Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்தும் கோரி வருகிறது.- கோஹண

Featured Replies

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமது நாட்டுக்கு நாடு கடத்துமாறு இந்தியா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றது. இருந்த போதிலும் அவரைக் கைது செய்வது கடினமாகவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித் கோஹண தெரிவிததுள்ளார்.

இணையதளமொன்றிற்கான பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியவின் விஷெட படையணியின் உதவியுடனும் பிரபாகரனைக் கைது செய்வது சாத்தியமில்லையெனத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமிப்பது வெளிவிவகார அமைச்சினாலேயே தமாதமாவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அப்பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு.-

கேள்வி : விடுதலைப் புலிகளை ஆஸ்திரேலிய அரசு தடை செய்ய வேண்டுமென இலங்கை அரசு வற்புறுத்தியுள்ளதா? நீங்களும் தற்போதைய ஆஸ்திரேலியப் பிரதமரும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த இராஜதந்திரிகள் என்பதால் இது உங்களுக்கு இலகுவாக அமையுமல்லவா?

பதில் : இது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா சென்ற வேளை (அது தனிப்பட்ட விஜயமாக இருந்தபோதிலும்) இதற்கான கடும் முயற்சியை நான் மேற்கொண்டேன். இதற்கான பிரசராத்தை நான் சில காலமாக மேற்கொண்டு வருகின்றேன். இதில் வெற்றி பெறுவோம் எனக் கருதுகிறேன்.

கேள்வி : இதற்கான அறிகுறிகள் எவ்வாறு உள்ளன?

பதில் : இது வரை சிறப்பாக உள்ளன. புலிகள் மூவர் மெல்போர்னில் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்படடுள

"கோஹணவின் கனவு" நல்ல சினிமா பார்த்த மாதிரியுள்ளது. பேட்டி காண்பவர் கோஹணவைக் கோமாளியாக்கின்றாரா? இல்லை கோஹண பேட்டி எடுப்பவரைக் கோமாளியாக்கின்றாரா? இருவருமே கோமாளித்தனம் பண்ணுவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

இந்த கட்டுரையை படித்தா எவரும் இறைவன் கேட்ட கேள்வியைத்தான் கேட்ப்பார்கள்! ஆனாலும் பதிலென்னவெண்டா? இரண்டுபேரும் சேர்ந்து எல்லாரையும் முட்டாளாக்க பார்க்கீனம்.

உப்புடித்தான் வெற்றி நிச்சயம் றாணுவ நடவடிக்கை தொடங்கின உடன கொழும்பு பல்லகலைக்கழகத்தில சில பேராசிரியர் மார் சேர்ந்து பிரபாகரன் பிடிபடுவாரா அல்லது நஞ்சு குடிப்பாரா எண்டு ஆராஞ்சவயளாம்...

ஆராச்சிக்கான செலவை சனாதி நிதியத்திலே இருந்து பெற்றுக்கொண்டவையாம்....

ஆராச்சி முடிவில கெதீல நஞ்சு குப்பாரெண்டு சொன்னவை...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிஞ்சி கிளிநொச்சியில போய் நிண்டுகொண்டு கதைக்கிற மாதிரியெல்லோ கதைக்கிறாங்கள். முதல் ஆட்டை ஏலுமானால் வெட்டிப் பாருங்கடோவ்!

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சிக்கு போனால்கூட???

முடிந்தால்மாம்பழம் புடுங்க வேண்டுமானால்

முயற்சித்துப்பாருங்கள்???

பிரபாகரன்

ஒரு பிரளயம்

ஞாபகமிருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் இச்செய்தியை சிரிப்புக் களம் பகுதிக்கு நகர்த்தும் என எதிர்பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

prabhakaran-250_20022008.jpg

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பத்திரமாக இலங்கையிலிருந்து வெளியேற அனுமதிப்பது குறித்து சில காலத்திற்கு முன்பு ஒரு திட்டம் இருந்தது என்று இலங்கை வெளியுறவுத் துறை செயலாளர் பலிதா கொஹோனா கூறியுள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையிலிருந்து பிரபாகரன் வெளியேற அனுமதிப்பது குறித்து இடையில் யோசிக்கப்பட்டது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியேறினால் நிச்சயம் அவர் இந்தியாவிடம் சிக்கிக் கொள்வார். இதுதான் அவருக்கு உள்ள பெரிய பிரச்சினை.

இந்தியாவைத் தாண்டி எங்குமே பிரபாகரனால் செல்ல முடியாது. அது மிக மிகக் கடினம். இந்திய நீதிமன்றம் ஒன்று அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்தியா சட்டத்தை மிகவும் மதிக்கும் நாடு. பிரபாகரனை பிடித்துத் தருமாறு தொடர்ந்து இந்தியா எங்களுக்கு கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர் முக்கியக் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

நார்வேயில் பிரபாகரனுக்கு புகலிடம் கொடுக்க அந்த நாட்டு அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அது நல்ல ஐடியாதான். ஆனால் அது இடி அமீன் தீர்வாகத்தான் அமையும்.

(உகாண்டாவில் 1971ம் ஆண்டு ரத்தப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் இடி அமீன். பின்னர் உகாண்டாவுக்கும், தான்ஸானியாவுக்கும் இடையே போர் மூண்டபோது 1979ம் ஆண்டு உகாண்டாவிலிருந்து தப்பி லிபியாவுக்கு ஓடினார். பின்னர் 1981ம் ஆண்டு சவூதிக்கு திரும்பினார். சவூதி அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. 2003ம் ஆண்டு மரணமடையும் வரை சவூதியிலேயேதான் இருந்தார் அமீன்.)

ஆஸ்திரேலியாவில் தற்போது விடுதலைப் புலிகளுக்கு தடை இல்லை. அங்கும் தடை விதிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். அதற்காகத்தான் நான் ஜனவரி மாதம் அங்கு சென்றேன். சில வேலைகளைப் பார்த்து விட்டுத் திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார் கொஹோனா.

http://thatstamil.oneindia.in/news/2008/02...d-for-some.html

ஐயோ தலைவரே தப்பி போக போறாரா..?? அப்ப போராட்டம் சரிவராதா..???

அப்ப புலம் பெயந்தவை எல்லாம் ஏதாவது உருப்படி்யான வேலையை பாருங்கோ...!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சட்டத்தை மிகவும் மதிக்கும் நாடு

இது எப்ப தொடக்கம்??

தலைவர் தப்பிப்போக மாட்டார். படையினரிடம் சரணடையப்போறார். எனென்டா ஆ... நொந்த சங்கொறி சரணடையைச் சொல்லி தலைவருக்கு கடிதம் அனுப்பி காத்துக்கொண்டிருக்கிறாராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.