Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனிப்புயல் படங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

வெள்ளை ஆக்களில மாற்றம் பெரிசா தெரியாது. அதேபோல காப்பிலிகள் கறுப்பாத்தான் இருக்குங்கள். இந்த இரண்டுக்கும் நடுவில.. இருக்கினம்.. அவைதான் கொஞ்சம் குளிருக்கு மூடிக்கட்டிறதால அவிஞ்சு சுவப்பாவினம்.. பிறகு சமருக்கு பழைய படி மாறிடுவினம்..!

அதெல்லாம் ஜீனில வரனும். அப்பதான் நிரந்தர வெள்ளை ஆகலாம்.

நானும் கறுப்புத்தான். வெள்ளையில்ல..! :icon_mrgreen:

பானையில் இருந்தால்த்தான் அகப்பையில் வரும் எண்டு ஊரிலை சொல்லுறவை

ஏன் கு.சா சலிச்சுக்கிறீங்க. இப்ப நான் சொல்லித்தாரனில்ல. அதுபோல நடந்துக்கோங்க.. குளிரை மகிழ்ச்சியோட கழிக்கலாம்..! :lol:

58mu7.jpg

Edited by nedukkalapoovan

  • Replies 69
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல 4 எழுத்துப் படிச்சா ஆட்களிடம் அறிவுரை கேட்காமல் இவ்வளவு நாளும் நம்பிக் கொண்டிருந்தது தப்புத் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல 4 எழுத்துப் படிச்சா ஆட்களிடம் அறிவுரை கேட்காமல் இவ்வளவு நாளும் நம்பிக் கொண்டிருந்தது தப்புத் தான்!

எதுக்கும் பியுட்டி பாலருக்கு போய் பிளீச் பண்ணிக்குங்க. பெட்டையள் செய்யுறதாப் போல..! அப்பப்ப கிறீமுகளையும் வாங்கி அப்பிக்குங்க. கான்ட்சம்மா வருவீங்க. காண்ட் சம்மா வராமா.. கனடா பிகர் மாட்டாது..! குறிப்பு.. இப்ப கிறிஸ்மஸுக்கு எல்லாம் நல்ல மலிவா போகுது. உங்க இடுப்பு சைச விட இரண்டு மூண்டு கூடின.. ஜீன்ஸ் வாங்கி வையுங்க. கழர கழர போட்டிட்டு.. தெத்தி தெத்தி நடந்தால் தான் காண்ட் சம்..! மிச்சம் நான் சொல்லித் தரத் தேவையில்ல ரொண்டோ தெருக்களிலேயே பார்க்கலாம் தானே பசன் சோ..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஜீன்சைப் போட்டு விட்டுத் தான் கழருவதை மறைக்க பாவடை மாதிரி சேட் போடுகின்றோம் அல்லவா! அப்படி உடுப்புப் போட்டால் மட்டும் போதாது, ஏதாவது றாப் பாட்டுக் கேட்டபடி, அல்லது கேட்காவிட்டாலும், அதுக்கேற்ற மாதிரி கையை, காலைப் போட்டு ஆட்டி ஆட்டி நடக்கணும்... இதெல்லாம் பழக எவ்வளவு காலம் பிடிக்குமொ தெரியல்ல...

எதுக்கும் பியுட்டி பாலருக்கு போய் பிளீச் பண்ணிக்குங்க. பெட்டையள் செய்யுறதாப் போல..! அப்பப்ப கிறீமுகளையும் வாங்கி அப்பிக்குங்க. கான்ட்சம்மா வருவீங்க. காண்ட் சம்மா வரமா.. கனடா பிகர் மாட்டாது..! குறிப்பு.. இப்ப கிறிஸ்மஸுக்கு எல்லாம் நல்ல மலிவா போகுது. உங்க இடுப்பு சைச விட இரண்டு மூண்டு கூடின.. ஜீன்ஸ் வாங்கி வையுங்க. கழர கழர போட்டிட்டு.. தெத்தி தெத்தி நடந்தால் தான் காண்ட் சம்..! மிச்சம் நான் சொல்லித் தரத் தேவையில்ல ரொண்டோ தெருக்களிலேயே பார்க்கலாம் தானே பசன் சோ..! :D

