Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012-க்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2012-க்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கும்

இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர் பரத் வர்மா எச்சரித்துள்ளார்.

இது குறித்து இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகையில் அதன் ஆசிரியரான பரத் வர்மா எழுதியுள்ளதாவது:

ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுக்கு இறுதியாகப் பாடம் புகட்ட வேண்டும் என சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன.

இதனால், முன்னெப்போதும் இல்லாதவகையில் சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இதனால் சமூகத்தின் மீது இருந்து வந்த கம்யூனிஸ்டுகளின் பிடி தளர்ந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வருகிறது.

இவை மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு எதிராக சீனாவின் வலது கரம் போல செயல்பட்டு வந்த பாகிஸ்தான் உள்நாட்டுச் சண்டையில் மூழ்கியுள்ளது. இது, இந்தியாவுக்கு எதிராக செயல்பட பாகிஸ்தானுக்கு ஊக்கம் அளித்து வந்த சீனாவுக்கு எரிச்சலை அதிகப்படுத்தி உள்ளது.

இத்துடன், அமெரிக்காவுடன் இந்தியாவின் நெருக்கம் அதிகமாவதும் சீனாவுக்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க கூட்டுறவால் தொழில்நுட்ப அளவில் இந்தியா தன்னை மிஞ்சிவிடும் என சீனா அஞ்சத் தொடங்கியுள்ளது.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகள் மீது போர் தொடுப்பது விவேகமானதாக இருக்காது.

ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பது போல, பொருளாதார தேக்கம், வேலையின்மை போன்றவற்றில் இருந்து மக்களை திசைதிருப்பவும், ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவும், மென்மையான இலக்கான இந்தியா மீது போர் தொடுத்து இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதே சீனாவின் திட்டம்.

இதை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளதா? பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ஊடுருவல்காரர்கள் மூலம் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதுடன் நேரடியாக இரு நாடுகளும் போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதா என கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.

நிர்வாகத் துறைக்கு ராணுவ சிந்தனையை அளித்து போருக்குத் தேவையான நிதி மற்றும் ஆதாரப் பொருள்களைத் திரட்டுவதே சீனா மற்றும் பாகிஸ்தானின் சவாலை எதிர்கொள்வதற்கான தீர்வாக அமையும் என பரத் வர்மா கூறியுள்ளார்.

-தினமணி

  • கருத்துக்கள உறவுகள்

இவை மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு எதிராக சீனாவின் வலது கரம் போல செயல்பட்டு வந்த பாகிஸ்தான் உள்நாட்டுச் சண்டையில் மூழ்கியுள்ளது. இது, இந்தியாவுக்கு எதிராக செயல்பட பாகிஸ்தானுக்கு ஊக்கம் அளித்து வந்த சீனாவுக்கு எரிச்சலை அதிகப்படுத்தி உள்ளது.

அதனை சிறிதளவாவது ஈடுகட்டத்தானே ........ சீனா , இப்போது ஸ்ரீலங்காவுக்கு கொம்பு சீவி விட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகள் மீது போர் தொடுப்பது விவேகமானதாக இருக்காது.

ஜப்பான் மேற்கத்தியநாடோ ... இப்படியானவரின் கட்டுரையை படிச்சால் உருப்பட்ட மாதிரித்தான்

ஜயோ நல்ல செய்தி கிடைத்துள்ளது.

நான் சாக முன் இந்தியா சிதறி 18 நாடு உருவாக வேண்டும்.

இந்தியன் என்ற சொல்லே இல்லாமல் போகவேண்டும்

300 வருடங்களுக்கு முன்னம் எப்படி சிறிலங்கா எனும் நாடு இருக்க வில்லையோ அதேபோல இந்தியா எனும் நாடும் இருக்கவில்லை... அப்போது பிரித்தானியர்கள் வந்து நிர்வாகம் செய்ய இசைவாக பல நாடுகளை இணைந்து இந்தியா ஒரு நாடு ஆக்கினார்கள்... இதில் பாக்கிஸ்தான், வங்களதேசம் எல்லாம் அடக்கம்..

