Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு தேர்தல் - கூட்டமைப்பில் முரண்பாடு?

Featured Replies

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு போட்டியிடாது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி அறிவித்திருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடுகள் உருவாகியிருப்பதாகத் தெரியவருகின்றது. இந்தநிலையில் இத்தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்க் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் இன்று மாலை நடைபெறவிருக்கின்றது. இக்கூட்டத்திலேயே இத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு எம்.பி.க்கள் மத்தியில் இரண்டு வேறுபாடான கருத்துக்கள் காணப்படுவதால் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு எவ்வாறானதாக இருக்கும் என்பதை அறிவதில் அரசியல் அவதானிகளின் கவனம் குவிந்திருக்கின்றது. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் எனத் தெரிவிக்கும் ஒரு தரப்பினர், தமிழர்களின் இந்தத் தாயகக் கோடபாட்டைச் சிதைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படும் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள்.

அத்துடன் பிள்ளையான்குழு ஆயுதபாணிகளாக நடமாடும் நிலையில் இத்தேர்தலை எதிர்கொள்வதிலுள்ள ஆபத்துக்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இவ்வாறான நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு அச்சத்தின் காரணமாக எவரும் முன்வர மாட்டார்கள் எனவும், அவ்வாறு முன்வருபவர்களும் ஆபத்தையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதேவேளையில் தேர்தலில் போட்டியிடாமல் விடுவதன் மூலம் பிள்ளையான் குழு வெற்றிபெறுவதற்கு வாய்பைக்கொடுப்பதாகிவிடும் என மற்றைய தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள். இது பிள்ளையான்குழுவுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதாகிவிடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இதனால் கூட்டமைப்பு எப்படியும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

இந்தப் பின்னணியிலேயே கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று நடைபெறவிருக்கின்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெறும் என கூட்மைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: http://www.webeelam.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பின்னணியிலேயே கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று நடைபெறவிருக்கின்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெறும் என கூட்மைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: http://www.webeelam.com

இந்த விடயதில் அதிக அறிவும் அனுபவமும் கொண்ட தலைவர் சம்பந்தந்தான். அவருடைய அவிப்பிராயம் மிகவும் முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட அபிப்பிராயங்களைவிட கிழக்கிலுள்ள பல தொகுதிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பொது அபிப்பிராயமே பெரிதும் பயனுடையதாக இருக்கும். தமிழ்ப் பிரதேசங்களில் கடந்த 25 வருடங்களாக யாரும் சுதந்திரமாக நடமாடமுடியாமல் கட்டுப்படுத்தப்பட்ட நிலை காணப்படுவதால் எந்த ஒரு தலைவரும் அடுத்த பிரதேசத்தின் நிலையைச் சரிவர அறிந்திருக்காத சூழ்நிலையே காணப்படுகின்றது. இப்;போதைக்கு தேசியத்தலைவரைவிட ஏகோபித்த தலைமைத்துவத்துடன் செயற்பட்டு பொறுப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள் யாருமில்லையென்றே கூறவேண்டும். திரு சம்பந்தர் ஐயா கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும் மட்டக்களப்புப் பிரதேசத்தின் அரசியல் ராணுவச் சூழ்நிலைகளை மிகத் தெளிவாகப் புரிந்து பொறுப்பு மிக்க முடிவுகளை மேற்கொள்ள அவருக்கு அப்பிரதேசத்தவர்களின் உதவி இன்றியமையாதது.

மட்டு உள்ளுராட்சித் தேர்தல் போன்றே கிழக்கு மாகாணசபைத் தேர்தலையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும். புறக்கணிக்க வேண்டும்.

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் உறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தேற்கடிக்க அரசும் அதன் அருவருடிகளும் கடுமையாக முயற்சிப்பார்கள். தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தோல்வி ஏற்படுத்தப்பட்டால் அது தமிழ் தேசியத்தை கிழக்கு மக்கள் நிராகரித்து விட்டனர் என்ற பரப்புரைக்கு வழி வகுத்துவிடும். யாருக்கு வெற்றி போகுதோ இல்லையோ என்பதைவிட தேர்தலைப் புறக்கணிப்பதே சிறந்தவழி.