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :lol::lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

அது உண்மைதான். நீங்கள் நாட்டிலை இப்ப இருந்தால், நீங்கள் இப்ப இங்கேயிருக்கிற கலரை விடக் குறைவாகத்தான் இருப்பீர்கள். அதுக்காக, கறுப்பாக இருக்கிறவை வெள்ளையாக மாறிவிடுவினம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :lol::D

நெடுக்ஸ் அண்ணைக்கு,

கனடாக்குளிரைப்பற்றித் தெரியுமோ?!!! நீங்கள் சொல்லுறமாதிரி உடுப்பு,தொப்பி,சப்பாத்து எல்லாம் போட்டு விண்வெளியில் இறங்கிறவையை விட சுத்துசுத்தெண்டு உடுப்புகளைச்சுத்தி அதுக்குமேல் ஜக்கெற் அணிந்துதான் போறனாங்கள், கண் மட்டும் தான் தெரியும் அதுவும் காற்றடிக்கும் போது கண் எரிஞ்சு தண்ணி/கண்ணீர் வரும்.

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :lol::lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

ஆஹா,,,தமிழச்சி...." நல்லா உறைக்கிற மாதிரிச்சொல்லுங்கோ. பெண்களைப்பற்றிய மட்டமான இவர்களின் அபிப்பிராயம் இவர்களாவே ஏற்படுத்திக்கொண்டதுதான்...என

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மைதான். நீங்கள் நாட்டிலை இப்ப இருந்தால், நீங்கள் இப்ப இங்கேயிருக்கிற கலரை விடக் குறைவாகத்தான் இருப்பீர்கள். அதுக்காக, கறுப்பாக இருக்கிறவை வெள்ளையாக மாறிவிடுவினம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

கனடாவில் முதல் வருட அநுபவம்.

பனி வீழ்ந்த அந்த முதல் நாள் காலையில் வேலை;ககுப் போவதற்காக வெளியே வந்த எனக்கு வெண்துகள்களால் முடப்பட்டிருந்த முற்றத்தையும் வீதிகளையும் பார்த்து ஒரே ஆனந்தம்.

அந்தப் பஞ்சு போன்ற பனிப்படலத்திற்குள் என் கால்களை வைப்பதற்கே கவலையாக இருந்தது. ஆனால் இப்போது பனிப் பொழிவு என்றதுமே எரிச்சலாய் இருக்கிறது.

சில விடயங்கள் ஓய்வாக இருந்து ரசிப்பதற்கு ஆனந்தம் தான். ஆனால் அவை தரும் சிரமங்கள் அவற்றை வெறுக்க வைக்கின்றன.

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

நிச்சயமாக மாற்றலாம். பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்து. :icon_mrgreen::lol::D

பனிப்புயலின் படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

பனி பெய்யும் போது குளிர்வதை விட , அது கரையும் நாட்களில் ( மாசி ,பங்குனி ) ஒரு குளிர் காற்று மிகவும் வாட்டி எடுக்கும் .

காது இருக்கிறதா ? கைவிரல் இருக்கின்றதா என்று சந்தேகம் வந்து தொட்டுப்பார்த்து உறுதி செய்ய வேண்டி இருக்கும் .

பனியில் வழுக்கி விழுந்து , உடலில் எங்கு நோ ஏற்படுகின்றதோ ..... அந்த இடத்தில் அடுத்த வருடமும் அதே நேரம் , நோகும் என்று நகைச்சுவையாக இங்கு சொல்வார்கள் . :icon_mrgreen:

தமிழ்சிறி, உடனே அதனைக் கவனத்தில் கொள்ளாதவர்களுக்குத்தான் இப்படி ஏற்படும். அவர்கள் சாதாரணமாக விழுந்ததுதானே என நினைத்து அதற்கு மாசாஜ் ஒன்றும் செய்யாமல் விடுவார்கள். பனியில் விழுவதென்பது மிகவும் ஆபத்தானது. உடனே மசாஜ் செய்து அவ்வலியை முழுவதுமாகப் போக்கிவிட்டால் இத்தகைய வலிகள் இருக்காது. ஒருசிலர், வலி கொஞ்சம் குறைந்ததுமே மசாஜை நிறுத்திவிடுவார்கள். இப்படியானவர்களுக்குத்தான் குளிரின்போது, மீண்டும் வலி எடுக்கும். புதிதாக வருபவர்கள்தான் அதிகம் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :D:lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

புகலிடத்தில் வாழும் பெண்களில் குறிப்பிடத் தக்க தொகையினர் இவ்வகையினரே. மேலும் இன்னும் சிலர் மனசுக்குள் எதிர்பார்ப்பதும் அதுவே. ஆனால் பெற்றோர் கட்டுப்பாட்டால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை..! அல்ல ஏன்.. பொடியள் இப்படி திரிய முற்படுறாங்கள். வேற ஸ்ரைலுக்கு மாறிவிடுவாங்களே..! என்ன செய்யுறது பெண்களின் ரசனை மட்டம் ஒரு மட்டமானது என்பதை ஒத்துக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான்..! :lol: :lol:

நெடுக்ஸ் அண்ணைக்கு,

கனடாக்குளிரைப்பற்றித் தெரியுமோ?!!! நீங்கள் சொல்லுறமாதிரி உடுப்பு,தொப்பி,சப்பாத்து எல்லாம் போட்டு விண்வெளியில் இறங்கிறவையை விட சுத்துசுத்தெண்டு உடுப்புகளைச்சுத்தி அதுக்குமேல் ஜக்கெற் அணிந்துதான் போறனாங்கள், கண் மட்டும் தான் தெரியும் அதுவும் காற்றடிக்கும் போது கண் எரிஞ்சு தண்ணி/கண்ணீர் வரும்.

நான் பூமியின் வடமுனைக்கு கிட்ட போய் கூட போய் பனியில உருண்டு விளையாடினனான். அப்புறம்.. என்ன..!

நாங்கள் எல்லாம் துருவக் கரடிகள் போல.. சூழலுக்கு இசைவாக்கப்பட்டவர்கள்..! என்ன செய்யுறது இதைக் கேட்க பொறாமையாத்தான் இருக்கும்..! :D

புகலிடத்தில் வாழும் பெண்களில் குறிப்பிடத் தக்க தொகையினர் இவ்வகையினரே. மேலும் இன்னும் சிலர் மனசுக்குள் எதிர்பார்ப்பதும் அதுவே. ஆனால் பெற்றோர் கட்டுப்பாட்டால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை..! அல்ல ஏன்.. பொடியள் இப்படி திரிய முற்படுறாங்கள். வேற ஸ்ரைலுக்கு மாறிவிடுவாங்களே..! என்ன செய்யுறது பெண்களின் ரசனை மட்டம் ஒரு மட்டமானது என்பதை ஒத்துக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான்..! :icon_mrgreen::lol:

ஒருவன் எதை நாடுகிறானோ அதுதான் அவன் கண்களுக்குத் தெரியும். :D:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் எதை நாடுகிறானோ அதுதான் அவன் கண்களுக்குத் தெரியும். :icon_mrgreen::lol::D

இப்படிச் சொல்லிச் சொல்லியே உலகை ஏமாற்ற வேண்டியதுதான்..! ஆனால் செய்வதெல்லாம்...?! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்சிறி, உடனே அதனைக் கவனத்தில் கொள்ளாதவர்களுக்குத்தான் இப்படி ஏற்படும். அவர்கள் சாதாரணமாக விழுந்ததுதானே என நினைத்து அதற்கு மாசாஜ் ஒன்றும் செய்யாமல் விடுவார்கள். பனியில் விழுவதென்பது மிகவும் ஆபத்தானது. உடனே மசாஜ் செய்து அவ்வலியை முழுவதுமாகப் போக்கிவிட்டால் இத்தகைய வலிகள் இருக்காது. ஒருசிலர், வலி கொஞ்சம் குறைந்ததுமே மசாஜை நிறுத்திவிடுவார்கள். இப்படியானவர்களுக்குத்தான் குளிரின்போது, மீண்டும் வலி எடுக்கும். புதிதாக வருபவர்கள்தான் அதிகம் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள
  • தொடங்கியவர்

