Jump to content

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகை ‍ குவிந்த தமிழ் மக்கள்

யாழ்ப்பாணத்தில், நக விகாரையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இராணுவம் வெசாக் பண்டிகையினை வெகு கோலகலமாகக் கொண்டாடி வருகிறது. முழுக்க முழுக்க சிங்களத்தில் பதாதைகள், சிங்கள பெளத்த பாடல்கள், வீதி ஒழுங்குகளில் இராணுவம், வீதியோரக் கடைகளில் சிங்களவர்கள் என்று முற்றாக சிங்கள பூமியாக மாறியிருந்த  தமிழர்களின் கலாசாரத் தலைநகரை முண்டியடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தது தமிழினம். 

ஐந்து நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களின் நினைவினை கண்ணீர் மல்க அனுசரித்த தமிழினத்தின் இன்னொரு பகுதி, அவ்வாறு அழித்தவன் நடத்தும், அவனது சொந்த இன, மத நிகழ்வை கண்டுகளிக்க அவதிப்பட்டு ஓடுகிறது.

இலங்கையர்களாக இணைவோம், அடையாளம் துறப்போம், தேசியம் பேசோம் என்று கூவுபவர்கள் வரிசையில் வாருங்கள், வந்து வையுங்கள். 

  • Sad 2
Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Justin

இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும். 2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா

ரஞ்சித்

கொழும்பில் வேடிக்கையாக வெசாக் பார்க்கப்போவதற்கும், யாழ்ப்பாணத்தில் வெசாக் பார்க்கப்போவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் என்னைப்பொறுத்தவரை ஆக்கிரம

நிழலி

எதிர்காலத்தில் இப்படியும் எம் வரலாற்றை நாம் எழுதிக் கொள்வோம்: தொடக்கத்தில் தமிழ் அரச பிரதிநிதிகளை துரோகிகள் என்றோம், பின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை, தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகள் என்றோம

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியகுளத்தை ஆக்கிரமித்த இராணுவத்தினர்!

833729039.jpeg

ஆதவன்)

யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் அனுமதி பெறப்படாமல் தான் வெசாக் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாநகரசபையின் ஆட்சிக்காலத்தில். யாழ்ப்பாணம் ஆரியகுளதில் எந்தவொரு அலங்காரத்தையும் முன்னெடுக்கும் போதும் அது தொடர்பில் மாநகரசபையிடம் அனுமதி பெறப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆட்சிக் காலத்தின்போது ஆரியகுளத்தில் மதம் சார்ந்த எந்தவொரு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது மாநகரசபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இராணுவத்தால் அங்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.


இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது; இராணுவத்தினர் ஆரியகுளத்தை துப்புரவு செய்து தரும்படியே கேட்டனர். ஆனால், அங்கு அலங்காரம் மேற்கொள்ள அனுமதி பெறவில்லை - என்றார். (ச)

https://newuthayan.com/article/ஆரியகுளத்தில்_இராணுவத்தால்_அனுமதியின்றி_அலங்காரங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் அனுமதி பெறப்படாமல் தான் வெசாக் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.

large.IMG_6511.jpeg.c3995e2c80c6d57a86e0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்புப் பார்ப்பதற்கும்.. விரும்பிப் போவதற்கும் வித்தியாசம் உள்ளது. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இராணுவம் விடுப்புக்காட்ட அதை.. வேடிக்கை விடுப்பு பார்க்கப் போகின்றனர் வேலைவெட்டி இல்லாது வெளிநாட்டுக் காசில் வாழும் தமிழர்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகை ‍ குவிந்த தமிழ் மக்கள்

கடந்த வருடம் இந்தநேரம் யாழ்ப்பாணத்தில் நின்றேன்.

மனைவியின் தங்கையின் மகன்(15 வயது)லைற்று பார்க்க போவோமா என்று அலுப்பு கொடுக்க 

சரி வா போவோம் என்று மோட்டார் சைக்கிளில் ஆரியகுளம் போய் சுற்றி பார்த்துவிட்டு பொலிஸ் நிலையம் என்று பல இடங்களையும் பார்த்தோம்.

நிறைய கூட்டமாகவே இருந்தது.ஆச்சரியமாகவே இருந்தது.

என்னைப் போலவே பலரும் வந்திருப்பார்கள் என எண்ணினேன்.

வீடுவந்து படுத்து அடுத்தநாள் ஒருபக்க கன்னம் வீங்கிவிட்டது.

அப்பிடி இருக்கும் இப்பிடி இருக்கும் என்று ஆளாளுக்கு வீடே ஒரு வைத்தியசாலையாகி எல்லோரும் டாக்ரராகிட்டாங்க.

அதிலிருந்து எழுந்துவர 15 நாட்களாகி விட்டது.

ரொம்பவும் கஸ்டப்பட்டுப் போனேன்.

இதுவேற தொற்றும் என்று என்னை ஒதுக்கியும் வைச்சுட்டாங்க.

வீட்டுக்கு யாரும் வந்தாலும் கிட்ட வராதைங்கோ தள்ளி நில்லுங்கோ வாற சனத்தையம் பயப்புடுத்தி அட்டகாசம் பண்ணிட்டாங்க.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

விடுப்புப் பார்ப்பதற்கும்.. விரும்பிப் போவதற்கும் வித்தியாசம் உள்ளது. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இராணுவம் விடுப்புக்காட்ட அதை.. வேடிக்கை விடுப்பு பார்க்கப் போகின்றனர் வேலைவெட்டி இல்லாது வெளிநாட்டுக் காசில் வாழும் தமிழர்கள். 

