Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 15, ஜூன் 2009 (21:48 IST)

விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன்

இலங்கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர்,

திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். 4 வது ஈழப் போர் முடிந்துள்ளது. விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்றார்.

நக்கீரன்

உந்தாள் யாழ் இணையம் பாக்கிறேல்லையா? ஏற்கனவே இப்படி சொல்லி இங்க வாங்கி கட்டினவர்.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்... மனுஷனுக்கு இன்னும் வெறி முறியேல்லை போல கிடக்கு...

:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவரிண்ட இமெயில் விலாசத்துக்கு லின்க் அனுப்பி பார்ப்போமே

உந்தாளை ஒருக்கா கனடா பக்கம் சுற்றுலாக்கு வாங்கோ என்று அழைத்து 5 ஆம் ஈழப் போராட்டத்தை அவர்ட முதுகில நடத்தப் போறன்..

பூனைக்கு விளையாட்டு, எலிக்கு சீவன் போகுது என்பது போல், அரசியல் மேடைகளில் சும்மாச்சும் உணர்சி வசப்பட்டு கதைக்க இப்ப இவர்களுக்கு கிடைத்ததெல்லாம் உது தான் போலக் கிடக்கு

திங்கட்கிழமை, 15, ஜூன் 2009 (21:48 IST)

விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன்

இலங்கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர்,

திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். 4 வது ஈழப் போர் முடிந்துள்ளது. விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்றார்.

நக்கீரன்

என்னடா இது அங்க இலட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவரிடம் கேட்போம்

ஒரு லட்சம் வீரர்களைத்திரட்டி தரமுடியுமா என்று....?

அவர் தந்தால்

இன்னொரு லட்சம் வெளிநாட்டில் நாம் சேர்ப்போம்

முதலில் அவரிடம் கேள்வியை முன் வையுங்கள்

பின்னர் களத்தையும் அவரே தெரிவு செய்யட்டும்

ஏன் அவரிடம் கேட்போம்

ஒரு லட்சம் வீரர்களைத்திரட்டி தரமுடியுமா என்று....?

அவர் தந்தால்

இன்னொரு லட்சம் வெளிநாட்டில் நாம் சேர்ப்போம்

முதலில் அவரிடம் கேள்வியை முன் வையுங்கள்

பின்னர் களத்தையும் அவரே தெரிவு செய்யட்டும்

வெளி நாட்டிலயாவது ஒரு இலட்சம் சேர்க்கிறதாவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அவரிடம் கேட்போம்

ஒரு லட்சம் வீரர்களைத்திரட்டி தரமுடியுமா என்று....?

அவர் தந்தால்

இன்னொரு லட்சம் வெளிநாட்டில் நாம் சேர்ப்போம்

லொஜிக் சரியில்லை. அவரா நாமா.. முதலில் திரட்டவேண்டிய உரித்துடையவர்கள்..?

கடந்தவருசம்வரை நாங்களும் இப்பிடிப் பேசினோமே.. அப்போதேன் விகுசு நீங்கள் வெளிநாட்டில் ஒருலட்சம் பேரைத்திரட்டவில்லை...

அப்புறம் வெளிநாட்டில.யிருந்து சண்டைக்கெல்லாம் வேண்டாம். தொடர்ச்சியான ஒருவாரகால வீதிப்போருக்கு கனடால ஒரு லட்சம் பேரைத்திரட்டுங்கோ பாப்பம்.....

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்

வானம் ஏறி வைகுண்டம் போனானாம்..

Edited by காவடி

  • கருத்துக்கள உறவுகள்

என் கணிப்புப்படி சேரும்போல்தான் உள்ளது

இப்போ அவர் 5ம் கட்டஈழப்போர் என்று சொல்வதனால் கேட்கின்றேன்

மற்றும்படி எம்மால் முடியாது என்பதை ஒத்துக்கொள்கின்றோம்

அதேநேரம் தமிழ்நாட்டின் உதவி இருந்தால்.....?

எல்லோருமே எல்லா சந்தர்ப்பங்களையும் கோட்டைவிட்டுவிட்டோம்

இனி ஏதாவது சண்டை என்று சேய்வதென்றால்....

