Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் மக்கள் கூட்டத்தையும் பெரும் கல்விசமூகத்தையும் கொண்டிருக்ககூடிய வடக்கு -கிழக்கு பிரதேசங்களில் யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சியின் தெரிவு அல்லத அதில் உள்வாங்கியவர்கள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியே தேசிய மக்கள் சக்தியின் வெற்றியாக மாறியதாக கருதப்படுகின்றது.

இந்தநிலையில் தமிழர் பகுதிகளில தமிழ் கட்சிகள் வென்றிருந்தால் ஐ.நா ஆணையாளரின் வருகை கூட மாறியிருக்கும் என்று பிரித்தானிய தமிழர்பேரவையின் மனிதஉரிமைகள் இணைப்பாளர் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஐ.நாவில் தமிழ் மக்களுக்கான பின்னடைவிற்கான முழுபொறுப்பையும் தமிழரசுக்கட்சி ஏற்க வேண்டும்.

தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த சம்பந்தன் பல விடயங்களை கட்டுப்படுத்தியிருந்தால் தமிழினத்திற்கு இவ்வாறான விடயங்கள் நடைபெற்றிருக்காது என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பிலும், சுமந்திரனின் நிலைபாடு தொடர்பிலும் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...


https://tamilwin.com/

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்து சுமந்திரன் தானாக பதவி விலக மாட்டார். விலக்கி வைக்கப் பட வேண்டும். மயிலே… மயிலே… இறகு போடு என்றால் போடாது. புடுங்கி எடுக்க வேண்டும். 😂

வருகின்ற வட மாகாண சபைத் தேர்தலில்… ஆபிரஹாம் சுமந்திரனுக்கு போட்டியிடுகிற எண்ணம் இருக்கின்றது போலுள்ளது.

ஏற்கெனவே சுமந்திரனுக்கு தமிழரசு கட்சி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்கள்… இவர் தேவையில்லாத ஆணி என்று தோல்வியை பரிசாக கொடுத்தவர்கள். அதற்குப் பிறகும் வெட்கம், மானம், ரோசம் எதுவும் இல்லாமல்… தானும் ஒரு ஆள் என்று, பல்லை காட்டிக் கொண்டு சூடு, சுரணை இல்லாமல் தமிழ் மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டு திரிகிறார்.

ஆபிரஹாம் சுமந்திரன் இனியும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால்….? சுமந்திரனை தோல்வியுறச் செய்ய தமிழரசு கட்சியில் இருக்கும் அதிர்ப்தி வாக்குகள் அனுரா கட்சிக்கே சென்று… முதல் முறையாக சிங்கள கட்சி ஒன்று வட மாகாண சபை முதல்வராக வரக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சுத்துமாத்து சுமந்திரன்…. தனக்கு தமிழ் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு…. இனி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவாமல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே அவருக்கு நல்லது.

அதனையும் மீறி, போட்டியிட்டால்…. தமிழ் மக்கள் தமது வாக்குகளால் கொடுக்கும் செருப்பு அடியில்… “சுமந்திரன், பின்னங்கால் பிடரியில் பட கொழும்புக்கு ஓட வேண்டி வரும்” என்று ஊரில் பரவலாக சொல்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாம் சுமந்திரன் இனியும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால்….? சுமந்திரனை தோல்வியுறச் செய்ய தமிழரசு கட்சியில் இருக்கும் அதிர்ப்தி வாக்குகள் அனுரா கட்சிக்கே சென்று… முதல் முறையாக சிங்கள கட்சி ஒன்று வட மாகாண சபை முதல்வராக வரக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காய் இருந்திருந்தால் சிங்கள இனவாத கட்சிகளுக்கு தமிழர்பகுதிகளில் எப்படி இடம் கிடைத்திருக்கும்?

சிங்கள கட்சிகள் தமிழர் பகுதிகளில் வெற்றி பெற முடிகின்றது. அதே போல் தமிழ் கட்சிகள் சிங்கள பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு தமிழரசு கட்சி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்கள்… இவர் தேவையில்லாத ஆணி என்று தோல்வியை பரிசாக கொடுத்தவர்கள்.

