Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அதில் வேடிக்கை என்ன என்றால் ஜேவிபி வெற்றி பெறுவதற்கு முன்பு வேறுவிதமாக சொன்ன தமிழர்களும் ஜேவிபியின் அரசசபை புலவர்களாக தற்போது மாறியது தான் 😂

தலைவரின் 2005 மாவீரர் நாள் உரையிலிருந்து..

சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி நிவாரணக் கட்டமைப்புக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசிலிருந்து விலக்கிக்கொண்டது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதக் கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு சிறீலங்கா அரசியலமைப்புக்கு விரோதமானதென உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தன. சிங்கள இனவாதச் சக்திகளுக்குச் சார்பான முறையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சுனாமிக் கட்டமைப்பை முழுமையாக முடக்கிச் செயலிழக்கச் செய்தது.

சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சாகடித்துவிட்டது

 

அநுரகுமார சந்திரிக்கா அரசின் அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர்.  இந்த 19-20 வருடங்களில் அவர் எவ்வளவு தூரம் இனவாதத்தை விட்டார் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:
20 hours ago, ரசோதரன் said:

அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர். 

புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  

எங்களுக்கு ஆசிரியராகவும் டீன் ஆகவும் இருந்தவர். சிறந்தநிர்வாகியும் கூட

ஆகா ஒவ்வொரு பூனைக்குட்டியாக வெளிய வருதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அநுரகுமார சந்திரிக்கா அரசின் அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர்.  இந்த 19-20 வருடங்களில் அவர் எவ்வளவு தூரம் இனவாதத்தை விட்டார் என்று தெரியவில்லை.

அவர் கைவிட்டாலும் அவரைச் சூழ உள்ள நிலமை விடவிடாதே!
இளமையில் சமஸ்டியை விரும்பிய முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க அதிகாரம் கிடைத்ததும் தலைகீழாக மாறினாரே!

42 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஒவ்வொரு பூனைக்குட்டியாக வெளிய வருதே.

அப்பா யாழில் பல பூனைக் குட்டிகள் இருக்குதோ அண்ணை?!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அப்பா யாழில் பல பூனைக் குட்டிகள் இருக்குதோ அண்ணை?

எல்லாமே இப்ப பெரியபெரிய கைகளாக இருக்கே.

1 hour ago, கிருபன் said:

தலைவரின் 2005 மாவீரர் நாள் உரையிலிருந்து..

 

 

 

அநுரகுமார சந்திரிக்கா அரசின் அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர்.  இந்த 19-20 வருடங்களில் அவர் எவ்வளவு தூரம் இனவாதத்தை விட்டார் என்று தெரியவில்லை.

தனி நபர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் ஒரு அரசின், அரச இயந்திரத்தின் தன்மையை ஒரு போதும் மாற்றிவிட முடியாது.

சந்திரிகா வர முதல், அவரை சமாதான தேவதை என்று போற்றினர். தனிப்பட்ட ரீதியில் அவர் இனவாதி அல்ல என்றனர். வன்செயல்களால் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி என்பதால் அவர் தமிழர் பிரச்சனைகளை தீர்ப்பார் என்றனர். அவரும் அவ்வாறு தான் தன்னை வெளிக்காட்டி இருந்தார்.

ஆனால் இலங்கை அரசும், அரச இயந்திரமும் முற்றிலும் பெளத்த பேரினவாதமயப்படுத்தப்பட்ட ஒன்று. அதில் எந்த மாற்றமும் ஏற்படாமல், தனி நபர்களின் குணாதிசயங்களால் மாற்றங்கள் ஏற்பட மாட்டாது. அதனால் தான் இனவாதி அல்ல என்று அறியப்பட்ட சந்திரிக்கா ஈற்றில் போரில் கடும் உயிர்பலிகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியது மட்டுமன்றி, தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்த குமார் பொன்னம்மபலத்தைக் கூட பாலபெட்டபெந்தியி மூலம் படுகொலை செய்தார்.

