Jump to content

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image

பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.ம. ச. வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் தெரிவித்துள்ளார்.

இது தனது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க   ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையும் இது தொடர்பில் தமது இணக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் திங்கட்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது:

ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் 

இணைந்து போட்டியிடுகிறது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகின்றோம். அதன் மூலம் மேலும் 04 பாராளுமன்ற  ஆசனங்களைப் பெறுவதே எமது நோக்கமாகும்.

பாராளுமன்ற தேர்தல். ஜனாதிபதி தேர்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. விகிதாசார வாக்கு முறை நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் நான்கு ஜனாதிபதித் தேர்தல்களில் மாத்திரமே ஜனாதிபதியாக வெற்றி பெற்ற கட்சி பொதுத் தேர்தலில் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனது.

தேசிய மக்கள் சக்தி இம்முறையும் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெறாது என்பதை திண்ணமாக கூறலாம்  

தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளருக்கான பட்டியலைப் பார்க்கும்போது, மக்களுக்குத் தெரிந்த பிரபல அரசியல் பிரமுகர்கள் குறைவு. மேலும் பாராளுமன்றம் என்பது அதுவொரு  விளையாட்டுக் கூடம் அல்ல. திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

தேசிய மக்கள் சத்தியின்  வேட்பாளர் பட்டியலில் பாரிய  குறைபாடுகள் உள்ளன. பொதுத் தேர்தலில் யார் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

நாட்டின் ஜனநாயகம் வலுவாக இருக்க வலுவான எதிர்க்கட்சி அவசியம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆட்சியாளர்கள் நாட்டை திவாலாக்கியதை நாம் அனைவரும் அறிவோம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை கவனமாக பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

கண்டியில் இருந்து ஐக்கிய மக்கள்  கூடடணிக்கு  07 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காகும். கடந்த குறுகிய காலத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதுமட்டுமன்றி, பொதுத் தேர்தலிலும் வாக்குறுதிகள்அள்ளி வீசப்படுகின்றன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டது. இது குறித்து நான் பாராளுமன்றத்தில் பேசினேன்.

மேலும் இது குறித்து தற்போதைய ஜனாதிபதியும் நினைவுபடுத்தியுள்ளார் இது தொடர்பில் வெளியாகியுள்ள உண்மைகளின் அடிப்படையில் சட்டமா அதிபருக்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

https://www.virakesari.lk/article/196397

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

image

பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.ம. ச. வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் தெரிவித்துள்ளார்.

இது தனது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க   ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையும் இது தொடர்பில் தமது இணக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் திங்கட்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது:

ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் 

இணைந்து போட்டியிடுகிறது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகின்றோம். அதன் மூலம் மேலும் 04 பாராளுமன்ற  ஆசனங்களைப் பெறுவதே எமது நோக்கமாகும்.

பாராளுமன்ற தேர்தல். ஜனாதிபதி தேர்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. விகிதாசார வாக்கு முறை நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் நான்கு ஜனாதிபதித் தேர்தல்களில் மாத்திரமே ஜனாதிபதியாக வெற்றி பெற்ற கட்சி பொதுத் தேர்தலில் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனது.

தேசிய மக்கள் சக்தி இம்முறையும் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெறாது என்பதை திண்ணமாக கூறலாம்  

தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளருக்கான பட்டியலைப் பார்க்கும்போது, மக்களுக்குத் தெரிந்த பிரபல அரசியல் பிரமுகர்கள் குறைவு. மேலும் பாராளுமன்றம் என்பது அதுவொரு  விளையாட்டுக் கூடம் அல்ல. திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

தேசிய மக்கள் சத்தியின்  வேட்பாளர் பட்டியலில் பாரிய  குறைபாடுகள் உள்ளன. பொதுத் தேர்தலில் யார் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

நாட்டின் ஜனநாயகம் வலுவாக இருக்க வலுவான எதிர்க்கட்சி அவசியம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆட்சியாளர்கள் நாட்டை திவாலாக்கியதை நாம் அனைவரும் அறிவோம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை கவனமாக பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

கண்டியில் இருந்து ஐக்கிய மக்கள்  கூடடணிக்கு  07 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காகும். கடந்த குறுகிய காலத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதுமட்டுமன்றி, பொதுத் தேர்தலிலும் வாக்குறுதிகள்அள்ளி வீசப்படுகின்றன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டது. இது குறித்து நான் பாராளுமன்றத்தில் பேசினேன்.

