Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்தரின் பெயரால்

Featured Replies

Edited by mathuka

நன்றி... புத்தனின் பெயரால் இடம்பெறும் படுகொலைகளையும், அவலத்தினையும் சொல்ல புலிக் கொடி எதற்கு? தமிழர் என்ற அடையாளம் போதாதா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் அடையாளமாக புலிக்கொடி இருப்பதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் அடையாளமாக புலிக்கொடி இருப்பதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை யஸ்ரின். ஆனாலும் தமிழர்கள் நாம் சற்று புத்திசாலித்தனமாக செயற்ப்படுவது இன்றியமையததாகின்றது. ஈழத்தமிழர்களின் தேசியக் கொடியாக நாம் புலிக்கொடியை ஏந்துகின்ற வேளை, ஏதோ ஒரு பக்கத்தால் நமது செயற்ப்பாடுகளுக்கு கட்டுப்பாடும், எமது செயற்ப்படுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே அந்நிலையை தவிர்க்க தற்காலிகமான புலிக்கொடிகளை கண்டதெற்கெல்லாம் பவிப்பதை தவிர்கலாம் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே அந்நிலையை தவிர்க்க தற்காலிகமான புலிக்கொடிகளை கண்டதெற்கெல்லாம் பவிப்பதை தவிர்கலாம் என்பது எனது கருத்து.

வரவேற்கிறேன். நம் கொடியை அவதூறு செய்ய நாம் இடம் கொடுக்கக்கூடாது.

புத்தர் சிங்களவருக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழனுக்கும் சொந்தமானவர், அதை ஏன் தமிழன் மறந்தான்?

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிங்களவருக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழனுக்கும் சொந்தமானவர், அதை ஏன் தமிழன் மறந்தான்?

புத்தன் எப்படி தமிழனுக்கு சொந்தம் ஆவான்?

புத்தன் எப்படி தமிழனுக்கு சொந்தம் ஆவான்?

பௌத்த மதம் அசோக சக்கரவர்த்தி காலத்தின் பின் வேகமாக இந்தியா எங்கும் பரவியிருந்தது. இதன் விழைவாக இது இலங்கைக்கும் அசோகனின் நேரடி வாரிசுகளாலேயே பரப்பப் பட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இந்த காலத்தில் தவிர்க்க முடியாமல் தமிழர் மத்தியிலும் பௌத்த மதம் பிரசித்தி பெற்றிருந்ததாக நம்பப் படுகிறது.

பௌத்த மத கட்டடங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இன்னும் யாழ் கந்தர்மடத்தில் உள்ளது. தொண்ணூறுகளில் யாழ்ப்பாணம் அரசின் கைக்கு வந்த பின் இந்த இடத்தை அவர்கள் பராமரிப்பதுடன் ஏற்கனவே இருந்த சின்னங்கள் மேல் தமது அடையாளங்களை திணித்து இலங்கை முழுவதும் சிங்களவர்களே வாழ்ந்தனர், தமிழர் வெறும் வந்தேறு குடிகள் என்று நிரூபிக்க முயல்கின்றனர். (கடைசி சமாதான காலங்களில் சிங்கள மக்கள் நயினா தீவுக்கு அடுத்து கந்தர் மடத்துக்கும் சென்று வழிபட்டிருந்தனர்)

ஆகவே பௌத்த மதம் என்பது எல்லோருக்கும் பொதுவான மதமென்பதோடு அது ஒப்பீட்டளவில் உயர்வான தத்துவவியல் வளர்ச்சி கொண்ட மதம். எமது எதிரி சிங்கள பௌத்த பேரினவாதமே தவிர சிங்கள மொழியோ பௌத்த மதமோ அல்ல.

மதங்களில் எனக்கு மிக மிக பிடித்தமானது பெளத்தம் ... நான் நிறைய பெளத்த நூல்களை விரும்பி வாசித்தவன். கடவுள் இல்லை, தன்னை உணருபவனே கடவுள் எனும் கோட்பாட்டினை வலியுறுத்தி சக மனிதனை மதிக்க கற்றுத் தரும் உன்னத மதம்....அதனை சிங்களவர் எனும் கொடூர இனத்துடன் இணைத்து பார்க்கையில் தான் பெளத்தம் மோசமானதாக நாம் நினைப்போம்

உண்மையில் சிங்களவர்கள் பெளத்த மதத்தின் சாபக் கேடுகள்.