கேள்வி:

அழகு நிலையத்திற்கு போய் தன்னை அழகுபடுத்துவது ஒரு பெண் செய்யக்கூடாத ஒரு செயலா? அப்படி செய்யும் பெண்களுக்கும் செய்யாத பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்த கேள்வியை பிரதானமாக வைத்து ஒரு திரியை ஆரம்பித்தால் என்னவென்று தோன்றுகின்றது !!

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி:

அழகு நிலையத்திற்கு போய் தன்னை அழகுபடுத்துவது ஒரு பெண் செய்யக்கூடாத ஒரு செயலா? அப்படி செய்யும் பெண்களுக்கும் செய்யாத பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்த கேள்வியை பிரதானமாக வைத்து ஒரு திரியை ஆரம்பித்தால் என்னவென்று தோன்றுகின்றது !!

இப்படி ஒரு கேள்வியைகே கேட்கப்படாது. ஏனெனில் அழகு நிலையம் போகாத ஆண்கள் அருகிவருகிறார்கள். அந்தளவுக்கு அழகில் அக்கறை.. எல்லாருக்கும்..! யாருக்குத்தான் அழகா இருக்க விருப்பமில்லாமல் இருக்கும்..!

நான் மேலே ஒரு உதாரணத்துக்காகக் கையாண்டனே தவிர பெண்கள் அழகு நிலையம் போகக் கூடாது என்பதல்ல அதன் பொருள். இக்கேள்வி எனது கருத்தைத் திரிக்காது இருக்க இதை இப்பவே சொல்லிடுறன்..! :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :wub::wub:

உங்கடை கதையை பாத்தால் ஏதோ நாங்கள் இஞ்சை கோமணத்தோடை திரியிறவடியாலைதான் குளிராலை கஸ்ரப்படுறமாதிரியெல்லே கிடக்கு.

நாங்கள் குளிர் மழை வெய்யில் எண்டு பாராமல் மாடுமாதிரி உழைக்கிறம்.என்னோடை வேலை செய்யுற ஐரோப்பியக்காரனே குளிர்தாங்கேலாமல் அப்பப்ப டாக்குத்தரும் வீடுமாய்த்திரியுறான்.அப்ப அவனுக்கும் களிசான் சப்பாத்து போடத்தெரியேல்லையோ?

இவரொருத்தர் என்னடாவெண்டால் எங்களுக்கு நல்ல சப்பாத்து போடத்தெரியாதாம் . நல்லசட்டையள் போடத்தெரியாதாம் . ஐயா நெடுக்கு அவர்களே?உங்கடை புலம்பெயர் சனம் சம்பந்தமான ஒருசில ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பாக்கேக்கை நீங்கள் எப்புடியான பஞ்சப்பரதேசியளோடை பழக்கவழக்கங்கள் வைச்சிருக்கிறியள் எண்டு அப்பட்டமாய் தெரியுது.

நாங்கள் மின்சாரம்,எரிவாயுவிலை மிச்சம் புடிச்ச காசிலையும் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் சேகரிச்ச காசிலையும்தான் எங்களோடை கூடப்பிறந்ததுகுகளையும்

சுற்றத்தாரையும் வாழவைச்சுக்கொண்டிருக்கிறம்.

பொழுதுபோக்கிறதுக்காக குளிருக்கை விளையாடுறவனுக்கும் வேலைக்காக குளிருக்கை நிக்கிறவனுக்கும் அனுபவங்கள் வித்தியாசந்தான்.இருந்தாலும் பாகை செல்சியஸ் பற்றி பொழுது போக்குபவர்கள் கதைக்கிறது கொஞ்சம் சங்கடமாய் கிடக்கு.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

இருந்தாலும் நெடுக்குசாமி நீங்கள் மேலை எழுதினதை திருப்பி ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ.