அனுர மட்டும் இதில் விதிவிலக்காக அமைவார் என நான் நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு தீர்வு என்று ஒரு துரும்பும் கிடைக்கப் போவதில்லை. அதே நேரம், தமிழ் மக்களிற்கு இன்று இருக்க கூடிய சில நெருக்கடிகள் மேலும் குறையும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

அனுர படித்த காலத்தில் படித்துமிருக்க. வேண்டும்  அப்படியொருவர். 

ரசோதரன் தான்   அனுர   தமிழ் அமைச்சராக  இவரை நியமிக்கலாம் எனவே அமெரிக்காவிலிருந்து  எப்பவும்  போய் விடலாம் 🙏😂 

இந்த முறை இலங்கை பாராளுமன்றம் ஒரு பல்கலைக்கழகம் ஆகும்.  

🙃.........

அங்கே நாட்டில் ஒரு நீண்ட வரிசையே நிற்குது......

ஒரு நண்பன் வாக்கு போட்டு விட்டு, ஒரு விரலை படமும் எடுத்து போட்டு விட்டு, சிஸ்டம் மாறவேண்டும் என்ற செய்தியும் போட்டிருந்தான் என்று முன்னர் இங்கு எழுதியிருந்தேன். அவன் இப்ப அங்கே ஒரு கோயில் கட்ட தயாராகி விட்ட மாதிரி தெரிகின்றது....... அநுரவிற்குத்தான்......படித்தவன், பதவியிலும் இருக்கின்றான்................ அவனுக்கு இப்ப எல்லாம் ஒரு நேர்கோட்டில் வருகிறது போல...😀.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி சார்பாக கிழக்கு மாவட்டம் ஒன்றில் நின்று படுதோல்வியடைந்தவர்களில் ஒருவனும் இதே வகுப்பு தான்........... இந்த தடவையும் கண்டிப்பாக தேர்தலில் நிற்பான்...... எனக்குத் தெரிந்த அளவில் அவன் செய்யும் ஒரே வேலை தேர்தலில் நிற்பது மட்டுமே.............😜.

இப்படி இன்னும் சில உதாரணங்கள் உண்டு. இதில் எவரையும் அநுர கண்டுகொள்ளவில்லை என்றால், அநுர சரியான வழியில் போக முயற்சி செய்கின்றார் என்று சொல்லலாம்.......... 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

.....

இந்தி திரிகளை மனைவி பிள்னைகளுக்கு காட்டுங்கள்.

அவர்களும் ஆகா என்ரை மனிசன் எங்கடை அப்பா மந்திரியோ ஏதோ ஒரு பெரிய ராஜதந்திர பதவி கிடைக்கப் போகுதென்று ரொம்ப ரொம்ப சந்தோசப்படுவாங்க.

முகப்புத்தகம் வாட்சப்பிலும் பகிர்ந்து உங்களை புகழின் உச்சத்துக்கே கொண்டு போய் விடுவார்கள்.

நினைக்கவே நெஞ்செல்லாம் குளிர்ந்து சந்தோசமாய் இருக்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன், @நீர்வேலியான் புதிய அரசாங்கத்தில் உள்ள மேல் மட்ட செல்வாக்கை பயன்படுத்தி… எனக்கு ஒரு Bar Licence எடுத்துத் தர முடியுமா. 😂 🤣

பிற்குறிப்பு: ஒரு Bar Licence மூன்று தொடக்கம் நான்கு கோடி ரூபாய் வரை விலை போகின்றதாம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தி திரிகளை மனைவி பிள்னைகளுக்கு காட்டுங்கள்.

அவர்களும் ஆகா என்ரை மனிசன் எங்கடை அப்பா மந்திரியோ ஏதோ ஒரு பெரிய ராஜதந்திர பதவி கிடைக்கப் போகுதென்று ரொம்ப ரொம்ப சந்தோசப்படுவாங்க.

