Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் முன்நகர்வு முறியடிப்பு: 55-க்கும் அதிகமான படையினர் பலி; 120-க்கும் அதிகமானோர் படுகாயம்

Featured Replies

மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்னகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 55-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் ஈஸ்டர் பெருநாளில் இராணுவம் முன் நகர்வு செய்தால் இதுதான் நடக்கும் .

அது எங்களின் விக்ரர் அண்ணாவின் இடம்.

இன்று இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்.

மறவாதீர்கள் இராணுவமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளுக்கு 3 புலிகளை கொன்றால் புலிகளை ஒளித்து விடலாம் என்றார்கள். இப்ப என்னென்றால் 50,60 என்று மேலே போகினம். மோட்டு சிங்களவங்கள் கோவணத்தோடை ஒடுறாங்கள். :mellow::(

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: நுனாவிலான்,

இப்பத்தான் சிங்களவங்கள் ஓர்மத்தோட போர் புரியத் தொடங்கியிருக்கிறாங்கள், நீங்கள் வேற லொள்ளுப்பண்ணிக்கொண்டு ! எனக்கினிக் கெட்ட கோபம் வந்திடும் பாருங்கோ !!!!!!!!!!

மன்னாரில் புதை குழிகளுக்குத் தட்டுப்பாடு வரப் போகின்றது. இவ்வளவும் சொந்த இடம் போய்ச் சேருமா? மரணம் வலிதான். அதை இராணுவம் உணரும். தலைமைப்பீடத்திற்கு அதை இராணுவம் உணர்த்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: இறைவன்,

யுத்தம் என்பது ஒருவழிப் பாதை என்பதும், சென்றால் திரும்பி வர முடியாது என்று அறிந்தும்தான் இதுவரை 40,000 சிங்களச் சிப்பாய்கள் தலை மறைவாக ஓடிவிட்டார்கள். வறுமைப்பட்ட சிங்கள் இளைன்சர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசு வாய்ப்பாகப் பயன்படுத்துகிறது.

பூநகரி "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையின் பின் அப்போதிருந்த ராணுவத் தளபதி சிசில் வைத்தியரட்னெ " புலிகள் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றைச் செய்திருக்கிறார்கள், அவர்களை வெல்வது கடிணம், நான் இத்தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலகுகிறேன்" என்று கூறியது நினைவு.

போரினால் தீர்வு இல்லையென்பது சிங்கள அரசுத் தலைவர் தொடக்கம், ராணுவத் தளபதிகள் வரை அறிந்த விடயம் தான். ஆனாலும் அவர்களது பேரினவாதப் போக்கும், இனவெறியும் அவர்களை தொடர்ந்து யுத்தத்துக்குள் வைத்திருக்கிறது.

சணல் அடிதான் போலகிடக்கு...

மணலாற்றிலிருந்து இங்கு வந்து, சும்மா பொறி கலங்குது. நிறுத்துவதற்குக் கூட முடியாமலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
:mellow: மணலாற்றிலிருந்து யார் வந்தது ?

மட்டக்களப்பிலிருந்து அதிரடிப்படை மணலாற்றுக்கு, மணலாற்றிலிருந்து பாதுகாப்புப் படை மன்னாருக்கு, அவ்வளவு கூட்டம். அலைமோதுகிறது மரணத்திற்கு. எல்லாம் "ம" வில் வருகுதில்ல, மானா அதிருது. (மகிந்தவும்)

சும்மா பொறி கலங்குது

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன்,

நல்லாத்தான் எதுகை மோனை வேலை செய்கிறது உங்களுக்கு. மன்னாரில் விழூற அடியைப் பார்த்தால் ஓர்மத்தொட சிங்களவன் போராடினாலும் கூட போதாது என்றுதான் நினைக்கிறேன்.

அவர் பாடு கஷ்ட்டம்தான்...யாரெண்டு கேக்கிறியளோ ???!!!

தமிழன் வீரம் அறிந்து கொள்ளட்டும்... சூடு கண்ட பூனை அடுப்பு பக்கம் அண்டாது..

மன்னாரில் ஈஸ்டர் பெருநாளில் இராணுவம் முன் நகர்வு செய்தால் இதுதான் நடக்கும் .

அது எங்களின் விக்ரர் அண்ணாவின் இடம்.

இன்று இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாள்.

மறவாதீர்கள் இராணுவமே.

:wub:^_^:unsure:

இதை நீங்க யாரையும் உசுப்பேத்த சொல்ல இல்லைதானே...??

