Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாதி சரி இல்லை என்றாள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்தை மகளோ...

அம்மான் மகளோ....

எந்தத் தலைமுறை தாண்டிவந்த உறவோ.......

நானறியேன்.....!

சிந்தைக்குள் உன் நினைவிருக்கு

சிதையாதே என் கனவிற்கு - என

கதைகதையாய் பல சொல்லி

உன் காலடியில் போட்டவளே.....

மடியோடு எனைச் சாய்த்து

தலைகோதி தாலாட்டி

மனதோடு ஒன்றி போனவளே....

நான் கேட்டா உன் மடி தந்தாய்....

நீதானே என் பதியென்றாய்

நீயாக நெருங்கிவந்து - எனை

தீயாக்கி போகாதே...

அணைத்து முத்தமிட்ட உன் இதழில்

பதிக்க மறந்தேன் என் முத்திரை - அதுதான்

தேடி அலைகிறேன் உன் முகவரி இன்று

உணர்வுகள் தரும் உறவை விட உன்

உறவுகள் சொல்லும் உரைகளோ

சரி உனக்கு....?

மனசுகள் பேசும் வாழ்வை விட உன்

மாமன் மகன் மதனா

பெரிது உனக்கு.....?

காய்வெட்ட நினைத்த காரியக்காறி

கையில் எடுத்த கத்தி

சாதிவெறி....!

மறத்தமிழர் குலந்தானே

நீயும் நானும் - இதிலேனடி

இனவெறி சொல்லும் சாத்திரங்கள்

இங்கே...!

கை முறிந்து போனதென்றால்

கரம் மாற்றி வருவேன்

கால் உடைந்து போனதென்றல்

பொற்காலில் நடபேன்

கண்களே குறுடானால்

தானக் கண்ணில் பார்பேன்

அட போட..........

சாதி சரி இல்லை என்றாள்

எங்கே போய்ச் சாவேன்.......?

வீரமும் காதலும்

மறத்தமிழன் மரபாம்

ஓமோம்......

கதைகளில் மட்டும்

அழகாக இருக்கு

மனங்கொண்ட காதல்

நீ புதைத்தாய்

நான் விதைத்தேன்

என் கண்களாவது நீறூற்றி வளர்க்கட்டும்

நாளைய காதலருக்கு

இளைப்பாறும் இடமேனும் ஆகட்டும்

அந்த மரம் !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா கனவான்களே

இது களத்தில் நான் கிறுக்கிய முதல் அ ஆ.....

சரி பிழை சொல்வீர்கள் என்றால் ம்கூம்.......எதாவது பிழைகளை சுட்டிக்காட்டினால்த்தானே திருந்த திருத்த வாய்ப்பாக இருக்கும். கருவே பிடிக்கலையோ .....கவியாக தெரியலையோ......?

கவிதை சூப்பரா இருக்கிது. எழுத்துப்பிழைகள் எழுத எழுத வாசிக்க வாசிக்கப்போகும். பின்னால கனவான்கள் எழுத்துப்பிழைகளை திருத்தம் செய்ய வந்துகொண்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கிலியன்!உங்கள் கவிதை மிக அழகு . வாழ்த்துக்கள் . தொடருங்கள் innocent0006.gif

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் காய் வெட்டிறதென்றால் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பார்கள். பெண்கள் மீது நம்பிக்கை வைக்கும் ஆண்கள் போல முட்டாள்கள் உலகில் எவரும் இல்லை என்பேன்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலர் அண்ணிக்கு சமைக்கத் தெரியவில்லை என்பதற்காக பெண்ணினத்தையே வெறுப்பது எந்தவிதத்தில் நியாயம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மலர் அண்ணிக்கு சமைக்கத் தெரியவில்லை என்பதற்காக பெண்ணினத்தையே வெறுப்பது எந்தவிதத்தில் நியாயம் :rolleyes:

மலரண்ணியா யாரவோ..?! குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதிங்க கு.சா. :lol::lol:

நான் கண்ட உண்மையைச் சொன்னன்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலரண்ணியா யாரவோ..?! குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதிங்க கு.சா. :lol::lol:

நான் கண்ட உண்மையைச் சொன்னன்..! :)

