருடங்களின் பின்னர் குறைவடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது . 

தினசரி காய்கறிகளின் வருகை  அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகப்  வியாபாரிகள் தெரிவித்தனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் , 

ஒரு கிலோ போஞ்சி 40 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலும், கோவா மற்றும் வெண்டக்காய் கிலோ 100 ரூபாவாகவும், கரட் 200 ரூபாவாகவும், வெள்ளரிக்காய் 15 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/180590

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சடுதியாக உயர்ந்த தேசிக்காயின் விலை…!

3-6.jpg

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1000 ரூபா முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், ஒரு கிலோ பச்சை இஞ்சி தற்போது 3,000 ரூபா முதல் 3,200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ள போதிலும் நுகர்வோர் அவற்றை கொள்வனவு செய்வதற்கு அங்கு வராத நிலை காணப்படுவதாக பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/300586

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபா

Published By: DIGITAL DESK 7

16 MAY, 2024 | 09:00 AM
image
 

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை  (15) 01 கிலோ கிராம்  எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சைபழம் விநியோகிக்கப்படுகின்றது.

சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம்  கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/183653

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலுமிச்சை, இஞ்சியின் விலை சடுதியாக உயர்வு!

Lemon-ginger.jpg

சந்தையில் எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை இன்றைய தினம் (18) சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் சில்லறை விலை 2,000 ரூபாவை எட்டியுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைக் கடந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/301947

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Published By: DIGITAL DESK 3

27 MAY, 2024 | 12:05 PM
image
 

இஞ்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 5,000 ரூபாவை எட்டியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 4,800 ரூபாவாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் போஞ்சிக்காயின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் விலை  1,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

https://www.virakesari.lk/article/184586

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍....... முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள். ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.
    • என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
    • வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று  கூற ஏன்  இப்படி கஷ்டப்பட வேண்டும்.  வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை.  https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
    • ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள். 1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது,  யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள் “ உண்மையை “ எழுதுங்கள், “உண்மையாய் “ எழுதுங்கள் என …. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம்.   Yoga Valavan Thiya 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.