Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உராய்வு

Featured Replies

ஒளிப்பதிவுக்கான இணைப்பை தந்த சோழியன் அண்ணாக்கு நன்றி :P

  • Replies 318
  • Views 42.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உராய்வு வெளியீட்டு விழாவில் குமரன் ஆசிரியரின் மதிப்பீட்டுரையை ஒளிவடிவத்தில் பார்ப்பதற்கு இணைப்பை தந்த சோழியனுக்கு நன்றி

குமரன் மாஸ்ரர் ஒரு காலகட்டத்தில் யாழில் பட்டிமன்ற கதாநாயக பேச்சாளன், பலராலும் அறியப்பட்ட பிரபல டியூட்டிரிகளின் ஆசிரியர்....எனது கள நண்பன் இளைஞனின் உராய்வுக்கு மதிப்பீட்ரை செய்வதை ஒளி வடிவிலையாவது பார்க்க கிடைத்ததைக்கண்டு அக மகிழ்கிறேன் :lol:

நிகழ்வை ஒளிவடிவில் தந்த சோழியானு க்கு நன்றிகள்..! :lol:

நன்றி சோழியன் அண்ணா. நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தால் அவற்றையும் இணைத்து விடுங்களேன்.

நன்றி சோழியன்

நன்றி சோழியன் அண்ணா. நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தால் அவற்றையும் இணைத்து விடுங்களேன்.

அந்த நிகழ்வில் இடம்பெற்ற ஏனைய விபரங்களைப்பற்றியும் எழுதத்தானே வேண்டும்.. அப்போது புகைப்படங்களும் வெளிவரும். :P

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சோழியன் :P :P

நன்றி சோழியன் அண்ணா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பின் சோழியன் அண்ணா,தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.உறுத்தும் ஒரு விடயத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்

கவிஞர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் பட்டம் சூட்டி மகிழ்வது.திராவிட முன்னேற்றக் கழகங்களின் எச்சம்.அது ஈழத்தவர்களையும் பிடித்தாட்டுகிறது என்பது எனது அபிப்பிராயம்.

வேடிக்கையான,மற்றவர்களால் கேலியாகப் பேசப்படும் இந்தப் பட்டங்களை எதற்காக நண்பர் சஞ்சீவுக்கும் சூட்டியிருக்கிறார்கள் என்று புரியவில்லை.இது அவரது தவறோ உங்களது தவறோ இல்லை ஆனால் நீங்கள் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்தியமையால் சுட்டிக் காட்டுகிறேன்.

சஞ்சீவின் சிந்தனைகளுக்கும் செயலுக்கும் ஏற்றதாக இளஞன் என்னும் புனைபெயரை அவரே தேர்ந்தெடுத்திருக்க எதர்காக கவிக்கூர் என்னும் பட்டம்?யாரோ ஒரு பெரியவர் பாராட்டாய்ச் சொல்லிவிட்டார் என்பதற்காக நாம் அதனைக் காவித்திரிய வேண்டுமா?'செந்தமிழ்க் கோடையிடி' பட்டம் கேட்கவே சிரிப்பு வருகிறது.

இளைஞன் இந்தப் பட்டங்களிலிருந்து விலகி தன்பாதையில் செல்லவேண்டுமென்பது எனது விருப்பம்

தெரிஞ்சோ தெரியாம கொடுத்திட்டாஙக ஈழவன் சார்.... இனி என்ன திரும்பியா கொடுக்க முடியும்..திருப்பி கொடுத்தா தப்பா நினைச்சுங்குவாங்க இல்லையா.. இதை எல்லாம் மாட்டர் எண்ணு கண்ணுக்காதையுங்க சார்.... :lol:

:lol: நன்றி ஈழவன். தாங்கள் சுட்டிக்காட்டிய விடயத்தைப்பற்றி விரிவாக ஆராய எனக்கு அறிவு போதாது.

'உராய்வு' கவிதைத் தொகுப்பில் 'காலத்தின் கவிக்கூர்' என அப் பட்டம் பொதுமைப்படுத்தபடாமல் குறிப்பிட்ட காலத்துக்கு உரியதாக இருந்தது.

ஆனால்.. அந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவி வரிகளின் அமைவு.. அவை சொல்ல வந்த விடயத்தை பல இடங்களில் வெளிக்காட்டும் தன்மை.. அவற்றிலே எழும் உணர்வுகள் பல இடங்களில் கூர்மையாக மனதைத் தாக்குவதாகவே எனக்குத் தோன்றியது.

அதனாலே, தாசீசியஸின் காலத்தின் கவிக்கூரை பொதுவாகவே 'கவிக்கூர்' எனக் குறிப்பிட்டேன். தகுதி இல்லாதவைகளுக்கு பட்டம் கொடுப்பது புலத்தில் அதிகரித்துள்ள சூழலில்... தகுதியான ஒருவரை அவ்வாறு அழைப்பது தவறில்லை எனவே கருதுகிறேன்.

