Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?” எனும் கேள்வி, தமிழக அரசியல் களத்தில் முன்னெப்போதையும் விடத் தற்போது அதிகமாகவே கேட்கப்படுகிறது. இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் கையாளாத, சாமானியர்களுக்கு நெருக்கமான பேச்சு மொழியைச் சீமான் கைக்கொண்டதே காரணம் என்பதை, அவரது மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானிக்கும் எவரும் உணரமுடியும்.

வெகுமக்களுக்கான நல அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைச் சாமானியர்கள் அரசியல் பேசுவதையே தவிர்த்து, அது அறிஞர்களுக்கானது, பேரறிஞர்களுக்கானது என்று, கிட்டத்தட்ட வாக்கு செலுத்துவதைத் தவிர அரசியல் விருப்பற்று ஒதுக்கிய வாழப் பழகினர். தங்களையொத்த குரலற்றவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் துன்புறுவது குறித்துப் பேசவும் அவர்களுக்காகக் குரல்கொடுக்கத் துணிவற்றும் வாழும் நிலையே அவர்களிடம் இருந்து வந்துள்ளது.

இப்படிப்பட்ட தருணத்தில்தான் கடந்த 2009-இல், தமிழ்நாட்டின் தொப்புள் கொடி மனிதர்களான சாமானிய ஈழத் தமிழர்கள் 70 ஆயிரம் பேர் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டனர். ‘முள்ளிவாய்க்கால் படுகொலை’ என்று ஒட்டுமொத்த உலகமும் ஓர் இனப்படுகொலைக்குப் பெயர் சூட்டிவிட்டு, நீதிகேட்டு ஈனக்குரல் எழுப்பிய எஞ்சியிருந்த இலங்கைத் தமிழர்களுக்கு மவுனத்தை மட்டும் பதிலாக அளித்தது. அந்த ‘மாஸ் கில்லிங்’ இனப் படுகொலையில் இதயம் நொறுங்கி ரத்தம் கொதித்த ஒருவனின் நீதி கேட்கும் குரல், கோபம் கொந்தளிக்கும் எளியவர்களுக்கான மொழியாடலாக வெடித்துச் சிதறத் தொடங்கியது.

அந்த மொழியும் குரலும்தான் சீமானுடையது... சாமானிய வியாபாரிகள், தினக்கூலிகள், சீரியல் பார்க்கும் பெண்கள், சினிமாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என்று ஒரு கூட்டம் சீமானின் அந்த மொழியாடலால் ஈர்க்கப்பட்டு, மொழிவழி தேசியமும் அதன் வழியான அரசியல் இறையான்மையும் தமிழர்களுக்கும் உரியதே; அதை ஏன் இழந்தோம் என அறிந்து தெளிந்து அரசியல் கற்றுக்கொண்டு, சீமான் பேசுவதைக் கூர்ந்து கேட்கத் தொடங்கியது. சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் இணையாவிட்டாலும் அந்த ஜனநாயக அரசியல் அமைப்பின் பெரும் ஆதரவு சக்தியாக அவர்களை உருமாற்றியிருக்கிறது.

அந்த வகையில், சீமானைத் தங்களுடைய அரசியல் எதிரியாகக் கருதும் யாரும், ‘சீமானின் குரல் என்பது சீமான் என்கிற தனி மனிதனின் குரல் அல்ல; அது உரிமையிருந்த, வாய்ப்பிழந்த, வேலையும் அதிகாரமும் மறுக்கப்பட்ட பெரும்பான்மையான தமிழர்களின் குரல்’ என்பதை அறிந்தே உள்ளனர்.

திராவிடக் கட்சிகளின் திராவிட மாடல் அரசியல், விஜய் முன்னெடுத்துள்ள திராவிட - தமிழ் தேசிய அரசியல், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு நடுவேதான் தமிழ்த் தேசியமும் வீறுகொண்டு வளர்ந்து வருகிறது. அந்த வளர்ச்சியின் ஆணிவேராக இருக்கிறது சீமான் முன்வைக்கும் ‘உரிமை இழந்தவர்களுக்கான அரசியல்’.

அதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய புரிதலோடு நாம் தமிழர் கட்சியையும் அதன் முக்கிய இலக்கான தமிழரின் அரசியல் இறையாண்மையை மீட்டெடுத்தல் என்பதையும் நோக்கி தனது மொழியாடலைக் கூர் திட்டி வருகிறார். அந்தக் கூர்தீட்டலில் இப்போது பெரியார் ஈ.வே.ராவை மறுதளித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

பெரியார் மறுப்பையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதன்மைப் பிரச்சாரமாகவும் மேற்கொண்டது. பெரியார் மறுப்பைச் சாமானியர்களுக்கான மொழியில் சீமான் முன்வைத்த காரணத்தாலேயே இன்று வெகுமக்களிடம் அது பேசுபொருளாகியிருக்கிறது.

