Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாகிஸ்தானின் உளவுப்பிரிவு இலங்கை ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் - இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவிப்பு

Featured Replies

பாகிஸ்தானின் உளவுப்பிரிவு இலங்கை ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் - இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு 2ஃ25ஃ2009 10:47:15 Pஆ - பாகிஸ்தானின் புலனாய்வு நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் தமது இரகசிய முகவர்களை ஊடுருவச் செய்யும் அச்சுறுத்தல் உள்ளதாகவும்இ இதனை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்தார்.

இதுதொடர்பில் உறுதியான அறிக்கைகள் இல்லாத போதிலும் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினர் இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்ற சாத்தியத்தை மறுக்க முடியாது என்றும் கூறினார்.

இதன் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்காக விஸாவுக்கு விண்ணப்பிப்போரின் அனைத்து விண்ணப்பங்களும் மிகவும் உன்னிப்பாக பரிசீலிக்கப்படுவதாகவும் கூறினார். இந்திய பாராளுமன்றத்தில் இடம் பெற்ற கேள்வி நேரத்தின்போது விளக்கமளிக்கையிலேயே சிதம்பரம் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஐ. ஆனது ஏனைய தென் ஆசிய நாடுகளை அடையக் கூடிய வல்லமையை கொண்டிருப்பது தொடர்பில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில், இதன் காரணமாகவே இந்திய விஸாவுக்கு இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மும்பாய் தாக்குதல்களுக்கு பின்னர் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள கடற்கரைப் பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவு வலுவடைந்து வருவது தொடர்பில் அரசாங்கம் விழிப்புணர்வுடன் இருக்கிறாதா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா சபையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் பாகிஸ்தான் உள்ளக சேவை உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. தென்னிந்திய கரையை முக்கிய இலக்காகக் கொள்ளலாம் என்று கூறியதுடன் மேற்படி விளக்கத்தையும் அளித்தார்.

அட இதத்தாண்டா நாங்கள் அப்பவிலையிருந்து சொல்லிறம் வெண்ணை! "இந்தியாவின் தென்பகுதியில் பாக்கிஸ்தானின் நட்பு நாடான ஸ்ரீலங்கா இருப்பதைவிட இநத்தியாவுடன் நட்பாக என்றும் இருக்கக்கூடிய தமிழீழம் அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லது" எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் உளவுப்பிரிவு இலங்கை ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் - இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவிப்பு

தங்கள் தலையில் , தாங்களே மண் அள்ளிப்போடும் சுயநல அரசியல் கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

உவன்களுக்கு சொல்லி புரியாது அனுபவபட்டால் தான் புரியும்.ராகுல் காந்திதான் பாவம்.

ராகுல் காந்தி ஏன் அண்ணை பாவம்....??

  • கருத்துக்கள உறவுகள்

மும்பாய் தாக்குதல்களுக்கு பின்னர் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள கடற்கரைப் பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மும்பைத் தாக்குதலுக்குப் பின்ன மும்பைக் கடற்கரையை பலப்படுத்திறதைப் பற்றிப் பேசுவாரா அல்லது தமிழ்நாட்டைப் பற்றி பேசுவாரா? எப்பிடி எல்லாம் கோர்த்துவிடப் பாக்கிறாங்கள்..! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

தினை விதைத்தவன் தினை அறுப்பான்!!

முன்னையோர் எவ்வளவு அனுபவங்களை பொறித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் மகிழ்வோடு வாழலாம்!

:o

  • தொடங்கியவர்

மும்பை தாக்குதலுக்கு வந்தவர்கள் விசா எடுத்து வந்தார்களாக்கும்!! ப.சி. ஒரு பனிக்கதை கதைக்குது

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க அங்கு நடக்குது? என்னங்க இவங்க சொல்லுறாங்க? எனக்கு ஒன்னுமே புரியல்லையப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

பம்பாய்க்கு நேரே வந்து தாக்கிறாங்கள். தென்னிந்தியாவுக்கு பிறகென்ன இலங்கைக்கு ஊடாக வாறது. தேவையெண்டால் நேரே வந்து தென்னிந்தியா என்ன இந்தியாவின் எப்பகுதியிலும் தாக்கி போட்டு போவார்கள். தமிழக மீனவர்களை காக்க வக்கில்லை பிறகு லூசுதனமாக சிதம்பரம் கதை விடுகிறார். :o

சும்மா நெருப்பு வைக்கப் பார்க்கிறார் ப.சி. தங்களுக்குத் தாங்களே விடுகதை போட்டு, தாஙங்களே விடையளிக்கிறாங்கள். இன்னமும் கூடுதலாக இலங்கைக்கு உதவப் போவதற்கான முஸ்தீப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்படியும் ஒரு வழி இருக்கா? பாகிஸ்தானின் உளவுத்துறை இதைப்பற்றி சிந்திக்காவிட்டாலும் ப.சி சொல்லிக் கொடுப்பார் போல.றூம் போட்டு யோசிப்பாங்களோ?

ஒரு உண்மையினை புரிந்துகொளுங்கள் நண்பர்களே, இந்தியாவிற்கு இலங்கைமூலம் அல்லது இலங்கையூடாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் வரக்கூடும் என்பதெல்லாம் சும்மா ஒரு நொண்டிசாக்கு,இந்தியாவின் முக்கிய நோக்கமே ஈழ கடல் பிராந்தியதினை 100% தமது முழுகட்டுப்பாடுக்கு கொண்டு வருதலே ஆகும்.

அதுமட்டுமல்ல வி.புலிகள் அகோரமா தாக்கதொடங்கும்போது இலங்கை ரானுவதினை காப்பாற்றி பத்திரமா கூட்டிசெல்லவும் இப்படி கடல் நடுவே நிற்பது வசதிஅல்லவா?

வி.புலிகள் அகோரமா தாக்கதொடங்கும்போது இலங்கை ரானுவதினை காப்பாற்றி.................. ...... ...........?

ஏன் இப்பிடியெல்லம் நடக்குது? :blink::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.