Jump to content

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பிழம்பு said:

சுமந்திரனின் அறிவிப்பு தென்னிலங்கை மக்களுக்கு சிறந்த செய்தி - அமைச்சர் சுசில்

ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்களை குழப்பும் தீர்மானங்களையே எடுப்பார். அவர் தற்போது அறிவித்துள்ள தீர்மானம் தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்தமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுமந்திரன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது நிலைப்பாட்டுடன் வேறு குழுவுடனேயே செயற்பட்டு வந்தார். எனவே சுமந்திரன் ஏதேனுமொரு குழுவைத் தெரிவு செய்கின்றார் எனில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெற்கு மக்கள் சிந்திக்க வேண்டும். சுமந்திரனின் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இது மக்களை குழப்பும் செயற்பாடாகும். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுமந்திரமே மக்களை குழப்பிக் கொண்டிருந்தார்.

எனவே அவரது தீர்மானங்கள் தொடர்பில் வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தெற்கு மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும். சுமந்திரன் ஏதேனுமொரு தீர்மானத்தை எடுப்பாரானால் அது தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என்றாr

https://www.virakesari.lk/article/192641

சுமந்திரன் - சாணக்கியனின் துணிச்சலான தீர்க்கதரிசனம் மிகுந்த முடிவு...! புகழாரம் சூட்டும் திகா எம்.பி.

M A SumanthiranSajith Premadasa
 By Thulsi 11 hours ag
 
சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்துள்ள எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவு வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் (Palani Thigambaram) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தீர்க்கதரிசனம் மிகுந்த செயல்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

 அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

வட கிழக்கு மக்கள் பிரச்சினை

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்களிப்பதன் ஊடாகவே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடியதாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தீர்க்க தரிசனம் மிகுந்த செயற்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது.

முழுமையான தீர்வைப் பெற்றுக் கொள்ள சஜித்துக்கு ஆதரவு வழங்குவதே சரியான முடிவு என்பதை தமிழரசுக் கட்சி துணிச்சலோடும், நம்பிக்கையோடும் எடுத்துக் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட தமிழ் மக்களோடு, முஸ்லிம் மக்களும் இணைந்து சஜித்துக்கு பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ள நேரத்தில் நாளுக்கு நாள் அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

அவரின் வெற்றியில் நாமும் பங்காளர்களாக இருந்து எமது மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண முன்வந்துள்ள சுமந்திரனும் சாணக்கியனும் எடுத்துள்ள சாதுரியமான முடிவை பாராட்டுகிறேன் என்றும் பழனி திகம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு (ளுயதவைா Pசநஅயனயளய) ஆதரவு வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலானவர்களின் விருப்புக்கிணங்கவே நிறைவேற்றப்பட்டதாக இலங்கை (ளுசi டுயமெய) தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (ஊ.ஏ.மு ளுiஎயபயெயெஅ) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்இ “வவுனியாவில் (ஏயஎரலெைய) நேற்று (01) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மத்திய செயற்குழுவில் உள்ள 39 பேரில் 27 பேர் கலந்துகொண்டனர்.


அதேவேளைஇ தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா (ஆயஎயi ளுநயெவாசையதயா ) தன்னால் சுகயீனம் காரணமாக கூட்டத்தில் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம்
தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம்

தமிழ்ப் பொதுவேட்பாளர்
வேறு ஏதும் காரணங்களுக்காகக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அவர் கேட்கவில்லை.  


இதேநேரம் சி.சிறீதரன் (ஊ. ளுசனைாயசயn) தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தனது விருப்பத்தை எழுத்தில் அறிவித்திருந்தார்.

சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் ! | ளுரிpழசவ குழச ளுசi டுயமெயn வுயஅடை சுயளர Pயசவல ளுயதவைா

யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழுவின் கோரம் 11 பேராகவே காணப்படுகின்றது.  


இதனடிப்படையிலேயேஇ மூத்த துணைத் தலைவரான எனது தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல்
இதன்போது 17 பேர் பொது வேட்பாளரான அரியநேத்திரனை (P. யுசலையநெவாசையn ) ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் எழுத்து மூலமான முடிவு உட்பட ஆறு பேர் மட்டுமே ஆதரவாகக் கருத்துரைத்தனர்.  


சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் ! | ளுரிpழசவ குழச ளுசi டுயமெயn வுயஅடை சுயளர Pயசவல ளுயதவைா

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 22 பேர் கருத்துரைத்ததுடன் இவற்றின் அடிப்படையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை  ஆதரிப்பதில்லைஇ எமது கட்சி உறுப்பினராகிய அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும்இ ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கல் ஆகிய மூன்று தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இந்தத் தீர்மானங்களுக்கு நானும் கட்டுப்பட்டவன் இதேநேரம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஏதும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றால் என்னால் மேடைக்கு வர முடியாது என்பதனையும் நான் பதிவு செய்திருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://ibctamil.com/article/tna-sumandran-chanakyan-decision-to-support-sajith-1725262952
 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • Replies 164
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2024 at 15:33, நிழலி said:

சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!

உறுதியாக கூற முடியாது  காரணம்  மூன்று சிங்களவர்கள். போட்டியில் உள்ளார்கள்   எனவேதான் சில சமயம் இந்த தமிழ் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானிக்க கூடும்  

இரண்டு சிங்களவர்கள். போட்டியில் இருந்தால்  நீங்கள் கூறியது சரி    மேலும் சுமத்திரன். ரணில் ஆலோசனைப்படி தான்  இதை அறித்தார்.  என்று சந்தேகம் இருக்கிறது   அதாவது சஜித் தோல்வி உறச் செய்ய   இப்படி ஒரு முடிவை அறிவிக்கும்படி   கேட்டிருப்பார் 

21 திகதி பார்ப்போம் 🤣

On 1/9/2024 at 15:56, ஈழப்பிரியன் said:

சாணக்கியனுக்கு ரணில் கொடுத்த பணமெல்லாம் வேஸ்டா கோப்பாலு?

ரணிலுக்கு முதுகில் குத்திட்டாங்களே.

வழமையா அந்தாள் தானே எல்லோருக்கும் ஆப்பு வைக்கும்.

இல்லை  சஜித் க்கு சிங்கள வாக்காளர்கள் குறையும்      ஆனாலும்  மூன்று சிங்களவர் போட்டியில் இருப்பதால் தமிழ் வாக்காளர்கள்  வெற்றியை தீர்மானம் செய்யும் வாய்ப்புகள் உண்டு” 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2024 at 16:08, தமிழ் சிறி said:

ரணிலின்… 60 கோடியை அமுக்கி  விட்டார்கள்.
தற்செயலாய் ரணில் வென்றால்… சாணக்கியனும், சுமனும் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டி வரும். 😂

அப்படி நடக்காது 

ரணில் வென்றால்  நாங்கள் சஜித்க்கு ஆதரவு என்று கூறியபடியால் தான்   சிங்கள மக்கள்   ரணிலுக்கு பெரியளவில் வாக்கு அளித்து  வெற்றி பெற செய்துள்ளனர்  ஆகவே எங்கள் அறிவிப்பு தான்  ரணிலின். வெற்றிக்கு காரணம் என்று கூறி   ரணிலுடன் ஓட்டி கொள்வார்கள் 

 

சஜித் வென்றால்  எங்களின் ஆதரவுடன் தான் வென்றார். என்று கூறி சஜித் உடன். ஒட்டி கொள்வார்கள் அவர்களாவது நாட்டை விட்டு வெளியேறுவதாவது  .... நல்ல கனவுகள் தான் 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2024 at 20:33, Kapithan said:

இப்போதும் எப்போதும் முப்போதும்   இந்தியாவின் எதிரி JVP அல்லவா,..😀

இன்றைய எதிரிகள் நாளைய நண்பர்கள் 

இன்றைய நண்பர்கள் நாளைக்கு எதிரிகள் 

இதை மறக்க வேண்டாம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

இன்றைய எதிரிகள் நாளைய நண்பர்கள் 

இன்றைய நண்பர்கள் நாளைக்கு எதிரிகள் 

இதை மறக்க வேண்டாம் 🤣

கடந்த 2500 ஆண்டுகளாக சிங்களத்தின் ஒரே ஒரு எதிரி இந்தியாவே. இது வரலாறு. 