முகப்புத்தகம் வாட்சப்பிலும் பகிர்ந்து உங்களை புகழின் உச்சத்துக்கே கொண்டு போய் விடுவார்கள்.

நினைக்கவே நெஞ்செல்லாம் குளிர்ந்து சந்தோசமாய் இருக்கல்ல.

ஒரு மூன்று வருட வாழ்க்கையிலேயே எல்லா கணவன்மார்களின் இமேஜும் வீடுகளில் பணால் ஆகிவிடும் என்பது என் அனுபவம் மற்றும் தெளிவு.................

எனக்கு முப்பது வருடங்கள் ஆகப் போகுது........ ஒரு ஓரமாக நின்று பினாத்துங்கோ, எனக்கு நிறைய வேலை இருக்குது என்று தான் என் வீட்டில் சொல்லுவார்.........

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

@ரசோதரன், @நீர்வேலியான் புதிய அரசாங்கத்தில் உள்ள மேல் மட்ட செல்வாக்கை பயன்படுத்தி… எனக்கு ஒரு Bar Licence எடுத்துத் தர முடியுமா. 😂 🤣

பிற்குறிப்பு: ஒரு Bar Licence மூன்று தொடக்கம் நான்கு கோடி ரூபாய் வரை விலை போகின்றதாம். 😁

இவ்வளவு விலையா, அண்ணை..........🤨.

கொள்கையும் மண்ணும்............. நாலு சிவப்பு சட்டைகள் வாங்குகிறோம், கொழும்பில் போய் இறங்குகிறோம்....🤣.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

@ரசோதரன், @நீர்வேலியான் புதிய அரசாங்கத்தில் உள்ள மேல் மட்ட செல்வாக்கை பயன்படுத்தி… எனக்கு ஒரு Bar Licence எடுத்துத் தர முடியுமா. 😂 🤣

பிற்குறிப்பு: ஒரு Bar Licence மூன்று தொடக்கம் நான்கு கோடி ரூபாய் வரை விலை போகின்றதாம். 😁

நீங்கள் முதலில் எங்கள் கமிஷனை வெட்டுங்கள், அது வந்தால் பிறகு, உங்களுக்கு பார் லைசென்ஸ் எடுத்துத்தரலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

@ரசோதரன், @நீர்வேலியான் புதிய அரசாங்கத்தில் உள்ள மேல் மட்ட செல்வாக்கை பயன்படுத்தி… எனக்கு ஒரு Bar Licence எடுத்துத் தர முடியுமா. 😂 🤣

பிற்குறிப்பு: ஒரு Bar Licence மூன்று தொடக்கம் நான்கு கோடி ரூபாய் வரை விலை போகின்றதாம். 😁

லைசென்ஸ் எந்த நேரமும் பறிக்கப்படலாமண்ணை! அதனால வேறு தொழிலில் முதலீடு செய்யுங்கோ. 

 

13 minutes ago, நீர்வேலியான் said:

நீங்கள் முதலில் எங்கள் கமிஷனை வெட்டுங்கள், அது வந்தால் பிறகு, உங்களுக்கு பார் லைசென்ஸ் எடுத்துத்தரலாம்

வட்டுக்கோட்டையில ஒருத்தர் வட்டிக்கு எடுத்து கோடியைக் கொட்டி கொடுத்து இப்ப கந்தறுந்து தலைமறைவு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

எனக்கு முப்பது வருடங்கள் ஆகப் போகுது........ ஒரு ஓரமாக நின்று பினாத்துங்கோ, எனக்கு நிறைய வேலை இருக்குது என்று தான் என் வீட்டில் சொல்லுவார்...

ஒருக்கா சொல்லிப் பாருங்க

அப்புறமா பாருங்க.

நல்ல செய்தி என்றால் எங்களுக்கும் சொல்லுங்க.

1 hour ago, ரசோதரன் said:

ஒரு மூன்று வருட வாழ்க்கையிலேயே எல்லா கணவன்மார்களின் இமேஜும் வீடுகளில் பணால் ஆகிவிடும் என்பது என் அனுபவம் மற்றும் தெளிவு.........