மேலும் இது குறித்து தற்போதைய ஜனாதிபதியும் நினைவுபடுத்தியுள்ளார் இது தொடர்பில் வெளியாகியுள்ள உண்மைகளின் அடிப்படையில் சட்டமா அதிபருக்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

https://www.virakesari.lk/article/196397

அமைச்சராக ஏலாது என்று பயம் வந்திட்டுதோ

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

 

🤨..........

உங்களின் 'திறமையும் அனுபவமும்' வேண்டாம், போதும் என்றல்லோ மக்கள் சொல்கின்றார்கள்..........

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.ம. ச. வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் தெரிவித்துள்ளார்.

முதலில் தேர்தலில் வெல்லப் பாருங்கள்.

கடந்த தேர்தலின் போது மேடைகளில் மக்கள் முட்டி மோதினார்களே மறக்கலையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரசோதரன் said:

🤨..........

உங்களின் 'திறமையும் அனுபவமும்' வேண்டாம், போதும் என்றல்லோ மக்கள் சொல்கின்றார்கள்..........

எல்லாவற்றையும் கிளறினால் இவரும் உள்ளே செல்ல வேண்டி ஏற்படுமோ,..😁

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் நகர மேயர் பலி இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் லெபனான் மேயர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானின் நபாதிஹ் என்ற நகரத்தின் மேயரே கொல்லப்பட்டுள்ளார். மாநகரசபை கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/196461
    • 2026 ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக ஹட்ரிக் கோல் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிக்கான இந்த ஆட்டம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அண்மையில் அணிக்கு திரும்பினார். இதில் 19, 84, 86 ஆகிய நிமிடங்களில் மெஸ்ஸி கோல் பதிவு செய்தார். சக அணி வீரர்கள் 2 கோல்கள் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து அவர் உதவினார். அதன் மூலம் தனது அபார ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இதில் மெஸ்ஸி பதிவு செய்த இரண்டாவது கோல் கிளாசிக் ரகம். பந்தை டிரிபிள் செய்து இடது காலில் இருந்து வலது காலுக்கு மாற்றி அதனை கோல் கம்பத்தின் வலது பக்கமாக (கீழ்புறம்) தள்ளி கோல் பதிவு செய்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் மூன்றாவது கோலை அவர் பதிவு செய்தார். அர்ஜெண்டினாவின் மார்டினஸ், அல்வரஸ் மற்றும் தியாகோ ஆகியோரும் 45, 45(+3), 69-வது நிமிடங்களில் கோல் பதிவு செய்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 10 அணிகள் அடங்கிய தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் 10 போட்டிகளில் விளையாடி 22 புள்ளிகளை அர்ஜெண்டினா பெற்றுள்ளது. இதன் மூலம் பட்டியலில் அந்த அணி முதலிடத்தில் உள்ளது. அர்ஜெண்டினா நடப்பு உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. https://thinakkural.lk/article/310824
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெப்பக் காற்று தொடர்ந்து கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும் கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் புயல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்வோம். கடலில் உள்ள வெப்பக் காற்று தான் புயலாக மாறுகிறது என்பது புயலுக்கான ஒற்றை வரி விளக்கமாகும். கடலில் உள்ள வெப்பமான ஈரப்பதம் கொண்ட காற்று கடல் பரப்புக்கு மேல் எழும்பும். அப்படி வெப்பக் காற்று மேல் எழும்பும் போது, அதன் கீழே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். சுற்றியுள்ள அதிக காற்றழுத்தம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்குள் நகரும். இந்தப் பகுதிக்குள் வந்த