Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

15 வருடமாக கோமாளிவேலைதான் செய்கின்றார்கள். இவர்கள் எந்த ஜனநாயக முறைப்படி தங்களை நாடுகடந்த அரசாங்கம் என்றும் சொல்லமுடிகின்றது?

large.IMG_6549.jpeg.6effad9e128c018cf196

  • Replies 99
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    சீமான் மட்டுமல்ல உலகத்தில் வாழும் யாரும் புலிகளையும் தலைவரையும் அதன் கொள்கைகளையும் பேசலாம்.. அது ஒரு தத்துவம்.. தலைவர் தமிழ்தேசிய உலகிற்கு தந்துவிட்டு போனது.. மார்க்சியம் போல லெனினியம் போல் பெரியாரிசம

  • விசுகு
    விசுகு

    வணக்கம் சகோ இந்த கருத்தை பார்த்தபோது சிலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன்.   சிறீலங்கா சிங்களத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பௌத்த மதமே சிறீலங்கா என்று சொல்லி எம்மை அடித்து துரத

  • Eppothum Thamizhan
    Eppothum Thamizhan

    இது பல மரமண்டைகளுக்கு விளங்குதில்லை விசுகர்! தமிழக வாக்காளர்கள் உட்பட!!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6549.jpeg.6effad9e128c018cf196

ஏன் உயிர் அற்ற. ஓடாத. குதிரையில். ஏறி இருக்கிறார்??  அதுநின்ற இடத்திலேயே நிற்கின்றது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்களை பார்த்து என்ன புடுங்கினீர்கள் என கேள்வி மேல் கேள்விக்கணைகளை வீசுபவர்களே! 😎
நீங்கள் விசுவாசிக்கும்,ஆதரிக்கும் தலைவர்கள் இதுவரை என்ன புடுங்கினார்கள் என்பதை பஞ்சபுராணமாக பாடவும்.🤣

Edited by குமாரசாமி
புடுங்கினீர்கள் இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மற்றவர்களை பார்த்து என்ன புடுங்கினீர்கள் என கேள்வி மேல் கேள்விக்கணைகளை வீசுபவர்களே! 😎
நீங்கள் விசுவாசிக்கும்,ஆதரிக்கும் தலைவர்கள் இதுவரை என்ன புடுங்கினார்கள் என்பதை பஞ்சபுராணமாக பாடவும்.🤣

இதுக்கு இலகுவான பதில். தலைவருக்குப் பிறகு தமிழரிடம் நேர்மையான தலைவர்கள் ஒருவரும் இல்லை. எல்லோரும் பிழைப்புவாதிகள். அதை இந்தப் பதினைந்து வருடங்களில் புரியாமல் இருப்பவர்களின் மண்டைகளைக் கழுவி இன்னும் தங்களின் சுயநல வாழ்க்கையில் சுகபோகமாக இருப்பதற்கு நிதி சேர்ப்பவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஏமாறுபவர்கள் தாம் ஏமாறவில்லை என்று நம்ப நாம் சொல்வதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, கிருபன் said:

இதுக்கு இலகுவான பதில். தலைவருக்குப் பிறகு தமிழரிடம் நேர்மையான தலைவர்கள் ஒருவரும் இல்லை. எல்லோரும் பிழைப்புவாதிகள். அதை இந்தப் பதினைந்து வருடங்களில் புரியாமல் இருப்பவர்களின் மண்டைகளைக் கழுவி இன்னும் தங்களின் சுயநல வாழ்க்கையில் சுகபோகமாக இருப்பதற்கு நிதி சேர்ப்பவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஏமாறுபவர்கள் தாம் ஏமாறவில்லை என்று நம்ப நாம் சொல்வதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அம்மா மாதிரி பொம்பிளை இருந்தால் தான் கலியாணம் கட்டுவன் எண்டு பிள்ளையார் அடம்பிடிச்சதாக ஒரு சமய கதை இருக்குது.🤪

அது போல தலைவரை மாதிரி ஒரு தலைவன் இனி இந்த யுகத்தில் வரப்போவதில்லை. அப்படி வந்தாலும் மற்றவர்கள் விடப்போவதும் இல்லை.

இருப்பதை வைத்து சுளிவு நெளிவுகளாக வெல்வதே புத்திசாலித்தனம். அவன் காசடிக்கிறான் இவன் காசடிக்கிறான் என்றால் இன்றைய உலகில் எந்த அரசியல்வாதிதான் காசடிக்கவில்லை?

மக்களுக்கு சேவை செய்யவென வரும் ஒவ்வொரு  அரசியல்வாதிகளும் வைத்தியர்களுமே இன்றைய மகா கொள்ளையர்கள்.

