Jump to content

ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளில் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படம்
28 செப்டெம்பர் 2024, 05:20 GMT
புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டார் என்ற இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பை இதுவரை ஹெஸ்பொலா உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ, வேறு ஏதேனும் கருத்து சொல்லவோ இல்லை.

மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்கு பைடன் பிறப்பித்துள்ள உத்தரவு என்ன?

ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறி

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது.

ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,REUTERS

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

இந்நிலையில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF-ஐடிஎப்) தெரிவித்துள்ளது.

ஐடிஎப்-இன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், "ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மற்றும் பிற ஹெஸ்பொலா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

ஹெஸ்பொலாவின் மத்திய தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஹெஸ்பொலாவின் இந்த தளம் பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கீழே செயல்பட்டு வந்ததாகவும் ஐடிஎப் கூறியது.

Twitter பதிவை கடந்து செல்ல

Hassan Nasrallah will no longer be able to terrorize the world.

— Israel Defense Forces (@IDF) September 28, 2024
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

 

‘இஸ்ரேலை யார் அச்சுறுத்தினாலும் விடமாட்டோம்’

ஹெர்சி ஹலேவி

பட மூலாதாரம்,IDF

படக்குறிப்பு, ஐடிஎப் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி

இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (ஐடிஎப்) தலைமை அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

"நாங்கள் கூற வரும் செய்தி மிகவும் தெளிவானது. இஸ்ரேலிய குடிமக்களை யார் அச்சுறுத்தினாலும், அவர்களை எப்படி பிடிப்பது என எங்களுக்கு தெரியும். வடக்கு, தெற்கு அல்லது அதற்கு அப்பால் என அவர்கள் எங்கு சென்றாலும் சரி" என்று அதில் அவர் கூறியுள்ளார்.

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்த காணொளி ஐடிஎப்-இன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

"பல்வேறு கட்ட ஆயத்தப்பணிகளுக்கு பிறகு, இஸ்ரேலிய ராணுவம், நஸ்ரல்லா மற்றும் ஹெஸ்பொலாவின் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தியது" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறியுள்ளார்.

"மிகச்சரியான நேரத்தில், மிகவும் துல்லியமான முறையில் அந்தத் தாக்குதலை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் இது முடிவல்ல என்பதில் தெளிவாக இருக்கிறோம். முன்னோக்கிச் செல்லும் திறன் எங்களிடம் அதிகமாகவே உள்ளது" என்றும் அவர் கூறினார்.

‘தாக்குதலில் ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்

பட மூலாதாரம்,REUTERS

‘ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்

தெற்கு லெபனானில், ஹெஸ்பொலாவின் ஏவுகணைப் பிரிவு தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் துணைத் தலைவர் ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி புதன்கிழமை அன்று ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது உட்பட இஸ்ரேல் மீதான ஏராளமான தாக்குதல்களின் பின்னணியில் அலி இஸ்மாயில் இருந்தார் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

தாக்குதலைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அமெரிக்கப் படைகளுக்கு புதிய உத்தரவு

மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

"மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்" என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

‘எந்த சக்தியாலும் இஸ்ரேலைத் தடுக்க முடியாது’

ஜோசப் பொரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா உட்பட எந்த சக்தியாலும் ‘தடுக்க முடியாது’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.

ஜோசப் பொரெல் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் செய்வது போர்நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொடுப்பது தான். ஆனால் காஸாவில் அல்லது மேற்குக் கரையில் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை யாராலும் தடுக்க முடியாது என்று தான் தெரிகிறது" என்றார்.

“ஹெஸ்பொலா அழிக்கப்படும் வரை இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தாது” என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியதாக பொரெல் கூறினார்.

21 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் அழைப்பையும் அவர் ஆதரித்து பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

தம் தலைவர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா இயக்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.

ஹமாஸ் இற்காக ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கப் போய் இன்று தன் தலைவரைக் கூட காப்பாற்ற முடியாமல் போய் கிடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகபெரும் போர் நடந்துகொண்டிருக்கும்போது, இஸ்ரேலையே அழித்துவிடுவோம் என்று வீரவசனம் பேசிக்கொண்டு,

லெபனானில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைவரா இஸ்ரேல் தூக்கி கொண்டிருக்கும்போது,

பேஜர் வாக்கி டாக்கி என்று கற்பனைக்கெட்டாத தொழில்நுட்ப தாக்குதல்  செய்துகொண்டு,

பெய்ரூட்வரை போய் விமானதாக்குதல் செய்துகொண்டு இருக்கும்போது  எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுமில்லாமல்

மிக இலகுவாக இலக்கு வைக்க கூடிய நகரத்தின் நடுவே உள்ள அவர்களின் தலைமையகத்தில் போய் இருந்திருக்காரே இந்த மூளையை வைச்சுக்கொண்டு எப்படி இஸ்ரேலை வெல்ல போகிறார்கள்?

வெறும் அல்லாஹ் அல்லாஹ் என்றால் எதிரிகளை எதிர்கொள்ள முடியாது என்பதை ஹிஸ்புல்லா கமாஸ் தலமைகளின் ஒட்டுமொத்த அழிவு காண்பிக்கிறது.

இத்தனைக்கும் காரணம் ஈரான்.

பயிற்சிகளும் ஆயுதங்களும் கொடுத்து இவர்களை உருவாக்கி ரத்தத்தை சூடாக்கி உசுப்பேத்திவிட்டு  இஸ்ரேலை அழிக்கபோகிறோம் என்று பிலிம் காட்டிவிட்டு இவர்களை முன்னே தள்ளிவிட்டு  தலைபோகும் நேரங்களில் சத்தம் போடாமல் தான் ஒதுங்கி கொள்கிறது,

தற்போது ஈரானிய ஆன்மீக தலைவரிலிருந்து அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு ஈரான் நகர்த்திவிட்டது என்றும் செய்தி வருகிறது.

கமாஸ் ஹிஸ்புல்லா வரிசையில் இனிமே ஹுத்திகள்மேலே இஸ்ரேல் தனது கவனத்தை திருப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

இஸ்ரேலை வெல்ல அல்லாஹ் போதாது இஸ்ரேல்போல அறிவுகூர்மை வேண்டுமென்பதை காலம் இஸ்ரேலிய எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வு, ஆயுதங்கள், தொழில்நுட்பம், நிதியுதவி.. சகல வளங்களையும் இஸ்ரேலுக்கு வழங்கிவிட்டு அமெரிக்கா வேடிக்கை பார்க்கின்றது.

தற்போது அமெரிக்காவின் சொல்லையே இஸ்ரேல் காது கொடுத்து கேட்பதாக இல்லை. அமெரிக்காவின் ஸ்திரமற்ற அரசியல் நிலவரத்தை இஸ்ரேல் தனக்கு சாதகமாக பாவிக்கின்றது. இங்கே அமெரிக்காவுக்கு தேவை இல்லாத நேரத்தில் மத்திய கிழக்கில் போரில் நுழையவேண்டிய ஆபத்து ஒருபுறம். 

மறுபுறம் செலன்ஸ்கி அரித்து எடுக்கின்றார். உக்ரைனுக்கு வளங்களை கொட்டவேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கு.

அமெரிக்கா வங்குரோத்து அடிக்கும் காலமும் வரலாம்.

மறுபுறம் சீனா, ரஷ்யா, வட கொரியா தமது கத்திகளை கூர்மைப்படுத்துகின்றன.

மிக வேகமாக பல மாற்றங்கள் உலகில் நடந்தேறுகின்றன.

தொடர்ந்து அவதானிப்போம்.

பெரும் போர்ஏற்படுமாயின் வெளிநாட்டு சீவியத்தை விட இலங்கை பாதுகாப்பான நாடோ என எண்ணத்தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://avia-pro.net/news/armiya-izrailya-za-nedelyu-unichtozhila-vsyo-vysshee-rukovodstvo-hezboll

11_746.jpg

 

இஸ்ரேலின் புலனாய்வுத் திறனைப் பார்க்க ஆச்சரியமாயும் பிரமிப்பாயும் இருக்கிறது. 
 

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா பலி- உறுதி செய்தது ஹெஸ்புல்லா அமைப்பு

28 SEP, 2024 | 07:08 PM
image

ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வான்தாக்குதலில் தனது தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது.

லெபனான் தலைநகரின் தென்புறநகர் பகுதியில் சியோனிஸ்ட்கள் மேற்கொண்ட துரோகத்தனமான நடவடிக்கையில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதியளித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான்

ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஈரானின் செயற்பாடு

எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் | Death Of Hassan Nasrallah Pressure On Iran

அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இறுதி இலக்கு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் | Death Of Hassan Nasrallah Pressure On Iran

ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. 

https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான்

இரானை விட செத்தகிளியின் நிலைதான் பரிதாபம்!😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள்

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள்

பட மூலாதாரம்,GETTY/AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெரிமி போவன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 41 நிமிடங்களுக்கு முன்னர்

மத்திய கிழக்கில் மிகவும் கடுமையான போர் மூளும் அபாயம் இருப்பதைப் பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. அதை நிறுத்துவதற்கான செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய பேரழிவுகரமான தாக்குதலைத் தொடர்ந்து, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றதாக இஸ்ரேல் அறிக்கை வெளியிட்டது. ஹெஸ்பொலாவும் தனது டெலிகிராம் பதிவில் இந்தத் தகவலை உறுதி செய்தது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்தவர்களின் கூற்றுப்படி, அதுவொரு பெரிய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்.

இதுவரை நான் லெபனான் மோதல்கள் பற்றிக் கேள்விப்பட்டதில் இதுதான் மிகவும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு என்று நகரத்தில் உள்ள எனது நண்பர் ஒருவர் கூறினார்.

தாக்குதல் நடந்த இடங்களில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னேற்றிச் செல்ல முடிவெடுத்த இஸ்ரேல்

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி :  மேற்கத்திய நாடுகளின் வாதங்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹெஸ்பொலாவின் தலைவரைக் குறிவைத்து இந்தக் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கிறது. இஸ்ரேலின் 'பெரிய எதிரி' எனக் கருதப்பட்ட ஓர் அமைப்புக்கு எதிராக அவர்கள் பெற்றுள்ள இந்த மிகப்பெரிய வெற்றி அவர்களுக்கு மேலும் நம்பிக்கையூட்டும்.

இஸ்ரேல் மேலும் பல வீரர்களைத் திரட்டியுள்ளது. லெபனான் மீது தரைவழித் தாக்குதலைக்கூட மேற்கொள்ள அவர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிகப்பெரிய தீவிரத்தை எட்டக்கூடிய நடவடிக்கை இது. கடந்த 11 மாதங்களாக இரு தரப்பினருக்கும் இடையே மாறி மாறி மோதல்கள் இருந்து வருகின்றன. இருப்பினும் இஸ்ரேல் தரப்பு லெபனானுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த மோதலில் முன்னேறிச் செல்ல இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.

ஹமாஸுக்கு எதிரான போரைப் போலன்றி, இஸ்ரேல் 2006இல் இருந்து இந்தப் போரைத் திட்டமிடுகிறது. ஹமாஸ் உடனான மோதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஹெஸ்பொலாவுக்கு எதிரான போரை நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகின்றனர். இப்போது அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள்.

ஹெஸ்பொலாவிற்கு முன்னால் பெரிய சவால்கள் உள்ளன, இஸ்ரேலிய ராணுவம் ஹெஸ்பொலாவின் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் என்று சொல்வது உண்மையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இஸ்ரேல் அவர்களுக்கு முன் பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

ஹெஸ்பொலா முன்பாகப் பெரிய சவால்கள் உள்ளன. இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹெஸ்பொலா நிலைகள் மீது தொடர்ந்து குண்டுவீசி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

 

நெதன்யாகுவின் அச்சுறுத்தல்

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னதாக வெள்ளியன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறைந்தபட்சம் 21 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவு பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

இந்த முன்மொழிவு இஸ்ரேலின் மிக முக்கியமான மேற்கத்திய நட்பு நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் மூலம் முன்மொழியப்பட்டது.