இதுதான் உண்மை...இதை ஊதிப் பெருப்பிப்பவர்கள்.. ..ஊதிப் பெருப்பிப்பவர்கள் யூ டியூப்பெர்ஸ்... இவைக்கு வரும்படி முக்கியம்...இந்த விழாவையே நரி தேர்தல் பிரச்சாரத்துக்கும் பாவிக்கப்போகுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கடந்த வருடம் இந்தநேரம் யாழ்ப்பாணத்தில் நின்றேன்.

மனைவியின் தங்கையின் மகன்(15 வயது)லைற்று பார்க்க போவோமா என்று அலுப்பு கொடுக்க 

சரி வா போவோம் என்று மோட்டார் சைக்கிளில் ஆரியகுளம் போய் சுற்றி பார்த்துவிட்டு பொலிஸ் நிலையம் என்று பல இடங்களையும் பார்த்தோம்.

நிறைய கூட்டமாகவே இருந்தது.ஆச்சரியமாகவே இருந்தது.

என்னைப் போலவே பலரும் வந்திருப்பார்கள் என எண்ணினேன்.

வீடுவந்து படுத்து அடுத்தநாள் ஒருபக்க கன்னம் வீங்கிவிட்டது.

அப்பிடி இருக்கும் இப்பிடி இருக்கும் என்று ஆளாளுக்கு வீடே ஒரு வைத்தியசாலையாகி எல்லோரும் டாக்ரராகிட்டாங்க.

அதிலிருந்து எழுந்துவர 15 நாட்களாகி விட்டது.

ரொம்பவும் கஸ்டப்பட்டுப் போனேன்.

இதுவேற தொற்றும் என்று என்னை ஒதுக்கியும் வைச்சுட்டாங்க.

வீட்டுக்கு யாரும் வந்தாலும் கிட்ட வராதைங்கோ தள்ளி நில்லுங்கோ வாற சனத்தையம் பயப்புடுத்தி அட்டகாசம் பண்ணிட்டாங்க.

🤣...........

சித்திரை, வைகாசியில் அம்மன் கோவில் போகாமல், வெசாக் பார்க்கப் போனால், இப்படித்தான் கூகைக்கட்டு வரும்.......😀.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும்.

2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா?) ஒரு பேட்டியின் போது "சுமந்திரனுக்கு விழும் வாக்குகள் தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிரான வாக்குகளாக இருக்கும்" என்ற தொனியில் பேசியிருந்தார்.

சுமந்திரனுக்கு வெல்லப் போதுமான வாக்குகள் விழுந்தன, அவர் இப்போதும் பா.உ ஆக இருக்கிறார். எனவே "தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிராக ஆயிரக்கணக்கான மக்கள் யாழ் மாவட்டத்தில் இருக்கிறார்கள்" என்று தமிழரின் எதிரிகளான எவரும் நிறுவவில்லை - தமிழ் தேசியரான காக்கா அண்ணாவே தன் கருத்து மூலம் நிறுவினார். (அதே தேர்தலில் சுமந்திரனை  விட அதிக வாக்குகள் தமிழ் தேசியமே பேசாத மகிந்தவின் அணியின் அங்கஜனுக்கு கிடைத்தன என்பதும் ஒரு கவனிக்க வேண்டிய தகவல்!).

மேல் தகவலை நான் நினைவூட்டுவதன் காரணம்: தீவிரமான கண்ணாடியூடாக சாதாரண விடயங்களை பெரிதாக்கிப் பார்த்து, அதனாலேயே மக்களின் மன நிலையை தவறாகப் புரிந்து கொள்வதும், அவர்களை வையப் போய், பின்னர் அவர்கள் "இந்த தீவிரப் பார்வை எமக்கு வேண்டாம்" என்று விலகி நடப்பதும் எங்களுக்கு நன்மை செய்யாது. தமிழ் தேசிய உணர்விற்கும், வெசாக் கூடு பார்க்க ஒரு இரவு மக்கள் உலவுவதற்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பொழுது போக்கு, அவ்வளவு தான்.

இதே மக்களிடமிருந்து தான், நியாயமான  கோரிக்கைகளான அரசியல் கைதிகள் விடுதலை, காணி ஆக்கிரமிப்பு நீக்கம்,  போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டியும் இருக்கும் என்பதை மக்களைத் திட்டும் போது நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படி நினைக்காமல், சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டுத் தாக்கினால், அடுத்த தலைமுறையில் "தமிழ் தேசியம்" என்று வாய் திறந்தாலே ஊரில் அடி தான் விழும்.

  • Like 12
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும்.

2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா?) ஒரு பேட்டியின் போது "சுமந்திரனுக்கு விழும் வாக்குகள் தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிரான வாக்குகளாக இருக்கும்" என்ற தொனியில் பேசியிருந்தார்.