எனவே.... 
காசு தரலாம் எனக்காக/எமக்காக இதை செய்  அதை செய் என பேரம் பேசும் அரசியல் ரயில் தான் இன்று உலகம் முழுக்க ஓடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

காசு தரலாம் எனக்காக/எமக்காக இதை செய்  அதை செய் என பேரம் பேசும் அரசியல் ரயில் தான் இன்று உலகம் முழுக்க ஓடுகின்றது.

இப்படிப் பேரம் பேசித்தான் @விசுகு ஐயா அள்ளி வழங்குகின்றார் போலிருக்கு.. 🙃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, கிருபன் said:

இப்படிப் பேரம் பேசித்தான் @விசுகு ஐயா அள்ளி வழங்குகின்றார் போலிருக்கு.. 🙃

நீங்களும் நானும் மட்டுமே இங்கே கருத்தாடுகின்றோம். விசுகுவின் கருத்தையும் இங்கே திணிப்பது உங்களால் என் கருத்திற்கு பதில் இல்லை என்பதே நிரூபணம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகபோக வாழ்கை வாழ்வதற்காக காசு கொள்ளை அடிப்பதற்காக அரசியல்  செய்கின்ற மகா கொள்ளையர்களுக்கு ஒரு போதும் சந்தர்பம் கொடுக்க கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் அழிவு. கடைசி யுத்தம்.
அந்த  உண்ணாவிரதம் நாடகம்.
அது வரை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளை தூற்றியதும் இல்லை.திட்டியதும் இல்லை.மாறாக எல்லா அரசியல்வாதிகளையும் கடவுள் போலவே மதித்தார்கள்.

கடற்தளபதி சூசை அவர்களின் கடைசி உரையாடல் எதை சொன்னது? ஏன் அப்படி சொன்னார்? யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் எதை சொன்னாலும் இந்தியாவலே. தமிழ்நாட்டாலே   அல்லது இந்தியாவையே தமிழ்நாட்டை யே.  ஆளும் ஆளப்போகும் எந்தவொரு தலைவர்களும் இலங்கை தம்ழருக்கு சுயாட்சி அல்லது தனிநாடு பெற்றுதர முடியாது    தமிழ்நாடு இந்தியாவை மீறி எதுவும் செய்ய முடியாது   இது நேரடி அனுபவம் சொந்த அனுபவம்  கண்ணாலே பாரத்தோம்.   தனியாக கருணாநிதியை  தூற்றக்கூடாது   மற்றவர்கள் என்ன செய்தார்கள்  இந்த 15 ஆண்டுகள் செய்தது என்ன??  இந்தியாவுக்குள்.  இருக்கும் தமிழ்நாடு ..   இந்தியாவாக இருக்கும் தமிழ்நாடு   நம்பலாமா ??   கூடாது ஒருபோதும் கூடாது   அங்கே நடக்கும் தேர்தல் திருவிழாவில் யாரும் வெல்லாலம்.  எவரும் தோற்க்கலாம்.  இது தமிழ்நாட்டு மக்களின் தீர்மானங்கள்   அதை மனப்பூர்வமாய்ப் ஏற்ப்போம். இலங்கை தமிழர்கள்  தங்களின் சொந்த காலில் நிற்க வேண்டும்   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

முள்ளிவாய்க்கால் அழிவு. கடைசி யுத்தம்.
அந்த  உண்ணாவிரதம் நாடகம்.
அது வரை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளை தூற்றியதும் இல்லை.திட்டியதும் இல்லை.மாறாக எல்லா அரசியல்வாதிகளையும் கடவுள் போலவே மதித்தார்கள்.

கடற்தளபதி சூசை அவர்களின் கடைசி உரையாடல் எதை சொன்னது? ஏன் அப்படி சொன்னார்? யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

சூசை அவர்கள் எல்லாம் முடியப் போகும் நேரத்தில் சொன்னது பொதுவான ஒரு கருத்து என்பது என் அபிப்பிராயம். அதை ஒலிப்பதிவு செய்து வைத்தது சீமானுக்கு வாய்ப்பாகப் போய் விட்டது. எனவே "கப்பில் கிடா வெட்டிய கில்லாடியாக" சீமான் வெளிப்படுகிறார். அவர் பின்னால் மண்டை கழுவிய செம்மறி ஆடுகளாக பலர் தொடர்கிறார்கள்!
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வ சாதாரணமாக  ஒரு தேர்தல் வந்துவிட்டால் யார் ஆட்சி அமைக்கின்றார்கள்/ யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதை விட யார்,எந்த கட்சி இந்த தேர்தலில் முன்னேறி இருக்கின்றார்கள் என்பதையே பலர் கவனத்தில் எடுப்பார்கள். அதை வைத்தே சர்வதேச விமர்சனங்களும் இருக்கும்.
ஆனால் இங்கு...????? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கீகாரம். இது தான் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தன்னைத்தானே ஆழவேண்டும் என்று சீமான் சொன்னது பலருக்கு வேப்பங்காய். 