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம் சிக்குன்குனியாவாலும் டெங்குவாலும் பாதிக்கப்பட்டிருப்பதனால் அதிரடிப்படையினரை நகர்த்தியுள்ளனராம்.. இராணுவத்தில் கடந்த இரு மாதங்களில் 11000 பேர் சேர்ந்துள்ளனராம்.. அதாவது சிங்கள இராணுவம் இன்னமும் களைப்படையவில்லை. மாறாகப் புலிகளைக் களைப்படைய வைக்க எல்லா முனைகளிலும் இராணுவம் முன்னேற முயல்கின்றது. இப்படியான நிலைமைகளிற்குள்ளும் எதிரிக்கு சாதகமான நிலை ஏற்படக்கூடாது என்று கண்துஞ்சாமல், தண்ணீர் சாப்பாடு இன்றி போராளிகள் மறிப்புச் சமரில் ஈடுபடுகிறார்கள்.

***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

:D சிங்களவன் சொன்ன செய்திதானே அது ?எவ்வளவுக்கு நம்பமுடியும் ? அப்பாவிகளாகக் கூட இருக்கலாமல்லவா ? இப்படி எத்தனை முறை அப்பாவிகளை புலிகளாகக் காட்டியிருக்கிறார்கள் ?

ஒருவேளை அது புலிகள்தான் என்றால், நிலமை மோசம். சொல்வதற்கு வேரொன்றுமில்லை

வேண்டாம் பிரச்சனை.....!

மன்னாரில் இரு முனைகள் ஊடான முன்னேற்ற முயற்சி முறியடிப்பு

மன்னார் பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதியிலிருந்து இருமுனைகள் ஊடாக சிறிலங்காப் படையினர் நேற்று அதிகாலை 4.30 மணியளவிலிருந்து பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர்.

இந்த முன்னேற்ற முயற்சிக்கு துணையாக படையினரின் பின்தளங்களிலிருந்து பல்குழல் வெடிகணைகள், ஆட்லெறித்தாக்குதல், மோட்டார்த்தாக்குதல்களுடன் நகர்வை முன்னெடுத்தனர்.

படையினரின் இந்த நகர்விற்கு எதிராக விடுதலைப்புலிகள் வழிமறித்து தாக்குதல் தொடுத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செறிவான எறிகணைத் தாக்குதல்களுடன் படையினரின் நகர்வு முறியடிக்கப்பட்டது.

இதில் 55-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 120-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை 5:00 மணிவரை நடத்தப்பட்ட தாக்குதலில் படையினரின் முன்நகர்வு முயற்றி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

படையினர் பின்தளங்களிலிருந்து நோயாளர் காவு வண்டிகள் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் படுகாயமடைந்த படையினரை ஏற்றி மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

இதனால் மன்னார் - வவுனியா சாலைப் போக்குவரத்து படையினரால் தடுக்கப்பட்டது.

மன்னார் தகவல்களின் படி மன்னார் மேற்கு பகுதியில் நேற்று அதிகாலை முதல் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் காயமடைந்த படையினரை மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகப் பிராந்தியச் செய்திகள் கூறுகின்றன.

காயமடைந்த படையினரை அனுமதிப்பதற்கென வைத்தியசாலையில் இரண்டு வார்ட்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதா

கிருபன்ஸ்

சனிக்கிழமை அதிகாலை மன்னார் களத்த்தில் கடுமையான மோதல்கள் வெடித்தன. விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் சில வற்றை படையினர் கைப்பற்றியிருந்தனர். அந்த நிலைகளில் நின்று போராடி வீழ்ந்த போராளிகளின் வித்துடல்களை இராணுவம் கைப்பற்றியது உண்மைதான்.

அதற்காக படைத்தரப்பு களத்தில் வென்றுவிடவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல்களினால் படைத்தரப்பிற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. 12 மணித்தியாலங்களாகத் தொடர்ந்த புலிகளின் முறியடிப்புத் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியததால் படையினர் தமது பழைய நிலைகளிற்கு பின்வாங்கினர்.

இந்தச் சண்டையின்போது ஒரு சதுர கிலோ மீட்டர் பகுதியைக் கைப்பற்றியதாக சனிக்கிழமை காலையில் அறிவித்த படைத்தரப்பு மாலையில் வெளியிட்ட செய்தியில் புலிகளின் இழப்புக்களை மாத்திரமே குறிப்பிட்டது. இடங்கள் கைபற்றப்பட்டமை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

படையினருக்கு புலிகள் குறிப்பிட்டதைவிட இழப்பு அதிகம் ஆனால் சிலகாரணங்களுக்காக புலிகள் குறைத்து சொல்லியுள்ளார்கள்

ஓயாத அலைகள் மூலம் முல்லைத்தீவு ராணுவ முகாம் வீழ்த்தியபொழுது அள்ளிய அனைத்து ராணுவதளபாடங்களும் சொல்லப்பட்டது காட்டப்பட்டது