சுமந்திரனுக்கு வெல்லப் போதுமான வாக்குகள் விழுந்தன, அவர் இப்போதும் பா.உ ஆக இருக்கிறார். எனவே "தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிராக ஆயிரக்கணக்கான மக்கள் யாழ் மாவட்டத்தில் இருக்கிறார்கள்" என்று தமிழரின் எதிரிகளான எவரும் நிறுவவில்லை - தமிழ் தேசியரான காக்கா அண்ணாவே தன் கருத்து மூலம் நிறுவினார். (அதே தேர்தலில் சுமந்திரனை  விட அதிக வாக்குகள் தமிழ் தேசியமே பேசாத மகிந்தவின் அணியின் அங்கஜனுக்கு கிடைத்தன என்பதும் ஒரு கவனிக்க வேண்டிய தகவல்!).

மேல் தகவலை நான் நினைவூட்டுவதன் காரணம்: தீவிரமான கண்ணாடியூடாக சாதாரண விடயங்களை பெரிதாக்கிப் பார்த்து, அதனாலேயே மக்களின் மன நிலையை தவறாகப் புரிந்து கொள்வதும், அவர்களை வையப் போய், பின்னர் அவர்கள் "இந்த தீவிரப் பார்வை எமக்கு வேண்டாம்" என்று விலகி நடப்பதும் எங்களுக்கு நன்மை செய்யாது. தமிழ் தேசிய உணர்விற்கும், வெசாக் கூடு பார்க்க ஒரு இரவு மக்கள் உலவுவதற்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பொழுது போக்கு, அவ்வளவு தான்.

இதே மக்களிடமிருந்து தான், நியாயமான  கோரிக்கைகளான அரசியல் கைதிகள் விடுதலை, காணி ஆக்கிரமிப்பு நீக்கம்,  போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டியும் இருக்கும் என்பதை மக்களைத் திட்டும் போது நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படி நினைக்காமல், சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டுத் தாக்கினால், அடுத்த தலைமுறையில் "தமிழ் தேசியம்" என்று வாய் திறந்தாலே ஊரில் அடி தான் விழும்.

இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. 

முற்றும். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. 

முற்றும். 🙏

இதில் அடையும் சந்தோசம் இருக்கிறதே ...அளப்பரியது....முற்றுப்புள்ளி...3 தடவை போடுகின்றேன்..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலங்காரம், ஒளிவிளக்கு, உணவு எல்லாம் பார்க்க நல்லாய்த்தான் உள்ளது. 

நாம் சிறுவயதில் பார்த்தபோது உள்ளதைவிட இப்போது தொழில்நுட்பம் புகுந்து அட்டகாசமாக விளையாடுகின்றது. 

முன்பை விட இப்போது சனங்களுக்கு இராணுவம் மீது உள்ள பயம் போய்விட்டது. சகஜமாக உறவாடுகின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும்.

2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா?) ஒரு பேட்டியின் போது "சுமந்திரனுக்கு விழும் வாக்குகள் தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிரான வாக்குகளாக இருக்கும்" என்ற தொனியில் பேசியிருந்தார்.

சுமந்திரனுக்கு வெல்லப் போதுமான வாக்குகள் விழுந்தன, அவர் இப்போதும் பா.உ ஆக இருக்கிறார். எனவே "தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிராக ஆயிரக்கணக்கான மக்கள் யாழ் மாவட்டத்தில் இருக்கிறார்கள்" என்று தமிழரின் எதிரிகளான எவரும் நிறுவவில்லை - தமிழ் தேசியரான காக்கா அண்ணாவே தன் கருத்து மூலம் நிறுவினார். (அதே தேர்தலில் சுமந்திரனை  விட அதிக வாக்குகள் தமிழ் தேசியமே பேசாத மகிந்தவின் அணியின் அங்கஜனுக்கு கிடைத்தன என்பதும் ஒரு கவனிக்க வேண்டிய தகவல்!).

மேல் தகவலை நான் நினைவூட்டுவதன் காரணம்: தீவிரமான கண்ணாடியூடாக சாதாரண விடயங்களை பெரிதாக்கிப் பார்த்து, அதனாலேயே மக்களின் மன நிலையை தவறாகப் புரிந்து கொள்வதும், அவர்களை வையப் போய், பின்னர் அவர்கள் "இந்த தீவிரப் பார்வை எமக்கு வேண்டாம்" என்று விலகி நடப்பதும் எங்களுக்கு நன்மை செய்யாது. தமிழ் தேசிய உணர்விற்கும், வெசாக் கூடு பார்க்க ஒரு இரவு மக்கள் உலவுவதற்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பொழுது போக்கு, அவ்வளவு தான்.

இதே மக்களிடமிருந்து தான், நியாயமான  கோரிக்கைகளான அரசியல் கைதிகள் விடுதலை, காணி ஆக்கிரமிப்பு நீக்கம்,  போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டியும் இருக்கும் என்பதை மக்களைத் திட்டும் போது நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படி நினைக்காமல், சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டுத் தாக்கினால், அடுத்த தலைமுறையில் "தமிழ் தேசியம்" என்று வாய் திறந்தாலே ஊரில் அடி தான் விழும்.

இரண்டு இனங்கள் தத்தமது கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்து சமமாக மதிப்பளித்து நடக்கும் போது நீங்கள் சொல்வது சரியாகலாம். ஆனால் இன்று இது ஒரு திசை மாற்றாக அல்லது மதத்திணிப்பாக பார்க்கப்படுவது தவிர்க்க முடியாதது. நன்றி. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியாயம் said:

அலங்காரம், ஒளிவிளக்கு, உணவு எல்லாம் பார்க்க நல்லாய்த்தான் உள்ளது. 