(இலங்கையும் 5 நாடுகளாக யாழ்ப்பாண இராச்சியம், வன்னி ராட்ச்சியம், உட ரட்ட , ரஜரட்ட, ருகுணு எனும் இராட்ச்சியங்களாக பிரிந்து கிடந்தது).

ஆனால் சீனா எனும் நாடு அப்படி உருவானதில்லை... முன்னர் சீனா, மங்கோளியா,( சைபீரிய) எண்று இருந்த தேசங்கள் பின்னர் பல வருடங்கள் முன் சீன சக்கரவர்த்திகளால் ஒரே நாடு ஆக்கப்பட்டது..

அதேபோல சீனாவினால் பாதுகாக்கப்பட்ட முடியாது இருந்த சில பிரதேசங்களை பிரித்தானியா கையகப்படுத்தி இந்தியாவுடன் சேர்த்து இருந்ததையும் மறுப்பதுக்கும் இல்லை... தனது பிரதேசங்களை இப்போது சீனா கேட்ப்பது பிழையும் இல்லைத்தானே...???

குறிப்பாக இது சீனாவின் உள்நாட்டு பிரச்சினை இதில் சர்வதேசம் தலையிடவும் முடியாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கன் நல்லா கதை விடுறான்..! சீனாவைப் பாதித்த பொருளாதார மந்த நிலை இந்தியாவைப் பாதிக்கவில்லையாமா? அப்படியே சண்டை வந்தாலும் தென்னிந்தியர்தான் தயாராக இருக்க வேண்டும்.. தம்முயிரைக் கொடுத்து வடக்கனின் எல்லைகளைக் காப்பாற்ற..

கார்கில் சண்டையில் தமிழகத்தைச் சேர்த்த ராணுவத்தினர் குறிப்பிட்ட அளவில் கொல்லப்பட்டார்கள்..! அதாவது வடக்கனின் எல்லைத்தகராறுக்கு தமிழன் பலிகொடுக்கப்பட்டான். ஆனால் ஈழத்தில் தமிழனைக் கொல்ல வடக்கனே ஆயுதம் குடுத்தான்..! வடக்கனின் திட்டங்கள் சொல்லி வேலையில்லை..! :D

300 வருடங்களுக்கு முன்னம் எப்படி சிறிலங்கா எனும் நாடு இருக்க வில்லையோ அதேபோல இந்தியா எனும் நாடும் இருக்கவில்லை... அப்போது பிரித்தானியர்கள் வந்து நிர்வாகம் செய்ய இசைவாக பல நாடுகளை இணைந்து இந்தியா ஒரு நாடு ஆக்கினார்கள்... இதில் பாக்கிஸ்தான், வங்களதேசம் எல்லாம் அடக்கம்..

தயா..

இந்தியாவில் சமஸ்தானங்களை இணைத்தது வல்லபாய் பட்டேல் தலைமையிலான குழு என்று நினைக்கிறேன்..! இது வெள்ளையன் வெளியேனிய பிறகுதான் நடந்தது. பல சமஸ்தானங்கள் தாமாக இணைந்து கொண்டன.. சில மிரட்டப்பட்டு இணைய வைக்கப் பட்டன..!

இந்தியா சின்னாபின்னமாவதை நாம் பார்த்து ரசிக்க வேண்டும்.

துரோகத்தனம் செய்த இந்தியா அதை அனுபவித்தே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை இரு நாடும் அழிவதை நான் பார்ப்பேன் என்று என் மனம் சொல்கிறது

எமக்கெல்லாம் அந்த ஆசையுண்டு

ஆனால் எல்லாமே நப்பாசைதான்

எட்டாப்பழம் புளிக்கும் கதைதான்

எம்மால் முடியாததை யாராவது செய்வார்களா என்ற ஏக்கம்தான்.