பறவாயில்லையே. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பார்கள்.

நீங்க 3 வருடத்துக்கு இழுத்திருக்கிறீர்களே.

பலே கில்லாடி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

லைசென்ஸ் எந்த நேரமும் பறிக்கப்படலாமண்ணை! அதனால வேறு தொழிலில் முதலீடு செய்யுங்கோ. 

 

வட்டுக்கோட்டையில ஒருத்தர் வட்டிக்கு எடுத்து கோடியைக் கொட்டி கொடுத்து இப்ப கந்தறுந்து தலைமறைவு. 

அவர் மாறிக்கீறி, ஓமெண்டு தந்தாலும் நீங்கள் விடமாட்டியல் போல இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

தமிழர்களும் நல்ல பூனைகளை தேடும் எலிகளாகத்தான் உள்ளோம். எத்தனை தலைமுறை வலி. பார்க்கலாம். 

9 hours ago, விளங்க நினைப்பவன் said:

அதில் வேடிக்கை என்ன என்றால் ஜேவிபி வெற்றி பெறுவதற்கு முன்பு வேறுவிதமாக சொன்ன தமிழர்களும் ஜேவிபியின் அரசசபை புலவர்களாக தற்போது மாறியது தான் 😂

உண்மையாக உளமார அனுரவின் கட்சி ஒரு இலங்கையின் சிறந்த கட்சியாக செயல்பட்டு சகல பிரச்சினைகளையும் தீர்த்து நாட்டினை முன்னேற்ற வேண்டும் என விரும்புகிறேன், ஆனால் ரோஸ்வெல்டின் கூற்றினை போல பேச்சின் வீரியத்தினை கண்ட மக்கள் செயலினை பார்க்கத்தானே போகிறார்கள் (எனது எதிர்மறைவான எண்ணத்திற்குக்காரணம் கடந்த கால இலங்கை வரலாறுதான்), இந்த விடயத்தில் நான் தவறாக இருக்கவே விரும்புகிறேன்.

ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை குறைகூறி தம்மை மிகைப்படுத்துவது வழமையான விடயம் ஆனால் செயற்பாடென வரும்போது அவையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், இதில் அனுர விதிவிலக்கல்ல என நான் கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்க விரும்புகிறேன்).

என்னைப்பொறுத்தவரை இவர்தான் சிறுபான்மையினரை மற்றய கட்சிகளை விட மோசமாக நடத்தக்கூடும் என எதிர்பார்க்கிறேன், இடது சாரி கொள்கையினை இவர் தனது நலனுக்கு மட்டும் தேவையானவற்றை பயன்படுத்தும் ஒரு சந்தர்ப்பவாதியாக கருதுகிறேன், என்னைப்பொறுத்தவரை இவர்தான் ஆபத்தானவர்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

உண்மையாக உளமார அனுரவின் கட்சி ஒரு இலங்கையின் சிறந்த கட்சியாக செயல்பட்டு சகல பிரச்சினைகளையும் தீர்த்து நாட்டினை முன்னேற்ற வேண்டும் என விரும்புகிறேன், ஆனால் ரோஸ்வெல்டின் கூற்றினை போல பேச்சின் வீரியத்தினை கண்ட மக்கள் செயலினை பார்க்கத்தானே போகிறார்கள் (எனது எதிர்மறைவான எண்ணத்திற்குக்காரணம் கடந்த கால இலங்கை வரலாறுதான்), இந்த விடயத்தில் நான் தவறாக இருக்கவே விரும்புகிறேன்.

ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை குறைகூறி தம்மை மிகைப்படுத்துவது வழமையான விடயம் ஆனால் செயற்பாடென வரும்போது அவையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், இதில் அனுர விதிவிலக்கல்ல என நான் கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்க விரும்புகிறேன்).

