Jump to content

ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்!

ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-

 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும், ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால், அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

மேலும், குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீர்க்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அண்மையில் சென்றிருந்தார். அவர் வெறுங்கையுடன்தான் அங்கு சென்றிருந்தார்.

எனினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளிவராத அறிக்கைகள் இரண்டை அவர், அங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்திருந்தேன். இனியும் தாமதிக்காமல், அந்த இரண்டு அறிக்கைகளையும் ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தோம்.

எனினும், அமைச்சரவைப் பேச்சாளரான விஜத ஹேரத், சில அறிக்கைகளின் பக்கங்கள் குறைவாக காணப்படுவதாகவும் சில அறிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இதுதொடர்பாக தாங்கள் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். அமைச்சரே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான எந்தவொரு அறிக்கையின் பங்கங்கள் குறைவடையவும் இல்லை, எந்தவொரு அறிக்கையும் காணாமல் போகவும் இல்லை என்பதை நாம் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.

அரசாங்கத்திற்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும், ஜனாதிபதியின் செயலகத்திற்கும் இந்த அறிக்கைகளை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், எம்மிடம் தற்போது அந்த இரண்டு அறிக்கைகளும் கிடைத்துள்ளன.

எனவே, ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் இதுவரை வெளியிடப்படாத, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இந்த இரண்டு விசாரணை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால், நாம் அந்த இரண்டு அறிக்கைகளையும் வெளியிடுவோம்” இவ்வாறு உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1404109

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நடவடிக்கை. உண்மை வெளியே வரவேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தது இந்தியா 

பயன்படுத்தப்பட்டவர்கள் தீவிர எண்ணம் கொண்ட இஸ்லாமியர்கள் 

காரணம் :1)

மிதவாத மைத்திரி - ரணில் அரசு தமிழரசுக் கட்சியோடு நடத்திய பேச்சிக்களில் இணக்கம் ஏற்பட்டு தேசிய இனபிரச்னை ஒரு முடிவுக்கு வந்து விடுமோ என்ற பயம் அதனால் கடும் இனவாத கோத்தபாயா அரசை கொண்டு வரும் உபாயம். அப்பொழுது நாட்டுப் பிரச்னை தீராது என்ற விருப்பம், இதனால் தீவிர தமிழ் உணர்வையும் எழுப்பி விடலாம். பிரச்சனை மேலும் தொடர வைக்கப்படும் 

2) தமிழர் முக்கியமாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இஸ்லாமிய விரோதத்தை வளர்த்தல் 

3) இலங்கையில் ஹிந்துத்துவ கொள்கையை வளர்க்க ஏற்ற சூழலை ஏற்படுத்துதல் 

3) இந்தியாவில் இஸ்லாமிய விரோத மனப்பான்மையை இன்னும் கூர்மைப் படுத்துதல் 

குண்டு வெடிப்பு நடந்து சில வாரங்களில் இன்னொரு குண்டு வெடிப்புக்கு இந்தியா திட்டமிட்டது என்று ஊகிக்கின்றேன்,இங்கிலாந்து அதை வெளியே இந்தியா என்று சொல்லாமல் இலங்கையில் இன்னொரு குண்டு வெடிக்கலாம் என்று சொன்னதும் அது நாடாத்தப்படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கைகளை மூன்று நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும்; கம்மன்பிலவுக்கு அரசு காலக்கெடு

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்னமும் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஒரு வாரகாலத்திற்குள் அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் இல்லாவிட்டால் அவற்றை இணையவழியில் தான் வெளியிடப்போவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அறிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அறிக்கைகள் எவையும் காணாமல்போகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/310761

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கைகளை மூன்று நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும்; கம்மன்பிலவுக்கு அரசு காலக்கெடு

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்னமும் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஒரு வாரகாலத்திற்குள் அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் இல்லாவிட்டால் அவற்றை இணையவழியில் தான் வெளியிடப்போவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அறிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அறிக்கைகள் எவையும் காணாமல்போகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/310761

 

வாயைக் கொடுத்து பின்பக்கத்தை பழுதாக்கியுள்ளார்.

இவ்வளவு காலமும் சகல உண்மைகளும் தெரிந்திருந்தும் கொலைகாரருடன் சேர்ந்து கூடிக்கும்மாளம் அடித்துள்ளார்.