பெரியாரைக் கடந்த காலத்தில் எத்தனையோ பேர் விமர்சித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் சட்டை செய்யப்படாத எதிர்ப்பு, இப்போது எழக் காரணம், சீமானின் எளியவர்களுக்கான மொழியாடலே. அந்த மொழியாடலே அவரது அரசியல் எதிரிகளுக்கு கோபத்தையும் பதற்றத்தையும் உருவாக்கிவிட்டது.

- சந்திரன் ராஜா - ஒரு தமிழ் தேசியர், அரசியல் விமர்சகர். | தொடர்புக்கு: Krishjai2006@gmail.com

சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்? | about seeman way of speeching was explained - hindutamil.in

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பேருக்கு இதை இணைத்தது பிழம்பா என்று சந்தேகம் வந்தது?😀😀

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிழம்பு said:

எத்தனை பேருக்கு இதை இணைத்தது பிழம்பா என்று சந்தேகம் வந்தது?😀😀

இணைத்தவரை பார்த்தேன். அவர் நிழலி அல்ல என்றும் நினைத்தேன். 🤩

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை ஆதரிக்கும் தமிழக மக்கள் பேச்சிற்கு மயங்கும் "விசிலடிச்சான் குஞ்சுகள்" என்று மறைமுகமாகச் சாடியிருக்கிறார்😂!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

வெகுமக்களுக்கான நல அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைச் சாமானியர்கள் அரசியல் பேசுவதையே தவிர்த்து, அது அறிஞர்களுக்கானது, பேரறிஞர்களுக்கானது என்று, கிட்டத்தட்ட வாக்கு செலுத்துவதைத் தவிர அரசியல் விருப்பற்று ஒதுக்கிய வாழப் பழகினர்

கட்டுரையாளரரின் மனநிலை இது தான் 

அதாவது தூர நோக்கில் சிந்திக்த் தெரியாத, பக்குவப்படாத, சொல்வதை அப்படியே நம்பும் மொக்குக் கூட்டதுக்கும் காரியங்களை அப்படியே நம்பிவிடாத, புலமையும் பாண்டித்தியமும் உள்ள இன்னொரு வகையினருக்கும் இடையில் உள்ள சிந்தனை வேறுபாட்டை  சுட்டிக்காட்டினால்  சீமானுக்கு கை தட்டுப்பவர்கள் மொக்குகள் என்று உண்மையை உரைத்ததாக முடியும் என்பதால் கட்டுரையாளர் மிச்சம் மீதி இருக்கும் மொக்குகளின் அபிப்பிராயத்தை  சீமானை நோக்கித் திருப்பும் நோக்கில்,  மொக்குகளுக்கு விளிம்பு நிலை சாமானியர் என்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றும் பெயர் சூட்டி இருக்கின்றார். 

ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களில் அறிஞர்கள் இல்லை என்கின்றார் 

  • கருத்துக்கள உறவுகள்

எழுதியவர் யார் என்று கவனியுங்கள்
சந்திரன் ராஜா - ஒரு தமிழ் தேசியர்
ஒரு ஈழ தமிழராக இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

கட்டுரையாளரரின் மனநிலை இது தான் 

அதாவது தூர நோக்கில் சிந்திக்த் தெரியாத, பக்குவப்படாத, சொல்வதை அப்படியே நம்பும் மொக்குக் கூட்டதுக்கும் காரியங்களை அப்படியே நம்பிவிடாத, புலமையும் பாண்டித்தியமும் உள்ள இன்னொரு வகையினருக்கும் இடையில் உள்ள சிந்தனை வேறுபாட்டை  சுட்டிக்காட்டினால்  சீமானுக்கு கை தட்டுப்பவர்கள் மொக்குகள் என்று உண்மையை உரைத்ததாக முடியும் என்பதால் கட்டுரையாளர் மிச்சம் மீதி இருக்கும் மொக்குகளின் அபிப்பிராயத்தை  சீமானை நோக்கித் திருப்பும் நோக்கில்,  மொக்குகளுக்கு விளிம்பு நிலை சாமானியர் என்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றும் பெயர் சூட்டி இருக்கின்றார். 

ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களில் அறிஞர்கள் இல்லை என்கின்றார் 

இதெல்லாம் உங்கள் பார்வை. அது தமிழக மக்களின் பார்வையாக வரவே முடியாது. தமிழக மக்களின் தலைவர்களாக கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா ஸ்டாலின் எவ்வாறு இடம் பிடித்து முதல்வர்களாகினர்??? தமிழக மக்கள் எதை முன்னிறுத்தி தேர்தல்களில் வாக்கு போடுகிறார்கள்??? 

44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எழுதியவர் யார் என்று கவனியுங்கள்
சந்திரன் ராஜா - ஒரு தமிழ் தேசியர்
ஒரு ஈழ தமிழராக இருக்க வேண்டும்

அவரது மின்னஞ்சலை கூகிளில் இட்டுத் தேடும் போது, அவர் பாண்டிச்சேரியில் வசிப்பதாகக் காட்டுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

அவரது மின்னஞ்சலை கூகிளில் இட்டுத் தேடும் போது, அவர் பாண்டிச்சேரியில் வசிப்பதாகக் காட்டுகின்றது. 

