Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்க்கான உயிர் திறந்த மூன்றாவது தியாகி - ஜெகதேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா படைகளினால் ஈழத்தமிழர்கள் தினமும் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், எனவும் துயரச்செய்திகளை படித்து மனமுடைந்த மலேசிய தமிழ் இளைஞர் ஒருவர் சுமை ஊர்தியின் எதிரில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று திங்கக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் தாமான் புத்ரி வங்சா. புக்கிட் ஜெயாவைச் சேர்ந்த 29 அகவையுடைய

ஸ்டீபன் ஜெகதேசன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுமை ஊர்திச் சாரதியாக தொழில்புரிந்து வந்த ஸ்டீபன் கடந்த 10 நாட்களாக பித்து பிடித்தவர்கள் போல் காணப்பட்டதாகவும் இலங்கையில், ஈழத்தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை படித்து மிகவும் கவலை கொண்டிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முத்துகுமார் என்ற இளைஞர் ஈழத்ததமிழர்களுக்காக வீரமரணம் அடைந்த சம்பவம் பற்றி அடிக்கடி கூறிவந்துள்ளதுடன், தானும் ஈழத் தமிழர்களுக்காக ஒருநாள் உயிரிழப்பேன் என ஸ்டீவன் தனது நண்பர்களிடம் கூறிவந்துள்ளார் எனவும் நேற்றைய சம்பவம் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இளைஞரின் மரணம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்டீபனின் உடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் சுங்கை திராம் சீன மின்சுடலையில் தகனம் செய்யப்பட உள்ளது

இதேவேளை ஈழத்தமிழர்க்கான தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் முத்துக்குமாரும், திண்டுக்கலில் ரவியும் தமது இன்னுயிரை தியாம் செய்த நிலையில் மூன்றாவதாக ஜெகதேசன் உயிர் திறந்துள்ளார்.

Pathivu

தியாகி ஸ்டீபன் ஜெகதேசனுக்கு கண்ணீர் அஞ்சலி

கடவுளே

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி ஜெகதேசனுக்கு கண்ணீர் வணக்கங்கள்..!

தியாகி ஜெகதேசனே இன்றைய காலகட்டத்தில் போராட உனக்கு வேறுவளியில்லமல் போனதே....... இது மாறவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்க்காய் உயிரை இழத்தல் விவேகமான செயல் அல்ல. ஒரு முத்துக்குமார் போதும் .......இதனால் ஒன்றும் கல் மனங்கள் கரைய போவதில்லை . நாளை , எதிர்காலத்தில் இவர்கள் அவர்களை ஊக்குவித்தார்கள் என்ற பழியும் சேர்ந்து வரும் . தேவை நிதானம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்துக்குமார் செய்த தியாகம் இப்படியான தொடர் செயல்களினால் பயனற்று போகலாம். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி ஸ்டீபன் ஜெகதேசனுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். முத்துகுமரன் இளைஞர்களுக்கு பிழையாக வழி காட்டி விட்டாரோ என தோன்றுகிறது. இளைஞர்களே சிந்தித்து செயற்படுங்கள். உங்கள் உயிரை மாய்ப்பதால் ஒன்றுமே நடக்காது. உயிருடன் இருந்து பலவற்றை சாத்தித்து காட்டவேண்டும். அது தான் எமது இனத்துக்கு செய்யும் கடமை. புத்திசாலித்தனமானதும் கூட . நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகி ஸ்டீபன் ஜெகதேசனுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். முத்துகுமரன் இளைஞர்களுக்கு பிழையாக வழி காட்டி விட்டாரோ என தோன்றுகிறது. இளைஞர்களே சிந்தித்து செயற்படுங்கள். உங்கள் உயிரை மாய்ப்பதால் ஒன்றுமே நடக்காது. உயிருடன் இருந்து பலவற்றை சாத்தித்து காட்டவேண்டும். அது தான் எமது இனத்துக்கு செய்யும் கடமை. புத்திசாலித்தனமானதும் கூட . நன்றி.

முத்துக்குமார் சொன்ன செய்தியை விடுத்து அவனின் செயலை உள்வாங்கிக்கொண்டவர்களை நினைத்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது அண்ணா?! தன் எரிந்த உடலைக்கூட வைத்துக்கொண்டு போராடச்சொன்னானே தவிர அந்தமாவீரன் எல்லோரையும் எரிந்து போங்கள் என்று சொல்லவில்லை. அவனின் செய்தி ஒருவர் காதுக்கும் எட்டவில்லையா?!

மிக வேதனையாக இருக்கின்றது.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த ஒரு ஈழத்தமிழனுக்கு கூட இந்தளவு பற்றுதல்.. சொந்த மண்ணில் உள்ள மக்கள் மீது இல்லை. இவர்களின் இனப்பற்றைப் பார்க்க வியப்பாகவும் பெருமிதமாகவும் இருக்கும் அதேவேளை.. உயிரை இழந்து அதுவும் தமது இனப்பற்றுதலைக் காட்ட என்று மட்டும் உயிரை விடுறது... ஏற்புடைய ஒன்றல்ல.

உறுதியான இனப்பற்றும்.. சாதிக்க வலுவும் உடைய இந்த இளைஞர்கள்.. ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு பல உபயோகமான வழிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளின் அதுவே சிறந்ததாகும்.

எத்தனையோ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்று கூட அடையாளப்படுத்தத் தயங்கும் இன்றைய நிலையில்... கணணியில்.. இணையத்தில் வீரம் பேசும் புகலிட ஈழத்தமிழர்கள் வளர்ந்து வரும் நிலையில்... இவ்வாறான உண்மையான இன உணர்வுள்ள இளைய சமூகத்தை தமிழினம் இழப்பதென்பது அதற்கு பேரிழப்பாகும்...!

தியாகி ஜெயதேசனுக்கு தியாக வணக்கங்கள். :huh:

Edited by nedukkalapoovan

இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!

இல்லை என்றால் இந்த இளைஞர்களின் ஈடிணையற்ற தியாகங்கள்,

பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று

என்கிற ரீதியில் கேலிக் கூத்தாக்கப்படும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படி தமிழன் உயிர் இப்படியாகிவிட்டதே

கண்ணீர் அஞ்சலிகள்.

சாகின்றாய் தமிழா சாகின்றாய்

சாகச் செய்வானைச் சாகடிக்காமல் சாகின்றாய்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.