ஜெயானந்தமூர்த்தி தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூடுகிறது.

இதனை வைத்து சபேசன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்குள் இரண்டுவித கருத்துக்கள் காணப்படுகின்றன என்று தனது ஊகிப்புக்களைச் செய்தியாக்கிறிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மின்னலின் கருத்து மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது. தமிழரைப் பொறுத்த அளவில் கிழக்கு மாகாண தேர்தல் தனியே வெற்றி தோல்வி என்பதைவிட அங்கு அலைக்கழியும் மக்களின் பாதுகாப்புச் சம்பந்தப்பட்டதாகவும் எதிர்காலத்தில் அப்பிரதேசத்தை எவ்வாறு தமிழர்கள் தங்கள் தாயகமாய் நிறுவி ஏனையவர்களின் ஆதிக்கத்திலிருந்து அதை விடுவிப்பது என்பதை நோக்காகக் கொண்டதாகவுமே உள்ளது.

தனியே ஜனநாயக அரசியலை மட்டும் வைத்துக்கொண்டு இக்காரியங்களை செய்யமுடியாது. மென்போக்கான கூட்டணி அரசியலில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் பலிக்கடாக்களாக்கபடுவதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

தற்போதைக்கு எமது பிரதேசங்களில் ஜனநாயக அரசியலுக்கு முன்னுரிமைகொடுத்து எவ்வித பாதுகாப்புமின்றி அப்பாவிகள் ஒவ்வொருவராகச் செத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் கொஞ்சம் ஒதுங்கியிருந்து மக்களை அரசியல் மயப்படுத்தி தேசிய முனைப்பை மாற்று வழிகளில் ஏற்படுத்துவதே சிறந்ததாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ்க் கூட்டமைப்பினர் பங்குபற்றாமலிருப்பதே நல்லது. மகிந்தவும், அவரது ஆயுதக்குழுவும் இணைந்து போட்டியிடும் இந்தத் தேர்தலில் அவர்கள் எப்படியாவது வெல்லவே முயற்சிப்பர். ஆடகளைக் கொன்றோ அல்லது கடத்தியோ தமிழ்க் கூட்டமைப்பினரைத் தோல்வியடையச் செய்வார்கள் என்பதில் ஐய்யமில்லை.

ஆட்களைப் பலிக்கடாக்களாக்குவதோடு மட்டுமல்லாமல் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்க்கூட்டமைப்பினரைத் தோற்கடிப்பதன் மூலம் தென் தமிழீழத்தில் புலிகளுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டவும் இத்தேர்தலை இவர்கள் பயன்படுத்தக்கூடும். மேலும் இந்தத் தேர்தல் நாடகமானது கிழக்கு திருவிளையாடல்களைப் பின்பற்றி மற்ற மாவட்டங்களிலும் நடைபெற வாய்ப்பிருக்கு.

ஆகவே எமக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத இந்தத் தேர்தலில் வாக்காளர்களும், வேட்பாளர்களும் பங்குபற்றாது பகிஷ்கரிப்பதே சிறந்தது.

இத் தேர்தலில் வெற்றிபெறுவது மகிந்த-பிள்ளையான் கூட்டணியாக இருந்தாலும் பரவாயில்லை, அது வெளியுலகால் தமிழ்த்தரப்பு பங்குபற்றாத தேர்தல் என்றே நோக்கப்படும்.

கிழக்கு மாகாண தேர்தலை புறக்கணிப்பதே நல்லது. அது இன்னொரு 1989 தேர்தலாகவே அமையட்டும்.