ஏன்? 

இராச விசுவாசம். 

கட்டப்பா தோற்றார் போங்கள்,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தமிழன் தன்னைத்தானே ஆழவேண்டும் என்று சீமான் சொன்னது பலருக்கு வேப்பங்காய். 

ஏன்? 

இராச விசுவாசம். 

கட்டப்பா தோற்றார் போங்கள்,..🤣

சீமான் தமிழனா.??  மேலும்  இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும்  இந்திய மத்திய அரசின் ஆட்சியில் தான் இருக்கிறது  மத்திய அரசு  விரும்பினால் மாநில அரசை  கலைக்க முடியும்   இந்தியாவை தமிழன் ஆளா முடியாது   எப்படி ?? எங்கே?? தமிழன் தன்னை தானே ஆளா முடியும்??  தமிழனுக்கு நாடு இருக்கிறதா??  இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில்  முதல்வராவது   தமிழன் தன்னை தானே  ஆள்வாது  என்று ஆகி விட முடியாது   மத்தியில் உள்ள வடக்கன். தான்  ஆள்கிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள. தமிழர்கள் மத்திய அரசுக்கு  கட்டுப்பட்டு .....அடங்கி.  வாழ வேண்டும்   இதனால் தான் போலும்” கருணாநிதி 2009 இல்  மத்திய அரசை விட்டு விலகவில்லை    விலகி என்ன செய்ய முடியும்??  கருணாநிதி புதிய மத்திய அரசை நிறுவி இருக்க முடியுமா?? 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடப்பதற்கு முன்பு தான் சமூகவலைத்களங்களில் காட்டபடுகின்ற சீமான் விம்பத்தை 💪 வைத்து  சீமான் கட்சி தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் சீமான் முதல்வர் என்று நம்புகிறார்கள் என்று பார்த்தால் தேர்தல் முடிவு வந்த பின்பும் சீமான் கட்சி தான் வெற்றி வாகை சூடியது என்கின்றார்களே🙄

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீங்களும் நானும் மட்டுமே இங்கே கருத்தாடுகின்றோம். விசுகுவின் கருத்தையும் இங்கே திணிப்பது உங்களால் என் கருத்திற்கு பதில் இல்லை என்பதே நிரூபணம்.

அங்கத்தவர் பணம் எவ்வளவு? ஏன் அது கொடுக்கப்படுகிறது? 

என்பது கூட தெரியாமல் இருக்கும் எம் இனம்????

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அங்கத்தவர் பணம் எவ்வளவு? ஏன் அது கொடுக்கப்படுகிறது? 

என்பது கூட தெரியாமல் இருக்கும் எம் இனம்????

 

கொடுக்கிறவர் நீங்கள். இதில் சொல்லப்பட்டவைக்கா கொடுக்கின்றீர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்பதற்கா கொடுக்கின்றீர்கள்?😃

👇🏾

https://tgte-us.org/?page_id=480

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

கொடுக்கிறவர் நீங்கள். இதில் சொல்லப்பட்டவைக்கா கொடுக்கின்றீர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்பதற்கா கொடுக்கின்றீர்கள்?😃

👇🏾

https://tgte-us.org/?page_id=480

இங்கே தமிழ் மக்களின்  உரிமைகள் மற்றும் சுய அமைதி வாழ்வியல் சார்ந்து எதையாவது செய்யும் எல்லோரையும் எனக்கு தெரியும். அப்படியானால் அவர்களை எனக்கு தெரிந்ததால் செய்கின்றனரா? அவர்கள் ஏதாவது செய்வதனால் எனக்கு அவர்களை தெரிந்திருக்கிறதா???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே தமிழ் மக்களின்  உரிமைகள் மற்றும் சுய அமைதி வாழ்வியல் சார்ந்து எதையாவது செய்யும் எல்லோரையும் எனக்கு தெரியும். அப்படியானால் அவர்களை எனக்கு தெரிந்ததால் செய்கின்றனரா? அவர்கள் ஏதாவது செய்வதனால் எனக்கு அவர்களை தெரிந்திருக்கிறதா???

@விசுகு ஐயா, இப்படியே தொடர்ந்து உரையாடலாம். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. மாற்றமும் இல்லை.