அது மட்டுமா? அவர் அறிவித்த கடையடைப்பு, படுதோல்வி! இவருக்கு அளிக்கும் வாக்கு, மஹிந்தவையோ, ரணிலையோ குஷிப்படுத்தி இவருக்கு பதவி பட்டாடை கிடைக்கும். மக்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே. அதிலும் பார்க்க மக்கள் தமக்கு பிடித்த அனுராவை தெரிவதில் தப்பில்லையே. அப்போதும், அனுரா அலையில் அடிபட்டுப்போனாலும் நமக்கு வெற்றியே என்று பிதற்றுவார். இனிமேல் இவர் வென்றாலென்ன தோற்றாலென்ன? இவருக்கு பதவி கிடைக்கப்போவதில்லை, ஆளுநர் மூலமாகவே காரியங்கள் நடைபெறும். முன் போல் தேர்தல் நேரம் வந்து வாக்கு அறுவடை செய்ய முடியாது. உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாதவர்கள் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது. இருந்தமாதிரி தன் தொழிலையே செய்து கொண்டிருந்திருக்கலாம், தேவையில்லாமல் அரசியலில் செருகப்பட்டு, சொந்த தொழிலையும் இழந்ததுதான் மிச்சம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய்ப்போச்சு இப்போ சுமந்திரனின் தொழில்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அது மட்டுமா? அவர் அறிவித்த கடையடைப்பு, படுதோல்வி! இவருக்கு அளிக்கும் வாக்கு, மஹிந்தவையோ, ரணிலையோ குஷிப்படுத்தி இவருக்கு பதவி பட்டாடை கிடைக்கும். மக்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே. அதிலும் பார்க்க மக்கள் தமக்கு பிடித்த அனுராவை தெரிவதில் தப்பில்லையே. அப்போதும், அனுரா அலையில் அடிபட்டுப்போனாலும் நமக்கு வெற்றியே என்று பிதற்றுவார். இனிமேல் இவர் வென்றாலென்ன தோற்றாலென்ன? இவருக்கு பதவி கிடைக்கப்போவதில்லை, ஆளுநர் மூலமாகவே காரியங்கள் நடைபெறும். முன் போல் தேர்தல் நேரம் வந்து வாக்கு அறுவடை செய்ய முடியாது. உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாதவர்கள் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது. இருந்தமாதிரி தன் தொழிலையே செய்து கொண்டிருந்திருக்கலாம், தேவையில்லாமல் அரசியலில் செருகப்பட்டு, சொந்த தொழிலையும் இழந்ததுதான் மிச்சம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய்ப்போச்சு இப்போ சுமந்திரனின் தொழில்.

சம்பந்தன் உயிரோடு இருக்கும் மட்டும்... சுமந்திரனை பின்கதவால் பாராளுமன்றத்துக்குள் கூட்டிக் கொண்டு போனார். சம்பந்தன் செத்த பின்.... சுமந்திரனுக்கு பாராளுமன்ற பின்கதவும் அடைக்கப் பட்டு, வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். 😂

சென்ற பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் மண் கவ்விய பின்.... பாராளுமன்றத்துக்குள் நுழைய... வென்ற பாராளுமன்ற உறுப்பினரான சத்தியமூர்த்திக்கும் வேறு சிலருக்கும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக வேறு பதவி பெற்றுத் தருவதாகவும், அவர்கள் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா பண்ணி.. அந்த இடத்தை தமக்குத் தரும்படி பல வழிகளில் கெஞ்சி, ஆசை வார்த்தை காட்டியும்... சுமந்திரனை நம்பி அவர்கள் நடுத் தெருவில் நிற்க தயார் இல்லாததால்... அவர்கள் சுமந்திரனின் சூழ்ச்சி வலையில் விழாமல் ஒரேயடியாக மறுப்பு தெரிவித்து விட்டார்கள். 😅

சம்பந்தன் செத்தவுடன்.... சுமந்திரனின் பின்கதவு பாராளுமன்ற ராசியும் கை விட்டுப் போய் விட்டது. இனி சுமந்திரன் தனது வாழ்நாள் முழுக்க பாராளுமன்றத்துக்கு வெளியில் நின்று பாராளுமன்றத்தை "ஆ" வென்று அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காய் இருந்திருந்தால் சிங்கள இனவாத கட்சிகளுக்கு தமிழர்பகுதிகளில் எப்படி இடம் கிடைத்திருக்கும்?