  • தொடங்கியவர்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு இன்று தம்முடைய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இன்று மாலை முதல் இரவு வரையில் சுமார் நான்கு மணி நேரமாக ஆர்.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் எவ்விதமான முடிவும் இல்லாமல் முடிவடைந்திருப்பதாகத் தெரிகின்றது. கூட்டமைப்பின் முடிவு அடுத்த வாரமே அறிவிக்கப்படும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இன்றிரவு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நியமனப் பத்திரங்கள் அடுத்தவாரம் முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. இந்தநிலையில், இத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் தமிழ்க் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடுகள் உருவாகியிருக்கின்றது. இதனால் இத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான உபாயங்களை வகுத்துக்கொள்வதில் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

இந்தநிலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டமைப்பின் உயர்மட்டக்கூட்டம் எவ்வித முடிவுகளும் இன்றி இன்றுவரையில் ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாலை 4.00 மணியளவில் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கூட்டம் மீண்டும் ஜெயவர்த்தனபுர, மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதில் ஆரம்பமாகி இரவு 8.00 மணியைத் தாண்டியும் நடைபெற்றபோதிலும், முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இத்தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குத் தமிழ்க் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றன. இந்தக் கட்சிகளுடன் அடுத்த வாரத்தில் பேச்சுக்களை நடத்துவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது. இந்தப்பேச்சுக்களைப் பொறுத்தே தமிழ்க் கூட்டமைப்பு தன்னுடைய நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் எனவும் தெரிகின்றது. இன்றைய கூட்டத்தில் இவ்விரு கட்சிகளும் விடுத்திருக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவற்றுடன் பேச்சுக்களை நடத்துவதற்குத் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றது. இதனால், இத்தேர்தலில் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது இறுதிநேரத்திலேயே தீர்மானிக்கப்படும் எனத் தெரிகின்றது.

மேலும் செய்திகளுக்கு : http://www.webeelam.com

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு இன்று தம்முடைய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இன்று மாலை முதல் இரவு வரையில் சுமார் நான்கு மணி நேரமாக ஆர்.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் எவ்விதமான முடிவும் இல்லாமல் முடிவடைந்திருப்பதாகத் தெரிகின்றது. கூட்டமைப்பின் முடிவு அடுத்த வாரமே அறிவிக்கப்படும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இன்றிரவு தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு : http://www.webeelam.com

இக்கட்டான நிலமை. கிழக்கு மாகாண நிலமை 1956க்கு முன்னைய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. திருமலை மாவட்டதில் இருந்துதான் கிழகின் விடுதலை அரசியல் ஆரம்பமானது.

போட்டியிட்டால் திருமலை மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. போட்டியிடாவிட்டால் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் வாக்காளர்கள் என்கிற அடிப்படையில் எதிர் அணி வெற்றிபெறும். தேர்தலைப் பகிஸ்கரிக்கும் கோரிக்கையை யார்வைத்தாலும் கிழக்கில் மக்கள் நிராகரித்துவிடுவார்கள். இந்த விடயத்தில் எங்கள் எல்லோரையும்விட சம்பந்தருக்கு அதிக அனுபவமும் அறிவும் இருக்கிறது. திருமலை மாவட்ட பிரதிநிதித்துமவமாவது இன்றைய சூழலில் அரசியல் ரீதியாக முக்கியம்.

  • தொடங்கியவர்

கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடாது இருப்பதற்கு வடக்கு கிழக்கு பிரிவினையை காரணம் காட்டுவது அவ்வளவு சரியாகப்படவில்லை. தமிழீழத்தை ஆதரிக்கும் கூட்டமைப்பு சிறிலங்கா அரசின் யாப்பினை ஏற்றுத்தான் சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுக்கும் போது சிறிலங்கா ஒரு தேசம் என்றும், சிறிலங்காவை பிரிப்பதற்கு துணை போக மாட்டோம் என்றும் உறுதி கூறித்தான் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். அதன் பிறகு அதே நாடாளுமன்றத்தில் தமிழீழத்திற்கு குரல் கொடுக்கின்றனர்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடுவதிலும் எந்தத் தவறும் இல்லை. வடக்கும் கிழக்கும் ஓரே தாயகம் என்பதற்கான கிழக்கு மக்களின் ஆணையை கூட்டமைப்பு கோரியபடியே தேர்தலில் நிற்கலாம். வெற்றி பெறுவதன் மூலம் கிழக்கு மக்களின் தீர்ப்பை சர்வதேசத்தின் முன்பு உறுதியாக வைக்கலாம்

