Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

சிங்களவன் சூழ்ச்சி விஷயத்தில் எச்சரிக்கையாய் இருங்கள் என்று தாக்குதல் செய்தவர்களை சொல்லவந்தால் நீங்கள் என்னை தாளிப்பதில் குறியாயிருக்கிற்ர்ர்கள் என்பது புரிகிறது

பரவாயில்லை, , அதையும் ஒரு கருத்தாக எடுத்துவிட்டு போகிறேன்.

இதனை செயற்பாட்டில் உள்ள புலிகள் தான் செய்தார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்? என்ன ஆதாரம்?? எச்சரிக்கையாக இருங்கள் என்றபடி நீங்களே காட்டிக் கொடுப்பது தெரியவில்லையா??

  • Replies 128
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக

  • goshan_che
    goshan_che

    இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி  இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த

  • குமாரசாமி
    குமாரசாமி

    சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி  சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு  உதாரணங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அப்படியே தாளிச்சிடுவோமாக்கும்…..

நான் சொன்னது எமது தாயக விடுதலைப் போராட்டம் பற்றி, பரீசில் நடந்த தாக்குதல் குறித்து அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

இல்லை வலவன், அப்படி நினைத்து எழுதவில்லை.

உங்களின் தேசியத்தின் மீதான பற்று நான் அறியாதது அல்ல. பரிசில் இளைஞர்கள் நடந்துகொண்டவிதம் உணர்வு சம்பந்தப்பட்டது. இயல்பாகவே வரும் கோபத்தினால் உந்தப்பட்டது. அவர்களைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று நீங்கள் விழித்திருக்கத் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. ஏனென்றால், நீங்கள், நான், நாம் எல்லாமே புலிகளின் ஆதரவாளர்கள் தான். 

ஏற்றுக்கொள்கிறேன், முழுமையாக. 

ம‌ன்னிக்க‌னும் ர‌கு அண்ணா
ஐந்து விரலும் ஒரு மாதிரி இல்லை.........................த‌மிழீழ‌ உண‌ர்வு கொண்ட‌ ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு மாதிரி ந‌டை போக்கில்..................அவ‌ர்க‌ள் செய்த‌து பிழை இவ‌ர்க‌ள் சொல்வ‌து ச‌ரி என்று நாம் புல‌ம்புவ‌தில் அர்த்த‌ம் இல்லை...................அவ‌ர்க‌ளுக்கு ச‌ரி என்று ப‌ட்ட‌தை அவ‌ர்க‌ள் செய்தார்க‌ள்........................2009க்கு பிற‌க்கு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ பெடிய‌ங்க‌ளுக்கு அவ‌ள் சொன்ன‌து க‌டும் கோவ‌த்தை வ‌ர‌ வைச்சு இருக்கும் ஏன் என்றால் அவா விட்ட‌ வார்த்தை அப்ப‌டி
ம‌கிந்தா உங்க‌ எல்லாரையும் விட்டு வைச்ச‌து த‌ப்பாம்........................ம‌கிந்தா ஒன்றும் பெரிய‌ கொம்ப‌ன் கிடையாது ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ள் உத‌வி செய்ய‌ எம் போராட்ட‌ம் அழிக்க‌ப் ப‌ட்ட‌து ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌து.................


இந்த‌ பெண் த‌மிழ் நாட்டில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி ஒரு காணொளி போட்டு இருந்தா
வீர‌ப்ப‌ன் பானியில் க‌ட‌த்திட்டு போய் க‌தைய‌ முடிச்சு விட்டு இருப்பாங்க‌ள் ந‌ம்ம‌ பெடிய‌ங்க‌ள்.......................இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னை உங்க‌ளை விட‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிக்கும் பெடிய‌ங்க‌ள் ஒவ்வொரு க‌ட்சியிலும் இருக்கின‌ம்........அதிக‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில்..................................

த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ பெடிய‌ன் சிங்க‌பூரில் வேலை செய்கிறார் அந்த‌ கொம்ப‌னியில் சிங்க‌ள‌வ‌ன் ஒருவ‌னும் வேலை செய்கிறார் எங்க‌ட‌ போராட்ட‌த்தை த‌லைவ‌ரை ப‌ற்றி த‌ப்பா க‌தைக்க‌ த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ பெடிய‌ன் அந்த‌ சிங்க‌ள‌வ‌னுக்கு அடிக்க‌ போக‌ ம‌ற்ற‌ ஆட்க‌ள் ஓடி வ‌ந்து த‌டுத்திட்டின‌ம்....................பிர‌பாக‌ர‌ன் த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தில் க‌ல‌ந்த‌ த‌லைவ‌ர் அவ‌ரை ப‌ற்றி யாரும் த‌ப்பா சொன்னா ப‌ல்லு உடையுதோ கை முறியுதோ யாருக்கு தெரியும்..................

வாழ்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்.......................
 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பையன்26 said:

இந்த‌ பெண் த‌மிழ் நாட்டில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி ஒரு காணொளி போட்டு இருந்தா
வீர‌ப்ப‌ன் பானியில் க‌ட‌த்திட்டு போய் க‌தைய‌ முடிச்சு விட்டு இருப்பாங்க‌ள் ந‌ம்ம‌ பெடிய‌ங்க‌ள்.......................இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னை உங்க‌ளை விட‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிக்கும் பெடிய‌ங்க‌ள் ஒவ்வொரு க‌ட்சியிலும் இருக்கின‌ம்........அதிக‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில்..................................

