Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்!

October 8, 2024
WhatsApp-Image-2024-10-07-at-2.38.15-PM-

எனக்கு மதுபான சாலை இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். இது உண்மையென நிறுபிக்கப்படுமாகில் நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் திங்கள் கிழமை (07) மன்னார் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்.

அண்மை காலமாக ஜேவிபி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.

நான் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்ற வகையில் எங்கள் தமிழீழ இயக்கம் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்.

இப்பொழுது பொதுவாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச் சாட்டில் முன்னைய ஜனாதிபதி ரணில் அவர்களால் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபான சாலை வழங்கப்பட்டு வந்தன.

இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மதுபான சாலை பேர்மிட் பெற்றுள்ளனர் என்ற சந்தேக கண்கள் கொண்டு பார்க்கும் நிலை இருந்து வருகின்றது.

தமிழீழ இயக்கத்தில் இருக்கின்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இந்த மதுபான சாலை பேர்மிட் எடுக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து நிற்கின்றேன்.

மக்களுக்கு அநீதி விளைவிக்கும் எந்த செயல்பாட்டிலும் எமது இயக்கம் செயல்படாது என்பதை தெரிவித்து நிற்கின்றேன்.

என்னை பொறுத்த மட்டில் அரசியல் வாழ்க்கையில் தேசியத்தோடு பயணிக்கின்ற செயல்பாடாகவே நான் இருந்து வருகின்றேன்.

மதுபான சாலை பேர்மிட் வழங்கும் வேளையில் நாங்கள் இதை பெறுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்த ஈனச் செயலிலும் நாங்கள் இறங்க மாட்டோம்.

எனக்கு வவுனியாவில் மதுபான சாலை இருப்பதாகச் சொல்லுகின்றார்கள். இது உண்மைக்கு மாறான விடயம். இது நிறுபிக்கப்படுமாகில் நான் தேர்தலில் போட்டியிடும் நிலையிலிருந்து விலகி விடுவேன்.

இந்த ஊழல் சம்பந்தமான விடயத்தில் எமது தமிழீழ இயக்கத்தின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசியத்தை நேசித்து செயல்பட்டவர்கள்.

ஆயுதம் ஏந்தி போராடியவாகள் என்ற வகையில் நாங்கள் ஈனச் செயல்களை செய்யவில்லை செய்ய மாட்டோம் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

https://www.supeedsam.com/206574/

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நாங்கள் ஈனச் செயல்களை செய்யவில்லை செய்ய மாட்டோம் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அனேகமாக எல்லோரும் மதுபானசாலை அனுமதி பெறவில்லை என்று… தமது சுய விளக்கத்தையும், மறுப்பு அறிக்கையையும் வெளியிட்டு விட்டார்கள். 👍🏽 👏🏻
சுமந்திரனும், சாணக்கியனும் தான்… திருட்டு முழி முழித்துக் கொண்டு “பம்மிக்” கொண்டு இருக்கின்றார்கள். 😂
ஓறிஜினல் சாராய வியாபாரிகள்…. சுமந்திரனும், சாணக்கியனும் தான் போலுள்ளது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

அனேகமாக எல்லோரும் மதுபானசாலை அனுமதி பெறவில்லை என்று… தமது சுய விளக்கத்தையும், மறுப்பு அறிக்கையையும் வெளியிட்டு விட்டார்கள். 👍🏽 👏🏻
சுமந்திரனும், சாணக்கியனும் தான்… திருட்டு முழி முழித்துக் கொண்டு “பம்மிக்” கொண்டு இருக்கின்றார்கள். 😂
ஓறிஜினல் சாராய வியாபாரிகள்…. சுமந்திரனும், சாணக்கியனும் தான் போலுள்ளது. 🤣

சாராயப் அனுமதிஎடுத்து ஊழல் செய்யவேண்டிய தேவை சும்முக்கு இருக்காதென நினைக்கிறேன். அவர் புனித புனித அரசியல் செய்பவராச்சே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

சாராயப் அனுமதிஎடுத்து ஊழல் செய்யவேண்டிய தேவை சும்முக்கு இருக்காதென நினைக்கிறேன். அவர் புனித புனித அரசியல் செய்பவராச்சே.