தமிழர் நாதூக்குதடிகள் என்பது சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும். இந்த வரலாறு தெரியாத காரணமாகத்தான் நாமெல்லாம் தற்போதும் இந்தியாவுக்கு காவடி தூக்குகிறோம். 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

தற்போதைய நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசுவதன் மூலம் ஒரு  சமஷ்டி தீர்வு என்பதெல்லாம் நடக்காது என்பது சாதாரண மக்களாகிய எமக்கே தெரிந்த உண்மை.  இனரீதியாக பிளவுபட்டு ஒருவர் மீது ஒருவர் பாரிய சந்தேக பார்வையுடன் இருக்கும் இரு இனங்கள் ஒரு சமஷடி தீர்வை நோக்கி செல்வது சுலபமல்ல. அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டி எழுப்பாமல் இது சாத்தியமே இல்லை.  அதற்கான சாத்தியங்களை உருவாக்கும் அரசியலை செய்யாமல் வெற்று கோஷங்களுடனும் வீர வசனங்கள், வெறுப்பு பேச்சுகள் எதையும் சாதிக்கப்போவதில்லை.  நாம் உலகிற்கு என்ன செய்தியை சொன்னாலும் உலகம் இருவரும் பரஸ்பரம் பேசி இதை தீர்குமாறே வற்புறுத்தும். இதுவே உலக நடைமுறை. 

இன்றைய நிலையில் நடைமுறை பிரச்சனைகள், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய பிரச்சனைகள் பலவற்றை வைத்து  பேரம் பேசி வட கிழக்கில் எமது இனத்தின் இருப்பை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய அவசர தேவை.  அதை விடுத்து  சுய நலத்துக்காக  வெறித்தனமான தேசியவாதம் பேசுவது, அப்பி பேசி தேர்தல் அரசியலில் எம்மால் தீர்வு பெற்று விட முடியும் என்று பம்மாத்து  காட்டுவது  எமது இருப்பை தமிழ் பிரதேசங்களில் இன்னும் பலவீனப்படுத்தும்.  அவ்வாறு பலவீனப்பட்ட பின்னர் உலகில் எவரும் எம்மை திரும்பி கூட பார்கக போவதில்லை. 

சிறப்பான கருத்து.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்கள் தொழுவதற்கு இந்தியக் கடவுள்கள் வேண்டும், உடுப்பதற்கு இந்திய உடைகள் வேண்டும், பொழுதுபோக்கிற்கு இந்திய சினிமாவும் பாடல்களும் வேண்டும், உணவும் இந்திய உணவுகள், ப,.......தற்கு இந்திய  நடிகைகள் வேண்டும்,  எங்கள் தலைவர்களாகக் கொள்வதற்கு நேருவும் காந்தியும் இந்திராவும் MGR ம் கலைஞரும் வேண்டும்.  (திருமணம் செய்வதற்கு மட்டும் இலங்கைத் தமிழ் வேண்டும்😁)

முக்கியமாக எங்கள் அரசியலுக்கு இந்தியாவிடமிருந்துதான் ஆலோசனை கேட்போம். 

ஆனால் நாம் இலங்கையர்களும் இல்லை, இந்தியர்களும் இல்லை. 

நீங்கள் சொல்வது போன்று இலங்கையர்களாகவும் இல்லாமல்  இந்தியர்களாகவும் இல்லாமல் வாழ்வது  ஒரு துன்ப நிலை. எனக்கு இலங்கையில் தெரிந்தவரை தீவிர அரசியல் பேசுகின்ற தமிழர்கள் தவிர சாதாரணமான தமிழர்கள் தங்களை இலங்கையர்களாக உணர்வதாகவே தெரிகின்றது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் அவர்களுக்கு பிரச்சனை இல்லை உண்மையில் அவர்கள் வெளிநாட்டுகாரர்கள். ஆனால் இந்தியாவிடமிருந்துதான் நீங்கள் சொன்ன அத்தனையும் அவர்களுக்கு வேண்டும் என்பது ஆச்சரியமானது தான். ஆனால் அவர்கள் இந்தியர்களும் இல்லை இலங்கையர்களும் இல்லை கொலிடே போவதற்கும் திட்டுவதற்கு மட்டும் இலங்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அரசியல் ஜனநாயக வழி முறையிலான ரீதியில் ஒரு வழி முறையில்  சமஷ்டி அரசியலமைப்பு உருவாக வேண்டுமென்றால் அந்த இரு இனங்களுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையும் ஒரளவாவது நல்லுறவு  அவசியம். அது இல்லாமல்  சமஷ்டி அரசியலமைப்பு உருவாகுவது சாத்தியமா?   அப்படி சாத்தியம் என்றால் அதன் வழிமுறை என்ன?

இன்றைய நிலையில் ஜனாதிபதியாக தேர்வு செய்யபடுபவர் நினைத்தாலும் சமஷடி அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பது எனது கருத்து. 