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை இரு நாடும் அழிவதை நான் பார்ப்பேன் என்று என் மனம் சொல்கிறது

எமக்கெல்லாம் அந்த ஆசையுண்டு

ஆனால் எல்லாமே நப்பாசைதான்

எட்டாப்பழம் புளிக்கும் கதைதான்

எம்மால் முடியாததை யாராவது செய்வார்களா என்ற ஏக்கம்தான்.

பார்க்கலாம்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனி நாடுகளு;ககிடையான சண்டைகள் சாத்தியமற்றவை. அப்படி வந்தால் அது உலக அழிவாக கூட இருக்கலாம் ஆகவே அழிவை நாடுவதால் பயன் இல்லை. ஒரு இந்தியன் இந்தியாவை ஆளவேண்டும் என்பது எனது நியாயமான ஆசை...... அது நடந்தால் தனது சொந்த நாட்டின் நலன் கருதி வேசையாடும் சிங்களவனை போட்டு தள்ளுவான். அது எமது விடிவை விரைவாக்கும்

செய்யிறதெல்லாம் செய்துபோட்டு இப்ப இளம் தமிழ் பொடி பெட்டையளுக்கு விசா கொடுக்கிறாங்கள் இல்லை.

ஏன் உவளவு பயம் குற்றம் உள்ள நெஞ்சு குருகுறுக்குதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவுகள் காணலாம் ஆனால் பகற்கனவுகள் காண்பதில் அரத்தமில்லை.

இன்றைய உலக அரசியல் முறைமையில் வல்லரசுகள் அல்லது

வல்லரசுப் பட்டியலில் இடம்பிடிக்கத் துடிக்கும் நாடுகள் தம்மிடையே

ஒருபோதும் நேரடியாக மோதிக்கொள்ளாது அப்படி மோதிக்கொள்ள ஏனைய

வல்லரசுகளின் அரசியல்நகர்வுகள் இடம்கொடாது. ஆனால் வல்லரசுகள்

தமது பலம் பலவீனம் என்பவற்றை வேறுவழிகளில் உரசிப்பார்த்து அறிந்துகொள்ளும்.

எங்கள் பிரச்சனையையும் அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகளுக்கெதிரான

தங்கள் பலத்தை தமது எதிர்ப்பின் வீரியத்தை உரசிப்பார்க்கும் ஒருகளமாகவே

சீனாவும், இந்தியாவும் பயன்படுத்தியிருந்தன. இதில் மேற்குலகைவிட

லோக்கல் சண்டியர்களின் கை ஒங்கி இருப்பதையே இலங்கைவிடயத்தில்

எதுவும் செய்யமுடியாமலும் அதை வெளியே காட்டிக்கொள்ளவும் முடியாமலும்

கைபிசைந்து நிற்கும் மேற்குலகின் நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.

ஜப்பான் மேற்கத்தியநாடோ ... இப்படியானவரின் கட்டுரையை படிச்சால் உருப்பட்ட மாதிரித்தான்

ஐயா புத்தன், பொயின்ற் பிடிக்கிறதிலை ஜீ.-ஜீ. பொன்னம்பலத்தின்றை வாரிசுகாணும்

  • கருத்துக்கள உறவுகள்

செய்யிறதெல்லாம் செய்துபோட்டு இப்ப இளம் தமிழ் பொடி பெட்டையளுக்கு விசா கொடுக்கிறாங்கள் இல்லை.

ஏன் உவளவு பயம் குற்றம் உள்ள நெஞ்சு குருகுறுக்குதோ?

இப்பதானே ஏன் எனக்கும் விசா குடுக்க மறுத்தவங்கள் எண்டு விளங்குது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதானே ஏன் எனக்கும் விசா குடுக்க மறுத்தவங்கள் எண்டு விளங்குது..! :lol:

டங்குவாரிலை , embassy காரங்கள் இவ்வளவு பயம் வைத்திருப்பது ...... யாழ் கள உறவுகளுக்கெல்லாம் பெருமை தானே . :D:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதானே ஏன் எனக்கும் விசா குடுக்க மறுத்தவங்கள் எண்டு விளங்குது..! :D

செய்யிறதெல்லாம் செய்துபோட்டு இப்ப இளம் தமிழ்பொடி பெட்டையளுக்கு விசா கொடுக்கிறாங்கள் இல்லை.