சும்முக்கு, காசு வருகுது என்றால்..... புனிதமானது மண்ணாங்கட்டியாவது. 😂
எல்லாம்... திருட்டு கூட்டங்கள். 
இந்தத் தேர்தலுடன்... பின்னங்கால் பிடரியில் பட...  ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். 🤣 💪

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சும்முக்கு, காசு வருகுது என்றால்..... புனிதமானது மண்ணாங்கட்டியாவது. 😂
எல்லாம்... திருட்டு கூட்டங்கள். 
இந்தத் தேர்தலுடன்... பின்னங்கால் பிடரியில் பட...  ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். 🤣 💪

தமிழரசுக்கட்சியின் வலிமையை குறைத்து எடைபோட்டுக் கவலைப்பட வேண்டாம் என்று சும் எச்சரிக்கப்போறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nochchi said:

தமிழரசுக்கட்சியின் வலிமையை குறைத்து எடைபோட்டுக் கவலைப்பட வேண்டாம் என்று சும் எச்சரிக்கப்போறார்.

தமிழரசுக் கட்சியில் இருந்து.... முக்கியமான பலர் வெளியேறிக் கொண்டிருப்பத்தைத்தானே  தினமும் பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன.

தமிழரசுக் கட்சியில் இருந்த  தொண்டர்கள் ஏற்கெனவே  இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு கட்சிகளுக்கு சென்று விட்டார்கள். 
இப்போது அங்கு இருப்பது... சுமந்திரனின் செம்புகளும், அல்லக்கைகளும் மட்டுமே.

😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழரசுக் கட்சியில் இருந்து.... முக்கியமான பலர் வெளியேறிக் கொண்டிருப்பத்தைத்தானே  தினமும் பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன.

தமிழரசுக் கட்சியில் இருந்த  தொண்டர்கள் ஏற்கெனவே  இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு கட்சிகளுக்கு சென்று விட்டார்கள். 
இப்போது அங்கு இருப்பது... சுமந்திரனின் செம்புகளும், அல்லக்கைகளும் மட்டுமே.

😂 🤣

சிறிதரன்   ஒடமாட்டார்  அடித்து கலைத்தாலும். ஒடப்போவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தமிழரசுக் கட்சியில் இருந்து.... முக்கியமான பலர் வெளியேறிக் கொண்டிருப்பத்தைத்தானே  தினமும் பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன.

தமிழரசுக் கட்சியில் இருந்த  தொண்டர்கள் ஏற்கெனவே  இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு கட்சிகளுக்கு சென்று விட்டார்கள். 
இப்போது அங்கு இருப்பது... சுமந்திரனின் செம்புகளும், அல்லக்கைகளும் மட்டுமே.

😂 🤣

சிறி இதை எந்த பத்திரிகையில் பார்த்தீர்கள்?

நாங்க வீரகேசரி தினக்குரல் டெய்லிமிரரில் வந்தா தான் நம்புவோம்.

மற்றைய ஊடகங்களில் வருவதை நம்பக் கூடாது என்று நிழலியே சொல்லியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இதை எந்த பத்திரிகையில் பார்த்தீர்கள்?

நாங்க வீரகேசரி தினக்குரல் டெய்லிமிரரில் வந்தா தான் நம்புவோம்.

மற்றைய ஊடகங்களில் வருவதை நம்பக் கூடாது என்று நிழலியே சொல்லியிருந்தார்.

ஈழப்பிரியன்.... கீழே உள்ள ஐந்து செய்திகளும், கடந்த மூன்று நாட்களில் தமிழரசு கட்சியில் இருந்து விலகியவர்களின் தலைப்புடன்  யாழ். களத்தில் உள்ள செய்திகளே. நிலைமை படு மோசம் போல் தெரிகின்றது. தமிழரசு கட்சி சேடம் இழுக்கும் நிலைமைக்கு வந்து விட்டது.

