Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சண்டியர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சண்டியர்கள்

ஒரு பேப்பருக்காக

அண்மையில் முகத்தார்ஜேசுரட்ணம் அவர்களின் ஒலிநாடா வடிவில் இருந்த சில நாடகங்களை இறுவட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.அப்பொழுது

அண்ணை சனம் இருக்க இடம்இல்லாமல் நிக்கிது ஆனால் ஒரு மனிசி ஒருசீற்றை பிடிச்சுவைச்சிருக்குது ஆளை அரக்கி இருக்கசொல்லுங்கோ " எண்டதும் அந்த மனிசி என்னை தூசணத்தாலை பேசினபடி நீயாரடா எண்டு கேக்க. நான் மனிசியைபாத்து முறைக்க. பஸ் நடத்துனர் என்ரை காதுக்கை மெல்லமாய் "தம்பி இதுதான் வியாளி பேசாமல் இரு "எண்டவும் எனக்கு பயத்திலை கைகால்எல்லாம் உதறலெடுத்து போக வேண்டிய இடத்துக்குப் போகாமல் இடையிலேயே அடுத்த நிறுத்தத்திலை இறங்கிட்டன்.பிறகு வியாளிக்கு பயத்திலை கீரிமலைப்பக்கம் பல மாதமா போகேல்லை.

வியாளி னு ஏன் அப்படி வந்தது. ஏன் வியாளிக்கு பயப்படணும்? ஏன் அவா சண்டிக்காரியா? அல்லது கோரமான தோற்றமா? ஏன் பயப்பட்டியள்

எங்கட பக்கம் அப்புக்குட்டி ஒன்று ஒரு சண்டியர்..! அவரை அடக்க இயக்கத்தாலேயே முடியல...! ஒருமுறை மேற்சட்டை போடாமல் போதையுடன் எங்கள் வீதியால் போகும் போது நானும் என் நண்பனும் அவனிடம் "ஏன் சட்டை போடலை?" என்று கேட்டு வாங்கி கட்டினோம்..! அதனால் எனக்கு இரண்டு நாளா நல்ல காய்ச்சல் வேற....!

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொட்டடி, கோணாந்தோட்டம், சோனகதெரு, ஆரியகுளம் மற்றும் கரையூர், நாவந்துறை, இராசாவின்தோட்டம் இப்படியான இடங்களில் பல பிரபலம்வாய்ந்த சண்டியர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். நான் சிறுவனாக இருந்தபொழுது கிழமைக்கு ஒரு தெருச்சண்டையாவது பார்க்காமல் இருந்ததில்லை. போதாக்குறைக்கு மேற்குறிப்பிட்ட 3 இடங்களில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள். இது தவிர நான் வாழ்ந்த இடம் படித்த பாடசாலையும் இப்பகுதிகளுக்கு மிக அருகாமையிலேயே இருந்தது. வெளியில் நிகழும் தெருச்சண்டையை வகுப்பிலுள்ள மாணவர்கள் ஜன்னல்வழியாக பார்த்தபோதெல்லாம் வகுப்பு அல்லோலகல்லோலப்பட எத்தனையோ முறை பாடமும் தடைப்பட்டிருக்கிறது. வழக்கமாக சிறிய தகராறுகள் பெரிதாகி தெருச்சண்டையாக மாறும்போது அங்கு தாராளமாக வாள்வீச்சு தடியடி குண்டுவீச்சு இப்படியெல்லாம் நடக்கும். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதற்குப்பொறுப்பானவர்கள் எத்தனையோமுறை எனது நண்பர்களின் குடும்பத்தினராககூட இருந்திருக்கிறார்கள். 70-பதுகளின் காலப்பகுதிகளில் சில அனுபவம்குறைந்த இளைஞர்கள்கூட சிலவேளைகளில் சண்டியர்களாக மாறிவிட்டிருந்தனர். அவர்களைச் சண்டியர்கள் என்பதிலும் பார்க்க தமது வாழ்க்கையை ஓட்டுவதற்காக காடைத்தனங்கள் செய்து கொண்டு திரிந்தார்கள் என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் மனிசர்கள் எல்லாம் நல்ல மனிசர்கள் அவர்களுக்கு சண்டித்தனம் என்றால் என்னது என்றெ தெறியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் மனிசர்கள் எல்லாம் நல்ல மனிசர்கள் அவர்களுக்கு சண்டித்தனம் என்றால் என்னது என்றெ தெறியாது