ஏன் உவளவு பயம் குற்றம் உள்ள நெஞ்சு குருகுறுக்குதோ?

இது தான் சந்துக்குள்ள சிந்து பாடுறதோ........................

தயா..

இந்தியாவில் சமஸ்தானங்களை இணைத்தது வல்லபாய் பட்டேல் தலைமையிலான குழு என்று நினைக்கிறேன்..! இது வெள்ளையன் வெளியேனிய பிறகுதான் நடந்தது. பல சமஸ்தானங்கள் தாமாக இணைந்து கொண்டன.. சில மிரட்டப்பட்டு இணைய வைக்கப் பட்டன..!

உண்மைதான்...

அனேக சமஸ்தானங்கள் , இந்திய யூனியன் பிரதேசங்களில் அனேகமானவை வேறு சில நாடுகளின் ஆழுக்கைக்குள் இருந்தவை எல்லாத்தையும் பின்னர் இந்தியாவுக்குள் வற்புறுத்தி இனைத்து கொண்டனர்...

ஆனால் இந்தியா எனும் பெயரையும் பெரிய மானிலங்கலை எல்லாம் ஒண்றினைத்து ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்கி வைத்தது இருந்தது பிரித்தானியா...

இனி நாடுகளு;ககிடையான சண்டைகள் சாத்தியமற்றவை. அப்படி வந்தால் அது உலக அழிவாக கூட இருக்கலாம் ஆகவே அழிவை நாடுவதால் பயன் இல்லை. ஒரு இந்தியன் இந்தியாவை ஆளவேண்டும் என்பது எனது நியாயமான ஆசை...... அது நடந்தால் தனது சொந்த நாட்டின் நலன் கருதி வேசையாடும் சிங்களவனை போட்டு தள்ளுவான். அது எமது விடிவை விரைவாக்கும்

இந்தியா இந்தியாவாக இருக்கும் வரைக்கும் எங்களுக்கு விடிவு இல்லை... தமிழ் நாடு தனி நாடாக இருக்குமானால் வரலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

செய்யிறதெல்லாம் செய்துபோட்டு

-----

விசா கொடுக்கிறாங்கள் இல்லை.

ஏன் உவளவு பயம் குற்றம் உள்ள நெஞ்சு குருகுறுக்குதோ?

இது தான் சந்துக்குள்ள சிந்து பாடுறதோ........................

டங்குவாரின் எழுத்து நடை வித்தியாசமானது "Bctamilan" , அவர் அந்த கருத்தை நகைச்சுவையாகவே சொன்னார் . :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களின் கற்பனை,சீனா இந்த பொருளாதார தளம்பலலிலும் கடந்த அரையாண்டில் 8 வீத பொருளாதர வளர்ச்சியைக்காட்டி நிற்கிறது.இது கடந்த 30 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சி அளவு(8%) இப்பொது நிலமை மோசமானலும் 5% பொருளாதார வளர்ச்சியை ஆண்டிறுதிக்குள் பெற்றுவிடும். சீனர்களுக்கு இந்தியா ஒரு ஜுஜிப்பீ இப்படி ஏதாவது இந்தியர்கள் கதை விட்டு தங்கட முதுகில தாங்களே தட்டிக்கொள்ள வேண்டிய கேவலமான நிலையிலை இந்தியாதான் இருக்கிறது சீனா இல்லை.

அப்படி சீனாவில் பொரூளாதார தளம்பல் ஏற்பட்டால் கவலைப்படவேண்டியது அமெரிக்க நாணயத்தைப் பரிமாற்று நாணயமக வைத்திருக்கும் இந்தியா உட்பட மேற்குலகம்தான் கவலைப்படவேண்டும் (3.42 டிரிலியன் டொலர் இருப்பில் சீனா வைத்துள்ளது)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.