 👇 👇 👇

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.... கீழே உள்ள ஐந்து செய்திகளும், கடந்த மூன்று நாட்களில் தமிழரசு கட்சியில் இருந்து விலகியவர்களின் தலைப்புடன்  யாழ். களத்தில் உள்ள செய்திகளே. நிலைமை படு மோசம் போல் தெரிகின்றது. தமிழரசு கட்சி சேடம் இழுக்கும் நிலைமைக்கு வந்து விட்டது.

இதைத் தான் நானும் சொல்கிறேன்.இங்கு சில் பத்திரிகைகளில் வந்தால்த் தான் உண்மையான செய்தி என்கிறார்களே?

அடுத்த மாதம் 14ம் திகதிவரை காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நானும் சொல்கிறேன்.இங்கு சில் பத்திரிகைகளில் வந்தால்த் தான் உண்மையான செய்தி என்கிறார்களே?

அடுத்த மாதம் 14ம் திகதிவரை காத்திருப்போம்.

🤣பிள்ளையில்லாத வீட்டில் வயசாளி துள்ளி விளையாடின மாதிரியாக இருக்கிறது உங்கள் சிறு பிள்ளைத் தனமான கருத்துக்கள்!

நிழலி எழுதியதை எல்லோரும் பார்த்தார்கள், அவர் சொன்னது "எல்லாப் பத்திரிகைகளிலும் இப்போது நம்பகத் தன்மையில்லாத செய்திகள் வருகின்றன, ஆனால் fact-check செய்வதால் செய்தியின் நம்பகத் தன்மையைப் பரிசோதித்து உண்மை அறியலாம்" என்று மட்டும் தான். அந்தக் கருத்தில், இதை விட மேலதிகமாக, ஏன் போலியான செய்திகளை நீங்கள் உண்மையென்று நிரூபிக்கப் பாடுபடுகிறீர்கள் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.

முக்கியமான அந்தக் கருத்தை ஒரு காதால் எடுத்து, மறு காதால் வெளியே அனுப்பி விட்டு,இங்கே வந்து ஒரு வசனத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ன தான் நோக்கம்😂?  

5 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி இதை எந்த பத்திரிகையில் பார்த்தீர்கள்?

நாங்க வீரகேசரி தினக்குரல் டெய்லிமிரரில் வந்தா தான் நம்புவோம்.

மற்றைய ஊடகங்களில் வருவதை நம்பக் கூடாது என்று நிழலியே சொல்லியிருந்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

🤣பிள்ளையில்லாத வீட்டில் வயசாளி துள்ளி விளையாடின மாதிரியாக இருக்கிறது உங்கள் சிறு பிள்ளைத் தனமான கருத்துக்கள்!

நிழலி எழுதியதை எல்லோரும் பார்த்தார்கள், அவர் சொன்னது "எல்லாப் பத்திரிகைகளிலும் இப்போது நம்பகத் தன்மையில்லாத செய்திகள் வருகின்றன, ஆனால் fact-check செய்வதால் செய்தியின் நம்பகத் தன்மையைப் பரிசோதித்து உண்மை அறியலாம்" என்று மட்டும் தான். அந்தக் கருத்தில், இதை விட மேலதிகமாக, ஏன் போலியான செய்திகளை நீங்கள் உண்மையென்று நிரூபிக்கப் பாடுபடுகிறீர்கள் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.

முக்கியமான அந்தக் கருத்தை ஒரு காதால் எடுத்து, மறு காதால் வெளியே அனுப்பி விட்டு,இங்கே வந்து ஒரு வசனத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ன தான் நோக்கம்😂?  

அன்றைய கருத்துக்கள் தான் இன்றைய தமிழரசின் நிலைக்கு காரணம்.