என்னைப்பொறுத்தவரை இவர்தான் சிறுபான்மையினரை மற்றய கட்சிகளை விட மோசமாக நடத்தக்கூடும் என எதிர்பார்க்கிறேன், இடது சாரி கொள்கையினை இவர் தனது நலனுக்கு மட்டும் தேவையானவற்றை பயன்படுத்தும் ஒரு சந்தர்ப்பவாதியாக கருதுகிறேன், என்னைப்பொறுத்தவரை இவர்தான் ஆபத்தானவர்.

இனவாதத்தை முழுமையாக மகிந்த குடும்பம் கைப்பற்றி விட அதுவரை முழு இனவாத கட்சியாக இருந்த இவர்கள் வேறு வழி இன்றி இதை கையில் பிடித்து இருக்கத்தான் அதிகம் சந்தர்ப்பம் உண்டு. ஆனால் அதுவே நன்மை பயக்கின் இரு பகுதியும் தொடர்ந்தால் நல்லது நடக்கட்டும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

அனுர மட்டும் இதில் விதிவிலக்காக அமைவார் என நான் நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு தீர்வு என்று ஒரு துரும்பும் கிடைக்கப் போவதில்லை.

துட்டகைமுனு குறுகிப் படுத்த கதையில் இருந்தும், மகாவம்ச மனநிலையில் இருந்தும் பெரும்பான்மையான சிங்களவர்கள் விலகவில்லை. தொடர்ந்து ஆட்சியில் இருந்த மகிந்த குடும்பத்தினர் மீது, ரணில் ஜனாதிபதியாக இருக்கவும் மொட்டுக்கட்சிதான் முட்டுக்கொடுத்தது, உள்ள வெறுப்பாலும், சஜித் பிரேமதாஸவின் ஆளுமையற்ற தலைமையாலும் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமாரவுக்கு சிங்களவர்கள் வாக்குகளை அள்ளிப்போட்டனர். ஆனால் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை (113 ஆசனங்களை) தேசிய மக்கள் சக்தி அடைவது கூட சவாலான விடயம்.

எனவே சிங்களவர்கள் மாறிவிட்டார்கள் புளகாங்கிதம் அடைந்து மனப்பால் குடிக்காமல் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள சரியானவர்களை வரும் தேர்தலில் தெரிவுசெய்யவேண்டும். ஆனால் தேர்தலில் கிடைக்கக்கூடிய 10-15 ஆசனங்களுக்குப் போட்டியிடவே பழசுகள் 20-25 பேர் நந்திகளாக இருக்கின்றார்கள்.

எனவே, தமிழர்களுக்கு சில சலுகைகளுக்கு மேல் ஒன்றும் கிடைக்காது என்பது உண்மைதான்!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

இனவாதத்தை முழுமையாக மகிந்த குடும்பம் கைப்பற்றி விட அதுவரை முழு இனவாத கட்சியாக இருந்த இவர்கள் வேறு வழி இன்றி இதை கையில் பிடித்து இருக்கத்தான் அதிகம் சந்தர்ப்பம் உண்டு. ஆனால் அதுவே நன்மை பயக்கின் இரு பகுதியும் தொடர்ந்தால் நல்லது நடக்கட்டும். நன்றி.

பெரும்பான்மை மாற்றத்திற்காக அணீதிரளும்போது சிறுபான்மையினர் தமது பிரச்சினைகளை கவனிப்பது பெரும்பான்மையினரிற்கு எதிர்ப்பான விடயமாக அனுராவால் பார்க்கப்படுகிறது, பெரும்பான்மையினரின் பிரச்சினை என இவர் கூறுவது வாழ்வாதார பிரச்சினையான பொருளாதார பிரச்சினை, இலங்கையின் அடிப்படை பிரச்சினையாலேயே இந்த பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இவர் எதிர்பார்ப்பது ( இல்லை திணிப்பது) சிறுபான்மையினர் தமது பிரச்சினைகளைப்பற்றி பேசக்கூடாது எனும் ஒரு வித அடக்குமுறை, இவர் ஒரு சர்வாதிகாரியாக வந்து இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகளை எல்லாம் பரவாயில்லை என நினைக்க வைத்துவிடுவாரோ என கருதுகிறேன்.

