Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியா கவிதைகள்

Featured Replies

கவிதை நன்றாயிருக்கின்றது. அதனை குரலுடன் இணையுங்களேன் இளைஞன். கவிதை குரலுடன் வரும் போது இன்னும் சிறப்பாக இருக்கும்.

என்ன இளைஞன், நித்தியா குரலை காணலை :(

இளைஞன் நித்தியாவின் குரல் வருவதற்குள் அவசரப்பட்டு போட்டுட்டார் போல.

என்ன இளைஞன், நித்தியா குரலை காணலை :(

கவிதை என்ன காதலனிலை வெறுப்பா வருதா இல்லை........வெறுப்பென்று பேச்சிலும் உள்ளத்தில் பாசத்துடனும் வருதா?

பெண்களுக்கு எப்போது காதலன் மேல் உண்மையான வெறுப்பிருந்திருக்கின்றது குளம்? அவர்களுக்கு எப்போதும் உள்ளத்தில் அள்ள அள்ள குறையாத அன்பும் பாசமும் பிடிப்பும் இருக்கும், ஆனால் பேச்சில் உதட்டில் தான் வெறுப்பை காட்டுவார்கள். காதலன் மேலுள்ள அதீத அன்புதான் வெறுப்பை உதட்டில் காட்ட வைக்கலாம். அந்த அன்பை காதலன் புரிந்துகொண்டு அதற்கு இருமடங்காக திருப்பி அன்பு செய்யும் போது வெறுப்பு பனிபோல் உருகிவிடுகின்றது. காதலில் சகஜமான ஒன்றுதானே இது.

  • Replies 220
  • Views 28.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வேற்றுலககாரியில்லை-உன்னால்

வேறுபடுத்தபட்டவள்

அருமையான கவிதை வரிகள்...சாபாஷ்...சூப்பர்...

பெண்களுக்கு எப்போது காதலன் மேல் உண்மையான வெறுப்பிருந்திருக்கின்றது குளம்? அவர்களுக்கு எப்போதும் உள்ளத்தில் அள்ள அள்ள குறையாத அன்பும் பாசமும் பிடிப்பும் இருக்கும், ஆனால் பேச்சில் உதட்டில் தான் வெறுப்பை காட்டுவார்கள். காதலன் மேலுள்ள அதீத அன்புதான் வெறுப்பை உதட்டில் காட்ட வைக்கலாம். அந்த அன்பை காதலன் புரிந்துகொண்டு அதற்கு இருமடங்காக திருப்பி அன்பு செய்யும் போது வெறுப்பு பனிபோல் உருகிவிடுகின்றது. காதலில் சகஜமான ஒன்றுதானே இது.

அப்பிடிப்போடுங்க... :(

[]பெண்களுக்கு எப்போது காதலன் மேல் உண்மையான வெறுப்பிருந்திருக்கின்றது குளம்? அவர்களுக்கு எப்போதும் உள்ளத்தில் அள்ள அள்ள குறையாத அன்பும் பாசமும் பிடிப்பும் இருக்கும், ஆனால் பேச்சில் உதட்டில் தான் வெறுப்பை காட்டுவார்கள். காதலன் மேலுள்ள அதீத அன்புதான் வெறுப்பை உதட்டில் காட்ட வைக்கலாம். அந்த அன்பை காதலன் புரிந்துகொண்டு அதற்கு இருமடங்காக திருப்பி அன்பு செய்யும் போது வெறுப்பு பனிபோல் உருகிவிடுகின்றது. காதலில் சகஜமான ஒன்றுதானே இது.