நிச்சயமாக இல்லை யஸ்ரின். ஆனாலும் தமிழர்கள் நாம் சற்று புத்திசாலித்தனமாக செயற்ப்படுவது இன்றியமையததாகின்றது. ஈழத்தமிழர்களின் தேசியக் கொடியாக நாம் புலிக்கொடியை ஏந்துகின்ற வேளை, ஏதோ ஒரு பக்கத்தால் நமது செயற்ப்பாடுகளுக்கு கட்டுப்பாடும், எமது செயற்ப்படுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே அந்நிலையை தவிர்க்க தற்காலிகமான புலிக்கொடிகளை கண்டதெற்கெல்லாம் பவிப்பதை தவிர்கலாம் என்பது எனது கருத்து.

இப்படி சொல்லி சொல்லியே எங்கள் வாழ்வை நாசமாக்கி போட்டியள்,

புலிக்கொடி பறக்கதானே விடுதலை வேள்வியில் எத்தனை பேர் ஆகுதி ஆகிவிட்டார்கள்.

புலிக்கொடி ஈழத்மிழரின் தேசியக்கொடி. அது ஒவ்வொரு தமிழனுக்கும் சொந்தமானது...

விடுதலைப்புலிகள் கூட இது ஒரு தேசத்தின் கொடியாக ஆக்கப்பட்டதனால்தான் தங்கள் வீரர்களின் உடலங்களில் அதை போர்த்தி மரியாதை செய்கிறார்கள்.

தயவு செய்து குழப்பாதீர்கள். விடுதலைப்புலிகள் தங்களது நிர்வாக சின்னமாக கறுப்பு மஞ்சள் வட்டத்தில் தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற வாசகம் பொறிக்கபட்ட முத்திரையையே பாவிக்கிறார்கள்.

படத்தில் காணும் கொடி தேசக்கொடியாக அங்கீகரிக்கபட்டு அனைவரும் எமது கொடியை அறிய வேண்டும் என்பதற்காக அனைத்து இடங்களிலும் பாவனையில் உள்ளது.

மதங்களில் எனக்கு மிக மிக பிடித்தமானது பெளத்தம் ... நான் நிறைய பெளத்த நூல்களை விரும்பி வாசித்தவன். கடவுள் இல்லை, தன்னை உணருபவனே கடவுள் எனும் கோட்பாட்டினை வலியுறுத்தி சக மனிதனை மதிக்க கற்றுத் தரும் உன்னத மதம்....அதனை சிங்களவர் எனும் கொடூர இனத்துடன் இணைத்து பார்க்கையில் தான் பெளத்தம் மோசமானதாக நாம் நினைப்போம்

உண்மையில் சிங்களவர்கள் பெளத்த மதத்தின் சாபக் கேடுகள்.

பெளத்தம் மதமல்ல. அது ஒரு தத்துவம்.

பகுத்தறிவுவாதிகள் பலர் பெளத்த கோட்பாடுகளை பின்பற்றியவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழகத்தில் பெளத்தம் இருந்தது.

உலகம் புத்தனை போற்ற காரணம் அவர் அரச வாழ்வு நிரந்தரமில்லை என போதி மரத்தை நாடியதாலேயே.

ஆனால் போதி மரம் எங்கிருந்தாலும் சில மூடர் அது பெளத்த சின்னம் என்கின்றனர்.

அசோக சக்கிரவர்த்தி யுத்தத்தின் பின் வெறுத்துப் போய் பெளத்தனாக மாறியதற்கு காரணம்

அது யாரையும் துன்புறுத்துவதை ஏற்பதில்லை என்பதாலேயே.

இலங்கையில் பண்டாரநாயக்க போன்றோர் ஆட்சிக்கு வர பாமர மக்களை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் ஒரு இனவாதத்தை உருவாக்கியதால்

நாம் பெளத்தத்தை வெறுக்கிறோம். ஆனால் உண்மையான பெளத்தர்கள் நிலை வேறு.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரை தவிர வேறு எவரும் பெளத்தனாக வாழ்த்திருக்க முடியாது.........

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரைப் பற்றி பிரபல எழுத்தாளர்(நான் நினைக்கிறேன் பாலகுமார்)பின்வருமாறு குறிப்பிடுகிறார். சுயம்வரம் மூலம் திருமணம் முடித்து தன்னை நம்பி வந்த மனைவியை தவிர்க்க விட்டு சொந்த மனைவியிடம் கூட நேரில் சொல்ல திரணியற்று நட்ட ராத்தியில் துறவறம் பூண வெளியேறீயவர் என்று கூறுகிறார்.

வரவேற்கிறேன். நம் கொடியை அவதூறு செய்ய நாம் இடம் கொடுக்கக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.