3 hours ago, ரசோதரன் said:

ஒரு மூன்று வருட வாழ்க்கையிலேயே எல்லா கணவன்மார்களின் இமேஜும் வீடுகளில் பணால் ஆகிவிடும் என்பது என் அனுபவம் மற்றும் தெளிவு.................

எனக்கு முப்பது வருடங்கள் ஆகப் போகுது........ ஒரு ஓரமாக நின்று பினாத்துங்கோ, எனக்கு நிறைய வேலை இருக்குது என்று தான் என் வீட்டில் சொல்லுவார்.........

 நீங்கள் பெரிய ஆள்தான் 3 வருடங்களாவது உங்கட இமேஜை காத்திருக்கிறீர்கள்,  எனக்கு திருமணம் நடக்கும் முன்னமே என்னுடைய இமேஜ், டமேஜ் ஆகிவிட்டது.😁

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vasee said:

இவர் எதிர்பார்ப்பது ( இல்லை திணிப்பது) சிறுபான்மையினர் தமது பிரச்சினைகளைப்பற்றி பேசக்கூடாது எனும் ஒரு வித அடக்குமுறை, இவர் ஒரு சர்வாதிகாரியாக வந்து இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகளை எல்லாம் பரவாயில்லை என நினைக்க வைத்துவிடுவாரோ என கருதுகிறேன்.

ஒரு ஆறு மாதங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்   🙏.  நல்லது நடக்கும் என்று நினைப்பது நல்லது   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

ஒரு மூன்று வருட வாழ்க்கையிலேயே எல்லா கணவன்மார்களின் இமேஜும் வீடுகளில் பணால் ஆகிவிடும் என்பது என் அனுபவம் மற்றும் தெளிவு.................

எனக்கு முப்பது வருடங்கள் ஆகப் போகுது........ ஒரு ஓரமாக நின்று பினாத்துங்கோ, எனக்கு நிறைய வேலை இருக்குது என்று தான் என் வீட்டில் சொல்லுவார்.........

அட.   கடவுளே    எல்லா.   ஆண்களின்.  நிலமையும்.  இப்படியா ???  பாவம் 🙏😂🤣.    அதெப்படி ஈழப்பியன். அண்ணை மட்டும் இந்த பிரச்சனையை.  திறம்பட சமாளித்து   இப்பவும்   உலகம் முழுக்க சோடியாக. வலம் வருகிறார் 🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

இவர் ஒரு சர்வாதிகாரியாக வந்து இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகளை எல்லாம் பரவாயில்லை என நினைக்க வைத்துவிடுவாரோ என கருதுகிறேன்.

இப்படியானவர்களிடமிருந்து நாங்கள் ஜனநாயகத்தை எதிர்பார்க்கவே முடியாது. ஒரு கட்டப் பஞ்சாயத்து முறையை எதிர்பார்க்கலாம். ஆனால், இவர்களுக்குள் இருக்கும் ஓரிரு சந்தர்ப்பவாதிகள் தவிர்த்து ஏனையோர் கொள்ளை அடிக்கமாட்டார்கள். ஆடம்பரத்தில் திளைக்கமாட்டார்கள்.

அரைவாசி சிங்கள மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு உணவு - உடை - உறையுள் என்ற மூன்று மிக அடிப்படைத் தேவைகளுக்குமான ஒரு நிரந்தர வழியும், ஊழலற்ற நிர்வாகமும் போன்றே தெரிகின்றது. அவர்களின் தெரிவு தான் இவர்.  

'தமிழர் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு.............' என்ற கதை, கவிதையெல்லாம் இவர்களிடம் எடுபடவே எடுபடாது. அநுர தமிழர்களுக்கு தனியே எதுவும் கொடுப்பேன் என்று சொன்னால், அது முழுப்பொய்யே அன்றி வேறெதுவும் இல்லை.