நாம் சிறுவயதில் பார்த்தபோது உள்ளதைவிட இப்போது தொழில்நுட்பம் புகுந்து அட்டகாசமாக விளையாடுகின்றது. 

முன்பை விட இப்போது சனங்களுக்கு இராணுவம் மீது உள்ள பயம் போய்விட்டது. சகஜமாக உறவாடுகின்றார்கள். 

இதுவும் சிங்கள பெளத்த இனப்படுகொலை இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிச்ச கணக்குத்தான்.

அதற்காக புலிகள்.. தமிழ் மக்கள் மீதான பயம் இல்லாமல் போயிருந்தால்.. எதற்கு இன்னும் ஆக்கிரமிச்சு நிற்கனும்.. தமிழர்களின் நிலத்தை.

சாதாரண சிங்களவர்கள் வந்து வெசாக் அலங்காரமா செய்கிறார்கள். ஏன் இராணுவம் அடாத்தாச் செய்யனும்..??!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

இதுவும் சிங்கள பெளத்த இனப்படுகொலை இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிச்ச கணக்குத்தான்.

அதற்காக புலிகள்.. தமிழ் மக்கள் மீதான பயம் இல்லாமல் போயிருந்தால்.. எதற்கு இன்னும் ஆக்கிரமிச்சு நிற்கனும்.. தமிழர்களின் நிலத்தை.

சாதாரண சிங்களவர்கள் வந்து வெசாக் அலங்காரமா செய்கிறார்கள். ஏன் இராணுவம் அடாத்தாச் செய்யனும்..??!

உங்கள் வினாக்களுக்கு பதில் கூறுவதற்குரிய தரவுகள் என்னிடம் இல்லை.

ஆனால் நான் கேள்விப்பட்ட விடயம் என்ன என்றால் வெள்ளவத்தையிலும் தமிழ் ஆட்கள் வெசாக் தினத்தில் உணவு உட்கொண்டார்கள். வேடிக்கை பார்த்தார்கள். இவ்வாறே இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கும். யாழ்ப்பாணத்தில் சாதாரண சிங்கள மக்கள், வர்த்தகர்களின் பிரசன்னம் இல்லாதபடியால் இராணுவத்தினர் அலங்காரம், உணவு கொடுத்தலை செய்கின்றனர். 

நல்ல மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். 

@ரஞ்சித் மேற்கண்ட உரையாடலில் எழுதிய விடயம்/எழுதிய பாணி ஆச்சரியம் தரக்கூடிய ஒன்று அல்ல. அவர் எழுத்துக்கள் அப்படித்தான். எல்லோரும் ஒரே மாதிரி அல்லதானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

🤣...........

சித்திரை, வைகாசியில் அம்மன் கோவில் போகாமல், வெசாக் பார்க்கப் போனால், இப்படித்தான் கூகைக்கட்டு வரும்.......😀.

அட நானும் ஏதோ புத்தரின் கோபப் பார்வை என்று எண்ணிவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொழும்பில் வேடிக்கையாக வெசாக் பார்க்கப்போவதற்கும், யாழ்ப்பாணத்தில் வெசாக் பார்க்கப்போவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் என்னைப்பொறுத்தவரை ஆக்கிரமிப்பின் அடையாளங்கள் தான். உடனே இணக்க அரசியல் எழுதுவோர் ஓடிவாருங்கள், "அதெப்படிச் சொல்வீர்கள், கொழும்பில் கோயில் இல்லையா? ஆடித்தேர் இழுக்கவில்லையா?" என்று கேட்டுக்கொண்டே. எல்லாம் இருக்கிறது, ஆனால், தமிழினம் சிங்கள இனத்தை ஆக்கிரமித்து கொழும்பில் நிற்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்திலோ, வடக்குக் கிழக்கில் எந்தவிடத்திலுமோ நடப்பது சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புத்தான். இந்த ஆக்கிரமிப்பினை எம்மால் வேடிக்கை வினோதமாகத்தான் பார்க்க முடிகின்றதென்றால் பிழை ஆக்கிரமிப்பாளனில் இல்லை.

சுமந்திரனுக்கோ அங்கஜனுக்கோ யாழ்ப்பாணத்தில் விழுந்த வாக்குகளுக்கும், 2010 இல் சரத் பொன்சேகாவிற்கு விழுந்த வாக்குகளுக்கும் இடையே எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இவர்களுக்கு ஏன் தாம் வாக்களிக்கவேண்டும் என்கிற கேள்வியோ, வாக்களிப்பதால் உருவாகப்போகும் விளைவுகள் குறித்தோ யாழ்ப்பாணச் சமூகம் அக்கறைப்படுவதாகவும் நான் நினைக்கவில்லை. தம்மை இன்றைவரை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு சமூகத்தின் எந்த வாக்காள‌ருக்கு நாம் வாக்களிக்கலாம், எவருக்கு வாக்களிக்காது விட்டால் நாம் விரும்பும் ஒரு சிங்கள வேட்பாளருக்கான ஆதரவு குறைந்துவிடும் என்று கவலைப்படும் நிலைக்குத் தமிழ்ச் சமூகம் வந்துவிட்டிருப்பதும் சிங்களவர்களின் பிழையில்லை. 