😀 நான் பெயரை வைத்து நினைத்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வெண்நிற ஆடை மூர்த்தி, வி கே ராமசாமி போன்ற ஆபாச நகைசுவை நடிகர்களை ரசிப்பார்கள்.

ஆனால் வாக்கு எம் ஜி ஆர், விஜயகாந்த் போல நம்பிக்கைக்குரியவருகே போடுவார்கள்.

சீமானின் மொழியாடலின் ஈர்ப்பு எத்தகையது என்பதை கட்டுரையாளருக்கு ஈரோடு கிழக்கு தெளிவுபடுத்தி இருக்கும் என நம்புகிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் ஈவே ரா பேசிய பேச்சுக்களை விட சீமானின் மொழியாடல்கள் எவ்வளவோ மேல். சீமானின் மொழியாடல்களில் மிகுதிகள் குறைகள் இருப்பினும் மக்களின் எண்ணப் பிரதிபலிப்புக்கள் இலகு வடிவில் இருப்பதால்.. மக்களிடம் எடுபடுகிறது என்பதே உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை இந்து பத்திரிகையில் வந்திருக்கிறது. எப்பொழுதும் தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செயற்படும் பத்திரிகையில் வருவதென்பது சீமான் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து விட்டார் என்பதையே காட்டுகிறது. இவ்வளவு காலமும் சீமான் ஒரு ஆளா என்று அவர் பெயர் கட்சியின் பெயரை இருட்டடிப்புச் செய்த ஊடகங்கள் இப்பொழுது சீமான் சீமான் என்று அலநறகின்றன. ஒவ்வொரு நாளும் சீமான் பத்திரிகையாளரைச் சந்திக்கிறார். திமுகவுக்கு எதிரான முறையான எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறார்.அவர் தொடர்ந்து தனித்து செயற்படாமல் திமுகவுக்கு எதிரான ஒரு பலமான கூட்டணியில் இணைந்தால் கறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வாய்ப்பு இருக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

இந்து பத்திரிகையில் வந்திருக்கிறது. எப்பொழுதும் தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செயற்படும் பத்திரிகையில் வருவதென்பது

இந்து பத்திரிகையில் தூக்கி பிடிக்கிறார்கள் எண்டால் அந்த நபரால் சங் பரிவார் நன்மை அடைய விரும்புகிறது என்பதே அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2025 at 00:00, goshan_che said:

இந்து பத்திரிகையில் தூக்கி பிடிக்கிறார்கள் எண்டால் அந்த நபரால் சங் பரிவாஇந்து பத்திரிகையில் வந்தால் இப்படித்தான் விமர்சனம் வரும் என்று எதிர்பார்த்தேன்.சீமான் எல்லாம் ஒரு ஆளா? என்று இருந்த ஊடகங்கள் இப்பொழுது சீமானைப்பற்நிப் பேசுவது அவர் ஒரு தவிர்க்க முடியாத அரசில்தலைவராகி விட்டார் என்பதையே இது காட்டுகிறது.இந்து நேர்மறையாக எழுதுகிறது.திராவிடியா ஊடகங்கள் எதிர்மறையாக செய்திகளை வெளியிடுகின்றன. எதிரியின் கண்ணீரிலும் செந்நீரிலும் தமிழ்த் தேசியம் உறுதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.ர் நன்மை அடைய விரும்புகிறது என்பதே அர்த்த

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:
  On 17/2/2025 at 00:00, goshan_che said:

இந்து பத்திரிகையில் தூக்கி பிடிக்கிறார்கள் எண்டால் அந்த நபரால் சங் பரிவாஇந்து பத்திரிகையில் வந்தால் இப்படித்தான் விமர்சனம் வரும் என்று எதிர்பார்த்தேன்.சீமான் எல்லாம் ஒரு ஆளா? என்று இருந்த ஊடகங்கள் இப்பொழுது சீமானைப்பற்நிப் பேசுவது அவர் ஒரு தவிர்க்க முடியாத அரசில்தலைவராகி விட்டார் என்பதையே இது காட்டுகிறது.இந்து நேர்மறையாக எழுதுகிறது.திராவிடியா ஊடகங்கள் எதிர்மறையாக செய்திகளை வெளியிடுகின்றன. எதிரியின் கண்ணீரிலும் செந்நீரிலும் தமிழ்த் தேசியம் உறுதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.ர் நன்மை அடைய விரும்புகிறது என்பதே அர்த்த

சேம்பியன்ஸ் டிராபி தொடரை முன்னிட்டு மோதல் தவிர்ப்பு நடைமுறையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம்.

🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

சேம்பியன்ஸ் டிராபி தொடரை முன்னிட்டு மோதல் தவிர்ப்பு நடைமுறையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம்.

அங்கையும் என்னைப் பின்தொடர்ந்ந்து வேவு பார்த்து;துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். புள்ளிப்பட்டியலில் பக்கத்தில் வந்து குந்தி இருக்கிறீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.