 

இல்லை, தனிநாடோ அல்லது சமஸ்டியோ பற்றி நான் கூறவில்லை, ஒரு நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் இருக்கும் உரிமைகளுடன் அனைத்து மக்களும் வாழ வேன்டும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் ஜனநாயக விழுமியங்களை பேண வேண்டும்.

ஒருவர் மீது அடக்குமுறையினை சாதி, மத, இன என்ற அடிப்படையில் அடக்குமுறைகள் கூடாது (Discrimination).

 

3 hours ago, Kapithan said:

 

நாம் எம்மை இலங்கையராக உணராதவரைக்கும் இது சாத்தியமில்லை என்பது என் கருத்து. 

நாங்கள் தொழுவதற்கு இந்தியக் கடவுள்கள் வேண்டும், உடுப்பதற்கு இந்திய உடைகள் வேண்டும், பொழுதுபோக்கிற்கு இந்திய சினிமாவும் பாடல்களும் வேண்டும், உணவும் இந்திய உணவுகள், ப,.......தற்கு இந்திய  நடிகைகள் வேண்டும்,  எங்கள் தலைவர்களாகக் கொள்வதற்கு நேருவும் காந்தியும் இந்திராவும் MGR ம் கலைஞரும் வேண்டும்.  (திருமணம் செய்வதற்கு மட்டும் இலங்கைத் தமிழ் வேண்டும்😁)

முக்கியமாக எங்கள் அரசியலுக்கு இந்தியாவிடமிருந்துதான் ஆலோசனை கேட்போம். 

ஆனால் நாம் இலங்கையர்களும் இல்லை, இந்தியர்களும் இல்லை. 

😏

எனது கருத்தினை ஐலன்ட் தவறாகவே புரிந்து கொள்வதனால் அதனடிப்படையான கருத்தினடிப்படையில் உள்ளது உங்கள் கருத்து.

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, vasee said:

எனது கருத்தினை ஐலன்ட் தவறாகவே புரிந்து கொள்வதனால் அதனடிப்படையான கருத்தினடிப்படையில் உள்ளது உங்கள் கருத்து.

 

இது உங்களுக்கு சொல்லப்பட்டதல்ல. தமிழ்மக்களின் உண்மையான நிலை இதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொல்வது போன்று இலங்கையர்களாகவும் இல்லாமல்  இந்தியர்களாகவும் இல்லாமல் வாழ்வது  ஒரு துன்ப நிலை. எனக்கு இலங்கையில் தெரிந்தவரை தீவிர அரசியல் பேசுகின்ற தமிழர்கள் தவிர சாதாரணமான தமிழர்கள் தங்களை இலங்கையர்களாக உணர்வதாகவே தெரிகின்றது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் அவர்களுக்கு பிரச்சனை இல்லை உண்மையில் அவர்கள் வெளிநாட்டுகாரர்கள். ஆனால் இந்தியாவிடமிருந்துதான் நீங்கள் சொன்ன அத்தனையும் அவர்களுக்கு வேண்டும் என்பது ஆச்சரியமானது தான். ஆனால் அவர்கள் இந்தியர்களும் இல்லை இலங்கையர்களும் இல்லை கொலிடே போவதற்கும் திட்டுவதற்கு மட்டும் இலங்கை .

உங்கள் கற்பனைகளை யாழில் விதைக்க வேண்டாம் .

21 minutes ago, Kapithan said:

இது உங்களுக்கு சொல்லப்பட்டதல்ல. தமிழ்மக்களின் உண்மையான நிலை இதுதான். 

எத்தனை முறை அந்த தீவுக்கு சண்டைக்கு பின் சென்று வந்து உள்ளீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vasee said:

 

இஸ்லாமியர்களி இந்த தந்திரோபாயம் இலங்கை உள்நாட்டு போர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது என்பது உண்மைதான், ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் எக்காலத்திற்கும் பொருந்தும், சிங்கள கட்சிகளை நேரடியாக ஆதரிக்காமல் அவர்க்ளை கையாளும் இந்தியாவினை கொள்கைகளை செய்வதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் மாஸ்ர பிளான்😁.