மதன் உங்க அனுபவமா........என்னமா அனுபவம் பேசுதப்பா :P :wink: :P :(

குளம்,

எல்லாமே சொந்த அனுபவத்தில் தான் எழுதவேண்டும் என்றால் யாருமே எதுமே எழுதுவது கஷ்டம். சில விஷயங்கள் படித்து தெரியும், சிலது மற்றவர்கள் அனுபவத்தினை சொல்லும் போது தெரியும். வேறு சில மற்றவர்களை கண்முன்னே பார்க்கும் போது தெரியும். தீக்குள் விரலை வைத்தால் சுடும் என்று அறிந்திருக்கன் .... இதுவரை நான் சுட்டு பார்க்கலை, நீங்கள் என்னை சுட்டு பார்த்துதான் எழுதவேண்டும் என்று சொல்லுவீங்க போல இருக்கு :wink: :P

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தூதனுப்புகிறார் நித்தியா. காதலுக்காக அல்ல, பிரிவதற்காய்?:

[url=http://www.vannithendral.net/soundclips/sugama.mp3]தூது

உயிர் இருந்தால் தான் உயிர்பறிக்கமுடியும் என்று தத்துவம் பேசுகிறார் நித்தியா. பிணமான பின்பாவது பிரியம் காட்டச் சொல்கிறார்:

[url=http://www.vannithendral.net/soundclips/vasee.mp3]பிரியம்

கவிதைகளை இணைத்தமைக்கு நன்றி இளைஞன்,

என்ன கவிதைகள் பெரும்பாலும் சோகமாவே இருக்கின்றது?

தூதனுப்புகிறார் நித்தியா. காதலுக்காக அல்ல, பிரிவதற்காய்?:

இது பிரிவதற்காய் விடுற

துாது என்று எனக்கு

தெரியவில்லை..!!

பிரிவு அவனால் வேண்டப்பட்டது

போலவும்

அவன் பிரியப்பட்டதால்

பிரிந்து போறது தான்

எனக்கு புரியுது!!

இது பிரிவதற்கு துாதா??

பிரிவுக்கு துாது தேவை

இல்லை..!

உயிர் இருந்தால் தான் உயிர்பறிக்கமுடியும் என்று தத்துவம் பேசுகிறார் நித்தியா. பிணமான பின்பாவது பிரியம் காட்டச் சொல்கிறார்:

இது தத்துவம் இல்லை என்று நினைக்கிறேன்..

இதுக்கு விளக்கம் எழுதினவங்களை

கெட்கிறது நல்லது என்று நினைக்கிறேன்

நாங்களா ஓர் விளக்கம் தேடுறதை விட

இப்போ நீங்கள் தேடின மாதிரி..!!!

வாழ்க்கையில் காதல் எல்லோருக்கும் வரும்.

தத்துவங்களும் பேச சொல்லும்..ஆனால் சில காதல்கள் தான் ஒன்று சேரும்..சில சமயங்களில் காதலனுக்காகவே காதலை விட்டு விலக நேரிடும்..எதற்காக விட்டு விலகலாம் ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உள்ள வலி உணர்ச்சியை என்னால ரொம்பவே உணரக்கூடியதா இருக்கு. அழகான வரிகள்..அழகான கவியும்...கூடவே பாடல்..அன்பே சுகமா..உன் கோபங்கள் சுகமா..அருமை

  • தொடங்கியவர்

பிரிவிற்கு தூது தேவையோ தேவையில்லையோ என்பது இரண்டாவது விடயம் - நித்தியா தன் கவிதையில் அந்திவானத்தை தூது அனுப்புகிறார் தானே - பிறகென்ன? நானாக விளக்கம் எதுவும் தேடவில்லையே!

உயிர் இருந்தால் தான் உயிர்பறிக்க முடியும் என்பது உண்மைதானே? தத்துவம் என்பதும் அதைத்தானே? - உங்கள் பார்வையில் தத்துவம் இல்லாமல் கூட இருக்கட்டும் - நித்தியாவும் தான் சொன்னது தத்துவம் என்று சொல்லவில்லைத்தானே.

பிரிவிற்கு தூது தேவையோ தேவையில்லையோ என்பது இரண்டாவது விடயம் - நித்தியா தன் கவிதையில் அந்திவானத்தை தூது அனுப்புகிறார் தானே - பிறகென்ன? நானாக விளக்கம் எதுவும் தேடவில்லையே!

துாது விடுறா உண்மை

பிரிவுக்கு துாது விடுறாவா??