போகப் போக இன்னும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அன்றைய கருத்துக்கள் தான் இன்றைய தமிழரசின் நிலைக்கு காரணம்.

போகப் போக இன்னும் வரும்.

இது பதில் இல்லையே? ஏன் ஒரு கருத்தைத் திரித்து விளங்கிக் கொள்கிறீர்கள் என்று தான் கேட்டிருந்தேன். இப்படியே பொய் வதந்திகளையும், சதிக்கதைகளையும் நம்பிப் பட்டாசு கொழுத்திக் கொண்டிருந்தால், நவம்பர் 16 இற்குப் பின்னர் அனுர அணி வடக்கு கிழக்கில் கொண்டாடுவார்கள் பட்டாசு கொழுத்தி! சேடம் இழுப்பது தமிழரசு மட்டுமல்ல, தீவிர தேசிய பட்டாசு ரீமும் தான்😂!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

நவம்பர் 16 இற்குப் பின்னர் அனுர அணி வடக்கு கிழக்கில் கொண்டாடுவார்கள் பட்டாசு கொழுத்தி! சேடம் இழுப்பது தமிழரசு மட்டுமல்ல, தீவிர தேசிய பட்டாசு ரீமும் தான்😂!

விருப்பமில்லாவிட்டாலும் இதுதான் நடக்கப் போகுது

44 minutes ago, Justin said:

🤣பிள்ளையில்லாத வீட்டில் வயசாளி துள்ளி விளையாடின மாதிரியாக இருக்கிறது உங்கள் சிறு பிள்ளைத் தனமான கருத்துக்கள்!

நிழலி எழுதியதை எல்லோரும் பார்த்தார்கள், அவர் சொன்னது "எல்லாப் பத்திரிகைகளிலும் இப்போது நம்பகத் தன்மையில்லாத செய்திகள் வருகின்றன, ஆனால் fact-check செய்வதால் செய்தியின் நம்பகத் தன்மையைப் பரிசோதித்து உண்மை அறியலாம்" என்று மட்டும் தான். அந்தக் கருத்தில், இதை விட மேலதிகமாக, ஏன் போலியான செய்திகளை நீங்கள் உண்மையென்று நிரூபிக்கப் பாடுபடுகிறீர்கள் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.

முக்கியமான அந்தக் கருத்தை ஒரு காதால் எடுத்து, மறு காதால் வெளியே அனுப்பி விட்டு,இங்கே வந்து ஒரு வசனத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ன தான் நோக்கம்😂?  

 

அன்றைய தேர்தலில் ஏதோ சதித்திட்டங்கள் நடந்திருக்கின்றன என்பது உண்மை.

தேவாலய குண்டுவெடிப்புகள் இப்போது வெளிவருவது போல என்றாவது ஒருநாள் உண்மைகள் வெளிவரலாம்.

எல்லாம் சேரந்த கலவையே தமிழரசின் சேடம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

விருப்பமில்லாவிட்டாலும் இதுதான் நடக்கப் போகுது

அன்றைய தேர்தலில் ஏதோ சதித்திட்டங்கள் நடந்திருக்கின்றன என்பது உண்மை.

தேவாலய குண்டுவெடிப்புகள் இப்போது வெளிவருவது போல என்றாவது ஒருநாள் உண்மைகள் வெளிவரலாம்.

எல்லாம் சேரந்த கலவையே தமிழரசின் சேடம்.

நீண்ட நாள் யாழ் கள வாசகர் என்ற முறையில் உங்கள் ஆதங்கம் புரிகின்றது...நீங்கள் கூறுவதுதான் உண்மையும்...

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

நீண்ட நாள் யாழ் கள வாசகர் என்ற முறையில் உங்கள் ஆதங்கம் புரிகின்றது...நீங்கள் கூறுவதுதான் உண்மையும்...

புத்தன் ஆளுநர் மகேசன் சொல்வதை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்.