இது எத்தினை பேரின்ரை மனதை பாதிக்கும் தெரியுமோ?அதுதான் களவாய் கடந்து வந்தவையள் குளிருக்கை அவதிப்பட்டு கைகால்களை இழந்து கற்பிழந்து பல துன்பங்களை அனுபவிச்சு கொண்டிருக்கிற ஆக்களை நீங்கள் இன்னும் சந்திக்கேல்லையோ?

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :wub::wub:

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :lol::wub:

நீங்கள் குளிர்பற்றி கதைக்கேக்க, குமாரசாமி அண்ணா சொல்லிறதையும் வாசிச்சபிறகு எனக்கு ஓர் சம்பவம் நினைவுக்கு வருகிது.

இஞ்ச ஒருத்தர் இப்பிடித்தான் இரவு பகலாய் மாடு மாதிரி வேலை செய்யுறது. பிறகு வெளியால நள்ள குளிருக்கபோயிட்டு உடம்பு விறைச்சபடி வேலையால வீட்டவந்துபோட்டு... கை சரியா விறைச்சுப்போனதால குளிரால தீவிரமா பாதிக்கப்பட்ட நிலையில, ஓடிப்போய் பைப்பை திறந்து நல்லாய் சுடுதண்ணிய திறந்து ஓடவிட்டு அதுக்க கையை வைச்சு குளிரை போக்கி இருக்கிறார். பிறகு நடந்தது என்ன தெரியுமோ? கொஞ்ச நேரத்தால 911ஐ அழைச்சு.. பிறகு வைத்தியசாலைக்கு போய் கடைசியில அவரிண்ட ஒரு கையை வெட்டி அகற்றியது. கொதிநீரால அது அவிஞ்சு செயல் இழந்துபோட்டிது. இந்தக்கதை எனக்கு சொன்னது ஓர் வழக்கறிஞர். தன்னடட்ட ஏதோ அலுவலாய் வாரவறாம். தனக்கு சோகக்கதையை சொல்லி இருந்தார் எண்டு ஏதோ கதைக்கேக்க சொன்னா.

எண்டபடியால... உந்த குளிரை சும்மா எடுக்கப்படாது. கொஞ்சம் கவலையீனமாக இருந்தால் உயிரையே பறிச்சுவிடும்.

Edited by முரளி

அதற்கு வேறும் காரணங்கள் இருக்கலாம் முரளி. யேர்மனிக்கு வரும் பலர் ஆரம்பத்திலே செய்யும் வேலை உணவகங்களில் கோப்பை கழுவுதல்.. சிலருக்கு கழுவுதலுக்கு பாவிக்கும் மருந்தின் ஒவ்வாமையால் கை விரல்களின் தோல் வெடிக்கும்.. எனினும் தாயகத்திலே அவர்களின் குடும்பத்தின் தேவைகளையோ அல்லது அவர் யேர்மனி வந்ததற்கான கடனுக்காகவோ, அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அது வேலையைச் செய்வார்கள்.. குறிப்பிட்ட காலத்தில் வெடித்த தோல் பகுதிகளினூடாக உட்செல்லும் நீர் எலும்புகளைத் தாக்கும்வேளையில்.. சிலர் கைவிரல்களை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

பல நாடுகளிலே எம்மவர்களில் கண்ட முக்கியமான நோய் முதுகு வலி. எனது அறிவுக்கு எட்டியவரையில் அளவுக்கு மிஞ்சிய உடலுழைப்பால் இது உருவாகிறதோ என நினைக்கிறேன். எதுக்கும் நெடுக்ஸ் இந்தக் கருத்தை கவனித்தால் விளக்கம் அளியுங்கள்!! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :wub: :wub:

அப்புடி சொல்லுங்கோ சோழியண்ணை :lol: ஏதோ கொஞ்சப்பேர் இப்ப தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமெண்டு குலுக்கீனம் அதுவும் ஒருசில லண்டன் டமிழ்ஸ்??????