தமிழ்நாடுதான் அதை ஆரம்பிக்கவேண்டும்

நாம் பின்னால்தான் போகமுடியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருமே எல்லா சந்தர்ப்பங்களையும் கோட்டைவிட்டுவிட்டோம்

இனி ஏதாவது சண்டை என்று சேய்வதென்றால்....

தமிழ்நாடுதான் அதை ஆரம்பிக்கவேண்டும்

நாம் பின்னால்தான் போகமுடியும்

நீங்கள் ஒரு 100 வீத அக்மார்க் புலம்பெயர்ந்த தமிழர் என நான் ஆமோதிக்கிறேன்

நாம் பின்னால்தான் போகமுடியும்

எப்பவும் ஈழதமிழன் அப்படி தானே.....

இன்னொரு லட்சம் வெளிநாட்டில் நாம் சேர்ப்போம்

என்னது..எது...ஒரு ஒரு இலட்சம்...வெளி...வெளி நாட்டிலா? முதலுக்கே மோசம் வரப் போகுது... நிழலி நீ தப்படா....முதல்ல என்ற மகனை தமிழாக்களோட சேர வேண்டாம் என்று இப்பவே சொல்ல வேண்டும்.... இல்லாட்டி உப்படி ஒரு சிலர் வந்து அவன்ட மூளையையும் குழப்பி விட்டு ஆள் பிடிச்சுக் கொண்டு போய்டுவாங்கள்....

தமிழக மக்களை திரட்டுவதென்றால் Im ok.. no problem...வேண்டி வைத்த பொப்கோர்ன்கள் இளவாளிச்சுப் போய்ட்டுது என்றாலும் புதுசா வாங்கி கொறிக்க நான் தயார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது..எது...ஒரு ஒரு இலட்சம்...வெளி...வெளி நாட்டிலா? முதலுக்கே மோசம் வரப் போகுது... நிழலி நீ தப்படா....முதல்ல என்ற மகனை தமிழாக்களோட சேர வேண்டாம் என்று இப்பவே சொல்ல வேண்டும்.... இல்லாட்டி உப்படி ஒரு சிலர் வந்து அவன்ட மூளையையும் குழப்பி விட்டு ஆள் பிடிச்சுக் கொண்டு போய்டுவாங்கள்....

தமிழக மக்களை திரட்டுவதென்றால் Im ok.. no problem...வேண்டி வைத்த பொப்கோர்ன்கள் இளவாளிச்சுப் போய்ட்டுது என்றாலும் புதுசா வாங்கி கொறிக்க நான் தயார்

:)

என் கணிப்புப்படி சேரும்போல்தான் உள்ளது

தமிழ்நாடுதான் அதை ஆரம்பிக்கவேண்டும்

நாம் பின்னால்தான் போகமுடியும்

தமிழ் நாடு ஆரம்பிக்கிறதா? யார் ஐயா இந்த மாதிரி தமிழ் நாட்டுக்காரன் பற்றிச் சொல்லித் தந்தது. ஒரு மணித்தியாலத்தில் குத்துக்கரணம் அடிக்கிறவங்க அவங்க. ( நீங்க சொல்லுகிற மாதிரி ஆட்கள் அந்தக்காலத்தில் வாழ்ந்தார்கள்)

..

தமிழக மக்களை திரட்டுவதென்றால் Im ok.. no problem...

நானும் அதற்கு சம்மதம்.

வேர் யு பாரம்? சவுத் இன்ட்யா... லொள்ளூயா... ஓனான்களை கலைக்கிறவளிய பார்ப்போம்.. பதில்களை தவிர்ப்போம்

தமிழக அரசியலில் களத்தில் உள்ளவர்களில் முக்கியமாக நாம் சிலரை நம்பலாம். உதாரணமாக நெடுமாறன் ஐயா, வை.கோ, சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி,.... இப்படி இன்னும் சிலர்.

ஆனால்.....

திருமாவளவன் இவர்களுடன் சமனாக மதிக்கப்படும் ஒருவராக இருக்கமாட்டார்.

இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

கோரிக்கை றிறைவேறவில்லை....