உயிர் இருந்தால் தான் உயிர்பறிக்க முடியும் என்பது உண்மைதானே? தத்துவம் என்பதும் அதைத்தானே? - உங்கள் பார்வையில் தத்துவம் இல்லாமல் கூட இருக்கட்டும் - நித்தியாவும் தான் சொன்னது தத்துவம் என்று சொல்லவில்லைத்தானே.

இது தத்துவமாயே

இருக்கட்டும்

உங்கள் பார்வைக்கு..

அது உங்கள் பார்வை

இதை நான்

குமுறலாத்தான்

நான் நினைக்கிறேன்

மன்னிக்கவும்

  • தொடங்கியவர்

காதல்...

kavithai1_355.jpg

தோற்றுப் போவேன்

என்பதால் 'தோழா' என்றேன்

எதிர்காலத்தை நாங்கள்

உருவாக்குவோம்..

நிகழ்காலத்தை நேசி 'காதலி'

என்றான்..

காதல் கொண்டேன்

காலம் கடந்தது..

அவசரமாய் ஆதிக்கமாய்

விசாரிக்கிறான்

'வருத்தம் எப்படி இருக்கு'

அன்பாய்

'நீ எப்படி இருக்கிறாய்'

என விசாரிக்காமல்..

ம்ம்

என்னை விடவும்

என் பிரிவைத்தானே

பிரியப்படுகிறான்

வஞ்சகன்

அன்றும்

காதலன் இருந்தான்

காதல் தோற்றது

இன்றும்

காதலன் இருந்தான்

காதல் தோற்கடிக்கப்பட்டது

காதலுடன் நித்தியா

பாவம் இந்த நித்தியா பேசுது...பறையது...ஆனா மறைஞ்சிருக்கு..ஏனாம்...ஒரு வேளை... கண்ணைக்கட்டி காட்டில விட புதுமை படைக்குதோ..இல்ல கை விலங்கிட்டிருக்கோ...! :P :)

தூது , பிரியம், போல் காதல்......ஐயும் ஒலி பதிவா இணைச்சிருக்கலாமே இளைஞன். நன்றாக இருந்திருக்கும்.

நித்தியாவின் அழகிய கவிதைகளை அடுக்கடுக்காக தரும் இளைஞனுக்கு நன்றிங்க. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை நன்றி இளைஞன்அண்ணா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கற்பனை

karpanai_nithi_141.jpg

இடை நோகக் கட்டியணைத்து

இளந்தென்றல் வெளியேறப் போட்டி போட

சுடு மூச்சு தேகம் பட உள் ஆவி இறந்தது

27 ஆண்டுகளை நல்லிரவில் கைதான போது

விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர்

சுமையாகிப் போனது..

உயிரைப் பிழியும் உன் பார்வை

தேடல் கொண்டதில்

21 ஆண்டுகள் கன்னக்குழியில்

தொலைந்து போனது..

கிளிப்பேச்சு கேட்கும் காலையில்

அவன் விழிப்பேச்சு கண்டு

மூச்சுமுட்ட கட்டியணைத்து

இறந்தபோன உடலுக்கு அவன்

உதடுகளால் உயிர் தந்த போது..

தொலைந்து போகும் என் காதலை

எண்ணி இதயம் வேகமாய்த் துடித்தது..

"காந்த"க் கண்ணில் தீப்பொறி கண்டதும்

மின்னலின் தலைக்கனம்

மெத்தைமேல் இளகிப்போனது..

கண்ணின் மணி 72கிலோ'வை

எடை போட்டபோது

மெல்லிடை நூலாகிப்போனது..

வஞ்சகன்...

சென்மம் முழுதும்

தொலைந்து போகிறவளுக்கு

இரண்டு நாள் ஈடாக கொடுத்தான்

திருமார்பில் முகம் புதைப்பதுக்குள்

தேய்ந்து போனதடா

அந்த 43 மணித்தியாலங்கள்..