பின்னர் கிளிநொச்சி ஆனையிறவு ராணுவமுகாம்கள் வீழ்த்தியபொழுது அள்ளியவற்றை சொல்லவில்லை காட்டவில்லை சிலகாரணங்களுக்காக

அதேபோல்தான் இதுவும்

ஒருநேரம் எல்லாம் வெளிவரும்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்ஸ்

சனிக்கிழமை அதிகாலை மன்னார் களத்த்தில் கடுமையான மோதல்கள் வெடித்தன. விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் சில வற்றை படையினர் கைப்பற்றியிருந்தனர். அந்த நிலைகளில் நின்று போராடி வீழ்ந்த போராளிகளின் வித்துடல்களை இராணுவம் கைப்பற்றியது உண்மைதான்.

அதற்காக படைத்தரப்பு களத்தில் வென்றுவிடவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல்களினால் படைத்தரப்பிற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. 12 மணித்தியாலங்களாகத் தொடர்ந்த புலிகளின் முறியடிப்புத் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியததால் படையினர் தமது பழைய நிலைகளிற்கு பின்வாங்கினர்.

இந்தச் சண்டையின்போது ஒரு சதுர கிலோ மீட்டர் பகுதியைக் கைப்பற்றியதாக சனிக்கிழமை காலையில் அறிவித்த படைத்தரப்பு மாலையில் வெளியிட்ட செய்தியில் புலிகளின் இழப்புக்களை மாத்திரமே குறிப்பிட்டது. இடங்கள் கைபற்றப்பட்டமை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

படையினரின் கடும் தாக்குதலில் முன்னணிக் காவலரண்கள் சில படைகளின் கைகளுக்குப் போயுள்ளன. அப்போது சண்டையில் உயிரிழந்த போராளிகளின் உடலங்களை இராணுவம் கைப்பற்றி இருக்கிறது. தொடர்ந்து சண்டை தீவிரமாக இராணுவம் பின்வாங்கி இருக்கக் கூடும்.

இந்த இராணுவ நடவடிக்கை பற்றி ரெயிலி மிரர் போன்றவை ஒரு செய்திதைத்தானும் விடவில்லை. இராணுவ இணையத்தளம் உயிலங்குளத்தில் சண்டை என்று போட்டிருக்கிறது. ஆக முன்னணிக் காவலரணில் நின்ற போராளிகள் பல்குழல் வெடிகணை மற்றும் டாங்கி, எறிகணைகள், தூர இலக்கு துப்பாக்கித் தாக்குதல்களில் பலியாகி இருக்கக் கூடும். அல்லது போராளிகள் ஊடுவித் தாக்கும் போது இராணுவத்தின் வியூக வலயத்துக்குள் சிக்கி இருக்கலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இராணுவம் 11 உடலைங்களைக் கைப்பற்றிய அதேவேளை 5 தொடக்கம் 7 துப்பாக்கிகளை மட்டுமே கைப்பற்றியதாகச் சொல்லி இருப்பது. சண்டைக்களத்துக்குள் போராளிகள் துப்பாக்கி இன்றி எப்படிப் போனார்கள்..??! ஆக முன்னணிக் காவலரணில் நின்ற போராளிகளே வீரச்சாவடைந்து இராணுவத்தின் ஆரம்ப கட்ட நகர்வின் போது அவர்களிடம் சிக்கி இருக்கலாம். பின்னர் சண்டை புதிய அணிகளால் தீவிரமாக்கப்பட இராணுவம் பின்வாங்கி இருக்க வேண்டும்.

எதுஎப்படியோ எமது உயிரிலும் மேலான 10 அல்லது 11 போராளிகளை இழந்துள்ளதுடன் அவர்களின் உடலங்கள் சிங்களப் போர் வெறியர்களுக்கு வெற்றிச் செய்தியாக காட்சிப்படுத்தப்பட அனுமதிக்கப்படுவது கவலையளிக்கும் விடயமே. அப்படங்களில் ஒன்றை இங்கு இணைத்திருந்தேன். மோகன் அதனை தூக்கிவிட்டார்..! அவர் தூக்கினாலும் உலகின் கண்களுக்கு எமது போராளிகளின் உடலங்கள் சிங்களத்தின் வெற்றிச் செய்திக்காக விளம்பரப்படுத்தப்படுவதன் தாக்கம் அதன் வலி எம்மவர்களால் உணரப்படுவதாக இல்லை..! :D

தாய் மண்ணின் ஆக்கிரமைப்பை எதிர்த்து சமராடி வீழ்ந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.