சாமியினை (இந்தியா) நேரடியாக கும்பிடாமல் எதுக்கு ஆசாமியினை(தனித்தனி கட்சிகளை) கும்பிட வேண்டும்?😁

இந்தியா; சஜித்திற்கு ஆதரவு கொடுக்கச்சொன்னால், சஜித்திற்கு ஆதரவு கொடுப்பதை விட்டு விட்டு அஜித்திற்கு (தமிழ் பொது வேட்பாளர்/ அனுர குமார?) ஆதரவு கொடுப்பதை பற்றி தமிழ் அரசியல்வாதிகள் பேசக்கூடாது. 😁

 

43 minutes ago, Kapithan said:

இது உங்களுக்கு சொல்லப்பட்டதல்ல. தமிழ்மக்களின் உண்மையான நிலை இதுதான். 

நான் விளையாட்டாக மேலே குறிப்பிட்ட விடயம் இந்தியா கூறுவதனை கேட்பதுதான் எமது அரசியல்வாதிகளின் அரச்சியல் என.

நாம் இலங்கையராகவோ இந்தியர்களாகவோ இருக்கலாம் அல்லது குடியேறிய அந்தந்த  நாட்டினை சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம் அது எமது அடையாளப்பிரச்சினை அது தனிப்பட்டவர்களின் விருப்பம், ஆனால்  அனைவரும் அடிப்படையில் மனிதர்கள், மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதுதானே அடிப்படை.

இதில் சமூக காரணிகளான பால், சாதி, இன, மத, நாடு? (வேறு ஏதாவது விடுபட்டிருக்கலாம்) வேறுபடுத்தி ஒருவரில் ஒருவர் ஆதிக்கத்தினை செலுத்தக்கூடாது, அப்படி செய்யும் போது அதனை தட்டி கேட்பதற்கு ஏதுவான நிலை (சட்டம்) இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

நீங்கள் தீர்ககதரிசி விசுகு.  ஆயுத போராட்டம் தொடங்கிய உடனேயே எப்படியும் இவனுகள் போராட்டம் எப்படியும் சரிவரப்போவதுல்லை இனி என்னை தூங்க விடமாட்டாங்கள் இவங்கள் என்பதை துல்லியமாக கணித்து  பெட்டி படுக்கைகளுடன் லாச்சப்பலுக்கு வந்து விட்டீர்கள் தனியே படுக்க. 😂 குட் நைற. மிஸ்ரர் விசுகு. 

விசுகரின். கருத்துக்கு         பதிலாக விசுகர் பற்றி கருத்துகள் எழுதுகிறீர்கள்     இது சரியா??    

மற்றும் இப்போது நன்றாகவே தூங்கிறார்  என்று எப்படி தெரியும்?? 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

 

நான் விளையாட்டாக மேலே குறிப்பிட்ட விடயம் இந்தியா கூறுவதனை கேட்பதுதான் எமது அரசியல்வாதிகளின் அரச்சியல் என.

நாம் இலங்கையராகவோ இந்தியர்களாகவோ இருக்கலாம் அல்லது குடியேறிய அந்தந்த  நாட்டினை சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம் அது எமது அடையாளப்பிரச்சினை அது தனிப்பட்டவர்களின் விருப்பம், ஆனால்  அனைவரும் அடிப்படையில் மனிதர்கள், மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதுதானே அடிப்படை.

இதில் சமூக காரணிகளான பால், சாதி, இன, மத, நாடு? (வேறு ஏதாவது விடுபட்டிருக்கலாம்) வேறுபடுத்தி ஒருவரில் ஒருவர் ஆதிக்கத்தினை செலுத்தக்கூடாது, அப்படி செய்யும் போது அதனை தட்டி கேட்பதற்கு ஏதுவான நிலை (சட்டம்) இருக்க வேண்டும்.

உங்கள் ஊரில் நீங்கள் உங்களை வெளியூரவனாகக் கருதிக்கொண்டால்,  உங்கள் ஊரவன் உங்களைச் சேர்த்துப் பிடிப்பானா? 

இது மிகச் சாதாரண உளவியல். 

எங்களை நாங்கள் இலங்கையராகக் கருதாதவரை / உணராதவரை சிங்களம் எங்களை சந்தேகத்துடனேதான் பார்க்கும். 

பிறகெப்படி இரு இனங்களுக்கும் இடையே  Reconciliation என்பது சாத்தியமாகும்? 

 

1 hour ago, பெருமாள் said:

 

எத்தனை முறை அந்த தீவுக்கு சண்டைக்கு பின் சென்று வந்து உள்ளீர்கள் ?