தூக்கி எடைபார்த்த போது

கண்ணடித்த கறுப்புமுகம்

இன்னும் பாதத்தை

கோலம் போட வைக்குதடா..

விழி சொரியும் கண்ணீருடன் கடைசி முத்தம்

தந்து விடை பெற்ற போது - காதல்

நிரந்தரமாக விடைபெறுகிறதோ..?

என்று ஏக்கத்தில் கை நடுங்க

நடை தானாகத் தளர்ந்தது..

கத்தரிக்காய் எடை இல்லாக்காதல்

என்று ஊர் தூற்றுகையில்

இதயம் வெடித்து சிதறியது

காதலுக்காய் மரணிக்க

மாற்றுயிர் இல்லையே என்று..

எழுதியவர்: நித்தியா

பி.கு.: இந்தக் கவிதை வைரமுத்துவின் ஒரு கவிதையின் பாதிப்பில் எழுதியது என நித்தியா குறிப்பிடச் சொன்னார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியாவின் கவிதை சூப்பர் :P

  • தொடங்கியவர்

நித்தியாவின் வலைப்பதிவு:

http://suduvanam.blogspot.com

இழஞ்ஞன் ஏன் நித்தியாவின் எல்லாக் கவிதைகளிலும் ஒரு ஏக்கம் கலந்த சோகம் இழையோடுகிறது.வாசகன் என்ற ரீதியில் இது அலுப்புத் தட்டுகிறது.ஏன் அவர் வேறு உணர்வுகளையும் விடயங்களையும் கவியாக்கலாமே.தனது கவி புனையும் ஆழுமயை வளர்ப்பதற்கு.ஏக்கம்,தவிப்பு,

  • தொடங்கியவர்

உண்மைதான் நாரதர். நானும் இதுபற்றி அவரிடம் தெரிவித்துள்ளேன். அவரைப் பொறுத்தவரை காதல் தந்த அனுபவங்களை கவிதைமூலம் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறார் - கவிதையை தனக்கு ஆறுதலான மொழியாகக் கொள்கிறார். படைப்பின் எல்லையை விரிவாக்குமாறு அவரிடம் குறிப்பிட்டுள்ளேன் - காதலைத் தாண்டி மனித வாழ்வு பரந்தது - அதன் இரசனை உலகும், தேடல்களும் விரிந்தது என்று விளக்கியுள்ளேன். நிச்சயமாக வேறு கருப்பொட்களையும் கவிதையின் தளமாகக் கொள்வார் எதிர்காலத்தில் என நம்புகிறேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியா என்று தமிழ்மணத்தில் ஒரு பதிவு கண்டபோது கேக்க நினைத்தேன். இந்த நித்தியாவா என்டு. நீங்களா சொல்லீட்டீங்கள். :P

சோகமான கவிதைகள் எழுதுவதில் ஒரு சுகம் உண்டாம். (எழுதிறவை சொன்னாங்க நமக்கு தெரியாது) :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியாவின் கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. ஒலிப்பதிவுகளும் மிக மிக நன்றாக இருக்கின்றன. கவிதைகளை எங்களுக்காக வழங்குகின்ற இளைஞனுக்கும் , கவிகளை எழுதி ஒலிவடிவில் வழங்கும் நித்தியாவுக்கும் வாழ்த்துக்கள் .மேலும் கவிதைகளை ஆவலோடு எதிர் பார்க்கின்றேன். நன்றி

வஞ்சகன்...

சென்மம் முழுதும்

தொலைந்து போகிறவளுக்கு

இரண்டு நாள் ஈடாக கொடுத்தான்

திருமார்பில் முகம் புதைப்பதுக்குள்

தேய்ந்து போனதடா

அந்த 43 மணித்தியாலங்கள்..

நல்ல வரிகள்.. நல்லா எழுதுறீங்க நித்தி வாழ்த்துக்கள்.அப்படீயே ஒரு சந்தோசமான காதல் கவிதையையும் எழுதுங்க ..எதிர்பாக்கிறேன்.. :P :P

நித்தியாவின் கவிதைகள் அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.