ஆயினும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

உண்ணாவிரதம் முடிந்த கையோடு 'காங்கிரசை தமிழ் நாட்டிலிருந்து அப்புறப்படுத்துவதுதான் தனது தலையாய கடமை... இலட்சியம்...' என்று பிரகடனம் செய்தார்.

இறுதியில் தேர்தலின்போது காங்கிரசுடன் ஓரணியில் ஒரே மேடையில் தோன்றினார்.

இவர்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கி நாய்கள்.

இவர்களுடைய வாய்ச் சவடால்களுக்கும்.... மயக்கு மொழிகளுக்கும்.... தமிழ் நாட்டு மக்கள் சில சமயம் எடுபடலாம்...

ஆனால் ஈழத் தமிழர்கள் இழிச்ச வாயர்களல்ல!

திருமா அவர்களே...

எங்களுக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும்.

தயவுசெய்து எங்களை வைச்சு கொமடி கிமெடி பண்ற வேலையை மட்டும் விட்றுங்க..... பிளீளீளீளீஸ்ஸ்ஸ்!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆளு இப்படி கதைச்சு கதைச்சே முத்துக்குமாரை எரியவைத்து அதில் தனது அரசியலை நடத்திவிட்டார். முத்துக்குமார் இறக்கும் போது சொன்ன இரு பெயர்கள் எங்கள் தலைவரின் பெயரும் இந்த ஆளின் பெயரும், அவனின் தியாகத்துக்கும் துரோகமிழைத்து எங்கள் மண்ணில் 50000 க்கு மேல் மக்கள் கொத்துக் கொத்தாய் பிணமாய் விழுந்த போது தேர்தல் வெற்றி கொண்டாடிக்கொண்டிருந்த ....ய், அவரின் தொண்டர்களை கொண்டுவந்து இறக்கச் சொல்லுங்கள் 5ம் ஈழக்கட்டப் போரை பேஷாக நடத்திடுவோம், பிரச்சனையே இல்ல...

எங்கள் காவல் தெய்வங்களைப் பலிகொடுத்த வலி இன்னமும் மாறாமல் இருக்க வந்திட்டானாம் 5ம் கட்ட ஈழப்போர் நடத்த..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன்

இன்று தமீழீழம் இருக்கும் நிலையில் ஒருசில தமிழக அரசியல்தலைகளின் அறிக்கைகளை பார்க்கும் போது எனக்கு பழைய தூசன பகிடிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன.

ரீச்சர் --------- -------- நானே அடி வாங்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் திருமா அடுத்தது சட்டசபை தேர்தல் வருகின்றது அதற்கு நாங்கள் உங்கள் பிரச்சாரத்துக்கு தேவையல்லவா

Edited by chozhan

ஈழபோர் 1,2,3,4, நீங்கள் செய்த சகல வீரவசன போர் அறிக்கைக்கும் நன்றிகள்.தயவு செய்து ஈழப்போர் 5க்கு நீங்கள் அறிக்கை விடாமல் இருந்தால் மிச்சம் நல்லம்.நாங்கள் நேரடியாக சொனியா வுடன் தொடர்பு கொள்கிறோம்

திங்கட்கிழமை, 15, ஜூன் 2009 (21:48 IST)

விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன்

இலங்கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

...

நல்ல ஊழை இடுங்கோ... உங்கட கதையை தமிழர் கேட்கிறாரோ இல்லையோ... சிங்களவன் நல்லாவே கேட்கிறான்... உங்கட கதையை கேட்டு அவன் ஆய்தம் இறக்குமதி செய்கிறான்... ஆக மொத்ததில ஆப்பு ஈழதமிழருக்குத் தான்... கொஞ்ச நாளைக்கு மூடிக்கொண்டு இருமையா உமது வாயை...

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே எங்களை நடுரோட்டுக்கு

மன்னிக்கவும் கம்பிவேலிக்குள்ள கொண்டுவந்திட்டாங்கள்.

இனி என்ன செய்யப்போறாங்களோ?

எங்களுக்கு ஆப்படித்ததில் இவங்களுக்கும் பங்கு இருக்குமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.