-
Tell a friend
-
Topics
-
0
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
இவை முட்டையா கோழியா என்பது போன்ற இழுபறி நிலை. எமக்கான தேவை மற்றும் சுமைகளே எம்மை இவற்றை செய்ய திணிக்கின்றன. பின்னர் கொஞ்சம் வளர்ந்த பின்னர் அவை தெவிட்டி விடுகின்றன. ஆனால் உண்மையில் என்னை பொறுத்தவரை சரி பிழைகளுக்கு அப்பால் அவையே எமக்கு, எம் குடும்பங்களுக்கு அந்த நேரத்தில் சோறு போட்டன. இது ஒரு வட்டம் இப்படி திரட்டியபடி தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்த சிலர் இப்போது தாம் முதலாளி ஆகியதும் அதையே இன்னொருவருக்கு செய்து கொண்டு இருப்பது கண்கூடு.
-
ஆஸியை வீழ்த்தி 5-வது முறை அரையிறுதி சென்ற இந்தியா - அதிரடி ஆட்டத்தால் ஈடுகட்டிய ரோகித் சர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சேர்த்த 41 பந்துகளில் 92 ரன்களில் 8 சிக்ஸர்கள் அடங்கும் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 25 ஜூன் 2024, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டம், சுழற்பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ஆகியவற்றால் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்திய அணியின் வெற்றியால் ஆஸ்திரேலிய அணியின் நிலைமைதான் நிச்சயமில்லாமல் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) காலை நடக்கும் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் முடிவை எதிர்நோக்கி ஆஸ்திரேலிய அணியினர் காத்திருக்கிறார்கள். வங்கதேசம் வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியினர் பிரார்த்தனை செய்கிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள். ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ஷெல் மார்ஷ் கூட வங்கதேசத்தின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேசமயம், வங்கதேசத்தை வீழ்த்தினால், ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லும், ஆஸ்திரேலிய அணி போட்டித் தொடரிலிருந்து வெளியேறும். வங்கதேசம் வென்றால், நிகர ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி செல்லும் என்பதாலேயே வங்கதேசம் வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி கரிசனம் காட்டுகிறது. செயின்ட் லூசியாவில் நேற்று (திங்கள், ஜூன் 24) நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 24 ரன்களில் தோல்வி அடைந்து. இந்திய அணி விதித்த 206 ரன்கள் இலக்கை 15.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா சேஸிங் செய்திருந்தால், அரையிறுதிக்குச் சென்று இந்தியாவின் நிகர ரன்ரேட்டைவிட உயர்ந்திருக்கும். ஆனால், 15.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. டி20 உலகக் கோப்பையில் அதிக அளவு வெற்றிகளைப் பெற்று இலங்கை அணிய பின்னுக்குத் தள்ளி 34 வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்தது. வரும் 27-ஆம் தேதி நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது என்பது 3-வது முறையாகக் குவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் செயின்ட் லூசியாவின் கிராஸ் ஐலெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2012-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் குவித்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ‘மனநிறைவாக இருக்கிறது’ வெற்றிக்குப்பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தான் விளையாடியவிதம் தனக்கு மனநிறைவு அளிப்பதாகக் கூறினார். “எதிரணியின் மிரட்டல் குறித்து எங்களுக்குத் தெரியும், அதனால் சிறப்பான ஆட்டத்தை வழங்க முடிவு செய்தோம். 200 ரன்கள் நல்ல ஸ்கோர், இதுபோன்ற ஆடுகளத்தில் காற்றின் வேகத்துக்கு மத்தியில் சேஸ் செய்வது கடினம். இந்தச் சூழலை நாங்கள் சிறப்பாகப் பயன்படுத்தினோம்,” என்றார். மேலும், “ குல்தீப்பின் பலம் என்ன என்பதை உணர்ந்து, அவரைத் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தினோம். அமெரிக்க ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை, ஆனால், குல்தீப் பங்கு அடுத்ததாக பெரிதாக இருக்கும் என நினைத்தேன். அரையிறுதி என்பதால் புதிதாக எந்த முயற்சியும் எடுக்காமல், வழக்கம்போல் விளையாடினோம். ஒவ்வொரு வீரரும் சூழலை அறிந்து விளையாடினார்கள், சுதந்திரமாக இருந்தார்கள். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது சிறப்பு. பெரிதாக அணியில் மாற்றம் இருக்காது,” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேப்டன் ரோகித் சர்மா (92) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ரோஹித் சர்மாவின் சாதனைகள் இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா (92) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் லீக் சுற்றிலிருந்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்த ரோஹித் சர்மா நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அதனை ஈடுகட்டிவிட்டர். 19 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 உலகக் கோப்பையில் அதிவிரைவாக அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதில் 6 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். இதற்கு முன் 2007 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் 20 பந்துகளிலும், 2012ல் கெய்ரன் பொலார்ட் 20 பந்துகளிலும் அரைசதம் அடித்திருந்தனர். அதை ரோஹித் சர்மா முறியடித்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய பேட்டர் சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை ரோகித் சர்மா பதிவு செய்தார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 2010-ஆம் ஆண்டில் 101 ரன்கள் சேர்த்திருந்தார். அது மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக இருப்பவர் பதிவு செய்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் இந்தியாவுக்கு எதிராக கெயில் கேப்டனாக இருந்தபோது 98 ரன்களைப் பதிவு செய்திருந்தார். இதற்கு முன் 2016-இல் லாடர்ஹில்லில் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததே ரோகித் சர்மாவின் சிறந்த பேட்டிங்காக இருந்தது. அந்தச் சாதனையை அவரே முறியடித்து, 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலும் சாதனை படைத்தார். இந்திய அணி பவர்ப்ளே ஓவர்களை முடிப்பதற்குள் நேற்று ரோகித் சர்மா அரைசதம் அடித்துவிட்டார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளே ஓவர்கள் முடிப்பதற்குள் அரைசதம் அடித்த 4-வது பேட்டர் என்று ரோகித் சர்மா பதிவு செய்தார். இதற்கு முன் ஸ்டீபன் மைபுர்க், கேஎல் ராகுல், லிட்டன் தாஸ் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சேர்த்த 41 பந்துகளில் 92 ரன்களில் 8 சிக்ஸர்கள் அடங்கும். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய பேட்டர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பெற்று, யுவராஜ் சிங் சாதனையை ரோகித் முறியடித்தார். யுவராஜ் சிங் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 7 சிக்ஸர்களை அடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா 203 சிக்ஸர்களை பதிவு செய்தார். டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். 150 சிக்ஸர்களுக்கு மேல் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் (173) உள்ளார். ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 4,165 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானின் பாபர் ஆசமின் 4,145 சாதனையைக் கடந்தார். இந்த ஆட்டத்தில் மட்டும் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் சேர்ந்து 24 சிக்ஸர்களை விளாசியது டி20 உலகக் கோப்பையில் 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் 2014-இல் நெதர்லாந்து-அயர்லாந்து அணிகள் சேர்ந்து 30 சிக்ஸர்களை அடித்திருந்தன. இந்திய அணி 205 ரன்கள் சேர்த்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம்தான். அவர் ஆட்டமிழக்கும்வரை இந்திய அணியின் ரேட் ஓவருக்கு 11 ரன்கள் வரை இருந்தது. ரோகித் ஆட்டமிழந்து சென்றபின் துபே (28) சூர்யகுமார் யாதவ் (31), ஹர்திக் பாண்டியா (27) ஆகியோர் முடிந்தவரை சிறந்த பங்களிப்பு செய்தனர். ஸ்டார்க் பந்தை வெளுத்த ரோகித் ஆட்டம் தொடங்கியது முதலே ரோகித் சர்மா அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்தார். ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 29 ரன்களை ரோகித் விளாசினார். ஸ்டார்க்கின் சர்வதேசக் கிரிக்கெட்டில் மோசமான ஓவராகவும், டி20 உலகக் கோப்பையிலும் மோசமானதாக அமைந்தது. 