Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுவமடுவில் கடுமையான மோதல்: சொல்வது சிறிலங்கா அரசின் தொலைக்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெறுவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிற்பகல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடுவுக்கு அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தை படையினர் கைப்பற்றி விட்டதாக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று பிற்பகல் 1:30 நிமிடத்துக்கு ஒளிபரப்பான 'ரூபவாஹினி' செய்தியில் விசுவமடுவில் மோதல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான செய்திகளை அரச தொலைக்காட்சி ஒளிபரப்புவதுடன் சில திரிபுபடுத்தப்பட்ட காட்சிகளை காண்பிப்பதாகவும் வன்னி கள நிலைமைகளை நன்கு தெரிந்த வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

Puthinam

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெறுவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிற்பகல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puthinam

இது என்ன இன்னுமொரு................! !

இன்னும் கொஞ்சம் இருங்கோ கிளிநொச்சியில விடுதலைப்புலிகளுக்கு எதிரான மும்முரத் தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக சரத் சொல்லுவார் அப்பவும் சிங்களச்சனம் வெடி கொழுத்துங்கள் அதுகளுக்கு எங்க இடங்கள் எல்லாம் தெரியப்போகுது? :lol

செய்தியில் எந்தளவு தூரம் உண்மை இருக்கும் என்று தெரியவில்லை.

இச்செய்தி உண்மையாக வேண்டும்.

என்னமோ நடக்குது..மர்மமா இருக்குது....அப்ப புதுகுடியிருப்பு இப்ப யார்ட கையில இருக்கு?..நேற்று அத பிடிச்சிட்டதா உதய நாநா சொன்ன மாதிரி இருந்திச்சு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னம் கொஞ்ச நாளில எல்லாம் வெளிக்கும்.

விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்கள் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.

விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்கள் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.

defence wire இனை அதிகம் நம்ப கூடாது மின்னல் :D:D

defence wire இனை அதிகம் நம்ப கூடாது மின்னல் :o:lol:

டிபன்ஸ் வயரின் கட்டுரைக்கு முன்பாகவே படைத்தரப்பு விடுதலைப் புலிகள் தமது பகுதிகளிற்குள் ஊடுருவியமை தொடர்பான செய்திகைள வெளியிட்டுள்ளது .

ஒட்டுசுட்டான் மற்றும் வற்றாப்பளைப் பகுதிகளில் தாம் விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டதான அறிவிப்புக்கள்.

டிபன்ஸ் வயரில் வருபவற்றில் நம்பக்கூடியவற்றை நம்பலாம்தானே நிழலி?

இன்று வன்னி பற்றியோ அல்லது அங்குள்ள மக்களின் அவலம் பற்றியோ ஒரு சின்ன செய்தி கூட இல்லை... புலிகளின் குரலிலும் இன்றைய செய்திகளை முற்றாக காணவில்லை.....

டிபன்ஸ் வயரில் வருபவற்றில் நம்பக்கூடியவற்றை நம்பலாம்தானே நிழலி?

ம்ம்ம்ம்... புலிகளின் குரல் கூட நாளிதழ் நாழியில் இவர்களின் செய்தியினை ஒரு சில தடவை மேற்கொள் காட்டியிருக்கின்றனர். ஆனால் இன்றைய செய்தியினையும் பார்த்த பின் (12 மணி நேர 'கெடு').... எல்லாவற்றிலும் வெறுப்பாக இருக்கின்றது

இத சொன்ன அதே ஆக்கள் தான் இப்ப என்னும் 58 சதுர கிலோ மீட்டர் தான் பிடிக்க இருக்குது என்டு சொல்லினம்

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்துக்கு பாரிய இழப்பை மனோவியல் ரீதியாக ஏற்படுத்தாத வரை நமக்கு இராணுவ வெற்றிகள் கிட்டாது. ஆனாலும் எமக்கு அரசியல் ரீதியாக சில வெற்றிகளை எமதாக்கலாம். குறிப்பாக உலக ஊடகங்கள் சிறிலங்காவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளையாய் துளைப்பது. உ+ம்: பாலித கோகன்னா சி.என்.என் இல் நேரடியாக "நீங்கள் கிளஸ்ரற் குண்டுகளை பாவிக்கிறீர்களா" எனும் கேள்வி என்னோடு வேலை செய்யும் அமெரிக்கர்கள் என்னை கேட்கும் அளவுக்கு நிறைய தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. எதோ என் மனதில் தெரிகிறது அரசியல் , இராஜதந்திர வெற்றிகள் தான் எம்மை நிரந்தர வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்று. உலக மக்களின் ஏகோபித்த சிறிலங்காவின் எதிர்ப்பு குரல்கள் தான் வித்தியானந்தனின் உயிருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளது என்று கூட எடுக்கலாம். மேலும் புலம் பெயர்ந்த மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் பல அரசியல் , இராஜதந்திர வெற்றிகளை தரும் என்பது திண்ணம்.

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

உ+ம்: றோகித போகல்லாகமவை சி.என்.என் இல் நேரடியாக "நீங்கள் கிளஸ்ரற் குண்டுகளை பாவிக்கிறீர்களா" எனும் கேள்வி என்னோடு வேலை செய்யும் அமெரிக்கர்கள் என்னை கேட்கும் அளவுக்கு நிறைய தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.

பாலித கோகன்னா

டிபன்ஸ் வயரின் கட்டுரைக்கு முன்பாகவே படைத்தரப்பு விடுதலைப் புலிகள் தமது பகுதிகளிற்குள் ஊடுருவியமை தொடர்பான செய்திகைள வெளியிட்டுள்ளது .

ஒட்டுசுட்டான் மற்றும் வற்றாப்பளைப் பகுதிகளில் தாம் விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டதான அறிவிப்புக்கள்.

டிபன்ஸ் வயரில் வருபவற்றில் நம்பக்கூடியவற்றை நம்பலாம்தானே நிழலி?

59 வது ப்படைப்பிரிவு தனது நடவடிக்கையை நிறுத்தி விட்டது அதுக்கு பதிலாக கஜாபா ஜெறிமன்ரின்(53 வது படைப்பிரிவில் முன்னர் இருந்த) 1 வது படையணியும் (1000 பேர்) 59வது படையணியில் இருந்து செயற்ப்பட்ட வியஜபா 4 வது படையணியும் இணைந்து TF -8 எனும் புதிய படை ( பிரிகேட்) 59 வது படையணியின் வளித்தடத்தில் இறக்க பட்டு உள்ளது...

TF- 4 களமுனையில் இருந்து அகற்ற பட்டு விட்டதை இராணுவம் ஒத்து கொள்கிறது... அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுத்த பட்டு உள்ளனர் எண்று இராணுவ தரப்பில் இருந்து சொல்ல பட்டதாக செய்திகளில் வருகிறது...

( இது எனது ஊகம் இல்லை பல சிங்கள தமிழ் ஆங்கில தளங்களில் வந்தவைதான்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெறுவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிற்பகல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடுவுக்கு அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தை படையினர் கைப்பற்றி விட்டதாக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று பிற்பகல் 1:30 நிமிடத்துக்கு ஒளிபரப்பான 'ரூபவாஹினி' செய்தியில் விசுவமடுவில் மோதல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான செய்திகளை அரச தொலைக்காட்சி ஒளிபரப்புவதுடன் சில திரிபுபடுத்தப்பட்ட காட்சிகளை காண்பிப்பதாகவும் வன்னி கள நிலைமைகளை நன்கு தெரிந்த வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

Puthinam

ம் ம் ம் என்னத்தை சொல்ல ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.