Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் நடத்திய போராட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டமானது இன்று (17) சாவகச்சேரி நகரசபை முன்னால் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது.

பிரதான நுழைவாயிலை பூட்டி 

கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது.

யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம் | Protest Front Of Chavakachcheri Urban Council

இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக்கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த சாவகச்சேரி காவல்துறையினர் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை கலைக்க முற்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோத முயற்சி

 

இதனால் நுழைவாயிலில் அமர்ந்தவாறு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம் | Protest Front Of Chavakachcheri Urban Council

இத்தருணத்தில் நகரசபை வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி கழிவகற்றும் உழவியந்திரத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோத முயற்சித்ததோடு அதை வீடியோ எடுத்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார்.

இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேவேளை, குறித்த கேள்வி கோரலை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம் - ஐபிசி தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சனாவுக்கும் ..அவர்சார்ந்த யூ டுயூபர்ஸ்க்கும் ஒரு தீன் கிடைத்துவிட்டது...அதோடை நம்ம யாழுக்கும்தான்

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் போராட்டம்!

17 DEC, 2024 | 04:17 PM
image
 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும்  சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை  (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக  பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது.  

கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு  புதிய கடைத் தொகுதியில்  முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக்கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.  

இதன்போது  போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து,  அங்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை கலைக்க முற்பட்டனர். இதனால்  நுழைவாயிலில் அமர்ந்தவாறு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இத்தருணத்தில் நகரசபை  வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி கழிவகற்றும் உழவியந்திரத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  மீது மோத முயற்சித்ததோடு அதை வீடியோ எடுத்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார். இதனால்  அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இதேவேளை, குறித்த கேள்வி கோரலை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு  உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

IMG-20241217-WA0090.jpg

IMG-20241217-WA0091.jpg

IMG-20241217-WA0109.jpg

https://www.virakesari.lk/article/201512

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு  புதிய கடைத் தொகுதியில்  முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது.  

நிஞாயமான போராட்டம் போல இருக்கிறது.

முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழி வாய் மூலமா? எழுத்து மூலமா?

பிரபல சட்டத்தரணி @goshan_che  உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_7908.jpeg.79543bd277f99c8be0ab

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நிஞாயமான போராட்டம் போல இருக்கிறது.

முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழி வாய் மூலமா? எழுத்து மூலமா?

பிரபல சட்டத்தரணி @goshan_che  உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறார்.

பிரபல டவாலி கோசானின் கருத்துப்படி…

ஒப்பந்தங்கள் வாய்மூல ஒப்பந்தங்களாகவும் இருக்கலாம்.

அதே போல் இந்த உறுதிமொழியும் வாய்மூலமாக இருப்பினும் அது அமல்படுத்தபடலாம்…ஆனால் அது தகுந்த அதிகாரியால் கொடுக்கப்பட்டதா, அந்த அதிகாரம் அவருக்கு இருந்ததா, இதனால் சபைக்கு வியாபாரிகள் கொடுத்த அனுகூலம் என்ன உட்பட பல விடயங்கள், சூழமைவு தெரிந்த பின்பே இது செல்லும், செல்லாது என சொல்ல முடியும்.

7 hours ago, ஏராளன் said:

விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும்

இது முன்னர் இருந்த நடைமுறையாயி இப்போ இதை ஏன் கைவிட்டனர் என்பதை சபை விளக்க வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

அர்ச்சனாவுக்கும் ..அவர்சார்ந்த யூ டுயூபர்ஸ்க்கும் ஒரு தீன் கிடைத்துவிட்டது...அதோடை நம்ம யாழுக்கும்தான்

யூ டியுப்பர்கள் என்ன தலையங்கம் போடுவார்கள் ?
1)அர்ஜூனா அதிரடி விஜயம்..வைத்தார் வெடி பூட்டுக்கு...
2)அர்ஜூனாவின் ...சுவினால் அதிர்ந்தது நகராட்சி
3)அர்ஜூனா வைத்தர்ர் ஆப்பு தமிழ்தேசிய வாதிகளுக்கு
4)அர்ஜுனாவின் படை தளபதி கெளசல்யாவின் தலமையில் முற்றுகை
5) திணறுகின்றனர் சாவகச்சேரி மக்கள் அர்ஜூனாவின் காலில் விழ... 😅