2021-ஆம் ஆண்டு டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 22 ரன்கள் வழங்கியதுதான் ஸ்டார்க்கின் மோசமான பந்துவீச்சாக இருந்தது. அதைவிட நேற்றைய பந்துவீச்சு மோசமாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி இந்த சீசனில் 2-வது முறையாக டக்-அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார் கோலியின் மோசமான ஃபார்ம் 2023-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி கண்ணீருடன் மைதானத்தை விட்டு நடந்து சென்றதற்கு பழிதீர்க்கும் விதத்தில், ரோகித் சர்மாவின் ஆட்டம் அமைந்திருந்தது. விராட் கோலி இந்த சீசனில் 2-வது முறையாக டக்-அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார். ஆனாலும் ரோகித் சர்மாவின் அதிரடியை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் 5-வது ஓவரில் 19 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை சேர்த்தது. 8.4 ஓவர்களில் 100 ரன்களை இந்திய அணி எட்டியது. 13.4 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. ரோகித்தின் அதிரடி ஆட்டம் ரோகித் சர்மா அரைசதம் அடித்தபோது, ரிஷப் பந்த் ஒரு ரன் மட்டுமே சேர்த்திருந்தார். அதாவது இந்திய அணியின் ஸ்கோரில் 99% ரோகித் சர்மாவின் அரைசதம்தான். ரோகித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய பலமுறை ஸ்டார்க் ஷார்ட் பந்துகளையும், ஸ்விங் செய்யவும் முயற்சித்தார். ஆனால், அனைத்துமே தவறாக முடிந்து, ரோகித் பேட்டிங்கிற்கு இரையானது. ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 21 முறை ஃபிரன்ட்புட் ஷாட்களை ஆடினார் இதில் 71 ரன்களைச் சேர்த்தார். இதில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் ஃபிரன்ட்புட் ஷாட்டில் அடிக்கப்பட்டவை. கம்மின்ஸ், ஸ்டாய்னிஷ், ஆடம் ஜம்பா ஓவர்களையும் ரோகித் சர்மா விட்டுவைக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் 2முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய கம்மின்ஸ் ஓவரில் ரோஹித் சர்மா காலை மடக்கி ஸ்வீப்பில் அடித்த சிக்ஸர் அரங்கின் மேற்கூரையில் விழுந்தது. ஆடம் ஜம்பா ஓவரை பதம்பார்த்த ரோகித் சர்மா 7-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினர். ஸ்டாய்னிஷ் வீசிய 8-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்களை ரோகித் சர்மா சேர்த்தார், ஸ்டாய்னிஷ் வீசிய 10-வது ஓவரிலும் 2 பவுண்டரிகளை ரோகித் வெளுத்தார். குறைந்த ரன்ரேட் ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை இந்திய அணி 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளை விளாசி இருந்தது. ஆனால் ரோகித் சர்மா 92 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறியநிலையில் இந்தி அணியின் ரன்ரேட் சற்று குறையத் தொடங்கியது. ரோகித் சர்மா 2-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்துடன் சேர்ந்து 87 ரன்களும், சூர்யகுமாருடன் சேர்ந்து 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார். 15-வது ஓவர் முதல் 18-வது ஓவர் வரை 21 பந்துகளாக இந்திய அணி பவுண்டரிகூட அடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். ஆனால் ஹர்திக் பாண்டியா களமிறங்கி, 2 சிக்ஸர்கள், பவுண்டரி அடித்து ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அக்ஸர் படேல் எல்லைக் கோட்டில் அற்புதமான கேட்ச் பிடித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது தப்பித்த ஹேசல்வுட் ஆஸ்திரேலிய அணியில் உயிர்தப்பி பந்துவீசியது ஹேசல்வுட் மட்டும்தான். 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். வார்னர் ஏமாற்றம் 206 ரன்கள் எனும் கடின இலக்கை ஆஸ்திரேலிய அணி துரத்தியது. அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரிலையே வார்னரை (6) வெளியேற்றி அதிர்ச்சியளித்தார். அதன்பின் டிராவிஸ் ஹெட், மார்ஷ் சேர்ந்து ஸ்கோரை உயர்த்தும் விதத்தில் அதிரடியாக ஆடினர். பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. திருப்புமுனையான அக்ஸர் படேல் கேட்ச் குல்தீப் யாதவ் ஓவரில் மார்ஷ் சிக்ஸர் அடிக்க முயற்சிக்கவே, அதை அக்ஸர் படேல் எல்லைக் கோட்டில் அற்புதமான