இருப்பினும் பெண்ணினத்தை நீங்கள் எதிர்ப்பது தவறு.எப்படியிருப்பினும் உங்கள் மனைவியை அந்த கடவுள்கள் தான் காப்பாற்ற வேண்டும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று.போற போக்கை பார்த்தால் கிடைக்கிற வரைக்கும் லாபம் என்று போய்க்கொன்டிருக்கனும் போல :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பினும் பெண்ணினத்தை நீங்கள் எதிர்ப்பது தவறு.எப்படியிருப்பினும் உங்கள் மனைவியை அந்த கடவுள்கள் தான் காப்பாற்ற வேண்டும். :lol:

தப்பு கு.சா யாரையும் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்றில்லை. மனிசர் மனிசரைக் காப்பாற்ற முற்பட்டால் போதும். இப்படிக் கவிதைகள் பிறக்காது கு.சா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தப்பு கு.சா யாரையும் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்றில்லை. மனிசர் மனிசரைக் காப்பாற்ற முற்பட்டால் போதும். இப்படிக் கவிதைகள் பிறக்காது கு.சா. :lol:

இப்ப பிரச்சனை மனிசரை கண்டு பிடிக்கிறது தானே :lol::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி கவனக்குறைவால் எழுத்துப் பிழைகள் வரவே செய்கின்றன......கவனித்துக்கொள்

சங்கிலியன் அருமையான கவிதை பராட்டுக்கள். உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.

நெடுக்கு பொதுவா காய் வெட்டுறது எல்லாவிடயத்திலும் ஆண்கள் தான். ஆனால் நெடுக்குக் பெண்களைப் பற்றி எழுதுறது எண்டால் அல்வா சாப்பிடுறமாதிரி <_<

சங்கிலியன் அடுத்தமுறை அவரை கண்டால்

சாதிகள் இல்லையடி சரசு!

குலம் தாழ்த்தி உயர்த்தாமல் உரசு!!

என்று இரண்டே வரிகளில் சொல்லி விடுங்கள் <_<:icon_idea::D

Edited by vettri-vel

//குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதிங்க கு.சா./

குடும்பம் என்றால்? ;)

கவிதை கருத்தோடு இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

//குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதிங்க கு.சா./

குடும்பம் என்றால்? ;)

கவிதை கருத்தோடு இருக்கு..

வீட்டில என்ன நல்ல பிள்ளை என்று நினைச்சுக் கொண்டிருக்காங்க. எங்க வீட்டைத்தான் சொன்னன் குடும்பம் என்று..! <_<

நெடுக்கு பொதுவா காய் வெட்டுறது எல்லாவிடயத்திலும் ஆண்கள் தான். ஆனால் நெடுக்குக் பெண்களைப் பற்றி எழுதுறது எண்டால் அல்வா சாப்பிடுறமாதிரி :D

அது ஒரு காலம் ஆண்கள் காய் வெட்டினது. இப்ப எல்லாம் பெண்கள் காய் வெட்ட ஆண்கள் கண்ணீர் விடுற காலமாப் போச்சுங்கோ..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரசிகையின் வாழ்த்துகளுக்கு நன்றி.

சங்கிலியன் அடுத்தமுறை அவரை கண்டால்

சாதிகள் இல்லையடி சரசு!

குலம் தாழ்த்தி உயர்த்தாமல் உரசு!!

என்று இரண்டே வரிகளில் சொல்லி விடுங்கள்

Tகிச் பொச்ட் கச் பேன் எடிடெட் ப்ய் வெட்ட்ரி-வெல்: நேற்று, 01:35 PM

வெற்றி வரிகள் சற்று தூக்கலாக இருக்குதே

அது ஒரு காலம் ஆண்கள் காய் வெட்டினது. இப்ப எல்லாம் பெண்கள் காய் வெட்ட ஆண்கள் கண்ணீர் விடுற காலமாப் போச்சுங்கோ..!

நெடுக்கால போவார் ஆண்கள் கண்ணீர் விட்டால் கோழைகளாம் ,வேசம் போடுறமாம் .....என்ன செய்வது...?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவார் ஆண்கள் கண்ணீர் விட்டால் கோழைகளாம் ,வேசம் போடுறமாம் .....என்ன செய்வது...?