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

யூ டியுப்பர்கள் என்ன தலையங்கம் போடுவார்கள் ?
1)அர்ஜூனா அதிரடி விஜயம்..வைத்தார் வெடி பூட்டுக்கு...
2)அர்ஜூனாவின் ...சுவினால் அதிர்ந்தது நகராட்சி
3)அர்ஜூனா வைத்தர்ர் ஆப்பு தமிழ்தேசிய வாதிகளுக்கு
4)அர்ஜுனாவின் படை தளபதி கெளசல்யாவின் தலமையில் முற்றுகை
5) திணறுகின்றனர் சாவகச்சேரி மக்கள் அர்ஜூனாவின் காலில் விழ... 😅

சூப்பர்..தலைப்புக்கள்...இது காணும்...ஒரு சின்ன இடைச்செருகலை  செலுத்தி...இன்னும் ஐந்து போட...எதுக்கும் இந்த தலைபுக்களுக்கு காப்புரிமை எடுத்து வையுங்கோ...

அதிர்ந்தது ஜாவாகச்சேரி....அதிரடியாக நுழைந்த அர்ச்சனா காரைச் சுற்றி மக்கள்   கண்ணீர்..

மக்கள் வெள்ளத்தை கண் ட அர்ச்சனா...தங்கத்தை தழுவி...பாதுகாப்பாக அணைத்துச் சென்றார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீர விசாரித்துப் பாருங்கள், அந்த உறுதி மொழி யாராவது முன்னாள் அரசியல்வாதியினால் கொடுக்கப்பட்டிருக்கும். 

Edited by RishiK

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பிரபல டவாலி கோசானின் கருத்துப்படி…

ஒப்பந்தங்கள் வாய்மூல ஒப்பந்தங்களாகவும் இருக்கலாம்.

அதே போல் இந்த உறுதிமொழியும் வாய்மூலமாக இருப்பினும் அது அமல்படுத்தபடலாம்…ஆனால் அது தகுந்த அதிகாரியால் கொடுக்கப்பட்டதா, அந்த அதிகாரம் அவருக்கு இருந்ததா, இதனால் சபைக்கு வியாபாரிகள் கொடுத்த அனுகூலம் என்ன உட்பட பல விடயங்கள், சூழமைவு தெரிந்த பின்பே இது செல்லும், செல்லாது என சொல்ல முடியும்.

இது முன்னர் இருந்த நடைமுறையாயி இப்போ இதை ஏன் கைவிட்டனர் என்பதை சபை விளக்க வேண்டி வரும்.

தகவலுக்கு நன்றி கோசான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

யூ டியுப்பர்கள் என்ன தலையங்கம் போடுவார்கள் ?
1)அர்ஜூனா அதிரடி விஜயம்..வைத்தார் வெடி பூட்டுக்கு...
2)அர்ஜூனாவின் ...சுவினால் அதிர்ந்தது நகராட்சி
3)அர்ஜூனா வைத்தர்ர் ஆப்பு தமிழ்தேசிய வாதிகளுக்கு
4)அர்ஜுனாவின் படை தளபதி கெளசல்யாவின் தலமையில் முற்றுகை
5) திணறுகின்றனர் சாவகச்சேரி மக்கள் அர்ஜூனாவின் காலில் விழ... 😅

பிழையான செய்தி என்று யு டுப் காரங்களுக்கு ரிப்போர்ட் அவ்வளவுதான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, பெருமாள் said:

பிழையான செய்தி என்று யு டுப் காரங்களுக்கு ரிப்போர்ட் அவ்வளவுதான் .

இனி வரும் காலங்களில் அதுதான் நடக்கும் போல் இருக்கின்றது.


தொல்லையை விட வடபகுதி யூரியூப் ஆளுனர்களில் தொல்லை தாங்க முடியவில்லை. பொய் செய்திகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

அர்ச்சனாவுக்கும் ..அவர்சார்ந்த யூ டுயூபர்ஸ்க்கும் ஒரு தீன் கிடைத்துவிட்டது...அதோடை நம்ம யாழுக்கும்தான்

 

13 hours ago, ஏராளன் said:

கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு  புதிய கடைத் தொகுதியில்  முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக்கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.  

 

13 hours ago, ஏராளன் said:

இத்தருணத்தில் நகரசபை  வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி கழிவகற்றும் உழவியந்திரத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  மீது மோத முயற்சித்ததோடு அதை வீடியோ எடுத்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார். இதனால்  அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

ரொம்ப அடாவடித்தனம், கொலை முயற்சி. இதை தட்டிக்கேட்க்கத்தான் வேண்டும். 2000ம் ஆண்டென்றால்  அங்கயனுக்கும் தொடர்பு இருக்கலாம்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.