Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் மகாத்மா காந்தியால் மிகவும் கவரப்பட்டேன் பாரக் ஒபமா தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் மகாத்மா காந்தியால் மிகவும் கவரப்பட்டேன் பாரக் ஒபமா தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு - அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தெரிவில் ஜனநாயக கட்சியின் முன்னணி போட்டியாளராக விளங்கும் ஒபமா தான் மகாத்மா காந்தியின்பால் மிகவும் கவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சாதாரண மக்களால் அசாத்தியமான காரியங்கள் செய்ய முடியும் என்பதை ஞாபகப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை தனது அலுவலகத்தில் வைத்துள்ளதாக ஒபமா கூறினார். ""நான் எனது வாழ்க்கையில் மகாத்மா காந்தியை ஒரு முன்னுதாரணமாகவே எப்போதும் காண்கிறேன்.

சாதாரண மக்கள் இணைந்து அசாத்திய காரியங்களைச் செய்யவும் மாற்றத்தைக் கொண்டுவரவும் முடியும் என்பதை அவர் செய்து காட்டியவர்'' என "இன்டியா அப்ரோட்'' பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் ஒபமா குறிப்பிட்டிருந்தார்.

உண்மையான பெறுபேறுகள் வாஷிங்டனிலிருந்து மட்டும் வருவதல்ல உலகெங்குமுள்ள மக்களிடமிருந்து வருகின்றன என்பதை எனது அலுவலகத்திலுள்ள மகாத்மா காந்தியின் உருவப்படம் தனக்கு ஞாபக மூட்டுவதாக ஒபமா அக்கட்டுரையில் தெரிவித்திருந்தார்.

இந்திய அமெரிக்கர்கள் தனது பிரசார நடவடிக்கைகளில் இந்திய அமெரிக்கர்கள் வழங்கிவரும் ஆதரவு குறித்து பெருமைய டைவதாக ஒபமா தெரிவித்துள்ளார்

நன்றி:-வீரகேசரி நாளேடு -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து

பாரக் ஒபமா

நல்லதை நினைக்கலாம்

தப்பில்லை

காலநேரத்தையும் கணிக்கவேணும் பாருங்கோ

காந்தி வாழ்ந்த காலமும்

அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்களும்

நல்லவர்களாக

மனச்சாட்சிக்கு பயப்படுபவர்களாக

இருந்தபடியால்தான்

சாதாரண காந்தி

மகாத்மா காந்தி ஆனார்

ஆனால் இன்று அவரது நாட்டிற்கே

அவர் உதவாக்கரையாகி பலகாலமாகிறது

திலீபனை நாம் கொடுத்தும் அவர்கள் இரங்கவில்லை

பார்த்து

பாரக் ஒபமா

நல்லதை நினைக்கலாம்

தப்பில்லை

காலநேரத்தையும் கணிக்கவேணும் பாருங்கோ

:rolleyes::unsure:

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை கவருவதற்கான பரக் ஒபாமாவின் கைவண்ணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனம் ஒபமா கவனம்?

அமெரிக்காவில் காந்தீயம்????? கடைசியில் எல்லாம் கேள்விக்குறியாகி விடும் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes::unsure:

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை கவருவதற்கான பரக் ஒபாமாவின் கைவண்ணம்.

தங்களின் கருத்து சரியானதே!

ஆசியர்களின் முற்போக்கைப் பார்த்து அமெரிக்கர்கள் மெய்சிலிர்த்துள்ளார்கள் என்பதனை நினைத்தால் எமக்கும் பெருமையல்லவா?

அவர் திலீபனை பற்றி கேழ்விப்படவில்லை என்று நினைக்கிறேன் அது தான் காந்தியை புகழுகிறார்.

காந்தியின் பின்பு இவ்வளவு காலமாகியும் தன்னைக் கவரக் கூடியவர்கள் எவருமில்லை என்பது பரக் ஒபாமாவின் கருத்தாகவிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களே காந்தியை திட்டுகிறார்கள் ஜின்னாவிடம் பாகிஸ்தானை பிரித்து கொடுத்ததால் தான் இந்தியாவிற்கு பாகிஸ்தானால் இவ்வளவு பிரச்சனை என்று. இதுக்குள்ள ஒபமா காந்தியம் கதைப்பது வேடிக்கை தான்.

காந்திக்கு சுதந்திர தாகம் இருந்தது... ஒபாமாவுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது.பதவிக்கு வந்தவுடன் மறந்துவிடுவீர்கள் தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.