இப்படிச் சொல்லித்தான் ஆண்களின் கண்ணீர் விடும் உரிமையைக் கூட பறிக்கின்றனர் பெண்கள். ஆண்களும் இவற்றுக்கு பயந்து கொண்டு... பெண்களுக்கு பயந்து ஒரு ஆண் தனது உணர்வுகளைக் கூட வெளிப்படுத்த முடியாது போவது மிகவும் மோசமான நிலை. அப்படியான பெண்களை நிராகரிப்பது மேல் அங்கீகரிப்பதிலும்..! :lol:

அட..சங்கிலியன் அண்ணாவை பார்த்தா உப்படி சொல்லிட்டா :o ..நினைக்கவே கவலையா இருக்கு..(அட நான் பகிடிக்கு பிறகு கோவித்து போடாதையுங்கோ) :D ..கவி வரிகள் ஒவ்வொன்றுமே ஒரு கதை சொல்கின்றன வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் பல கதைகள் சொல்லட்டும் உங்கள் கவிதைகள்.. :D

மனங்கொண்ட காதல்

நீ புதைத்தாய்

நான் விதைத்தேன்

என் கண்களாவது நீறூற்றி வளர்க்கட்டும்

நாளைய காதலருக்கு

இளைப்பாறும் இடமேனும் ஆகட்டும்

அந்த மரம் !!!

கதையை கவிதையில் கேட்டு இரசிப்பதில் ஒரு சுகமல்லவா...உங்கள் கவி வரியில் என்னை மிகவுமே கொள்ளை கொண்ட வரிகள் இந்த வரிகள்..(சொல்ல வார்த்தைகல் இல்ல).. :D

சாதியால்

பாதியில்

இழந்தேன்

என் நாதியை.. :D

என்று சொல்லுங்கோண்ணா..சரி சரி கவலைபடாதையுங்கோ :o ஏணேண்டா பொண்ணுங்க எல்லாம் உப்படி தான் உப்ப அவையள் நம்மள வெங்காயங்கள் எண்டு நினைக்கிறதிகுள்ள நாம காய் வெட்டிட வேண்டும் அது கெட்டிதனம் எனி அப்படி செய்யுங்கோ என்ன.. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='Jஅமுன' டடெ='Jஉன் 11 2008, 03:34 ஆM' பொச்ட்='418259']

[cஒலொர்="#0000FF"]அட..சங்கிலியன் அண்ணாவை பார்த்தா உப்படி சொல்லிட்டா :நுப்: ..நினைக்கவே கவலையா இருக்கு..(அட நான் பகிடிக்கு பிறகு கோவித்து போடாதையுங்கோ) :D ..கவி வரிகள் ஒவ்வொன்றுமே ஒரு கதை சொல்கின்றன வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் பல கதைகள் சொல்லட்டும் உங்கள் கவிதைகள்.. :icon_idea:

கதையை கவிதையில் கேட்டு இரசிப்பதில் ஒரு சுகமல்லவா...உங்கள் கவி வரியில் என்னை மிகவுமே கொள்ளை கொண்ட வரிகள் இந்த வரிகள்..(சொல்ல வார்த்தைகல் இல்ல).. :rolleyes: [/cஒலொர்]

[cஒலொர்="#9932CC"]சாதியால்

பாதியில்

இழந்தேன்

என் நாதியை.. :o [/cஒலொர்]

[cஒலொர்="#0000FF"]என்று சொல்லுங்கோண்ணா..சரி சரி கவலைபடாதையுங்கோ :நுப்: ஏணேண்டா பொண்ணுங்க எல்லாம் உப்படி தான் உப்ப அவையள் நம்மள வெங்காயங்கள் எண்டு நினைக்கிறதிகுள்ள நாம காய் வெட்டிட வேண்டும் அது கெட்டிதனம் எனி அப்படி செய்யுங்கோ என்ன.. :லொல்: [/cஒலொர்]

[cஒலொர்="#FF00FF"]அப்ப நான் வரட்டா!![/cஒலொர்]

[/ஃஉஒடெ]

ஜமுனா இது என் நன்பனை ஏமாற்றிய எனது சொந்தகாரி வீட்ல நண்பனுக்காக நியாயம் கேட்டு மூக்குடைபட்டு இயலாமையில் எழுதியது...அம்மாடியோ காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம்....

வழ்த்துகளுக்கு நன்றி ஜமுனா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடியோடு எனைச் சாய்த்து

தலைகோதி தாலாட்டி

மனதோடு ஒன்றி போனவளே....<<<

இந்த வரிகள் அருமையாக இருக்கிறது

நான் கேட்டா உன் மடி தந்தாய்....

நீதானே என் பதியென்றாய்<<<

கவிநயத்தோடான வார்த்தைகள்

...

காய்வெட்ட நினைத்த காரியக்காறி

கையில் எடுத்த கத்தி

சாதிவெறி....!