நான் எப்போதும் என்னை இலங்கைத் தமிழனாகவே உணர்பவன். 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

உங்கள் ஊரில் நீங்கள் உங்களை வெளியூரவனாகக் கருதிக்கொண்டால்,  உங்கள் ஊரவன் உங்களைச் சேர்த்துப் பிடிப்பானா? 

இது மிகச் சாதாரண உளவியல். 

எங்களை நாங்கள் இலங்கையராகக் கருதாதவரை / உணராதவரை சிங்களம் எங்களை சந்தேகத்துடனேதான் பார்க்கும். 

பிறகெப்படி இரு இனங்களுக்கும் இடையே  Reconciliation என்பது சாத்தியமாகும்? 

இது தமிழர்களின் பிழை அல்ல.

சிங்களம் தான் தமிழரை இந்த நிலைக்குள் தள்ளிவிட்டது.

எத்தனை தமிழருக்கு இலங்கையின் தேசியகீதம் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

உங்கள் ஊரில் நீங்கள் உங்களை வெளியூரவனாகக் கருதிக்கொண்டால்,  உங்கள் ஊரவன் உங்களைச் சேர்த்துப் பிடிப்பானா? 

இது மிகச் சாதாரண உளவியல். 

எங்களை நாங்கள் இலங்கையராகக் கருதாதவரை / உணராதவரை சிங்களம் எங்களை சந்தேகத்துடனேதான் பார்க்கும். 

பிறகெப்படி இரு இனங்களுக்கும் இடையே  Reconciliation என்பது சாத்தியமாகும்? 

 

நான் எப்போதும் என்னை இலங்கைத் தமிழனாகவே உணர்பவன். 

😉

கேட்ட கேள்விக்கு பதில் உங்கள் பதில் அல்ல நேசரியில் இருந்து மறுபடியும்  படித்து விட்டு வந்து எனக்கு பதில் எழுதவு ம் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொல்வது போன்று இலங்கையர்களாகவும் இல்லாமல்  இந்தியர்களாகவும் இல்லாமல் வாழ்வது  ஒரு துன்ப நிலை. எனக்கு இலங்கையில் தெரிந்தவரை தீவிர அரசியல் பேசுகின்ற தமிழர்கள் தவிர சாதாரணமான தமிழர்கள் தங்களை இலங்கையர்களாக உணர்வதாகவே தெரிகின்றது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் அவர்களுக்கு பிரச்சனை இல்லை உண்மையில் அவர்கள் வெளிநாட்டுகாரர்கள். ஆனால் இந்தியாவிடமிருந்துதான் நீங்கள் சொன்ன அத்தனையும் அவர்களுக்கு வேண்டும் என்பது ஆச்சரியமானது தான். ஆனால் அவர்கள் இந்தியர்களும் இல்லை இலங்கையர்களும் இல்லை கொலிடே போவதற்கும் திட்டுவதற்கு மட்டும் இலங்கை .

நீங்கள் கூறுவதிலும் நியாயம் உண்டு. 

இலங்கைக்கும்  இந்தியாவிற்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் அங்கே உள்ளவர்கள் மிகப் பெரும்பாலும் இலங்கைக்கே தமது ஆதரவைத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். யாள் களத்திலும் இந்த வகையான உணர்வோட்டம் ஒன்று இருப்பதை பார்த்திருக்கிறேன. 

ஆனால் வெளிநாடுவாழ் தமிழர்களும் இலங்கை அரசியல்வாதிகளும் வெறுப்பரசியல் + உணர்ச்சி அரசியலையே செய்கின்றனர். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் செய்வது என்னவென்று தெரியும். அது அவர்களது வியாபாரம். 

ஆனால் புலம்பெயர்ஸ் செய்வது முட்டாள்தனத்தால் . 

7 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தமிழர்களின் பிழை அல்ல.

சிங்களம் தான் தமிழரை இந்த நிலைக்குள் தள்ளிவிட்டது.

எத்தனை தமிழருக்கு இலங்கையின் தேசியகீதம் தெரியும்.

உண்மையைக் கூறுங்கள்,..

தமிழர் பகுதிகளில் ஒளவையாருக்குச் சிலை வைப்பதில் ஓர் அர்த்தம் உண்டு. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் இலங்கையில் எதற்குக் காந்தி சிலை? 

காந்திக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு?  

8 minutes ago, பெருமாள் said:

கேட்ட கேள்விக்கு பதில் உங்கள் பதில் அல்ல நேசரியில் இருந்து மறுபடியும்  படித்து விட்டு வந்து எனக்கு பதில் எழுதவு ம் .

சரி பெரியவா. 