கேட்ச் பிடித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. ஹெட்-மார்ஷ் இடையிலான 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்து மார்ஷ் 37 ரன்களில் வெளியேறினார். அதன்பின் வந்த ஆஸ்திரேலிய பேட்டர்கள் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் பந்துவீச்சுக்கு திணறினர். மேக்ஸ்வெல் 20 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் ஹெட் (76) ஸ்டாய்னிஷ் (2), மேத்யூ வேட் (1), டிம் டேவிட் (15) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா தடுமாறியது. கடைசி 3 ஓவர்களில் 51 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்க்க வேண்டியிதிருந்தது. ஆனால் கம்மின்ஸ் (11), ஸ்டார்க் (4) ரன்களில் இறுதிவரை போராடியும் முடியாததால் தோல்வி அடைந்தது. https://www.bbc.com/tamil/articles/c1444700qgeo
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தடை-தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோருவோம்-நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 25 JUN, 2024 | 10:59 AM ஈழத் தமிழர்களின் சார்பில் தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோருவோம் என தெரிவித்துள்ளது.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக தடை செய்தமை ஏற்றுக் கொள்ளத்தக்கது என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேன்முறையீட்டு ஆணையகம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆணையகத்தின் தீர்ப்புதொடர்பாக தமது அடுத்த நகர்வை எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கும்.தமிழீழ விடுதலைப் புலிகளை ஐக்கிய இராச்சியம் தடைசெய்தமைக்கெதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இரண்டாவது சட்ட ரீதியிலானநடவடிக்கை இந்த வழக்காகும். நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தால் முதலாவதாக கொண்டு வரப்ட்ட சட்ட நடவடிக்கையின் தீர்ப்பில்இ தமிழீழவிடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக எடுக்கப்பட்டமுறைமையில் தவறு இருந்ததாக கூறிய மேன்முறையீட்டுஆணையகம்இ தடையை ஐக்கிய இராச்சிய உள்துறைஅமைச்சு மீள் பரிசீலனை செய்யுமாறு தீர்ப்பளித்திருந்தது. உள்துறை அமைச்சு தடையை மீளவும் தொடர்ந்தது. இவ்வழக்கானது அம்முடிவிற்கு எதிராக மேற்கொண்ட சட்டநடவடிக்கை ஆகும். ஆணைக் குழுவின் தலைவர் இவ் வழக்கானது நெருங்கியதொன்றும் சமநிலையாக இருந்ததென்றும் எனத் தெரிவித்த போதும் உள்துறை அமைச்சின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஆணையகம் தீர்ப்பளித்துள்ளது. உள்துறை அமைச்சின் தீர்மானத்துக்கெதிரான சட்டரீதியிலான நடவடிக்கையானது தகுதிஅடிப்படையானதொன்றல்ல என ஆணைக்குழு மீண்டும் குறிப்பிட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது சரியானதா என ஆணைக்குவால் கூற முடியாது. ஆயினும் அம் முடிவு தொடர்பாக உள்துறை அமைச்சால் எடுக்கப்பட்ட முறைமையில் எந்தத் தவறும் இல்லை என உறுதிப்படுத்த முடியும் என தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு உறுப்பினர்ஒருவரால் கிளிநொச்சியில் 2020ஆம் ஆண்டு ஜூலை நான்காம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பஸ் ஒன்றில் கிளைமோர் கண்ணிவெடியை பொதியில் வைத்து கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட செய்தி சிறிலங்கா அரசாங்க இணையத்தளங்களின் மீது தமிழீழ இணையப் படையால் மே 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள்பயங்கரவாதத்திற்கு தயாராகின்றார்கள் என்ற நிலைப்பட்டைஐக்கிய இராச்சியத்தின் உள்துறை அமைச்சு எடுத்திருந்தது. சிறிலங்கா செய்திகள் சிறிலங்கா நீதிமன்றங்களின் முடிவுகள் நம்பத் தகுந்தது அல்ல என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது. எனினும் அந்த ஆவணங்களை விலக்குவதற்கு தேவையான போதுமான சட்டரீதியிலான குறைபாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. ஐக்கிய இராச்சிய உள்துறை அமைச்சிற்கு வழங்கப்பட்ட தகவல் தவறானது எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் அவற்றில் ஆறு நாடுகளில் (சிறீலங்கா இந்தியாமலேஷியா ஐக்கிய இராச்சியம் ஐக்கியஅமெரிக்கா கனடா) மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியிருந்தது. மேலும் 27 