ஆனால் நியூயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் நெதன்யாகு முன்வைத்த பிடிவாதமான மற்றும் ஆக்ரோஷமான உரையில், ராஜதந்திரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இஸ்ரேலை "அழிக்க விரும்பும் மூர்க்கமான எதிரியுடன் போரிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை" என்றார் நெதன்யாகு.

ஹெஸ்பொலாவை தோற்கடித்து காஸாவில் ஹமாஸ் மீது முழுமையான வெற்றி கிடைத்தால் மட்டுமே இஸ்ரேலிய பணயக் கைதிகள் நாடு திரும்புவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நெதன்யாகு, படுகொலை செய்யப்படவிருக்கும் ஆட்டுக்குட்டியாக இருப்பதற்குப் பதிலாக, இஸ்ரேல் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் கூறினார். இது நாஜி இனப்படுகொலையைக் குறிக்கும் இஸ்ரேலிய பழமொழி.

நெதன்யாகு உரை முடிந்ததும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனவே, லெபனானில் போர் நிறுத்தம் பற்றிய விவாதம் இஸ்ரேலின் திட்டத்தில் இல்லை என்பதற்கான அறிகுறி இது.

எதிரிகள் எங்கிருந்தாலும், இஸ்ரேல் அவர்களைக் குறிவைத்துத் தாக்கும் என்ற நெதன்யாகுவின் அச்சுறுத்தலுக்குப் பிறகு உடனடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மறுபுறம், இந்தப் பெரிய தாக்குதல் குறித்து இஸ்ரேல் தங்களுக்கு எந்த முன் தகவலும் தெரிவிக்கவில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

 

தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்த நெதன்யாகு

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள்

பட மூலாதாரம்,ISRAEL PRIME MINISTER'S OFFICE

படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருந்து வான்வழித் தாக்குதலை நடத்த நெதன்யாகு அனுமதி அளித்ததாககக் கூறப்படுகிறது

ஜெருசலேமில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், பல தகவல் தொடர்பு சாதனங்களுக்கு மத்தியில் நெதன்யாகு அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

மேலும் அந்தப் புகைப்படம் நியூயார்க் நகரில் உள்ள ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலுக்கு அவர் அனுமதி வழங்கிய தருணத்தின் படம் இது என்று அந்தப் படத்தின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தான் பல மாதங்களாக முன்னிறுத்த முயன்று வரும் கொள்கையின் பக்கமே நிற்கிறார். அவர் பேச்சுவார்த்தைக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக நம்புகிறார். இருப்பினும், அந்தக் கூற்று நம்ப முடியாத ஒன்றாகத் தெரிகிறது.

இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு இல்லை. ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் அமைப்புகளை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளதால் சட்டரீதியாக அவர்களுடன் பேச முடியாது.

மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில், கடந்த ஆண்டைப் போல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

 

அமெரிக்காவின் ஆலோசனைகளைப் புறக்கணித்த இஸ்ரேல்

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி :  மேற்கத்திய நாடுகளின் வாதங்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து இடிபாடுகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய அடுத்த சில நாட்களிலேயே, ஹெஸ்பொலா தாக்கப்பட வேண்டுமென்று இஸ்ரேல் அரசாங்கத்திலும் ராணுவத்திலும் உள்ள சக்திவாய்ந்த நபர்கள் வாதிட்டனர்.

இருப்பினும், அமெரிக்கா அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களை வற்புறுத்தியது. முழு பிராந்தியத்திலும் ஒரு போர் வெடிப்பது இஸ்ரேலின் பாதுகாப்பிற்குப் பயனளிக்காது என்று அமெரிக்கர்கள் வாதிட்டனர்.