தையிட்டியில் (இன்றும் நடக்கிறது) அடாத்தாக தமிழர் நிலங்களில் விகாரை கட்டும்போதும், குருந்தூர் மலையில் சிவலிங்கத்தை உடைத்தெறிந்து அப்பகுதியை பெளத்த பூமியென்று நிறுவும்போதும், நாவற்குழியில் இனக்கொலையாளியொருவனால் விகாரை திறந்துவைக்கப்பட்டபோதும், திருகோணமலையில் தமிழர் தாயகப்பகுதியில் புதிதாக விகாரை கட்டி எழுப்பும்போதும் வெறுமனே ஓரிரு மக்களும், செயற்பாட்டாளர்களும் மட்டுமே அங்கு நின்று ஆர்ப்பரிப்பதும் யாருடைய பிழை? ஏன், அந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் ஓரிருவரைத் தவிர, மொத்தத் தமிழர்களுக்கும் இது பிரச்சினையாகத் தெரியாது போனதெப்படி? 

இதை எழுதவேண்டியிருப்பதே யாழ்ப்பாணத்து தமிழர்களின் இன்றைய அரசியல்க் கையறு நிலையினைச் சுட்டிக்காட்டத்தான். தமிழர்களின் இருப்பைத் தக்கவைப்பத‌ற்கான தேவை யாழ்த்தமிழர்களுக்கு இல்லாமற்போனதெப்படி? காணி விடுவிப்புப் போராட்டம், அரசியற்கைதிகளின் விடுதலைப் போராட்டம் என்பவற்றிற்கு வந்து "குவியும்" ஆயிரமாயிரம் தமிழர்கள் இனிமேல் வராது போய்விடுவார்கள் என்கிற நியாயமான கவலை சிலருக்கு !!! நான்கைந்து பாதிக்கப்பட்ட மக்களும், இன்றுவரை தமது காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெற்றோரையும் தவிர எத்தனை "ஆயிரம்" தமிழ் மக்கள் இப்போராட்டங்களில் வந்து குவிகிறார்கள்? இந்தத் தேவையற்ற எச்சரிக்கை ஏன்? நீங்கள் போராடுவதற்கும் எமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அம்மக்களை நிர்க்கதியாக விட்டு விட்டு சமூகத்தின் பெரும்பான்மையான மீதிப்பேர் வேடிக்கை நிகழ்வுகள் உட்பட தமது நாளாந்த வாழ்க்கையினைப் பார்க்கச் செல்லவில்லையா? இல்லாத‌ ஒன்றை இருப்பதாகக் காட்டி எச்சரிக்கை வேறு விடுக்கிறீர்கள்?

அரசியல்மயப்படுத்தப்படாத, அல்லது அரசியலில் தேசிய நீக்கம் செய்யப்பட்டுவரும் யாழ்ப்பாணச் சமூகத்திடமிருந்து இதனைத்தவிர வேறு எதனையும் எதிர்பார்க்கமுடியாது. சில தினங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் வந்து இணைந்துகொண்ட தமிழ் மக்களுக்கும் நேற்று நாகவிகாரையைச் சுற்றி ஓடியோடி "வேடிக்கை" பார்த்த தமிழர்களுக்கும் இடையே வித்தியாசம் நிச்சயம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். 

"தமிழ்த்தேசியம் என்று ஊரில் வாய்திறந்தால் அடிதான் விழும்" ‍ இந்த நிலை வரக் காரணம் என்ன? ஐம்பதினாயிரம் போராளிகளும், ஒன்றரை இலட்சம் மக்களும் ஏன் மடிந்தார்கள்? இன்று யாழ்ப்பாணத்தான் கூறுவது போல எமக்கேன் தேவையற்ற பிரச்சினை, அது பிரச்சினை உடையவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று அவர்கள் அனைவரும் இருந்திருக்கலாமே? அவர்கள் தம்மை தேசியத்திற்குள் ஈடுபடுத்திக்கொள்வதற்கான தேவை ஒன்று இருந்ததுதானே? அது இன்றும் இருக்கிறதுதானே? பிறகேன் தேசியம் கதைத்தால் அடிவிழும் என்கிற பயம்? அப்படி நிலை ஏற்பட யார் காரணம்? புலிநீக்கம் செய்கிறோம், தேசிய நீக்கம் செய்கிறோம், இணக்க அரசியல் செய்கிறோம், அடையாளம் துறக்கிறோம், சுயவிமர்சனம் செய்கிறோம், தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என்று பேசிப்பேசியே ஒரு சமூகத்தை அரசியல் கோமா நிலைக்குக் கூட்டிச் சென்றது யார்? இதைக்கேட்டால் "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால் அடிதான் விழும் " என்கிறீர்கள். 

முதலில், யாழ்ச் சமூகம் உட்பட, மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் அரசியல் மயப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை முன்னெடுங்கள். உங்களின் நடுநிலை, இணக்க, தேசிய நீக்க அரசியலால் பிரிந்துபோய், நமக்கேன் தேவையில்லாத வேலை என்று இருக்கும் சமூகத்தை தூக்கியெழுப்புங்கள். ஏனென்றால், சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்மக்கள் எதிர்கொண்ட‌ பிரச்சினைகளைக் காட்டிலும் பலமடங்கு பிரச்சினைகள் அவர்களின் முன்னால் இன்றைக்கு இருக்கின்றன. தனது ஆக்கிரமிப்பினை சிங்களம் கட்டுப்பாடின்றி, தட்டிக் கேட்போர் இன்றி மிகச் சுதந்திரமாக முன்னெடுத்து வருகிறது. 