நான்  வயதிற்கு எப்போதும் மரியாதை கொடுப்பவன். உங்கள் சொற்படியே முற்பள்ளிக்குப் போகிறேன். 😉

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்கள் ஊரில் நீங்கள் உங்களை வெளியூரவனாகக் கருதிக்கொண்டால்,  உங்கள் ஊரவன் உங்களைச் சேர்த்துப் பிடிப்பானா? 

இது மிகச் சாதாரண உளவியல். 

எங்களை நாங்கள் இலங்கையராகக் கருதாதவரை / உணராதவரை சிங்களம் எங்களை சந்தேகத்துடனேதான் பார்க்கும். 

பிறகெப்படி இரு இனங்களுக்கும் இடையே  Reconciliation என்பது சாத்தியமாகும்? 

 

நான் எப்போதும் என்னை இலங்கைத் தமிழனாகவே உணர்பவன். 

😉

நீங்கள் கூறுவது புரிகிறது, நாமம் போடுவது , பட்டை போடுவது, பூணூல் போடுவது போல, இலங்கையர் என்பதும் ஒரு அடையாளம்தான். 
என்னதான் ஒவ்வொருவரும் தனித்துவமாக இருந்தாலும் (கப்பிதான் போல ஐலன்ட் இருக்கமுடியாது) குடும்பம் என்று வரும் போது அதிகாரம் உள்ளவரது கருத்துக்களை அனுசரித்து போக வேண்டும் இல்லாவிட்டால் குடும்பம் நடத்த முடியாது என கூறுவார்கள் . 
அப்படி பேச்சை மறுத்தால் ஒரு சிறிய வன்முறையின் மூலம் வழிக்கு கொண்டு வரலாம் அது போலத்தான் நாடும், இதனைத்தான் ஆதிக்கம் என கூறவருகிறேன், சில வேளை உங்களுக்கு புரிந்த விடயம் எனக்கு புரியவில்லை போல இருக்கிறது, அவ்வாறாயின் தவறு எனதுதான்.

நான் கூற விளைவது சட்டம் ஒழுங்கு பற்றியது நிங்கள் கூறுவது அடையாளம் பற்றியது, இரு விடயங்களும் வேறு வேறானவை, அடையாளப்பிரச்சினைக்குள் வர விரும்பவிலை.

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

கடந்த 2500 ஆண்டுகளாக சிங்களத்தின் ஒரே ஒரு எதிரி இந்தியாவே. இது வரலாறு

இல்லை இது பிழை.   இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள் தான்  

அண்மையில் இலங்கை மிகவும் கஸ்ரப்பட்டபோது  இந்தியா உடனே பல பில்லியன் நன்கொடையும்   கடனும். வழங்கியுள்ளது 

2009 இல்  வன்னி யுத்தத்தின்போது    

தகவல்கள் வழங்குதல் 

ஆயுதங்கள். வழங்குதல்

நிதியுதவி வழங்குதல்

ஆளாணி,..உயர்மட்ட. படையணிகளின். ஆலோசனை வழங்குதல் 

இப்படி நிறையவே உதவியாக இருந்து உள்ளது” இந்தியா   

ஒரு எதிரி. நாடு இப்படி செய்யுமா   ??? 

இலங்கை ஒருபோதும் இந்தியாவுடன் போரில் ஈடுபட்டதில்லை படப்போவதுமில்லை அதே மாதிரி தான்  இந்தியாவும்   

ஒரு சில விடயத்தில் உடன்பாடில்லை அவ்வளவு தான்   

இது ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் சண்டைப்போட்டுக்கொள்வது போன்றது’ மட்டுமே   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

தமிழர் பகுதிகளில் ஒளவையாருக்குச் சிலை வைப்பதில் ஓர் அர்த்தம் உண்டு. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் இலங்கையில் எதற்குக் காந்தி சிலை? 

காந்திக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு?  

இந்த பதில்.   கேட்ட கேள்விக்கு உரியது இல்லை   கேள்வி இது தான் 

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

எத்தனை தமிழருக்கு இலங்கையின் தேசியகீதம் தெரியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

உங்கள் கற்பனைகளை யாழில் விதைக்க வேண்டாம் .