சிங்கள கட்சிகள் தமிழர் பகுதிகளில் வெற்றி பெற முடிகின்றது. அதே போல் தமிழ் கட்சிகள் சிங்கள பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா?

சுமந்திரன்.... தமிழருக்கு துரோகம் செய்து, சிங்கள அரசியல்வாதிகளை போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றி விட்ட நன்றிக் கடனுக்கு... சென்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரனை... தமது கட்சியின் சார்பில் சிங்களப் பகுதிகளில் போட்டியிட வைத்திருந்தால்... சிங்கள மக்கள் சுமந்திரனை, அமோக வெற்றி பெற வைத்திருப்பார்கள். ஏனென்றால்.... சுமந்திரன், தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை விட சிங்கள இனத்துக்கும், சிங்கள மக்களுக்கும் ஆற்றிய சேவை அதிகம்.

சிங்களவர்கள் உண்மையான இனப்பற்று உள்ளவர்களாக இருந்திருந்தால், அடுத்த தேர்தலில்.... மகிந்த, ரணில், சஜித், விமல் வீரவன்ச போன்றோர்... சுத்துமாத்து சுமந்திரனை தத்து எடுத்து தமது கட்சி சார்பில் போட்டியிட வைக்க வேண்டும். வெற்றி நிச்சயம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்… இதுவரை தமிழ் மக்களுக்கு, ஒரு ஆணியும் புடுங்கவில்லை. அவர் புடுங்கின ஆணி முழுக்க சிங்களவருக்குத்தான். ஆன படியால் சிங்கள சம்பந்தி சுமன்…. கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற சிங்களப் பகுதிகளில் போட்டியிட்டு… அவரின் “பாராளுமன்ற கனவை” நிறைவேற்றும் படி… வேண்டிக் கொள்கின்றோம். 😂

தமிழ் பகுதிகளில் நின்றால்… மீண்டும், மீண்டும் மண் கவ்வுவது நிச்சயம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் தானாக பதவிவிலக வேண்டும். தமிழரசுக்கட்சியில' இருந்து சுமத்தரனால் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெpரிவு செய்யப்பட வேண்டும். சுமத்திரன் விலக மறுத்தால் தமிழ்மக்கள் வெகுஜனப்புரட்சி செய்து சுமத்தரனை ஓட ஓட விரட்ட வேண்டும். கோத்தபாயவைப் போல் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று அரசியலை விட்டே அவர் ஒதுங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Group therapy session நடக்குது போல😂!

எல்லோரும் நலம் பெற்றால் சந்தோஷம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

Group therapy session நடக்குது போல😂!

எல்லோரும் நலம் பெற்றால் சந்தோஷம் தான்.

வாசித்தவுடன் சத்தமாக சிரித்துவிட்டேன். முதல்வரியே சிரிக்க வைத்தது. இரண்டாவது வரி அதற்கு மேல்.

நல்ல நகைச்சுவயை கேட்டு நாளாயிற்று என்ற கவலை இன்று வாசித்ததில் தீர்ந்து விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்.... தமிழருக்கு துரோகம் செய்து, சிங்கள அரசியல்வாதிகளை போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றி விட்ட நன்றிக் கடனுக்கு... சென்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரனை... தமது கட்சியின் சார்பில் சிங்களப் பகுதிகளில் போட்டியிட வைத்திருந்தால்... சிங்கள மக்கள் சுமந்திரனை, அமோக வெற்றி பெற வைத்திருப்பார்கள். ஏனென்றால்.... சுமந்திரன், தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை விட சிங்கள இனத்துக்கும், சிங்கள மக்களுக்கும் ஆற்றிய சேவை அதிகம்.

