Jump to content

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழகான ஆண்-பெண் என்ற குடும்ப கட்டமைப்பைச் சிதைப்பதற்கென்றே எத்தனை ஆயிரம் வியாக்கியானங்கள்!  சூப்பர்! வாழ்த்துகள்!👏

இந்த கூட்டத்துக்குள் trans gender மக்கள் வரமாட்டார்கள்.  ஆணாகவே இருந்துகொண்டு இன்னொரு ஆணுடன் இணைந்து வாழ்வதும் பெண்ணாகவே இருந்துகொண்டு பெண்ணோடு இணைந்துவாழ்வதும் vile affection ஆகும். மற்றும்படி ஆண் உடலமைப்பில் தம்மைப் பெண்ணாக உணர்பவர்களினதும் பெண் உடலமைப்பில் தம்மை ஆணாக உணர்பவர்களினதும் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

kandiah Thillaivinayagalingam

"ஒருபால் திருமணம்"   [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக

ரஞ்சித்

உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால

Kavi arunasalam

கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில்,   இரயிலில் பயணிப்பதற்காக,  இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின்  இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத

  • கருத்துக்கள உறவுகள்
"ஒருபால் இருபால் அவரவர் முடிவு"  
 
 
"பண்டைய  நாட்களில் இயற்கையின் அழைப்பில் 
பலரும் பாராட்டிட திருமணம் அரங்கேறி
பருவமடைத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே 
பக்குவமான பிணைப்பு பின்னிப் பிணைந்தது!"
 
 
"சுமேரிய நாகரிகம் வழியில் சங்கத்தமிழனும்   
சுத்தமான இயற்கையான அணைப்பில் மூழ்கி 
சுதந்திர பிணைப்பில் வாழ்வை அமைத்து 
சுவர் அமைத்தான் குடும்பம் காக்க!" 
 
 
"இன்றைய நவீனம் புதியகுரல்களை உள்வாங்கி 
இணக்கம் கொண்ட ஒருபாலாரையும் இணைத்து 
இதயங்கள் ஒன்றுசேர சமஉரிமை தந்து  
நவீனஃபிளாஷ் [modern flash] பழைய மதிப்புகளை சந்தித்தன!"
 
 
"கடந்தகால மரபும் தொடர்ந்து வாழ 
கள்ளமில்லா ஒருபால் அன்பும் இணைந்துவாழ 
களங்கமில்லா மரபுகளின் உட்கருத்தை விளக்க 
இருவேறு சொல்லில் வரையறுத்தால் என்ன ?"
 
 
"வார்த்தைக்கு ஆழமான அகலமான சக்தியுண்டு 
வாழ்வின்பொருள் அறிந்து உணர்ந்து இணைந்தால் 
வாட்டமில்லா மோதலில்லா சமூகம் தோன்றி 
வாயார வாழ்த்துமே வரம்புகளை அறிவதாலே!"
 
 
"திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றாகட்டும்  
இருமனம் சேரும் ஒருபாலார் சிவில் யூனியனாகட்டும் 
இரண்டுக்குமே ஒரே சட்டம் பார்வையாகட்டும் 
இல்லறமென்பது யாதென மனிதன் அறியட்டும் !"
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாண ம்]
448908170_10225393228240439_4516256292510328685_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=CZsLpUbaGpMQ7kNvgHuJiKh&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYB0kC5vbWXdSmGwdYb8EclXJGgoIt5X5g7HBDCLGTPFpw&oe=667B8F99 448908974_10225393230520496_8365791608614688455_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=frFFIhTCGqQQ7kNvgHRK7n6&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAEZlHY2pShBd45rtNBcGtUlpw5Wb8z8VdJKr-gKQhrCQ&oe=667B8770 448908690_10225393238040684_8764726107027033355_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=8i21EEFOkMQQ7kNvgGhFzI7&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBhS8zOL60r2MeMEl__zoeJzEG34KT0znsBqOVGNVKodg&oe=667B685B 448867390_10225393232320541_3272088405075795165_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=oVhajTDqFO4Q7kNvgEoTiUv&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDQLyzCp1bCSlpMtLZMhfceacGgXRL3Cv9kNmdTAXXzRw&oe=667B8EE8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

For Narthaki, her love for Bharatanatyam became her life right from her childhood.  Besides being a Padma Shri recipient, she has been granted distinctive honors such as the Sangeet Natak Akademi Puraskar Award from the President of India, the title of Nrithya Choodamani, and the Kalaimamani title from the government of Tamil Nadu, among other accolades. 

This beautiful dancer received the very first award of the evening for Excellence in Performing Arts from the multi-faceted actor Parthiban.

நர்த்தகி நடராஜ் பற்றிய காணொளி 5.30 நிமிடங்களில் இருந்து பாருங்கள்.

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில கருத்துக்களை, படங்களைப் பார்க்கும் போது எவ்வளவு தூரம் பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் என்ற ஆச்சரியம் வருகிறது😂.

