Jump to content

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்


Recommended Posts

prabakaran.jpg

இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் மக்களிற்கு ஏதாவது செய்தாலே போதும் என்று முடிவெடுத்து மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்..

ஆனாலும் முடியவில்லை..காரணம்.. இப்பொழுது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சையில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இரண்டாக பிரிந்து ஒரு சண்டை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.. ஒருவர் மற்றவரை சாதாரணமாய் நலம் விசாரிப்பது போலவே அவர்களிற்குள் துரோகிகள் என்று கூறிவிட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாதன் மற்றும் தயாமோகனின் அறிக்கைகள் இடியாய் இறங்கியிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை..

குழம்பிய குட்டையில் மீன் , பிடிக்க பலர் ....... தூண்டில் போடுகின்றார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்வதறியாது குழம்பும் சராசரி ஈழத்தமிழனில் நானும் ஒருவன்

Link to comment
Share on other sites

கறுப்பி என்னுடைய பதிவிலேயே இதற்கான பதிலை அழுத்தமாய் கூறியுள்ளேன்.. நெடுமாறன் மட்டுமல்ல.. திருமா கூட இன்று 5ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்று கர்ச்சித்துள்ளார்...இனியும் இந்தியாவில் உள்ளவர்களின் வெட்டிப்பேச்சுக்களை நம்பாமல்.. உங்கள் உறவுகள் யாராவது வவுனியா அகதிமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தால

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவை உண்மை என்று கூறி வாதிட இதை எழுதிய சாத்திரி என்பவர் கடவுள் இல்லை என்பதனை இதை வாசிப்வர்கள் புரிந்துகொண்டால் இதை நீக்க வேண்டிய எந்த அவசியமும் நிர்வாகத்திற்கு இல்லை.

காரணம் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் என்பதற்கு எத்தனையோ பந்திகளை தந்தவர். அவர் இல்லை என்பதற்கு ஒரு வரியே தருகிறார். அதை தவிர தற்போதைய நிலையில் வேறு எதையும் யாராலும் தரமுடியாது என்பதே உண்மையும்.

பதிவாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள். அம்மாறைமாவட்ட அரசியில் துறையினது அனைத்து அறிக்கைகளும் வன்னியில் இருந்தே உலகிற்கு வெளியாகிகொண்டிருந்த நிலையில். பிபிசி க்கு திடிரென. அம்மாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளருடன் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது? அப்போது பத்திரிகையாளர்களுடன் தொடர்வை பேணி வைத்திருக்க கூடிய ஒரு நிரந்தர நிலையில் அம்மாறை அரசியல் துறை உள்ளபோது. எதை வைத்து புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது என்று சொல்ல முனைகின்றீர்கள்? கிழக்கில் சில காலங்களுக்கு முன் எது நடந்ததோ அதுவே தற்போது வன்னியில் நடந்துள்ளது. அங்கே அரசியல் துறை இராணுவ துறை என்பதை ஏற்றுகொள்ளும் நீங்கள். எந்த அடிப்படையில் வன்னியில் ஏதும் இல்லை என்று நிராகரிக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இறந்து விட்டார் என்பதை என்னால் ஜீரணிக்கமுடியாது. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. நல்லதையே விரும்பி எதிர்பார்க்கும் மனதுடன்....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் தான் அக்கா.

"ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பதிவை தவறாக விளங்காமல் இருப்பவர்களுக்காக இந்த மீள் பதிவு .

பத்மநாதன் மற்றும் தயாமோகனின் அறிக்கைகள் இடியாய் இறங்கியிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை..

ஏனென்றால் அவர்கள் தாயகத்தில் பலகாலம் தொடர்பில் இருந்த .............

தமிழ் நெற்ரையோ , தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுத்த வானொலி , தொலைக்காட்சிகளுக்கோ பேட்டி கொடுக்காமல் .......

ரமிலோசைக்கு பேட்டி கொடுத்தது தான் ஆச்சரியம் !!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

prabakaran.jpg

சரி் அவர் பத்மநாதனின் அறிக்கையை வெளியான பின்னர் பிரபாகரன்உயிருடன்இருந்தும் பதில் அறிக்கைகள் விடாமல் இருக்கிறார் என்றால் அவரும் பத்மநாதனின் அறிக்கையை ஏதோ காரணங்களிற்காக ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே அர்த்தம்..

-உண்மை. இதனால் தான் எது எவ்வாறு இருப்பினும், துவண்டு ஒரு மூலையில் குந்தி விடாமல் எமது கடமையை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்....

ஆனால் வெளிநாடுகளின் பொறுப்பாளர்கள் மட்டும் ஏற்கமறுப்பதற்கு அவர்கள் சொல்லும் சப்பைக்காரணம் வெளிநாடுகளில் உள்ள தமிழ்மக்கள் மனமுடைந்து விடுவார்களாம்..வெளிநாட்டு தமிழர்கள் மனமுடைந்து போனால் அதனை ஒட்டவைக்க ஆயிரம் வழிகளுண்டு இரண்டு நாள் அழுது விட்டு மூன்றாவது நாள் வழைமைக்கு திரும்பி விடுவார்கள்.

-இரண்டு நாள் அழுது விட்டு - ஈழப் போர் என்பது ஒன்று நடந்தது என்பதையே மறந்து விட்டு தன் தன் சோலியை பார்க்க போகும் சில சனம்..... விடுதலை போர் என்பதை எப்போதும் புலிகள் பார்த்து கொள்வார்கள் என்று தட்டி கழித்து விட்டு இருந்தவர்கள் இப்படி...

ஆனால் பிரபாகரன் மட்டும் தான் எம்மை வழி நடத்துவார் என்று இருந்த பலர் இன்று - தலைவரின் தியாகத்தின் தாற்பரியத்தை, விடுதலை என்ற இலக்கை மறந்து, "தலைமை" போயிட்டு என்று மட்டும் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள்...இவர்களில் சிலர் தான் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள், மனமுடைந்து தற்கொலை, வன்முறை, மனநோய் என்று போகும் நிலை... ஒரு விதத்தில் அது மிகை படுத்த பட்ட கூற்று அல்ல, உண்மையும் கூட - ஏன் என்றால் தலைவரை அந்த அளவிற்கு தூக்கி வைத்து இருந்தவர் பலர்.

அன்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன், நடேசன் போன்று மக்களின் மத்தியில் பரிட்சயமானவர் இல்லை பத்மநாதன் (ஆனால் அவரின் மூலமாக தான் இந்த அறிவித்தலை கேட்க வேண்டும் என்பது காலத்தின் நியதி). பாவம் அதற்காக அந்த மனுசனை பற்றி நன்கு அறிய முதலே - தந்த அறிவித்தல் ஏற்று கொள்ள கடினமாய் இருப்பதால் பலர் திண்டாடுகிறார்கள்... (Dont shoot the messenger because the news is bad!)

ஆனால் நீங்கள் சொன்ன கூற்று உண்மை, பத்மநாதன் சொன்னதில் தலைமைக்கு உடன்பாடு இல்லாவிடில் இதற்குள் ஆணித்தரமான அறிவித்தல் வந்து இருக்கும்.

ஆனால் இறந்து போன பிரபாகரனை இன்னமும் வாழ வைப்பதன் மூலம் மேலும் சட்டச்சிக்கல்களை உருவாக்கி வவுனியாவில் முட்கம்பிகளிற்கு பின்னால் நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிகாலம் என்ன???சிந்திப்பீர்களா??

-உண்மை. உண்மை. சிந்தித்த விடயம் தான்....ஆனால் பலரும் கருத்தில் வைத்து இருக்க வேண்டிய விடயம்.

இதற்குமேல் என்னால் வாழைப்பழத்தை உரித்து அவர்கள் வாயில்வைத்து.ஒரு தடியால் வயிற்றிலும் தள்ளிவிடமுடியாது..

-- இதென்ன கதை?! நீங்கள் பிளங்குவது தமிழருடன்....வைத்திட்குள் தடியால் தள்ளி விட்டால் மட்டும் போதாது, குடலையும் உருவி விட வேண்டும்!!!

Link to comment
Share on other sites

இந்த பதிவை உண்மை என்று கூறி வாதிட இதை எழுதிய சாத்திரி என்பவர் கடவுள் இல்லை என்பதனை இதை வாசிப்வர்கள் புரிந்துகொண்டால் இதை நீக்க வேண்டிய எந்த அவசியமும் நிர்வாகத்திற்கு இல்லை.

காரணம் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் என்பதற்கு எத்தனையோ பந்திகளை தந்தவர். அவர் இல்லை என்பதற்கு ஒரு வரியே தருகிறார். அதை தவிர தற்போதைய நிலையில் வேறு எதையும் யாராலும் தரமுடியாது என்பதே உண்மையும்.

பதிவாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள். அம்மாறைமாவட்ட அரசியில் துறையினது அனைத்து அறிக்கைகளும் வன்னியில் இருந்தே உலகிற்கு வெளியாகிகொண்டிருந்த நிலையில். பிபிசி க்கு திடிரென. அம்மாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளருடன் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது? அப்போது பத்திரிகையாளர்களுடன் தொடர்வை பேணி வைத்திருக்க கூடிய ஒரு நிரந்தர நிலையில் அம்மாறை அரசியல் துறை உள்ளபோது. எதை வைத்து புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது என்று சொல்ல முனைகின்றீர்கள்? கிழக்கில் சில காலங்களுக்கு முன் எது நடந்ததோ அதுவே தற்போது வன்னியில் நடந்துள்ளது. அங்கே அரசியல் துறை இராணுவ துறை என்பதை ஏற்றுகொள்ளும் நீங்கள். எந்த அடிப்படையில் வன்னியில் ஏதும் இல்லை என்று நிராகரிக்கின்றீர்கள்?

மருதங்கேணி இந்தமாதம் 17ந்திகதிக்குப்பின்னர்..நீங்க??் சொல்கின்ற அந்த வன்னி எதை மையப்படுத்தி சொல்கிறீர்கள் என்று குறிப்பிட்டுச்சொல்லமுடியு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

............... உட்பட பெரும்பாலான அரசியல் பிரிவினர் சரணடைந்துள்ளனர்..

தமிழரின் , கடைசி துண்டுக்காணியான முள்ளிவாய்க்கால் வரை நின்று தானே ..... அவர்கள் சரணடைந்தார்கள் .

அவர்களுக்கு வேறு ஏதாவது தெரிவு இருந்தால் சொல்லுங்களேன் .

அத்துடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பற்றி இங்கு நீங்கள் விமர்சிப்பது , அழகாகவா உள்ளது .

அவர் இருக்கும் இக்கட்டு நிலைமையையும் யோசித்து கருத்துக்களை பரிமாறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை வீழ்ந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக நகரவேண்டிய தேவை இருக்கிறது. எங்களுடைய தாயக மீட்புப் போராட்டம் தலைவருடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எல்லோருக்குள்ளும் முளைவிட்ட விருட்சம். சற்று ஆடிப்போனோம் என்பதை மறுக்க முடியாது. இந்த நிலை எம்மை உடைத்துவிடலாகாது. எந்தத் தலைவரைப் பின்பற்றினோமோ, எந்தத் தலைவரை நேசித்தோமோ, அந்தத் தலைவர் தன் சிந்தனையின் மூலம் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பார். எங்கள் உறவுகளைக் காக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய தருணத்தில் மனம் சோர்ந்து உழன்று கொண்டிராது வதை முகாம்களுக்குள் எஞ்சியிருக்கும் எங்களின் உறவுகளைக் காக்க ஏதாவது முயற்சி எடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

என்னுடைய பதிவை தவறாக விளங்காமல் இருப்பவர்களுக்காக இந்த மீள் பதிவு .

ஏனென்றால் அவர்கள் தாயகத்தில் பலகாலம் தொடர்பில் இருந்த .............

தமிழ் நெற்ரையோ , தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுத்த வானொலி , தொலைக்காட்சிகளுக்கோ பேட்டி கொடுக்காமல் .......

ரமிலோசைக்கு பேட்டி கொடுத்தது தான் ஆச்சரியம் !!!!!!!!!

அதுவும் புலிகளால் றோவின் கைக்கூலி என கூறப்பட்ட பீபீசீ ரமிலோசைக்கு..!!!!!!!!!

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணாவில் சில கருத்துகளில் உடன் படுகிறேன்.

ஆனாலும் தலைவர் இறந்து விட்டார் அவர் யாருக்காக போராடினாரோ அவர்கலுக்கு ஒரு செய்தியும் சொல்லாம போய்ட்டார் அதையும் குமரன்( செல்வாராச) பத்மநாதன் தான் சொல்ல வேட்னிய நிலைக்கு விட்டு விட்டு போய்ட்டார் என்பதை நம்ப்ப முடிஅய்வில்லை.

2 வது புலிகளின் விழ்ச்சுக்கு உண்மை காரணம் என்ன என்று தேடினால் எல்லாத்துக்கும் விடை கிடைக்கும்.

தமிழினி அகதி முகமில் கைது

2500 க்கு மேல் கிழ் மட்ட தளபதிகள் உற்பட 10.000 போராளிகள் கைது ஏன் இவர்கல் இப்ப மட்டும் சரன் அடைந்ததர்கள்?

சந்திரிக்கா சண்டை பிடிக்கும் போது யாருமே சரன் அடடயவில்லை?

எல்லாத்துக்கும் பதில் கே பி யிடம் இருக்கு.

பிராபகரனை நம்பி தமிழ் மகக்ள் ஏமாந்தர்கள் என்று சொல்லும் கூட்டம் ஒரு பக்கம் கேபி என்ற தனி மனிதனை நம்பி புலிகள் என்ற அமைப்பே ஏமாந்து விட்டது என்ரு சொல்லுபவர்கள் ஒரு சிலர் தான்.

உண்மையில் புலிகளுக்கு 2004 ஆண்டுக்கு பின் ஒரு ஆயுதமும் அல்லது கப்பலோ வரவில்லை நம்ப கஸ்டம் ஆனால் உண்மையாக ஒரு கப்பலும் வரவில்லை ஆனல வந்ததாக சிங்கள ஊடகமும் இந்தியா ஊடகமும் செய்தி மட்டும் தான் வெளியிட்டன ஆனால் ஒன்றும் வரவில்லை.

கேபி அனிப்ப்பிய கப்பல் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக அடிபட தொடங்கியது கேபியை சற்று ஓதுக்கி விட்டு வேர சிலர் எடுத்த முயற்சிதான் பல கைதுகலுக்க்கும் கப்பள் அடிகளும் காரனமாக அமைய வேரு வழி இல்லை மீண்டும் கேபி ஆனால் காலம் கடந்து விட்டது இது தான் பின் புலத்தில் உண்மை என்றால்

கேபிகள் யார்? குமரன் பத்மநாதன் அல்லது செல்வராச பத்மநாதன் புரியாத புதிர்க்கு விடை யர் சொல்வார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியும் யாருக்கிட்ட விலைபோயிட்டு இந்த கட்டுரையை எழுதினாரோ யாருக்குத்தான் தெரியும்.

சாத்திரி சொல்லுறமதிரி தலைவர் இப்ப இருக்கிறன் என்று சட்டலைட் தொலைபேசியில கதைச்சால். அடுத்த கணமே அந்த இடம் முற்றுகையிடப்படும். அல்லது தலைவர் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அதுவும் ஆபத்தாகவே முடியும். இப்ப நம்மளை போலவே சிங்களமும் தலைவர் இருக்கிறாரோ என்று குழம்பியிருக்கு. அப்படியே இருக்கட்டும்.

சாத்திரி தயவு செய்து உங்கள் கட்டுரையில் தலைப்பை மாற்றாவும். இல்லாட்டால் கஸ்டம். :wub:

உங்கள் கட்டுரையில் தலைவரை விட சொன்ன மற்றைய கருத்தை நான் புரிந்து கொண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

34 ஆண்டுகள் ஒரு ஆயுத விடுதலைப்போராட்டத்தினை நடத்தி.. கொண்ட கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு வீரனிற்கு ஒரு பூவினைப்போட்டு மனதார அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் மக்களை குழப்பியடித்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மாற்றுக்கருத்தாளர்களோ..இலங்

கையரசோ அதன் கூலிகளோ அல்ல..

சாத்திரியாரே! உங்கள் கருத்துக்கு எதிராக எதுவித மாற்று கருத்தும் இல்லை. உண்மையை தான் சொல்லி இருக்கின்றீர்கள். சாதரண ஒரு போராளி வீரமரணம் அடைந்த போது நாம் செலுத்திய அஞ்சலியை, நம் தேசியத்தலைவனுக்கு, நம்மை காவல் காத்த எம் காவல் தெய்வத்துக்கு ஒரு மெழுகுவர்த்தியாவது வைத்து ஒரு துளி கண்ணீராவது சிந்தி ஒர் அஞ்சலி செலுத்தமுடியாமல் பண்ணிவிட்டார்களே. இந்த செய்தியை அறிந்ததும் எமக்கு அருகில் இருந்த மாற்று இயக்கங்களை சேர்ந்தவர்களே மிகுந்த மனவேதனைப்பட்டு கொண்டிருக்கும் போது நாம் இந்த நபர்களின் கதைகளை நம்பி எடுத்த எடுப்பில் மறுத்து ஒரு மிகப்பெரும் துரோகத்தை எம் தலைவனுக்கு செய்துவிட்டோமே என்பதை நினைக்க என் கண் எல்லாம் கலங்குகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் புலிகளால் றோவின் கைக்கூலி என கூறப்பட்ட பீபீசீ ரமிலோசைக்கு..!!!!!!!!!

ஓம் வசி , அதுதான் எனக்கு ஆத்திரமாக வருகின்றது .

நான் உண்மையில் இங்கு கருத்து எழுதும் பலருக்கு சிந்திக்கும் அறிவு உள்ளது என்று நினைத்தேன் .

Link to comment
Share on other sites

தமிழரின் , கடைசி துண்டுக்காணியான முள்ளிவாய்க்கால் வரை நின்று தானே ..... அவர்கள் சரணடைந்தார்கள் .

அவர்களுக்கு வேறு ஏதாவது தெரிவு இருந்தால் சொல்லுங்களேன் .

அத்துடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பற்றி இங்கு நீங்கள் விமர்சிப்பது , அழகாகவா உள்ளது .

அவர் இருக்கும் இக்கட்டு நிலைமையையும் யோசித்து கருத்துக்களை பரிமாறுங்கள்.

தமிழ்சிறி பாராளுமன்ற உறுப்பினர் சொன்னார் என்று சொல்வதற்கும்.. அவரது பெயரைப்பாவித்து விமர்சிப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளது.. இங்கு நான் விமர்சிக்கவில்லை அடுத்ததாக சரணடைந்த அரசியல் போராளிகளைப் பற்றியும் தவறாக ஏதும் எழுதவில்லையோ..தலைவர் இல்லை என்று ஒரு முடிவினை ஒருமனதாகஎல்லாரும் எடுத்து அரசியல் போராட்டமாக மாற்றினால் .. இலங்கை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் புலிகள் மீதான தடை நீங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சரணடைந்த போராளிகளை மீட்கலாம் என்பதுதானே என்னுடைய விவாதம்.. தலைவர் இருக்கிறார் மீண்டும் யுதம் என்று என்று நாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டிருக்கும் வரை அவனும் பிரபாகரனை தேடுறன் புலிகளை அழிக்கிறன் என்று இருக்கிற சனத்தையும் வெளியிலை விடமாட்டான்.. பிடிபட்ட போராளிகளிற்கும் நாளும் சித்திரவதைததான் இதைத்தான் விரும்புகிறீர்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்களை பார்த்து பொறுக்க முடியாமல் எழுதுகிறேன். இந்த பேட்டிகள் தாயக ஊடகங்கள் என்று செல்லப்படுபவைக்கும் கொடக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். தாயாமோகன் முதலில் CMR ற்கு தான் பேட்டி கொடுத்தார் அதை அவர்கள் வெளியே விடவே இல்லை..

Link to comment
Share on other sites

தலைவர் இல்லை என்று ஒரு முடிவினை ஒருமனதாகஎல்லாரும் எடுத்து அரசியல் போராட்டமாக மாற்றினால் .. இலங்கை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் புலிகள் மீதான தடை நீங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சரணடைந்த போராளிகளை மீட்கலாம் என்பதுதானே என்னுடைய விவாதம்.. தலைவர் இருக்கிறார் மீண்டும் யுதம் என்று என்று நாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டிருக்கும் வரை அவனும் பிரபாகரனை தேடுறன் புலிகளை அழிக்கிறன் என்று இருக்கிற சனத்தையும் வெளியிலை விடமாட்டான்.. பிடிபட்ட போராளிகளிற்கும் நாளும் சித்திரவதைததான் இதைத்தான் விரும்புகிறீர்களா???

சாத்து நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சிங்களவன் தெளிவாக சொல்லிவிட்டானே இனி எந்த உடன்பாடும் இல்லை என்று.. இனி எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் நாட்டிலிருந்து மேற்கொள்ள முடியும்? நாம் எந்த பெயரில் செய்தாலும் கட்டாயம் புலி முத்திரை குத்தும் சிறீலங்கா அரசு.

மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களை பார்த்து பொறுக்க முடியாமல் எழுதுகிறேன். இந்த பேட்டிகள் தாயக ஊடகங்கள் என்று செல்லப்படுபவைக்கும் கொடக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். தாயாமோகன் முதலில் CMR ற்கு தான் பேட்டி கொடுத்தார் அதை அவர்கள் வெளியே விடவே இல்லை..

உண்மைதான் வக்தா.. தயா மோகன் ஒஸ்ரேலிய தமிழ்வானொலியுடனும் தொடர்பு கொண்டதாகத் தகவல்.. அது மட்டுமல்ல பத்மநாதனின் அறிக்கை கனடிய ஜரோப்பிய ஒஸ்ரேலிய தமிழ் ஊடகங்கள் அனைத்திற்கும் அனுப்பப் பட்டது. அனால் புலம் பெயர் மக்கள் மனது நொந்து போவார்கள் என்றுபோடவில்லையாம்..3 லட்டசம் மக்களின் உயிரா .. புலம் பெயர் மக்களின் மனதா பெரியது???

Link to comment
Share on other sites

***

இன்று தலைவரின் பெற்றோர்கள் வவுனியா தடுப்பு முகாமில் இருப்பதாக அரசே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் தமிழினியையும் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

வல்வை சாகரா அக்காவின் பதிலில் சொன்னது போல, எமக்கிருக்கும் வரலாற்றுக் கடமையில் இருந்து எம்மை விலக்கி வைக்கவே திடீர் படையணி, திடீர் புலனாய்வு பிரிவெல்லாம் முளைத்தெழும்புகின்றன.

Link to comment
Share on other sites

தலைவர் இல்லை என்று ஒரு முடிவினை ஒருமனதாகஎல்லாரும் எடுத்து அரசியல் போராட்டமாக மாற்றினால் .. இலங்கை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் புலிகள் மீதான தடை நீங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சரணடைந்த போராளிகளை மீட்கலாம் என்பதுதானே என்னுடைய விவாதம்.. தலைவர் இருக்கிறார் மீண்டும் யுதம் என்று என்று நாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டிருக்கும் வரை அவனும் பிரபாகரனை தேடுறன் புலிகளை அழிக்கிறன் என்று இருக்கிற சனத்தையும் வெளியிலை விடமாட்டான்.. பிடிபட்ட போராளிகளிற்கும் நாளும் சித்திரவதைததான் இதைத்தான் விரும்புகிறீர்களா???

சாத்து நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சிங்களவன் தெளிவாக சொல்லிவிட்டானே இனி எந்த உடன்பாடும் இல்லை என்று.. இனி எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் நாட்டிலிருந்து மேற்கொள்ள முடியும்? நாம் எந்த பெயரில் செய்தாலும் கட்டாயம் புலி முத்திரை குத்தும் சிறீலங்கா அரசு.

மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்??

அப்ப அந்த 3லட்சம் பேரையும் சாக விடலாமா வசி ?

***

இன்று தலைவரின் பெற்றோர்கள் வவுனியா தடுப்பு முகாமில் இருப்பதாக அரசே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் தமிழினியையும் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

வல்வை சாகரா அக்காவின் பதிலில் சொன்னது போல, எமக்கிருக்கும் வரலாற்றுக் கடமையில் இருந்து எம்மை விலக்கி வைக்கவே திடீர் படையணி, திடீர் புலனாய்வு பிரிவெல்லாம் முளைத்தெழும்புகின்றன.

மோகனின் கத்தி உண்மைகள் சுடுகிறது என்பதை உரைக்கின்றன.

நிழலியின் கருத்திலிருந்து பல நீக்கம். மோகன் இன்னும் வெட்டிக்கொண்டு இருங்கோ விடிவு வரும்.

தவறுகளை இதுவரை யாரும் தட்டிக் கேட்காததன் பலனை முழுத்தமிழினமும் அனுபவிக்கிறது. சிலரைத் திருப்திப்படுத்த பலரது உண்மையான கருத்துக்களை வெட்டுங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.