கண்ணாடி ஏதுமின்றி குருடர்களாக, அரசியலில் அநாதைகளாக, திக்கற்றவர்களாக, செல்லும் வழிதெரியாது நடுவீதியில் நிற்பவர்களாக தமிழர்களை வெகுவிரைவில் நீங்கள் கொண்டுவந்து விட்டுவிடுவீர்கள். இப்படிப் போனதன் விளைவே முள்ளிவாய்க்காலுக்கும், கார்த்திகை 27 இற்கும் செல்லும் மக்களுக்கும், நாகவிகாரையில் வெசாக் பார்த்து இன்புற்று, தம்மைக் கொன்றொழித்த மிருகங்களுடன் "சகஜமாகக் கூடிக் குலவும்" இன்னொரு மக்கள் கூட்டத்திற்கும் இடையே நிரந்தரமான இடைவெளி ஒன்று உருவாவதற்குக் காரணம்  . 

Edited by ரஞ்சித்
  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இரண்டு இனங்கள் தத்தமது கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்து சமமாக மதிப்பளித்து நடக்கும் போது நீங்கள் சொல்வது சரியாகலாம்

இதுதான் அடிப்படை. இது பலருக்குப் புரிவதில்லை. அறைக்குள் இருக்கும் யானையினைப் பார்க்க பலருக்கு முடிவதில்லை. கேட்டால் தீவிரக் கண்ணாடி போட்டுப் பார்க்கிறோம் என்று எங்களைக் கூறுகிறார்கள். 

சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுப்பெற்று, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகிடைத்து, தமிழர்கள் கெளரவமாகவும், சுயமரியாதையாகவும், சுதந்திரமாகவும் வாழும் நிலை வரட்டும். பின்னர் இரு சகோதர இனங்களாக, இரு சமத்துவ இனங்களாக அவன் வெசாக்கை எமது தாயகத்திலும், நாம் எமது பொங்கலை அவனது தாயகத்திலும் கொண்டாடலாம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, நியாயம் said:

யாழ்ப்பாணத்தில் சாதாரண சிங்கள மக்கள், வர்த்தகர்களின் பிரசன்னம் இல்லாதபடியால் இராணுவத்தினர் அலங்காரம், உணவு கொடுத்தலை செய்கின்றனர். 

நல்ல மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். 

நாவற்குழியில், திருகோணமலையில், தையிட்டியில் இதே இராணுவம் தான் விகாரையினைக் கட்டியது. நாவற்குழி விகாரைக்கு முதன்முதலான சமய அனுட்டானங்களை ஆரம்பித்து வைத்தவனே சவேந்திர சில்வாதான். இன்று, வடக்குக் கிழக்கில் ஆக்கிரமித்து நிற்கும் எல்லா இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலீஸ் முகாம்களுக்குள்ளும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடாத்தாக விகாரைகளைக் கட்டிவருவதும் அதே இராணுவம்தான். மாங்குளத்தில் கட்டப்பட்ட விகாரையினைச் சுற்றிச் சிங்களக் கிராமமும், நாவற்குழியில் சிங்களக் கிராமமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

சாதாரண சிங்கள வியாபாரிகளும், மக்களும் இல்லாததால்த்தான் இராணுவம் பண்டிகை நடத்தியது, மென்பானம் கொடுத்தது என்று எழுதுகிறீர்களே? ஆக்கிரமிப்பை நடத்துவது இராணுவம். அதன்பின்னரே சாதாரண மக்களும், வியாபாரிகளும் கொண்டுவந்து இறக்கப்படுவார்கள். வடக்குக் கிழக்கு பூகோள இணைப்பை உடைத்தெறிய‌ மணலாற்றில் 80 களில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பின்னர், அந்த இராணுவ முகாம்களைச் சுற்றி மென்மேலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். முகாம்களுக்கு சிங்கள மக்கள் பாதுகாப்பு, சிங்கள மக்களுக்கு முகாம்கள் பாதுகாப்பு என்று அன்று அரசு திட்டமிட்டுக் குடியேற்றம் செய்தது, இன்றும் அப்படித்தான்.

உங்களுக்குப் புரியாது. எழுதினால், என்னை மனநலம் குறைவானவன் என்று எழுதுகிறீர்கள். ஏதோ செய்துவிட்டுப் போங்கள்.  

Edited by ரஞ்சித்
spelling
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது நேற்று தையிட்டியில் தமிழர்களின் காணியில் சட்டவிரோதமான முறையில் இராணுவமும், பிக்கு ஒருவனும் அமைத்துவரும் விகாரையினை எதிர்த்துப் போராடும் ஒரு சில தமிழ் மக்கள். ஒரு அரசியற் கட்சியையும், சில பத்து மக்களையும் தவிர இது ஒரு பிரச்சினையாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்துக் கேட்டால், "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால், இப்போராட்டங்களுக்கு ஆள்த்திரட்டவும் சிரமப்பட வேண்டி வரும்" என்று எச்சரிக்கைகள். இந்த மக்களை நீங்கள் திரட்டத் தேவையில்லை. தாமாக தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் இன்னமும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு இது ஆச்சரியமாகத் தெரியலாம், ஆனால் அதுதான் உண்மை. நாக விகாரையில் வேடிக்கை பார்க்கக் கூடிய கூட்டமெங்கே, இந்த மக்கள் எங்கே?