****எழுத்துப்பிழை : காரியக்காரி...****

...!

கை முறிந்து போனதென்றால்

கரம் மாற்றி வருவேன்

கால் உடைந்து போனதென்றல்

பொற்காலில் நடபேன்

**நடப்பேன்**

கண்களே குறுடானால்

**குருடானால்***

தானக் கண்ணில் பார்பேன்

அட போட..........

**டி))

மனங்கொண்ட காதல்

நீ புதைத்தாய்

நான் விதைத்தேன்

என் கண்களாவது நீறூற்றி வளர்க்கட்டும்

**நீரூற்றி*** ** நீறு என்றால் சாம்பல் ** அல்லது தணல் **நீறாக நின்றெரிவது என்றும் பொருள் படும்...எழுத்துப்பிழைகளைக் கவனியுங்கள் கவிதை அர்த்தமே மாறிவிடும் அபாயம் இருக்கிறது :rolleyes:

கருத்து நன்று...

பெண்கள் காய் வெட்டிறதென்றால் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பார்கள். பெண்கள் மீது நம்பிக்கை வைக்கும் ஆண்கள் போல முட்டாள்கள் உலகில் எவரும் இல்லை என்பேன்..! :icon_idea:

எப்படியோ நெடுக்ஸ் அண்ணை ஒரு விடயத்தை ஒத்துக்கொண்டுவிட்டார்....அண்ண

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கை தமிழுக்கு நன்றிகள்,

கவி எழுதி அனுப்பிவிட்டுத்தான் எழுத்துப் பிழைகளை உணர்தேன்,மீள்திருத்தம் செய்வதற்குள் கள உறவுகளின் கருத்துக்கள் வந்துவிட்டன, அதன் பின் திருத்துவது தவறென்பதால் அப்படியே விட்டுவிட்டேன். பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறந்த கவிதை,வாழ்த்துகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகளுக்கு நன்றி வசீ , எழுத்துப்பிழைகளை திருத்திவிட்டேன்,தங்கை தமிழ்.

அத்தை மகளோ...

அம்மான் மகளோ....

எந்தத் தலைமுறை தாண்டிவந்த உறவோ.......

நானறியேன்.....!

சிந்தைக்குள் உன் நினைவிருக்கு

சிதையாதே என் கனவிற்கு - என

கதைகதையாய் பல சொல்லி

உன் காலடியில் போட்டவளே.....

மடியோடு எனைச் சாய்த்து

தலைகோதி தாலாட்டி

மனதோடு ஒன்றி போனவளே....

நான் கேட்டா உன் மடி தந்தாய்....

நீதானே என் பதியென்றாய்

நீயாக நெருங்கிவந்து - எனை

தீயாக்கி போகாதே...

அணைத்து முத்தமிட்ட உன் இதழில்

பதிக்க மறந்தேன் என் முத்திரை - அதுதான்

தேடி அலைகிறேன் உன் முகவரி இன்று

உணர்வுகள் தரும் உறவை விட உன்

உறவுகள் சொல்லும் உரைகளோ

சரி உனக்கு....?

மனசுகள் பேசும் வாழ்வை விட உன்

மாமன் மகன் மதனா

பெரிது உனக்கு.....?

காய்வெட்ட நினைத்த காரியக்காரி

கையில் எடுத்த கத்தி

சாதிவெறி....!

மறத்தமிழர் குலந்தானே

நீயும் நானும் - இதிலேனடி

இனவெறி சொல்லும் சாத்திரங்கள்

இங்கே...!

கை முறிந்து போனதென்றால்

கரம் மாற்றி வருவேன்

கால் உடைந்து போனதென்றல்

பொற்காலில் நடப்பேன்

கண்களே குருடானால் - தவம்

இருந்தேனும் பார்ப்பேன்

அடி போடி..........

சாதி சரி இல்லை என்றாள்

எங்கே போய்ச் சாவேன்.......?

வீரமும் காதலும்

மறத்தமிழன் மரபாம்

ஓமோம்......

கதைகளில் மட்டும்

அழகாக இருக்கு

மனங்கொண்ட காதல்

நீ புதைத்தாய்

நான் விதைத்தேன்

என் கண்களாவது நீரூற்றி வளர்க்கட்டும்

நாளைய காதலருக்கு

இளைப்பாறும் இடமேனும் ஆகட்டும்

அந்த மரம் !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.