அவரவருக்கு அவரவர் அஜெண்டா மட்டுமே முக்கியம்.

இதை கூட சம்பந்தமே இல்லாமல் உங்கள் நா த க பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறீர்களே.

1 hour ago, ரஞ்சித் said:

நான் சொன்னது எமது தாயக விடுதலைப் போராட்டம் பற்றி, பரீசில் நடந்த தாக்குதல் குறித்து அல்ல. 

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

இந்த தூசண அம்மணி வாயையே மூட முடியவில்லை, இதில், ஒவ்வொரு குரூப்பும் ஆளுக்கு ஆள் இந்த பெண்ணுடன் இவரும், அவரும் கூட்டு என்று கதை வேறு.

இந்த சீத்துவத்தில் உங்க்ளுக்கு நாம் எமக்கான தீர்வை நாமே அடைவோம் என்ற நினைப்பெல்லாம் ஓவராக தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அவரவருக்கு அவரவர் அஜெண்டா மட்டுமே முக்கியம்.

இதை கூட சம்பந்தமே இல்லாமல் உங்கள் நா த க பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறீர்களே.

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

இந்த தூசண அம்மணி வாயையே மூட முடியவில்லை, இதில், ஒவ்வொரு குரூப்பும் ஆளுக்கு ஆள் இந்த பெண்ணுடன் இவரும், அவரும் கூட்டு என்று கதை வேறு.

இந்த சீத்துவத்தில் உங்க்ளுக்கு நாம் எமக்கான தீர்வை நாமே அடைவோம் என்ற நினைப்பெல்லாம் ஓவராக தெரியவில்லையா?

ம‌க்க‌ள் முன்னால் பிர‌ச்சார‌ம் மூல‌ம் சொல்ல‌ நிறைய‌ இருக்கு
இந்த‌ க‌ரும‌த்தை ஏன் அத‌ற்க்குள் க‌ல‌ப்பான்................
நான் சொல்ல‌ வ‌ந்த‌து இவா த‌மிழ் நாட்டில் இருந்து இப்ப‌டி பேசி இருக்க‌னும் நில‌மை வேறு மாதிரி போய் இருக்கும் என்று

உங்க‌ளை என்னை விட‌ அறிவிஜீவிய‌ல‌ தான் அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ர‌ நிறுத்தி இருக்கிறார்.................அவை ஏன் இந்த‌ அசிங்க‌த்தை கையில் எடுக்க‌ போகின‌ம்............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

எமக்கான தீர்வை நாமே அடைவோம்

2009 வரை அந்த நம்பிக்கை எமக்கு இருந்ததுதானே கோஷான்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இந்த‌ பெண் த‌மிழ் நாட்டில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி ஒரு காணொளி போட்டு இருந்தா
வீர‌ப்ப‌ன் பானியில் க‌ட‌த்திட்டு போய் க‌தைய‌ முடிச்சு விட்டு இருப்பாங்க‌ள் ந‌ம்ம‌ பெடிய‌ங்க‌ள்.

இந்த வீரப்பன் ஒரு காட்டு கொள்ளைகாரன் என்று அறிய முடிகின்றது  அவரின் படத்தை ஏன் நீங்கள் உங்கள் படமாக போட்டிருக்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரஞ்சித் said:

2009 வரை அந்த நம்பிக்கை எமக்கு இருந்ததுதானே கோஷான்? 

நாம் மட்டுமே போதும் நமக்கான தீர்வை அடைய என்ற அணுகுமுறை, அதன்பால் ஊருடன் பகைத்தது, அதனால்தான் 2009 நடந்தது.

இதனால்தான் 2009 க்கு முன் நாம் இருந்த ஸ்டேடசில் நாம் இப்போ இல்லை.

இதை நான் 2013 இல் யாழில் எழுத தொடங்கி 11 வருடங்கள்.

2024 இல் கூட எழுத வேண்டி இருக்கிறது. அதுவும் உங்களை போல விடயம் அறிந்த ஒருவருக்கு.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அதன்பால் ஊருடன் பகைத்தது

அதனால்த்தானே பேச்சுவார்த்தைக்குப் புலிகள் வந்தார்கள். ஆனால், நாம் கேட்ட எதனையும் சர்வதேசம் கொடுக்க விருபவில்லை, இடைக்கால நிர்வாக அலகைக் கூட. அதேவேளை அமெரிக்காவே முன்னின்று சர்வதேச வலைப்பின்னலை பின்னியது. இலங்கை அரச படைகளைப் பலப்படுத்த முன்னின்று உதவியது. புலிகளை சர்வதேசமெங்கும் தடைசெய்து செயலிழக்கப் பண்ணியது. உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகள் பங்கேற்பதையே தடை செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகளைத் தடை செய்தது. இவை யாவுமே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதுதானே? சமபல நிலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இறுதியில், புலிகள் தரமிறக்கப்பட்டு, வேண்டப்படாதவர்களாக, தீண்டப்படாதவர்களாக மாற்றப்படும்வரை நடந்தது. மீதி நீங்களும் நானும் அறிந்தது. 