என்னத்த செய்ய? தமிழினத்திற்கென்றே சந்ததிக்கு சந்ததி ஒரு சகுனி உருவாகிக்கொண்டே இருக்கின்றார்கள். சேர் பொன் இராமநாதன் தொடக்கம் சுமந்திரன் ஊடாக தமிழின வில்லன்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் போல் இருக்கின்றது.அதை விட அந்த வில்லன் கொம்பனிகளுடன் ஒட்டுண்ணிகளாக இருப்பவர்கள் இன்னும் வில்லங்கமானவர்கள்.மதில் மேல் பூனை ரகமானவர்கள்.😂🤣

சுமந்திரன் சிங்கள பகுதிகளில் சுமந்திர எண்ட பெயரிலை அதுவும் ஹபரண தொகுதியில் நிண்டு வாக்கு கேட்டு பாக்கட்டுமன்.😁

16 hours ago, தமிழ் சிறி said:

சிங்களவர்கள் உண்மையான இனப்பற்று உள்ளவர்களாக இருந்திருந்தால், அடுத்த தேர்தலில்.... மகிந்த, ரணில், சஜித், விமல் வீரவன்ச போன்றோர்... சுத்துமாத்து சுமந்திரனை தத்து எடுத்து தமது கட்சி சார்பில் போட்டியிட வைக்க வேண்டும். வெற்றி நிச்சயம். 😂

பதவிக்காக ஓடித்திரியிறவர் அதுக்கும் ஓமெண்டுவார் 😋

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

அடுத்த தேர்தலில்.... மகிந்த, ரணில், சஜித், விமல் வீரவன்ச போன்றோர்... சுத்துமாத்து சுமந்திரனை தத்து எடுத்து தமது கட்சி சார்பில் போட்டியிட வைக்க வேண்டும். வெற்றி நிச்சயம். 😂

மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல, அதில விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம். அவர்களே சேடம் இழுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2025 at 06:03, தமிழ் சிறி said:

… “சுமந்திரன், பின்னங்கால் பிடரியில் பட கொழும்புக்கு ஓட வேண்டி வரும்” என்று ஊரில் பரவலாக சொல்கிறார்கள்.

இப்ப கொழும்பு "கொள்ளோ"க்களின் ஆட்சி தானே புலம்பெயர் டமிழர்களிடையேயும் நடக்கின்றது🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

என்னத்த செய்ய? தமிழினத்திற்கென்றே சந்ததிக்கு சந்ததி ஒரு சகுனி உருவாகிக்கொண்டே இருக்கின்றார்கள். சேர் பொன் இராமநாதன் தொடக்கம் சுமந்திரன் ஊடாக தமிழின வில்லன்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் போல் இருக்கின்றது.அதை விட அந்த வில்லன் கொம்பனிகளுடன் ஒட்டுண்ணிகளாக இருப்பவர்கள் இன்னும் வில்லங்கமானவர்கள்.மதில் மேல் பூனை ரகமானவர்கள்.😂🤣

சுமந்திரன் சிங்கள பகுதிகளில் சுமந்திர எண்ட பெயரிலை அதுவும் ஹபரண தொகுதியில் நிண்டு வாக்கு கேட்டு பாக்கட்டுமன்.😁

பதவிக்காக ஓடித்திரியிறவர் அதுக்கும் ஓமெண்டுவார் 😋

பண்டார வன்னியன் காலத்திலிருந்து... காட்டிக் கொடுத்த எட்டப்பன் காக்கை வன்னியன் ஈறாக, தேசியத் தலைவர் பிரபாகரன் வரை... டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் என்று... தமிழனை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்துக் கொண்டே வந்திருப்பது தமிழ் இனத்தின் சாபக்கேடு. animiertes-gefuehl-smilies-bild-0415.gif

மற்றைய இனங்களில்.... அந்த இனத்திற்கு ஒரு ஆபத்து வரும் போது... தமது மொழியின் எதிர்கால நலன் கருதி மொத்த இனமும் ஒரு அணியில் ஒற்றுமையாக திரண்டு தம் இனத்திற்காக குரல் கொடுக்கும்.

ஆனால் உலகின் மூத்த இனமான தமிழ் இனத்தில் மட்டும்.... அற்ப சலுகைகளுக்காகவும், எதிரி போடும் எலும்புத் துண்டிற்காகவும்... மதம் மாறியும், இனம் மாறியும்.. இனத்தை காட்டிக் கொடுப்பவர்களும், காட்டிக் கொடுப்பவர்களுக்கு வெள்ளை அடித்து... முட்டுக் கொடுப்பவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து இனத்தை கருவறுத்துக் கொண்டே இருப்பார்கள்.