Edited by ரஞ்சித்
spelling
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

சித்திரை, வைகாசியில் அம்மன் கோவில் போகாமல், வெசாக் பார்க்கப் போனால், இப்படித்தான் கூகைக்கட்டு வரும்.......😀.

இலங்கையில் கடவுள்மார்கள் அப்படி  செய்வதற்கு  வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது.  ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தபோது இந்து மத குரு, புத்த மதகுரு, முஸ்லிம் மதகுரு கிறிஸ்தவ குரு எல்லாம் ஒற்றுமையாக நின்று அவரை  வரவேற்றவர்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் கடவுள்மார்கள் அப்படி  செய்வதற்கு  வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது.  ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தபோது இந்து மத குரு, புத்த மதகுரு, முஸ்லிம் மதகுரு கிறிஸ்தவ குரு எல்லாம் ஒற்றுமையாக நின்று அவரை  வரவேற்றவர்கள்.

ஈழப்பிரியனுடன் ஒரு பகிடி விடுவதற்காகவே அதை எழுதியிருந்தேன்.....மற்றபடி எந்தக் கடவுளும் எந்த நோயையும் கொடுப்பதில்லை .......👍...எங்கள் ஊரில் இப்படியான சில நோய்களை அம்மாளாச்சி கொடுப்பதாக சொல்வார்கள். ஓரு வெருட்டல் தான்....😀

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது. 

ஆகா நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

Link to comment
Share on other sites

எதிர்காலத்தில் இப்படியும் எம் வரலாற்றை நாம் எழுதிக் கொள்வோம்:

தொடக்கத்தில் தமிழ் அரச பிரதிநிதிகளை துரோகிகள் என்றோம்,

பின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை, தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகள் என்றோம்,

பின் போராட போன சக தமிழ் இயக்கங்களை துரோகிகள் என்றோம்,

பின் சக போராளிகளையே துரோகிகள் என்றோம்.

இன்று போரைத் தாங்கி, எல்லாவற்றையும் எதிர்கொண்ட தமிழ் பொது மக்களையும் துரோகிகள் என சொல்லத் தொடங்கப் போகின்றோம்..

ஈற்றில்முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எம்மை நாமே துரோகி என அழைத்து எம் கழுத்தை நாமே அறுத்து எம்மை கொல்வோம்.

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் கடவுள்மார்கள் அப்படி  செய்வதற்கு  வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது.  ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தபோது இந்து மத குரு, புத்த மதகுரு, முஸ்லிம் மதகுரு கிறிஸ்தவ குரு எல்லாம் ஒற்றுமையாக நின்று அவரை  வரவேற்றவர்கள்.

இது எல்லாம் நாடகத்துக்காக குருமாரை வலிந்து வரவைப்பதால்..நடப்பது..

தயிட்டி விகாரைக்கு  சிங்களவன் பஸ்சில் ஏற்றி வரப்படுகிறான்..அவனுக்கு காசும் சாப்பாடும் குடிபானமும் கொடுக்கப்படுகிறது..ஆமியின் உசாரில் தமிழனை வெருட்டவும் செய்கிறான்..

ஆரியகுளத்திலோ..வெளிநாட்டுக்காசில்..வயிறுவளர்ப்போர்..உடுப்பையும் ..செல்வாக்கைய்ம் காட்ட வருகின்றனர்..இவையின் சோடனைகளை சோக்காட்ட ..காணோளி வர்ணணை யாளர் இருக்கினம்..இன்னொரு சாரார் இலவசம் சாப்பாடுமட்டும்  பெற  வருகினம்...இங்கு இன உணர்வு  அரசபலத்தால் மழுங்கடிக்கப்படுகிறது...என்ன செய்வது ..தமிழனின் விதி..