எமக்கான உண்மையான தீர்வில் சர்வதேசத்திற்கு அக்கறையிருந்தால் இன்று அதனைத் தரலாம், ஆனால் செய்ய மாட்டார்கள். அது எப்போதுமே அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரஞ்சித் said:

அதனால்த்தானே பேச்சுவார்த்தைக்குப் புலிகள் வந்தார்கள். ஆனால், நாம் கேட்ட எதனையும் சர்வதேசம் கொடுக்க விருபவில்லை, இடைக்கால நிர்வாக அலகைக் கூட. அதேவேளை அமெரிக்காவே முன்னின்று சர்வதேச வலைப்பின்னலை பின்னியது. இலங்கை அரச படைகளைப் பலப்படுத்த முன்னின்று உதவியது. புலிகளை சர்வதேசமெங்கும் தடைசெய்து செயலிழக்கப் பண்ணியது. உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகள் பங்கேற்பதையே தடை செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகளைத் தடை செய்தது. இவை யாவுமே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதுதானே? சமபல நிலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இறுதியில், புலிகள் தரமிறக்கப்பட்டு, வேண்டப்படாதவர்களாக, தீண்டப்படாதவர்களாக மாற்றப்படும்வரை நடந்தது. மீதி நீங்களும் நானும் அறிந்தது. 

எமக்கான உண்மையான தீர்வில் சர்வதேசத்திற்கு அக்கறையிருந்தால் இன்று அதனைத் தரலாம், ஆனால் செய்ய மாட்டார்கள். அது எப்போதுமே அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. 

 உடைந்த ரெக்கோர்ட்டை போல இதையே எத்தனை தரம்தான் திரும்ப, திரும்ப சொல்லி கொண்டு இருக்க போகிறீர்கள்?

அமெரிக்கா என்ன எம் ஜென்ம வைரிகளா?

இரு கைகள் தட்டாமல் ஓசை எழாது.

அமெரிக்காவுக்கும், ஈழத்தமிழருக்கும் இடையான உறவு கசந்ததில் - அமெரிக்காவை போலவே ஈழத்தமிழருக்கும் சமபங்கு உண்டு.

அமெரிக்கா இப்போ ஜேவிபி யை அணுகும் முறையை பார்த்தீர்களா?

இதே அணுகுமுறையைத்தான் முதன் முதலில் ஈழ அமைப்புகள் மீதும் எடுத்தது.

இலங்கையில் தமிழர் சுயர்நிர்ணயம் தொடர்பாக முதலாவது சர்வதேச பிரேரணையை நிறைவேற்றியது ஒரு அமெரிக்க மாநிலம். இலினோய் என நினைக்கிறேன்.

ஆனால் நாம் எம்மை அவர்களின் பங்காளிகள் என நிலை நிறுத்த தவறினோம்.

இதில் பாரிய தாக்கம் செலுத்தியது, சில ஈழத் தலைமகளின் செயலற்ற தனமும், சுயநலமும்.

அவர்களை அடுத்து வந்தவர்கள் திறமையானவர்களாயும், சுயநலமற்றவர்களாயும், தியாக எண்ணத்துடனும் இருந்தனர்.

ஆனால் அவர்களிடம், இந்தியா என்ன இந்தியா, அமேரிக்கா என்ன அமேரிக்கா, நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற மனோநிலை மேலோங்கி இருந்தது.

இந்த மனநிலையே மேற்கு, கிழக்கு, நாலு திக்கிலும் அத்தனை பெரிய நாடுகளும் எம்மை சேர்ந்தழித்தமைக்கு வழி கோலியது.

இதே அணுகுறையை, அதைவிட மிகவும் பலவீனமான நிலையில் இப்போ நீங்கள் முன்வைக்கிறீர்கள். 

இதை எழுதி அம்மஞ்சல்லிக்கு பயனில்லை என தெரியும். கேட்டதால் எழுதுகிறேன். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இதே அணுகுமுறையைத்தான் முதன் முதலில் ஈழ அமைப்புகள் மீதும் எடுத்தது.

இலங்கையில் தமிழர் சுயர்நிர்ணயம் தொடர்பாக முதலாவது சர்வதேச பிரேரணையை நிறைவேற்றியது ஒரு அமெரிக்க மாநிலம். இலினோய் என நினைக்கிறேன்.

 இதை சரியென்று என்னால் உணரக் கஷ்ட்டமாக இருக்கிறது.

அதற்கான காரணம் என்னவென்றால், அமெரிக்கா இலங்கையில் தலையீடு செய்தது ஜெயவர்த்தனவின் முதலாவது பதவிக்காலத்தின்போது. 80 களின் ஆரம்பத்தில். இரணவில வொயிஸ் ஒப் அமெரிக்கா, திருகோணமலைத் துறைமுகம் மீதான அதிகாரம் என்று இரு பிரதான நோக்கங்களுக்காகவே இலங்கையில் அமெரிக்கா தலையிட்டது. இதற்கு முக்கியமான காரணம் அப்போதிருந்த இந்திய அமெரிக்க பூசல். ஆகவே, இந்தியாவை வேவு பார்க்கவே இலங்கையில் அமெரிக்கா கால்பதித்தது. 