பிறகு, இந்தக் காற்றும் வெப்பமடைந்து மேல் எழும்பும். இப்படித் தொடர்ந்து வெப்பக்காற்று மேலெழும்பும் போது அது மேகங்களாக மாறும். மேகங்களும் காற்றும் சுழலத் தொடங்கும். கடலிலிருந்து மேல் எழும்பும் வெப்பக் காற்று அந்தச் சுழற்சிக்குத் தொடர் உந்துதலாக இருக்கும். இதுவே புயல் எனப்படுகிறது. தொடர்ந்து வெப்பக் காற்று கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும். எனவே தான் புயல் நிலத்தை அடைந்த பிறகு, அது முற்றிலும் ஓய்ந்து விடுகிறது. புயல் வெவ்வேறு கடல் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீனக் கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் 'டைஃபூன்' எனவும், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் 'ஹரிக்கேன்' எனவும், தெற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் 'டோர்னடோ' எனவும், வட மேற்கு ஆஸ்திரேலியாவில் 'வில்லி-வில்லிஸ்' எனவும் அழைக்கப்படுகிறது. புயலின் வகைகள் புயல்கள் பெரும்பாலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை வெப்ப மண்டலப் (tropical) புயல்கள் மற்றும் வெப்ப மண்டலச் சேய்மை (extra tropical) எனப்படும். வெப்ப மண்டலப் புயல் என்பது கடக ரேகை (tropic of cancer) மற்றும் மகர ரேகைக்கு (tropic of Capricorn) இடையில் உருவாகக்கூடியது ஆகும். காற்றின் வேகம் மணிக்கு 63கி.மீ வேகத்தை விட அதிகம் கொண்டதாக இருக்கும். இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் இந்த வகையைச் சார்ந்ததாகும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்குகிறது. வெப்ப மண்டலச் சேய்மைப் புயல்கள் மிதமான வெப்பம் இருக்கும் மண்டலங்களில் உருவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனக் கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் புயலை, டைஃபூன் என அழைக்கிறார்கள் புயலின் தீவிரம் இந்தியாவில், காற்றின் வலிமை, மழைப்பொழிவு, புயலின் எழுச்சி ஆகியவற்றைக் கொண்டு புயல் எவ்வளவு வீரியமானது என வகைப்படுத்தப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 31கி.மீ-க்கு கீழ் இருந்தால் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எனப்படும். காற்றின் வேகம் 31கி.மீ முதல் 49கி.மீ வரை இருந்தால் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று வகைக்கப்படுத்தப்படுகிறது. மணிக்கு 49 கி.மீ முதல் 61 கி.மீ வரை காற்றின் வேகம் இருந்தால் அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகியுள்ளது என்று அர்த்தம் அடுத்த நிலை, அதாவது மணிக்கு 61கி.மீ முதல் 88கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்போது அது புயல் என்றழைக்கப்படும். அதை விடவும் காற்றின் வேகம் அதிகமாக, மணிக்கு 88கி.மீ முதல் 117கி.மீ வரை இருந்தால், தீவிர புயல் என்றழைக்கப்படும். அந்த வேகத்தையும் விட அதிகமாக இருக்கும் புயல்கள் சூப்பர் புயல்கள் என்று அழைக்கப்படுகின்றன. புயல் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்து ஒன்று முதல் ஐந்து வரை இந்தியாவில் வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்று – குறைந்த சேதம் இரண்டு – மிதமான சேதம் மூன்று – பரவலான சேதம் நான்கு – தீவிர சேதம் ஐந்து – மிக மோசமான சேதம்   புயலின் பாகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019இல் இந்தியாவை நோக்கி வரும் ஃபானி புயல் (கோப்புப் படம்) புயலுக்கு மூன்று பாகங்கள் உள்ளன. நடுப்பகுதி - மேலே திரண்டிருக்கும் மேகங்கள் சுழல ஆரம்பிக்கும் போது அதிலுள்ள கடினமான பகுதிகள் ஓரத்திற்கு சென்றுவிடும். எனவே நடுப்பகுதி காலியாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் செண்ட்ரிஃபியூகல் (centrifugal) என்று சொல்வார்கள். இது தான் புயலின் 'கண்' பகுதி எனப்படும். இது வட்டமாக, நீள்வட்டமாக, அல்லது ஒரே மையத்தைக் கொண்ட அடுத்தடுத்து அடுக்குகளாக இருக்கும். இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்கள் அடுத்தடுத்த அடுக்குகள் கொண்டதாக இருக்கும். இதைச் சுற்றியுள்ள பகுதி ‘eye wall’ எனப்படும் பகுதி அதிவேகக் காற்றைக் கொண்டதாகும். இதுவே புயலின் மிகவும் முக்கிய மற்றும் ஆபத்தான பகுதி. இந்தப் பகுதி கரையை கடக்கும் போது தான் அதிகனமழை, சூறைக்காற்று உருவாகும். இதற்கும் வெளியே இருக்கும் பகுதி மேகக்கூட்டங்களால் ஆனது. இவற்றால் மிதமானது முதல் கனமழை வரை பெய்யலாம். இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் அதிநவீன 'தாட்' வான் பாதுகாப்பு கவசம் - எவ்வாறு செயல்படும்?16 அக்டோபர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்களின் படி, தமிழகத்தின் வடக்குப் பகுதியிலேயே அதிக புயல்கள் ஏற்பட்டுள்ளன தென்னிந்தியாவில் புயல்கள் தென்னிந்தியாவில் புயல்கள் வங்கக் கடல் அல்லது அரபிக் கடலில் பருவமழை மாற்றங்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை பொருத்து உருவாகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் வங்கக் கடலில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரம் அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் அதிகரித்துள்ளன. போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகளில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஒரு தசாப்தத்தில் 50.5% புயல்கள் உருவாகின்றன என்று இந்த ஆய்வு கூறுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் 49.8% புயல்களும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 28.9% புயல்களும் உருவாகின என்றும் இந்த தரவுகள் தெரிவிக்கின்றன. 2001-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அரபிக் கடலில் தீவிர புயல்கள் அதிகமாக உருவாகத் துவங்கியுள்ளன. வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே அரபிக் கடலில் உருவாகி வந்த நிலையில், 20 ஆண்டுகளில், புயல்கள் அதிகமாகியுள்ளன. வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையில் நான்கில் இரண்டு பகுதி அரபிக் கடலில் உருவாகிறது. அதே நேரம் வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியுள்ள புயல் பாதிக்கும் இடங்கள் குறித்த வரைபடக் குறிப்பில், இந்தியாவில் கிழக்குக் கடற்கரையோரத்தில் புயலால் பாதிப்படையக்கூடிய நான்கு மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தைக் குறிப்பிடுகிறது. 1891 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்களின் படி, தமிழகத்தின் வடக்குப் பகுதியிலேயே அதிக புயல்கள் ஏற்பட்டுள்ளன. இதற்குத் தமிழகத்தின் பூகோள அமைப்பு ஒரு காரணமாகும். வங்கக் கடலில் உருவாகும் புயல்கள், தமிழகத்துக்குத் தென்கிழக்கே அமைந்திருக்கும் இலங்கையின் காரணமாக வடக்கு நோக்கி திருப்பப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz04zmdpez9o
    • (தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு:    #AKD தீர்வு தருவார் என அடித்து விடும் அண்டிப்பிழைக்கும் கூட்டத்துக்கும் அதை நம்பும் அப்பாவிகளுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம் https://www.facebook.com/share/v/jrtts7xcA7uBaY37/
    • சின்ராசு.....  நம்ம தமிழ் தேசிய அரசியல் இம்புட்டு நாறு நாறும்னு நான் கனவுல கூட நெனைக்கல்ல 😢
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.