புலம்பெயர் அமைப்புக்கள், ஏன் தாயக அமைப்புக்களும் கூட, மக்களிடம் நேரடித் தொடர்புகளை வைத்திருக்கவில்லை. அவர்கள் இயங்குவதற்குத் தேவையான நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவதில்லை. அப்படித் திரட்ட வந்தால்தான் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். செயற்திட்டங்களை விளக்கவேண்டும். இவையெல்லாம் 2009 க்கு முன்னர் நடந்தவை. கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் அளித்தவர்களும் இருக்கின்றார்கள். ஆத்திரம் கொண்டு பொங்கினவர்களும் ஒரு சிலர் இருக்கின்றார்கள்.

பலர் அமைப்புக்களில் இருந்து ஒதுங்கியபின்னரும் 2009க்குப் பின்னர் பல அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் இப்போதும் இயங்குகின்றார்கள். இந்த அமைப்புக்கள் செயற்படத் தேவையான நிதிபலத்தை அவர்களின் சொந்த முதலீட்டில் உள்ள வியாபாரங்கள் மூலமும், அவர்களுக்கு இணக்கமான வியாபாரிகள் மூலமும் பெற்றுக்கொள்கின்றார்கள். அவர்களின் சொந்த முதலீடுகள் ஒரு காலத்தில் போராட்டத்திற்கு மக்களால் கொடுக்கப்பட்ட நிதிகளில் இருந்துதான்  வந்தவை.

இப்படித் தேவையான நிதிபலம் ஒவ்வோர் அமைப்புக்களுக்கும் இருப்பதால்தான் அவர்களால் தனித்தனியே தொடர்ந்தும் செயற்படமுடிகின்றது. ஒன்றிணையவேண்டிய தேவையும் இல்லை என்பதைத்தான் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கும் நிகழ்வுகள், சம்மர் விளையாட்டுப் போட்டிகள் உட்பட, காட்டுகின்றன.

ஆக மொத்தத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் என்பது வியாபாரிகளின் கைகளில் சென்றுவிட்டது. சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. இதுவும் உங்களுக்கு வக்கிரமாகத் தெரியலாம்😄

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

@விசுகு ஐயா, இப்படியே தொடர்ந்து உரையாடலாம். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. மாற்றமும் இல்லை.

புலம்பெயர் அமைப்புக்கள், ஏன் தாயக அமைப்புக்களும் கூட, மக்களிடம் நேரடித் தொடர்புகளை வைத்திருக்கவில்லை. அவர்கள் இயங்குவதற்குத் தேவையான நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவதில்லை. அப்படித் திரட்ட வந்தால்தான் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். செயற்திட்டங்களை விளக்கவேண்டும். இவையெல்லாம் 2009 க்கு முன்னர் நடந்தவை. கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் அளித்தவர்களும் இருக்கின்றார்கள். ஆத்திரம் கொண்டு பொங்கினவர்களும் ஒரு சிலர் இருக்கின்றார்கள்.

பலர் அமைப்புக்களில் இருந்து ஒதுங்கியபின்னரும் 2009க்குப் பின்னர் பல அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் இப்போதும் இயங்குகின்றார்கள். இந்த அமைப்புக்கள் செயற்படத் தேவையான நிதிபலத்தை அவர்களின் சொந்த முதலீட்டில் உள்ள வியாபாரங்கள் மூலமும், அவர்களுக்கு இணக்கமான வியாபாரிகள் மூலமும் பெற்றுக்கொள்கின்றார்கள். அவர்களின் சொந்த முதலீடுகள் ஒரு காலத்தில் போராட்டத்திற்கு மக்களால் கொடுக்கப்பட்ட நிதிகளில் இருந்துதான்  வந்தவை.

இப்படித் தேவையான நிதிபலம் ஒவ்வோர் அமைப்புக்களுக்கும் இருப்பதால்தான் அவர்களால் தனித்தனியே தொடர்ந்தும் செயற்படமுடிகின்றது. ஒன்றிணையவேண்டிய தேவையும் இல்லை என்பதைத்தான் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கும் நிகழ்வுகள், சம்மர் விளையாட்டுப் போட்டிகள் உட்பட, காட்டுகின்றன.

ஆக மொத்தத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் என்பது வியாபாரிகளின் கைகளில் சென்றுவிட்டது. சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. இதுவும் உன் களுக்கு வக்கிரமாகத் தெரியலாம்😄

ஒவ்வொருவருடைய எழுத்துக்கள் அவர் அவரது செயல்களை,  செயலற்ற தன்மையை காட்டி விடும்.