BDSM (Bondage, Domination, Sadism, Masochism) என்ற வினோதமான (queer) பாலியல் செயன்முறைகள் (முன்னர் deviant sexual behaviors என்று அழைக்கப் பட்டவை இவையெல்லாம்) எதிர்ப்பால் இணைகளிடையே பிரபலமாக இருக்கும் நடைமுறைகள். இதையெல்லாம் ஓர் பால் தம்பதிகள் சமூகத்திற்கு அறிமுகம் செய்ததாக புதுக் கதைகள் யாரும் சொன்னால், உடனே நம்பும் அளவுக்கு இருக்கிறார்கள்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின்−மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.

என்று அன்று உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடு கூடாது என்று ஒளவையார் பாடியிருந்தார்.

ஆனால்  இன்று உலகம் ஆண், பெண்,அல்லது அதற்கும் மேல் என
நீ எதுவாக இருந்தாலும் மனிதனே என்ற முடிவிற்கு வந்து அதிக காலம் ஆகி விட்டது

உலகம் முழுவதும் ஓரினச் சேர்க்கை வந்து விட்டது இனி மனித குல உற்பத்திக்கு ஆபத்து வந்து விட்டது   என்று ஒரு பாலர் அஞ்சுகின்றனர்
அதனால் உலகிற்கே ஆபத்து என்று ஒருபடி மேலே சென்று கூச்சல் இடுகின்றனர்

இன்னொரு பாலர் யாரும்   யாரையும் நேசிக்கலாம்
விரும்பியவர்களுடன் சேர்ந்து வாழலாம் .
குழந்தை பெறுவது தான் மனித குலத்தின் தொழிலா? என்று வாதாடுகின்றனர்.

உலகத்தை மனிதன் உருவாக்க வில்லை
இது தான் உண்மை.

இந்த உலகத்தில் நடப்பவை எல்லாம் உங்களுக்கானது அல்ல.

ஆனால்

இங்கே உனக்கு என்ன வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்கலாம்.

இந்த விதிப்படி ஆண் ஆண் / பெண் பெண்  / அதற்கும் மேலானவர்கள்/

உண்மையில் மனித குலம்  அதற்கும் மேலானவர்களே
         

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, இணையவன் said:

இன்று ஓரினச் சேர்க்கையாளர்களை அழிப்போம் ஒழிப்போம் என்று முழக்கமிடும் தீவிரவாதிகள் போல் அன்று பெண்களுக்கு ஏன் வாக்குரிமை தர வேண்டும் என்று எதிர்த்தவர்கள் இருந்திருப்பார்கள்.

இதே போன்று பழைய காலத்து ஈழதமிழர்களிடம் பெண்கள் வேலைக்கு போவது நல்லது இல்லை அவாகள் வீட்டில் இருந்து சமையல் செய்து பிள்ளைகளை பார்த்து கொள்ள வேண்டும்.ஆண்  சிங்கம் மாதிரி வேலைக்கு போக வேண்டும் என்ற கருத்தும் இருந்திருக்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

38 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 ஆண்  சிங்கம் மாதிரி வேலைக்கு போக வேண்டும் என்ற கருத்தும் இருந்திருக்கின்றது.

இதில் ஒரு மாற்றம். பெண் சிங்கம்தான் வேட்டைக்கும் போகும். 🙂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

இதில் ஒரு மாற்றம். பெண் சிங்கம்தான் வேட்டைக்கும் போகும். 🙂

அப்போ நாங்க வேலை வெட்டிக்கும் போகாமல் வீட்டில் இருந்தபடி அடக்குமுறை அதிகாரம்?? நம் முன்னோர்கள் வாழ்க,🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இணையவன் said:

இதில் ஒரு மாற்றம். பெண் சிங்கம்தான் வேட்டைக்கும் போகும். 🙂

7KLk.gif

இல்லை இணையவன் அது அரைவாசி தப்பு .......பெண் சிங்கங்கள் சும்மா சும்மா ஆண்சிங்கங்களை அதட்டி வெருட்டி அ சிங்கப் படுத்திக்க கொண்டிருக்கும் ......நம்ம வீடுகள் போலத்தான் அங்கேயும்......ஆனால் 

308f41c03bf1658386d3105c3efee3b7.gif

வேட்டை என்று வந்துவிட்டால் ஆண் சிங்கம் சிங்கன்தான் .........!  😂

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனால் தற்போது வட்சப்பில் வந்த பேட்டியில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சொல்கிறார் சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை கொடுப்பதற்காக என்று சொல்கிறார்  காணொளியில் 2:30  
    • வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது,  ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
    • உலக இஸ்லாமிய கொள்கை வகுப்பாளர்கள் ,தங்களது கொள்கைகளை பரப்ப தமிழக/கேரளா இஸ்லாமிய சகோதரர்கள் சிறிலங்கா இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து தங்களது செயல்களை வடக்கு கிழக்கில் செய்கின்றனர்...அது ஒரு தனி டரக் போகின்றது ...
    • வீரகேசரி தான் இலங்கையில் வாக்களிக்கும் முறையை ஒரு படம் மூலம் விளக்கமாக தெரிவித்துள்ளது. பலர் காணொளிகள் குழப்பமாகவே முன்பு தெரிவித்தன. இலங்கையில் உள்ள தமிழர்கள் பெறுமதியான தங்களது வாக்கை வீணாக்காமல் வாக்களிக்கலாம். (தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதும் வாக்கை வீணாக்கும் செயல் தான் )
    • சிந்திக்க வேண்டிய விடயம். சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம்.   நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி       
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.