யாழில் உலாவரும் லண்டன் உறவுகள் மன்னிக்கவும்.

எனது முக்கிய உறவினர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றார்கள்.அவர்களின் வாழ்க்கையும் ஒருசில பழக்கவழக்கங்களும் பாசைகளும் பரிபாசைகளும் காறித்துப்புமளவுக்கே இருக்கின்றது.தமிழ் கதைத்தால் கேவலம் வெட்கம் என நினக்கின்றார்கள் எம்மவர்கள்.அதுவும் நெடுக்கர் இருக்கும் நாட்டில். :wub:

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

ஒரு முடிவோட தான் இருக்கிங்களா தூய்ஸ்?

Edited by தூயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை கதையை பாத்தால் ஏதோ நாங்கள் இஞ்சை கோமணத்தோடை திரியிறவடியாலைதான் குளிராலை கஸ்ரப்படுறமாதிரியெல்லே கிடக்கு.

நாங்கள் குளிர் மழை வெய்யில் எண்டு பாராமல் மாடுமாதிரி உழைக்கிறம்.என்னோடை வேலை செய்யுற ஐரோப்பியக்காரனே குளிர்தாங்கேலாமல் அப்பப்ப டாக்குத்தரும் வீடுமாய்த்திரியுறான்.அப்ப அவனுக்கும் களிசான் சப்பாத்து போடத்தெரியேல்லையோ?

இவரொருத்தர் என்னடாவெண்டால் எங்களுக்கு நல்ல சப்பாத்து போடத்தெரியாதாம் . நல்லசட்டையள் போடத்தெரியாதாம் . ஐயா நெடுக்கு அவர்களே?உங்கடை புலம்பெயர் சனம் சம்பந்தமான ஒருசில ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பாக்கேக்கை நீங்கள் எப்புடியான பஞ்சப்பரதேசியளோடை பழக்கவழக்கங்கள் வைச்சிருக்கிறியள் எண்டு அப்பட்டமாய் தெரியுது.

நாங்கள் மின்சாரம்,எரிவாயுவிலை மிச்சம் புடிச்ச காசிலையும் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் சேகரிச்ச காசிலையும்தான் எங்களோடை கூடப்பிறந்ததுகுகளையும்

சுற்றத்தாரையும் வாழவைச்சுக்கொண்டிருக்கிறம்.

பொழுதுபோக்கிறதுக்காக குளிருக்கை விளையாடுறவனுக்கும் வேலைக்காக குளிருக்கை நிக்கிறவனுக்கும் அனுபவங்கள் வித்தியாசந்தான்.இருந்தாலும் பாகை செல்சியஸ் பற்றி பொழுது போக்குபவர்கள் கதைக்கிறது கொஞ்சம் சங்கடமாய் கிடக்கு.

இருந்தாலும் நெடுக்குசாமி நீங்கள் மேலை எழுதினதை திருப்பி ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ.

இது எத்தினை பேரின்ரை மனதை பாதிக்கும் தெரியுமோ?அதுதான் களவாய் கடந்து வந்தவையள் குளிருக்கை அவதிப்பட்டு கைகால்களை இழந்து கற்பிழந்து பல துன்பங்களை அனுபவிச்சு கொண்டிருக்கிற ஆக்களை நீங்கள் இன்னும் சந்திக்கேல்லையோ?

கு.சா அண்ணா.. இதில வருத்தப்பட என்ன இருக்குது. நாங்கள் காலம் காலமா சிங்களவனை.. கள்ளத்தோணி என்றல்லையா. மோட்டுச் சிங்களவன் என்றல்லையா... மலையக தமிழ் மக்களை.. தோட்டக்காட்டான்.. கள்ளத்தோணி... வடக்கத்தையான்.. என்றல்லையா. அப்ப எல்லாம்.. அவைட மன வருத்தம் புரியல்ல.. யாழ்ப்பாணத்தாருக்கு.