இவர்களை ஓட்டுக் குழுக்கள் என்றும், வெள்ளை வேட்டி கள்ளர் என்றும், செம்பு தூக்கிகள் என்றும்... காலத்திற்கு காலம் ஒவ்வொரு அடைமொழியுடன் அழைத்தாலும்... எருமை மாட்டின் மீது மழை பெய்த மாதிரி ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருப்பது இவர்களின் தனிக் குணம். மற்றைய இனங்களில் இப்படி சோரம் போகின்றவர்களுக்கு, முதுகில் பச்சை மட்டையால் நாலு சாத்து சாத்தி... உப்புக்கருவாடு போட்டிருப்பார்கள். animiertes-gefuehl-smilies-bild-0438.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பண்டார வன்னியன் காலத்திலிருந்து... காட்டிக் கொடுத்த எட்டப்பன் காக்கை வன்னியன் ஈறாக, தேசியத் தலைவர் பிரபாகரன் வரை... டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் என்று... தமிழனை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்துக் கொண்டே வந்திருப்பது தமிழ் இனத்தின் சாபக்கேடு. animiertes-gefuehl-smilies-bild-0415.gif

மற்றைய இனங்களில்.... அந்த இனத்திற்கு ஒரு ஆபத்து வரும் போது... தமது மொழியின் எதிர்கால நலன் கருதி மொத்த இனமும் ஒரு அணியில் ஒற்றுமையாக திரண்டு தம் இனத்திற்காக குரல் கொடுக்கும்.

ஆனால் உலகின் மூத்த இனமான தமிழ் இனத்தில் மட்டும்.... அற்ப சலுகைகளுக்காகவும், எதிரி போடும் எலும்புத் துண்டிற்காகவும்... மதம் மாறியும், இனம் மாறியும்.. இனத்தை காட்டிக் கொடுப்பவர்களும், காட்டிக் கொடுப்பவர்களுக்கு வெள்ளை அடித்து... முட்டுக் கொடுப்பவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து இனத்தை கருவறுத்துக் கொண்டே இருப்பார்கள்.

இவர்களை ஓட்டுக் குழுக்கள் என்றும், வெள்ளை வேட்டி கள்ளர் என்றும், செம்பு தூக்கிகள் என்றும்... காலத்திற்கு காலம் ஒவ்வொரு அடைமொழியுடன் அழைத்தாலும்... எருமை மாட்டின் மீது மழை பெய்த மாதிரி ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருப்பது இவர்களின் தனிக் குணம். மற்றைய இனங்களில் இப்படி சோரம் போகின்றவர்களுக்கு, முதுகில் பச்சை மட்டையால் நாலு சாத்து சாத்தி... உப்புக்கருவாடு போட்டிருப்பார்கள். animiertes-gefuehl-smilies-bild-0438.gif

மதம், இனம் மாறாமல் (கிறிஸ்தவ ஜனநாயக நாட்டில் வந்து) தஞ்சம் கோரியவர்களுக்கு பச்சை மட்டை, உப்புக் கருவாடெல்லாம் இல்லையோ "அண்ணை"😂?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

பண்டார வன்னியன் காலத்திலிருந்து... காட்டிக் கொடுத்த எட்டப்பன் காக்கை வன்னியன் ஈறாக, தேசியத் தலைவர் பிரபாகரன் வரை... டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் என்று... தமிழனை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்துக் கொண்டே வந்திருப்பது தமிழ் இனத்தின் சாபக்கேடு. animiertes-gefuehl-smilies-bild-0415.gif

மற்றைய இனங்களில்.... அந்த இனத்திற்கு ஒரு ஆபத்து வரும் போது... தமது மொழியின் எதிர்கால நலன் கருதி மொத்த இனமும் ஒரு அணியில் ஒற்றுமையாக திரண்டு தம் இனத்திற்காக குரல் கொடுக்கும்.