Link to comment
Share on other sites


 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி உண்மையை வௌிப்படுத்துவோம் - விஜித ஹேரத்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

 

வாயைக் கொடுத்து பின்பக்கத்தை பழுதாக்கியுள்ளார்.

இவ்வளவு காலமும் சகல உண்மைகளும் தெரிந்திருந்தும் கொலைகாரருடன் சேர்ந்து கூடிக்கும்மாளம் அடித்துள்ளார்.

தவளையும் தன் வாயால் கெடும்.
அதுகும் மூன்று நாட்களுக்குள் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கும் படி குறுகிய கால கெடுவை… அரசாங்கம் விதித்துள்ளது.
மாட்டிக் கிட்டாரு மைனரு… 😂 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுரவின் புலனாய்வு பிரிவின் முக்கிய நியமனத்தால் கலக்கத்தில் பலர் .

கடந்த அரசுகளால் பல் நெருக்குவாரங்களுக்கு உள்ளான பலர் இப்போது நாடு திரும்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ 

தொலைந்து போயிற்று கொஞ்சம் பக்கங்களை காணோம் என்று....

யார் பொய் சொல்கிறார்கள்??

ஜனாதிபதி?

அமைச்சர்?

எதிர்கட்சி??

அல்லது எல்லோரும்???

தேர்தலுக்கு முன்னர் தெரியவந்தால் பல முகங்கள் கோணலாகும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இப்போ 

தொலைந்து போயிற்று கொஞ்சம் பக்கங்களை காணோம் என்று....

யார் பொய் சொல்கிறார்கள்??

ஜனாதிபதி?

அமைச்சர்?

எதிர்கட்சி??

அல்லது எல்லோரும்???

தேர்தலுக்கு முன்னர் தெரியவந்தால் பல முகங்கள் கோணலாகும்....

வெளிநாடு போன முக்கிய சாட்சிகள் பலர் நாடு திரும்புகிறார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

463435824_949183580579948_47550237915593

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்தால் அவற்றை கையளிப்பேன் - உதயகம்மன்பில

image

அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடுவதாக உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் தன்னிடமுள்ள இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் கையளிக்க தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

என்னிடமுள்ள அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசாங்கம் பகிரங்கப்படுத்தாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியோ அமைச்சரவை பேச்சாளரோ நான் வழங்கும் அறிக்கைகளை வெளியிடுவோம் என உறுதியளிக்கும் வரை நான் அரசாங்கத்திடம் அவற்றை கையளிக்க தயாரில்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நான் வேண்டுகோள் விடுத்தபடி ஏழுநாட்களிற்குள் அறிக்கைகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் நான் அவற்றை இணையத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன், என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196441

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

அவற்றை இணையத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன், என அவர் தெரிவித்துள்ளார்

இவரும் எங்களை போல இணைய போராளி போலகிடக்கு 😅

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2024 at 09:55, விசுகு said:

இப்போ 

தொலைந்து போயிற்று கொஞ்சம் பக்கங்களை காணோம் என்று....

யார் பொய் சொல்கிறார்கள்??

ஜனாதிபதி?

அமைச்சர்?

எதிர்கட்சி??

அல்லது எல்லோரும்???

தேர்தலுக்கு முன்னர் தெரியவந்தால் பல முகங்கள் கோணலாகும்....

விசுகர் இன்னுமா இதுகளை நம்புறியள்.....நம்புவது நம்மடை யாழ்ப்பாணீஸ்...சிங்கள்வன் ..முசுலீமல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடுவதாக உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் தன்னிடமுள்ள இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் கையளிக்க தயார்

அப்போ, இதுவரை இதை திருடி ஒளித்து வைத்திருந்தவர் இவர்தானா? தெரியாமல் மாட்டிக்கினார். இவரை துணிந்து கைது செய்து விசாரணை செய்யலாம். தானாகவே  துணிந்து சாட்சியமளித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

463831508_949974033834236_82716151648595

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகள் உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும் - நிமல் லான்சா

image

எம்.மனோசித்ரா

கத்தோலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க மக்களை ஏமாற்றாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருந்தால் அவை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

நீர்கொழும்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகவும் உணர்ச்சிகரமான விடயமாகும். எனவே அந்த தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையும் கத்தோலிக்க மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது நாடகம் அல்ல. கத்தோலிக்க மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை நம்புகின்றனர். எனவே அந்த நம்பிக்கையை அவர் பாதுகாக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது. 

ஆனால், அவர் பதவியேற்ற பின்னர், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. நல்லாட்சியின்போதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டது.