எனவே உங்களின் இடத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒரு சின்ன அனுபவ குறிப்புடன் முடிக்கிறேன்.

சாதாரண மக்களை தொடர்ந்து துன்புறுத்த முடியாது கூடாது என்பதற்காகவே நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. +அவை ஆரம்பித்து வைக்கப்பட்டபோது நானும் அங்கே இருந்தேன்.)

இதனை சொல்வதன் ஊடாக அவர்களது இன்றைய போக்கை ஆதரித்து எழுதினேன் என்று அர்த்தம் இல்லை. நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Kandiah57 said:

சீமான் தமிழனா.??  மேலும்  இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும்  இந்திய மத்திய அரசின் ஆட்சியில் தான் இருக்கிறது  மத்திய அரசு  விரும்பினால் மாநில அரசை  கலைக்க முடியும்   இந்தியாவை தமிழன் ஆளா முடியாது   எப்படி ?? எங்கே?? தமிழன் தன்னை தானே ஆளா முடியும்??  தமிழனுக்கு நாடு இருக்கிறதா??  இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில்  முதல்வராவது   தமிழன் தன்னை தானே  ஆள்வாது  என்று ஆகி விட முடியாது   மத்தியில் உள்ள வடக்கன். தான்  ஆள்கிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள. தமிழர்கள் மத்திய அரசுக்கு  கட்டுப்பட்டு .....அடங்கி.  வாழ வேண்டும்   இதனால் தான் போலும்” கருணாநிதி 2009 இல்  மத்திய அரசை விட்டு விலகவில்லை    விலகி என்ன செய்ய முடியும்??  கருணாநிதி புதிய மத்திய அரசை நிறுவி இருக்க முடியுமா?? 

தமிழ்நாட்டு அரசிற்கும்,அது சார்ந்த மக்களுக்கும் இருக்கும் அதிகாரங்களும் உரிமைகளும் இலங்கை தமிழர் பிரதேசத்தில் இருக்கின்றதா?
மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகளை எதிர்க்க அவர்களால் முடியும்.
எம்மவர்களால் ......?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு அரசிற்கும்,அது சார்ந்த மக்களுக்கும் இருக்கும் அதிகாரங்களும் உரிமைகளும் இலங்கை தமிழர் பிரதேசத்தில் இருக்கின்றதா?
மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகளை எதிர்க்க அவர்களால் முடியும்.
எம்மவர்களால் ......?

இல்லை    நாங்கள் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டவர்கள்   இந்தியாவிலுள்ள. தமிழ்நாட்டு தமிழருக்கு நாங்கள் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டு தமிழர்கள்  தமிழ்நாட்டு தமிழர்கள்  வெளிநாட்டு கொள்கையில் ஒரு துரும்பைக்கூட.  எடுத்து போடமுடியாது ..அந்த உரிமையை இந்தியா சட்டம் இவரகளுக்கு. வழங்கவில்லை   இவரகளின் உரிமை  தமிழ்நாட்டுடன். மட்டுப்படுத்ப்பட்டுள்ளது எங்களை விட. இவர்களுக்கு உரிமை உண்டு தான்  ....என்ன ஒரு மத்திய அரசால் கலைக்ககூடிய.  சட்டமன்றம் வைத்துள்ளார்கள்    

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2024 at 20:21, Justin said:

ஓணாண்டியார், சுகமா? கனகாலம் கண்டு.

 

வணக்கம் ஜஸ்ரின் அண்ணா.. நான் நலம் நீங்கள் நலமா..? இப்ப கொஞ்ச நாளா யாழ் லோடாக நிறைய நேரம் எடுத்திச்சு அப்பிடி லோடாகி உள்ளவந்தாலும் திரியை திறந்தா பாதி திரி வரும் மீதி திரி லோடாகி பிளாங்கா நிக்கும்.. கடுப்பாகும்..எழுதக்கிடைக்கிறதேகொஞ்ச நேரம் இதுல திரிவேற லோட்டாகி சாவடிச்சா எப்பிடி எழுத முடியும்.. அதான் கடுப்பில எழுதுறேல்ல.. பேசாம மூடிட்டு வேற நியூஸ் சைட்ட பாத்திட்டு போயிடுறது.. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஓப்பின் பண்ணி பாப்பன் போட்டாலும் பாதியிலையே விட்டிட்டு போயிடுவன்.. இப்ப ரெண்டு நாளாதான் பழைய படி பாஸ்ற்ரா திறக்குது அதான் எழுதக்கூடியதா இருக்கு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Naam Tamizhar Performance Analysis: டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் இந்த தேர்தலில் சாதித்தது என்ன?

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.