Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது: கலைஞர் கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற

திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் தலைமை தாங்கி பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

திமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்கும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

இந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், இது தவிர்த்து மற்ற பிரச்சனைகள் குறித்தும் அண்ணா வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்ப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொற்பொழிவாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய முற்படுவார்கள். அவற்றை முறியடிக்கும் வகையிலும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தமிழ் ஈழத்தை திமுக ஏற்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்கிறார்கள்.

ஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.

http://www.tamilwin.com/view.php?2adgE9Zte...G7Dcd0ebPh2g8ae

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்

மகளுக்கு திருமணம் நடக்கக் கூடாது..ஆனால் குழந்தை மட்டும் பெறவேண்டும்?

இவர் கீறல் விழுந்த குறுவட்டு!

இவரின் சொல்லை கேட்பதே தீட்டு!!

வரும் தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் வோட்டு!!!

அதனால் இவரின் பத்வி சுகத்துக்கு இருக்கு வேட்டு!!!!

நானும் அடிப்பேன் இவருக்கு ரிவெட்டு!!!!!

Edited by G.ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்கும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

அப்போ .... காங்கிரசும் , திமுகவும் ஈழத்தை பொறுத்தவரையில் ஒரே கொள்கையை கொண்ட கட்சிகளா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் ஒரு தமிழினக் கொலைஞர் :)

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஜயாவுக்கு கொஞ்சம், கொஞ்சமாக ஏக்கம் பிடிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

என்ன செய்வது எல்லாம் அவன் செயல்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் இதைத்தான் இதைத்தான் எதிர்பார்த்தேன்

இப்பிடித்தான் பேசியாகணும் என்னசெய்வது! நாற்காலி போயிடுமே:::!!!! உங்கள் சாணக்கியத்தனமெல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது.. தமிழர்கள் முட்டாள்களில்லை!!!!

எல்லாம் காலம்கடந்துவிட்டது. தமிழர்களுக்காக 56 ம் ஆண்டிலிருந்து குரல் கொடுக்கிறீர்கள் விட்டால் இன்னும் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பீர்கள் போதும் உங்கள் அன்புத்தொல்லை எங்களால் முடியலலலலலலலலல.!!!!!இனியாவது அடுத்த தலைமுறைக்கு வழிவிடலாமே நீங்கள் ஓய்வெடுக்க விரும்பாவிட்டாலும் இந்தமுறை கண்டிப்பா ஓய்வுதருவார்கள் மக்கள்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்கும், கவிதைக்கும் குறைச்சல் இல்லை. செயலில் மட்டும் சீரோ. முத்துக்குமார் போன்ற எமது தமிழினத்துக்காக தம்மையே அர்பணித்தவர்களோடு ஒப்பிடும் போது ஐயா நீங்கள் சீரோ தான்.

பி.குறிப்பு: பெட்டியை கட்ட ஆயத்தமாகுங்கள். (தோல்வியை குறிப்பிட்டேன்) :)

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு இப்பதான் சுடலை ஞானம் பிறக்குதோ? சிறிலங்காவில் ஜனநாயகம் இல்லை என்ற படியால்தானே போராடினோம்.ஜனநாயக முறைப்படி தமிழீழத்திற்கான அங்கீகாரத்தை தமிழ்மக்கள் 1977 ஆடிப் பொதுத்தேர்தல் மூலம் அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள். ஜனநாயக முறைப்படி தமிழர்களுக்கு தமிழுPழம் என்ன எந்த குறைந்த பட்ச அதிகாரமும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிந்துதானே அன்றைய பாரதப் பிரதமரும் காங்கிரஸின் தலைவியுமாகிய இந்திரா காந்தி போராளிகளுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்தார்;.இப்ப நாங்கள் எவ்வளவு தூரம் வந்திட்டம் இப்ப எங்களக்கு அறிவுரை தேவையில்லை.முடிந்தால் வருகிற பொதுத்தேர்தலை தமிழ்நாட்டிலை ஜனயாயக முறைப்படி நடத்துங்கோ பார்ப்போம்.காங்கிரசுக்கு எதிராகப் பேசி கூட்டணி வாக்குகளை கிடைக்காமல் செய்து விடுவார்கள் என்ற படியால்தானே தலை சிறந்த பேச்சாளர்களான சீமான் குளத்தூர் மணி நாஞ்சில் சம்பத் போன்றவர்களை ஒரு வருடத்திற்கு வெளியில் வராதபடி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழே உள்ளே வைத்திருக்கிறீர்கள்.ஜனநாயகம

  • கருத்துக்கள உறவுகள்

மகளுக்கு திருமணம் நடக்கக் கூடாது..ஆனால் குழந்தை மட்டும் பெறவேண்டும்?

இவர் கீறல் விழுந்த குறுவட்டு!

இவரின் சொல்லை கேட்பதே தீட்டு!!

வரும் தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் வோட்டு!!!

அதனால் இவரின் பத்வி சுகத்துக்கு இருக்கு வேட்டு!!!!

நானும் அடிப்பேன் இவருக்கு ரிவெட்டு!!!!!

அத்துடன்

மாப்பிளையும் பார்க்கமாட்டேன்

கல்யாணம் செய்து வைக்கமாட்டேன்

எப்படியோ

எவருக்கோ

என்ன விதத்திலாவது

எனக்குப்பிரச்சினை இல்லாத இடத்தில்....

ஒதுங்கி ......

பிள்ளை பெற்றால் எனக்கு சந்தோசம்தான்.....

இதுதான் கருணாநிதி அவர்களின் கொள்கை

எமக்குத்தான் இன்னும் புரியவில்லை..........

எங்கள் வீட்டு கருணா மாகாணசபை அதிகாரமே தேவையில்லையென்று பேரினவாதத்திற்கு சாமரம் வீசும்போது அயல்நாட்டு கருணா இப்படியாவது சொல்கின்றாரே என்று ஆறுதல் அடையவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப மகிழ்ச்சி...

கேட்டாக்க புல்லு, செடி, கொடியெல்லாம் அரிக்குது தலீவரு....

மருத்துவமன வாசனய மோந்துப்புட்டு, அந்த மயக்கம் தீர்றதுக்குள்ளாற எந்த கட்சி கூட்டம், கீட்டத்திக்கும் போயிடாதீகன்னு தாயம்மாத் தாதி சொல்லியும் கேட்டுக்காம போனாக்க இப்பிடித்தான் ஆகும். ஆனா ஒன்னு கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்னு என்னிக்கோ மனப்பாடம் பண்ணி வச்சத மறக்காம இன்னிக்கும் துப்பினிண்டு இருக்கீக பாருங்க...நீங்க எங்கியோ போயிட்டீக கிழீவரு...மன்னிக்கவும்..தலீவரு

...

வயசாயிடிச்சுன்னாஇ வாய வச்சூண்டு சும்மா வேடிக்க மட்டும் பாக்கனும் (அதத்தானே இம்புட்டு காலம் பண்ணிட்டிருந்தீக...என்னாச்சு திடீரென) அத வுட்டுட்டு இந்தமாதிரி பேசிக்கிட்டிருந்தாக்க.. மேலாண்ட போனாப்புறம் ஒங்க அண்ணாச்சி கூட ஒங்கள மன்னிக்கமாட்டாரு தொல்லைவரு..மன்னிக்கவும்... தலீவரு...

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம் ........அடுத்த பிறவியில் ஈழத்தில் பிரதமராக வார ஆசை போல.....சரி சரி விடுங்கோ பாவம் மனுசன்......

வயதுபோன நேரத்தில் ஏன் உந்த மனுசனை இப்படி திட்டுறீங்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.