கற்பனை செய்து மகிழ்வது உங்களது உரிமை
ஆனால் கற்பனை செய்யும் போது உங்களது கொலை வெறி வன்முறைகளை கற்பனை செய்வதை தவிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இல்லை இது பிழை.   இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள் தான்  

அண்மையில் இலங்கை மிகவும் கஸ்ரப்பட்டபோது  இந்தியா உடனே பல பில்லியன் நன்கொடையும்   கடனும். வழங்கியுள்ளது 

2009 இல்  வன்னி யுத்தத்தின்போது    

தகவல்கள் வழங்குதல் 

ஆயுதங்கள். வழங்குதல்

நிதியுதவி வழங்குதல்

ஆளாணி,..உயர்மட்ட. படையணிகளின். ஆலோசனை வழங்குதல் 

இப்படி நிறையவே உதவியாக இருந்து உள்ளது” இந்தியா   

ஒரு எதிரி. நாடு இப்படி செய்யுமா   ??? 

இலங்கை ஒருபோதும் இந்தியாவுடன் போரில் ஈடுபட்டதில்லை படப்போவதுமில்லை அதே மாதிரி தான்  இந்தியாவும்   

ஒரு சில விடயத்தில் உடன்பாடில்லை அவ்வளவு தான்   

இது ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் சண்டைப்போட்டுக்கொள்வது போன்றது’ மட்டுமே   

 

1 hour ago, Kandiah57 said:

இந்த பதில்.   கேட்ட கேள்விக்கு உரியது இல்லை   கேள்வி இது தான் 

 

 

நிர்வாகத்திற்கு ...... 

ஐயோ,....முடியவில்லை,...அல்லது ஆளை விடப்பா,..என்பதைக் குறிக்கும் முகமாக 🤦🏼‍♂️ இந்த emoji குறியீட்டை ஏன் இங்கே Rating ல் சேர்க்கக் கூடாது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

ஒரு நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் இருக்கும் உரிமைகளுடன் அனைத்து மக்களும் வாழ வேன்டும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் ஜனநாயக விழுமியங்களை பேண வேண்டும்.

ஒருவர் மீது அடக்குமுறையினை சாதி, மத, இன என்ற அடிப்படையில் அடக்குமுறைகள் கூடாது (Discrimination

நிச்சயமாக இது இருந்தால் போதும் ......சுயாட்சி தேவையில்லை   

Link to comment
Share on other sites

4 hours ago, Kandiah57 said:

இல்லை இது பிழை.   இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள் தான்  

அண்மையில் இலங்கை மிகவும் கஸ்ரப்பட்டபோது  இந்தியா உடனே பல பில்லியன் நன்கொடையும்   கடனும். வழங்கியுள்ளது 

2009 இல்  வன்னி யுத்தத்தின்போது    

தகவல்கள் வழங்குதல் 

ஆயுதங்கள். வழங்குதல்

நிதியுதவி வழங்குதல்

ஆளாணி,..உயர்மட்ட. படையணிகளின். ஆலோசனை வழங்குதல் 

இப்படி நிறையவே உதவியாக இருந்து உள்ளது” இந்தியா   

ஒரு எதிரி. நாடு இப்படி செய்யுமா   ??? 

இலங்கை ஒருபோதும் இந்தியாவுடன் போரில் ஈடுபட்டதில்லை படப்போவதுமில்லை அதே மாதிரி தான்  இந்தியாவும்   

ஒரு சில விடயத்தில் உடன்பாடில்லை அவ்வளவு தான்   

இது ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் சண்டைப்போட்டுக்கொள்வது போன்றது’ மட்டுமே   

, சிங்களமும் இந்தியாவும் அன்றும் இன்றும் என்றும் தமிழர்களுக்கு எதிராக தோளோடு தோள் நின்று செயற்பட்டார்கள், செயற்படுகிறார்கள்.
ஜே வி பியை அடக்க கூட இந்திய ராணுவம் அழைக்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:
11 hours ago, Kapithan said:

தமிழர் பகுதிகளில் ஒளவையாருக்குச் சிலை வைப்பதில் ஓர் அர்த்தம் உண்டு. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் இலங்கையில் எதற்குக் காந்தி சிலை? 

காந்திக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு?  

இந்த பதில்.   கேட்ட கேள்விக்கு உரியது இல்லை   கேள்வி இது தான் 

 

12 hours ago, ஈழப்பிரியன் said:

எத்தனை தமிழருக்கு இலங்கையின் தேசியகீதம் தெரியும்.

 

ஆமா கந்தையா விடக்கூடாது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமா கந்தையா விடக்கூடாது.

கந்தையர் கடுப்பேத்துறார் மை லாட்  🤣

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.