அடுத்ததாக, இந்தியாவினால் பயிற்றப்பட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களை அடக்குவதற்கு அமெரிக்கா தானே முன்வந்து உதவியது. சோசலிசம் பேசிய சில போராளி அமைப்புக்களின் செயற்பாடும், அலன் தம்பதிகளைக் கடத்திச் சென்று இந்தியாவைப் பின்புலமாக வைத்து பத்மநாபா பேரம் பேசியதும் எம்மைச் சோசலிசவாதிகள் என்று அமெரிக்கா நம்பக் காரணமாகியது.

உண்மையில்  அமெரிக்கா போராளிகளை அணுகியது என்பதை நான் அறியேன், இப்படிக் கூறுவதால் அது நடக்கவில்லை என்று அர்த்தமில்லை, நான் அறியவில்லை, அவ்வளவுதான்.

மற்றும்படி, அமெரிக்க மாநிலம் ஒன்று எமக்கான அங்கீகாரத்தைத் தந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதனால் கிடைத்த பலனும் எதுவுமில்லை. 

அமெரிக்கா தனது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்கிறது. ஆட்சியதிகாரத்தில் எவர் இருக்கின்றாரோ அல்லது எவரது கைகளில் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களைக்கொண்டே தனது நலன்களை அடைய முனையும். அதற்காக அந்த ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவுதான் ஜனநாயக விரோதிகளாக இருந்தாலும் அமெரிக்கா உதவும். 
 

27 minutes ago, goshan_che said:

ஆனால் அவர்களிடம், இந்தியா என்ன இந்தியா, அமேரிக்கா என்ன அமேரிக்கா, நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற மனோநிலை மேலோங்கி இருந்தது.

இது உண்மைதான். நாம் செய்த சில விடயங்கள் இதன் அடிப்படியிலேயே அமைந்திருந்தன. 

30 minutes ago, goshan_che said:

அமெரிக்கா என்ன எம் ஜென்ம வைரிகளா?

இல்லை.  அதிகாரமும், ஆட்சியும் எம்மிடம் இருந்தால், நாம் அமெரிக்காவின் நண்பர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரஞ்சித் said:

அடுத்ததாக, இந்தியாவினால் பயிற்றப்பட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களை அடக்குவதற்கு அமெரிக்கா தானே முன்வந்து உதவியது. சோசலிசம் பேசிய சில போராளி அமைப்புக்களின் செயற்பாடும், அலன் தம்பதிகளைக் கடத்திச் சென்று இந்தியாவைப் பின்புலமாக வைத்து பத்மநாபா பேரம் பேசியதும் எம்மைச் சோசலிசவாதிகள் என்று அமெரிக்கா நம்பக் காரணமாகியது.

தலைவர் புரொண்ட்லைனுக்கு கொடுத்த பேட்டியிலும் நாம் அமைக்கும் நாடு சோசலிஸ்ட் நாடாகவே இருக்கும் என்பதை கூறி இருந்தார் என நினைக்கிறேன்.

 

57 minutes ago, ரஞ்சித் said:

உண்மையில்  அமெரிக்கா போராளிகளை அணுகியது என்பதை நான் அறியேன், இப்படிக் கூறுவதால் அது நடக்கவில்லை என்று அர்த்தமில்லை, நான் அறியவில்லை, அவ்வளவுதான்.

நாமும் அணுகவில்லை.

தவிரவும் இது தனியே சோசலிச எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் அல்ல - அமெரிக்காவின் முகவர்கள் என தெளிவாக தெரிந்தோர் குறிவைக்கப்பட்டனர் (நீலன்). 

கூடவே இந்தியாவை நாம் எப்படி டீல் பண்ணிணோம் (ரஜீவ்) என்பதையும் அமெரிக்கா கவனித்திருக்கும் அல்லவா?

ஆகவே அமெரிக்காவின் புலி எதிர் நிலைப்பாடு இறுகவும், கடைசி வரை தளராமல் இருக்கவும், நீங்கள் சொன்னவை உட்பட பல காரணங்கள் இருப்பினும், எமது “வணங்கா முடி” தனமும், “நாம் மட்டுமே எமது பிரச்சனைக்கு தீர்வை அடைவோம்” என்ற அதீத தற்சார்பும் கணிசமான காரணிகள் என்பது என் பார்வை.

1 hour ago, ரஞ்சித் said:

மற்றும்படி, அமெரிக்க மாநிலம் ஒன்று எமக்கான அங்கீகாரத்தைத் தந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதனால் கிடைத்த பலனும் எதுவுமில்லை

இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, பலனை அறுவடை செய்ய நாம் முயலவில்லை என்பதோடு, எமக்கிருந்த early advantage ஐ தொலைக்கும் விதமாகவே நடந்து கொண்டோம். 

 

1 hour ago, ரஞ்சித் said:

அமெரிக்கா தனது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்கிறது. ஆட்சியதிகாரத்தில் எவர் இருக்கின்றாரோ அல்லது எவரது கைகளில் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களைக்கொண்டே தனது நலன்களை அடைய முனையும். அதற்காக அந்த ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவுதான் ஜனநாயக விரோதிகளாக இருந்தாலும் அமெரிக்கா உதவும். 

மாற்றுக்கருத்தே இல்லை.

ஆனால் நாம் நடைமுறை அரசை நடத்திய காலத்தில் கூட, அமெரிக்காவை எம்பக்கம் எம்மால் திருப்ப முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சோசலிச நாடு அமைக்கும் பயமுறுத்தல்கள் இருந்துள்ளது  ☹️

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

தலைவர் புரொண்ட்லைனுக்கு கொடுத்த பேட்டியிலும் நாம் அமைக்கும் நாடு சோசலிஸ்ட் நாடாகவே இருக்கும் என்பதை கூறி இருந்தார் என நினைக்கிறேன்.

 

நாமும் அணுகவில்லை.

தவிரவும் இது தனியே சோசலிச எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் அல்ல - அமெரிக்காவின் முகவர்கள் என தெளிவாக தெரிந்தோர் குறிவைக்கப்பட்டனர் (நீலன்). 

கூடவே இந்தியாவை நாம் எப்படி டீல் பண்ணிணோம் (ரஜீவ்) என்பதையும் அமெரிக்கா கவனித்திருக்கும் அல்லவா?

ஆகவே அமெரிக்காவின் புலி எதிர் நிலைப்பாடு இறுகவும், கடைசி வரை தளராமல் இருக்கவும், நீங்கள் சொன்னவை உட்பட பல காரணங்கள் இருப்பினும், எமது “வணங்கா முடி” தனமும், “நாம் மட்டுமே எமது பிரச்சனைக்கு தீர்வை அடைவோம்” என்ற அதீத தற்சார்பும் கணிசமான காரணிகள் என்பது என் பார்வை.

இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, பலனை அறுவடை செய்ய நாம் முயலவில்லை என்பதோடு, எமக்கிருந்த early advantage ஐ தொலைக்கும் விதமாகவே நடந்து கொண்டோம். 

 

மாற்றுக்கருத்தே இல்லை.

ஆனால் நாம் நடைமுறை அரசை நடத்திய காலத்தில் கூட, அமெரிக்காவை எம்பக்கம் எம்மால் திருப்ப முடியவில்லை. 

 

17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சோசலிச நாடு அமைக்கும் பயமுறுத்தல்கள் இருந்துள்ளது  ☹️

இது சார்ந்த கோபம் தான் ரசியா சீனா  வியட்நாம் மற்றும் கியூபா மீது எனக்கு. ஏன் இந்தியாவும் தான். இவை சுதந்திர போராட்டங்களை ஆதரிப்பவர்களாக இருந்து சமதர்மக்கொள்கைககள் மக்களுக்கானவை என 

எம்மை ஏமாற்றி பின்பற்ற வைத்து முதுகில் குத்தினார்கள். இந்த நாடுகள் எம் பக்கம் இருந்து ஆதரவு கொடுத்து இருந்தால்.  ..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

இது சார்ந்த கோபம் தான் ரசியா சீனா  வியட்நாம் மற்றும் கியூபா மீது எனக்கு. ஏன் இந்தியாவும் தான். இவை சுதந்திர போராட்டங்களை ஆதரிப்பவர்களாக இருந்து சமதர்மக்கொள்கைககள் மக்களுக்கானவை என 

எம்மை ஏமாற்றி பின்பற்ற வைத்து முதுகில் குத்தினார்கள். இந்த நாடுகள் எம் பக்கம் இருந்து ஆதரவு கொடுத்து இருந்தால்.  ..

உண்மையில் எனக்கு எந்த நாடு மீதும் இப்போ கோபம் இல்லை.

சகல உலக நாடுகளும், இன்று நேற்றல்ல, எப்போதுமே இப்படி இரெட்டை வேடம் போடும் சந்தர்ப்பவாதிகள்தான்.

லோரன்ஸ் ஒவ் அரேபியா காலத்தில் அரபிகள், இப்போ குர்திக்கள், ஆர்மேனியர்கள்… நாம்.. லிஸ்ட் மிக  நீண்டது.

நாளைக்கு நாம் ஒரு பெரிய நாட்டை அமைத்தாலும் அது கூட இப்படியாகவே நடந்துகொள்ளும்.

இதை நாம் சரிவர கையாளவில்லை. அவர்களும் நியாயமாக நடக்கவில்லை. 

ஆனால் அதனால் விளங்க தீமை எம்மை மட்டுமே தாக்கியது.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த வீரப்பன் ஒரு காட்டு கொள்ளைகாரன் என்று அறிய முடிகின்றது  அவரின் படத்தை ஏன் நீங்கள் உங்கள் படமாக போட்டிருக்கின்றீர்கள்

வீர‌ப்ப‌ன் என‌து ம‌ன‌தில் வ‌ன‌காவ‌ல‌ன் போல் வாழுகிறார்  உற‌வே............................

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் சொல்வது போலவே இவை பற்றிய விளக்கங்கள் redundant ஆக மாறிக் கனகாலம். ஆனால், சம்பவங்கள், வரலாறு இவற்றை உணர்ச்சி எனும் வர்ணக் கண்ணாடியூடாகப் பார்க்கும் நிலை இன்னும் மாறவில்லை.

ஒரு உதாரணம் மட்டும், நினைவூட்ட: அமெரிக்கா புலிகளை உதவி மாநாட்டிற்கு வருமாறு அழைக்கவில்லை, அழைத்திருந்தாலும் விசா கிடைத்திருக்காது (தற்போது சில சிறி லங்கா இராணுவத்தினருக்கு விசா கொடுக்காதது போல). அதன் பின்னர் நிகழ்ந்த ரோக்கியோ மாநாட்டிற்கு இந்தக் கோபத்தில் தமிழர் தரப்பு போகவில்லை. இது போன்ற, யதார்த்த நடைமுறையை உதாசீனம் செய்யும் உணர்ச்சி மயமான நிலை இன்னும் தமிழ் தேசியம் பேசுவோரிடையே இருக்கிறது. இது இருக்கும் வரை, பலர் தமிழ் தேசிய செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிப் போவது தொடரும், உணர்ச்சி மயமான "சிந்தனைத் தலைவர்கள்" இந்த தலைமுறையோடு இல்லாமல் போன பின்னர், ஏதாவது நல்லது எமக்கு நிகழலாம்.

அது வரை பெரிதாக எதிர் பார்க்க எதுவுமில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

அதன் பின்னர் நிகழ்ந்த ரோக்கியோ மாநாட்டிற்கு இந்தக் கோபத்தில் தமிழர் தரப்பு போகவில்லை. இது போன்ற, யதார்த்த நடைமுறையை உதாசீனம் செய்யும் உணர்ச்சி மயமான நிலை இன்னும் தமிழ் தேசியம் பேசுவோரிடையே இருக்கிறது.

ஒஸ்லோவில் சமஸ்டியைப் பரிசீலிக்கின்றோம் என்று அன்ரன் பாலசிங்கமும், கருணா அம்மானும் ஒத்துக்கொண்டது தீவிர நிலைப்பாட்டில் இருந்த தமிழ்ச்செல்வன் தரப்பினருக்குப் பிடிக்கவில்லை.

அதனால்தான் அன்ரன் பாலசிங்கம் ஓரங்கட்டப்பட்டார். கருணா பிளவுக்கும் வழிகோலியது இந்தச் சம்பவம்தான். ரோக்கியோ போனால் சமஸ்டித் தீர்வுக்குள் “ பொக்ஸ்” அடித்துவிடுவார்கள் என்றுதான் போகவில்லை. ஆனால் சொல்லப்பட்ட காரணம் அமெரிக்காவுக்கு போக சமதரப்பாக அனுமதி கொடுக்கவில்லை என்பது..

ரோக்கியோ போயிருந்தாலும் முள்ளிவாய்க்கால் “பொக்ஸ்” போல ஒன்று நடந்திருக்கும்.

இந்த சம்பவம் நடக்கும் முன்னர், இந்த பெண்மணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் படித்த பாடசாலைகளின் வகுப்பு நண்பர்களின் வட்ஸ் அப் குழுமங்களிலும் எவரும் இவர் பற்றி எந்தவொரு காணொளியையும் இணைத்தது இல்லை. பொதுவாக ஆரோக்கியமான உரையாடல்கள் இடம்பெறும் குழுமங்களாக இவை இருந்தன.

ஆனால், இந்த முட்டாள்களின் உணர்ச்சிவசப்பட்ட செயலால், இச் சம்பவம் பற்றி வெளியானதில் இருந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இப் பெண்ணின் காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர். யார் என்றே தெரியாமல் இருந்த ஒருவருக்கு, சின்ன வேலை வெட்டி இல்லாமல், இணையத்தில் குப்பைகளை மட்டும் மேய்கின்றவர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பெண் இன்று எம் சமூகத்தில்  எல்லா மட்டங்களிலும் உள்ளவர்களுக்கு தெரிந்த பிரபலமான ஒருவராக மாறிவிட்டார். 

Quote

வீதியில் நாயின் மலம் 💩 இருந்தால் அதை விலத்தி நடப்பதுபோல சமூகவலைத் தளங்களில் கொட்டப்படும் மலங்களில் இருந்து தூர விலகவேண்டும். ஆனால் சிலர் மலநாற்றத்தை முகர்ந்து பின் தொடர்கின்றனர்! 

என்று @கிருபன்எழுதியிருந்தார் இந்த திரியில். இன்று இந்த மலத்தை எல்லாரும், சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரும் முகர்ந்து பார்த்து விட்டு, தாம் மட்டும் நாற்றத்தை ரசிக்காமல், மற்றவர்களுக்கும் பகிர்கின்றனர்.

இதனால் இங்கு வெற்றியடைந்தது அந்த மலம் தான்.
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஒஸ்லோவில் சமஸ்டியைப் பரிசீலிக்கின்றோம் என்று அன்ரன் பாலசிங்கமும், கருணா அம்மானும் ஒத்துக்கொண்டது தீவிர நிலைப்பாட்டில் இருந்த தமிழ்ச்செல்வன் தரப்பினருக்குப் பிடிக்கவில்லை.

அதனால்தான் அன்ரன் பாலசிங்கம் ஓரங்கட்டப்பட்டார். கருணா பிளவுக்கும் வழிகோலியது இந்தச் சம்பவம்தான். ரோக்கியோ போனால் சமஸ்டித் தீர்வுக்குள் “ பொக்ஸ்” அடித்துவிடுவார்கள் என்றுதான் போகவில்லை. ஆனால் சொல்லப்பட்ட காரணம் அமெரிக்காவுக்கு போக சமதரப்பாக அனுமதி கொடுக்கவில்லை என்பது..

ரோக்கியோ போயிருந்தாலும் முள்ளிவாய்க்கால் “பொக்ஸ்” போல ஒன்று நடந்திருக்கும்.

நீங்கள் சொல்லும் காரணமும் இருக்கலாம். பொது வெளியில், வெளிப்படையாக சொல்லப் பட்ட காரணத்தைப் பற்றித் தான் நாம் கருத்துரைக்க முடியும். அன்ரன் பாலசிங்கத்தின் "போரும் சமாதானமும் பக்கங்கள் 710 முதல் 716" இல் புலிகளின் அமெரிக்கா மீதான ஏமாற்றம் தெளிவாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்தப் பக்கங்களில் இருக்கும் சில தகவல்களை வைத்து சர்வதேச இராஜதந்திரத்தில் தமிழர் தரப்பின் பாரிய குறைபாட்டையும் காண முடிகிறது. "யாருடன் பேசுகிறோம்-know your audience" என்பது எந்தத் தொடர்பாடலிலும் முக்கியம். ரெனிசியில் பிறந்து, மிசிசிப்பியில் வளர்ந்து,  புஷ் நிர்வாகத்தில் வேலை செய்த ஆஸ்லி வில்ஸ் தான் அமெரிக்க தூதுவர் - நிச்சயமாக சிறுபான்மையினரின் ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளாத ஒருவராக இவர் இருந்திருப்பார். வில்சின் மேலதிகாரி ரிச்சர்ட் ஆர்மிரேஜ் என்ற தெற்காசிய விவகார பொறுப்பதிகாரியும் இவர் போன்றவரே. இவர்கள் இருவரிடமும் எதையும் எதிர்பார்த்திருக்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம். ஆட்சேபனை தெரிவித்து விட்டு ரோக்கியோ போய் அந்தப் பிரகடனத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்க முடியுமா என முயன்றிருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். சரி வந்தால் மலை, போனால் தலை முடி!

அப்படிச் செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் நடப்பதற்கான வாய்ப்பு 50/50 ஆக இருந்திருக்கும் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக நோர்வே மூலம் நேரடியாகவே தலையிட்ட நிலையில்,  உலகத்தை பகைத்து போருக்கு மீண்டும் செல்வதன் ஆபத்தையைம் அப்படி அப்போரில் தோல்வி ஏற்பட்டால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகும் அரசியல் சூனிய நிலையையும் சாதாரண மக்களாலேயே கணிக்க கூடிய நிலையில், உலக நாட்டு தூதுவர்களுடனும் பல ராஜதந்திரிகளுடனும் அடிக்கடியான சந்திப்புக்களை மேற்கொண்ட சம்பந்தப்பட்டவர்களால் அதுவும்  ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர் கிறிஸ்ட் பற்றனின் நேரடி எச்சரிக்கைக்கு பின்னரும்  கணிக்கமுடியாமல் இருந்தது என்பதை  நம்ப முடியவில்லை.

 பாரிய மனித அவலம் தமிழீழதை அமைக்க  சாதகமாக அமையும் என்ற மாயையில் மக்களின் அழிவு தொடர்பாக எந்த பொறுப்புணர்வும் அற்றதாகவே இறுதி சில வருடங்களாக பேச்சுவார்தையை புறக்கணிக்கும்  முடிவுகள் எடுக்கப்பட்டதோடு யுத்தத்திற்கான சூழ்நிலையும் உருவாக்கப்பட்டது.   பேச்சுவார்ததையில் நாம் கேட்டது கிடைத்திருக்கவிட்டாலும் இன்றைய நிலையை விட மிகவும் மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் அதே வேளை  புலிகளுக்குள் இருந்த திறமைமிக்க அரசியல் போராளிகள் உயிருடன் இருந்து மக்களுக்கு தலைமை வகித்திருக்க முடியும்.

சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களின் பொதுப்புத்திக்கும் யுத்தத்தின் மூலம் புலிகளை தோற்கடித்தோம் என்ற மமதை இல்லாமல்,  பேச்சு வார்ததை மூலம் சமாதானமாகவே அவர்களின் ஆயுதத்தை மௌனித்தோம் என்ற மரியாதை புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும்  இருந்திருக்கும்.  இதை வீம்புக்காக சிலர் மறுக்கலாம். ஆனல் இன்றைய அவல நிலையை விட மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் என்பதை பொது அறிவுடன் சிந்திக்கும் எவரும் மறுக்க முடியாது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

உண்மையில் எனக்கு எந்த நாடு மீதும் இப்போ கோபம் இல்லை.

சகல உலக நாடுகளும், இன்று நேற்றல்ல, எப்போதுமே இப்படி இரெட்டை வேடம் போடும் சந்தர்ப்பவாதிகள்தான்.

லோரன்ஸ் ஒவ் அரேபியா காலத்தில் அரபிகள், இப்போ குர்திக்கள், ஆர்மேனியர்கள்… நாம்.. லிஸ்ட் மிக  நீண்டது.

நாளைக்கு நாம் ஒரு பெரிய நாட்டை அமைத்தாலும் அது கூட இப்படியாகவே நடந்துகொள்ளும்.

இதை நாம் சரிவர கையாளவில்லை. அவர்களும் நியாயமாக நடக்கவில்லை. 

ஆனால் அதனால் விளங்க தீமை எம்மை மட்டுமே தாக்கியது.

உங்கள் இந்த கூற்றுப்படி 

1- பானையில் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்னர்....

2- நாம் எப்படி காலில் வீழ்ந்தாலும் ஒன்றும் இல்லை. எனவே நிமிர்ந்து நிற்போம் என்பதும் சரியாகி விடுகிறது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

வீர‌ப்ப‌ன் என‌து ம‌ன‌தில் வ‌ன‌காவ‌ல‌ன் போல் வாழுகிறார்  உற‌வே............................

விளங்கி  கொண்டேன்  உறவே.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

உங்கள் இந்த கூற்றுப்படி 

1- பானையில் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்னர்....

2- நாம் எப்படி காலில் வீழ்ந்தாலும் ஒன்றும் இல்லை. எனவே நிமிர்ந்து நிற்போம் என்பதும் சரியாகி விடுகிறது.

நன்றி.

ஆனால் இதே போன்ற வல்லாதிக்க நாடுகளை கெட்டித்தனமாக டீல் பண்ணி (உங்கள் பாசையில் காலில் விழுந்து) தமக்கான தீர்வை பெற்ற இஸ்ரேலும், தென்னாபிரிக்காவும், அயர்லாந்தும், கொசோவோவும்,  சவுத் ஒசேசியாவும், தென்சூடானும் கூட வரலாற்றில் உள்ளன.

1.மேலே நான் தந்த பட்டியல் -  பானையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது

2. எடுக்கும் இலாவகம் தெரியாமல், நிமிர்ந்து நின்று பானையை உடைத்துத்தான் எடுப்போம் என்றால்

வரலாறு பூராகவும் கால்கடுக்க நிற்க வேண்டியதே.

அதுதான் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

அனைத்துலக நோர்வே மூலம் நேரடியாகவே தலையிட்ட நிலையில்,  உலகத்தை பகைத்து போருக்கு மீண்டும் செல்வதன் ஆபத்தையைம் அப்படி அப்போரில் தோல்வி ஏற்பட்டால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகும் அரசியல் சூனிய நிலையையும் சாதாரண மக்களாலேயே கணிக்க கூடிய நிலையில், உலக நாட்டு தூதுவர்களுடனும் பல ராஜதந்திரிகளுடனும் அடிக்கடியான சந்திப்புக்களை மேற்கொண்ட சம்பந்தப்பட்டவர்களால் அதுவும்  ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர் கிறிஸ்ட் பற்றனின் நேரடி எச்சரிக்கைக்கு பின்னரும்  கணிக்கமுடியாமல் இருந்தது என்பதை  நம்ப முடியவில்லை.

 பாரிய மனித அவலம் தமிழீழதை அமைக்க  சாதகமாக அமையும் என்ற மாயையில் மக்களின் அழிவு தொடர்பாக எந்த பொறுப்புணர்வும் அற்றதாகவே இறுதி சில வருடங்களாக பேச்சுவார்தையை புறக்கணிக்கும்  முடிவுகள் எடுக்கப்பட்டதோடு யுத்தத்திற்கான சூழ்நிலையும் உருவாக்கப்பட்டது.   பேச்சுவார்ததையில் நாம் கேட்டது கிடைத்திருக்கவிட்டாலும் இன்றைய நிலையை விட மிகவும் மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் அதே வேளை  புலிகளுக்குள் இருந்த திறமைமிக்க அரசியல் போராளிகள் உயிருடன் இருந்து மக்களுக்கு தலைமை வகித்திருக்க முடியும்.

சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களின் பொதுப்புத்திக்கும் யுத்தத்தின் மூலம் புலிகளை தோற்கடித்தோம் என்ற மமதை இல்லாமல்,  பேச்சு வார்ததை மூலம் சமாதானமாகவே அவர்களின் ஆயுதத்தை மௌனித்தோம் என்ற மரியாதை புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும்  இருந்திருக்கும்.  இதை வீம்புக்காக சிலர் மறுக்கலாம். ஆனல் இன்றைய அவல நிலையை விட மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் என்பதை பொது அறிவுடன் சிந்திக்கும் எவரும் மறுக்க முடியாது. 

 

உங்க‌ளை மாதிரி அறிவுஜீவிய‌ல் வ‌ன்னிக்கு சென்று எம்ம‌வ‌ர்க‌ளுக்கு புரிய‌ ப‌டுத்தி இருக்க‌லாமே...................ச‌மாதான‌ கால‌த்தில் யாழ்பாண‌த்தில் இருக்கும் சிங்க‌ள‌ ப‌டையை வெளி ஏற்ற‌னும் என்று த‌மிழ் செல்வ‌ன் அண்ணா நோர்வையில் ந‌ட‌ந்த‌ பேச்சு வார்த்தை மூல‌ம் கேட்டார் அதுக்கு ச‌ர்வ‌தேச‌மும் சிங்க‌ள‌மும் ஏதும் ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்க‌ளா.............................எம்ம‌வ‌ர் ஆயுத‌ ரீதியில் திற‌மையான‌வ‌ர்க‌ள் அர‌சிய‌லில் பெரிய‌ அனுப‌வ‌ம் இல்லை அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவை த‌விற‌............................எல்லாரும் க‌ண் மூடி விட்டின‌ம் இனி அவ‌ர்க‌ளை ப‌ற்றி க‌தைச்சு வேத‌னை ப‌டுவ‌தை விட‌ ஏதும் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை ப‌ற்றி ந‌ல்ல‌த‌ எடுத்து சொல்லுங்கோ என்னை மாதிரி எளிய‌ பிள்ளைக‌ளுக்கு அது பெரிதும் உத‌வும்.............................
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.