Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நண்பனின்உண்மை கதையிது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Feb 10 2005, 08:49 PM

இதயத்து சேகங்களை

இறக்கிவைத்து

சுமக்கும் சுமைகளையும்

சொல்லிட வார்த்தைதேடி

கலைந்துபோகும் என்

கனவுகளை

கலைத்து பிடித்து

கட்டிவைக்க விழையும்

வாலிபன்நான்

வசந்தத்தை அனுபவிக்கும்

வயதில்

வறுமையை தாங்கலாம்

வெறுமையை...........??

முடியவில்லை

வீதியில் வீசப்பட்டடோ

விக்கப்பட்டவனே இல்லை

சொந்தம் சுற்றம்

எல்லாம் உண்டு

உற்றாருக்கும் பெற்றாருக்கும்

உதவி உதவியே

உதிரிபாகங்கள்

தேய்ந்துபோய்

உடலும் மனமும்

சோர்ந்து.....என்

துக்கங்களை

தூக்கம்மட்டும்

அவ்வப்போது

தத்தெடுத்து கொள்ளும்

இதோ என்னை

தத்து கொடுத்துவிட்டேன்

நிதந்தரமாக

(ஒரு நண்பனின்உண்மை கதையிது

சாத்திரி அண்ணை, உங்கட நண்பனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மற்றவன பிழிஞ்சு எடுத்து யாருண்டையும் உழைப்பில ஜாலியா வாழுறது எண்டா எங்கட சனத்த கேட்டுத்தான். அவேக்கு காசு மட்டும்வேணும். காச மாடுமாதிரி உழைச்சு சேர்க்கிறவன் எக்கேடுகெட்டு போனாலும் பரவாயில்லை.

அட, இவன் காசு எல்லாம் தந்தானே, உதவிகள் எல்லாம் செய்தானே, இவன் நல்லா இருக்க நாம ஏதும் செய்யக்கூடாதா எண்டு ஒரு நாய்கள் சிந்திப்பதில்லை.

இதாலதான் நான் உடலால உழைக்கிறத நிப்பாட்டிப்போட்டு ஆக படிச்சுக்கொண்டு மட்டும் இருக்கிறன். ஹாஹா... கலியாணம் கட்டாம சிங்கிளா இருந்து உழைச்ச்சா அந்தக்காச வறுகிறதுக்கு சனங்கள் எங்கையெண்டு பாத்துக்கொண்டு இருக்கிதுகள்.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள கவிதை தனது குடும்பத்திற்காகவே உழைத்து உருகிப்போன ஒரு நண்பன் அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான் அவளோ அவனது பணத்தை மட்டுமே காதலித்தாள். அவன் வேலை செய்ய 24 மணித்தியாலங்கள் போதாது.ஒரு நாள் அவனது காதலியும் அவனை புரிந்து கொள்ளாததால் மனமுடைந்து 2005 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பொழுது எழுதியது முடிந்தால் இதனை கதையாய் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட நண்பனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

இது போன்ற உண்மைகள் பலவுண்டு புகலிடத்தில். ஆணாதிக்க சிந்தனையால் அல்லது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பினால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தான். அதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.

சாத்திரி,

சிரிப்பைச் சித்தரிக்கும் வல்லமையும் சோகத்தை வரையும் உங்கள் துல்லியமும் மேலும் பல படைப்புகளை வெளிக்கொணர உதவும் என எவ்விதச் சந்தேகமுமின்றி நாம்புகிறேன்.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

நெஞ்சை கனக்க வைக்கிறது உங்கள் நண்பனின் கதை சாத்திரி அங்கிள் ஆழ்ந்த அநுதாபங்கள் :lol: தங்களின் நண்பனிற்கு..பட் எல்லாவற்றிற்கும் பயந்து இறுதியாக நண்பன் எடுத்த முடிவு அவ்வளவு சிறந்த முடிவு அல்ல :mellow: ...இவ்வளவு போராடினவர் இன்னும் போராடி இருக்கலாம் பட் ஒருவரின்ட முடிவை யாரால மாற்ற ஏலும்!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கலைஞன் கறுப்பி இளைஞன் ஜம்மு மற்றும் வாசுதேவன். வாசுதேவன் 95லை பரிஸ் 20 ல் ஒரு பெடியன் தூக்கு போட்டு இறந்தது கேள்விப்பட்டிருப்பீர்கள் எனக்குத் தெரிந்தவர்தான் அவர.; அவனை மனதில் நினைத்து எழுதியதுதான் அந்:த வரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது சும்மாவா..!

சோ சாட். :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது சும்மாவா..!

சோ சாட். :mellow:

நினைத்தேன் வந்தாய் இரு நூறு வயது :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாத்திரி இது? உயிர இவ்வளவு துச்சமா மதிச்சுப் போட்டாரே உங்கட நண்பர்? பிடிக்காட்டி தனியப் போய் ஒதுங்கி வாழ எவ்வளவு பரந்த உலகம் இருக்கு? நான் கேள்விப்பட்டன் தற்கொலை முடிவு கண நேரத்தில எடுக்கப் பட்டு செயல் படுத்தப் படும் ஒன்றெண்டு. தற்கொலை முயற்சி தோற்றவர்கள் வாழ்க்கை முழுக்க "இப்படி மோட்டுக் காரியம் செய்யத் துணிந்தோமே" என்று நினைத்து நினைத்து நடுங்குவார்களாம். அப்படிப் பட்ட ஒருவரை நேரில பார்த்தும் இருக்கிறன்.

ஒவ்வொரு மனிதனும் கொஞ்சமாவது சுயநலம் உள்ளவனாயும் இருக்கவேணும் எண்டதுக்கு ஒரு உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்தேன் வந்தாய் இரு நூறு வயது :rolleyes::wub:

என்ன சாத்திரி பாட்டை மறந்து போனியளா ?

''நினைத்தேன் வந்தாய் நூறு வயசு"

வாழ்வுடன் போராட முடியாத தருணங்கள் மனிதனை பல நேரங்களில் இத்தகைய முடிவுகளுக்குத் தூண்டுகின்றன. இதுபோல் பல்லாயிரம் சோகங்களுடன் புலத்தில் பலர் வாழ்கிறார்கள். காசுமரங்களாய் புலத்தார் உள்ளவரை இத்தகைய நிலைமைகள் தீராதப்பிணியாகவே தொடரும்.

கவிதை நன்று. கனத்த மனது இளைப்பாற இடமின்றி தன்னை அழித்தது கொடுமை.

சீ இது எல்லாம் என்ன ஒரு பெண்ணா, ஏன் தான் இப்படி ஆண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களோ தெரியல :rolleyes::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.