ஏன் புத்தன் மானிப்பாய் மருதடிச்சந்தியிலை சண்டியன் சாத்திரி எண்டு கேள்விப்படேல்லையோ??சண்டித்தனம் பண்ணினதாலை இல்லை சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு நிண்டதாலை நானும் சண்டியன்தான்.மற்றபடி சண்டையெண்டால் எனக்கு சண்டிக்கட்டு நனைஞ்சிடும். :D:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாளி னு ஏன் அப்படி வந்தது. ஏன் வியாளிக்கு பயப்படணும்? ஏன் அவா சண்டிக்காரியா? அல்லது கோரமான தோற்றமா? ஏன் பயப்பட்டியள்

வெண்ணி மனிசி பெரிய சண்டித்தனம் பெரிய பெரிய பொலிஸ்காரரே அந்த மனிசிக்கு பயம்.அந்தளவு சண்டித்தனம் அரசியல் செல்வாக்கு இருந்தது.அந்த மனிசியோடை எனக்கு எதுக்கு வம்பு எண்டு ஓடிட்டன் :lol::lol::lol:

சாத்திரி அங்கிள் நீங்கள் வந்து எந்த சண்டியரின்ட ஆள் சொல்லவே இல்ல.. :lol: (ஏன் சொல்லுறன் என்டா)..சில பேர் இருக்கீனம் நான் இந்த சண்டியரின்ட ஆள் என்று சொல்லுற மாதிரி நீங்களும் ஏதாச்சும் "பிலிம்" காட்டினியளோ அது தான் கேட்டனான்.. :wub:

ஏனேன்டா நான் பள்ளியிள படிக்கிற காலத்தில நம்ம செட்டில இருக்கிற பெடியன் யாரொவை சாத்தி போட்டான் அடி வாங்கினவன் போய் யாரோ பெரிய சண்டியரிட்ட சொல்லிட்டான் பாருங்கோ :lol: ..(அந்த சண்டியரின்ட பெயர் ஞாபகம் வருதில்ல)..

அந்த சண்டியரின்ட ஆட்கள் வந்திட்டாங்க அந்த பெடியனை சாத்த..(நன்ன காலம் அந்த நேரம் நான் இல்ல)..இல்லாட்டி எப்படி நான் ஓடி இருப்பன் என்று உங்களுக்கு தெரிய வாய்பில்ல பாருங்கோ. :wub: .

நம்ம பெடியள் செட்டில நாலைந்து பேர் தான் நின்றவையாம்..(இவைக்கு பயத்தில என்ன செய்யிறது என்று தெரியாம) :lol: ..நாங்க வந்து யாரின்ட ஆட்கள் தெரியுமோ என்று சும்மா விட்டு இருக்கீனம்..அத கேட்டு போட்டு நன்ன சாத்தாம்.. :wub:

பிறகு தான் விசயம் தெரிந்தது உவை சொல்லிச்சீனமே நாங்கள் வந்து "யாரின்ட ஆட்கள் தெரியுமோ" என்று வந்ததே அவையின்ட் ஆட்கள் தானாம்..(இதை நினைக்க நினைக்க இப்பவும் சிரிப்பு தான் வாறது :lol: )..அது தான் சாத்திரி அங்கிளும் இது மாதிரி ஏதாச்சும் செய்தனியளோ என்று கேட்டனான்.. :(

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில விழுந்த ஒவ்வொரு அடியும் நம்மளிற்கு படி மாதிரி" :wub:

அப்ப நான் வரட்டா!!

வெண்ணி மனிசி பெரிய சண்டித்தனம் பெரிய பெரிய பொலிஸ்காரரே அந்த மனிசிக்கு பயம்.அந்தளவு சண்டித்தனம் அரசியல் செல்வாக்கு இருந்தது.அந்த மனிசியோடை எனக்கு எதுக்கு வம்பு எண்டு ஓடிட்டன் :wub::lol::lol:

:lol::lol: அப்படின்னா அரசியல் செல்வாக்கு உள்ளவர்களெல்லாம் சண்டியரோ?