ஆனால் இவைகள் எல்லாம் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறும் போது மட்டும்தான் சாத்தியமானவை. பிள்ளையான் குழுவும் மற்றைய துணைக் குழுக்களும் ஆயுதத்தோடு நின்று போட்டியிடுகின்ற போது, இவைகள் சாத்தியமற்றவை. கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டால் இன்றைய நிலையில் இரண்டு விடயங்கள்தான் நடைபெறும். ஒன்று கூட்டமைப்பு தோற்கடிக்கப்படும் மற்றது போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கொல்லப்படுவார்கள்.

கூட்டமைப்பின் சார்பில் முன்பு தெரிவாகியிருந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரை பிள்ளையான் குழு சுட்டுக் கொன்றிருக்கிறது. வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கூட்டமைப்பு உறுப்பினர்களின் உறவினர்களை கடத்தி வைத்துக் கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்கு போடும்படி பிள்ளையான் குழு மிரட்டியது. தற்பொழுது சிறிலங்கா அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் கூட்டமைப்பு உறுப்பினர்களின் உயிருக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை. அத்துடன் எப்படியும் கள்ள வாக்குகளின் மூலம் பிள்ளையான் குழுவே வெற்றி பெறும். ஆகவே கூட்டமைப்பு போட்டியிடுவதில் எந்த ஒரு பலனும் இருக்கப்போவது இல்லை.

அதை விட கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றி பெறுவதில் உள்ள நலன்களை விட, கூட்டமைப்பு தோல்வியுறுவதில் உள்ள பாதகங்கள் மிக அதிகமாகும். அந்த வகையில் தமிழ் மக்களுக்கு சில மாதங்கள் பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றாலும், தற்போதைய நிலையில் தேர்தலை புறக்கணிப்பதே கூட்டமைப்பிற்கு உள்ள சிறந்த வழியாக இருக்கும்.

தேர்தல் எதற்காக, கிழக்கில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகாகவா? அல்லது மகிந்தரின் வலையில் சிக்குவதற்காகவா?

தேர்தலில் வெற்றி பெற்றாலும் எதுவும் செய்ய முடியாது. சம்பந்தர் முடிவெடுத்தாலும் வேறு யார் முடிவெடுத்தாலும் சாதிக்கப் போவது தற்போதைய நிலையில் எதுவுமேயில்லை.

இது வீண் பிராயத்தனம். இலங்கைக்கான பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்துத் தமிழர் பிரதேசங்களில் பெரும்பான்மை பலம் காட்டப்பட்டும் கிடைக்காத பெறுபேறு இந்தத் தேர்தலில் கிடைக்குமென எவ்வாறு எதிர்பார்ப்பது.

திடுதலைப்புலிகளது ஆதரவு இந்தத் தேர்தலில் இருந்தாலே கூட்டமைப்பு வெற்றிபெற முடியும். அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் பலியாக்கப்படுவதுடன், தேர்தலில் இருந்து இடைநடுவில் பின்வாங்க வேண்டியும் வரும்.

இவ்வாறு சம்பந்தரால் யோசிக்க முடியும். ஆனால் இவர்களுக்குப் பாதுகாப்பு என்பது வழங்கப்படமாட்டாது என்பது நன்றாகத் தெரிந்து கொண்டும் தேர்தலில் குதிப்பது முட்டாள்தனம்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புலிகள் உத்தரவு

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை அரசாங்க செய்திதாளான தினமின தெரிவித்துள்ளது.