ஆனால் உலகின் மூத்த இனமான தமிழ் இனத்தில் மட்டும்.... அற்ப சலுகைகளுக்காகவும், எதிரி போடும் எலும்புத் துண்டிற்காகவும்... மதம் மாறியும், இனம் மாறியும்.. இனத்தை காட்டிக் கொடுப்பவர்களும், காட்டிக் கொடுப்பவர்களுக்கு வெள்ளை அடித்து... முட்டுக் கொடுப்பவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து இனத்தை கருவறுத்துக் கொண்டே இருப்பார்கள்.

இவர்களை ஓட்டுக் குழுக்கள் என்றும், வெள்ளை வேட்டி கள்ளர் என்றும், செம்பு தூக்கிகள் என்றும்... காலத்திற்கு காலம் ஒவ்வொரு அடைமொழியுடன் அழைத்தாலும்... எருமை மாட்டின் மீது மழை பெய்த மாதிரி ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருப்பது இவர்களின் தனிக் குணம். மற்றைய இனங்களில் இப்படி சோரம் போகின்றவர்களுக்கு, முதுகில் பச்சை மட்டையால் நாலு சாத்து சாத்தி... உப்புக்கருவாடு போட்டிருப்பார்கள். animiertes-gefuehl-smilies-bild-0438.gif

பம்மாத்து சுமந்திரனை மக்கள் ஆரம்பகாலத்திலேயே நிராகரித்து இருந்திருந்தால் 2009க்கு பின்னரான வடகிழக்கு தமிழர்களின் அரசியல் நிலைமையில் கொஞ்ச முன்னேற்றமாவது இருந்திருக்கும்.

வாக்காள பெருமக்கள் சுமந்திரனை படித்தவர், பட்டம் பெற்றவர், நாலு பெரியவர்களுடன் கதைக்கும் வல்லமை பெற்றவர், பெரிய சட்டத்தரணி ,சட்டங்கள் தெரிந்தவர்,வயதில் இளமையானவர், அரசியலுக்கு ஏற்றவர் என நம்பி ஏமாற்றமடைந்து விட்டார்கள். படித்தவர்களை நம்பி...நம்பி ஏமாறுவது ஈழத்தமிழர்களிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஈழத்தமிழரின் அரசியல் வரலாறுகளை கவனித்து பாருங்கள். பம்மாத்து,சுத்துமாத்து செய்த தமிழ் அரசியல்வாதிகளை இனங்காணுவீர்கள்.இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரைக்கும் சிங்கள இனவாத அரசை குளிர்விக்க தமிழ் அரசியல் தலைவர்களும்,சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்த தமிழர்களும் என்னென்ன விரோத செயல்களை தமிழினத்திற்காக செய்திருக்கின்றார்கள் என பாருங்கள் புரியும்.இதில் இராமநாதன்,ஜீஜீ பொன்னம்பலம் போன்றோர் முக்கியமானவர்கள். இன்னுமொருவர் இருக்கின்றார்.அவர் பெயர் தற்போது ஞாபகத்திற்கு வரவில்லை.

எல்லாம் படித்த பட்டதாரி சட்டத்தரணிகள்.சக மனிதரை மதிக்க தெரியாதவர்கள்.பாமர மக்களை மட்டம்தட்டுபவர்கள்.படித்த கர்வத்தை விட சாதி கர்வம் கொண்டவர்கள். எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி பொது இடங்களில் பேசிப்பேசி சொந்த இனத்தை குண்டுச்சட்டிக்குள் அடக்கி வைத்திருந்தவர்கள். அதையே சிங்களத்தின் ஆருயிர் சுமந்திரனும் செய்ய எத்தனிக்கின்றார்.

இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் உலக அரசியல் மாறி விட்டதால் அதிகம் அல்ல முற்று முழுதாக பாதிக்கப்பட்டது ஈழத்தமிழர் விடுதலையும்,குர்திஷ் மக்கள் விடுதலையும் தான்.அதில் குளிர் காய்பவர்கள் தான் இன்றைய மாற்றுக்கருத்து மாணிக்க மன்னர்கள்.