ஆனால் ஈழவன் குறிப்பிடுவதுபோல தற்போது பட்டங்கள் பெறுமதியற்றதாக்கப்பட்டு, வெத்திலை பாக்குச் சரைபோல வழங்கப்படுவதென்பது என்னவோ உண்மைதான். அதனால் பட்டங்கள் கேலிக்குரியனவாக பிரமை ஏற்படுத்துவதும் உண்மைதான்-

ஆனால்.. சஞ்சீவ் காந்த் அவர்களின் வயது.. அவர் புலம் பெயர்ந்த வயது... புலத்தில் அவர் வாழும் காலம்.. இவற்றையும் அவரது கவிதா ஞானத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில்.. சஞ்சீவ் உற்சாகப்படுத்தப்பட வேண்டியவரே!

இந்தப் 'பட்டம்' மேலும் அவரிடமிருந்து ஆக்கங்களை வரச் செய்தால்.. பட்டம் காத்திரமாகும்.

பொறுத்திருந்து பார்ப்போம்! :shock:

தெரிஞ்சோ தெரியாம கொடுத்திட்டாஙக ஈழவன் சார்.... இனி என்ன திரும்பியா கொடுக்க முடியும்..திருப்பி கொடுத்தா தப்பா நினைச்சுங்குவாங்க இல்லையா.. இதை எல்லாம் மாட்டர் எண்ணு கண்ணுக்காதையுங்க சார்

அன்பின் மதராசிக்கு

இது போன்ற கண்டு கொள்ளா வார்த்தைகளால்தான் இலங்கை தமிழ் கலைஞர்கள் அழிந்து போனார்கள்.

பெரியவர் தாஸியஸ் அவர்களும் எமது மண்ணுக்குக் கிடைத்த ஒரு பொக்கிசம்.

அவர் சஞ்சீவின் கவிதை நூலில்

காலத்தின் கவிக்கூர் இவன்

என சஞ்சீவைக் (இளைஞன்) குறிப்பிட்டிருக்கிறார்.

இதையே சோழியன் அவர்கள்

நம் கலைஞன் ஒருவனுக்கு

உரம் கொடுக்க நினைத்து கவிக்கூர் எனக் குறிப்பிட்டுள்ளார் என நினைக்கிறேன்.

இங்கு யாருக்கும் யாரும் பட்டங்கள் கொடுக்கவில்லை.

ஆனால் ஒருவர் தளராமல் தொடர்ந்து போராட

பாராட்டுகள் அவசியமாகின்றன.

புலம் பெயர் கலைஞர்களில் அனைவருமே

தன் பணத்தை செலவழித்து பாராட்டுக் கூட இல்லாமல்

அழிந்து போனவர்கள்தான்.

உணர்ச்சி - உந்துதல் - ஆர்வக் கோளாறு இப்படி ஏதாவது செய்துவிட்டு தேய்ந்து விட்டவர்கள் ஏராளம்.

மக்கள் திலகம் - சிவாஜி - சிம்மக் குரலோன் - புரட்சி நடிகர் - புரட்சித் தலைவி -

கலைஞர் - ..........வாரிசு - சுப்பர் ஸ்டார் - தலைவா .......................... இப்படியே போய்

சே.......டாக்டர் பட்டங்கள் வரை எப்படி வந்தது?

உங்களுக்குத் தெரியாதா என்ன? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பின் அஜீவன் அண்ணா,சோழியன் அண்ணா

உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

இளைஞனுக்கு கவிக்கூர் என்னும் பட்டம் சரியா தவறா என்பதல்ல எனது கருத்து அப்படியான பட்டங்களை இட்டு அழைப்பது படிப்பவர்களுக்கு ஒரு அசூயையைக் கொடுக்கும்.இணையத்தின் வழி கேள்விப்படும் புதியவர் ஒருவருக்கு இப்படியான பட்டங்கள் மிரட்சியை அளிக்கக்கூடும் உண்மையான வாசக மனத்துடன் அன்றி கவிக்கூர் என்னும் பட்டத்தின் மூலம் அவர் இளைஞனின் படைப்புக்களை அணுக முயலலாம்.

இளஞன் நன்கு அறிந்தவர் என்பதால் அவரது பெயரைக் குறிப்பிட்டேன் மற்றும்படி ஜேர்மனி,சுவிட்சலாந்து பிரான்சில் அவ்வப்போது நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளிலும் கோவில் திருவிழாக்களிலும் வழங்கப்படும் இவ்வாறான பட்டங்கள் உண்மையில் ஆரோக்கியமானவை அல்ல.

