Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியுள்ளது.

இனப்பிரச்சினைக்குப் பொதுவான தீர்வொன்றை எட்டுவது தொடர்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் தாம் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா கொழும்பு வாரப் பத்திரிகையொன்றிடம் தெரிவித்தார்.

எனினும், வடபகுதியில் நடைபெறவிருக்கும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படவில்லையென அவர் கூறினார்.

தற்பொழுது இந்தியா சென்றிருக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நாடு திரும்பியதும் இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடித் தீர்மானமொன்றெடுக்கப்படுமென சிறிகாந்தா அந்தப் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவிதமான தொடர்புகளையும் பேணுவதற்கு விரும்பவில்லையெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான வி.ஆனந்தசங்கரி அந்தப் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

“அவர்களுடன் எந்தவிதமான செயற்பாடுகளையும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர்களுடன் இணைந்து எதனையும் செய்வதைவிட அரசியலிலிருந்து விலகுவது மேல்” என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை விடுதலைப் புலிகள் கேடயங்களாகத் தடுத்துவைத்திருக்கும்போது விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவில்லையெனவும், இதனால்தான் தற்பொழுது 10 வயதுச் சிறுவர்களும் குற்றவாளிகள் போல கைவிரல் அடையாளங்களை வழங்கவேண்டியேற்பட்டிருப்பத

ஒற்றுமை ஓங்குக!

ஒன்றிணைந்து உரிமைக்குரல்

ஒலிக்குக!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியுள்ளது.

இனப்பிரச்சினைக்குப் பொதுவான தீர்வொன்றை எட்டுவது தொடர்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் தாம் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா கொழும்பு வாரப் பத்திரிகையொன்றிடம் தெரிவித்தார்.

எனினும், வடபகுதியில் நடைபெறவிருக்கும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படவில்லையென அவர் கூறினார்.

தற்பொழுது இந்தியா சென்றிருக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நாடு திரும்பியதும் இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடித் தீர்மானமொன்றெடுக்கப்படுமென சிறிகாந்தா அந்தப் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவிதமான தொடர்புகளையும் பேணுவதற்கு விரும்பவில்லையெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான வி.ஆனந்தசங்கரி அந்தப் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

அவர்களுடன் எந்தவிதமான செயற்பாடுகளையும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர்களுடன் இணைந்து எதனையும் செய்வதைவிட அரசியலிலிருந்து விலகுவது மேல்” என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை விடுதலைப் புலிகள் கேடயங்களாகத் தடுத்துவைத்திருக்கும்போது விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவில்லையெனவும், இதனால்தான் தற்பொழுது 10 வயதுச் சிறுவர்களும் குற்றவாளிகள் போல கைவிரல் அடையாளங்களை வழங்கவேண்டியேற்பட்டிருப்பத

Edited by Ilayapillai

ஒற்றுமை ஓங்குக!

ஒன்றிணைந்து உரிமைக்குரல்

ஒலிக்குக

ஒற்றுமை ஓங்குக

சங்கரி சனியன் ஒழிக.

ஒற்றுமை ஓங்குக

சங்கரி சனியன் ஒழிக.

அந்தச் சனியனும் வந்தால் நல்லது.

அந்த நாய் தான் தனியாகத் தின்னவே நினைக்கிறது போலும்.

அந்தச் சனியனும் வந்தால் நல்லது.

<_< ம்ம்ம்... வேற யாரெல்லாம் வரவேணும்? ஒரு பட்டியல் போட்டுத்தாங்களன் <_<

  • கருத்துக்கள உறவுகள்

<_< ம்ம்ம்... வேற யாரெல்லாம் வரவேணும்? ஒரு பட்டியல் போட்டுத்தாங்களன் <_<

குட்டி நீங்கள் யார் யாரையெல்லாம் விரும்புகிறீர்களோ அவர்களையெல்லாம் சேர்த்துகொள்ளுங்கள் இப்போது எதிரியுடன் சேர்ந்தால்தான் உயிர்வாழலாம் போல் இருக்கிறது இங்கு <_<<_<

  • கருத்துக்கள உறவுகள்

“அவர்களுடன் எந்தவிதமான செயற்பாடுகளையும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர்களுடன் இணைந்து எதனையும் செய்வதைவிட அரசியலிலிருந்து விலகுவது மேல்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஐயா அரிச்சந்திர மகாராஜா சொல்லாதையுங்கோ முதல் செய்யுங்கோ. கடைசி பஸ் உதையும் விட்டியளோ கிளிநொச்சிக்கனவில மண்தான்.

<_<

ஒற்றுமை ஓங்குக

சங்கரி சனியன் ஒழிக.

பாவம் சனிக்கிரகம். இந்தச் சங்கரத்தையும் சேத்து நாசமாப்போறதோ ?

அந்த நாய் தான் தனியாகத் தின்னவே நினைக்கிறது போலும்.

நன்றியுள்ள நாயை இந்த மிருகத்துடன் ஒப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும்

எவர் எம்மை ஏத்துக்கொண்டாலும்

ஏற்காவிட்டாலும்

எவருடைய காலிலாவது விழுந்தென்றாலும்

எமது அடுத்தகட்ட அசைவுகளை செய்யவேண்டிய நிலையிலேயே நாம் இன்றிருக்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

வதைமுகாம்களுக்குள் 3லட்சத்தை அண்மித்த தொகையில மக்களை வைத்துக்கொண்டு முழுத் தமிழினத்தையும் விலங்கிடுகிறது சிங்கள அரசு. இலங்கைத் தீவைப் பொறுத்தவரை எதிர்காலம் இப்போது மட்டுமல்ல எப்போதுமே கேள்விக்குறியாகி செல்வதைத்தான் சிங்களம் செய்து கொண்டிருக்கிறது. தமிழ் கட்சிகள்?......