அண்மையில் க்ளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி பலியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே. சிவநேசனின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட போது பிரபாகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்களின் தமிழர்களை வாக்குகளை கோருவது தமிழீழத்தைப் பெற்றுக் கொள்ளத் தடையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தல்களில் கலந்து கொள்ளாததனால் ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிடாது என பிரபாகரன் எதிர்பார்ப்பதாக தினமின குறிப்பிட்டுள்ளது.

http://www.tamilwin.com/

கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு பங்கு பற்றுவது 'பயனற்றது' என்ற பொருள் பட எழுதிய கருத்தாளர்கள் இங்கு இன்னொரு விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த வருட நடுபகுதியில் அல்லது சற்று அதற்கு பின் நடைபெறலாமென கருதப்படும் பராளுமன்ற தேர்தலில் சூழல் இன்று இருப்பதைப் போல் அல்லது இதை விட மோசமாக இருக்கலாம். அப்போதும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய 'பயனற்ற' சூழலே இருக்கும்.

ஆக, வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு பங்கு பற்றுவது 'பயனற்றது' என்றே பொருள் படும்.

இவ்வாறான விவாதம் மொத்தத்தில் தமிழர் நலன்கள் குறித்த தொலை நோக்கற்றவை அல்லது பற்றாக்குறையானவை.

Edited by Kaandam

இன்றைய தேர்தலும் இனிவரும் தேர்தலும், இதற்கு முன் நடைபெற்ற தேர்தலும் தேவை கருதிய நடவடிக்கைதான் தமிழர் ஒருமைப்பாடு மட்டுமே தேர்தலின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட முடிவாகும் இதனைத் தவிர தேர்தலின் மூல்ம் சாதிக்கப்பட்டது எதுவுமில்லை.

ஆரம்பத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான ஒருமனதான வெளிப்பாடு, அடுத்தது சமாதான ஒப்பந்த காலத்தில் கூட்டமைப்பாக ஒருங்கிணைந்து வெளியிடப்பட்ட மக்களின் ஆதரவுத் தளம். ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பினால் வெளிக்காட்டப்பட்ட எதிர்ப்பும், ஒற்றுமையும். இதைத்தவிர இப்போது நடைபெறப்போகும் தேர்தலினால் எதை வெளிப்படுத்தப் போகின்றார்கள்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ததேகூ தீர்மானம்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கு இணைப்பை துண்டித்து கிழக்கை தனிமாகாணமாக பிரகடனப்படுத்தியதை கண்டித்தே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரித்தாளும் கொள்கைக்கு உடன்படப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இணைக்கப்பட்ட வடக்குகிழக்கில் ஒரு நிர்வாக அலகு என்பதே நிலையான கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபைத்தேர்தலை புறக்கணித்தமை தொடர்பான அறிவித்தல் விரைவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பங்கேற்பது என்பது தமிழ் மக்களின் கடப்பாட்டு உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு சமனாகும். ஸ்ரீலங்கா அரசாங்கம், அடிப்படையில் இந்திய ஸ்ரீலங்கா உடன்பாட்டை மீறியநிலையிலேயே வடக்குகிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்தது.

இந்தநிலையில் இரண்டு மாகாணங்களினது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வாழ்வுரிமையை அபிலாசையை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் வலியுறுத்தவேண்டும் என ஜெயாநந்தமூர்த்தி கோரியுள்ளார்.

வடக்குகிழக்கு மாகாணங்களுக்கான விசேட ஏற்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வருவது, சமாதான அடைதலில் பாரிய பயங்கரநிலையை தோற்றுவிக்கும் என இணைத்தலைமை நாடுகள் எச்சரித்துள்ளமையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயாநந்தமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியகட்சியும் ஜே வி பியும் தீர்மானித்துள்ளன. அரசாங்கம் தேர்தலுக்கான உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜே வி பியும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட தீhமானித்துள்ளது.ஜனநாயகத்தில

் நம்பிக்கை வைத்துள்ள தமது கட்சி அதனை அடிப்பiடாகக்கொண்டே கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்தாக ஜே வி பியின் நாடர்ளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த இரண்டு கட்சிகளும் நடந்துமுடிந்த கிழக்கு மாகாண உள்ளுராட்சி தேர்தலில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எடுத்த முடிவு சரியான நேரத்தில் சரியாக எடுக்கப் பட்ட முடிவு . பல குழப்பங்களை தவிர்த்து உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.