ஈழத்தையே எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை கவிஞர்கள் இருக்கிறார்கள் நுஃமான்,சிவசேகரம்,கருணாகரன்,

இடையழகி சிம்ரன், கண்ணழகி மீனா வைகை புயல் வடிவேலு என்று சொல்லிக்கிற மாதிரி......................அந்த ரேஞ்சுக்கு...ஏனுங்க ...அந்த வளரும் கலைஞனை நாமே குறைச்சுக்குவானுங்க.... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா.. எனக்கும் தான் இங்கே.. பாக்கோ.. கவிமணி அப்பிடியெல்லாம் பட்டம் தந்திருக்கிறார்கள்..அதிலென்ன வெட்கப்பட இருக்கிறது

தகுதி உடையவனுக்கு பட்டம் தானாக தேடிவரும்.

அன்பின் அஜீவன் அண்ணா,சோழியன் அண்ணா

உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

இளைஞனுக்கு கவிக்கூர் என்னும் பட்டம் சரியா தவறா என்பதல்ல எனது கருத்து அப்படியான பட்டங்களை இட்டு அழைப்பது படிப்பவர்களுக்கு ஒரு அசூயையைக் கொடுக்கும்.இணையத்தின் வழி கேள்விப்படும் புதியவர் ஒருவருக்கு இப்படியான பட்டங்கள் மிரட்சியை அளிக்கக்கூடும் உண்மையான வாசக மனத்துடன் அன்றி கவிக்கூர் என்னும் பட்டத்தின் மூலம் அவர் இளைஞனின் படைப்புக்களை அணுக முயலலாம்.

ஈழத்தையே எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை கவிஞர்கள் இருக்கிறார்கள் நுஃமான்,சிவசேகரம்,கருணாகரன்,

ஜேர்மனி பிறேமன் தமிழ்க்கலை மன்றமும் அப்பால் தமிழ் இணையத்தின் சலனம் அமைப்பும் இணைந்து வழங்கிய 'குறும்பட மாலையும் நூல் அறிமுகமும்' நிகழ்வு 30.10.2005 ஞாயிற்றுக் கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன், திருமதி பாமினி யூட்டா அருள்மதி வசந்தராசன் ஆகியோரது மங்கள விளக்கேற்றுதலுடன் ஆரம்பமாகியது.

முதலாவது நிகழ்வாக, 'கவிக்கூர்' சஞ்சீவ்காந்த் அவர்களின் 'உராய்வு' கவிதை நூலின் அறிமுகம் நிகழ்ந்தது. பிறேமன் தமிழ்க்கலை மன்ற, விளையாட்டுக் கழக தலைவர் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

shortfilm1.jpg

அதனைத் தொடர்ந்து பிறேமன் தமிழ்க்கலை மன்ற செயலாளர் இராஜன் முருகவேல் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.

shortfilm2.jpg

தொடர்ந்து 'செந்தமிழ்க்கோடையிடி' குமரன் மாஸ்ரர் அவர்கள் ஆய்வுரை செய்தார்.

shortfilm3.jpg

உராய்வின் முதற்பிரதியை நாச்சிமார்கோயிலடி இராஜன் வழங்க, மூத்த திரைப்படத்துறைக் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்த சஞ்சீவ்காந்த் அவர்களின் நன்றியுரையுடன் நூல் அறிமுகம் நிறைவடைந்தது.

shortfilm4.jpg

நூல் அறிமுகத்தைத் தொடர்ந்து, சுமதி ரூபனின் 'மனமுள்', வதனனின் 'விலாசம்', 'கலைக்கண்' பால்ராஜின் 'கனவுகள்', கலைஞர் பராவின் 'பேரன் பேத்தி' ஆகியன திரையிடப்பட்டன.

தொடர்ந்து, அக்குறும்படம் பற்றிய பார்வையாளர்களின் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

shortfilm5.jpg

கருத்துப் பரிமாற்றங்களை சலனம் அமைப்பைச் சேர்ந்த முகுந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

படங்கள்: பிரபா

('தமிழமுதம்' இணையத்திலிருந்து..!)

நிகழ்வு... படங்களுடன் அறியத்தந்தமைக்கு நன்றிகள்..

நிகழ்வு பற்றிய தகவலுக்கு நன்றிங்கோ

என்னா இளைஞன் சார்........... லண்டன் நிகழ்விலை ஒருகெட்டப்பு ...இதிலை வேற கெட்டப்பு... டிபறண்டாக வந்து ஜமாச்சிகிறிங்க............ :)

நிகழ்வு குறித்த தகவல்களை அறிய தந்த சோழியன் அண்ணாவிற்கு நன்றி, படங்களை தந்த பிரபா அண்ணாவிற்கும் நன்றிகள்.

அழகாக தகவல்கள் மற்றும் படங்களை தந்த சோழியன் மற்றும் பிரபாவுக்கு நன்றிகள்.

களத்தின் மூன்று உறவுகளைக் கண்டதில் மகிழ்ச்சி..! நன்றி சோழியான் அண்ணா..! :wink: :P

தகவல்களுக்கும், படங்களுக்கும் நன்றி.

நிகழ்வு... படங்களுடன் அறியத்தந்தமைக்கு நன்றிகள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.