 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

 நீங்கள் பெரிய ஆள்தான் 3 வருடங்களாவது உங்கட இமேஜை காத்திருக்கிறீர்கள்,  எனக்கு திருமணம் நடக்கும் முன்னமே என்னுடைய இமேஜ், டமேஜ் ஆகிவிட்டது.😁

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் முள் பாதையை விட, எங்களின் பாதைகளில் எவ்வளவு முட்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம் என்கிறீர்கள்................🤣.

உங்களுக்கு அப்படி நடந்து, அப்படியே திருமணமும் நடந்தது மிகச் சிறப்பான ஒரு விடயம். ஊதி வைத்த பலூன்கள் ஒவ்வொன்றாக உடைய உடைய மற்றவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்.......

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

துட்டகைமுனு குறுகிப் படுத்த கதையில் இருந்தும், மகாவம்ச மனநிலையில் இருந்தும் பெரும்பான்மையான சிங்களவர்கள் விலகவில்லை. தொடர்ந்து ஆட்சியில் இருந்த மகிந்த குடும்பத்தினர் மீது, ரணில் ஜனாதிபதியாக இருக்கவும் மொட்டுக்கட்சிதான் முட்டுக்கொடுத்தது, உள்ள வெறுப்பாலும், சஜித் பிரேமதாஸவின் ஆளுமையற்ற தலைமையாலும் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமாரவுக்கு சிங்களவர்கள் வாக்குகளை அள்ளிப்போட்டனர். ஆனால் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை (113 ஆசனங்களை) தேசிய மக்கள் சக்தி அடைவது கூட சவாலான விடயம்.

எனவே சிங்களவர்கள் மாறிவிட்டார்கள் புளகாங்கிதம் அடைந்து மனப்பால் குடிக்காமல் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள சரியானவர்களை வரும் தேர்தலில் தெரிவுசெய்யவேண்டும். ஆனால் தேர்தலில் கிடைக்கக்கூடிய 10-15 ஆசனங்களுக்குப் போட்டியிடவே பழசுகள் 20-25 பேர் நந்திகளாக இருக்கின்றார்கள்.

எனவே, தமிழர்களுக்கு சில சலுகைகளுக்கு மேல் ஒன்றும் கிடைக்காது என்பது உண்மைதான்!

இது தான் நிதர்சனம்.

அதை விட்டுட்டு பலம்பெயர் சிங்னளவர் எப்படி இப்படி அனுராக்காக பாடுபட்டு அரசை அமைத்துள்ளார்கள் என்பதெல்லாம் வெறும்கதை.

தமிழர்களை போரில் வென்ற கோத்தாவை வெல்லவைக்க வெளிநாட்டு புலம்பெயர் சிங்களவர் போய் வாக்கு போட்டு வெல்ல வைத்ததே சாதனை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

இப்படியானவர்களிடமிருந்து நாங்கள் ஜனநாயகத்தை எதிர்பார்க்கவே முடியாது. ஒரு கட்டப் பஞ்சாயத்து முறையை எதிர்பார்க்கலாம். ஆனால், இவர்களுக்குள் இருக்கும் ஓரிரு சந்தர்ப்பவாதிகள் தவிர்த்து ஏனையோர் கொள்ளை அடிக்கமாட்டார்கள். ஆடம்பரத்தில் திளைக்கமாட்டார்கள்.

அரைவாசி சிங்கள மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு உணவு - உடை - உறையுள் என்ற மூன்று மிக அடிப்படைத் தேவைகளுக்குமான ஒரு நிரந்தர வழியும், ஊழலற்ற நிர்வாகமும் போன்றே தெரிகின்றது. அவர்களின் தெரிவு தான் இவர்.  

'தமிழர் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு.............' என்ற கதை, கவிதையெல்லாம் இவர்களிடம் எடுபடவே எடுபடாது. அநுர தமிழர்களுக்கு தனியே எதுவும் கொடுப்பேன் என்று சொன்னால், அது முழுப்பொய்யே அன்றி வேறெதுவும் இல்லை.