ஊதிய முரண்பாடுகளைக் களைய குழுக்கள் நியமிக்கப்பட்டன. பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. ஆனால் தற்போது தாம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறவில்லை என்று அவர்கள் மறுக்கின்றனர். 

சுமார் 80 சதவீத அரச ஊழியர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். எனவே அவர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றக்கூடாது என்றார். 

https://www.virakesari.lk/article/196511

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சில கருத்துக்கள் வேறு வேறு பெயரில், வசனநடை, பொருள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன, பதியப்படுகின்றன. ஒரே கருத்து பலபெயரிலா? அல்லது பல பெயரில் ஒருவரா?
    • 15 பிளாஸ்ரிக் கதிரைகளுடன் ஒரு மேசையும் இலவசமாக கிடைக்கும். 😂 “ஆ”வெண்டு பார்த்துக் கொண்டு இருங்கோ… சுமந்திரன். 🤣 நீங்கள் செய்யிற வேலைக்கு 15 🩴செருப்படிதான் கிடைக்கும்.    வாங்க ரெடியாய் இருங்கோ. 😂
    • இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு கடந்த சில வருடங்களாக பெருமளவு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குள் வருவதால் இத்தாலி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. 2023 ம் ஆண்டில் ஏறக்குறைய 160,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் மட்டும் பயணித்து இத்தாலிக்குள் நுளைந்திருக்கிறார்கள். இவர்களது கடல் பயணம் மிக மிக ஆபத்தானதாக இருந்த போதிலும் பல ஆயிரக் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலி நோக்கி தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க, பல மாதங்களாக  ஒத்தி வைக்கப் பட்டுக் கொண்டிருந்த  புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான திட்டம் ஒன்றை இத்தாலி இப்பொழுது நடைமுறைப் படுத்தத் தொடங்கியிருக்கிறது. மத்தியதரைக் கடல் ஊடாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை, அல்பேனியா நாட்டில் அமைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறப்பு முகாமுக்கு அனுப்பி அங்கே வைத்துப் பராமரிப்பது என்பதே அந்தத் திட்டம். கடந்த திங்கட்கிழமை படகொன்றின் மூலம் இத்தாலிக்குள் நுளைய முயன்ற எகிப்து, பங்களாதேஷைச் சேர்ந்த பதினாறு ஆண்கள் இப்பொழுது அல்பேனியா நாட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அந்த முகாமுக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளார்கள். இந்த முகாமில் ஆண்கள் மட்டுமே பராமரிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள் இத்தாலியிலேயிலேயே தங்க வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாவார்கள். அல்பேனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த முகாமுக்குக் கொண்டு வரப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களது விண்ணப்பங்கள் ஒரு மாதத்துக்குள் பரிசீலிக்கப்பட்டு, புகலிடம் பெறத் தகுதியுடையவர்கள் இத்தாலிக்கு அனுப்பப் படுவார்கள். நிராகரிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு அல்பேனியாவில் இருந்து உடனடியாகத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த வருடம் மே  மாதத்தில். இரண்டு முகாம்களை அல்பேர்னியாவில் அமைப்பது என்று இத்தாலி முடிவெடுத்திருந்தது. ஆனால் தொழில்நுட்பப்  பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு போன்ற சிக்கல்கள் காரணமாக முதலில் ஒரு முகாமை மட்டும் அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.  அல்பேனிய நாட்டில் அமைக்கப்பட்டாலும் இந்த முகாமை இத்தாலியே நிர்வகிக்கிறது. இதற்கான செலவாக, தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு 670 மில்லியன் யூரோக்கள் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடொன்றின் முகாமுக்குக் கொண்டு சென்று, அங்கு வைத்துப் பராமரிக்கும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இத்தாலி மிளிர்கிறது. இத்தாலியைத் தொடர்ந்து யேர்மனி, பிரான்ஸ் நாடுகளும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே வைத்து பராமரிக்க முன்வரலாம்.   (செய்தியின் பிழிவு இங்கே இருந்து எடுக்கப்பட்ட்டது) https://www.zdf.de/nachrichten/politik/ausland/eu-migration-italien-albanien-lager-100.html    
    • இந்திய றோ மற்றும் RSS வழி நடத்தலில் கோமிய கூட்டில் பக்கா தாயக தமிழ் தேசிய வியாபாரி சுமந்திரன் என்பது தெளிவாக தெரிந்து விட்டது…  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.