எனக்கு ஒன்றுமட்டும் விளங்கவில்லை. ஊரில் இருக்கும் ஒரு சிலர் சொந்த இனத்திற்கு நற்செயல்கள் எதுவுமே செய்யாது வில்லங்களையும் இடைஞ்சல்களையும் செய்த சுமந்திரனை ஏன் ஆதரிக்கின்றார்கள்? அவர்களும் சுமந்திரனைப்போல் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பம்மாத்து சுமந்திரனை மக்கள் ஆரம்பகாலத்திலேயே நிராகரித்து இருந்திருந்தால் 2009க்கு பின்னரான வடகிழக்கு தமிழர்களின் அரசியல் நிலைமையில் கொஞ்ச முன்னேற்றமாவது இருந்திருக்கும்.

வாக்காள பெருமக்கள் சுமந்திரனை படித்தவர், பட்டம் பெற்றவர், நாலு பெரியவர்களுடன் கதைக்கும் வல்லமை பெற்றவர், பெரிய சட்டத்தரணி ,சட்டங்கள் தெரிந்தவர்,வயதில் இளமையானவர், அரசியலுக்கு ஏற்றவர் என நம்பி ஏமாற்றமடைந்து விட்டார்கள். படித்தவர்களை நம்பி...நம்பி ஏமாறுவது ஈழத்தமிழர்களிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஈழத்தமிழரின் அரசியல் வரலாறுகளை கவனித்து பாருங்கள். பம்மாத்து,சுத்துமாத்து செய்த தமிழ் அரசியல்வாதிகளை இனங்காணுவீர்கள்.இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரைக்கும் சிங்கள இனவாத அரசை குளிர்விக்க தமிழ் அரசியல் தலைவர்களும்,சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்த தமிழர்களும் என்னென்ன விரோத செயல்களை தமிழினத்திற்காக செய்திருக்கின்றார்கள் என பாருங்கள் புரியும்.இதில் இராமநாதன்,ஜீஜீ பொன்னம்பலம் போன்றோர் முக்கியமானவர்கள். இன்னுமொருவர் இருக்கின்றார்.அவர் பெயர் தற்போது ஞாபகத்திற்கு வரவில்லை.

எல்லாம் படித்த பட்டதாரி சட்டத்தரணிகள்.சக மனிதரை மதிக்க தெரியாதவர்கள்.பாமர மக்களை மட்டம்தட்டுபவர்கள்.படித்த கர்வத்தை விட சாதி கர்வம் கொண்டவர்கள். எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி பொது இடங்களில் பேசிப்பேசி சொந்த இனத்தை குண்டுச்சட்டிக்குள் அடக்கி வைத்திருந்தவர்கள். அதையே சிங்களத்தின் ஆருயிர் சுமந்திரனும் செய்ய எத்தனிக்கின்றார்.

இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் உலக அரசியல் மாறி விட்டதால் அதிகம் அல்ல முற்று முழுதாக பாதிக்கப்பட்டது ஈழத்தமிழர் விடுதலையும்,குர்திஷ் மக்கள் விடுதலையும் தான்.அதில் குளிர் காய்பவர்கள் தான் இன்றைய மாற்றுக்கருத்து மாணிக்க மன்னர்கள்.

எனக்கு ஒன்றுமட்டும் விளங்கவில்லை. ஊரில் இருக்கும் ஒரு சிலர் சொந்த இனத்திற்கு நற்செயல்கள் எதுவுமே செய்யாது வில்லங்களையும் இடைஞ்சல்களையும் செய்த சுமந்திரனை ஏன் ஆதரிக்கின்றார்கள்? அவர்களும் சுமந்திரனைப்போல் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்குமோ?

பல விஷயங்களை தொட்டுச் சென்ற பதிவு. animiertes-gefuehl-smilies-bild-0233.gif

உண்மையில் தமிழ் மக்கள் சித்திக்க வேண்டிய கால கட்டம் இது. animiertes-denken-nachdenken-smilies-bil

இதுவரை செய்த தவறுகளை இனி செய்யாமல் இருந்தால்.... மீட்சி உண்டு.

இல்லையேல், தந்தை செல்வா சொன்ன மாதிரி...

தமிழ் மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். animiertes-beten-gebet-smilies-bild-0013

அந்த கடைசிப் பந்தி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. animiertes-daumen-smilies-bild-0004.gif

"தொப்பி" அளவானவர்கள் போட்டுக் கொள்ளலாம். animiertes-cowboy-smilies-bild-0012.gif

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.