ஆனால், கடந்த ஆண்டிலிருந்து இஸ்ரேல் போரிடும் விதம் குறித்த அமெரிக்க அதிபர் பைடனின் அறிவுறுத்தல்களை மீறுவதை நெதன்யாகு வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

பெய்ரூட் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள் மற்றும் குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்கிய போதிலும், அதிபர் பைடனும் அவரது குழுவினரும் வெறும் பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஆதரவளிப்பது, ஆயுதங்களை வழங்குவது, ராஜதந்திர பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் நெதன்யாகு மீது செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதாகவே, இஸ்ரேலின் வாழ்நாள் ஆதரவாளராக கடந்த ஆண்டு முதல் அதிபர் பைடனின் கொள்கை இருந்தது.

இஸ்ரேல் போர்புரியும் விதத்தை மாற்றுவது மட்டுமின்றி, அதனுடன் இணைந்து சுதந்திர பாலத்தீனிய அரசை உருவாக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் திட்டத்தை நெதன்யாகு ஏற்றுக்கொள்வார் என்று ஜோ பைடன் நம்பினார்.

இந்தப் போரில் பல பாலத்தீன மக்கள் கொல்லப்படுவதாகவும், இந்தப் போர் மக்களுக்குப் பெரும் துன்பத்தை அளிப்பதாகவும் அதிபர் பைடன் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனாலும், நெதன்யாகு பைடனின் ஆலோசனைகளை முற்றிலுமாக நிராகரித்தார்.

 

ஹெஸ்பொலாவின் நிலை என்ன?

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெய்ரூட் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மத்தியக் கிழக்கில் பெரியளவிலான போரைத் தவிர்ப்பதற்கு ஆதரவு மற்றும் ராஜதந்திரத்தின் கலவை தேவை என்று பிளிங்கன் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால், நிலைமை அமெரிக்காவின் கையை மீறிவிட்டதால், அவர்களின் பார்வை நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை.

இனி வரும் காலங்களில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும்.

முதலில், ஹெஸ்பொலா தனது ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது பெரிய தாக்குதலை நடத்துவார்களா? மீதமுள்ள ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தாவிட்டால், இஸ்ரேல் அவற்றை அழித்துவிடும் என்று அவர்கள் நினைக்கலாம்.

இஸ்ரேல் தரப்பு அதன் முடிவுகளின் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் ஏற்கெனவே லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவது பற்றிப் பேசியுள்ளனர். மேலும் அவர்கள் இன்னும் தேவையான படைகளை நிலைநிறுத்தவில்லை என்றாலும், அவர்களின் ராணுவம் சனிக்கிழமையன்று "ஒரு பெரியளவிலான நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாக” கூறியது.

லெபனானில் உள்ள சிலர் தரைவழித் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்திற்குப் பெருமளவிலான சேதத்தை ஹெஸ்பொலா ஏற்படுத்தக்கூடும் என்று நம்புகின்றனர்.

மேற்கத்திய ராஜ்ஜீய அதிகாரிகள் ராஜதந்திர தீர்வை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் பிரச்னையைச் சரிசெய்ய நம்புகின்றனர். இந்த ராஜ்ஜீய அதிகாரிகளில் சிலர் இஸ்ரேலின் உறுதியான நட்பு நாடுகளாகவும் உள்ளனர்.

இப்போது இந்த அதிகாரிகள் பெரும் ஏமாற்றத்துடனும், ஆதரவற்ற உணர்வுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

அமெரிக்கா வங்குரோத்து அடிக்கும் காலமும் வரலாம்.

🤣................

அமெரிக்கா வங்குரோத்து அடிக்கக் கூடாது என்று தான் உலகம் முழுக்க அங்கங்கே இப்படி ஆள் வைத்து அடித்துக் கொண்டு திரிகிறது போல. எத்தனை கையாட்கள்.............

நிலைமை கை மீறினால், இரகசியமாக அச்சடிக்க வேண்டியது தான்......... அதை வாங்கிப் பதுக்கத் தான் எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள்........  

43 minutes ago, வாலி said:

இரானை விட செத்தகிளியின் நிலைதான் பரிதாபம்!😂

அந்த ஆள் சண்டையில் சாகாது, நஞ்சூட்டிச் சாகாது.......... இது தெரிந்து தான் சாகப் போகுது...........🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஐயோ மாமா... போய்ட்டாரே ....

🤣🤣

"புதிய ஒழுங்கு" வீசுது....

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.