இருப்பினும் அந்தக்காலத்திலேயே ஒரு பெண் (அதுதான் வியாளி) அரசியல் செல்வாக்கோடு சண்டிச்சி(சண்டியனின் பெண்பால் சண்டிச்சி தானே) இருந்தா என்றா அவாவைக் கண்டு உண்மையிலேயே ஓடித்தான் ஆகணும். :lol:

அது சரி யாழில் யாரப்பா சண்டியர் :rolleyes:

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் மாமாவுடன் மீன் வாங்குவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள பண்ணைக்கு போனோம். நான் சின்ன பெடியன். மாமாவுக்கோ நல்ல மீன் எப்படி வாங்குவது என்று அனுபவம் இல்லை. யாரோ கூறியதை கேட்டு ஒரு மொத்தமான மனுசிக்கு முன்னாலை இருந்த மீன்ர இ விலையயை கேட்டுப்போட்டு மீன்ரை வாயை விரித்துப்பார்த்தார். மனுசிக்கு வந்துதே கோபம். என்ன அதுக்குள்ள விரிக்கிறாய் என்று இதில் எழுத முடியாத சொற்களால் கத்தி குழற தொடங்கிப்போட்டுது. எங்களுக்கு வெட்கமாக போய்விட்டது. பிறகென்ன அன்றைக்கு ஆட்டிறைச்சி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போனோம்.

அது சரி யாழில் யாரப்பா சண்டியர் :rolleyes:

சா..உது கூட தெரியாதா..(அவமானம் :wub: )...வேற யார் ஒன்னு நம்ம குரு அடுத்தது நான் தான் என்ன பார்க்கிறியள் அப்படி தான் பாருங்கோ..(யாரிட்டையும் சொல்லி போடாதையுங்கோ என்ன :lol: )..பிரச்சினை வந்தா தெரியும் தானே என்ன செய்வோம் என்று.. :lol:

ஓ..உங்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்ல அதாவது :lol: ..(நாம போட்ட கோட்டை தாண்டி வெளியாள போகவே மாட்டோம் அத மாதிரி வாரவனும் நம்ம கோட்டை தாண்டி வரமுடியாது :lol: )..அப்படி வந்தா அழுதிடுவோம்... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்புடித்தான் என்ரை ஊரிலையும் மண்ணெண்ணை தகரம் எண்டொரு சண்டியர் இருந்தவர்

அவற்ரை சேட்டையும் ஆளும்.................. :D அந்த மனுசன் இப்ப உயிரோடை இருக்கோ ஆருக்குத்தெரியும் :D

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணி மனிசி பெரிய சண்டித்தனம் பெரிய பெரிய பொலிஸ்காரரே அந்த மனிசிக்கு பயம்.அந்தளவு சண்டித்தனம் அரசியல் செல்வாக்கு இருந்தது.அந்த மனிசியோடை எனக்கு எதுக்கு வம்பு எண்டு ஓடிட்டன் <_<:lol::D

அரசியல் செல்வாக்கு என்றால் ஐ.தே.க அல்லது சு.கச் சேர்ந்தவரா? இல்லை கூட்டணியா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தாங்கள் மிகப்பெரிய சனநாயக நாடு எண்டு மார்தட்டிக் கொள்ளுற இந்தியாதான்இலங்கையில் தனது படைகளை இறக்கியிருந்த காலத்தில் முதன் முதலாக ஆயுத முனையில்வடக்கு கிழக்கு மக்களை பலவந்தமாக ஒரு கட்சிக்கு வாக்களிக்க வைத்து வரதராஜபெருமாளை முதலமைச்சராக்கி சனநாயகத்தையும் வாக்களிக்கும் உரிமையையும் கேலிக்கூத்தாக்கியிருந்தனர். அது இன்றுவரை தொடர்கிறது.

இத்தேர்தலில் வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எப்பைத் தவிர வேறு கட்சிகள் போட்டியிட முடியாதபடி செய்தது இந்தியா. இதனால் தேர்தல் இல்லாமல் ஈ.பி.ஆர்.எல்.எவ் வடக்கில் வெற்றி பெற்றது. கிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எப், முஸ்லீம் காங்கிரஸ், ஐ.தே.க ஆகியன போட்டியிட்டன. அங்கே இந்தியாப்படையின் உதவியுடன் கள்ள வாக்குகள் போட்டும், மக்களை வெறுட்டியும் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் ஆகியவை வெற்றி பெற்றன. பிறகு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மக்களை ஆயூதமுனையின் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு வாக்குப்போட தேர்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் மக்களில் பலர் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற ஈரோசுக்கே வாக்களித்தார்கள். இந்திய அரசின் உதவியுடன் கள்ளவாக்குகளைப் பெற்று ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் கூட்டணி 3 இடங்களை யாழில் பெற்றது. மற்றைய 8 இடங்களிலும் ஈரோஸ் வெற்றிபெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உந்தச் சன்டியர்களின் பிரபல்யமான வசனம் ஒன்று அந்தப்பக்கம் வந்து பார் குடலை எடுத்து மாலை போடுவன் <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.