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விளங்க முடியாமல் குழப்பமாக எழுதியிருக்கிறீர்கள். (எனக்கு விளங்கிய வரையில்) உங்கள் கருத்துகளுக்கு அடிப்படையாக இருப்பவை இரண்டு விடயங்கள்: 1. ஆண் - பெண் குடும்பம் தான் பூரண குடும்பம் என்ற உங்கள் "நம்பிக்கை". 2. ஓரினச் சேர்க்கையாளர் மீதான அச்சம் - homophobia இது இரண்டையும் தவிர, எந்த ஆதாரங்களையோ, முன்னுதாரணங்களையோ, மேற்கத்தைய சமூகங்களில் , நாடுகளில் இருக்கும் உதாரணங்களையோ அடிப்படையாக வைத்து முடிவெடுக்கும் இலக்கு உங்களிடம் இல்லை. இந்த மனநிலை இங்கே மட்டுமல்ல, முன்னரும் சில மானிடவியல், வரலாறு தொடர்பான திரிகளில் நீங்கள் வெளிக்காட்டியது தான். எனவே, ஆச்சரியமில்லை.
    • நன்றாக எழுதியுள்ளீர்கள் அண்ணா. மனதும் கனத்துப்போனது. எம் மனதில் ஆழமாகப் பதிந்த விடயங்கள் எம் மரணம் வரை கூடவே இருக்கும்.
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 33     கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த மூத்த பிளினி இலங்கையில் குறிப்பிட்ட பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon]   மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன.   உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.   "பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு உறைபதி என்னும் உலகு." (குறள்-1015)   எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498   "நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து, பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த"   என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த[சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது , மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது.   ஆனால், மாகாவம்சத்தில், துட்டகாமினியை எடுத்துக் கொண்டால், தனது ஈட்டியில், புத்தரின் உடல் எச்சத்தை [relic] போட்டு சண்டைக்கு போனான் என்கிறது. எப்படி புத்தரின் எச்சத்தை பெற்றான் என்பது இன்னும் ஒரு ஆச்சரியமான கதை. ஆனால், அன்பே உலகம் என அமைதி விரும்பும் புத்தர் , எப்படி துட்டகாமினிக்கு அதன் மூலம் நீதி தவறாத எல்லாளனை கொல்ல உதவினார் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது.   அப்படி என்றால் எப்படியான ஞானம் புத்தருக்கு கிடைத்தது ? அன்பே வடிவான புத்தருக்கு இது அவமதிப்பு இல்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், தமிழ் அரசன் தித்தம்பாவை [Damila Titthamba], நாலு மாதம் ஆகியும் வெல்ல முடியாத சந்தர்ப்பத்தில், தந்திரமான முறையில், தான் தன் தாயை திருமணம் செய்ய தருகிறேன் என தன் தாயை தன்னுடன் யுத்த இடத்தில் வைத்திருந்து ஏமாற்றி அவனை கொல்லுகிறான் என்கிறது.   இது வெளிப்படையாக கூறாவிட்டாலும், துணை விளக்கம் [it is stated so in the Tika, the commentary, as per the foot note in the Geiger’s translation.] கொடுக்கப் பட்டுள்ளது. மகாவம்சம் எழுதியவர் எந்த நிலைக்கும் , உதாரணமாக தாயையே எதிரிக்கு கொடுக்கும் அளவுக்கு தயாராக, தாய் இனத்தையே அவமதிக்கும் அளவுக்கு தள்ள பட்டிருப்பது, பத்தினி தெய்வம் வணக்கும் இலங்கையின் காப்பியம் ஒன்றில் எழுதப்பட்டிருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது?     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 34 தொடரும்     
    • நன்றி ஏராளன். அனேகமாக நான் மற்றைய திரியில் சொல்ல முனைந்த தகவல்களை எளிமையாகச் சொல்லியிருக்கிறார். இதை செவி மடுத்து பதில் எழுத வேண்டியது இதற்கான எதிர் நிலையை எடுத்திருக்கும் ஏனைய உறவுகளின் தெரிவு. ஆனால், இங்கே சுருக்கமாகச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது: 1. ஓரினக் கவர்ச்சி என்பது ஒரு நோய் நிலை (pathology) அல்ல. 1970 இற்கு முன்னர், அமெரிக்க மனநல வைத்தியர்களின் அமைப்பு (American Psychiatric Association) இது நோய் நிலை என்ற தவறான புரிதலில் இருந்த போது, ஓரினக்கவர்ச்சி உடையோருக்கு பாலுணர்வை குறைக்கும் மருந்துகள் (chemical castration) மூலம் சிகிச்சை அளிக்க முயன்றார்கள். சிகிச்சையின் பின்விளைவாகச் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மறைந்து வாழப் பழகிக் கொண்டனர். 70 களின் பின் நிலைமை மாறியது. வெளிப்படையாக இருக்க ஆரம்பித்தனர். 2. ஆனால் இன்னும் பல நாடுகளில், திருமணம் செய்து வாழ சட்டத்தில் இடம் இல்லை. 2015 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்கா முழுவதும் ஓரினத் திருமணத்தை சட்ட பூர்வமாக்கித் தீர்ப்பளித்தது. கொஞ்சம் அமெரிக்காவில் கெடு பிடி குறைந்தது இதன் பின்னர். 3. "LGBTQ இனை சமமாக மதித்து அங்கீகரித்தால், சமூக சீரழிவு, சமநிலை குறைந்து விடும்" என்று வாதிடுவோருக்கு முகத்தில் அறையும் சாட்சிகளாக 80 களிலேயே ஓரினக் கவர்ச்சி, ஓரினச் சேர்க்கை என்பவற்றை சட்டபூர்வமாக்கிய ஸ்கண்டினேவியன் நாடுகள் விளங்குகின்றன. டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன், நோர்வே ஆகிய இந்த நாடுகளின் வாழ்க்கைத் தரமும், சமூக சமநிலையும் உலகமறிந்தது. ஒரு ஒப்பீட்டிற்கு, ஓரினச் சேர்க்கையாளர்களை "பின் பக்கத்தில் உதைத்துத் துரத்தும்" 😎ரஷ்யாவில் பிறப்பு வீதமும் குறைவு, வாழ்க்கைத் தரமும் இந்த ஸ்கண்டினேவிய நாடுகளை விட மிகக் குறைவு. 4. "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன். திருமணம் என்றால் என்னவென்று மணம் செய்து கொள்ளும் நபர்கள் தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படை உண்மையான, நீடித்த, பரஸ்பர அர்ப்பணிப்புத் தான் என்றால் அது திருமணம் தான். இதை வேறு பெயர் கொண்டு அழைக்க வேண்டியதில்லை.     
    • Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான்  உள்ள போக முடியும் Mendis~ சுப்பர் 8 உள்ளயா.? Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...?  நாட்டுக்குள்ளடா..... 😂 Vijay Vj
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.