 

சந்திரிக்கா ஆட்சிக்கு வந்த போது ஒரு இறாத்தல் பாணின் விலை சரியாக நினைவில்லை 3.50 ? என நிர்ணயித்து சிறிது காலம் அதனை நடைமுறைப்படுத்தியுமிருந்தார்  என்பதாக நினைவுள்ளது, அதாவது அடிப்படை அத்தியாவசிய பொருள்களின் மீதான விலை குறைப்பு (மானியங்கள் மூலம்) தற்போதய நிலையில் நடைமுறை சாத்தியமில்லை, ஐ எம் எப் விலைகள் மிதக்க விடப்பட்ட நிலையினையே விரும்புகிறது, அத்துடன் அரச பாதீட்டில் மேலதிக சுமையினை செலுத்தும் இது எதிர்காலத்தில் கடன் மீழழிக்கும் போது நாட்டை முற்றாக கையறு நிலைக்கு தள்ளும்.

வேணுமென்றால் பாராளுமன்ற தேர்தல் வரை குறுங்காலத்திற்கு இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளலாம் ஆனால் அது கூட பொருளாதார அழுத்தத்தினை அரசின் மேல் சுமத்துவதுடன் ஐ எம் எப் உடனான உடன்படிக்கையினை மீறுவதற்கு ஒப்பானது அதனால் ஐ எம் எப் இலங்கைக்கான கடனை இரத்து செய்யும் நிலை ஏற்படலாம்.

இலங்கை பிரச்சினை தொடர்பான புரிதல் இவருக்கு இல்லையோ என தோன்றுகிறது, அடிப்படை பிரச்சினைதான் இலங்கையினை இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது, தனிச்சிங்களம் என ஆரம்பித்த இந்த பிரச்சினைக்களை உருவாக்கின பெரும்பான்மை சமூகத்தில் மன மாற்றம் ஏற்படாது ஆனால் அடிப்படை கட்டமைப்பில் (அரசமைப்பு சட்டம், மற்றும் சமூக சட்டங்களில்) சீர் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

இவருடைய கருத்துகள் பெரும்பான்மையினரை பின்பற்றவேண்டும் என்பதாக உள்ளது, இலங்கை அரசியலில் ஏற்கனவே சிறுபான்மையினர் கொடிகள் போல பெரும்பான்மை எனும் மரத்தின் மேல் படர்ந்திருக்க வேண்டும் என கருத்து கூறியவர்கள் இருகின்றார்கள், அவர்களை விட எந்த விதத்திலும் இவர் வேறுபட்டவராக தெரியவில்லை.

இவரும் ஒரு வழமையான இலங்கை அரச தலைமை போலவே இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன ஏதாவது அதிர்ஸ்டவசமாக இவரது ஆலோசனையாளர் திறமையாக இருந்தால் சில வேளை மாற்றத்தினை எதிர்பார்க்கலாம்.

பொதுவாக இடது சாரி அரசுகள் மக்கள் நலன் திட்டங்களில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பதால் இலங்கை மக்களுக்கு ஒரு தற்காலிக நலன் இவரது கட்சியால் கிடைக்கும் என கருதுகிறேன்.

அதனால் இலங்கையின் லீ குவான் ஆக இவர் நிட்சயமாக இருக்கமாட்டார், இவரும் ஒரு வழமையான இலங்கை அரசியல்வாதிதான்.

சிறந்த தலைவர்களிடம் big picture கண்ணோட்டம் இருக்கும், எப்படி பொருளாதாரத்திற்கு ஒன்றுக்கும் உதவாத மூலகங்களை கொண்ட சிங்கப்பூரைசிங்கப்பூரை வளர்தெடுத்த லீ குவான் போல இலங்கையினை முன்னகர்த்த தேவையான அடிப்படை பண்புகள் ஏதாவது இருக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம் (தற்போது அவ்வாறு இருப்பதாக தெரியவில்லை)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.