Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!

adminJune 4, 2025

1000401638.png?fit=1024%2C576&ssl=1

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார்.

மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

https://globaltamilnews.net/2025/216313/

  • கருத்துக்கள உறவுகள்

முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்ததுக்கு தம்முள் சண்டையிட்ட போது சிவன் பேசாமல் ஏலத்துக்கு விட்டு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவருக்கு பாம்பழம் என்று விட்டிருக்கலாம்.😂

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போயுள்ள மாம்பழம்

யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

வெளிநாடுகளிலும் இருந்தும்

இந்த மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

Mango auctioned for millions in Jaffna

இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.

15 நாள் திருவிழா

இதன்போது வெளிநாட்டில் அதாவது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (4 60 000) ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.

Mango auctioned for millions in Jaffna

இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழபை வைரவர் உற்சவமும் இடம்பெற்று திருவிழா நிறைவடைய உள்ளது.

https://tamilwin.com/article/mango-auctioned-for-millions-in-jaffna-1749027058

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாம்பழத்தை ஏலம் எடுக்க குடுத்த காசை ஏதாவது சிறு பிள்ளைகளை முதியவர்களை பராமரிக்கும் இல்லங்களுக்கு குடுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்ததுக்கு தம்முள் சண்டையிட்ட போது சிவன் பேசாமல் ஏலத்துக்கு விட்டு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவருக்கு பாம்பழம் என்று விட்டிருக்கலாம்.😂

இந்த மாம்பழம் பிரச்சினை என்று வந்தால் அதில் என் தலை நிச்சயமாக உருளும் என்று நினைக்கிறேன்.

மாம்பழப்பிடுங்குப்பாட்டால தானே அந்தாள் மலைக்கு போனது. ஆனால் கோமணத்தோட விட்டது எனது ஊர்க்காரர்கள் என்று கதையை கட்டிவிட்டார்கள். இது வேறு ஊரில் என்று வந்து பார்த்தால் பிரான்ஸ் பிரமுகர் என்று போட்டிருக்கு.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

large.IMG_8415.jpeg.4392d228eb6f96c528cb

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மீம்ஸில் இருக்கும் முருகன் பிரான்ஸ் நாட்டு குடிமகனுக்குத்தான் நன்றி சொல்லவேணும், கனடாவுக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

உங்கள் மீம்ஸில் இருக்கும் முருகன் பிரான்ஸ் நாட்டு குடிமகனுக்குத்தான் நன்றி சொல்லவேணும், கனடாவுக்கு அல்ல.

நான் என்ன செய்ய Sasi_varnam? இதெல்லாம் அந்த முருகனின் திருவிளையாடல்

https://www.tamilmirror.lk/செய்திகள்/ர-460-000கக-ஏலம-பன-மமபழம/175-358607

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாம்பழத்தை ஏலம் எடுக்க குடுத்த காசை ஏதாவது சிறு பிள்ளைகளை முதியவர்களை பராமரிக்கும் இல்லங்களுக்கு குடுத்திருக்கலாம்.

இப்போ இப்படி எல்லாம் எழுத, சொல்லப் போனால் யாரு தாத்தா ஏற்றுக் கொள்வார்கள்..சொல்லியும், எழுதியும்.இனி வேணாம் என்றே போய் விடுகிறது..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, island said:

முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்ததுக்கு தம்முள் சண்டையிட்ட போது சிவன் பேசாமல் ஏலத்துக்கு விட்டு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவருக்கு பாம்பழம் என்று விட்டிருக்கலாம்.😂

அந்தக் காலத்தில் வெளிநாட்டு தொடர்புகள் இல்லை என்றால்

சிவனையே உருட்டி பிரட்டி விற்றுருப்பார்கள்.

21 hours ago, ஏராளன் said:

இந்த மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

முருகன் அருள்பெற்ற மாம்பழம் பணம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். இனிமேல் வெளிநாட்டிலிருந்து போனவர்களுக்கே கிடைக்கும். உள்ளூர்காரர்களுக்கு உள்ளங்கையில் பஞ்சாமிர்தம் மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

முருகன் அருள்பெற்ற மாம்பழம் பணம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். இனிமேல் வெளிநாட்டிலிருந்து போனவர்களுக்கே கிடைக்கும். உள்ளூர்காரர்களுக்கு உள்ளங்கையில் பஞ்சாமிர்தம் மட்டும்தான்.

பஞ்சாமிர்த்தில் மாம்பழம் ஒரு கனி😂; முருகன் எல்லாம்வல்ல அருள் படைத்தவர் அனைவருக்கும்😇

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

சந்தனம் மெத்தினால்.......

வெளிநாட்டிலை இருந்து தங்கடை ஊர் திருவிழாவுக்கு போறவையள் அர்ச்சனைக்கு வைச்ச ஒரு மாம்பழத்தை லச்சக்கணக்கிலை காசு குடுத்து ஏலத்திலை எடுக்கினம்.கழுத்திலை தங்கச்சங்கிலி வேற மினுங்குது.....உதுகளை பார்க்கிற அங்கை இருக்கிற சனம் ஐயோ நாங்களும் கனடாவுக்கு லண்டனுக்கு சுவீஸ்க்கு போகப்போறம் எண்டு துடிப்பினம் தானே? 😄

இதுக்குள்ள.....

இஞ்சை புலம்பெயர் நாடுகளிலை இருக்கிறவையள் கடவுளே இஞ்சை ஒருத்தரும் வராதேங்கோ.....இஞ்சை சரியான கஷ்டம்...நிம்மதியில்லாத வாழ்க்கை எண்ட புலம்பல் வேற....😂

  • கருத்துக்கள உறவுகள்

படங்காட்டலுக்கு எந்த குறைச்சலும் இல்லை. போராட்டத்தில் கலந்த போராளிகள் பிச்சை எடுக்கிறார்கள். மனிதம் என்பது ?????

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.