இப்ப உண்மையாவே.. அவை களவா வந்து அசைலம் அடிச்ச உண்மையைச் சொன்னா மனம் நோகுதாம். நொந்தா நோகட்டும். இவை நோகடிச்ச மனங்கள் எத்தனை எத்தனை அத்தனைக்கும் யார் ஆறுதல் சொல்வது..!

வெள்ளையள் கூட அசைலம் சீக்கர் என்ற உடன இரண்டாம் பட்சமாத்தான் நடத்தினம். அப்படி இருக்கேக்க..!

அதுகிடக்கட்டும்..

என்னோட நண்பர் வட்டம்.. படிக்கிற இடம்சார்ந்ததால.. அதிகம்.. கருத்துக்களை உள்வாங்கக் கூடியதா இருக்குது. எம்மவர்கள் மீசை வைச்சுத் திரிவதை.. சிரிப்புக்குரிய விடயமாக்கி.. நக்கல் அடிச்சு மகிழ்ந்ததை நானே கண்டு.. பொங்கி எழுந்திருக்கிறன். இருந்தாலும் அவர்களின் எண்ணத்தில் நம்மவர்கள் ஜோக்கர்களாகவே காட்சி அளிக்கின்றனர். அதை மாற்ற முடியவில்லை..!

அப்படி ஏன் நாம் நடந்து கொள்ள வேண்டும்..?! ஏன் இங்கு பிறந்த நம்மவர் பிள்ளைகளுக்கே பெற்றோரின் செயற்பாடுகளில் திருப்தியில்லை. அதை பல பெற்றோர் அறிவதில்லை. தாம் செய்வது சரி என்றே நினைக்கின்றனர். காரணம்.. அவர்களுக்கு சுட்டிக்காட்டி மாற்றங்களை பரிந்துரைக்க யாரும் இல்லை என்பதுதான் முக்கிய காரணம். இப்படி வெட்கம் பார்த்தால் ஏதும் பெரிசா மாற்றங்கள் வரும் என்று நான் நினைக்கல்ல. இது வெட்கப்படுவதற்குரிய தேசங்கள் அல்ல. நாம் எம்மை தயார் செய்ய வேண்டிய தேசங்கள்..!

நாங்கள் 7/24 மணி நேரமும் குளிருக்க விளையாடச் சொல்லேல்ல. நானும் கடினமான வேலைகளுக்குப் போய் இருக்கிறேன். குளிருக்குள் நின்று வேலை செய்திருக்கிறேன். இருந்தாலும்.. இயற்கையை என்ஜோய் பண்ண வேண்டிய நேரங்களில் பண்ணி இருக்கிறோம்.

எம்மவர்கள் நிகழ்வுகளில் வெள்ளைகள் கலந்து கொள்வது மிகக் குறைவு. காரணம் எம்மவர்கள் அவர்களுடன் சேர்வதில்லை. ஆனால் படிக்கும் இடங்களில் அப்படியல்ல. நாங்கள் எல்லாம் நண்பர்களாக பகிடியாகக் கூட பல உண்மைகளை சொல்வோம். அது எமக்கு அவர்கள் எப்படி எங்களை நோக்குகின்றனர்.. அவர்களின் எண்ணத்தில் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதையெல்லாம் அறிய முடியும். அந்த வகையில் அறிந்ததைக் கொண்டுதான் நான் கருத்தெழுதுகிறேன்.

சோழியண்ணன் குறிப்பிடுவது போல.. நான் எம்மவர்களை இங்கு எழுதுவதுபோல வெளியில் அகதி என்றெல்லாம் அழைப்பதில்லை. இங்கு எழுதுவது ரோசம் வரட்டும் என்றுதானே தவிர.. புண்படுத்தனும் என்பதற்காக அல்ல.