  • கருத்துக்கள உறவுகள்

வதைமுகாம்களுக்குள் 3லட்சத்தை அண்மித்த தொகையில மக்களை வைத்துக்கொண்டு முழுத் தமிழினத்தையும் விலங்கிடுகிறது சிங்கள அரசு. இலங்கைத் தீவைப் பொறுத்தவரை எதிர்காலம் இப்போது மட்டுமல்ல எப்போதுமே கேள்விக்குறியாகி செல்வதைத்தான் சிங்களம் செய்து கொண்டிருக்கிறது. தமிழ் கட்சிகள்?......

உண்மைதான்

இன்றுகூட காலதாமதமாகிவிடவில்லை

சிங்களம் எமை அரவணைக்க நல்லசந்தர்ப்பம்

ஆனால்.........???

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

கடந்த 60 ஆண்டுகளாக இலங்கைத் தீவை ஆண்டுவந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்தின் வெறுப்பையே படிப்படியாக அதிகரித்து அகிம்சை, ஆயதப் போராட்டவடிவங்களாக்கி மனித காருண்யமற்ற முறையிலும், வல்லரசுகளின் துணையுடனும் நசுக்கி உள்ளார்களே தவிர இப்போராட்டங்கள் தோன்றக் காரணமான இன ஒடுக்குமுறைமையைக் கைவிடவில்லை அவ்வின ஒடுக்குமுறையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து 3 லட்சத்தை அண்மித்த தமிழ் மக்களை வதைமுகாம்களுக்குள் கைதிகளாகவும், அடிப்படை உணவு, உடையைக்கூட வழங்காமலும், நாளாந்தச் சித்ரவதைகள் மூலம் 3லட்சத்தை அண்மித்த மக்களை கொன்றும், பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டும், குடும்ப உறுப்பினர்களைப் பிரித்துப் பிரித்துச் சிறைகளில் அடைத்தும் மிகவும் கட்டாய மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். ஒரு இனத்தை முழுமையாக சிதைக்கும் நடவடிக்கைகளைத்தான் இன்று சிங்கள அரசு செய்து வருகிறது. இந்த 3 லட்சத்தை அண்மித்த தொகையிலான மக்களை ஒட்டுமொத்தமாக மனப்பிறழ்விற்கு உள்ளாக்குவதே அவர்களின் நோக்கம் என்பது இலகுவாகப் புரியக்கூடிய ஒன்றாக உள்ளது. ஏனெனில் மனப்பிறழ்விற்கு உள்ளாக்கப்பட்ட சமூகம் தனித்துவத்துடனும், கூர்மையுடனும் போராடும் ஆற்றல்களை இழந்துவிடும் என்பதே அவர்கள் கணிப்பு. இக்கணிப்புச் சரியானதா, பிழையானதா? என்பதை இன்று ஆட்சியில் இருக்கக்கூடிய சகோதரர்கள் நிச்சயமாக உணரப்போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இருக்கும் வரை சர்வாதிகாரிகளாகவும் சிங்கள நாயகர்களாகவும் இருந்துவிட்டு ஆட்சி அதிகாரங்கள் மாறும் பட்சத்தில் தமிழர்களை நசுக்கிய போரின் மூலம் தாம் சேர்த்த சொத்துகளுடன் வெளிநாடுகளில் தத்தம் குடிபிருப்புகளை மாற்றிவிடுவார்கள். அடுத்தகட்ட ஆட்சிக்கு வருபவர்கள்தான் இன்றைய நிலைக்கான அத்தனை பிரச்சனைகளையும் எதிர் கொள்ளப் போகிறார்கள். அதை விடுவோம்.

இப்போது எங்கள் முன் இருப்பது எங்கள் மக்களை வதைமுகாம்களுக்குள் வைத்துச் சித்ரவதை செய்து கொண்டு, அவர்களின் உயிர்களை வைத்து கொண்டு சிங்களம் சூதாட்டப்பாணியிலான வழியில் காயை நகர்த்தி உள்ளது. சமயம் பார்த்து தமிழரின் கண்களைக் குத்த தமிழரின் கைகளையே இலகுவாகச் செயற்பட வைக்கலாம் என்பதில் சிங்கள் அரசுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. இன்றைய காலத்தில் சிங்களத்துடன் இணைந்திருக்கும் தமிழ் கட்சிகள் தமிழராய் தம்மை நிலை நிறுத்தவேண்டியது அவசியம். தமிழராய் தமை முன் நிறுத்துவார்களா என்பது அவரவர்க்கே வெளிச்சம்.

Edited by valvaizagara

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குள் உள்வாங்க இரகசியத் திட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குள் உள்வாங்கும் இரகசியத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தை நீடிக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இரகசியத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்க்ள் ஆகியோரது ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் கிடைக்கப் பெற்றால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவைகளுக்கு மேல் ஆட்சியில் நீடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேச நிர்மாண அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சியில் தற்போது 130 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்து வருவதாகவும், இன்னமும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தால் புதிய சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு ஜனாதிபதியை தொடர்ச்சியாக ஆட்சியில் அமர்த்த முடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

அண்மையில் காலமான அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ வெற்றி குறித்து ஜனாதிபதிக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ்ச் சிறுபான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டால் பூரண ஆதரவளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.nerudal.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.