வேறு ஜனாதிபதி இந்தப் பதவியை ஏற்குமாறு கேட்டிருந்தால் ஏற்றிருக்க மாட்டேன் என்று சொல்வதன் அர்த்தம் என்ன?

ஏதோ ஒரு பெரிய அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

புத்தன் ஆளுநர் மகேசன் சொல்வதை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்.

வேறு ஜனாதிபதி இந்தப் பதவியை ஏற்குமாறு கேட்டிருந்தால் ஏற்றிருக்க மாட்டேன் என்று சொல்வதன் அர்த்தம் என்ன?

ஏதோ ஒரு பெரிய அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகவே தெரிகிறது.

இனப்பிரச்சனை இல்லாமல் போய்விட்டது போல் தெரிகின்றது. இலங்கையின் தலையாய பிரச்சனை ஊழல்பிரச்சனை என்பது போல் முடித்து விடுவார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இனப்பிரச்சனை இல்லாமல் போய்விட்டது போல் தெரிகின்றது. இலங்கையின் தலையாய பிரச்சனை ஊழல்பிரச்சனை என்பது போல் முடித்து விடுவார்களோ?

தேசியக் கட்சிகள் செய்தவேலை.

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் தெய்வ நம்பிக்கையுள்ள முன்னாள் இடதுசாரியோ .ஏதாவது அழுத்தம் இருந்திருக்கலாம்...பக்கத்தில் நிற்கும் தோழர் சந்திர சேகரத்தை கவனித்தீர்களா...விபூதி ,சந்தன தட்டை அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார் ...அவ்வளவு தீவிர இடது சாரியாம் ...நாளை இவர்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை

55 minutes ago, ஈழப்பிரியன் said:

புத்தன் ஆளுநர் மகேசன் சொல்வதை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்.

வேறு ஜனாதிபதி இந்தப் பதவியை ஏற்குமாறு கேட்டிருந்தால் ஏற்றிருக்க மாட்டேன் என்று சொல்வதன் அர்த்தம் என்ன?

ஏதோ ஒரு பெரிய அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகவே தெரிகிறது.

 

29 minutes ago, குமாரசாமி said:

இனப்பிரச்சனை இல்லாமல் போய்விட்டது போல் தெரிகின்றது. இலங்கையின் தலையாய பிரச்சனை ஊழல்பிரச்சனை என்பது போல் முடித்து விடுவார்களோ?

இவர் காலத்தில் போய்விட்டதாக படம் காட்டலாம் ஆனால் ஆட்சி இன்னும் 10வருடங்கள் தொடர வேணும் நிலைத்து நிற்குமா?நிலைத்து நிற்க பிக்குகள் மற்றும் ஏனைய சிங்கள எஜமானர்கள் விடுவார்களா?  ..

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, putthan said:

இவரும் தெய்வ நம்பிக்கையுள்ள முன்னாள் இடதுசாரியோ .ஏதாவது அழுத்தம் இருந்திருக்கலாம்...பக்கத்தில் நிற்கும் தோழர் சந்திர சேகரத்தை கவனித்தீர்களா...விபூதி ,சந்தன தட்டை அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார் ...அவ்வளவு தீவிர இடது சாரியாம் ...நாளை இவர்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை

நானும் கவனித்தேன்.

ஆனால்  அவரின் தலைவர் விழுந்து விழுந்து கும்பிட்டு கையில்நுhலும் கட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் கவனித்தேன்.

ஆனால்  அவரின் தலைவர் விழுந்து விழுந்து கும்பிட்டு கையில்நுhலும் கட்டுகிறார்.

அவரின்ட தோழர் (தலிவர்)சுழியன் பெளத்த அடையாளங்களை பாதுகாத்து சிறிலங்காவை பெளத்த நாடாக ஊழல் அற்ற நாடாக மாற்ற பாடுகிறார் ...அவரின்ட தமிழ் தோழர்கள் தமிழ்மொழியையும் அழித்து ,மத அடையாளங்களையும் அழிக்க தீயா வேலை செய்யினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.