எம்மவர்களுக்கு நிறைய உதவிகளை.. எனக்கு தெரிந்த வழிகாட்டுதல்களை செய்திருக்கிறேன். அதுமட்டுமன்றி எம்மவர் பிள்ளைகளின் கல்விக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். இங்கு பல பெற்றோர் அனுப்பப்படும் கடிதங்களை சரிவர வாசிச்சு விளங்க முடியாத நிலையில் பிள்ளைகளின் ஆரம்பக் கல்விக்குரிய பாடசாலை அனுமதிகளைக் கூட இழந்து நிற்கின்றனர். பல ஆண்டுகளாக வாழ்கின்றனர். ஆனால் தொடர்பாடல் மொழியை விருத்தி செய்ய முயல்வதில்லை. பலருக்கு அதற்காக உள்ள வசதிகள் பற்றியே தெரியாது.

பல நோயாளிகள்.. சரியான குளிர் உடுப்பின்றி வந்துபோவதை அவதானித்திருக்கிறேன். அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் உபாதைகளாகக் கருதுவதாக மருத்துவ ஆலோசகர்களே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவற்றை இங்கு சொன்னால் அது எம்மவருக்கு.. வெட்கமாக.. பஞ்சப்பட்டினிகளாக... தெரிகிறது.

யதார்த்தம் என்பது நாம் விரும்பும் வடிவில் எப்போதும் இருப்பதில்லை. அதை அப்படியே எதிர்கொண்டால் தான் தேவையான மாற்றங்களை பரிந்துரைக்க முடியும். அதைவிடுத்து கற்பனையில் யதார்த்ததை தீர்மானித்துக் கொண்டு வாழ்வதால் தான் எம்மவர்களில் பலர் படும் துன்பங்களை நாமே அறியாது.. செய்திகளாக்கி வாழ்ந்து வருகிறோம். அவர்களுக்கான உதவும் கரங்களாக இருக்க முயலாமல். அந்த நிலை மாறி எமது மக்களும் இதர சமூகத்தினரால்..எல்லா வகையிலும் மதிப்போடு நோக்கப்படும் நிலை உருவாகனும் என்பதே எனது விருப்பம். அவா..! :wub: :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :wub: :wub:

நாங்கள் எங்களை குறைவாக எண்ணிக் கொண்டு.. இருப்பதால் தான் அடுத்தவர் சொல்லும் நியாயம் கூட எமக்கு குறையாகப்படுகிறது. அதை தமக்கு தாமே சமாதானம் சொல்லி எம்மவர்கள் சரிக்கட்ட முயல்கின்றனரே தவிர.. தேவையான மாற்றங்கள் என்ன என்பதைக் கண்டறிந்து அதன் படி போக நினைப்பதில்லை..! இது புலம்பெயர்ந்த எம்மவரில் இருக்கும் ஒரு குறைபாடு..!

நான் நிஜத்தில் தமிழர்களையோ.. இல்ல பிற மக்களையோ வேறு பிரித்துப் பார்த்துப் பழகுவதில்லை. யார் எம்மோடு பழக ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்களோடு பழகுவேன். ஆர்வம் காட்டாதவர்களிடத்தில் வலிந்து போய் பழகமாட்டேன். தேவைகளுக்காக பேசிக் கொள்வேன்..! :wub::lol:

படங்கள் இணைப்பிற்கு நன்றி நிழலி......!

வந்த புதிதில் தெரியத்தனமாக வேகமாக நடந்து, தண்ணி தான் கிடக்கு என்று நினைத்து நடந்தெல்லாம் சறுக்கி விழுந்திருக்கேன். சிலநாள் வீட்டிலேயே வலியால் இருந்துமிருக்கின்றேன். வலி எல்லாம் வலிக்கவில்லை..... ஆனால் பல தடவை பள்ளி போகும் குழந்தைகள் முன்னால் விழுந்தது தான் ஏதோ கொஞ்சம் மானக்கேடாக இருந்தது...

ஹிஹி வாசிக்க சிரிப்பாவும் இருக்கு, கவலையாவும் இருக்கு.கவனமா நடந்து திரியுங்கோ , அண்ணா ,எதுக்கும் உதவிக்கு அருவியைக் கூட்டிக் கொண்டு போங்க :wub: :wub:

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

அது சரி நீங்கள் ஏன் வெள்ளையாகனும் எண்டு ஆசைப்படுறீங்கள்.. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.