நாடுகள் (ஐரோப்பிய ஒன்றியத்தின் 26 நாடுகள்) தங்களது பொருளாதாரத் தடைப் பட்டியலில் மட்டுமே தமிழீழவிடுதலைப் புலிகளை உள்ளடக்கியுள்ளன என்றும் நாடு கடந்ததமிழீழ அரசாங்கம் சுட்டிக் காட்டி இருந்தது. உள்துறை அமைச்சால் அத் தவறுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள தென்பதை ஏற்றுக் கொண்ட ஆணையகம்இ அந்தத் தவறுகள் உள்துறைஅமைச்சின் தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்ல எனக் குறிப்பிட்டிருந்தது. இந்தோ-பசுபிக்கை நோக்கி நகரும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகாரக் கொள்கைஇ தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது இந்தியா இலங்கையுடனானஇ ஐக்கிய இராச்சியத்தின் உறவுகளை பாதிக்கும் என்ற வெளிநாட்டு பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் ஆலோசனையை உலகளாவியரீதியில் பயங்கரவாதக் குழுக்களிற்கெதிரான ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் பின்னணியில் பார்க்கவேண்டும் என ஆணையகம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் தனித் தமிழ் நாடொன்றைக் கோருபவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது அரசியலை முன்னெடுத்தலிலும் தமிழீழ இலச்சினையை வெளிப்படுத்துவதிலும் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்வாதிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக்கொடிக்கு மிடையேயுள்ள வேறு பாட்டை அங்கீகரித்த ஆணையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் நுட்பமான வேறு பாடுகளை புரிந்து கொள்ள மாட்டார்களெனவும் ஏற்றுக்கொண்டுள்ளது. பொலிஸாருக்கும். சமூகங்களுக்கும் இடயேயான உரையாடல்கள் எதிர்காலத்தில் பொலிஸாரின் தவறான புரிதல்களைக் குறைப்பதற்கு வழிவகுக்கும் என ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழஅரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல் வடகிழக்கு சிறீலங்காவில் தமிழ் நாடொன்றை அமைக்கும்சிந்தனையைக் கொண்டிருக்கின்ற போதும் நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்துக் கெதிராக உள்துறை அமைச்சு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆணையகம் மேலும்குறிப்பிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது அதன் சட்டத்தரணி பீற்றர் ஹெய்ன்ஸ் ராஜ சட்டத்தரணி திருமதி சாந்தி சிவகுமரன் சொலிசிட்டர் போல் ஹெரொன் (பொதுநல சட்ட நிறுவகம்) ஆகியோருக்கு அவர்களது மிகச் சிறப்பான சட்டப் பிரதிநிதித்துவத்திற்கு கடமைப்பட்டுள்ளது. சர்வதேச ஒழுங்கு மற்றும் பொறுப்புக் கூறலில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஈழத் தமிழர்களின் சார்பில் தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோரி நிற்கும். https://www.virakesari.lk/article/186909
-
By ஏராளன் · பதியப்பட்டது
25 JUN, 2024 | 10:58 AM யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இந்த இரண்டு வெதுப்பகங்களும் சுகாதார சீர்கேடாக இயங்கிய வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது இந்த இரண்டு வெதுப்பகங்களிற்கும் எதிராக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் நேற்று திங்கட்கிழமை (24) யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். வழக்குகளினை விசாரித்த நீதவான் ஒரு வெதுப்பகத்தினை சீல் வைத்து மூடுமாறும் மற்றைய வெதுப்பகத்தினை சீர் திருத்துமாறும் உத்தரவிட்டுள்ளதுடன் உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் ஆட்பிணையிலும் விடுவித்துள்ளார். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவகங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சுகாதார சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186907 -
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: DIGITAL DESK 3 25 JUN, 2024 | 10:13 AM இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபையானது அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், இலங்கையில் ஆரம்ப சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதன் ஊடாக உள்ளூர் மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186900
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts