Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் கபடத்தனத்தை எதிர்கொள்ளும் அரசியல் கட்டமைப்பை வென்றெடுக்கும் பாரிய தேசியக்கடமை நம்முன் உள்ளது: செ.பத்மநாதன் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[திங்கட்கிழமை, 01 யூன் 2009, 02:37 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் முனைந்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் கபடத்தனத்தை எதிர்கொள்வதற்கும் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்குமான பாரிய தேசியக் கடமை நம்முன் காத்திருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சிறிலங்கா அரசாங்கமும் அதன் சிங்கள இராணுவ இயந்திரமும் தமிழீழ மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள மனிதப் பேரவலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து நிர்க்கதியாக்கி இடம்பெயர்த்து அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27.05.09) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு வன்னியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நியாயம் வழக்கத் தவறியமை குறித்து எமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

இராணுவ மேலாதிக்க நிலையின் ஊடாக தாயகத்து மக்களின் வாழ்வு உரிமையினைப் பறித்த சிறிலங்கா அரசாங்கம் தற்போது இராஜதந்திர வழிமுறைகளைக் கொண்டு உலக அரங்கில் நமது மக்கள்மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளது.

தனக்கு துணையாக அனைத்துலக சக்திகளுடன் இணைந்து இராஜதந்திர செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்த்து எறிவதில் முனைப்பு கொண்டுள்ளது.

அதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களையும் உதவிகளையும் திரட்டுவதில் சிறிலங்கா கொள்கையளவில் வெற்றி பெற்றுள்ளது.

அந்த வளங்களைக்கொண்டு புனர்வாழ்வு, புனரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் நலனில் சிங்கள அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக காட்டி தான் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு பழியில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வழி தேடுகின்றது.

தனது இராணுவ ஆளணியினரால் கட்டுப்படுத்தப்படும் பொது நிர்வாக இயந்திரத்தின் கீழ் மீள்கட்டமைப்பும் அபிவிருத்தியும் என்ற பெயரில் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தின் இனத்துவ சமநிலையினை சிங்கள மக்களின் பெரும்பான்மைக்கு சார்பாக மாற்ற முனைவதோடு தமிழ் மக்களின் சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை தற்சார்பு நிலையற்றதும் சிறிலங்காவின் தென்பகுதியினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான தங்கி வாழும் பொருளாதாரமாக மாற்றுவதற்குரிய திட்டங்களையும் முன்நகர்த்தியுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் சிங்கள அரசாங்கம் குறியாகவுள்ளது.

இத்தகைய சவால்களை எதிர்கொண்டு தாயகத்தில் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்கும் தடுப்பு முகாம்களிலும் சிறைகளுக்குள்ளும் சித்திரவதைக் கூடங்களிலும் நிரப்பப்பட்டுள்ள எம்மவர்களை விடுவித்து செழுமையும் சமாதானமும் நிறைந்ததாக அவர்கள் வாழ்வினை கட்டியெழுப்புவதற்கும் செயற்படவேண்டியது நமது தேசியப்பணியாகும்.

கள யதார்த்தத்தின் அடிப்படையிலும் மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற்கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் ஊடாக போராட உறுதி பூண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் ஒற்றுமையினையும் அவர்களின் அளப்பரிய ஆற்றல்களையும் அவர்களால் புலம்பெயர் தேசங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நன்மதிப்பினையுமே தங்கள் ஆயுதங்களாக கையில் எடுத்துள்ளனர்.

இன்று நம் முன்னே பாரிய தேசியக் கடமை காத்துக் கிடக்கின்றது. நாம் மிகவும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படவேண்டியது மிகவும் அவசியமான தருணம் இது.

இக்கடமையினை முழுமையான பலத்துடனும் சிறப்புடனும் நிறைவேற்றுவதற்கு அவதூற்று பிரச்சாரங்களும் வதந்திகளும் தவறான செய்திகளும் இடையூறானவை.

இவற்றைப் புறம் தள்ளி நமது தாயகத்திற்கும் மக்களுக்குமான நமது கடமைகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்வோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- புதினம் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழ் மக்கள் மீது உளவியல் சமரொன்று மிக வேகமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை உணரக்கூடியதாக விருக்கிறது.

அவர் இருக்கிறாரா. இல்லையா என்பதிலிருந்து இச்சமர் ஆரம்பமாகிறது. அந்த விவாதம்இ விரிவடைந்து நீண்டு செல்ல வேண்டுமென்பதே பிராந்திய வல்லரசின் விருப்பம்.

ஆயினும்இ புவிசார் அரசியலைப் புரிந்துஇ மீண்டும் மீண்டெழ வேண்டியதன் அவசியத்தை புலம்பெயர் மக்கள் புரிய ஆரம்பித்துள்ளனர். அதே÷வளை ஏதிலியாக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களுக்கு செய்ய வேண்டிய அவசர உதவிப் பணிகள் குறித்தும்இ இவர்கள் சிந்திக்க வேண்டும்.

இன்னமும் தமிழக அரசியல் கனவிலும்இ ஒபாமா உறவிலும்இ தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாமென்ற கற்பிதம் கொள்வது தவறானது என்பதை புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த பிராந்திய வல்லரசாளர்களுக்கு எதிரான போரில்இ தமிழினம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியுற்றதா என்பதை காலம் தீர்மானிக்கும்.

அனைத்துலக சதியில் தமிழர் எல்லோரும் அம்மணமாக நிக்கின்றோம். ஐயா உங்கள் சேவை போதும். தயவு செய்து அறிக்கைவிட்டு மேலும் அலங்கோலப்படுத்தவேண்டாம்.

கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய தருணம்-செல்வராசா

திங்கள்கிழமை, ஜூன் 1, 2009, 15:39 [iST]

வன்னி: இன்று நம் முன்னே பெரும் தேசியக் கடமை காத்துக் கிடக்கின்றது. நாம் மிகவும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இக்கடமையினை முழுமையான பலத்துடனும் சிறப்புடனும் நிறைவேற்றுவதற்கு அவதூறு பிரச்சாரங்களும், வதந்திகளும், தவறான செய்திகளும் இடையூறானவை என்று கூறியுள்ளார் விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன்.

பிரபாகரன் மரணம் குறித்து செல்வராசா பத்மநாதன் முரண்பாடான அறிக்கைகை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. அவதூறு பிரசாரங்களும், தவறான செய்திகளும் அதற்கு இடையூறாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கள யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என கூறியுள்ளார் பத்மநாதன்.

பத்மநாதன் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசாங்கமும் அதன் சிங்கள ராணுவமும் தமிழீழ மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள மனிதப் பேரவலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து நிர்க்கதியாக்கி இடம்பெயர்த்து அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள ராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27.05.09) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில், வன்னியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நியாயம் வழக்கத் தவறியதற்காக எமது கவலையையும், கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

ராணுவ மேலாதிக்க நிலையின் ஊடாக தாயகத்து மக்களின் வாழ்வு உரிமையினைப் பறித்த இலங்கை அரசு, தற்போது ராஜதந்திர வழிமுறைகளைக் கொண்டு உலக அரங்கில் நமது மக்கள்மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளது.

தனக்கு துணையாக அனைத்துலக சக்திகளுடன் இணைந்து ராஜதந்திர செயற்பாடுகளின் மூலமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்த்து எறிவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

அதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களையும் உதவிகளையும் திரட்டுவதில் இலங்கை அரசு கொள்கையளவில் வெற்றி பெற்றுள்ளது.

அந்த வளங்களைக் கொண்டு புனர்வாழ்வு, புனரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் நலனில் சிங்கள அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக காட்டி, தான் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு பழியில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வழி தேடுகின்றது.

தனது ராணுவ படைகளால் கட்டுப்படுத்தப்படும் பொது நிர்வாக இயந்திரத்தின் கீழ் நிவாரணம் மற்றும் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தின் இனத்துவ சமநிலையினை சிங்கள மக்களின் பெரும்பான்மைக்கு சார்பாக மாற்ற முனைவதோடு தமிழ் மக்களின் சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை தற்சார்பு நிலையற்றதும் இலங்கையின் தென்பகுதியினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான பொருளாதாரமாக மாற்றுவதற்குரிய திட்டங்களையும் அது மேற்கொண்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் சிங்கள அரசாங்கம் குறியாகவுள்ளது.

இத்தகைய சவால்களை எதிர்கொண்டு தாயகத்தில் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்கும், தடுப்பு முகாம்களிலும் சிறைகளுக்குள்ளும் சித்திரவதைக் கூடங்களிலும் நிரப்பப்பட்டுள்ள நம் மக்களை விடுவித்து செழுமையும் சமாதானமும் நிறைந்ததாக அவர்கள் வாழ்வினை கட்டியெழுப்புவதற்கும் செயற்படவேண்டியது நமது தேசியப்பணியாகும்.

கள யதார்த்தத்தின் அடிப்படையிலும் மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற் கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் மூலமாக போராட உறுதி பூண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் ஒற்றுமையினையும் அவர்களின் அளப்பரிய ஆற்றல்களையும் அவர்களால் புலம்பெயர் தேசங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நன்மதிப்பினையுமே தங்கள் ஆயுதங்களாக கையில் எடுத்துள்ளனர்.

இன்று நம் முன்னே பெரும் தேசியக் கடமை காத்துக் கிடக்கின்றது. நாம் மிகவும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

இக்கடமையினை முழுமையான பலத்துடனும் சிறப்புடனும் நிறைவேற்றுவதற்கு அவதூறு பிரச்சாரங்களும், வதந்திகளும், தவறான செய்திகளும் இடையூறானவை.

இவற்றைப் புறம் தள்ளி நமது தாயகத்திற்கும் மக்களுக்குமான நமது கடமைகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்வோம் என தெரிவித்துள்ளார் செல்வராசா பத்மநாதன்.

தற்ஸ்தமிழ்

தாயகத்திற்கும் மக்களுக்குமான நமது கடமைகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்வோம்

யார் சொன்னாலும் பொருள் ஒண்டுதான்....

அனைத்துலக சதியில் தமிழர் எல்லோரும் அம்மணமாக நிக்கின்றோம். ஐயா உங்கள் சேவை போதும். தயவு செய்து அறிக்கைவிட்டு மேலும் அலங்கோலப்படுத்தவேண்டாம்.

கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.

தப்பித்த சனத்தை காப்பாற்றும் வழிகளை பாருங்கள்..

பிறகு ஓய்வெடுக்கலாம்... :o

கலைவாணி,

முழுக்க வாசிச்சனீங்களோ?

உங்களுக்கு காலம் பதில் சொல்லும்.

ஆயுதப் போராட்டம்இ முடிவொன்றினை எட்டியவுடன்இ அதன் அடுத்த கட்டமாகஇ புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டத் தளத்தினை சிதைக்க வேண்டுமென்கிற திட்டத்தினை இந்தியா கொண்டிருக்கிறது.

அவர் இருக்கிறாரா. இல்லையா என்பதிலிருந்து இச்சமர் ஆரம்பமாகிறது. அந்த விவாதம்இ விரிவடைந்து நீண்டு செல்ல வேண்டுமென்பதே பிராந்திய வல்லரசின் விருப்பம்.

ஆயினும்இ புவிசார் அரசியலைப் புரிந்துஇ மீண்டும் மீண்டெழ வேண்டியதன் அவசியத்தை புலம்பெயர் மக்கள் புரிய ஆரம்பித்துள்ளனர். அதே÷வளை ஏதிலியாக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களுக்கு செய்ய வேண்டிய அவசர உதவிப் பணிகள் குறித்தும்இ இவர்கள் சிந்திக்க வேண்டும்.

இன்னமும் தமிழக அரசியல் கனவிலும்இ ஒபாமா உறவிலும்இ தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாமென்ற கற்பிதம் கொள்வது தவறானது என்பதை புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த பிராந்திய வல்லரசாளர்களுக்கு எதிரான போரில்இ தமிழினம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியுற்றதா என்பதை காலம் தீர்மானிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் விருப்பமும் இதுவாகவே இருக்கிறது. அதாவது புலம்பெயர் தமிழினத்தினது கூட்டிணைவைச் சிதைப்பதூடாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழினத்தினது போராட்டத்தின் விளைவாகத் தம்மீது ஏற்படும் அழுத்தங்களை இல்லாதொழிக்க முனைகின்றான். எனவே நாம் எந்தவிதமான கேள்விகட்குமப்பால்த் தமிழின விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈந்தளித்துவிட்ட மாவீரத் தெய்வங்களை மனதிலே இருத்தி, எம் தலைவனின் மீதான உண்மையான பற்றுறிதியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் விதமாகத் தாயக விடுதலைப் போரை வீரியத்தோடு முன்னெடுக்க உழைத்தலே மிக அவசியமானதாகும். தேடல்களிலே பொழுதுகள் கழிந்து எம் தேசியம் அழிந்துவிட நாமும் துணைபோக முடியாது. தேடுவோம் எமக்கான கடமைகளை, அதனை நிறைவேற்றுவோமாயின் அதுவே எம் தலைவனுக்கானது. அப்போது உரிய பயனைத் தமிழினம் அடையும் போது அந்த நிறைவிலே எம் தலைவன் இருப்பார். தேடுவோம் தேசத்தை அடையும் வழி. கூடுவோம் தமிழ்த்தேசியமாய். பகை வென்றெம் தேசம் படைப்போம்.

ஆயுதப்போராட்டம் ஊடாக அரசியல் முன்னெடுப்புகள் சர்வதேச ரீதியில் வெற்றி பெறவில்லை. புலிகளின் பின்னடைவு என்பது அரசியல் போராட்டம் ஊடாக இலக்கை அடைதல் என்ற வழிகளை திறந்து விட்டிருக்கின்றது. நெருக்கடியான காலகட்டத்தில் சர்வதேச விவகாரங்களுக்காக தலைவரின் நியமனம் எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். தலைரின் சிந்தனைகள் தூரநோக்கிலானவை. தமிழீழத்துக்கான திறவு கதவாக அவர் இருந்தார். அந்தக் கதவை மூட வேண்டிய நிர்ப்பந்தம் சர்வதேசத்தால் ஏற்படும்போது அதை செய்து என்னுமொரு கதவை காட்டிச் செல்கின்றார். நாம் பயணிக்க வேண்டிய பாதையை சுட்டிக்காட்டியபடியேதான் இந்த ஆயுதப்போர் முடிவை காண்கின்றது. மாவீரர்களது தியாகங்களும் அரும்பாடுகளும் அர்த்தமற்றுப்போவதும் அர்த்தம் பெறுவதும் எமது கைகளிலேயே உள்ளது.

புலம் பெயர்ந்தவர்கள் தவிர முன்னரான அரச கட்டுப்பாட்டு தமிழ் மக்கள் சுதந்திரம் தேவை எனும் இலக்கு கூட இல்லாது இனவெறி அரசின் நலன்களுக்கும் பிரச்சாரத்துக்கும் இசைவாக நகர்ந்து வரும் இவ் வேளையில் வெறும் புலம் பெயர்ந்த மக்களின் போராட்டங்கள் நகர்வுக்கள் வீண்...

உதாரணமாக பலவற்றை சொல்ல முடியும்...

புலம் பெயர்ந்தவர்கள் தவிர முன்னரான அரச கட்டுப்பாட்டு தமிழ் மக்கள் சுதந்திரம் தேவை எனும் இலக்கு கூட இல்லாது இனவெறி அரசின் நலன்களுக்கும் பிரச்சாரத்துக்கும் இசைவாக நகர்ந்து வரும் இவ் வேளையில் வெறும் புலம் பெயர்ந்த மக்களின் போராட்டங்கள் நகர்வுக்கள் வீண்...

உதாரணமாக பலவற்றை சொல்ல முடியும்...

நீங்கள் பல திரிகளில் கொழும்பு தமிழரை மட்டும் குறை கூறுவதால் இந்த பதிலை எழுத விரும்புகிறேன்.

நீங்கள் லண்டனில் பாதுகாப்பாக இருந்து கொண்டு கொழும்பில் இருப்பவர்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டும் என்டு சொல்வதில் என்ன நியாயம் இருக்கு??...ஒட்டு மொத்த கொழும்பு தமிழரும் சிங்களவர்களுக்கு ஜால்ராவா அடிக்கிறார்கள்?இன்னும் சொல்லப்போனால் கடும் மிரட்டலுக்கு மத்தியில் சிங்கள அரசாங்கத்துக்கு ஆதரவாக கதைக்கும் கொழும்பு தமிழரை விட சிங்களவனுக்கு கு** கழுவி விடும் புலம்பெயர் மாற்று கருத்து மாணிக்கங்கள் அதிகம். ஆனான பட்ட லசந்த விக்கிரமதுங்கவயே பட்டபகலில் கொலை செய்யும் அரசாங்கம் கொழும்பில் தனக்கு எதிராக போராட்டம் செய்யும் தமிழரை என்ன செய்யும் என்டு தெரியாதா?

நான் இலங்கையில் வசிக்கும் தமிழனாக இருந்தால் உங்களை போல இலங்கையில் வாழும் தமிழரை குறை சொல்பவர்களை பார்த்து கேட்கும் முதல் கேள்வி.."இவ்வளவு அக்கறை இருக்கிற நீங்கள் எங்களை மட்டும் போராட சொல்லிவிட்டு ஏன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினீர்கள்???"

Edited by நெப்போலியன்

நீங்கள் பல திரிகளில் கொழும்பு தமிழரை மட்டும் குறை கூறுவதால் இந்த பதிலை எழுத விரும்புகிறேன்.

நீங்கள் லண்டனில் பாதுகாப்பாக இருந்து கொண்டு கொழும்பில் இருப்பவர்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டும் என்டு சொல்வதில் என்ன நியாயம் இருக்கு??...ஒட்டு மொத்த கொழும்பு தமிழரும் சிங்களவர்களுக்கு ஜால்ராவா அடிக்கிறார்கள்?இன்னும் சொல்லப்போனால் கடும் மிரட்டலுக்கு மத்தியில் சிங்கள அரசாங்கத்துக்கு ஆதரவாக கதைக்கும் கொழும்பு தமிழரை விட சிங்களவனுக்கு கு** கழுவி விடும் புலம்பெயர் மாற்று கருத்து மாணிக்கங்கள் அதிகம். ஆனான பட்ட லசந்த விக்கிரமதுங்கவயே பட்டபகலில் கொலை செய்யும் அரசாங்கம் கொழும்பில் தனக்கு எதிராக போராட்டம் செய்யும் தமிழரை என்ன செய்யும் என்டு தெரியாதா?

நான் இலங்கையில் வசிக்கும் தமிழனாக இருந்தால் உங்களை போல இலங்கையில் வாழும் தமிழரை குறை சொல்பவர்களை பார்த்து கேட்கும் முதல் கேள்வி.."இவ்வளவு அக்கறை இருக்கிற நீங்கள் எங்களை மட்டும் போராட சொல்லிவிட்டு ஏன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினீர்கள்???"

்வீதியிலை இறங்குங்கோ இல்லை மகிந்தவை கட்டி பிடிச்சு அழுங்கோ எனக்கு எந்த கவலையும் இல்லை... ஆனால் மனினமான சிங்களத்தின் பிரச்சாரத்துக்கு தலைவணங்கி பயன் பட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளாத உங்களை பற்றி இனி அக்கறை கொள்ளவும் எதுவும் இல்லை...

தமிழர்கள் 10 லச்சம் பேர் கொழும்பிலும் அதை அண்டியும் வாழுகிறார்களாம்... 15 லச்சம் பேர் புலம் பெயந்திட்டினம்... இப்ப தமிழீழம் எண்டு சொல்லுற இடங்களிலை தமிழர் எண்டு இருக்கிறது வெறும் 10 லச்சம் பேர் தான் இருக்கினமாம்...

ஆகவே கொழும்பிலை இருக்கிறவை மாதிரி வடக்கு கிழக்கிலை இருக்கிறவையையும் வாழ பழக்கி விடுங்கோவன்... பிரச்சினை சுமுகமாக தீரும்...

கொழும்பிலை நீங்கள் சுமூகமாகவும் நலமாகவும் சிங்களவரோடு சேர்ந்து வாழ்கிறீர்கள் எண்று சிங்களவன் சொல்கிறானே அது என்ன பொய்யா...??

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்போது மேற்கொண்டுவரும் (புலம்பெயர்நாடுகளில்) போராட்டங்களை மேலும் தீவிரமாக்கவேண்டும், முக்கியமாக இந்தியாவிடம் கையேந்துவதை தவிர்க்கவேண்டும், இருப்பினும் தமிழகமக்களின் ஆதரவை மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

அனைத்துலக தொடர்பாளர் செல்வராசா பத்மநாதன் அவர்கள் தலைவரினால் தெரியப்பட்ட ஒரு உறுப்பினர்.

இருப்பினும் ஒரு காலகட்டத்தில் சொல்லமுடியாத சில காரணங்களினால் தடுமாறியது போன்ற ஒரு உணர்வு அனேகமான மக்களிடம் காணக்கூடியதாக இருந்தது.

இன்றைய நிலையில் அவரது இறுதியாக வந்த அறிக்கையை பார்க்கும்போது தானும் தெளிவடைந்து மக்களின் சந்தேகத்தையும் தீர்த்துவைப்பது போன்றவையாக உள்ளது.

ஆகவே அன்பு உள்ளங்கொண்ட தமிழ்நெஞ்சங்களே இந்த அறிக்கையை எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு தமிழீழம் நோக்கிய எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

அதாவது சிலநாட்களின் முன்பு எங்களை சோகத்தில் ஆழ்த்திய செய்திகள் பொய் வதந்திகள் என்பதை மனதில்கொண்டு, செல்வோம் முன்னோக்கி.

இணைவோம் தமிழராய்!

ஆனால் மனினமான சிங்களத்தின் பிரச்சாரத்துக்கு தலைவணங்கி பயன் பட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளாத உங்களை பற்றி இனி அக்கறை கொள்ளவும் எதுவும் இல்லை..

இதை தான் நான் அப்ப இருந்து கேக்கிறன்.....எந்த விதத்தில அவர்கள் சிங்களவர்களுக்கு ஜால்ரா அடிக்கினம்?....அவர்களை நீங்கள் என்ன செய்ய சொல்லுறீங்கள்??...கொஞ்சம் தெளிவா சொல்லலாமே?

இதை தான் நான் அப்ப இருந்து கேக்கிறன்.....எந்த விதத்தில அவர்கள் சிங்களவர்களுக்கு ஜால்ரா அடிக்கினம்?....அவர்களை நீங்கள் என்ன செய்ய சொல்லுறீங்கள்??...கொஞ்சம் தெளிவா சொல்லலாமே?

எவ்வளவுதான் அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறீர்களே.. அதுதான்...

சிங்களவர் உங்களுக்கு எவ்வளவு கொடுமைகள் செய்து இருக்கிறான்...?? செய்தானா இல்லையா...?? இல்லை எண்டால் விட்டு விடுங்கள்...

அவ்வளவையும் சகிச்சு கொண்டு வாழ பழகி இருக்கிறீயள்... இல்லை அப்படி ஒண்டு நடப்பது கூட தெரியாமல் வாழ்ந்து இருக்கிறீர்கள்.. இல்லையா...??

பிறகு எதுக்கு உங்களுக்கு சுதந்திரம் , தமிழீழம் எல்லாம்...?? இதுக்கு பதிலை தேடுங்கள்...

சிங்களவரோடு சேர்ந்து வாழுதல் உங்களால் முடியும் தானே...??? பிறகு உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சினை...??? நீங்கள் 10 லட்ச்சம் பேர் சிங்களவரோடு சேர்ந்து வாழ முடியும் எண்றால் மற்றய 10 லட்ச்சம் பேருக்கும் என்னையா பிரச்சினை... இதை உங்களால் எனக்கு புரிய வைக்க முடியுமா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாடுகளில் வழும் நாங்கள் தொடர்ந்து எமது போராட்டங்களை முன்பு செய்ததை விட தீவிரமாகச் செய்ய வேண்டும். சிட்னி, மெல்பேர்ண், கன்பரா வாழ் எம்மவர்கள் கட்டாயம் வரும் வியாழக்கிழமை நடைபெறும் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

(நாங்கள் இப்போது மேற்கொண்டுவரும் (புலம்பெயர்நாடுகளில்) போராட்டங்களை மேலும் தீவிரமாக்கவேண்டும்இ முக்கியமாக இந்தியாவிடம் கையேந்துவதை தவிர்க்கவேண்டும்இ இருப்பினும் தமிழகமக்களின் ஆதரவை மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

அனைத்துலக தொடர்பாளர் செல்வராசா பத்மநாதன் அவர்கள் தலைவரினால் தெரியப்பட்ட ஒரு உறுப்பினர்.

இருப்பினும் ஒரு காலகட்டத்தில் சொல்லமுடியாத சில காரணங்களினால் தடுமாறியது போன்ற ஒரு உணர்வு அனேகமான மக்களிடம் காணக்கூடியதாக இருந்தது.

இன்றைய நிலையில் அவரது இறுதியாக வந்த அறிக்கையை பார்க்கும்போது தானும் தெளிவடைந்து மக்களின் சந்தேகத்தையும் தீர்த்துவைப்பது போன்றவையாக உள்ளது.

ஆகவே அன்பு உள்ளங்கொண்ட தமிழ்நெஞ்சங்களே இந்த அறிக்கையை எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு தமிழீழம் நோக்கிய எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

அதாவது சிலநாட்களின் முன்பு எங்களை சோகத்தில் ஆழ்த்திய செய்திகள் பொய் வதந்திகள் என்பதை மனதில்கொண்டுஇ செல்வோம் முன்னோக்கி.

இணைவோம் தமிழராய்!)

வல்லவை மைந்தனின் கருத்து சரியானதே

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என உரத்து உலகின் செவிப்பறையில்!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத்தலைவர் காரணம் ஏதுமின்றி பத்மநாதனைத் தெரிவு செய்திருக்கமாட்டார்

பத்மநாதனிடம் நம்பிக்கை வைக்கவேண்டிய தேவையும்,கடமையும் இருக்கிறது

இப்போது நம் முன்னால் இருக்கும் உடனடித்தேவை, நிறைகுறைகளை அலசாது

இருக்கும் தலைமையைக்கொண்டு போராட்டத்தையும், மக்கள் பாதுகாப்பையும் முன்னெடுத்துச்செல்வதே

ஒருவேளை பிற்காலத்தில் போராட்டம் திசைமாறினால் தலைமையை மாற்றிக்கொள்ள இயலும்

பத்மனாதன் ஒன்றும் பிரபாகரன் இல்லையே!

ஆகவே தற்போதைக்கு நம்பிக்கை வைத்து அடுத்த அடிகளை எடுத்து வைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணி உருத்திரகுமாரை நம்பலாம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விதத்திலும் தமிழர் ஒற்றுமை பாதிக்கப்படாமல் இருந்தால் எதிலும் வெற்றி அடையலாம். தமிழர் ஒற்றுமையே தலைமை.ஆகவே தற்போதுள்ள நிலமையில் நல்லதோ கெட்டதோ ஒரே அணியில் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம்.நாம் ஒற்றுமையாக இருந்தால் எத்தகைய நெருக்கடிகளையும் சமாளிக்கலாம். தலைமையே இல்லாமல் (இருக்குதோ இல்லயோ என்று குழம்பாமல்) இருப்பதை விட இருப்பதைப் பயன் படுத்துவோம்.தமிழர் நம்பிக்கை வீண் போகாது.தோன்றாத் தலைமையாக இருந்து தலைவரே வழி நடத்துகிறார் என்று எண்ணுவோம்.

இப்பொழுது நடக்கிற போராட்டங்களோடு சேர்ந்து எமக்கு இன்றியமையாத தேவை ஒன்று உள்ளது.எமது போராட்டம் வலுப் பெற மிகவும்

முக்கியமானது. எமக்கான வலிமையான ஒரு சர்வதேச ஊடகம். இன்றுவரைக்கும் எம்மிடம் ஓர் சர்வதேச தரத்துடனான ஊடகம் இல்லை.

இல்லையேல் இந்தியா எவ்வாறு BBC யில் ஆதிக்கம் செலுத்துகின்றவோ அதேபோல எமது நியாயங்களை வெளிக்கோண்டு வரும் ஓர் ஊடகத்தை நாம் தெரிவு செய்ய வேண்டும் உதாரணமாக Channel4 இதற்காகவும் நாம் இப்போதே முயற்சிகளை தொடங்க வேண்டும்.

எமது தேவைகள் தலைக்கு மேலுள்ளது. அவரின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள், அவரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கலாம். நம்பிக்கையில்லாதவர்கள், அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைச் சிந்தித்துச் செயற்படுங்கள். அதைவிடுத்து, ஒவ்வொருத்தவர் மீதும் குற்றம் சுமத்துவது எவ்வகையிலும் இப்போது பயனைத் தரப்போவதில்லை. இதுவரை நாம் இழந்தது போதும். இதற்கு மேலும் இழப்பதற்கு எதுவுமே இல்லை. தயவுசெய்து, மற்றவர்களைக் குழப்பதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் போரில் வென்று, மக்களை சிறை வைத்த சிறிலங்கா அரசு, தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் போராளிகளை அழிக்க சில படையணிகளை அங்கு அனுப்பியுள்ளது. இதே வேளை புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் ஈழமக்களின் கட்டமைப்பைக் அழிக்க சதி வேளை செய்து வருகிறது. செல்வராஜா பத்மநாதனைப்பற்றி தவறான கருத்துக்களை எட்டப்பர் கூட்டத்தின் உதவியுடன் பரப்பிவருகிறது. தாயகத்தில் அண்மையில் நடந்த கசப்பான வேதனையான சம்பவங்களால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்களில் சிலர் தெரியாமல் சிறிலங்கா அரசின் சதியில் சிக்கியுள்ளார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் உறவுகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரைவாக தடுப்பு முகாம்களில் வாழும் எம்மவர்களையும் விடுவிக்க நீங்கள் வாழும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வராசா பத்மநாதனை பல்வேறு பெயர் சூட்டி குறை கூறுவோர் கொஞ்சம் சிந்திக்க வேணும்

ஏன் தலைவர் அவரைத்தேர்ந்தெடுத்தார் என்று

ஏன் தலைவரைக்கூடத்தான் பயங்கரவாதி முத்திரை குத்தி பார்த்தார்கள்!

ஆகவே இப்போது செய்யக்கூடிய ஒரே வேலை தெரியும் தலைமையை இறுகப்பற்றி அதன் பின்னே செல்வதுதான்

பொட்டம்மான் கூடிய விரைவில் நல்ல செய்தி கொண்டுவருவார் என்று உறுதியாக நம்புகிறேன்

அதுவரை இருக்கும் தலைமையைப்பற்றிக்கொள்வோம்!

எந்த விதத்திலும் தமிழர் ஒற்றுமை பாதிக்கப்படாமல் இருந்தால் எதிலும் வெற்றி அடையலாம். தமிழர் ஒற்றுமையே தலைமை.ஆகவே தற்போதுள்ள நிலமையில் நல்லதோ கெட்டதோ ஒரே அணியில் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம்.நாம் ஒற்றுமையாக இருந்தால் எத்தகைய நெருக்கடிகளையும் சமாளிக்கலாம். தலைமையே இல்லாமல் (இருக்குதோ இல்லயோ என்று குழம்பாமல்) இருப்பதை விட இருப்பதைப் பயன் படுத்துவோம்.தமிழர் நம்பிக்கை வீண் போகாது.தோன்றாத் தலைமையாக இருந்து தலைவரே வழி நடத்துகிறார் என்று எண்ணுவோம்.

மிகச்சரியான கருத்து புலவர் அவர்களே

தற்போதைய தேவை இதுவே!

தலைவரிற்கும் எமக்கும் இடையேயான தொடர்பு ஏற்பட்டது பேச்சுவார்த்தைக்கு பின்தான். அதற்கு முன்பு நாம் எல்லாம் அங்கிருந்து வரும் குரல்களின் அடிப்படையில்தானே எமது செயற்பாடுகளை முன்னெடுத்தோம். அதேபோல் இன்றைய தேவை எமது போராட்டம். அதை முன்னெடுப்போம். கட்டாயம் தலைவர் வருவார்.

எமது போராட்டம்தான் ஈழத்தைப்பெற்றுக்கொடுப்பதற்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.